நீ முதல் நான் வரை

.

வெற்றி பெற 
வாழ்த்துகிறேன் 

வெளிப்படையாய் 
கைகுலுக்குகிறேன் 

வெற்றிபெற்று வருகையிலோ 
உள்ளுக்குள் பொருமுகிறேன் 
உதட்டளவில் பாராட்டுகிறேன் 

என்னிலும் ஒருபடி 
ஏறிவிடாதபடி 
எச்சரிக்கையாய் இருக்கிறேன் 

முட்டி மோதி 
மூச்சுத் திணறுகையில் 
குழிபறிக்க வழிபார்க்கிறேன் 

முயன்று முன்செல்கையில் 
குறிவைக்க வெறி கொள்கிறேன் 

எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும் 
இந்த மனித நாடகத்தில் 
என் பாத்திரம் எம்மாத்திரம் ? 

அதைமட்டும் ஏனோ 
அவ்வப்போது மறந்துவிடுகிறேன். 
சகாரா 
http://kavithai.com/

சனிக்கிழமை நடந்த பரமட்டா பொங்கல்

.
சனிக்கிழமை  இடம்பெற்ற பரமட்டா பொங்கலில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர். பேச்சுக்கள்  கலைநிகழ்ச்சிகளும் என அனைத்தும் திறம்பட அரங்கேறியிருந்தது.


இலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -

.

" தமிழ்  இதிகாசங்கள் பற்றியும் எமது இலக்கிய பாரம்பரியம் பற்றியும்  பாரதிக்குத்தெரியாது. இவ்விஷயத்தை பாரதியின் தந்தையாரே பாரதிதாசனிடத்தில் கூறியிருக்கிறார். பாரதிக்கு மகா பாரதமும்  ராமாயணமுமே  அதிகம் தெரிந்திருக்கிறது."

" தமிழனான கட்டபொம்மன் பற்றியே பாரதி பாடவில்லை. பாஞ்சாலியைப்பற்றியும்  கண்ணனைப்பற்றியுமே பாடியுள்ளார். "

இவ்வாறு,  பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கை வந்திருந்த தமிழக தமிழரசன் என்ற திராவிடர் கழகப்பிரமுகர் பாரதி குறித்துச்சொன்ன அவதூறுகளுடன் கடந்த அங்கத்தை நிறைவுசெய்திருந்தோம்.

பொதுவாகவே திராவிடர் கழகத்தினர் தொடர்ச்சியாக பாரதியை சாதிரீதியான கண்ணோட்டத்துடன்தான் அணுகி வந்திருக்கிறார்கள். பெரியார் ஈ.வே.ரா தொடங்கிய இக்கழகத்திலிருந்து பிறந்த  அமைப்புகள் இன்று எந்தத்திசையில் செல்கின்றன என்பது பரகசியம்.

திராவிடர் கழகம் ஈன்ற குட்டிகளாக தி.மு.க. - அ.தி.மு.க, ம.தி.மு.க. பின்னாளில் அ.இஅ.தி.மு.க. என்றும் ஜெயா அணி, ஜானகி அணி என்றும் பிளவுபட்டு, ஜானகியின் மறைவுடன் அனைத்து அதிகாரங்களும் ஜெயா கையில் வந்து,  தற்போது அவரும் மறைந்த பின்னர் அம்மா அ.தி.மு.க. உருவானாலும் ஆச்சரியம் இல்லை என்று சொல்லும் நிலைக்கு அன்றைய திராவிடர் கழகம் பரிணாம  வளர்ச்சி கண்டுள்ளது.

சிட்னி முருகன் ஆலயத்தில் தை அமாவாசை 27 01 17

.

அன்பு ஜெயாவின் திருவதிகை என்ற நூலின் அறிமுகம்.

.
சிவஞானச் சுடர் அன்பு ஜெயா அவர்கள் எழுதிய திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்ற நூலின்  அறிமுகம்.  கேசினி கோணேஸ்வரன்


சிவஞானபோதத்தினை ஆகமவாரிதி முனைவர் சபாரெத்தின சிவாச்சாரியாரிடம் முறைப்படி பயின்று, சிவஞானச் சுடர் என்ற படடத்தைப் பெற்று, தான் பிறந்த கிராமத்துக்கு அண்மையில் உள்ள , முதன் முதலாக தேவார பாடல் பெற்ற தலமான திருவதிகை பற்றி 176 பக்கங்களில் , எட்டுத் தலைப்புகளில் அருமையான நூலொன்றை எழுதியுள்ளார். அருமையான பல விடயங்களை ஆராய்ந்து, பல புத்தங்கள், கல்வெட்டுகள், ஆலய அர்ச்சகருடனான நேரடி  உரையாடல், என்பவற்றின் மூலம் சரி பார்த்து தொகுத்து,    எல்லாம் வல்ல வீரட்டானேசுவரப் பெருமான் திருவருளின் துணையுடன் ,  இந்நூலை   வெளியிட்டிருக்கிறார்.
முதலாவது தலைப்பு திருவதிகை வீரட்டானேசுவரர். இங்கு அடட வீரட்டான தலங்கள் பற்றிக் குறிப்பிட்டு, ஒவ்வொரு தலத்திலும் நிகழ்ந்த வீரச் செயல்கள் பற்றியும் விபரித்துள்ளார்.  திருநாவுக்கரசு நாயனார் அடைவுத் திருத் தாண்டகத்தில் பாடிய " காவிரியின் கரைக்கண்டி" என்று தொடங்கும் தேவாரத்தையும், திருமந்திரத்தில் 2ம் தந்திரத்தில் 339-346 வரையான  8 பாடல்களையும் எடுத்து விளக்கி அடட வீரட்டான தலங்களின் பெருமை  பற்றி விளக்கியுள்ளார். திரிபுராதிகளை வென்று திரிபுரம் எரித்த தலம் திருவதிகை.
திருவதிகை தலச் சிறப்பு பற்றி விபரமாக விளக்கி உள்ளார். அவற்றில் சில ; சமய குரவர் நால்வராலும் பாடப்பெற்ற தலம். அப்பர் உழவாரத் திருத்தொண்டு ஆரம்பித்த தலம், முதன்முதலில் தேர் பயன்பாட்டுக்கு வந்த தலம், சிவன் பாண்டுரங்க நடனமும், கொடுகொட்டி நடனமும் ஆடிய தலம். இன்னும் பல சிறப்புகள் பற்றி இப்பகுதியில் எழுதப் பட்டுள்ளன.

மெல்பேர்னில் Dr MGR பிறந்த நாள் விழா 28 01 2017

.

‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை

.

ஐஸ்வரியா ராய் ஐ உலக அழகி ஆக்கி அதனைத் தொடர்ந்து நான்கு வரையிலான அழகிகளை உலகதரம் என்று காட்டி இன்று இந்தியாவின் மூலை முடுக்கொல்லாம் கக்கூசு இருக்குதோ இல்லையோ அழகு நிலையங்களை திறக்க வழிசமைத்து தமது அழகு சாதனபப் பொருள்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் உருவாக்கிய காப்ரேட் கம்பனிகளின் சுரண்டல் அரசியல் இந்த ‘உலக அழகியல்’ இற்குள் இருக்கின்றது.
ஜல்லிக்கட்டுத் தடை, மாட்டுவண்டிச் சவாரித் தடை என்ற காளை மாடுகளுக்கான ‘தடா’விற்கு பின்னாலும் இந்தியா, இலங்கை நாடுகளின் சாதாரண மக்களின் வாழ்வில் இணைந்து போன கால் நடைகளுடன் கூடிய விவசாய வாழ்வும் வளமும் தங்கியிருக்காமல் தன்நிறைவு கொண்ட வாழ்வை இல்லாமல் செய்து பாக்கட்டில் அடைத்த கொக்கா கோலா பிரான்ட் பாலை எதிர்பார்த்து நிற்கும் ஜேசி மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பாலை விநியோகிக்கும் சந்தையை பிடிக்க காத்திருக்கும் பல்தேசியக் கம்பனிகள் கண்டுபடித்திருக்கும் துரும்பு மிருகவதை என்று பசுவை வணங்கும் மக்களின் உணர்சிகளை மூலதனமாக்கி பீட்டா என்ற அமைப்பின் மூலம் செயலில் இறங்கியிருக்கும் ஜல்லிக்கட்டுத் தடை.

தமிழ்ப் பண்ணிசை 24 01 2017

.

முதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...: பன்னீர் சொல்லுக்கு கட்டுப்படுமா ஆளுங்கட்சி?

.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், சட்டசபை கூட்டம், நாளை
துவங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கூடும் இந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க.,
சசிகலாவின் அதிருப்தியாளர் என கருதப்படும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கப் போவதால், ஆளுங்கட்சி இவருக்கு கட்டுப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், முதன்முறையாக, நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபை குழுக்கள் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், குழுக் கள் அமைக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை குழுக்கள் அமைக்க

வலியுறுத்தி, சபாநாயகர் அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.

முழுவதையும் பார்க்க OLD Post என்பதை அழுத்தவும் 

உலகச் செய்திகள்


துருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு )

துருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு )

16/01/2017 துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

'ஞானம்வௌியீட்டு விழாவும் பவள விழாவும்

.

ஈழத்திலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக வெளிவரும் 'ஞானம்' கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் "நேர்காணல்" சிறப்பிதழாக ஜனவரி மாதம் 22ஆம் திகதி (ஞாயிறு) கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இச்சிறப்புத் தருணத்தில் 'ஞானம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கிவரும் தி.ஞானசேகரனின் பவளவிழாவும் நடைபெறவுள்ளது.
வெளியீட்டு விழாவிலும் பவளவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
காணோளி (Video) அழைப்பிதழை இணைப்பில் காண்க.

பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!














Selective School Practice Test at Homebush 26/01/2017



வாழ்த்துகள் வழங்கவேண்டும் !எம். ஜெயராமசர்மா.... மெல்பேண்

.
  

     உள்ளத்தில் உவகைவந்தால்
     உன்வாழ்வு உயர்ந்துநிற்கும்
     கள்ளங்கள் நிறைந்துவிட்டால்
     கஷ்டத்தில் அமிழ்ந்துபோவாய்
     நல்லதை நாடிநின்றால்
     நம்மிடம் சொர்க்கமாகும்
     அல்லவை தவிர்த்தால்வாழ்வு
     ஆனந்தம் நிறைந்தேநிற்கும் !

      மற்றவர் உன்னைப்பார்த்து
      மனவெறுப் படையாவண்ணம்
      சொற்களை எந்தநாளும்
      சுவைபடப் பேசவேண்டும்
      கற்பன கற்கவேண்டும்
      கவனத்தில் கொள்ளல்வேண்டும்
      அற்பங்கள் அகற்றிநின்று
      அன்பையே பகிர்தல்வேண்டும் !

      சிரிப்பினைப் பேணவேண்டும்
      சிறப்பினை நாடவேண்டும்
      பொறுப்புடன் நல்லவற்றை
      போற்றியே நிற்றல்வேண்டும் 
      செருக்கினை ஒதுக்கவேண்டும்
      சினமதை ஒழித்தல்வேண்டும்
      அடுத்தவர் மகிழ்ச்சிபார்த்து
      ஆனந்தம் அடைவாயென்றும் !

       வாழ்த்துகள் வழங்கவேண்டும்
       மகிழ்ச்சியைப் பெருக்கவேண்டும்
      ஆத்திரம் அடக்கவேண்டும்
      அன்பினை அளிக்கவேண்டும் 
       வேற்றுமை தவிர்க்கவேண்டும்
       விருப்பமாய் பழகல்வேண்டும்
       சாற்றிடும் சொற்கள்யாவும்
       சந்தோஷம் தருதல்வேண்டும் !

இலக்கிய வெளியீட்டு நிகழ்ச்சி 26 01 17

.
சிட்னி உயர்திணை அமைப்பினர் நடாத்தும் இலக்கிய வெளியீட்டு நிகழ்ச்சி


சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!

.
சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசி விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று பீட்டா நிறுவனம் விமரிசனம் செய்தது. இதையடுத்து பீடsoorya்டா அமைப்புக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் மற்றும் அலங்காநல்லூர் போராட்டம் குறித்து சில நாள்களுக்கு முன்பு சூர்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்குக் காரணமாக ஜல்லிக்கட்டு மாறியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப்பிரச்னைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடிப் போராடத் தூண்டிய அனைவருக்கும் நன்றி. தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு. மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப் பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றுப்போயிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்குத் துணைபோகிறவர்கள் ஜல்லிகட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் உரிமைகளை நிலைநாட்டப் போராடுகிற அனனவருக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

சைவசமய அறிவுத்திறன் தேர்வு - March 2017

.

அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று ஓடவுள்ளன

.

அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று துள்ளிக்கிட்டு ஓடவுள்ளன. எனினும் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் ஒன்றே தீர்வாக அமையும் என, ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டியோரின் கோரிக்கையாக உள்ளது.
மதுரை வைகை மேம்பாலத்தில், ஓடும் ரயிலை உயிரை பணயம் வைத்து தடுத்து நிறுத்திய மாணவர்களின் போராட்டம், மூன்றாவது நாளான நேற்றும் தொடர்ந்தது. கடும் பனிப்பொழிவு வாட்டுவதால் தண்டவாளத்தில் 'டென்ட்' அமைத்து இரவு முழுவதும் நடுங்கியபடியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு, மாணவர்களை மிரட்டும் வகையில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் அலைபேசி மூலம் வீடியோவில் பதிவு செய்தனர். இதையறிந்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு ரயில்வே மேம்பாலமும் போராட்டக்காரர்கள் வசமானது.
ஜல்லிக்கட்டு நிரந்த சட்டம்
அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று துள்ளிக்கிட்டு ஓடவுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவையில்லை; நிரந்தர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். வைகை மேம்பாலத்தில் ரயிலை மறித்து சிறைப்பிடித்ததால் மூன்று நாட்களாக மதுரை ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் இன்றி வெறிச்சோடியது.

இன்னிசை மாலை 2017 04 03 2017


ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பேராசிரியர் கே. ராஜு

.


     கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பல வடிங்களில் பல திசைகளிலிருந்து வருவதுண்டு. சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேருவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அது வனஉயிரினங்கள், அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் மனிதர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பிரச்சினையே அதன் மக்காத தன்மைதான். காலகாலத்துக்கு அழியாமல் இருந்து சுற்றுப்புறத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்துவதில் அதற்கு நிகரில்லை. இதுவரையில் அதன் கொடுங்கரங்கள் ஆறுகள், நீர்நிலைகள், கடற்கரையோரப் பகுதிகள் வரையில் மட்டுமே நீளும் என நினைத்திருந்தோம். ஆனால் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல், ஆக்ஸ்போர்டு ஆகிய இரு இடங்களில் உள்ள ஆய்வாளர்கள் நுண்ணிய பிளாஸ்டிக் வடிவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கடல் ஆழத்தில் உள்ள உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று கண்டுபிடித்துள்ளனர். அழகு சாதனங்களிலும் பற்பசை போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களிலும் உள்ள ஐந்து மி.மீ. நீளத்திற்குக் குறைவான நுண்ணிய பிளாஸ்டிக் நார்கள், பிளாஸ்டிக் சிறுமணிகள் (microbeads) எல்லாமே நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்கள் (microplastics) என அழைக்கப்படுகின்றன. செயற்கை இழைகளினால் ஆன ஆடைகளைத் துவைக்கும்போது பாலியெஸ்டர், நைலான், அக்கிரிலிக் அமிலக் கழிவுகள் போன்ற நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் நுழைந்துவிடுகின்றன. மத்திய அட்லாண்டிக், தென்மேற்கு இந்துமா கடல் ஆகிய இரு இடங்களில் சோதனை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கடல் ஆழத்தில் செல்லும் (தொலைவிலிருந்து இயக்கக்கூடிய) வாகனத்தைப் பயன்படுத்தி கடல் உயிரிகளை அவர்கள் சேகரித்தனர். 300-லிருந்து 1800 மீட்டர் ஆழத்தில் உள்ள ஹெர்மிட் நண்டுகள், கல்லிறால்கள் (lobsters), கடல் வெள்ளரிகள் போன்ற பல்வேறு கடல் உயிரிகளில் பிளாஸ்டிக் நுண்நார்கள் இருப்பதை தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர். 

Veena - Mridangam Arangetram 4 03 2017

.




கன்பரா தமிழ்ச்சங்கம் - இன்னிசை மாலை 2017 - 05.03.2017

.













இலங்கைச் செய்திகள்

.
மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு : அதிகாரிகள் இன்று பார்வையிடுகின்


மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு : அதிகாரிகள் இன்று பார்வையிடுகின்றனர்

16/01/2017 வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகரை வட்டவானில் உள்ள குறித்த வெளிநாட்டவரின் விடுதிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் பிரதான வீதியை ஊடறுத்துச்செல்லும் காணிக்கு அருகில் உள்ள வாகரை பிரதேச சபைக்கான வீதியை குறித்த வெளிநாட்டவர் சேதப்படுத்தி அதனை வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை வட்டவான், இறால்ஓடை, நாசிவன்தீவு, காயன்கேணி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றனர்.
குறித்த வெளிநாட்டவரினால் சட்ட விரோதமான முறையில் பல்வேறு நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டுவரும் போதும் அது தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வட்டவான் கிராமசேவகர், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தார் ஆகியோர் முன்னிலையில் குறித்த வீதி அகற்றுவதற்கு உரிய அதிகாரத்தை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டதா என அலைபேசி ஊடாக குறித்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவ்வாறான எந்தவொரு அனுமதியும் தங்களால் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.
இதேவேளை குறித்த சுற்றுலா விடுதிக்கான ஜேர்மன் வெளிநாட்டவரை பொதுமக்கள் முன்னிலையில் அழைத்து கேட்டபோது அரச அதிகாரிகளின் அனுமதிகள் அனைத்தும் தன்னிடமுள்ளதாக சரளமாக சிங்கள மொழியில் உரையாடினார். குறித்த வீதியை இரவோடு இரவாக பெக்கோ இயந்திம் கொண்டு வீதி இருந்த தடயங்கள் இல்லாமல் அழித்தது மட்டுமின்றி வீதியில் இடப்பட்டுள்ள கிறவல் மண் அனைத்தையும் தனது காணிக்குள் பெரிய ஆளமான குளிகள் வெட்டி அதனுள் நிரப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் பல நூறு மீற்றர் தூரம்வரை வீதியை பெக்கோ இயந்திரம் கொண்டு துண்டம் துண்டமாக வெட்டி பொதுமக்களின் போக்குவரத்தை முற்றாக தடை செய்யும் அத்துமீறிய செயற்பாடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் முடிவில் குறித்த வீதியை தற்போது பாவிக்கலாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் முன்னிலையிலும் அறிவிக்கப்பட்டதுடன் உரிய கடற்கரை வீதி தொடர்பான பிரச்சினையை இன்று திங்கள் கிழமை உரிய அதிகாரிகள் பார்வையிடுவதாகவும் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.    நன்றி வீரகேசரி 
























சிட்னியில் பாரதிதாசன் 125 ஆவது ஆண்டு விழா 11-03-17

.


தமிழ் சினிமா

பைரவா



இந்தியாவிற்கு எப்போதும் ஒரு தீபாவளி தான். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார், தல, தளபதி படங்கள் வரும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான். அப்படித்தான் இந்த பொங்கலுக்கு சரவெடியாய் பைரவா களம் இறங்கியுள்ளது.
இளைய தளபதி ஏற்கனவே தெறி வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்க, அவர்கள் ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க உடனே பைரவாவில் களம் இறங்கினார். அவர்களின் சந்தோஷம் இரட்டிப்பானதா? பார்ப்போம்.

Bairavaaகதைக்களம்

இளைய தளபதி விஜய் சென்னையில் ஒரு வங்கியில் பணம் வசூல் செய்பவராக இருக்க, ஒரு பிரச்சனையில் அவருடைய உயர் அதிகாரி ஒய்.ஜி.மகேந்திரனுக்கு உதவுகிறார். கிட்டத்தட்ட அவரின் மகள் திருமணம் நடக்கவே விஜய் தான் காரணம்.
ஒய்.ஜி.மகேந்திரன் மகள் திருமணத்திற்கு விஜய் செல்ல அங்கு கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் காதல். அவரிடம் காதலை சொல்லபோகும் நேரத்தில் தான் கீர்த்தியை சுற்றி பல பிரச்சனைகள் இருப்பது தெரிய வருகிறது.
தன் காதலியின் பிரச்சனை தனக்கு வந்த பிரச்சனையாக எண்ணி, திருநெல்வேலிக்கு வண்டியை கட்டி பட்டையை கிளப்ப விஜய் ரெடியாவதே இந்த பைரவா.

படத்தை பற்றிய அலசல்

முதலில் விஜய் தான், படம் முழுவதும் சரவெடியாய் வெடிக்கின்றார். அதிலும் ‘யாரு கிட்டயும் இல்லாத கெட்டப்பழக்கம் ஒன்னு எண்ட இருக்கு’ என இவர் கூறி முடிப்பதற்குள் திரையரங்கமே விசில் சத்தத்தால் விண்ணை முட்டுகின்றது. இன்னும் அதே துறுதுறு மேனரிசம் என அசத்துகிறார். ஆனால் மேக்கப், கொஞ்சம் இல்லை ரொம்பவே கவனம் செலுத்தியிருக்கலாம்.
கீர்த்தி சுரேஷை சுற்றி தான் கதையே நடக்கின்றது. அதனால் அவருக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் தான், அதிலும் முதல் பாதியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ப்ளாஷ்பேக் காட்சிகள் இவருக்கு தான் வருகின்றது. ஆனால் படத்தின் மைனஸே இது தான். எல்லோரும் விஜய்யை பார்க்க திரையரங்கு வந்தால் பாதி நேரம் அவர் இல்லாதது கொஞ்சம் வருத்தம்.
ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி எல்லாம் டிபிக்கள் தமிழ் சினிமா வில்லன்கள் தான். காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
படத்தின் கதைக்களம் தற்போது நாட்டில் கல்வியில் நடக்கும் பிரச்சனைகளை பேசுகின்றது. அதிலும் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இதை பேசுவது மேலும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும். குறிப்பாக அந்த நீதிமன்ற காட்சியில் விஜய் பேசுவது ரசிக்க வைக்கின்றது.
சுகுமாரின் ஒளிப்பதிவு விஜய் கையில் காயினை(Coin) சுத்துவதை கூட அத்தனை அழகாக காட்டியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் வரலாம் வரலாம் வா மட்டுமே கவர்கின்றது. மற்றப்பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் ஏன் சார் இப்படி? என கேட்க வைக்கின்றது.

க்ளாப்ஸ்

விஜய் இவர் ஒருவரை நம்பியே ஆடியிருக்கும் ருத்ரதாண்டவம்.
விஜய் நீதிமன்றத்தில் பேசும் காட்சிகள், அதை விட பரதனின் வசனங்கள்.
சண்டை காட்சிகள், குறிப்பாக கிரிக்கெட் சண்டை காட்சி.

பல்ப்ஸ்

முதல் பாதியில் கதைக்கு தேவை என்றாலும் அந்த ப்ளாஷ்பேக் பொறுமையை சோதிக்கின்றது.

சாதாரண காட்சியில் கூட கவனிக்க தவறிய சிஜி காட்சிகள்.
இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.
மொத்தத்தில் பரதன் அழகிய தமிழ் மகனை மிஞ்சினாலும் விஜய் தெறியை மிஞ்சவில்லை.
Direction:
Banner:

நன்றி  cineulagam