2013 சிறப்பாக அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.
 தமிழ்முரசுஒஸ்ரேலியாவின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2013 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஆசிரியர் குழு


ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா 27.12 2012

.
கெலன்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா சென்ற வியாழக் கிழமை 27ம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் நிறைந்து காணப்பட்ட இந்த தேர்த்திருவிழாவிலே எம்பெருமான் ஆரோகணம் செய்த காட்சியை கீழே காணலாம்


அபத்த நாடகம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
ஒரு சில வாரங்கட்கு முன் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் “முத்தமிழ் மாலை 2012” என்ற நிகழ்ச்சியை நடாத்தி இருந்தது. முதல் நிகழ்ச்சியே  Dr J ஜெயமோகனின் தயாரிப்பில் “கம்பனும் கவிராயனும்” இசைசித்திரம். அருணாசல கவிராயரின் பாடல்கள் கதை கோவையாக இடம் பெற்றது.   Dr J  ஜெயமோகனே கதையை கூற பாடல் இடம் பெற்றது. கதையின் பாத்திரத்தை சந்தர்ப்பத்தை விழக்கிய Dr J ஜெயமோகன் தனக்கே உரிய பாணியில் நகைசுவையை கலந்து கூறினார். பலர் இரசித்தனர். சிலர் இது தேவைதானா எனவும் வினாவினார்கள்.

மறுபடியும் பிறந்தெம்மை இரட்சிக்க மாட்டீரோ?

.


"பாலனவன் பிறந்ததனால் பாவங்கள் பறந்தோடும்"

பைபிளது வழிகாட்ட வருடங்கள் காத்திருந்தோம்

கடல்கடந்த பலமதங்கள் கண்கலங்கி நின்றிடவே

உலகெங்கும் பாவங்கள் பலவாகப் பெருகியதேன்?



சொல்லுக் கடங்காத கொடுமைகள் தலைதூக்க

பொல்லாத அரசாட்சி பாரெங்கும் கோலோட்ச

தள்ளாடும் மனித இனம் தவறான வழி போக

இல்லாது போனதேன் உன்கருணை என் தேவா?


சைவமன்றம் வழங்கும் சரவணபவ சங்கீத சமர்ப்பணம்

.

புத்தாண்டு கொண்டாட்டம்(?????)-

.
                             முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் 

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!

உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்

கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

நொண்டி --புதுமைப்பித்தன்

.
     இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.

     ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, சௌகரியமாகப் படுக்கையை விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.

     "ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது ஒரு குரல்.

     "அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது மற்றொரு குரல்.
     கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது.


     மனிதனின் உடம்பு மேலே வந்ததும், தொள தொளவென்று பஞ்சகச்சம் வைத்துக்கட்டிய வேஷ்டிக்கிடையில் இரண்டு மரக்கால்கள் தெரிந்தன.

     "சரிதானே ஸார்" என்று வெளியே யிருந்த குரல் கேட்டது.

     "ஆமாம் அப்பா" என்றார் வந்தவர்.

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக 4 அம்சத் திட்டம்: அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் பொப் கார் அறிவிப்பு


Bob Carஅவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் நான்கு அம்சத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழித்துக்கட்டுவதற்கும், நீர்ப்பரப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்பு, உளவறியும் தகவல்கள் பகிர்வு, சட்டவிரோத ஆட்கடத்தலில் கிடைக்கும் வருமானக் குறைப்பிற்குமான நான்கு அம்சத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இன்று அறிவித்துள்ளார்.

நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சர் உயர்திரு கக்கன்

.
ஒரு அன்பர் அனுப்பியது - பகிர்வு


உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல். 

உயர் திரு .கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது .
மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர். 

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

உலகச் செய்திகள்

.
நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஒபாமா!
 
தீவுக்காக மோதும் ஜப்பான் - சீனா: தொடரும் பதற்றம்!

உக்ரைனில் கடும் பனி: 37 பேர் மரணம்

சோதனை என்ற பெயரில் இளம்பெண்களிடம் சில்மிஷம்: மருத்துவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி : கணவர் தற்கொலை

 பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா

தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர்


தமிழர்களும்... பருவக் காற்றும்..



தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன.மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டுதாய்லாந்தில் சங்க கால நாணயங்கள்கம்போடியக் கல்வெட்டில்தமிழ் மன்னனின் பெயர்சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம்ஜாவாவில் கப்பல்சிற்பம்சங்கஇலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள்ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டியமன்னனின் தூதன்தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ரோமானிய நாணயங்கள்டாலமி,பிளினி போன்ற வெளிநாட்டு யாத்திரீகர்களின் பயணக்குறிப்புகள்யுவான் சுவாங் பாஹயான் முதலியசீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

கொழும்பில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

.


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் முருகபூபதி ஆகியோரின் மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக்கூட்ட அறையில் (இலக்கம் 08) நடைபெறும்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் சமணலவௌ என்ற பெயரில் வெளியாகிறது. இதனை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரியே விஜயரத்தின சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். வண்ணாத்திக்குளம் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்தில் டீரவவநசகடல டுயமந என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் குமாரசாமி.
நடேசனின் மற்றுமொரு நாவலான உனையே மயல்கொண்டு டுழளவ in லழர என்னும் பெயரில் வெளியாகிறது. இதனை இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டாளர்கள் விஜித்த யாப்பா பதிப்பகத்தினர் வெளியிடுகின்றனர்.
முருகபூபதியின் பத்து சிறுகதைகள் சிங்களத்தில் மதகசெவனெலி (ளூயனழறள ழுக ஆநஅழசநைள) என்றபெயரில் வெளியாகிறது. இக்கதைகளை ஏ.சி;.எம் கராமத் மொழிபெயர்த்துள்ளார். தோதன்ன பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.
இந்நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு படைப்பாளிகள் பத்திரிகையாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்நிகழ்வை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா அமைப்பு ஒழுங்குசெய்துள்ளது.


இலங்கைச் செய்திகள்

.
சீரற்ற காலநிலையால் 11 பேர் பலி: 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வடகிழக்கு தமிழ் அதிகாரிகளின் 'மௌனவிரதம்'

சந்தர்ப்பவாத அரசியலை மற்றொருமுறை தோலுரித்துக் காட்டிய குற்றப் பிரேரணை
எம்.எஸ்.எம்.ஐயூப்
நாடு(நட்டுக்)கழண்ட தமிழீழ பாராளுமன்றத்தின் பிரித்தானிய அலைவு- 2
அருளம்பலம்.

சீரற்ற காலநிலையால் 23 பேர் பலி : 36 பேர் காயம்

செம்மணி, சூரியகந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தும் மாத்தளை எலும்புக்கூடுகள்

வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் அதிக சேதம்: பணிச்சங்கேனி பாலமும் சேதம் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு

யாழிலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது

14 வயது சிறுமி கர்ப்பம்: சந்தேகத்தில் 42 வயதுடைய நபர் கைது

 சிலாபத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

நாவலர் விழா

.
  உ
சிவமயம்


                            
  நல்லைநகர் தந்த
ஆறுமுகநாவலர்
 நவாலியூர் தந்த
சோமசுந்தரப்புலவர்


 சைவத்திற்கும் தமிழிற்கும் அளப்பரிய  பணிபுரிந்த பெரியோர்களான
ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களையும் 
சோமசுந்தரப் புலவர் அவர்களையும் 
நினைவுகூரும் விழா 
9 – 3 – 2013  சனிக்கிழமை மாலை 5மணி
 இடம் - 23 றோஸ் கிறசென்ற் - றீயன்ஸ்பார்க் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபம்             

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல்

.

கணிதம் மற்றும் அறிவியல் ஆளுமைகள் பற்றி நண்பர் பாஸ்கர் லட்சுமண் சிறப்பான கட்டுரைகளை  எழுதிவருகிறார்,  அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதிய இக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று
•••
ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி
பாஸ்கர் லட்சுமண்
ஃப்ளோரென்ஸ்  நைட்டிங்கேல் என்றவுடன் பொதுவாக எல்லோர் நினைவில் வருவது “விளக்குடன் ஒரு மங்கை” மற்றும் செவிலியாக அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு. அனேகமாக நாம் அறியாத அவருடைய இந்த புள்ளியில் துறைத் திறமை மீது சிறிது ஒளி பாய்ச்சிப் பார்ப்போம்.
ஃப்ளோரென்ஸ் இத்தாலியிலுள்ள ப்ளோரென்ஸ் என்ற ஊரில் உயர்தர நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அப்போது நிலவிய சமுதாயக் கருத்துக்களுக்கு மாறாக ஃப்ளோரென்ஸின் பெற்றோர்கள் பெண்கள் படிப்பதை ஆதரித்தனர். ஆசிரியரை வைத்து பிரெஞ்சு, தாவரவியல் மற்றும் பூகோளம் ஆகியவற்றை நைடிங்கேலுக்குக் கற்பித்தார்கள். ஃப்ளோரென்ஸ் மீது மிக்க பாசம் கொண்ட தந்தை, கல்லூரிப் பாடங்களை தாமே வீட்டிலேயே கற்றுக் கொடுத்தார்.

ஓலைப் பெட்டிகளை தெரியுமா உங்களுக்கு ...

.


உச்சி முதல் அடிவரை அனைத்துமே பயன்படக்கூடிய மரம் பனைமரம். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு பயன்படுகிறது. அதிலும் ஓலையின் பயன்பாடு மிகவும் அதிகம்.

பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

சிட்னியில் சித்திரைத் திருவிழா -2013 21.04.2013


தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சிட்னி தமிழர்களின் பேராதரவுடன் நடத்தும்
சிட்னியில் சித்திரைத் திருவிழா -நாள் முழுக்க தமிழர்களின்கொண்டாட்டம் !!
நாள்: 2013 ஏப்ரல் மாதம் 21ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இடம்: காசில் ஹில் லோயர் ஷோ கிரௌண்ட், காசில் ஹில் 
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி இந்த நிகழ்வில் உள்ளூர் கலைங்கர்களின் கலை நிகழ்சிகள்,குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள்உணவுஅரங்கங்கள்விற்பனை அரங்கங்கள் என பல சிறப்புஅம்சங்கள் இடம் பெறுகிறது.

தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை.. வித்யாசாகர்-

.


நான் அன்றும் இறந்திருக்கவேண்டும்
இருப்பதைத் தொலைத்த அந்த வலி
அத்தனை கனமானது;
விமானமேறி நாடுகடந்து
நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு
வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும்
அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய
ஓட்டமும் தவிப்பும்
எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும்
வானம் கிழிவதைப் போல அன்று
அறுபட்ட மனதில்
அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை
காதாழம் சிதைக்கும் மேளசப்தத்தை நிறுத்திக் கொண்டு
அவளை உயிரோடு தேடும் அழையை
என்னால் அடக்கவே இயலவில்லை
அவளின் மூடிக் கிடக்கும் கண்கள் திறந்து
ஒரேயொரு முறை எனைப் பார்க்காதா எனக் கெஞ்சிய
தருணம்  வாழ்வின் அகோர முகத்தைக் கொண்டது
கண்ணடைத்து வாய்கோணி ஐயோவென்று
வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுத அழையில்
நான் குடித்துவளர்ந்தப் பாலின் வாசம்கருகி எனை உயிரோடு கொன்றது

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்


.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கிற நிலையில் கடந்த ஒரு வருட நினைவுகளை மறந்துவிடுகிற ஹீரோவின் சிந்தனையை சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன்.
'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ ஐடியாவில் இத்தனை ஜோக்கும் த்ரில்லும் புதைத்து அசர அடித்திருக்கிறது 'N.k.P.K.’ கூட்டணி!
கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிற நிலையில் நண்பர்கள்களின் ரூமிற்கு வருகிறார் ஹீரோ விஜய் சேதுபதி.
கிரிக்கெட் ஆடலாம் என்று கிளம்புகிறார்கள். பந்தை கேட்ச் பிடிக்கிற நேரத்தில் பின்னால் சாயும் விஜய் சேதுபதிக்கு பின் மண்டையில் நல்ல அடி விழ அப்புறம் அரை சேதுவாகி நண்பர்களை அல்லாட வைக்கிறார்.
அதுவும் எப்படி? ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்லி...
நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப் போனேன்.
அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? அதுக்கப்புறம் என்னாச்சி? என்று கேட்டபடியே "பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? மெடுலாவில அடிபட்டிருக்கும் அதான். இப்ப ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்" ஐந்து நிமிடத்திற்குகொரு முறை இதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார் இவர்.
இந்த அடியில் சுமார் ஒரு வருட சம்பவத்தை அப்படியே மறந்தும் விடுகிறார் விஜய் சேதுபதி.
அதுவும் ஒரு வருடத்திற்குள் காதலித்து கல்யாணம் செய்யப் போகிற வருங்கால மனைவியையும் கூட.
கல்யாணத்திற்கு இன்னும் இரண்டே தினங்கள் இருக்கிற நிலையில் நண்பர்கள் அதே காதலிக்கு கல்யாணம் செய்து வைத்தார்களா? விஜய் சேதுபதி குணமடைந்தாரா? நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் க்ளைமாக்சோடு முடிகிறது படம்.
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் டூயட் இல்லை. படம் துவங்கி சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அறிமுகமாகிறார் ஹீரோயின்.
ஒரே ஒரு பாட்டுதான். இப்படி தமிழ்சினிமாவின் ரெகுலர் ஃபார்முலாவை கிழித்து காயப் போட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர் பாலாஜி.
இந்த சம்பவம் அப்படியே உண்மைக்கதை என்று கடைசியில் விளக்குகிறார்கள். அதுவும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் வாழ்வில் நடந்த சம்பவமாம் இது.
தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, சுந்தரபாண்டியன் என்று கதை தேர்வில் மெனக்கெடுகிற ஆள் போலிருக்கிறது விஜய் சேதுபதி.
இந்த படமும் அவரது கதைகேட்கும் திறனுக்கு ஏற்றார் போலதான் அமைந்திருக்கிறது.
முகத்தில் பெரிய ரீயாக்ஷன் ஏதுமின்றி, அதே நேரத்தில் ரசிகர்களை குலுங்க வைக்கிற வித்தையும் தெரிந்திருக்கிறது இவருக்கு.
விஜய் சேதுபதியின் நண்பர்களாக அறிமுகமாகி இருக்கும் ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் அட்டகாசம்.
'காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!’ என்று அள்ளிவிட்டு பக்ஸ் வாங்கும் பல்பு, 'அவன்தான் மாப்பிள்ளை பேரை மறந்துடுறான்ல.
இந்தத் தடவை பக்ஸ் பேரைச் சொல்லு!’ என்று கோத்து விடும் சரஸ்... நண்பர்களின் ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா!
தெரு கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது பிரேம்குமாரின் ஒளிப்பதிவு. (நிஜத்தில் இவரேதான் அந்த மெமரி லாஸ் ஹீரோ!)
படம் முழுக்க ரிப்பீட் அடிக்கும் வசனங்களுக்கு, சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங் ஷன் அடிக்கிறது சித்தார்த் விபினின் பின்னணி இசை.
நிஜ சம்பவத்தில் தொடர்புடைய சிலரைப் படத்திலும் அப்படியே உலவவிட்டு இருப்பது... அடடே!
முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த கொமெடி எக்ஸ்பிரஸ்.
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள்
ஒளிப்பதிவு: பிரேம் குமார்
இசை ஷங்கர், சித்தார்த்
இயக்கம் பாலாஜி தரணிதரன்
நன்றி விடுப்பு