திரும்பிப்பார்க்கின்றேன் ---04 ஆடிக்கலவர காலத்திலும் நெற்றியில் திருநீறு துலங்க நடமாடிய மூத்த பத்திரிகையாளர் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் முருகபூபதி



கொள்ளுப்பிட்டி   ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன்.  என்னை நூலாசிரியரின் பதிலுரைக்கு  முதல், விழாத்தலைவர் பேசுவதற்கு அழைக்கிறார்.
எப்படி?
“நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி  அடுத்துப் பேசப் போகிறவர்  முருகப+பதி. அவருக்கு  ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க  ஓடவும்.”
சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது.
பம்பலப்பிட்டி  சாந்திவிஹார் ஹோட்டலில்  ஒரு  பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு  பிரிவுபசார விழா.  புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக  இயங்கி, படங்கள் எடுத்துக்   கொண்டிருந்தார்.   விடைபெறவுள்ள  பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர்  தலைவரால்   அழைக்கப்படுகிறார்.
பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை   உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம்   பாராட்டு   விழா  நடத்த வேண்டும்” என்கிறார்.

பேர்த் மாநகரத்தில் கடல் 01/09/2013





உலகச் செய்திகள்


பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்து: 24 உடல்கள் மீட்பு

பீகாரில் ரயில் மோதியதில் 30 பேர் பலி

பிரித்தானிய அரச குடும்ப வாரிசின் முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படங்கள்

சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?

மீண்டும் பதவியேற்றார் முகாபே!


==================================================================


பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்து: 24 உடல்கள் மீட்பு

18/08/2013    பிலிப்பைன்சில், பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியதில் பலியான 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணமல் போன 240க்கும் மேற்பட்டோரை, தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பிலிப்பைன்சின் சிபு நகரை ஒட்டிய துறைமுகம் அருகே 870 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் மீது நேற்று முன் தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று மோதியது.

அருணாசல அற்புதம் 4: வீடு புகுந்து வேரறுப்பவன்


அகம் என்ற சொல்லுக்கு உள், மனம், வீடு என்று பல அர்த்தங்கள் உண்டு. இன்னொரு பொருளும் உண்டு. அதற்குப் பின்னால் வருகிறேன்.

நாம் ஒருவருக்கு வீட்டின் ஓர் அறையை வசிக்கக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவன் உள்ளே புகுந்தான். மெல்ல மெல்ல வியாபித்து வீடு முழுவதையும் தன்னதாக்கிக் கொண்டுவிட்டான். போதாததற்கு வீட்டுக்குள் நாம் வைத்திருந்த பொருட்கள் எல்லாவற்றையும் வெளியே தூக்கி எறிந்து விடுகிறான். தன் பொருட்களால் நிரப்பி வைக்கிறான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவனை வெறுப்பதற்குப் பதிலாக நாம் அவனை எப்போதையும்விட அதிகம் நேசிக்கத் தொடங்குகிறோம். “அப்பா, தயவு செய்து இந்த வீட்டைவிட்டுப் போய்விடாதே! என்னால் ஒருகணம்கூட நீ இல்லாமல் இருக்க முடியாது” என்று சொல்லித் தவித்துப் புலம்பத் தொடங்குகிறோம்.

சரி என்று அவனும் தொடர்ந்து குடியிருக்கிறான். குடியிருப்பதற்கு நாம் அவனுக்குக் குடக்கூலி தரவேண்டியிருக்கிறது. அப்படிக் கொடுத்தாலும் சும்மா இருக்கிறானா! தான் இருக்கும் வீட்டையே இடித்துப் போட்டுவிடுகிறான். தரைமட்டமாக்கி விடுகிறான். ஏனென்றால், அப்படி இடிக்க அனுமதித்தால்தான், இந்த அகத்தை நொறுக்கித் தரைமட்டமாக்கினால்தான், அவன் தரும் வீட்டை நாம் பெற முடியும்.

அருணாசலமென அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

Sirithu- Sarangan feat. Lady Kash & Krissy

.

இலங்கை, கனடா, அமெரிக்கா நாடுகளிலிருந்து மூவர்

.
கடந்த  வாரம்  தமிழ்முரசு  இணைய இதழில்  நான்  எழுதிய  அமரர்  இலக்ஷ்மண  ஐயர்  தொடர்பான  ஆக்கத்திற்கு  இலங்கை,  கனடா, அமெரிக்கா  முதலான  நாடுகளிலிருந்து  மூவர்  தமது  கருத்துக்களை  எழுதியுள்ளனர்.
அவர்கள்  ஆங்கிலத்தில்  அனுப்பியிருந்த  மின்னஞ்சல்களை  தங்கள்  பார்வைக்கு  அனுப்புகின்றேன்.இயலுமானால்   இவற்றை  பதிவுசெய்யமாறு  அன்புடன்  கேட்டுக்கொள்கின்றேன்.  

முருகபூபதி



Dear Muruga.

Thank you Very Much. A timely reminder. Many have forgotten his contribution. So.Nadarajah,, E Rathinam, FXC Nadarajah are some more.
Kind Regards.

K.S.Sivakumaran
Colombo, Srilanka

இலங்கைச் செய்திகள்

கூட்டமைப்பின் வேட்பாளர் வாகனத்தின் மீது தாக்குதல்

முக்கியமான கோவைகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் 4 அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் - முஸம்மில்

புலிக்கொடி விவகாரம்: 2ஆம் சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாம்

அத்துமீறிய சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து த.தே.கூ ஆர்ப்பாட்டம்

எழிலன் மனைவிக்கு எதிராக யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

- பி.பி.சி
=========================================================================
கூட்டமைப்பின் வேட்பாளர் வாகனத்தின் மீது தாக்குதல்

20/08/2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி 

The search that seeks you by Author Sangamithra Amudha

.
என்னை நான் தேடுகிறேன் -நூலும் ஆசிரியரும் சங்கமித்ரா அமுதா 


சங்கமித்ரா அமுதா  மிகச்சிறு வதிலேயே தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர். இன்று சிந்தனை வழி  தனித்து நின்று மனிதர்கள் , இளைஞர்கள் , எதிகொள்ளும் பிரச்சினைகள் அதிலிருந்து விடுபடும் வழி முறைகள் குறித்து சன்மார்க்க பௌன்டேசன் எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்  இவரை தொடர்பு கொள்ள   www.sangamithraamudha.com,  http://www.sanmargafoundations.org 

அன்பு - பண்பு ,பாசம் - நேசம், காதல்- காமம், மகிழ்ச்சி - துக்கம், வாழ்க்கை - மரணம், கர்மம் - பலன் என பல உணர்வு மற்றும் அறிவு சார்ந்த விடயங்களை மிகவும் சுவையான ஒரு நடையில் கதைபோல தோன்றும் படியும் , கதையில்லை இது உண்மை என்று தோன்றும் படியும்  ஆசிரியர் மிக அழகாக எழுதியிருக்கிறார் .

முப்பத்தொன்பதாவது ஆண்டு கம்பன்விழா

.
வில்லவன் கோதை



எப்போதோ ஒரு மாலைப்பொழுதில் நெடுநாட்களாக நீரின்றி வரண்டு கிடந்த நிலமொன்றில் ( நாகப்பட்டினம் ) சற்றும் எதிர்பாராமல்  திடீரென்று கரியமேகங்கள் சூழ்ந்து சடசடவென கொட்டத்துவங்கிய பெருமழை தொடர்ந்து ஓய்வின்றி இரண்டு நாட்கள் நீடித்த நிகழ்வொன்றை எண்ணிப்பாற்கிறேன். அந்த பெருமழைக்கு கட்டுப்பட்டு அந்த மண்டபத்தின் மையப்பகுதியில் அடைந்திருந்த  மக்கள் திரள் இப்போதும் என் நினைவில் நிற்கிறது.

கடந்த ஒன்பது பத்து பதினொன்று தேதிகளில் சென்னை மயிலாப்பூர் ஏவியெம் இராஜேஸ்வரி திருமணஅரங்கில் சென்னை வாசிகள் அப்படியொரு நிகழ்வை பார்த்திருக்கக்கூடும். அன்றுதான் சென்னை கம்பன்கழகம் தனது  முப்பத்தொன்பதாவது ஆண்டு கம்பன்விழாவினை வண்ணமயமாக கொண்டாடிற்று..  இங்கே மக்கள் திரள் கட்டுண்டிருந்தது தொடர்ந்து பொழிந்த பெருமழையால் அல்ல. பொழியப்பட்ட கம்பன்காதையின் கவிமழையால் என்பதுதான்.

தமிழ்ப்பேராய விருது விழா

.
எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருது விழா 24.8.13 சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் காட்டாங்கொளத்தூரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திராயன் 1,2 திட்ட இயக்குநர் ,முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் விழாத் தலைமை ஏற்க,எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் தா.ரா.பச்சமுத்து அவர்கள் விழாப்பேருரை ஆற்றி விருதுகளை வழங்கவிருக்கிறார்.தமிழ்ப்பேராயத்தின் துணை வேந்தர் முனைவர் பொன்னவைக்கோ வரவேற்புரை அளிக்க,தமிழ்ப்பேராயச் செயலர் கவிஞர் அபி அவர்கள் நன்றியுரை கூற ,புறநானூற்று நடன நிகழ்வோடு விழா சிறப்புற நடைபெறவிருக்கிறது.

விருது பெறுவோர்;

1.புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
‘’அறம்’’சிறுகதைத் தொகுப்பு- திரு ஜெயமோகன்

2.பாரதியார் கவிதை விருது
‘’பெருநயப்புரைத்தல்’’- திரு இலக்குமி குமாரன் ஞான திரவியம்

3.அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது
  ‘’அமேசான் காடுகளும்,சகாராபாலைவனமும் எப்படித்தோன்றின-       பெ.கருணாகரன்
   ‘’குட்டியானையும் சுட்டிகளும்-கொ.மா.கோதண்டம்
     ‘’உங்கள் சுட்டிக்குழந்தைக்குச் சுவையான குட்டிக்கதைகள்-
        கமலா கந்தசாமி

4.ஜி யூ போப் மொழிபெயர்ப்பு விருது
‘’அசடன்’’-எம்.ஏ.சுசீலா

5.பெ நா அப்புசாமி அறிவியல் தமிழ் விருது
‘’நேனோ-அடுத்த புரட்சி’’-மோகன் சுந்தரராஜன்


குழந்தையின் சிரிப்பு!! (கவிதை)

.



சத்தம் கேட்டே ஓடிவந்தேன்
    சதங்கை அறுந்து சிதறியதோ!
நித்தம் உனக்கே இதேவேலை!
    நினைத்தால் கோபம் வந்துவிடும்!
பித்தம் பிடிக்கக் கைஓங்கிப்
    பின்னே உணர்ந்தேன்! சத்தமெலாம்
சித்தம் குளிரும் உன்சிரிப்பே!
    சிந்தை குளிர வைத்ததடி!!

நன்றி :arouna-selvame.blogspot

என் சுவாசமே - குறும்படம்

.

.

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!- Kaviri Maindhan

.

மீன் பிரியரா நீங்கள் அப்போ உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திமீன் சாப்பிடும் நபர்களுக்கு வாய் புற்றுநோய்,சருமபுற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம் மீனில் உள்ள ஒமேகா 3கொழுப்பு அமிலங்கள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த கொழுப்பு அமிலங்கள் இறந்த செல்களை புதுப்பிக்கின்றனவாம். சருமம் பொலிவடைகிறது என்கின்றனர் நிபுணர்கள் லண்டன் பல்கலைக்கழகம்குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர். 
ஒமேகா அமிலம் மீன் உணவில் கெட்ட கொழுப்பு அறவே இல்லை. புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட்வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்கஇந்த அமிலம் பெரிதும் உதவுகிறது. அதனால் தான்மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3'கிடைக்கிறது.

தமிழ் சினிமா

தலைவா

நடனத்தை விரும்பும் நாயகன் விஜய், தந்தை சத்யராஜ் இறந்த பின்பு மக்களுக்காக தலைவன் ஆவது தான் தலைவா.
அவுஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார் (விஜய்), அதை கடை கடையாக வினியோகம் செய்து வருகிறார் (சந்தானம்).
நாயகி தெரிவு செய்யும் போது, கூடவே நாயகனுக்கு இன்னொரு ஜோடியாக சந்தானத்தை புக் செய்வது தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் ஆகிவிட்டது.
நாயகனுக்கு பிழைப்புக்கான தொழில், தண்ணீர் கம்பெனி என்றாலும் மனசுக்கு பிடிச்சது டான்ஸ் ஆடுவதுதான். தடதடவென்ற காட்சி அமைப்பில், அந்த கதையோட்டத்துடன் ஒன்றிப்போக முடிகிறது.
வெளி நாட்டுக்காரர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இப்படி தொழில் வேறு, சொந்த விருப்பம் வேறு என இரு தரப்பட்ட வாழ்க்கை வாழ்வது சகஜம்தானே என்று ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது.
அவருடைய ‘தமிழ் பசங்க' என்ற நடனக்குழு சிட்னியில் பிரபலம் என்பதற்கான பாடலும், காட்சிகளும் மனசுக்கு இதமாகவும் இருக்கிறது.
சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை. இரட்டை அர்த்தம் இல்லாமல், ஒன்லைன் வசனங்களில் சந்தானம் கைத்தட்டலை அள்ளுகிறார்.
அமலா பால் அறிமுகக் காட்சி ரொம்பவே செயற்கைத்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவரும் இரட்டையர்களுடன் கலந்து விடுகிறார்.
வழக்கம் போல் ஹீரோயினைப் பார்த்து ஜொள்ளு விடும் சந்தானம், இதிலும் ஏமாற்ற வில்லை. நடனப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தடுக்க வில்லன் கூட்டம் வழக்கமான சதி செய்ய, அதை மீறி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை சுருக்கமாக, நறுக்கென்று செய்திருக்கிறார்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவுடன், காதலும் மலர்ந்து விடுவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதில்லைதானே! காதலி தந்தையின் கட்டளையை ஏற்று உடனடியாக அப்பாவை பார்த்து கல்யாணத்திற்கு சம்மதம் கேட்க கிளம்பி விடுகிறார் விஜய்.
அத்தனை நாளும் வெறுமனே போனில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அப்பா(சத்யராஜ்)வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக நினைத்து திடீரென கிளம்பி வந்தவருக்கு, அவரைப் பார்ப்பதற்குள்ளாகவே மூச்சு வாங்கிவிடுகிறது. நமக்கும்தான்!
மகனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தான் மட்டும் மும்பையில் என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என்று மகனிடம் விளக்கம் சொல்ல, அடுத்தடுத்த காட்சிகள் மகனை ‘தலைவா' ஆக்கி விடுகின்றன. இறுதியில் வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பது சுவாராஸ்யமில்லாத மசாலாத்தனம்.
மும்பை வீதிகளை 'துப்பாக்கி' படத்திலேயே முழுசாக காட்டிவிட்டார்கள். எல்லோரும் தாராவியை காட்டுவதால், இவர்கள் தாராவியை அடுத்த மாஹிம் பகுதியைச் சுற்றி கதையமைத்துள்ளார்கள்.
வழக்கம்போல விஜய் படத்திற்கான ஃபார்முலாவில் படம் நகர்கிறது.
படத்துக்கு படம் விஜய்க்கு இளமை கூடிக்கொண்டே இருப்பதை மறுக்க முடியாது. மனிதர் ரொம்பவும் எனர்ஜியோடு காணப்படுகிறார். கூகுள் கூகுள் பாடல் மூலம் மீண்டும் பாடத்தொடங்கியவர் இப்படத்திலும் வாங்கண்ணா வணக்கமுங்கண்ணா பாடலிலும் அசத்தியுள்ளார். மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.
அவ்வப்போது நாயகன்,பாட்ஷா, தளபதி, தேவர் மகன், புதிய பறவை போன்ற படங்கள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
சத்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், பொன் வண்ணன், மனோ பாலா ஆகியோர் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுமே காட்ட உதவியுள்ளார்கள்.
அமலா பால் முதல் பாதியில் அசத்தல், இரண்டாம் பாதியில் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறார்.
அன்றாட வாழ்வில் ‘தலைவா' என்று விளையாட்டாக அழைப்பதை, இயக்குனர் விஜய் சீரியஸ் டைட்டிலாக வைத்து விட்டார். ஒரு நல்ல அரசியல் படத்திற்கான தலைப்பை வீணாக்கி விட்டார்.
ஒரு பாட்டு இடம் பெற்று விட்டால் அரசியல் படமாகிவிடுமா? அதுவும் வடக்கிந்தியர்கள், வடக்கத்திய உடையுடன் 'தலைவா' என்று பாடுவதை பார்க்கும் போது எரிச்சல்தான் ஏற்படுகிறது.
மற்றபடி அரசியல் படம் என்றெல்லாம் உளவு பார்த்து பரப்பி விட்டவர்களுக்கு நிச்சயம் டோஸ்தான்.
மும்பையில் படம் எடுத்தால் வெற்றி என்ற சென்டிமென்ட், பழைய படங்களிலிருந்து சுட்டுப்போடுதல் போன்ற க்ளீஷேக்களிலிருந்து விஜய்கள் சீக்கிரம் விடுபடட்டும்.
குறிப்பு:- இது வெளிநாட்டில் படம் பார்த்த தமிழ் ரசிகர்கள் அனுப்பிய விமர்சனங்கள்
நன்றி விடுப்பு