உலகச் செய்தி

.
"விக்கிலீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு லேப்-டாப் வசதி இல்லை : ஆனால், கைதிகள் அவருக்கு முழு ஆதரவு
லண்டன் : "விக்கிலீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு லேப்-டாப் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவை மறுக்கப்பட்டதாக, அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அசாஞ்ச் தற்போது, லண்டனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள "வேண்ட்ஸ்வொர்த்' சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 7ம் தேதி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், வரும் 14ம் தேதி மீண்டும் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

வெளிச்சம் --அ. அத்துலிங்கம்

.


சிலர் செல்பேசியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் பேனாவை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் சாவியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். நான் ஒருமுறை என் காரை தொலைத்தேன்.
அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.

செல்வி-------- சிறுகதை எம்.ஆர்.நடராஜ‎ன்-

.
இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட்.

துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக கிளிப்புகள் போட்டாள். இன்னும் ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் எழுந்துவிடும். அப்புறம் திண்டாட்டம்தான். வேலை செய்ய பத்து கைகள் வேண்டும்.

ATBC மெல்பேர்ண் கலையக ஒன்றுகூடல் - சௌந்தரி -

.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2010 ம் ஆண்டுக்கான மெல்பேர்ண் கலையக ஒன்றுகூடலும் இராப்போசனமும் சனிக்கிழமை மார்கழி 4 ம் திகதி மெல்பேர்ண் Preston மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த நேயர்களோடும் ஆதரவாளர்கள் அபிமானிகளோடும் அந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொள்வதற்கு சிட்னியில் இருந்து பல அறிவிப்பாளர்கள் ஒன்றாக சென்றிருந்தோம். எமது பயணம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பெருமைப்படக்கூடியதாகவும் அமைந்திருந்தது.

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
யாழ் நோக்கி பிரயாணிக்கும் பிரயாணிகள் தாண்டிக்குளத்தில் சோதனையிடப்படுகின்றார்கள். நாங்கள் தாண்டிக்குளத்தில் காரை நிறுத்தியபோது பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள் இராணுவத்தினர். உடுப்புக்கள் என்றதும். ஓகே யண்ட மாத்தயா என்றார்கள். அந்த இடத்தில் மட்டும் ஏ9 வீதியால் போக விடாது பைபாஸ் போன்று முகாமின் பின்புறமாக இருக்கும் மண் றோட்டால் வந்து மீண்டும் ஓ9 வீதியில் ஏறவேண்டும்.ஏறக்குறைய ஒரு 500 மீற்றர் தூரம் இருக்கும் என நினைக்கிறேன்


ஆன்மிகம்

.


சென்ற வாரம் திருப்பா ண் ஆழ்வாரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் அடுத்த ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீமன் நாராயணன் கோவில் கொண்டு இருக்கும் “திருவாலி என்னும் புனித தலத்திர்க்கு அருகில் உள்ள “திருக் குறையலூர்என்னும் ஊரில் கள்ளர் மரபின் தலைவனும், சிவபிரானின் பக்தனும் ஆன ஆலிநாடாருக்கும் அவரது துணைவிக்கும் அருமை புதல்வானாய் திரு மங்கை ஆழ்வார் அவதரித்தார்.

பேஸ்புக் ஸ்தாபகரின் கொடை உள்ளம்




பிரபல சமூகவலையமைப்பான பேஸ்புக்கின் ஸ்தாபகரும், குறுகிய காலத்தில் கோடிகளை தொட்டவருமான மார்க் ஷூக்கர்பேர்க் அவரது சொத்தில் பெரும் பகுதியினை தர்ம காரியங்களுக்கு வழங்கவதற்கு இணங்கியுள்ளார். 

26 வயதான ஷூக்கர் பேர்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 7 பில்லியன் டொலர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம்

.

ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் கோலாகலமாக நடந்தது. ரஜினி-லதா திருமணம் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது.

சீமான் விடுதலை

.

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று விடுதலை செய்யப்பட்டார் சீமான். சிறையிலிருந்து வெளியே வந்தவரை வரவேற்க அவரது நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்களும், டைரக்டர் பாலா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் திரண்டிருந்தார்கள். பட்டாசு வெடிக்க, தொண்டர்களின் பரவசக்குரல் முழங்க சிறையிலிருந்து வெளியே வந்தார் சீமான்.

த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து ஏன் விலகினேன்

.

த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் விஜய். ஆனால் அது அதிரடி அல்ல. வழ வழா!
நான் பெரிதும் மரியாதை வைத்திருக்கிற இயக்குனர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனைதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார் விஜய். பேச்சோடு பேச்சாக அவர் சொன்ன விஷயம், நம்மை போல எக்ஸ்க்ளுசிவ் செய்திகளை வெளியிடும் அவசரக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

மைனா விமர்சனம்

.
காட்டில் பூவாய் மலரும் ஒரு காதல், நாட்டில் எப்படி கசக்கி எறியப்படுகிறது என்கிற கதைதான் மைனா. ஹீரோயின் மைனாவின் குடும்பம் அநாதையாக நிற்கும்போது உதவிக்காக நீள்கிறது ஹீரோ சுருளியின் கரம். பள்ளி பருவத்து பரிவு, பருவ காலத்தில் காதலாகிறது. திருமணக் காலத்தில் மைனாவின் அம்மா, படித்த பிள்ளைக்கு படித்த பையனை தேடுகிறார். விளைவு சுருளி வெகுண்டு எழ, காட்டுக்குள் காக்கி சட்டை கால் பதிக்கிறது. காவல்துறையும், காதலும் துரத்த காட்டுக்குள் ஓடுகிறது காதலும், காவலும். ஒன்றை விட்டு ஒன்று பிரிய முடியாத சூழ்நிலையில் அவர்களுக்குள் அன்பும், பரிவும், காப்பாற்றுதலும், நன்றியுமான உணர்வுகள் மாறி மாறி வருகிறது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான தீர்வு என்ற பாடத்தை காடு கற்றுக் கொடுத்து நாட்டுக்கு அனுப்புகிறது. ஆனால் நாடு அதை புரிந்து கொள்ளாமல் காதலர்களை கசக்கிப் போடுகிறது.