நல்லைநகர் நாவலர் பெருமான் காலத்தின் குரலாய் ஒலித்து நின்றார் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
  

  உலகிலே பலமொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகள் எல்லாமே ஒவ்வொரு வகையில் முக்கிய த்துவமும் தனித்துவமும் மிக்க மொழிகளாய் விளங்குகின்றன. இந்த உலக மொழிகளில் ஒன்றாய் இருக்கின்ற எங்கள் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளில் இல்லாத தனித்துவமும்சிறப்பும் இருக் கிறது என்பதுதான் மிகவும் முக்கியம் எனலாம். அப்படி என்னதான் சிறப்பு தமிழ் மொழிக்கு வாய்த்தி ருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ! அந்தச் சிறப்புத்தான் " பக்தி இலக்கியம் " என்னும் தனித்துவமான சிறப்பு எனலாம்.

   உலகின் எந்த மொழிகளிலும் பக்தி இலக்கியம் என்று சுட்டிக் காட்டப்படும் அளவுக்கு இல்லை என்பதே அறிஞர்களின் கருத்தாக அமைகிறது எனலாம். இந்தப் பக்தி இயக்கத்தின் முதற் குரலாய் தமிழ் உலகில் ஒலித்த குரல் ஒரு பெண்மணியின் குரல் என்பதை மனமிருத்தல் அவசிமாகும். அவர்தான் காரைக்கால் தந்த பெருமாட்டி தவப் புதல்வி காரைக்கால் அம்மையார் ஆவர்.

  இவர் சைவ பக்தி இயக்தின் எழுகின்ற ஞாயிறாய் - பின்னர் வந்த அடியார்கள் அனைவருக்குமே ஆதார மான குரலாய் விளங்குகிறார் எனலாம்.சைவத் திருமுறைகளின் தோற்றத்தின் குரலாயும் நிற்கின்றார். இவர் சைவத்தைக் காத்திடக் கையில் எடுத்தது அமிர்தமாம் தமிழ் மொழியையேயாகும்.தமிழ் மொழியில் -அற்புதத் திருவந்தாதிதிரவிரட்டை மணிமாலை,திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகியவற்றை அளித்து ஆன்மீகக் குரலாய் ஒலித்து நிற்கிறார்.இவரின் பின்னர் வந்த அடியார்கள் பலரும் அம்மையா ரைப் பின்பற்றி இறை புகழ் பரப்புவதில் தங்களின் குரலை ஒலித்து நிற்கிறார்கள்.

    ஆழ்வார்கள் வந்தார்கள்.ஆளுடைய பிள்ளையார் வந்தார்.அப்பர் வந்தார். ஆலால சுந்தரர் வந்தார். வாத வூர் வண்டும் வந்தது. இவர்கள் அனைவரின் குரல்களும் தமிழில் சைவத்தை நிலை நாட்டிட ஓங்கி ஒலி த்து நின்றன எனலாம். இந்தக் குரல்கள் ஒலித்த காலம் வேறு. அந்தக்காலச் சூழலும் வேறு. அவர்களின் குரலில் காணப்பட்ட தத்துவங்களும் வேறு என்றுதான் கருதிட வேண்டும். அவர்கள் அனைவருமே அந் தக் கால தமிழ் இலக்கியத்தின் போக்கினை மனமிருத்தி பாடல்களை ஊடகமாக கொண்டே  தமது குரலை வெளிப்படுத்தும் கட்டாயம் காணப்பட்டது. ஏனெனில் தமிழ் இலக்கியத்தை ஆட் கொண்டு இருந்த வடிவம் பாட்டு அல்லது செய்யுள் வடிவமே யாகும்.

படித்தோம் சொல்கின்றோம்: “ கூற்று “ பெண்களின் குரல் 25 வருடங்கள் மனம்விட்டுப்பேசும் “ வெளிகள் “ பெண்கள் மத்தியில் உருவாகவேண்டும் ! முருகபூபதி


கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.

இவருடனான சகோதர வாஞ்சையான உறவு எனக்கு 1970 களிலேயே தொடங்கிவிட்டது.  பின்னாளில் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்த பலரதும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பேராசிரியையாகவும் திகழந்த சித்திரலேகா பற்றி,  கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தினத்தின்போது நான் வெளியிட்ட யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது )  நூலிலும்  எழுதியிருக்கின்றேன். 

பல்கலைக்கழக பேராசிரியையாக மாத்திரம் இயங்காமல்,  இலக்கியவாதியாகவும், பெண்கள் தொடர்பான விழிப்புணர் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டராகவும் விளங்கியிருக்கும் சித்திரலேகா, சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.

பல வருடங்களுக்கு முன்னர் இவர் தொகுத்து வெளியிட்ட சொல்லாத


சேதிகள்
கவிதை நூல் இன்றளவும் பேசப்படுகிறது.

இம்முறை இவரை நான் சந்தித்தபோது கூற்று என்ற ஆவணத்தொகுப்பு நூலை எனக்கு படிக்கத்தந்தார். 261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பினைப் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு காலதாமதமாகிவிட்டது.  நான் தொடர்ச்சியான பயணங்களில் இருந்தமையால், இந்தத் தாமதம் நிகழ்ந்தது.

இந்நூலை சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் வெளியிட்டிருக்கிறது. இதன் பதிப்பாசிரியர்கள்:  சித்திரலேகா – மர்லின் வீவர். 

 “ பெண்நிலை அரசியலையும் எமது கதைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டாய் நன்றி நண்பியே.  “ என்ற கூற்றுடன் இந்தத்  தொகுப்பு நூலை 2013 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட, தோழி சுனிலா அபேசேகரவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளனர்.

1977 இற்குப்பின்னர்,  மக்கள் விடுதலை முன்னணி மீதான தடை நீக்கப்பட்டதும்,  அவ்வியக்கத்தின் பணிமனை கொழும்பு ஆமர்வீதி – புளுமென்டால் வீதி சந்தியில் ஒரு மரஆலைக் கட்டிடத்தின் மேல் மாடியில் இயங்கியது.  அங்கே செல்லும் சந்தர்ப்பங்களில் தோழி சுனிலாவை,  தோழர் கெலி சேனநாயக்காவுடன் பார்த்துப்பேசி பழகியிருக்கின்றேன்.

தோழர்கள் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார முதலான தோழர்களின் பிரியத்திற்குரிய தோழியாகவும் சுனிலா திகழ்ந்தார்.

அரசியல் இயக்கங்களுக்குள் காலத்துக்காலம் தோன்றும் முரண்பாடுகளினால், பின்னாளில் சுனிலாவும் அதிலிருந்து ஒதுங்கி, பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுட்டார்.

இவரது மறைவுச்செய்தி அறிந்ததும் நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருக்கும் தோழர் லயனல் போப்பகேயும் ஒரு இரங்கல் கட்டுரையை ஊடகங்களில் எழுதியிருந்தார்.

சித்திரலேகா என்னிடம் வழங்கிய கூற்று தொகுப்பில், தோழி சுனிலா அபேசேகராவின் படத்தை பார்த்ததும் கடந்த காலங்களை திரும்பிப்பார்த்தேன்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பு,  பெண்கள் தொடர்பான பல்வேறு விடயதானங்களையும் சூரியா அமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட அளப்பரிய பணிகளையும், அவை சார்ந்த போராட்டங்களையும் – படங்களையும் சித்திரிக்கின்றமையால், ஆவணமாகவும் விளங்குகிறது.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) - அங்கம் 87 ஆற்றல்களை இனம் காண்போம் ! ஆளுமைகளிடம் கற்பதும் பெறுவதும் !! முருகபூபதி


ஒருவருடைய ஆற்றல்களை இனம் கண்டு பாராட்டும் இயல்பு எமது தமிழ் சமூகத்தில் அரிதாகவே காணப்படுகிறது.

ஏனைய சமூகங்களில் நிலைமை எவ்வாறென்பது தெரியவில்லை. எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் இதுவரையில் எனது மனைவி மாலதியைப்பற்றி ஏதும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், சொல்லநேர்ந்தமைக்கு கடந்த 02 ஆம் திகதி மெய்நிகரில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் காரணமாக அமைந்துவிட்டது.  அதுபற்றி பின்னர் சொல்கின்றேன்.

இலங்கையில் வடமராட்சியைச்சேர்ந்த மாலதியின்  தந்தையார் பஞ்சநாதன்,  மருத்துவராக பணியாற்றியமையால், ஏனைய


பிரதேசங்களுக்கும் குறிப்பாக மாத்தளை, ஆண்டி அம்பலம், நைனா மடம், நீர்கொழும்பு நகரங்களுக்கும் அவர்  தமது  மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி ஊர் விட்டு ஊர் இடம்பெயர நேர்ந்தது.

இறுதியாக இவர்களது குடும்பம் நீர்கொழும்பினையே வதிவிடமாக்கிக்கொண்டமையால், மாலதியும், நான் முன்னர் கல்வி கற்ற அல்கிலால் மகா வித்தியாலயத்திலேயே உயர்தரம் கற்றுவிட்டு, பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பி. ஏ.                     ( சிறப்பு ) பட்டத்தினை வெளிவாரியாக கற்றுப்பெற்றுக்கொண்டு  ஆசிரியையாக வவுனியா, நீர்கொழும்பு பிரதேசங்களில் பணியாற்றினார்.

இவருடைய தம்பி விக்னேஸ்வரன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கற்றவர். கவிஞர். கவியரசு கண்ணதாசனின் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புறவுகொண்டவர்.


தென்றல்விடு தூது ( கவிதை ) , பலரது பார்வையில் கண்ணதாசன் ( தொகுப்பு ) ஆகிய நூல்களையும் எழுதியிருப்பதுடன், காவியன் முத்துதாசன் என்ற புனைபெயரில் பாடல்களும் புனைந்திருப்பவர்.  அவை மனமொட்டுக்கள் என்ற பெயரில் இறுவட்டாகவும் வெளிவந்துள்ளது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திப்பு  உட்பட பல பாடகர்கள் இதில் பாடியிருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குநர் கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய சில திரைப்படங்களில் நடித்திருப்பதுடன், அவற்றில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர்.

மாலதியின் மூத்த அக்கா பத்மினியும் கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர். இவர் எழுதிய உணவு சம்பந்தமான ஒரு நூலை கண்ணதாசன் பதிப்பகம் முன்னர் வெளியிட்டிருக்கிறது. 

தாயார் நீர்கொழும்பிலும், தந்தையார் பிலிப்பைன்ஸிலும், அக்கா பத்மினி சிங்கப்பூரிலும் மறைந்துவிட்டார்கள்.

மற்றும் ஒரு அக்கா நந்தினியும் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் மூன்று பிள்ளைகளின் தாய்.  எதிர்பாராதவகையில் 1987 ஆம் ஆண்டு வடமராட்சியில் நடந்த ஒபரேஷன் லிபரேஷன் தாக்குதலின் போது விமானக்குண்டுவீச்சில் சிக்கி கொல்லப்பட்டவர். அவரது  மூன்று பெண் பிள்ளைகளும்  தற்போது திருமணமாகி பிள்ளைகளுக்கும் தாய்மார் ஆகிவிட்டனர்.

மாலதியின் தங்கை சூரியகுமாரி யாழ்.பல்கலைக்கழக பட்டதாரியாவார்.  இவர் சிறிது காலம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், வீரகேசரி நாளிதழில் உதவி ஆசிரியராகவும் மித்திரன் வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  இலக்கிய விமர்சனங்களும் எழுதுபவர்.

நினைவில் நின்றவை – சிறுகதை - கே.எஸ்.சுதாகர் சோஷல்


மஞ்சு சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும் பழகுவதுமில்லை.

கொழும்பில் மகன், மருமகள், பேரப்பிள்ளையுடன் இருந்த காலங்களில் அவள் தனிமையை உணர்ந்ததில்லை. மகனுக்கு சின்சினாட்டிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது அவள் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டாள். மகனின் எதிர்காலம் கருதி, வற்புறுத்தி அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பி, போரினால் சிதிலமடைந்திருந்த தனது வீட்டைத் திருத்தி அங்கேயே தங்கிக் கொண்டாள். தனது அந்திமகாலம் அங்கேயே கழிய வேண்டும் என்பது அவள் விருப்பம். பொழுதுபோக்குக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கம்பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பாள்.

ஒருநாள் மதியம், “எயிற்றி ரூ பட்ச் கெற்றுகெதர் வைக்கப் போகின்றோம்” என்று சொல்லியபடி நந்தனும் முரளியும் அவளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவளும் நந்தனும் எல்லாப் பிரச்சினைக்குள்ளும் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். முரளி கனடாவிலிருந்து ஒன்றுகூடலை ஒழுங்கு செய்யவென வந்திருந்தான்.

“இது ஒரு காலங்கடந்த ஒன்றுகூடல் எண்டு நான் நினைக்கிறன். இருபது இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முந்திச் செய்திருக்க வேணும் முரளி…”

நாற்பது வருடங்கள் கழித்து ஒரு ஒன்றுகூடல் தேவையா என்பது மஞ்சுவின் மனதில் பெருங் கேள்வியாக எழுந்தது. முரளி தலைக்குள் கையை வைத்துக் கோதினான்.

“செய்யக்கூடிய நிலையிலையா அப்ப நாடு இருந்தது. யுத்தம் முடிஞ்ச கையோடை செய்திருக்க வேணும். எங்கை… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சோலியள். ஒவ்வொரு நாட்டிலையும் போய் ஒளிஞ்சிருக்கிற ஆக்களைத் தேடிப்பிடிச்சு ஒண்டாக் கொண்டுவாறதெண்டா சும்மா லேசுப்பட்ட காரியமா?” என்றான் நந்தன்.

“ஆர் ஆர் வருகினம்? வாற ஆக்களின்ரை லிஸ்ற் இருக்கோ?”

பொக்கற்றுக்குள்ளிருந்து கசங்கிய கடதாசி ஒன்றை எடுத்து மஞ்சுவிடம் நீட்டினான் நந்தன்.

“இதை நீங்களே வைச்சிருங்கோ. இது ஒரு முழுமையான லிஸ்ற் இல்லை. இப்பத்தான் ஒவ்வொருத்தராச் சேர்த்துக் கொண்டு வாறம். முதலிலை சயன்ஸ், மற்ஸ் மாத்திரம் செய்வோம் எண்டு யோசிச்சம். பிறகு ஆற்ஸ், கொமேர்ஸ் எல்லாரையும் சேர்ப்போமெண்டு முடிவெடுத்திருக்கிறம்.”

“ஒன்றுகூடலுக்கு வாறதுக்கு எனக்குப் பெரிசா ஆர்வம் இல்லை.” என்றாள் மஞ்சு.

பட்டிக்காட்டு பொன்னையா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 1973ம் வருடம் எம் ஜி ஆர் சொந்தமாக தயாரித்து, இரட்டை


வேடங்களில் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது. அந்த வெற்றிக்கு திருஷ்டி பரிகாரமாக இன்னுமொரு படம் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றியது. அந்த படம்தான் பட்டிக்காட்டு பொன்னையா. இந்தப் படத்திலும் எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில்தான் நடித்திருந்தார். ஆனால் இரண்டுமே உப்பு சப்பில்லாத வேடங்கள் !


இவ்வளவுக்கும் படத்தை தயாரித்து இயக்கிவர் பிரபலமான

ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பி எஸ் ரங்கா. இவர் தன்னுடைய விக்ரம் ப்ரொடெக்ஷன்ஸ் சார்பில் சிவாஜி கணேசன் நடிப்பில் தயாரித்து இயக்கிய தெனாலிராமன், நிச்சய தாம்பூலம் படங்கள் வெற்றி படங்களாக வரவேற்கப்பட்டன. ஆனாலும் எனோ சிவாஜியை விட்டு விலகி எம் ஜி ஆரிடம் சென்ற ரங்கா பட்டிக்காட்டு பொன்னையா படத்தை தயாரித்தார். வழக்கமாக தன்னுடைய படங்களுக்கு இசையமைக்கும் எம் எஸ் விஸ்வநாதனை ஒதுக்கி விட்டு இந்தப் படத்துக்கு கே வி மகாதேவனை இசையமைப்பாளராக்கினார்.

கிராமத்தில் விவசாயம் செய்து குடும்பத்துடன் வாழும் பொன்னையா , தன் தம்பி முத்தையாவின் உயர் கல்விக்காக கடன் வாங்கி செலவு செய்கிறான். பட்டணத்தில் கல்வி கற்கும் முத்தையாவுக்கும் உடன் படிக்கும் மேகலாவுக்கு எதிபாராராத விதமாக காதல் மலர்ந்து , அதன் விளைவாக திருமணத்துக்கு முன்னாரே தாம்பத்திய உறவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் பெற்றோர்களின் அனுமதி இன்றி முத்தையா மேகலாவை திருமணம் செய்கிறான். ஆனால் மேகலாவின் தாயாரினால் நித்தம் அவமானப்படுத்தப் படுகிறான் முத்தையா. அங்கே கிராமத்தில் தந்தை, தாய் , தங்கையுடன் வாழும் பொன்னையா கடன் சுமை தாங்காமல் , தொழில் தேடி நகரத்துக்கு வந்து குத்து சண்டை வீரனாக உருவெடுக்கிறான். கிராமத்தில் பொன்னையாவை காதலித்த கண்ணம்மா , அவனைத் தேடி பட்டணத்துக்கு வருகிறாள்.

வழக்கமான எம் ஜி ஆர் பட பாணியில் அமையாமல் படத்தின் கதை ஏட கூடமாக அமைத்திருந்தது. இதனால் எம் ஜி ஆரின் இமேஜுக்கு பங்கம் விளையும் வண்ணம் காட்சிகள் அமைந்தன. போதாக் குறைக்கு சண்டைக்காட்சிகளில் எம் ஜி ஆருக்கு பதில் டூப் நடிகரே சண்டை போடுகிறார். என்ன கொடுமை!

தமிழரசு கட்சியின் தலைமை?

 December 3, 2023


இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் யார் என்னும் போட்டி ஆரம்பித்துள்ளது.
இதுவரையில் ஊடகங்களில் பேசப்பட்ட விடயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் வேட்பு மனுவை கட்சியின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கை தமிழரசு கட்சி 1949இல் உருவாக்கப்பட்டது.
ஒரு பிரதான கட்சியில் ஏற்படும் உடைவிலிருந்து அல்லது ஒரு கட்சியிலிருந்து ஆளுமையுள்ள ஒருவர் வெளியேறும் போதே, புதிய கட்சிகள் உருவாக்கின்றன.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய கட்சிகளின் உருவாக்கம் பெரும்பாலும் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கின்றது.
ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தவறான அரசியல் பாதையில் பொன்னம்பலம் பயணிக்கின்றார் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்தே, இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கினார்.
1970களுக்கு பின்னரான அரசியல் சூழலில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு, தமிழரசு கட்சியின் போதாமையை உணர்ந்த செல்வநாயகம், புதிய அரசியல் கூட்டணி ஒன்றைப் பற்றி சிந்தித்தார்.
இதன் விளைவாகவே, ஜக்கிய விடுதலைக் கூட்டணி – பின்னர் தமிழர் ஜக்கிய விடுதலைக் கூட்டணி உருவாகியது.
எனினும் பின்னர் ஏற்பட்ட புதிய அரசியல் நெருக்கடிகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினாலும் எதிர்கொள்ள முடியாத போது, தமிழ் தேசிய அரசியல் செல்நெறி முற்றிலுமாக, இளைஞர்களின் – ஆயுத இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
மீண்டும் தமிழரசு கட்சி எவ்வாறு தமிழ் தேசிய அரசியல் அரங்கிற்குள் நுழைந்தது? விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, அன்றைய சூழலை கையாளுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே மிதவாத கட்சியொன்றின் கீழ், அனைவரையும் ஒன்றுபடுத்தும் யோசனையை புலிகளின் தலைமை ஆதரித்தது.
ஒரு வேளை ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாதிருந்திருந்தால், வீட்டுச் சின்னம் மீண்டும் தமிழ் சமூகத்திற்குள் நுழையும் சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கும்.
அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இன்று வேறுவிதமான தலைமைத்துவ போட்டியே இடம்பெற்றிருக்கும்.
2009இற்கு பின்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலத்தில், ஆரம்பத்திலிருந்தே ஏதோவொரு வகையில் உள் முரண்பாடுகள் இருந்த வண்ணமேயிருந்தது.

கனடா தாய்வீடு: இம்மாதம் தாமரைச்செல்வி சிறப்பிதழ் வெளியீடு


அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் வதியும் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் அரை நூற்றாண்டு கால இலக்கியப் பணியை பாராட்டி கனடாவிலிருந்து வெளியாகும் தாய்வீடு மாத இதழ் சிறப்பிதழ்  வெளியிட்டுள்ளது.

இம்மாதம் ( டிசம்பர் ) வெளியாகியிருக்கும்  தாய்வீடு சிறப்பிதழில் இதர ஆக்கங்களுடன், தாமரைச்செல்வியின் எழுத்துலகம் குறித்த கட்டுரைகளின்  விசேட இணைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தாமரைச்செல்வியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆக்கங்களை எழுத்தாளர்கள் சி.  கருணாகரன், லெ. முருகபூபதி, யசோதா பத்மநாதன், சார்ள்ஸ குணநாயகம், ரஞ்ஜனி சுப்பிரமணியம், தமிழக படைப்பாளி இந்திரன், சந்திரா இரவீந்திரன், ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

தாரைச்செல்வியுடனான நேர்காணலை சேகர் தம்பிராஜா எழுதியுள்ளார்.

ஓவியராகவும் திகழும் தாமரைச்செல்வியின் சில ஓவியங்களும் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன்  கடந்த காலங்களில் தாமரைச்செல்வியை பாராட்டி அட்டைப்பட அதியாக  அவரை கௌரவித்த இலக்கிய இதழ்களின் முகப்புகளும் வெளிவந்துள்ளன.

கடந்த செப்டெம்பர் மாதம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும்  தனது 23 ஆவது  தமிழ் எழுத்தாளர் விழாவில் தாமரைச்செல்விக்கு இலக்கிய சாதனையாளர் விருது வழங்கி பாராட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரன் குழுவினர் புதுடில்லியில்

 December 1, 2023

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் தலைமையில் – புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல்வாதிகள் அடங்கிய குழுவினர் புதுடில்லியில் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஓர் அரச மட்ட சந்திப்பு அல்ல – மாறாக, புதுடில்லியில் உள்ள அரசியல் அவதானிகள், புத்திஜீவிகளுடனான சந்திப்பாகவே தெரிகின்றது.
இவ்வாறான சந்திப்புகள் முக்கியமானவை.
ஏனெனில், இந்தியாவின் தலையீட்டை ஈழத் தமிழர் கோரும் விடயம் பரவலான இந்திய அவதானத்தைப் பெற வேண்டும்.
ஆனால், இவ்வாறான சந்திப்புகளின் எவ்வாறான விடயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
விக்னேஸ்வரன் சில விடயங்களை தெளிவாக முன்வைத்திருக்கிறார் என்றே தெரிகின்றது. அதாவது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான – அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்னும் விடயம் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த ஆண்டு ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன.
யுத்தம் முடிவுற்றதன் பின்னரான பத்து ஆண்டுகளில் இந்தியாவின் தலையீட்டை தமிழ்த் தேசிய கட்சிகள் வெளிப்படையாகக் கோரிய முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது.
ஆனால், அந்த நகர்வை தமிழ் கட்சிகள் முறையாக முன்னெடுக்கவில்லை.
அடுத்து மூன்று கடிதங்களை அனுப்பி முதல் கடிதத்தின் கனதியை பெறுமதியிழக்கச் செய்தன.

அனைத்துலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு……..! தற்கொலை வீதம் தமிழ் சமூகத்தில் அதிகரிப்பதற்கான காரணிகள் ! ? தீர்வுகள் எம்மிடமே இருக்கின்றன ! முருகபூபதி

“ வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்  “  என்ற


பாடல் வரிகளை மறந்திருக்கமாட்டோம்.

வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற தொனிப்பொருளில்தான் இந்த வரிகள் அமைந்துள்ளன. 

ஏமாற்றம், துரோகம், வறுமை, அவமானம், தோல்வி, மன அழுத்தம், விரக்தி, இழப்பு, தனிமை , குடும்ப வன்முறை  முதலான காரணங்களினால், எமது சமூகத்தில் தற்கொலைகள் நிகழுகின்றன.

பெண்விடுதலை, பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. ஆனால், ஆண்கள் சார்ந்த


பிரச்சினைகளை  “ ஆணாதிக்கம்  “ என்ற வரையறைக்குள் அடக்கிவிடும் தன்மைதான் அதிகரித்திருக்கிறது.

அதனால்,  எமது சமூகத்தின் மத்தியில் இதுதொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.  இம்முறை அனைத்துலக ஆண்கள் தினத்தில் ஆண்களின் தற்கொலைகளை பேசுபொருளாக்கியிருக்கும் சூழலில் எமது கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

பெரும்பாலான   வாழ்வியல் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ப உரிய தீர்வை கண்டுபிடிக்காமல், பலரும் விபரீதமான முடிவுகளையே கண்டடைகின்றனர்.

உலக அரங்கிலும் பல புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகளும் கூட தற்கொலை செய்துகொண்டவர்கள்தான்.

அதற்கு நாம் அடல்ஃப் ஹிட்லர்  முதல்கொண்டு பலரை உதாரணம் காண்பிக்க முடியும்.


ஒருவர் தன்மீதான நம்பிக்கையை இழக்கும்போது, விரக்தியை நோக்கி நகருகின்றார். அந்த விரக்தி தொடருமானால், மன அழுத்தம்தான் பெருகும். இறுதியில், தனக்கான முடிவை நோக்கி நகருகின்றார். இறுதியில் அனைத்து துயரங்களிலுமிருந்து விடுதலையாவதற்கு  ஒரே வழி தற்கொலைதான் என்ற தீர்வுக்கு வருகிறார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பாடல் வரிகளைப்போன்றே மற்றும் ஒரு பாடல் வரியும் இருக்கின்றது.

“  உனக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு “  

ஆனால்,  தற்கொலைசெய்துகொள்ளவேண்டும் என எண்ணுபவர்கள்,  தன்னை, தன்னைச்சூழவிருக்கும் குடும்பத்தினரை, உறவினர்கள், நண்பர்களை, பசுமை நிறைந்த நினைவுகளை அந்தக்கணத்தில் முற்றாக மறந்துவிடுகிறார்கள்.

இவர்களைப்போன்றவர்களுக்காகவே விஞ்ஞான உலகில் மருத்துவர்கள், உலநள சிகிச்சையாளர்கள், சீர்மியத் தொண்டர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

எமது தமிழ் சமூகத்தில் குறிப்பாக இலங்கையிலும் இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், தற்கொலை மரண அவலம் தொடருகின்றது.

அதேசமயம், உளவள சிகிச்சை நிலையங்களும் பெருகியிருக்கின்றன. 

நகரீகம் வளர்ச்சியடைந்த மேல்நாடுகளில்,  இயங்கும் மருத்துவமனைகளில் உளவள சிகிச்சைக்காகவே தனியான பிரிவுகளும் இயங்குகின்றன.

அத்தகைய நாடுகளிலும் தற்கொலை மரண வீதம் அதிகரித்து காணப்படுகிறது.  பலர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அல்லது முயற்சிக்கின்றனர்.

கணினி தொழில் நுட்பம் எமக்கு வேறும் சில ஆபத்துக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

எளிதாக,  உடலை வருத்தாமல் எவ்வாறு தற்கொலை செய்துகொள்வது..?  முதலான ஆலோசனைகளைக்கூட கணினியில் தரவிறக்கம் செய்து படிக்கமுடியுமென்ற நிலைக்கு இந்த நவீன உலகம் எம்மைத் தள்ளியிருக்கிறது.

பின்விளைகளைப்பற்றி சற்றேனும் சிந்திக்காமல், தவறான செயல்களை செய்துவிட்டு, சமூகத்தில் அம்பலமாகும்போது, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய செய்திகளை படித்திருக்கின்றோம்.

மேய்ப்பர் இல்லாத ஆடுகள்

 November 29, 2023

தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ந்தும் குழப்ப நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.
2009இற்கு பின்னரான அரசியலில், தடியெடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்கள் – என்பது போல், அனைவருமே அரசியலை தீர்மனிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்கின்றனர்.
இது தொடர்பில் ‘ஈழநாடு’ ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியிருக்கின்றது – அதாவது, ஒரு சமூகம் தலைமையற்று இருக்கின்றபோது அந்த சமூகத்தின் அரசியல் பரிகசிப்புக்குரியதாகவே காட்சியளிக்கும்.
ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
2009இற்கு பின்னரான அரசியல் சீரழிவுகள் அனைத்துமே விடுதலை புலிகளின் பெயராலேயே முன்னெடுக்கப்படுவதுதான் துரதிர்ஷ்டவசமானது.
ஈழத் தமிழர் அரசியலுக்கு புலம்பெயர் சமூகம் பலம் சேர்க்கும் – அவர்கள் ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச முகமாக இருப்பார்கள் என்றவாறான எதிர்பார்ப்பே ஆரம்பத்தில் அனைவரிடமும் இருந்தது.
ஆனால், இன்று நிலைமைகளை ஆழமாக நோக்கினால், தமிழ் புலம்பெயர் சமூகம் எதிர்மறையான தாக்கத்தை செலுத்துகின்றதா என்றே கேட்க வேண்டியிருக்கின்றது.
புலம்பெயர் சூழலிலிருந்து அவ்வப்போது இறக்குமதி செய்யப்படும் விடயங்கள் ஈழ அரசியலை மேலும் சிதைக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

ஸ்ரீ பார்ஷ்வநாத் உபாத்யேயின் பரதநாட்டிய நிகழ்ச்சி - டிசம்பர் 7


 




இலங்கைச் செய்திகள்

 டயனா, சுஜித், ரோஹணவுக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை

வளிமண்டலத் தளம்பல்; நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிப்பு

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: நான்கு மாகாணங்களில் மழை

யாழில் மலையகத்தை உணர்வோம்

இந்திய உயர்தானிகர் யாழ். தீவக பகுதிகளுக்கு விஜயம்


டயனா, சுஜித், ரோஹணவுக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை

- ஒக்டோபர் 20 சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை குழு தீர்மானம்

December 1, 2023 3:18 pm 

பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹண பண்டார ஆகியோருக்கு ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்திற்கு வருவதை இடைநிறுத்த, பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.

உலகச் செய்திகள்

போர் நிறுத்தம் காலாவதி; போர் வெடித்த உடன் இஸ்ரேலின் தாக்குதலில் 70 பலஸ்தீனர் பலி

உத்தரகண்ட் சுரங்க விபத்து; 41 பேரும் உயிருடன் மீட்பு

இஸ்ரேலிய கப்பலின் மீது ஆளில்லா வான் தாக்குதல்

சொந்த தயாரிப்பு யுத்த விமானத்தில் துணை விமானியாக பறந்த நரேந்திர மோடி

துருக்கி வரத் தவறிய ஈரான் ஜனாதிபதி ரைசி

யெமனுக்கு அருகில் மற்றொரு கப்பலை கடத்த முயற்சி


போர் நிறுத்தம் காலாவதி; போர் வெடித்த உடன் இஸ்ரேலின் தாக்குதலில் 70 பலஸ்தீனர் பலி 

December 2, 2023 8:26 am 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் ஒரு வாரமாக நீடித்த போர் நிறுத்தம் உடன்பாடு இன்றி முடிவடைந்ததை அடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் பயங்கர தாக்குதல்களை ஆரம்பித்ததோடு பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களினால் தெற்கு இஸ்ரேலில் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

போர் நிறுத்தம் நேற்று காலாவதியான விரைவிலேயே இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் வட்டமிட ஆரம்பித்ததோடு தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் ஊக்கிர தாக்குதல்கள் இடம்பெற்றன. இதனால் அங்குள்ள குடிமக்கள் வீதிகளுக்கு ஓட்டம்பிடித்ததோடு அடைக்கலம் தேடி தூர மேற்கு பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

பேரம்பேசுவதற்கு எஞ்சியிருக்கும் வாய்ப்பு

 November 28, 2023


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறான கூட்டணிகள் தொடர்பில் ஏராளமான பேரம் பேசல்கள் இடம்பெறவே வாய்ப்புண்டு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதான வேட்பாளராக அடையாளம் காணப்பட்டாலும் கூட, நிலைமைகள் எவ்வாறு மாற்றமுறும் என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை.
நாடு அரசியல் ரீதியில் ஏதோவொரு வகையில் நெருக்கடி நிலைக்குள் இருக்கின்றது.
ஒரு ஸ்திரமான அரசியல் சூழலை ஏற்படுத்துவது அவ்வளவு சுலபமாகவும் இல்லை.
இந்த நிலையில் இவ்வாறான கூட்டணிகள் அடுத்து வரவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, பெரியளவில் தாக்கம் செலுத்தும் என்பதில் ஜயமில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில் நோக்கினால் தமிழ் மக்களின் வாக்குள் பிரதான பங்கை வகிக்கும்.
ஒரு வேளை, ஜனாதிபதியை தீர்மானிப்பதில் தீர்க்கமான பங்கையும் வகிக்கலாம்.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மூன்று ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் வாக்குகளாக இருந்த 2015 தேர்தலின்போது மட்டும்தான்.
2010 இல், தமிழ் மக்களின் வாக்குகள் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டது.
இறுதி யுத்தத்தின் போது, கோட்டாபயவுக்கு நிகரான பங்களிப்பை கொண்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
மூன்று தேர்தல்களின் போதும், ராஜபக்ஷக்களை வீழ்த்துதல் என்னும் ஒரேயோர் இலக்கு மட்டுமே தமிழ் மக்களுக்கு முன்னால் இருந்தது.
2015இல், ராஜபக்ஷவை தோற்கடிக்கும் வியூகத்திற்காக, மைத்திரியை தமிழ் மக்கள் ஆதரித்தனர்.
2020இல், கோட்டபாயவை வீழ்த்துவதற்காக தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தனர்.
கடந்த மூன்று தேர்தல்களின் போதும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றவர்களில் மைத்திரிபால சிறிசேன ஒருவரே வெற்றிபெற்றார்.
ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் கூட, தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களில் ஆகக் குறைந்தது, சிறியளவில் கூட முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

கார்த்திகை சோம வாரங்கள் & 108 சங்காபிஷேகம் 2023

 





கார்த்திகை சோம வாரங்கள் திங்கட்கிழமைகள் 20 & 27 நவம்பர்   மற்றும் 4 & 11 டிசம்பர் 2023 

108 சங்காபிஷேகம் பகவான் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு (சிவன்) திங்கட்கிழமை 11 டிசம்பர் 2023






பிரபஞ்சத்தின் காரணமான தெய்வீக குருவான உமாவின் (பார்வதி) இறைவனை நான் வணங்குகிறேன். பாம்புகளால் அலங்கரிக்கப்பட்டு, புலித்தோலை அணிந்த, அனைத்து உயிரினங்களுக்கும் இறைவனாகிய இறைவனை வணங்குகிறேன். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று கண்களாகவும், விஷு அருகிலிருக்கும் இறைவனை வணங்குகிறேன். அனைத்து பக்தர்களுக்கும் அடைக்கலமானவரும், வரங்களை அளிப்பவருமான சிவசங்கரரை வணங்குகிறேன்.

பாவங்களை நீக்கி, மனதையும் உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்து, வளமான வாழ்க்கையை அனுபவிக்க சிவபெருமானின் மாற்றும் ஆற்றல் தமிழ் மாதமான கார்த்திகையில்  ஏராளமாக கிடைக்கிறது. சாஸ்திரங்களின்படி, இந்த புனித மாதத்தில், சிவன் தன்னை எல்லையற்ற நெருப்பாக வெளிப்படுத்தினார். திங்கட்கிழமை ஆளும் கிரக சந்திரன் (சமஸ்கிருதத்தில் சோமா என்று அழைக்கப்படுகிறது), சிவனுடன் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது, இது சோமேஸ்வரா என்றும் அழைக்கப்படுகிறது (அவரது  முடியில் பிறை சந்திரனை அணிந்தவர்). திங்கட்கிழமைகள் எப்போதும் சிவனுக்கு மிகவும் உகந்தவை, மேலும் கார்த்திகை சோமாவரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் வருடத்தின் நான்கு சிறப்புமிக்க திங்கட்கிழமைகளைக் குறிக்கிறது.


20 & 27/11/2023  மற்றும் 4 & 11/12/2023 திங்கட்கிழமைகளில்: 

மாலை 05.30. ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை

திங்கட்கிழமை, 11/12/2023

மாலை 04.30 மணி : விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், 108 சங்கு பூஜை, ருத்ர மூல மந்திர ஹோமம், அதைத் தொடர்ந்து சங்காபிஷேகம், அலங்காரம் மற்றும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு ஷோடச உபசாரம் & மகா தீபாராதனை.