பொங்கல் இன்று! - கவிஞர் க. கணேசலிங்கம்

.


மொட்டவிழ்ந்த   பனிமலரில்   முறுவலிக்கும்
மதுத்துளியை   மயக்கத்தோடு
தொட்டருந்தும்   அளிமதுர   ஒலியெழுப்பும்
அதிகாலை,   உதயத்தின்முன்.
எட்டிசையின்   மலர்ச்சியையும்   இதயத்தில்
சிறைகட்டும்   பொங்கலின்று!
மட்டற்ற   மகிழ்ச்சியினில்   தமிழ்மக்கள்
உளம்பொங்கும்  உவகைப்பொங்கல்!
பைந்தொடிதன்   தளிர்க்கரத்தால்   படைத்திட்ட
எழிற்கோலம்   பார்ப்பதற்கு
விந்தையிலை.   வீடுகளில்   விளங்குகிற
தமிழ்க்கலை!அவ்   வெழிலினூற்று!
உந்துகின்ற   உவகையினில்   புதுப்பானை
தனில்பொங்கும்   உழவர்பொங்கல்!
சிந்தையினில்   அன்பொடுநற்   பண்பொன்றப்
பொங்கிவிடும்   இன்பப்பொங்கல்!
பொங்கலின்று   பொங்கலென்று   பொங்கலினைப்
படைத்துவிட்டுப்   பரிதிநோக்கித்
தங்கள்கரம்   உயர்த்திஉயிர்   தரும்பரிதி
தனைவணங்கி   மகிழ்ச்சியோடு
செங்கதிரின்   எழுச்சியெனச்   செழுங்கவிதை
மலர்ச்சியெனச்   செறிந்துஇன்பம்
பொங்கியுளம்   பொங்கிவிடப்   புதுஉலகம்
பொங்கியெழப்   பொங்கல்பொங்க!
கவிஞர் கணேசலிங்கம்

மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் ”தைத்திருநாள் விழா 2017”

.



தைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களால் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டுள்ளது.

காலை 10.00 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு "விந்தம்" தமிழ்ப்பாடசாலை மாணவர்களது தைவணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாகஆரம்பித்தது, அடுத்து தமிழர் பண்பாட்டு விளையாட்டுக்களான சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுகள் நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் முதியவர்களால் பாகுபாடின்றி மிகவும் உற்சாகத்துடன் விளையாடப்பட்டது அத்துடன் சிறுவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பலூன் உடைத்தல் ஆகிய விளையாட்டுக்களும் சிறப்பாக நடைபெற்றன.

கம்பன் கழகம் நடாத்தும் தகவல் தினம் 21 .01 .2017

.

இலங்கையில் பாரதி --- அங்கம் 06 - முருகபூபதி

.


இலங்கையில்  ஐந்து சதத்திற்கு ஒரு தமிழ்ப்பத்திரிகை விற்கப்பட்டிருக்கும் தகவலுடன், இந்தத்தொடரின் ஆறாவது அங்கத்திற்குள்  வருகின்றோம்.

இன்று  இவ்வாறு  மிக  மிகக்குறைந்த விலையில் ஒரு அச்சுஊடகத்தின் பிரதியை  வாங்கமுடியாதிருப்பதற்கான  காரணங்கள் வாசகர்களுக்குப்புரியும்.

எதிர்காலத்தில் இணையத்தின் ஊடாக செய்திகளை படிக்கமுடியும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்காத -- கற்பனை செய்தும் பார்த்திராத  அக்காலத்தில்  ஐந்து சதத்திற்கு கொழும்பிலிருந்து விற்பனைக்கு வந்திருக்கும் வீரகேசரி,  சுமார் 86 வருடங்களுக்கு முன்னர்  கொழும்பில்  தோன்றியது.

அக்காலப்பகுதியில்  தமிழகத்திலிருந்து  சதேசமித்திரன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளும் மலேசியாவிலிருந்து தமிழ்நேசன் பத்திரிகையுமே  இலங்கைத்தலைநகர்  தமிழ் வாசகர்களின் தேவையை  பூர்த்திசெய்தன.

வடபுலத்தில்  ஈழகேசரி, ஈழநாடு  என்பன  இங்குள்ள வாசகரிடம் செல்வாக்குச்செலுத்தின.  காலப்போக்கில்   இவற்றின் மறைவையடுத்து   யாழ்ப்பாணத்திலிருந்து  ஈழமுரசு,  முரசொலி, ஈழநாதம்,  வெள்ளிநாதம்,  திசை,  நமது ஈழநாடு,  நமது முரசொலி, வைகறை,    தாய்வீடு  முதலான பத்திரிகைகளும்  அதன்பின்னர், உதயன்,  வலம்புரி, தினமுரசு, யாழ். தினக்குரல்  என்பனவும் வெளியாகி  கடந்த  தேர்தலையடுத்து  தினமுரசுவும் தனது ஆயுளை முடித்துக்கொண்டது.


வெம்பல் - நோயல் நடேஷன்

.

இருபத்தைந்து வருடங்களின் பின்பாக யாழ்ப்பாணம் செல்ல முடிந்ததற்கு ரோஜாவிற்குப் போர் முடிந்தது மட்டுமல்ல. பலகாரணங்கள்.
வேறு எவைகளாக இருக்கும்?
காரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள்.
சில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது.
அது மட்டுமா?
இவ்வளவு காலமும் மகனும் மகளும் குழந்தைகள் எனப் பொத்திப் பொத்தி பொக்கிசமாக வளர்த்தபின் பெரியவர்களாக கிழமைக்கும் மாதத்திற்கும் ஒரு தடவை வந்து அம்மாவைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பிழைசொல்லமுடியாது. இறகுகள் முளைத்த பின்பு புதிதான வாழ்க்கையை அவர்கள் தேடுவதுதானே எனது விருப்பமும். பதினைந்தாவது வயதில் தனியே விடப்பட்ட என்னை விடப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களே?
எனது வாழ்க்கை, குழந்தை, சிறுமி எனப் பயமற்று புல்தரையில் விளையாடிய பருவகாலம் போரின் வேகத்தில் பந்தயக் குதிரையாக வாழ்க்கை மைதானத்தை வேகமாகக் கடந்தது. இளம்பெண், மனைவி என்ற காலம் சுதந்திரத்தை இழந்து, பயத்தில் வனத்தில் ஒதுங்கி வாழும் நிலையாகியது. இப்பொழுது கடமைகள் முடிந்து பயமற்று நீண்ட மணற்பிரதேசத்தில் கால் புதைய நடக்கும் சுதந்திரமான காலத்தை அடைந்துவிட்டதுபோன்ற எண்ணம் துணிவைக்கொடுத்தது. எனது முதிர்வே துணையற்று போகும் துணிவை எனக்குக் கொடுத்து தனியாக இலங்கைக்கு செல்லத் தூண்டியது

Parramatta Centinary Square இல் தைப்பொங்கல் விழா

.

New South Wales மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான Parramatta மாநகரில், அவுஸ்திரேலியாவில் புதிதாய் குடியேறியவர்களும் - அவர்களை வழிநடத்தும் நிறுவனங்களாகிய Community Migrant Resource Centre, Settlement Services International, Marist 180, Jesuit Refugee services மற்றும் தமிழ் நலன் விரும்பும் சங்கங்களான அன்பாலயம், தமிழ் மகளிர் அஅபிவிருத்தி குழு, Recover, தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், அவுஸ்திரேலிய கம்பன் கழகம் என்பன இணைந்து நடாத்தும் மாபெரும் தைப்பொங்கல் விழா,

எதிர்வரும் தைத்திங்கள் 21ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாவிலை  தோரணங்கள் சலசலக்க, மங்கள நாதஸ்வரம் முழங்க Parramatta Centinary Square இல் 
தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் தைப்பொங்கல் விழா கொண்டாட அனைத்து தமிழர்களையும்  சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினராகிய நாங்கள் அன்போடு வருக வருக என்று  அழைக்கின்றோம்.  

தமிழர் விளையாட்டு விழா- 2017 மெல்பேர்ண்- ஒஸ்ரேலியா

.


 கடந்த ஞாயிற்றுக்கிழமை (8ம் திகதி), 16-01-1993 அன்று வங்கக்கடலில் வீரகாவிய -மாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக தமிழர் விளையாட்டு விழா மெல்பேர்ணில் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்  விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படுகின்ற இவ்விளையாட்டுவிழாஇந்த ஆண்டும் மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

காலை 9.00 மணிக்கு மெல்பேர்ண் East Burwood மைதானத்தில் ஆரம்பமான இவ்விளையாட்டுவிழா நிகழ்வில்,  ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு விஸ்ணுராஜன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரான செல்வன் ரகு அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு பாரதி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் திரு வே. பரந்தாமன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


சிட்னியில் ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா 21 .01 .2017

.



உலகச் செய்திகள்


மோடிக்கு பன்னீர்செல்வம் அவசர கடிதம்

வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி - தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்

இந்திய உணவகத்தில் உணவு உண்ட லண்டன் சிறுமி மரணம்

48 ஐ .எஸ். தீவிரவாதிகளை கொலை செய்த துருக்கி இராணுவம்..!

வறண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு

இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

அவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம்

ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார்

கந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி



தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்! - சம்பந்தன்

.


இலங்கையில் சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழ் மக்கள், சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன், இது எனது கடமை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ரீதியாக வழங்கப்படுகின்ற அரசியல் தீர்வின் ஊடாக நாட்டில் வாழும் சகல மக்களதும் இறைமை மதிக்கப்பட வேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கூட்டமைப்பு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். புதிய அரசியல் யாப்பை பொறுத்தளவில் ஒற்றையாட்டி, சமஷ்டி, வடக்கு – கிழக்கு மீள் இணைப்பு என்பன குறித்து பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அரசியல் சாசன உருவாக்கத்தின்போது சர்ச்சைகளும் கேள்விகளும் எழுவது சகஜம். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://seithy.com/
.

ஜல்லிக்கட்டு விவகாரம் வலுத்துள்ள நிலையில், இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூரும் பேசுபொருளாக ஆயிரக்கணக்கானோரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அரசியல், சாதி, மதங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னார்வலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்ததுடன் களத்திலும் குதித்துள்ளனர்.
நீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது. | அதன் விவரம்: உச்ச நீதிமன்றத் தடையால் இளைஞர்கள் எழுச்சி: 3 நாள்களில் 30 கிராமங்களில் ஜல்லிக்கட்டு |
குறிப்பாக, தமிழகத்தில் பரவலாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம் வலுப்பெற்றதற்கு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பதிவுகள் முக்கியக் காரணமாக இருக்கிறது.

இலங்கைச் செய்திகள்


தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

5 பொலிஸாருக்கு மரணதண்டனை.!

கஞ்சாவில் ரொட்டி   சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில்  வாக்குமூலம்

பெற்றோர்  பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்

ஜோசப் பராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள்

இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலியா.!





இந்திய ரூபாயின் சுவையான வரலாறு பேராசிரியர் கே. ராஜு

.


     இந்திய ரூபாய் பல நூற்றாண்டுகால சுவையான வரலாற்றினை உடையது. உங்கள் பாக்கெட்டிலோ பர்சிலோ உள்ள ரூபாயின் (மோடியின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு உங்கள் பாக்கெட்டில் ரூபாய் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்) கடந்த காலம் பல திருப்பங்கள் கொண்டது. ரூபாய் நோட்டில் பிரபலாகிவிட்ட மகாத்மா காந்தியின் சிரிப்புக்குப் பின்னால் நீண்ட போராட்டம், தேடல், செல்வம் கொண்ட வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு பண்டைக்கால இந்தியாவில் கி.மு. 6வது நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றில் சில முக்கியமான அம்சங்களை மட்டும் பார்ப்போம்.
     சீனர்கள், மத்தியக் கிழக்கைச் சேர்ந்த லித்தியர்களோடு உலகின் பழமையான நாணயங்களை வெளியிட்ட பெருமை பண்டைக்கால இந்தியர்களுக்கு உண்டு. கி.மு. 6வது நூற்றாண்டில் அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் பண்டைய இந்தியாவில் அன்றிருந்த காந்தாரா, குண்டல, குரு, பாஞ்சால, சௌராஷ்ட்ரா போன்ற ராஜ்யங்களைக் குறிக்கும் மகாஜனபதாஸ் என அழைக்கப்பட்டன. வெள்ளியிலான இந்த நாணயங்கள் வட்டம், சதுரம் போன்ற முறையான வடிவத்தில் அமையவில்லை. பிறகு வந்த மௌரியர்கள் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களில்   நாணயங்களை வெளியிட்டனர். அடுத்து வந்த இந்திய கிரேக்க குஷான வம்சத்து மன்னர்கள் நாணயங்களில் ஓவியத் தலைகளைப் பொறிக்கும் வழக்கத்தைத் தொடங்கினர். இந்த வழக்கம் எட்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. குப்தப் பேரரசு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது.  அந்த நாணயங்களில் குப்த மன்னர்களின் சித்திரங்கள் இடம் பெற்றன.
     கி.பி. 12-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய சுல்தான்கள் இந்திய மன்னர்களின் வடிவங்களை நீக்கிவிட்டு இஸ்லாமிய எழுத்துக்களைப் பதித்தனர். 1526ஆம் ஆண்டில் தொடங்கிய முகலாய சாம்ராஜ்யம் ஓர் ஓருங்கிணைக்கப் பட்ட நிதியமைப்பு முறையைக் கொணர்ந்தது. ஹுமாயூனைத் தோற்கடித்த ஷேர் ஷா `ருபியா' எனப் பெயரிடப்பட்ட வெள்ளி நாணயத்தை வெளியிட்டது ரூபாயின் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை எனலாம்.
     முதன்முதலாக தாளில் அச்சடித்த ரூபாய் நோட்டு பிரிட்டிஷ் இந்தியாவால் வெளியிடப்பட்டது. 1857 சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு ரூபாயை இந்தியாவின் அதிகாரபூர்வமான கரன்சி என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. நோட்டுகளிலும் நாணயங்களிலும் ஐந்தாவது ஜார்ஜ் மன்னரின் தலை இடம் பெறத் தொடங்கியது.1862-ல் மகாராணி விக்டோரியாவைக் கௌரவிக்கும் விதமாக அவரது படம் இடம் பெற்ற வங்கி நோட்டுகளும் நாணயங்களும் ஏராளமாக வெளியிடப்பட்டன. அவரது காலத்திற்குப் பின் வந்த மன்னர்களின் படங்கள் நாணயங்களில் இடம் பெறுவது பின்னர் தொடர்ந்தது. 


ஆட்சியில் இருக்கும் வரை சமஷ்டிக்கு இடமளியேன்! - ஜனாதிபதி

.

தான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ, நாட்டைப் பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றோம். ஆனால், நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாம் இணங்கியுள்ளதாலேயே ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளதாக சில அச்சு ஊடகங்கள் முதற்பக்க செய்தியாக வெளியிட்டிருந்தன. நாட்டின் ஊடகத்துறை இந்தளவு ஒழுக்கமற்று செயற்படுவதை முன்னிட்டு மிகவும் வேதனையடைகிறேன். செய்திகளை வழங்கும்போது சமூகத்திற்கு உண்மையை உரைக்க வேண்டும்.
அதேபோன்று, வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ள நிலையில், நாட்டை விற்கப் போகின்றோம் என சிலர் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். நாட்டில் கடந்த காலங்களில் முதலீட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் வெளிநாட்டவர்களே அதிகமாக உள்ளனர். இதில் எங்காவது நாட்டை விற்பனை செய்துள்ளார்களா? இன்று பலர் குறிப்பிடுவதைப் போன்று இந்நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தவோ நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்” என்றார்.
http://seithy.com/

காலனித்துவ வரலாறு - தி. சுவாமிநாதன், நாமக்கல்.

.


ஐரோப்பிய நாடுகள் மறுமலர்ச்சியை அடுத்து பின்பற்றிய குடியேற்றக் கொள்கையினால் பல நாடுகள் கைப்பற்றப்பட்டு சில நூற்றாண்டுகள்  ஆதிக்கத்திற்கு  உட்ப்படுத்தப்பட்டு பின்பு சுதந்திரமும் வழங்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் பிரான்ஸ் ஸ்பெயின் போர்ட்ச்சுக்கல் நெதர்லாந்து முதலான நாடுகள் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா மற்றும்  தென்கிழக்காசிய நாடுளை காலனித்துவத்திற்கு உட்படுத்தின.
குடியேற்றவாதம் பொதுவாக குடியேறுபவர்களுடைய பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உள்@ர் மக்களுடையவற்றை காட்டிலும் மிக உயர்ந்தவை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழக்கம். வலிமை பொருந்திய ஐரோப்பிய நாடுகளிடம் துப்பாக்கி பீரங்கி கட்டுக்கோப்பான ராணுவம் மற்றும் நவீன கப்பல்படை இருந்தது. வறிய நாடுகளை ஆக்கிரமித்தன. முதலாளித்துவ காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் இரும்புக் கரங்களின் பிடியில் பல நாடுகள் சிக்கிக் கொண்டன.
இன்று மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய சக்திகள் பலாத்காரமாக பிடித்து வைத்து அவற்றின் வளங்களை சுரண்டிய காலனித்துவ காலகட்டம் நீடித்தது பல நூற்றாண்டுகள் ஆகும். 16ம் நூற்றாண்டில் தொடங்கிய காலனி ஆதிக்கம் 20-ம் நூற்றாண்டின் முற்பாதி வரை நீடித்தது. காலனி நாடுகளை பிடிப்பதில் பிரிட்டன், போர்ட்சுகல் பிரான்சு ஸ்பெயின் ஆகிய நாடுகள் வெகுவேகமாக தீவிரமாக செயல்பட்டன. சீனா ஜப்பான் போன்ற நாடுகளை ஐரோப்பிய சக்திகளால் நெருங்கவோ, அடிமைப்படுத்தவோ இயலவில்லை. அமெரிக்காவும் கூட பிரிட்டிஷ் காலனியாகத்தான் முதலில் இருந்தது. ஆஸ்திரேலியாவை பிரிட்டன் அடிமைப்படுத்தியது. பிரான்ஸ் நாட்டிற்கும் பாண்டிச்சேரிக்கும் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு.
காலனித்துவத்தின் நோக்கம்:

விளம்பர கட்டுப்பாடு: தயாரிப்பாளர் சங்கம் மீது பார்த்திபன் அதிருப்தி

.


விளம்பர கட்டுப்பாடுகள் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் பார்த்திபன்.
பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சாந்தனு, பார்வதி நாயர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது. விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' படத்துடன், இப்டம் மட்டும் தான் வெளியாகியுள்ளது.
மிகவும் குறைந்த திரையரங்களில் வெளியாகியுள்ளது 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
"தமிழகத்தில் இருக்கும் 1000 திரையரங்குகளில், 800-ல் 'பைரவா' வெளியாகியுள்ளது. மீதமுள்ள 200-ல் தான் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெளியாகியுள்ளது. 'பைரவா' போன்ற பெரிய படத்தோடு வெளியாகும் போது, முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆனால், தயாரிப்பாளர் சங்கம் அவர்களுடைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. 'பைரவா'வுக்கு இணையாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்கு திரையரங்குகள் கிடைக்காத போது என்னுடைய விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது.
எங்களுக்கு சுதந்திரம் அல்லது சமத்துவம் கொடுங்கள் அல்லது எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

தமிழ் சினிமா

மோ



பேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் புவன் R நுல்லன்.
சரி இது நிஜமாகவே பேய் கதையா, இல்லை எப்படிபட்ட கதை என பார்ப்போம்.

கதைக்களம்

Moதுணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மேக்கப் மேன் முனிஸ்காந்த் இருவரையும் வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பேய் இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் செல்வாவை ஏமாற்றுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள்.
ஒரு கட்டத்தில் செல்வாவிடம் சுரேஷ் மாட்டிக்கொள்கிறார். பின் செல்வா, சுரேஷை வைத்தே பாலடைந்த ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அதே ஸ்கூலை முன்னாள் எம்.எல்.ஏ. மைம் கோபியும் வாங்க நினைக்கிறார்.
கெட்ட சக்திகள் இருக்கும் கட்டிடத்தை மைம் கோபி வாங்க மாட்டார் என்பதை தெரிந்துக் கொண்ட செல்வா, சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களை அந்த பாலடைந்த ஸ்கூலில் பேய் இருப்பதாக நாடகம் நடத்தி மைம் கோபியை பயமுறுத்த சொல்கிறார். இல்லையென்றால், போலீசிடம் சுரேஷ் ரவியை சிக்க வைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். போலீசுக்கு பயந்து அந்த பாலடைந்த ஸ்கூலுக்கு நண்பர்களுடன் செல்கிறார் சுரேஷ் ரவி.
இறுதியில் மைம் கோபி அந்த ஸ்கூலை வாங்கினாரா இல்லை செல்வா வாங்கினாரா? சுரேஷ் மற்றும் நண்பர்கள் நிலைமை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முன்பே சொன்னது போல் பேய் கதைகள் தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமான பேய் கதைதான். இதில் முக்கியமாக இருப்பது காமெடி. திகில் படத்திற்கு தேவையான காட்சிகளை வைத்து சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
படத்தில் காமெடி காட்சிகள் பெரிய ப்ளஸ். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு ஆங்கிலம் பேசுவது, முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகளிலெல்லாம் திரையரங்கில் சிரிப்பு சரவெடி தான்.

க்ளாப்ஸ்

காமெடி சரவெடி தான். பக்காவான கதைக்களம்.

பல்ப்ஸ்

சிரிப்புக்கு புல் கேரண்டி என்பதால் குறை தெரியவில்லை.
மொத்தத்தில் மோ தியேட்டர் போய் பாருங்க புல் கேரண்டி காமெடிய Enjoy பண்ணுங்க.



நன்றி   cineulgam