யாருமற்றவர்கள்" - கவிஞர் மகுடேசுவரன்


Image may contain: one or more people and closeup

.

இங்கே
ஒவ்வொருவரும்
இன்னொருவரை வெளியேறச் சொல்கிறார்கள்.
“நீ எங்கிருந்து வந்தாயோ
அங்கேயே போ” என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால்
யார்க்கும்
தாம் எங்கேயிருந்து வந்தோம் என்பது
உறுதியில்லை.
ஒருவர்
“தாய் வயிற்றிலிருந்து வந்தோமே…
அங்கே போவதா ?” என்கிறார்.
வேறொருவர்
“ஆப்பிரிக்காவிலிருந்து வந்தோம் என்பார்களே…
அங்கே போவதா ?” என்கிறார்.
“குரங்கிலிருந்து வந்தோமே…
அந்தக் கூட்டத்தோடு போ என்கிறார்களா ?”
என்று வினவுகிறார் இன்னொருவர்.
எல்லாரும் ஒருநாள்
போகப் போகிறவர்கள்தாம்.
போகும்படி ஏவுவதற்கு
யார்க்கோ பித்து முற்றிவிட்டது.
ஏன் போகச் சொல்கிறார்கள் என்றால்
அவர்கள் “ஓர் ஐம்பது கிமீ” இடம்பெயர்ந்து
வந்துவிட்டார்களாம்.
சித்தூரிலிருந்து
வேலூர்க்கு வந்தால்
தெலுங்கனாகிவிடலாம்.
ஓசூரிலிருந்து
பெங்களூருக்கு வந்தால்
தமிழனாகிவிடலாம்.
கொள்ளேகாலத்திலிருந்து
அந்தியூர்க்கு வந்தால்
கன்னடனாகிவிடலாம்.
பாலக்காட்டிலிருந்து
கோவைக்கு வந்தால் மலையாளி.
யாழ்ப்பாணத்திலிருந்து
மண்டபத்திற்கு வந்தால் ஈழத்தவன்.
வங்காள தேசத்திலிருந்து
ஏதிலியாக வந்தால் நாடிலி.
பீகாரிலிருந்து
தமிழ்நாட்டிற்கு வந்தவனுக்கு
ஒரு வளவாழ்வு இருக்கிறது.
என்ன செய்வது !

படித்தோம் சொல்கின்றோம்: - காணாமல் போகவிருந்த கதைகள்- முருகபூபதி

.

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
எழுதியிருக்கும்   காணாமல் போகவிருந்த கதைகள் 
சமூகம் எப்படி இருக்கவேண்டும்..? என்பதை ஆதங்கத்துடன் சொல்லும் வாழ்வின் தரிசனங்கள்


 
                                                         

சமூகம்  இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என தமது கற்பனையில் நினைத்துப்பார்ப்பவர்கள்  ஆக்க இலக்கியப்படைப்பாளிகள். அந்தப்படைப்பாளிகள் தீவிரமான மனிதநேயர்களாக இருப்பின், அவர்களது படைப்பிலக்கிய எழுத்துக்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கதாமாந்தர்கள் வருவார்கள். அசாதாரண சம்பவங்கள், திடீர் திருப்பங்கள்  நிகழும்.
பெரும்பாலான ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கு அவர்தம் வாழ்க்கைத்  தரிசனங்களே அவர் எழுதும் கதைகளாகிவிடும்.
சொந்த வாழ்வில், பயணத்தில், சந்திப்புகளில், அனுபவங்களில்,  தரிசிக்கும் மனிதர்களில் , உறவாடும் நட்புகளில் , உயிரினங்களில்  இன்ன பிற காட்சிகளில்  கிடைக்கும் சித்திரம்  மனதில் பதிந்துவிடும். தருணம் வரும்போது அவை, சிறுகதையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக, ஏன் திரைப்படமாகவும் உருமாறிவிடும்.
இலங்கையிலும் உலக அரங்கிலும் காணாமல் போன மனிதர்கள் பேசுபொருளாகியிருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் ஓரே காலப்பகுதியில் அறிமுகமான படைப்பிலக்கியவாதி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதி எனக்கு தபாலில் வந்து சேர்ந்தது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் இவரை,  நான் நேரில் பார்த்திராதபோதிலும், இவரது கதைகளை முன்னர் இலங்கை மல்லிகையில் படித்திருக்கின்றேன்.
ஒருசமயம் இவர் மல்லிகை அட்டைப்படத்தையும் அலங்கரித்து, அதிதியானவர். அதில் இவரைப்பற்றி எழுதியவர் ஈழத்து எழுத்தாளரும்  அண்மையில் சாகித்திய ரத்னா விருதுபெற்றவருமான  ஐ. சாந்தன்.
சாந்தனுக்கு கோரியை   அக்காலப்பகுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தியவர் இலங்கை வானொலி, லண்டன் பி.பி.ஸி புகழ்   அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள்.

இயக்குனர் மிஷ்கினை 160 தடவை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை,

.

இயக்குனர் மிஷ்கினை 160 தடவை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை, நடந்ததை கூறிய மிஸ்கின்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் அவர்களின் படம் என்றால் அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூட கூறலாம்.
அதற்கு ஏற்றாற்போல் மிக சிறந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்கி வருபவர் மிஸ்கின்.
இவர் தனது இயக்கத்தையும் மீறி சில படங்களில் கதாபாத்திகளாகவும் நடித்துள்ளார். ஆப்படி வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் சூப்பர் டீலக்ஸ்.
இந்நிலையில் அண்மையில் இவர் கலந்து கொண்ட பிரபல விருது விழாவில் பேசிய போது "சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களிடம் அடிவாங்குவது போல் ஒரு காட்சி இருக்கும் அதில் மட்டுமே 160 ரீ டேக்குகள் வாங்கி என்ன அடித்தார் என்று கூறியுள்ளார் மிஸ்கின்.

சுவீட் சிக்ஸ்டி - கவலை இல்லாத மனிதன் - ச.சுந்தரதாஸ்

.


கவிஞராகவும் கதாசிரியராகவும் புகழ்பெற்றிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதிப் பகுதியில் படத் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். கண்ணதாசன் புரடக்சன் சார்பில் அவர் தயாரித்த 3வது படம் தான் கவலை இல்லாத மனிதன் 1960இல் இப்படம் வெளிவந்தது.

கண்ணதாசனின் பாடல்களினால் ஏராளமான படங்கள் வெற்றியடைந்து கொண்டிருந்தன . இதனால் சிவாஜியும் ஸ்ரீதரும் கண்ணதாசன் படம் தயாரித்தால் நடித்து இயக்க தயாராக இருந்தார்கள் . ஆனால் கண்ணதாசன் அந்த வாய்ப்பை விட்டுவிட்டு நகைச்சுவை நடிகராக மிளிர்ந்துகொண்டிருந்த ஜே பி சந்திரபாபுவை தன படத்திற்கு கதாநாயகனாக்கினார் . போதாக்குறைக்கு அதில் நடிப்பதற்கு சந்திரபாபு கேட்ட தொகையையும் ஊதியமாகக் கொடுத்தார்.

அன்று பிரபலமாக இருந்த எம் ஆர் ராதா , ரி ஆர் மகாலிங்கம் , எம் என் ராஜம் . ராயசுலோஜனா ஆகியோரும் இதில் நடித்தார்கள். பிரபல இயக்குனரான கே சங்கர் படத்தை இயக்கினார் .

வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த படடதாரியான சந்திரபாபுவுக்கு பிறர் துன்பங்களைத் துடைப்பத்தால் தான் ஆர்வம். அவர் தந்தை பாலையாவுக்கோ பணத்தின் மீது தான் குறி. அன்னான் எம் ஆர் ராதா ஊதாரியாக பெண்பித்தனாக திரிகிறார். வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த எம் என் ராஜத்தை சந்திரபாபுவுக்கு மனம் முடித்துக் கொடுக்க பாலையா முனைகிறார். ஆனால் ராஜமோ ஏழைக் கவிஞரான டி ஆர் மகாலிங்கத்தை காதலிக்கிறார். இவர்களை சேர்த்து வைப்பதில் சந்திரபாபு பல சிரமங்களுடன் முயட்சி செய்கிறார்.


கொரோனா வைரஸ் பற்றி தமிழ் சித்த வைத்தியர்

.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 4 - சரவண பிரபு ராமமூர்த்தி

.


திருச்சின்னம் – ஊதுகருவி

 அமைப்பு

அனசு, உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக் குழல்கள் தான் திருச்சின்னம். சுமார் 2 ½ அடி நீளம் இருக்கும். சில இடங்களில் வெள்ளியாலான திருச்சின்னம் உள்ளது.

குறிப்பு
ஓம்...’ என்று ஒலி தரும் இசைக்கருவி திருச்சின்னம். இது மிக நுட்பமான ஊதுகருவி. பழந்தமிழர் இக்கருவியை வெற்றியின் சின்னமாக பயன்படுத்தியுள்ளார்கள். தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட பல நடுகல் சிற்பங்களில் உள்ள வீரர்களின் கைகளில் திருச்சின்னம் செதுக்கப்பட்டுள்ளதை நாம் கானலாம். திருச்சின்னம் நெடுங்காலாமாக இரட்டையாகவே ஊதப்படுகிறது. கண்டறியபட்ட நடுகல் புடைப்பு சிற்ப்பங்களும் நமக்கு இதை உறுதி செய்கின்றன. திருச்சின்னம் பற்றிய குறிப்புகள் தமிழக கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

குவிந்து கூர்ந்து நிற்கும் முகப்பு இரண்டையும் ஒருசேர வாயில் வைத்து ஊதவேண்டும். மிகுந்த பயிற்சியும், வலுவும் உள்ளவர்கள் மட்டுமே வாசிக்கத் தகுந்தது இது. திருச்சீரணம், திருச்சூரணம் என்றும் அழைக்கப்படும். முற்காலத்தில் கோவில்களில் தாசரி இனத்தவர் பெரும்பாலும் இதை இசைத்து வந்துள்ளார்கள்.

சிவபெருமான் சம்பந்தருக்கு முத்து சிவிகை அளித்த நேரத்தில் திருச்சின்னமும் அளித்ததாக பெரியபுராணம் இயம்புகிறது. அது வரை சின்னம் என்று அழைக்கப்பட்ட இக்கருவி இறைவன் அருளியதால் திருச்சின்னம் என்று அழைக்கப்படுவதாக சைவர்களின் நம்பிக்கை.

அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி ஊடகங்களும் - பரமபுத்திரன்

.

அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும்
பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்


தற்காலத்தில் குறித்த கால இடைவெளிக்கொரு தடவை புதிய நோய் ஒன்று  அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக இவை வைரசு நோய்கள். அந்த வரிசையில் இந்த  ஆண்டு அறிமுகமாகியுள்ள  வைரசு கொரோனா வைரசு. வைரசு என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால்  மக்களுக்கு விழிப்பூட்டுவதாக கூறிக்கொண்டு செய்தி ஊடகங்களும் மருத்துவமும் மக்களை பயமுறுத்துவதில் குறியாக இருக்கின்றது. தாங்கள் என்ன செய்கின்றார்கள்  என்று ஊடகங்களும் தெரிந்து கொள்ளவில்லை. மருத்துவர்களும் புரிந்து கொள்ளவில்லை. இன்று  வேறுபட்ட  நோய்களை இனம்  காட்டி, அதற்கு அறிகுறிகள் கூறி, அந்த நோயின் தாக்கங்களை எடுத்துச்சொல்லி  மக்களை   அச்சத்தின்  உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள் செய்தியாளர்கள். இதற்கு உதவியாக மருத்துவர்கள் கூறுவதாக சொல்லிக்கொள்கின்றார்கள்.  மக்களுக்கு உதவுவதாக எண்ண  வைத்து மக்களை  மனநோயாளிகளாக மாற்றுகின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் அருகில் அமர்ந்திருப்பவனை  ஏக்கத்துடன் பார்த்து ஏதாவது நோய் ஒன்றை என்மேல் ஏற்றிவிட்டு செல்வானோ என்ற கலக்கத்துடன் நிற்கின்றான். மறுபுறத்தில் “மூடு முகம், போடு தடுப்பூசி” என்று அறிவுறுத்தல்கள் வழங்குகின்றனர். அன்றாடம் உழைத்துக்  களைத்து வாழும் மக்கள் மிரண்டு பயந்து அலைகின்றனர். முகமூடிகளை போட்டுக்கொண்டு சுற்றுகின்றனர். காரணம் நாமோ  படிக்கவில்லை, ஆனால் படித்தவர்கள் நோய்கள்  தொடர்பாக  சொல்கின்றார்கள், எனவே அது சரிதான் என்று முழுமையாக நம்புகின்றார்கள்.  இது சரியா?


மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 21 - முருகபூபதி

.



ஜீவிகாவை காலையில்  வேலைக்கு அழைத்துச்சென்று,  மாலையானதும் வந்து விட்டுச்செல்லும் அந்த வாகனம் ஒலி எழுப்பி, தனது வரவைச் சொன்னது.

சமையலறையில்  இரவுணவு  தயாரிப்பிலிருந்த அபிதா, எழுந்து சென்று கேட்டை திறந்தாள். மஞ்சுளா முகநூலிலும் கற்பகம் தொலைக்காட்சி நாடகத்திலும் சுபாஷினி யாருடனோ கைத்தொலைபேசியில் பேசியவாறும்  மூழ்கியிருந்தனர்.

 ஜீவிகா, ஒரு பெரிய பிளாஸ்ரிக் பேக்கை  அவளிடம் நீட்டியவாறு ,  “ எல்லோருக்கும் மாஸ்க் வாங்கி வந்திருக்கிறேன்  “ என்றாள்.
 “ மாஸ்க்கா…?  “ அபிதா விநோதம் தவழ அந்தபேக்கைத்திறந்து பார்த்தாள். அதற்குள் சிறு சிறு பொதியாக முகக்கவசங்கள் இருந்தன.  அந்த வாகனத்திலிருந்த சாரதி, ஜீவிகாவுக்கு கையசைத்து,  “ நாளை காலையில் வருகிறேன் “  எனச்சொல்லிவிட்டு, வாகனத்துடன் மறைந்தான்.

வீட்டினுள்ளே பிரவேசித்ததும், அபிதாவிடமிருந்து அந்த பேக்கை வாங்கிய ஜீவிகா, “  எல்லோரும்   இந்தப்பக்கம் வாரீங்களா..? “ என்று குரல்கொடுத்தாள்.

                                            மேசையில்  முகக்கவசங்களை பரப்பிவைத்து,  “ ஒவ்வொருத்தரும் ஆளுக்கு இரண்டு வீதம் எடுத்துக்கொள்ளுங்கள்.  சீனா, அங்கே ஆக்கிரமிக்கிறது… இங்கே ஆக்கிரமிக்கிறது என்று பேசுறாங்கள், எழுதுறாங்கள்…. இப்போது அங்கிருந்து கொரொனா வைரஸ் என்று ஏதோ புதிதாக ஒன்று வந்து ஆக்கிரமித்திருப்பதாக  பேசிக்கொள்கிறார்கள். ரி.வியில் நியூஸ் பார்த்தீங்களா… இல்லை தொலைக்காட்சி நாடகம் பார்த்தீங்களா…. “ என்றாள்.

வேர்களும் விருட்சங்களும்- ஆவணபெட்டகம்- ஐந்தாம் பகுதி


இது இந்த வாரம் 30,1.2020 அன்று ஒளிபரப் பானது. இது ஐந்தாம் பகுதி. அக் காலத்தில் நான் முதன் முதல் தயாரித்த "சங்காரம்" நாடகம் பற்றி இங்கு பேசப்படுகிறது சங்காரம் நாடகம் பற்றி ஈழத்து நாடக வரலாறு எழுதுவோர் பலர் குறிப் பிடுவ தில்லை.அது பற்றி அவர்களுக்குத் தகவல்கள் கிடைக்கவில்லை போலும்
'
அது ஓர் மக்கள் போராட்ட நாடகம்







.அடக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் சாதி,மத இன,நிற வர்க்க அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவதைக் காட்டும் நாடகம்
1960 70 களில் இத்தகைய ஓர் சிந்தனைப் போக்கும் செயல் போக்கும் இலங்கையில் வாழ்ந்த அனைத்து இனமக்களிடையே எங்கணும் காணப்பட்டது
முதன் முதலாக மட்டக்கள்ப்பு கூத்து வடிவம் இன்னொரு மாற்றம் பெறுகிறது
அப்போது நாம் மட்டக்கள்ப்பு நாடக சபை என்றொரு அமைப்பை உருவாக்கிச் செயற்பட்ட காலங்கள் அவை
துடிப்பு மிகுந்த இளம் பராயம்..
எனது உடலில் மிகுந்த வலு இருந்த காலம்
1969 இல் கூத்து மரபினடியாக நவீனம் கண்ட நாடகம் இந்தச்
சங்காரம்
இதில் நடித்தோரில் மிகபெரும்பாலானோர் மரபுவழிக் கூத்துக்கலைஞற்கள்,
வட்டக்களரியில் கூத்து விடிய விடிய ஆடியவர்கள்,
மிக நன்றாக ஆடப் பாடக் கூடியவர்கள்
மத்தளம் அடித்தவர் செல்லையா அண்ணாவியார்
செல்லையா அண்ணவியார் வித்தியானந்தனால் நவீனத்துக்குப் பழக்கப்பட்டவர்,
ஆனால் மறவர்கள் அப்படியன்று
அவர்களுக்கு நவீனம் புதியது
. எனினும் வெகு லாவகமாக அதனை உள்வாங்கி வெளிப்படுத்தினர்.'

’கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் உன்னிடம்’; மறக்க முடியாத டி.எஸ்.ராகவேந்தர் காலமானார்

.


பழம்பெரும் நடிகரும்இ பாடகருமான டி.எஸ்.ராகவேந்தர் உடல்நலக் குறைவால் ஜனவரி 30இல்  காலமானார். அவருக்கு வயது 75.


ஏகப்பட்ட படங்களெல்லாம் நடிக்கவில்லை. ஒரு படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலெல்லாம் நடிக்கவில்லை. ஆனால்இ நல்ல கேரக்டராக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாலு சீனோ... ரெண்டு சீனோ... மக்கள் மனங்களில் பதியும்படிஇ பளிச்சென்று நடித்திருக்கிறார். அவர்... டி.எஸ்.ராகவேந்தர்.

இசையுடன் தொடர்பு கொண்ட ராகவேந்தர்இ பின்னாளில் நடிகரானார். நடுவேஇ எண்பதுகளில்இ சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது பலரும் தெரிந்திடாத ஒன்று. ’வைதேகி காத்திருந்தாள்’ படத்தில்இ விதவை மகளான ரேவதியின் துயரத்தைத் தாங்கமுடியாமல்இ குடிபோதைக்கு ஆளாகிப் புழுங்கும் கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘அட... பிரமாதமா நடிக்கிறாரே... யாருப்பா இவரு?’ என்று கிராமங்களில் கூட கேட்டுத் தெரிந்துகொண்டார்கள் ரசிகர்கள்.


சி.குமாரின் மறைவு ஈழத்து இலக்கியத் துறைக்கு பெரும் இழப்பு…!

.


மலையக இலக்கிய வானில் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்ட மல்லிகை சி.குமாரின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். நாடறிந்த பிரபல எழுத்தாளரான அவர் கடந்த திங்கட்கிழமை மாலை காலமானார். மல்லிகை சி.குமார் தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தைச் சேர்ந்தவர். தனது 76ஆவது வயதில்  காலமானார்.
அவர் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளி ஆவார். 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் சி.குமார், இலங்கையின் சிறுகதைத் துறையில் சாதனை படைத்தவராக விளங்குகின்றார். மலையக தோட்டத் தொழிலாளர்களின் துன்ப வாழ்வை தனது படைப்புகளில் வெளியே கொண்டு வந்தவர் அவர்.
தனது கல்வியை முடித்த பின்னர் மிருக வைத்தியத் துறையில் ஈடுபாடு காட்டிய அவர், மலையகத் தோட்டப் பகுதிகளில் கால்நடை வளர்ப்புக்கு ஊக்கமூட்டும் வகையில் அரும்பணியாற்றியிருக்கிறார். கால்நடை வளர்ப்பு தொடர்பான கட்டுரைகள் ஏராளம் எழுதியுள்ளார். அவர் சிறந்த ஓவியராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். சி.குமாரின் கவிதைகள் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் கூட வெளிவந்துள்ளன.

வேண்டாத கனவுகள் - dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

.


க்ரைம் நாவல்களில் வருவது போல் கும்மிருட்டு…. எங்கோ தூரத்தில் நாய் குலைப்பது கேட்கிறது. அவன் தனியாக அந்த ஒத்தையடி பாதையில் நடந்து வந்து கொண்டிருக்கிறான். பின்னாலிருந்து என்னவோ சரசரவென சத்தம், யாரோ வேகவேகமாக அவனை தொடர்ந்து வருவது போல் தெரிகிறது. பதற்றமும் பரபரப்புமாக அவன் எட்டி நடை போட, சட்டென்று இடியும் மின்னலுமாக பெரும் மழை தொற்றிக் கொள்கிறது. அவன் இன்னும் வேகமாக நடக்க முயல இரண்டு முரட்டு கைகள் அவனை இறுக்கமாக நெருக்கிப் பிடிக்கிறது…. 
அவன் ‘ஆ’ வென்ற சத்தத்தோடு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தும் எழுந்து உட்கார்கிறான், இன்னும் அவன் உடல் நடுங்கிக் கொண்டிருக்கிறது. குளிரூட்டப் பட்ட அந்த சொகுசான அறையிலும் அவனுக்கு வேர்த்து கொட்டுகிறது. வெடவெடக்கும் கைகளோடு, அருகிலிருக்கும் தண்ணிரை வேகவேகமாக குடித்து கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திய பின்பு தான், இது வரை அவன் கண்டது கனவு என்றே உடல் உணர்ந்து, மனம் மெல்ல நிதானப் படுகிறது.
(என்ன நடக்கிறது இங்கே.. திகில் கதையை தவறுதலாக இந்த பக்கத்தில் பிரசுரித்து விட்டார்களோ என நீங்கள் மேலே யோசிக்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி..?!)
நீங்கள் கனவு கண்டிருக்கிறீர்களா? நான் கேட்பது அறிஞர் அப்துல் கலாம் சொன்னது போல உங்களை தூங்க விடாமல் செய்யும் கனவல்ல. தூக்கத்தில் வரும் கனவு.

பண்புடையார் கண்ணீர் பாரையே திருத்திவிடும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் ...

.


        மலர்களின் கண்ணீர்  
               மனிதனுக்குத் தெரிவதில்லை
        பன்னீராய் மாறியது
                பரவசத்தைக் கொடுக்கிறது 
        ஏழைகள் கண்ணீர்
               எவருக்கும் தெரிவதில்லை
         வற்றாமல் பெருகியது
               மனமுடையச் செய்கிறது 

         சிப்பியின் கண்ணீர்
                முத்தாக மிளிர்கிறது 
         செங்கரும்பின் கண்ணீர்
                தித்திப்பைத்  தருகிறது 
         சொத்துள்ளார் கண்ணீர்
                 சுகத்தைக் குறிவைக்கிறது 
          சோம்பலுடன் திரிவார்க்கு
                    கண்ணீரே வருவதில்லை  ! 

         சீதையின் கண்ணீர்
                      இராவணனை வீழ்த்தியது
        சிலம்பினது கண்ணீர்
                         ஆட்சியையே வீழ்த்தியது 
        பாண்டவர்கள் கண்ணீர்
                           பாதகத்தை வீழ்த்தியது
        பண்புடையார் கண்ணீர்
                           பாரையே திருத்திவிடும்  ! 

சினிமா விமர்சனம் - டகால்டி திரை விமர்சனம்



.

சந்தானம் காமெடியனாக கொடிக்கட்டி பறந்தாலும் ஒரு ஹீரோவாக ஜெயிக்க போராடி வந்தார். அந்த நிலையில் தான் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்கள் இவரை ஹீரோவாகவும் வெற்றிப்பெற வைத்தது, இப்படி தொடர் வெற்றியில் சந்தோஷத்தில் இருக்கும் சந்தானத்திற்கு மேலும் சந்தோஷத்தை சேர்த்ததா? இந்த டகால்டி பார்ப்போம்.

கதைக்களம்

சந்தானம் மும்பையில் டகால்டி வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வருகின்றார். அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் சாம்ராட் தனக்கு தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து தன் ஆசையை தீற்றுக்கொள்பவர்.
இவர் ஒரு பெண்ணை வரைந்து அந்த பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளிடம் கொடுக்கின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் ராதாரவியிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொள்ள ராதாரவி உத்தரவிடுகின்றார்.
சந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேஎன் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி, அந்த பெண்ணை எப்படியோ கண்டுப்பிடிக்கின்றார், பிறகு அந்த பெண்ணை சொன்னது போல் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய தைப்பூச திருவிழா 09.02.20

.

Sunday the 9th Feb 2020 – Commencing at 10.00 AM

Paal Kudam & Kaavadi Attam
Abhishekam, Alankaram & Sodasa Upachara Deeparadhanai for
Sri Subramanya Swamy, Sri Valli & Sri Devasena.
Mayil (Peacock) Vahana Purappadu (procession) within the Temple.

Donation:

Abhishekam – $151
Archana – $25



சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் மகா உற்சவம் 31/01/2020- 11/02/2020













சைவமுறையில் இறுதிக்கிரியை செய்ப்பவர் சைவமன்றத்தின் இலவச சேவை

















சைவ மன்றத்தில் வேலை வாய்ப்பு - மடப்பள்ளி குருக்கள்