தனித்துவம் மிக்கது கந்தபுராண கலாசாரம்

 



















 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 


    ஆசியாக்கண்டம் பரந்தது விரிந்தது. ஆசியாக்கண்டத்தில்  காணப்படும் கலாசாரத்தின் அடிநாதமாக மெய்யியல் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றார்கள். இந்த மெய்யியல் பல சோதனைகளுக்கும் வேத னைகளுக்கும் ஆளாகி இருப்பதை வரலாற்றால் அறிய முடிகிறது. சோதனைகளையும் வேதனைகளை யும் எதிர் கொண்டாலும் மெய்யியலை மட்டும் இழந்துவிட விரும்பாத நிலையில் சூழலுக்கு ஏற்ப ஒரு கலாசாரத்தை ஏற்படுத்தி அதனை வளர்ப்பதற்கும் அதனை வாழ்வுடன் இணைத்து நிற்பதற்கும் முயற்சி கள் நடைபெற்றதையும்அதற்கு தலைமை ஏற்பதற்கு தகுதியானவர் வந்த நிலையினையும் காண முடி கிறது.இந்த வகையில் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்-தமிழையும் சமய இலக்கியத்தையும் சேர்த் துக் கொண்டு வீறுபெற்று ஒரு தனித்துவமான கலாசாரம் எழுந்தது. அதனை யாவரும் போற்றினர்.கண் டவர் வியப்புற்றனர். அப்படி யாவரையும் வியக்கும் வண்ணம் செய்தது முகிழ்த்ததுதான்   " கந்தபுராண கலாசாரம் " ஆகும்.

     ஆசியநாட்டில் இந்தியாவின் நிலை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். சமயம் இலக்கியம் ஆன் மீகம். கலைகள்இந்தியாவின் சொத்துக்களாகும். ஞானிகள் பலரை இந்தியா தந்திருக்கிறது. வேதங் கள்ஆகமங்கள்சாத்திரங்கள்புராணங்கள்இதிகாசங்கள்திருமுறைகள்யாவும் பொக்கிஷங்களாகி அமைந்திருக்கின்றன. சமணம்பெளத்தம்சைவம்வைஷ்ணவம்என்று மதங்கள் பலவும் அவை சம்பந் தமான கருத்து மோதல்கள் பலவித பிணக்குகள் யாவும் இந்தியாவில் இருந்ததை வரலாற்றால் அறிகி றோம். ஆனால் இப்படியொரு நிலை ஈழத்தில் காணப்படவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக் கவே இல்லை என்பதும் முக்கியமாகும். யாழ்ப்பாணமும் அங்குவாழ்ந்த தமிழ்மக்களும் இந்தியத் தொட ர்பை விட்டுவிடவில்லை. அதே வேளை இந்தியாபோல் இருந்திடவும் நினைக்கவில்லை. இந்திய சிந்தனைகளை உள்வாங்கி அவற்றை வைத்துக் கொண்டு தமக்கென ஒரு பண் பாட்டை  உருவாக்கிட  முனைந்தமை முக்கியத்துவம் மிக்கதெனலாம்.

கம்பர்லாந்து நகர சபையின் தீபாவளி

கடந்த சனியன்று கம்பர்லாந்து நகர சபையின் தீபாவளி திருநாள் விமர்சையாக வென்ட்வேர்த்வில் இல் நடைபெற்றது.

மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. பல கலை கலாச்சார நிகழ்ச்சிகளில் இடம் பெற்றன.

நிகழ்ச்சியில் மாநகர சபைத் தலைவி லிசா லேக் , சுமன் சாகாமற்றும் சபை உறுப்பினர் பலருடன் மாநில பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



































எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 85 வேறுபாடு - முரண்பாடு ! உறைபொருளும் மறைபொருளும் ! ! முருகபூபதி


என்கொல்லைப்புறத்துக்காதலிகள், கந்தசாமியும் கலக்சியும், சமாதானத்தின் கதை ஆகிய நூல்களை எழுதியிருப்பவரும், அடுத்த மாதம் வெள்ளி என்ற நாவலை வெளியிடவிருப்பவரும்,  எம்மத்தியில்  ‘ ஜேகே ‘  என அழைக்கப்படுபவருமான இளம் தலைமுறை எழுத்தாளர் ஜெயக்குமாரன் சந்திரசேகரம், மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வெளியீடான இளவேனில் இதழுக்காக ( தை 2023 ) என்னை பேட்டி கண்டிருந்தார்.

 அதில் ஒரு கேள்வி இவ்வாறு அமைந்திருந்தது.

நீங்கள் எல்லோருடனும் நட்பாக இருக்கிறீர்கள். எதிரிகள்                  உங்களுக்கில்லை. உங்களுக்குக் கீழ்மை புரிந்தவர்களையும் நட்புப் 


பாராட்டும் குணம் உங்களுக்கு உண்டு.                                           உங்கள் தொடர்பு வட்டாரம் பெரிது. அதற்காக சில                              சமரசங்களையும் நீங்கள் செய்வதாக நான் உணர்கிறேன்? ஒரு இலக்கியவாதி தான் வரையறுத்த                      அறத்தின்கண் மாறு ஏற்படும்போது அதனை ஓங்கி                             ஒலிக்காமல்,  நட்புக்காகக் கடந்துபோவது சரியா?

 அநீதிக்காகக் குரல்கொடுக்கும் தார்மீக அறத்தை அப்போதே அவர் இழந்துவிடுகிறார் அல்லவா? இதனைக் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. அடுத்த தலைமுறை                  இலக்கியவாதியாக உங்கள் அறிவுரையைத்தான் கேட்கிறேன். 

 இக்கேள்விக்கு எனது பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.

 “ நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறுதான் எதிரிகளும். ஒரு கால கட்டத்தில்  நட்பாக இருந்தவர்கள், பிறிதொரு காலகட்டத்தில் ஏதேனும் காரணங்களினால் எதிரியாகலாம். அவ்வாறே எதிரிகளும் பிறிதொரு காலகட்டத்தில் நட்பாகலாம்.

பொதுவாழ்வில் இது சகஜம்.

 எதிரிக்கும் துரோகிக்கும் அர்த்தம் வேறு வேறு.

எதிரிக்கு எதிரி நண்பனாகவும் மாறும் சமூகம்தான் இது.

 எதிரியிடத்திலும் சில மேன்மையான குணவியல்புகள் இருக்கும். நான் எப்போதும் மேன்மையான பக்கங்களைத்தான் பார்க்கின்றேன்.   என்னிடத்திலும் அறச்சீற்றங்கள், தார்மீகக் கோபங்கள் இருக்கின்றன.

நவம்பர் 17 : சீர்மியத்தொண்டராகவும் இயங்கும் இலக்கியவாதி கோகிலா மகேந்திரன் முருகபூபதி

இம்மாதம் 17 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடும் எழுத்தாளர்,  சீர்மியத் தொண்டர், திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களை நான் முதல் முதலில் சந்தித்த ஆண்டு 1984.

அவரது எழுத்துக்களை ஊடகங்களில் படித்திருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அதற்கு முன்னர் கிட்டவில்லை.

கோகிலாவின் இரண்டாவது கதைத் தொகுதி முரண்பாடுகளின் அறுவடை நூலுக்கு முகப்பு ஓவியம் வரைந்தவரான பொன்னரி ( இயற்பெயர் கனகசிங்கம் ) வீரகேசரியில் எனது சமகால ஊழியர்.

அந்த நூலுக்கு தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் அதிபர் எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் ( தசம் ) அவர்களின் தலைமையில் வெளியீட்டு அரங்கினை  ஒழுங்குசெய்துவிட்டு, என்னை  உரையாற்ற வருமாறு கோகிலா கடிதம் எழுதி அழைத்திருந்தார்.

அக்காலப்பகுதியில் வீரகேசரி வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி எனும்  பத்தி எழுத்தை எழுதிவந்தேன்.

அக்காலப்பகுதியில் கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன் ஊடாக  நான்தான் அந்த ரஸஞானி என அறிந்துகொண்டு, என்னை  உரையாற்ற வருமாறு அழைத்ததுடன், எனது பொருளாதார நிலையறிந்தோ என்னவோ, எனது பயணப்போக்குவரத்துச்செலவுக்கும் பணம் அனுப்பியிருந்தார்.

அத்தகைய விந்தையான ஆளுமை கோகிலா மகேந்திரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கூறியவறே இந்தப்பத்தியை எழுதுகின்றேன்.

குறிப்பிட்ட நூல் வெளியீட்டு விழாவுக்கு மல்லிகை ஜீவா, பேராசிரியர்கள் மெளனகுரு, சித்திரலேகா தம்பதியர் எழுத்தாளர்கள் புலோலியூர் இரத்தினவேலோன்,  வேல் அமுதன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர் மேத்தா தாசன் ஆகியோருட்பட பல கலை, இலக்கியவாதிகளும், ஆசிரியர்களும் மாணவர்களும் வருகை தந்திருந்தனர்.

மகாஜனா கல்லூரியின் துரையப்பாபிள்ளை அரங்கம் நிறைந்திருந்தது. அன்றுதான் அந்தக்கல்லூரியின் வாயிலில்  முதல் முதலாக நான் காலடி எடுத்து வைக்கின்றேன். அந்த வாயிலில் மலர்ந்த முகத்துடன் என்னை கைகூப்பி வணங்கி அழைத்துச்சென்றவர்தான் கடந்த அரைநூற்றாண்டு காலமாக சகோதர வாஞ்சையுடன் எமது இலக்கிய குடும்பத்தில்  உறவாடும் மனிதநேயப்பண்புகள் நிறைந்த கோகிலா மகேந்திரன்.

சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், விஞ்ஞானம், நாடகம், கலைஞர் வரலாறு, சீர்மிய பதிவுகள் முதலான துறைகளில் தொடர்ந்தும் எழுதிவரும் கோகிலா, சிறந்த பேச்சாளருமாவார்.

சீர்மியம்சார்ந்து இயங்கி, சமூகத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் பலரை, குறிப்பாக பெண்களை ஆற்றுப்படுத்தியிருக்கிறார்.

மலையக இலக்கிய – தொழிற்சங்க வரலாற்றை ஆவணப்படுத்திய அந்தனி ஜீவா முருகபூபதி


இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிரந்தர தொழிலோ, வருவாயோ இல்லாமல் வாழ்ந்துகொண்டு எழுத்துப்பணியிலும்,  கலைத்துறையிலும் தொடர்ந்தும் அயர்ச்சியின்றி ஈடுபடுவது  கடினம்.

ஆனால், அந்த கடினமான பாதையை கடந்து வந்திருக்கும் படைப்பிலக்கியவாதி, நாடகக்கலைஞர், ஊடகவியலாளர்,  தொழிற்சங்க செயற்பாட்டாளர் அந்தனிஜீவா அவர்கள் 1960 களில் எழுத்துலகில் பிரவேசித்தவர்.

ஆறுதசாப்த காலத்திற்கும் மேலாக குறிப்பிட்ட துறைகளில்


ஈடுபட்டுவந்திருக்கும் அந்தனி ஜீவா,  எமது கலை, இலக்கிய உலகில் கலகக்காரனாகவும் விளங்கியவர்.

எனினும் இவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பது எனது அவதானம்.  ஆயினும் இலங்கை கலை, இலக்கிய மற்றும் தமிழ் ஊடகத்துறையில் அந்தனி ஜீவா தவிர்க்கமுடியாத ஆளுமையாக திகழ்கிறார்.

மலையக எழுத்துக்களை படைத்தவர்களைப் பற்றியும்  மலையக தொழிற்சங்கங்களின் வரலாறு  பற்றியும்  எழுதிய மூத்த  படைப்பாளி இவர்.

  “ படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும்.  “ எனச்சொல்லி வந்திருக்கும் அந்தனிஜீவா, தனது நாடகங்கள் மற்றும் கலை, இலக்கியப்பிரதிகளின் ஊடாக சமூகத்திற்காகவும் பேசினார். சமூகத்தையும் பேசவைத்தார்.

தொடக்கத்தில்  சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, தினகரன்,  வீரகேசரி ஆகியனவற்றில்  எழுதிவந்திருக்கும் அந்தனிஜீவா, பின்னாளில் சிரித்திரன், மல்லிகை, ஞானம், ஜீவநதி  முதலான இதழ்களிலும் தனது படைப்புகளை வரவாக்கியவர்.

மலையக இலக்கிய வரலாற்றை ஆய்வுசெய்யத்  தயாராகும் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு அந்தனி ஜீவாவின் பல நூல்கள் உசாத்துணையாகத் திகழும்.

இதழியலில் டிப்ளோமா பெற்றிருக்கும் அந்தனிஜீவா,  கொழுந்து, குன்றின் குரல், ஜனசக்தி , செஞ்சக்தி ( மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகை )  இதழ்களின் ஆசிரியராகவும்  இயங்கியிருப்பவர்.

பாரதப்பிரதமர் இந்திரா காந்தி முதல், இலங்கை மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகள் கோ. நடேசய்யர் மற்றும் சி. வி. வேலுப்பிள்ளை உட்பட பல ஆளுமைகளின் வரலாற்றை கதைபோன்று பதிவு செய்து ஆவணப்படுத்தியவர் அந்தனி ஜீவா.

கொழும்பில் மேடை நாடகங்கள் 1970 களில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருந்தன.

அந்தனிஜீவாவின் பல நாடகங்கள் கொழும்பிலும், மலையகத்திலும் மேடையேற்றப்பட்டுள்ளன.

அவரது அக்கினிப்பூக்கள் நாடகம் மேடையேற்றப்பட்டபோது  அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

1978 இல் இலங்கைக்கு வருகை தந்திருந்த தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள், அந்தனிஜீவாவின் எழுத்தாற்றலையும்,  நாடகத்துறையிலிருந்த ஈடுபாட்டையும் அவதானித்துவிட்டு,  அந்த ஆண்டில் தமிழ்நாடு திருப்பூரில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

`கற்பாறைகள் கண்ணீர் சிந்துகின்றன’ சிறுகதைத்தொகுப்பு ஒரு பார்வை - கே.எஸ்.சுதாகர்

`மண்டைதீவு கலைச்செல்விஎன அழைக்கப்படும் எழுத்தாளர்


கலைச்செல்வி அவர்கள், 1980 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த `அவள் துயில் கொள்கிறாள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.

யுத்த இடம்பெயர்வினால் இவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், பல கவிதைகளும், நாவலும் அழிந்துவிட்டன என இவர் தனது என்னுரையில் குறிப்பிடுகின்றார். சிலரது முயற்சியினால்---க.பரணீதரன், வ.ந.கிரிதரன், ஆதிலட்சுமி சிவகுமார்---இருப்பவற்றைத் தெரிந்தெடுத்து ஜீவநதி பதிப்பகமாக 2022 இல் வெளிவந்திருக்கின்றது `கற்பாறைகள் கண்ணிர் சிந்துகின்றனஎன்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் ஈழநாடு, எரிமலை, தினக்குரல், சுடர் இதழ், `கனவுக்கு வெளியேயான உலகுசிறுகதைத்தொகுப்பு என்பவற்றில் வெளிவந்த பதினொரு சிறுகதைகள் உள்ளடங்கியிருக்கின்றன.

ஒரு காலத்தின் பதிவுகளாக எண்பதுகளில் வெளிவந்த எட்டுச்


சிறுகதைகளையும் பார்க்கையில், இவரது ஆரம்பகாலக் கதைகளின் முடிவுகள் பெரும்பாலும் சோகம் கொண்டனவாக இருப்பதைக் காணலாம். ஆனால் அதுவே யதார்த்தம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

`ஒரு கண்ணீர்ப்பூ’ – நிசா/மதன் காதல் சோடிகளின் கதை. அனாதையான நிசா சாதியினால் வேறுபட்டவள். மதனின் பெற்றவர்கள் அவர்களது காதலை விரும்பாத போதும், உறுதியாக நின்றுகொள்ளும் மதனை விட்டு விலகிவிடும் நிசாவின் கதை. மதன் போன்றவர்களின் துணிவை மழுங்கடிக்கும் நிசாவைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

`அவள் துயில் கொள்கிறாள்!கதையில், தன்னுடைய திருமணம் தள்ளிப் போவதால், தங்கைகளின் திருமணங்கள் தடைப்படுகின்றன என்ற நோக்கில் அக்கா தற்கொலை செய்து கொள்கின்றாள். தன்னுடைய நிலையை தங்கைகளுக்குப் புரிய வைத்து, தனது திருமணத்திலிருந்து ஒதுங்கும் மனப்பான்மையை அக்கா கொண்டிருந்தால் அந்த முடிவு வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். இன்னொரு புறமாக அக்கா தற்கொலை செய்த வீட்டில் பெண் எடுக்க, நம் சமூகத்தில் உள்ளவர்கள் சிலர் பயப்படுவார்கள் என்பதையும் அக்கா சிந்தித்துப் பார்க்கவில்லையே என்றும் தோன்றுகின்றது.

`கணவன் மனைவி உறவு தெய்வத்தால் நிச்சயப்படுத்தப்படுகின்றதுஎன்பதற்கமைவானது `கல்லானாலும்…என்ற சிறுகதை. கூடவே மனித உணர்வுகள் திடீர் திடீரென்று மாறிவிடுகின்றது என்பதாகவும் சொல்லலாம். இந்தக் கதையில் வரும் பெண்ணைப் போல, நானும் சிலரைப் பார்த்திருக்கின்றேன். என்னதான் கணவன் அடித்தாலும் உதைத்தாலும் மீண்டும் மீண்டும் கணவனோடு ஒட்டிக் கொள்ளும் பெண்கள் அவர்கள்.

தன்னைவிட அந்தஸ்தில் அறிவில் அழகில் சிறந்தவர் ஒருவரை மணம் செய்யவேண்டும் என்று ஏங்கித்தவிக்கும் ஒரு பெண் பற்றியது `கரை காணாத கப்பல்என்ற சிறுகதை. தனது மயக்கம் தெளிவு பெறும்போது எல்லாவற்றையுமே கோட்டை விட்டு விடுகின்றாள் அந்தப் பெண்.

மீனவக் குடும்பத்தை மையமாகக் கொண்டது `நீர்க்குமிழிகள்கதை. என்னதான் குடும்பத்தில் வறுமை தாண்டமாடினாலும், உடுப்புகள் கிழிந்து தொங்க பெண்பிள்ளைகள் ஆடை வாங்க பணமில்லாதிருந்தாலும், அடுக்கடுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளும் தாய்மார்கள் இன்னமும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றார்கள் என்பதைச் சொல்கின்றது இந்தக் கதை. அத்தோடு இந்தக் கதையில் வரும் பெண்மணி ஒரு நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாமி ஐயப்ப விரதமும் மகரஜோதி தரிசனமும்

November 17, 2023 6:00 am 

கார்த்திகை மாதம் என்றதுமே கேரளா மாநிலத்தில் எழுந்தருள் செய்யும் சுவாமி ஐயப்பனை விரதம் வேண்டி நிற்கும் காலமாகும். கார்த்திகை மாதம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து மகா கணபதி குறிப்பாக பம்பை கணபதியை நினைத்து வணங்கி ஹோம பூஜையில் பங்கு கொண்டு எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருளால் விக்கினங்கள் இன்றி சுவாமி ஐயப்பனை வேண்டி தங்களது பெற்றோரால் அல்லது தாங்கள் செல்லும் சங்கங்களின் குரு சுவாமிகள் ஊடாக அல்லது ஆலய பிரதம குருக்கள் மூலம் ஐயப்பன் பதக்கம் கொண்ட துளசி மணி மாலை அணிந்து விரதம் கைகொள்ளும் மாதத்தில் ஆரம்ப நாளாக இன்றைய நாள் (17.11.2023) அமைந்துள்ளது.

ஐயப்ப சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதன் முதலாக மாலை அணிந்து செல்பவர்கள் கறுப்பு வஸ்திரம் அணிந்து கொள்வார்கள். இரண்டாம் மூன்றாம் மலை வருபவர்கள் நீலவஸ்திரம் அணிந்து கொள்வார்கள். மூன்று மலைக்கு மேற்பட்ட அதாவது பலமுறை மலையேறிய ஐயப்ப சுவாமிகள் காவி வஸ்திரம் அணிந்து கொள்வார்கள்.

அன்புச் சகோதரர்கள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


 தமிழ் திரையுலகில் தனது உயரத்தைப் போலவே நடிப்பாலும் உயர்ந்து நிற்பவர் எஸ் வி ரங்காராவ். இருபது ஆண்டுகளுக்கு மேலாக தன் குணசித்திர நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட இவர், காலமாவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் ஒரு படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தார். இன்னும் சொல்லப் போனால் அவர் கடைசியாக தமிழில் நடித்த குறிப்பிட்டு சொல்ல கூடிய படம் இது என்று கூட சொல்லலாம் . அந்த படம்தான் 1973ல் வெளியான அன்புச் சகோதரர்கள்.


ஆரம்ப கால தமிழ் படங்களில் பிரபல பின்னணிப் பாடகராகத்

திகழ்ந்தவர் கண்டசாலா. இவருடைய தமிழ் உச்சரிப்பு சற்று அப்படி இப்படி என்று இருந்தாலும் பாடல்கள் சோடை போனதில்லை. இவர் காலமாவதற்கு முன்னர் தமிழில் ஓர் அருமையான பாடலை பாடினார். முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக என்ற பாடல் மிக பிரபலமாகி , சகோதர பாசத்தை எடுத்துக் காட்டியது. இந்த பாடல் இடம் பெற்றதும் இந்த அன்புச் சகோதரர்கள் படத்தில்தான். இப்படி தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர்கள் இருவரும் தங்கள் முத்திரையை இந்தப் படத்தில் பதித்து விட்டு போனார்கள்.

எம் ஜி ஆர் நடிப்பில் கலரில் மாட்டுக்கார வேலன் , ராமன் தேடிய சீதை என்ற இரண்டு வெற்றி படங்களை தயாரித்த ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை , அதன் பின் எம் ஜி ஆரை விட்டு நீங்கி சிவாஜியின் நடிப்பில் சிவகாமியின் செல்வன் படத்தை கலரில் ஆரம்பித்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சிறிய பஜெட்டில் இந்த படத்தை கறுப்பு வெள்ளையில் தயாரித்தார். ஆனாலும் நல்லதொரு கதையம்சத்துடன் கூடிய படத்தையே தயாரித்தார்.

கிராமத்தில் பாசமான நான்கு சகோதரர்கள். ஒற்றுமையான இவர்கள் நடுவே பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது. ஒரு சகோதரனின் பணக்கார மனைவி மூலமாகவும், ஊருக்கு வரும் கோடீஸ்வரி ஒருத்தி மூலமாகவும் குடும்பத்தில் பிரச்னைகள் தலை தூக்கி வறுமை நர்த்தனமாடுகிறது. காரண காரியம் தெரியாமல் தடுமாறும் குடும்பம் மீண்டும் ஒன்று பட்டதா , உருப்பட்டதா என்பதே படத்தின் கதை.

இலங்கைச் செய்திகள்

 நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு “அனைவருக்கும் ஆங்கிலம்” 2030க்குள் பாடசாலைகளிலும் செயல்படுத்தப்படும்

யாழ். நகரில் இளையோரை குறிவைத்து போதை விருந்து ஒருபோதும் ஏற்க முடியாது என்கிறார் சுகாஷ்

 விசாரணை அறிக்கை சிறப்புரிமை குழுவுக்கு        டயனா கமகே விவகாரம்

அமெரிக்க தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்

இலங்கையில் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்ல தடையில்லை



நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் 

புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு 

“அனைவருக்கும் ஆங்கிலம்” 2030க்குள் பாடசாலைகளிலும் செயல்படுத்தப்படும்

November 17, 2023 7:57 am 0 comment

 

சிங்கள, தமிழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை இருப்பின் உடனடியாக வந்து நாட்டின் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளுமாறு தமிழ்,சிங்கள புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழுக்கு அப்பால் மொழி அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

உலகச் செய்திகள்

 காசா உயிரிழப்பு 11,000 ஐ கடந்தது; பலியானோரில் 4,650 சிறுவர்கள்

காசா தொடர்பில் ஐ.நா தீர்மானம்

காசா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கை

பைடன்–ஷி சந்திப்பு

அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கு எதிராக தீர்ப்பு


காசா உயிரிழப்பு 11,000 ஐ கடந்தது; பலியானோரில் 4,650 சிறுவர்கள்

November 17, 2023 9:52 am 

காசாவில் கடந்த ஓக்டோபர் 07 முதல் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதநேயப் பண்பாளராக வாழ்ந்து மறைந்த தியாகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

 

தெல்லிப்பழை மகாஜனா ஸ்தாபகரின் வழித்தோன்றல்

November 15, 2023 6:28 am 

பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் 1910 ஆம் ஆண்டளவில் திண்ணைப் பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்ட ஆரம்பப் பாடசாலை, படிப்படியாக வளர்ந்து, அபிவிருத்தி கண்டு, தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியாக உயர்ந்தது.

ஏராளமான கல்விமான்களையும், அறிஞர்களையும், படைப்பிலக்கியவாதிகளையும், விஞ்ஞானிகளையும், பொறியியல், மருத்துவம், கணக்கியல், சட்டம் உட்பட பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களையும் தன்னார்வத் தொண்டர்களையும், ஆசிரியர்கள், பேராசிரியர்களையும் உருவாக்கிய விருட்சமாகத்திகழ்வது யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி. அரைநூற்றாண்டுக்கு முன்னர் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து எனக்கு கிடைத்த டொமினிக் ஜீவாவின் மல்லிகை மாத இதழில்தான் எனது முதலாவது சிறுகதை (கனவுகள் ஆயிரம்) வெளியானது. 
அவ்விதழின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் பாவலர் துரையப்பாபிள்ளை.

அதன்பின்னர், 12 ஆண்டுகள் கடந்த நிலையில் 1984 ஆம் வருடம், அக்கல்லூரியில் நடந்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் ‘முரண்பாடுகள் அறுவடை’ கதைத்தொகுப்பு வெளியீட்டு அரங்கில் உரையாற்றுவதற்கு சென்றேன்.

பல இலக்கிய மற்றும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டிருக்கும் மகாஜனா கல்லூரியின் வழித்தோன்றலான தியாகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது செய்தியாகிப் போனார். வழக்கம் போன்று காலை வேளையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் அவர் கடந்த 08 ஆம் திகதி விபத்தொன்றில் காலமானார்.

அடிக்கடி அமெரிக்காவிலிருக்கும் தனது மைத்துனர் ராஜலிங்கம் அவர்களுடன் மெய்நிகர் ஊடாக உரையாடி ஆன்மீகம் முதல் அனைத்துலக அரசியல் மற்றும் சமூகப்பிரச்சினைகள், உடல் – உள நலம் சம்பந்தமான சந்தேகங்கள் பற்றியெல்லாம் உரையாடி வந்திருப்பவர்தான் தியாகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா.

நவம்பர் 06 ஆம் திகதியும் அவ்வாறு அமெரிக்காவிலிருக்கும் மைத்துனருடன் உரையாடிவிட்டு, திரும்பி வந்து உரையாடலின் சாராம்சம் தொடர்பாக பதில் எழுதுவேன் எனச்சொல்லிவிட்டு எழுந்து சென்றவர்தான் மீண்டும் திரும்பி வரவில்லை.

அன்றைய தினமும் நடைப்பயிற்சியிலிருந்தவரை கார் ஒன்று மோதியதால், அவர் மரணமானார்.

வன்னி ஹோப் தீபாவளி கொண்டாட்டம் நவம்பர் 2023

 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"

மீண்டும் ஒருமுறை, இலங்கையில் உள்ள ஏழ்மையான சமூகங்களில் உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்குச் சேவை செய்ய  உதவியதற்கு நன்றி.

இந்த தீபாவளி சிரிக்கட்டும் 🪔✨ மட்டக்களப்பு மாவட்டம் புத்தூர் கதிரவெளி வாகரை & கட்டித்தந்த என்கோனேசர் அரநேரி பிள்ளைகளுடன் சிறப்பான தீபாவளியை கொண்டாட எங்களுடன் இணையுங்கள்.

 வன்னி ஹோப் குழு இந்த மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் தருணங்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. நம்பிக்கை மற்றும் அதிகாரமளிக்கும் எங்கள் பயணத்தைத் தொடரும்போது, பண்டிகை உற்சாகம் உயிர்ப்புடன் இருப்பதைக் காண எங்கள் வீடியோவைப் பாருங்கள்.

வீடியோ இணைப்புகள் கீழே உள்ளன.



11வது ஆண்டு திருத்தொண்டர் திருவிழா 2023

 “ஓம் நமசிவாய”

  “மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”



சினிமா - பொங்கலில் களமிறங்கும் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்மஸ்’

 November 18, 2023

பொங்கல் போட்டிக்கு ஏற்கனவே தமிழ்த் திரைப்படங்கள் பல வரிசை கட்டிக் காத்திருக்கும் நிலையில், விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ படமும் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கௌரவத் தோற்றத்தில் சுப்பர் ஸ்டார் நடித்திருக்கும் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர் சி.யின் அரண்மனை 4 மற்றும் தனுஷின் கெப்டன் மில்லர் ஆகிய படங்களுடன் மேலும் சில படங்களும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில், இந்திய நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய் சேதுபதி, பொலிவுட் கதாநாயகி கத்ரினா கைஃபுடன் இணைந்து நடித்திருக்கும் மெரி கிறிஸ்மஸும் களமிறங்குகிறது.

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை, தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.

பதல்பூர் மற்றும் அந்தாதூன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.    நன்றி ஈழநாடு