நவாத்திரி துதிப் பாடல்கள்

 நலந்தரும் நவாத்திரி 

        முத்தேவியர்க்கும் துதி



























இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா !
          
            [ துர்க்கையம்மன் துதி ]
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
 


ஈரமுடை நெஞ்சை ஈந்திடுவாய் தாயே
இணையில்லா திருவடியைப் பற்றுகிறோம் தாயே
கோரமுடை நினைப்பைக் கொன்றொழிப்பாய்  தாயே
குவலயதில் வாழத் துணைநீயே தாயே 

ஆணவமாம் நினைப்பை அகற்றிவிடு தாயே
அகந்தை அகமேறா ஆக்கிவிடு தாயே 
தீமையெமை அணுகா திருப்பிவிடு தாயே
திக்கெட்டும் நிறைந்தாய் துர்க்கையம்மா நீயே 

சோர்வடையும் எண்ணம் துடைத்தெறிவாய் தாயே 
தொலைநோக்குப் பார்வை கொடுத்தருள்வாய் தாயே 
வாய்மையுடன் வாழ வரமருள்வாய் தாயே 
மாநிலத்தில் எமக்குத் துணைநீயே தாயே 

அச்சமதை அகற்ற அருகணைவாய் அம்மா
ஐயநிலை போக்க அருள்புரிவாய் அம்மா
இச்சைகொண்டு உன்னை இறைஞ்சுகிறோம் அம்மா
இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா 

மாகாளியின் அறைகூவல் - நாட்டிய கலாநிதி - கார்த்திகா கணேசர்

 .

இன்றய காலத்திலே  யுனெஸ்கோ நிறுவனம் சிறுவர் தினம் என நவம்பர் 20ம் திகதியை  சிறுவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. சிலகாலங்களின் முன்பு வரை  பல நாடுகளிலே சிறுவர்களைக் கொண்டு பெரிய தொழில்சாலைகளில் வேலை வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. மற்றும் சிறுவர்களுக்குக் கல்வியறிவு வழங்கப்படாமையும் காணப்பட்டது. குறிப்பிட்ட சிறுவர் தினத்தில் உலக நாடுகள் சிறுவர்கள் நலச் சேவைகள் குறித்த விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி அவர்களின் மேம்பாடு, அபிவிருத்தி, நலச்சேவைகள் பற்றி அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர இச் சிறுவர்தினப் பிரகடனம் பயனுடயதாக இருக்கிறது.


அதே போன்று பெண்கள் தினமும் உண்டு. மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி உள்ளது.. காரணம் இன்றய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சாதாரண மனிதருக்கு வழங்கப்படும் உரிமைகள் அற்றவர்களாக வாழ்கிறார்கள். கல்வியறிவற்றவராகவும் ஆண்களால் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றவர்களாகவும் பலர் வாழ்ந்து வருகின்றனர். வெளியுலகம் கூடத் தெரியாது சமய சம்பிருதாயம் என வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்படும் துன்பமும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.

பாரதியாரோ,

அஞ்சலியிலும் ஆணவம் காண்பிக்கும் அரசியல்வாதிகள் ! அவதானி

 “ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும்


தாழ்வு  “ என்று எமது முன்னோர்கள் மிகவும் தீர்க்கதரிசனமாகத்தான் சொன்னார்கள்.

ஆனால், இந்த தமிழ் மூதுரையை தமிழ் சமூகம்தான் மனதில் நிலைநிறுத்தி, அதற்கேற்ப வாழத்தலைப்படவில்லை என்பதை மீண்டும் யாழ்ப்பாணம் நல்லூரில் நிரூபித்திருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள்.

குறிப்பிட்ட  சில இந்த அரசியல்வாதிகளுக்கு தியாக தீபம் திலீபன் தற்கொடை செய்துகொண்டபோது 15 வயதிற்கும் குறைவுதான்.  தமது தொண்டர்கள் அடாவடித்தனங்களில் ஈடுபட்டபோது கைகட்டி நின்று வேடிக்கை பார்த்த இன்றைய தலைவருக்கும் அன்று தீலிபன் மறைந்தபோது 15 வயதிற்கும் குறைவுதான்.

1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி திலீபன் தனது


உண்ணா நோன்பை ஆரம்பித்து, 26 ஆம் திகதி உயிர் நீத்தார். இடைப்பட்ட  நாட்களில் நீரும் அருந்தாமல் அவர் இலங்கை – இந்திய அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக காந்தீய வழியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

காலையில் ஆரம்பித்து மாலையில் முடிக்கும் உண்ணாவிரதத்தை திலீபன் மேற்கொள்ளவில்லை.  விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் வடக்கு மாகாணம் இருந்த காலத்தில் திலீபன் நினைவேந்தல் அவர்களின் ஏற்பாட்டில் நடந்தது. 

2009 ஆம் ஆண்டு மேமாதம் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர்,  தமிழர் தரப்பு அரசியலில் காட்சிகளும் மாறிவிட்டன.  விடுதலைப் புலிகளின் தலைவரால் ஜனநாயக அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும்  முரண்பாடுகளுடனும் , சிலரது வெளியேற்றங்களுடனும், தொடர்ச்சியான அறிக்கைச்  சமர்களோடும் நூலறுந்த பட்டமாக அலைந்துழன்றுகொண்டிருக்கிறது.

பாராளுமன்றம் ,  மாகாண சபை, மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில்  கிடைக்கும் ஆசனங்களுக்காக தேர்தலை மாத்திரம் நோக்கமாகக்  கொண்ட கட்சி அரசியல் முனைப்பினால்தான்  தமிழர் தரப்பு அரசியல் சீரழிந்துகொண்டிருக்கிறது.

பொது எதிரி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, இவர்கள் யார் துரோகி..? யார் இனப்பற்றாளர்..? என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட பூசலும் முரண்பாடும்  யாழ். மாநகர சபையிலிருந்து, திலீபன் நினைவேந்தல் வரையில் தொடருகின்றது.

இதன் உச்சக்காட்சியை அண்மையில் நல்லூரில் தியாகி  திலீபன் 35 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த இடத்திலேயே காணமுடிந்தது.

ஈழத்தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் திலீபன் நினைவேந்தல் நடந்திருப்பது சமகால செய்தி.  பேரினவாத அரசுகள்தான் இதுபோன்ற தமிழருக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னர் சட்டத்தின் துணைகொண்டு அடக்க முற்பட்டன.

Gaadi - Children of the Sun

 இன்று இலங்கையின் பெருமைமிகு படைப்பாளியாக இருக்கும்


பிரசன்ன விதானகே அவர்கள் இரண்டு விஷயங்களுக்காக இந்த வாரம் பேசு பொருளாக இருந்தார். ஒன்று, பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கை சம்பந்தப்பட்ட காட்சி நேர்த்தி, வசனப் பயிற்சிக்காக மணிரத்னம் குழுவினருக்கு அவர் கொடுத்த பங்களிப்பு.

இன்னொன்று தான் அதி விசேஷமானது. 

செப்டெம்பர் இறுதி வாரத்தில் (செப் 26) பிரிஸ்பேனில் நிகழ்ந்த Asia Pacific Screen Awards (APSA) 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாளியாக,  Cultural Diversity Award ஐத் தனது Gaadi வழியாகப் பெற்றுக் கொண்டார். இந்த விருதைப் பெறும் முதல் இலங்கையர் என்ற கெளரவம் அவருக்குக் கிட்டிருயிருக்கிறது.

போர் மட்டுமல்ல சாதியமைப்பின் முதற் பலிகடாவும் பெண்கள் தான். அப்பேர்ப்பட்டதொரு வலிமிகு யதார்த்தத்தை இலங்கையின் வரலாற்று இழையொன்றோடு தொட்டுப் பயணிக்கின்றது Gaadi .

இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சாதிய ஒடுக்குமுறையில் பலிகடாவாக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்ட சூழல் நிலவியிருந்தது. கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்குள் இந்தப் பாங்கில் இருந்த சமூகத்தவர் நிகழ்த்திய “தோள் சீலைப் போராட்டம்” 37 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர்களுக்கு ஒரு விடிவைத் தந்தது.

சக்தி லீலை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1970 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அம்மனின் அருளை விளக்கும்


விதத்தில் படங்கள் வெளிவரத் தொடங்கின.ஆதி பராசக்தி,நம்ம வீட்டு தெய்வம்,அன்னை அபிராமி,அம்மன் அருள்,என்று வந்த படங்களின் வரிசையில் 1972ம் ஆண்டு வெளி வந்த படம்தான் சக்தி லீலை.

சமூகப் படம்,புராணப் படம்,பொழுதுபோக்கு படம் என்று பல தரப்பட்ட படங்களை டைரக்ட் செய்வதில் திறமை பெற்றவர் டி ஆர் ராமண்ணா.ஏற்கனவே காத்தவராயன்,ஸ்ரீவள்ளி,அருணகிரிநாதர் ஆகிய பக்திப் படங்களை இயக்கிய இவர் வண்ணப் படமான இதனை இயக்கியிருந்தார்.

புராணக் கதையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால்

ஏராளமான கதாபாத்திரங்கள் அதனால்
ஏராளமான நடிகர்கள் படத்தில் இடம் பெற்றார்கள்.குறிப்பாக சக்தியின் மகிமையை சொல்லும் படம் என்பதால் அன்றிருந்த முன்னணி நடிகைகளான ஜெயலலிதா,சரோஜாதேவி,கே ஆர் விஜயா,மஞ்சுளா,உஷா நந்தினி ஆகியோர் படத்தில் நடித்தார்கள்.இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் பார்க்கும் வாய்ப்பும் ரசிகர்களுக்கு கிடைத்தது.எம் ஜீ ஆர்,சிவாஜி இருவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுவாகத் தான் இருக்க்க வேண்டும். ஆனால் எம் ஜீ ஆரும் சிவாஜியும் படத்தில் இடம் பெறவில்லை!

இவர்களுடன் ஜெமினி கணேசன்,சிவகுமார்,ஏ வி எம் ராஜன்,எஸ் ஏ அசோகன்,சுந்தரராஜன்,எஸ் வி சகஸ்ரநாமம்,செந்தாமரை,சண்முகசுந்தரம்,கே விஜயன்,கே கண்ணன் ஆகியோரும் படத்தில் நடித்திருந்தனர்.இவர்களுக்கு முத்தாய்ப்பாக கே பி சுந்தராம்பாளும் படத்தில் தோன்றியிருந்தார்.

பிருங்கி முனிவரின் அலட்சியத்தினால் ஆவேசப்படும் சக்தி அவரை அழித்து விடுகிறாள்.அதன் காரணமாக பூ உலகில் கன்னியாகுமரியில் கன்னிதேவியாக அவதரித்து சிவனை அடைய தவம் இருக்கிறாள்.பிருங்கி முனிவரோ வாணாசுரன் என்ற பெயரில் மறு பிறவி எடுத்து கடும் தவம் இருந்து பிரம்மன் மூலம் சகல வரங்களையும் பெறுகிறான்.மும் மூர்த்திகள்,நவகிரகங்கள்,இந்திரன்,எமன் என்று எல்லோரையும் அடக்கும் வரம் பெரும் அவன் தனக்கு எந்த விதத்திலும் சாவு வரக் கூடாதென வரம் பெறுகிறான்.ஆனால் கன்னிப் பெண்ணால் மரணம் வரக் கூடாது என்பதை மட்டும் கேட்கத் தவறுகிறான்.அந்த பொயிண்டின் அடிப்படையில் கன்னிப் பெண்ணாகத் தவம் இருக்கும் சக்தி அவனை வதம் செய்து பூ உலகை ரட்சிக்கின்றாள்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 33 1997 இல் மெல்பனில் நடந்த வெள்ளிவிழா உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம்... முருகபூபதி

 .

உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம்... முருகபூபதி




                                                                     
எழுத்துலகப் பிரவேசம் செய்து இருபத்தியைந்து வருடகாலம் நெருங்கிய வேளையில் 1997 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.

அதுவரையில் (  1972 – 1997 )  எழுதியவற்றை திரும்பிப் பார்த்தேன்.  இரண்டு கதைத் தொகுதிகளும்                                                    ( சுமையின் பங்காளிகள் – சமாந்தரங்கள் ) ஒரு பயண இலக்கியம் ( சமதர்மப்பூங்காவில் ) ஒரு கட்டுரை நூல்                                   ( நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ) ஆகியன மாத்திரமே வெளியிட்டிருந்தேன்.

மற்றும் ஒரு தொகுதிக்கு தேவைப்பட்ட சிறுகதைகள் இருந்தன. அவை இலங்கை வீரகேசரி , தினகரன்,  மல்லிகை,  பிரான்ஸ் பாரிஸ் ஈழநாடு, ஓசை , லண்டன் ஈழமுரசு, அவுஸ்திரேலியா மரபு ,  அக்கினிக்குஞ்சு,  கலப்பை  ஆகியனவற்றில் வெளியாகியிருந்தன.

அத்துடன் பிரான்ஸிலிருந்து வெளியான தமிழன் இதழிலும் பாட்டி சொன்ன கதைகள் என்ற தொடரும் வெளிவந்திருந்தது.  இதனையும் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் வெளியிடலாம்  என்ற எண்ணம் மனதில் துளிர்த்தது.

பிரான்ஸிலிருந்து அப்போது பாரிஸ் ஈழநாடு வெளியிட்டுக்கொண்டிருந்த நண்பர் குகநாதனிடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன்.  அவர் கதைகளை தொகுத்து, சென்னையில் ஒரு பதிப்பாளருக்கு அனுப்பச்சொன்னார். தொகுதிக்கு இயந்திரங்கள் என்ற தலைப்பினை வைத்து தபாலில் அந்தப்பொதியை தமிழகத்திற்கு அனுப்பினேன்.

பாட்டி சொன்ன கதைகள் தொகுப்பினை மல்லிகை பந்தல் வெளியீடாக்கும் எண்ணத்தில் மல்லிகை ஆசிரியர் நண்பர் டொமினிக் ஜீவாவுக்கு அனுப்பினேன்.

அத்துடன், அதுவரையில் வெளியான நான்கு நூல்கள் பற்றியும் இலக்கிய விமர்சகர்கள் இதழ்கள், ஊடகங்களில் எழுதியிருந்த விமர்சனங்களையும் தொகுத்து,  மெல்பன் மரபு ஆசிரியர் நண்பர் விமல் அரவிந்தனிடம் சேர்ப்பித்து, கணினியில் பதிவேற்றி  பக்கம் வடிவமைத்து தருமாறு கோரியிருந்தேன்.

இறுதியில் குறிப்பிட்ட பாட்டி சொன்ன கதைகள் தொகுப்பும், முருகபூபதியின் படைப்புகள் என்ற விமர்சனத் தொகுப்பும் அச்சாகி வெளிவந்தன.

தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட கதைகள் அச்சாகவில்லை. கதைகளும் தொலைந்துவிட்டது.  அதற்காக நான்  வருந்தவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கையில், பொது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து,  கடந்து வந்து பக்குவப்பட்ட அனுபவத்துடன்,  “ ஒரு பஸ் போனால் மற்றும் ஒரு பஸ் வரும்  “ என்று என்னை நானே தேற்றிக்கொள்ளும் இயல்பும்  இன்றளவும் என்னிடம் குடியிருக்கிறது.

அதனால்தான், தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வில்,  எழுத்துலக வாழ்வில் என்னோடு இணைந்து வந்தவர்கள் முரண்பட்டுக்கொண்டு விட்டுச்சென்றாலும்,  சற்றுக்கவலையும் ஏமாற்றமும் வந்தாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு எழுந்துவிடுவேன்.

வெற்றிடம் வந்தால்,  அவ்விடத்திற்கு நிரப்பும் வேலையை கச்சிதமாகச் செய்துவிடும் பழக்கத்தை பாடசாலையில் ஆங்கிலப்பாடத்தில் கற்றுக்கொண்டேன்.

அந்தப்பாடத்தை Fill in the blanks என்பார்கள்.  தமிழிலும் அத்தகைய பாடங்கள் இருந்தன. இடைவெளி நிரப்பும் பாடம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல , பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !! முருகபூபதி


சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                    கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார்.

அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.

 “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத்  தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ?  “ எனக்கேட்டேன்.

 “ இது குதர்க்க வாதம்  “ என்றார் மனைவி.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில்


கல்கியின் பொன்னியின் செல்வன், நான் வதியும் ஆஸ்திரேலியாவில் மெல்பன் திரையரங்கிற்கு  இம்மாதம் 30 ஆம் திகதி வந்ததும்,  அதனை கதையாக இதுவரையில் படித்திராத, அதனை எழுதிய எழுத்தாளர் கல்கி பற்றி எதுவித குறிப்புகளும் அறியாத 1980 இற்குப்பின்னர் பிறந்த எனது இரண்டு  மகள்மாரும் மற்றும் இரண்டு பெறாமகள்மாரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னை தனித்தனியாக அழைத்தனர்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல் பிரதேச  திரையரங்கில், இதற்கு முன்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப்படவில்லை.  அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மருத்துவரான ஒரு பெறாமகள்,  “ அங்கிள், பொன்னியின் செல்வன் பார்ப்போம் வாருங்கள்  “ என்றார்.

 “ மெல்பன் நகருக்குள் வசிக்கும் எனது மூத்த மகள் அழைத்துவிட்டாள்,  அவளுடன் மெல்பனில் பார்க்கச்செல்கிறேன் “  என்றேன்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் திரைப்படம் எங்கள் குடும்பத்திற்குள் கொண்டாடப்பட்டது.

இதற்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன், 2009 ஆம் ஆண்டளவில் எங்கள் வீட்டில் தமது துணைவியார் அருண்மொழியுடன் தங்கி நின்றபோது, மற்றும் ஒரு எழுத்தாளரும் வந்திருந்தார். அவர் இலங்கையிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.

ஜெயமோகன்,  ஆர்யா நடித்த நான் கடவுள் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய காலப்பகுதியில் வந்திருந்தார்.  தெளிவத்தை ஜோசப்  வி. பி. கணேசன் தயாரிப்பில்  முன்னர் வெளியான புதிய காற்று திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர். இத்திரைப்படத்தில் மனோகணேசனும், அவரது தம்பி பிரபா கணேசனும்  குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருப்பர்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்கள் அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் இலாகா, குடிசன மதிப்பீடு 2021 தொகுப்பு: தளையசிங்கம் ரவீந்திரன், கான்பெரா, அவுஸ்திரேலியா

முக்கிய அம்சங்கள்

2021 குடிசன மதிப்பீட்டின்படி அவுஸ்திரேலியாவில் 95,404 தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 30.4 சத வீதமாக அதிகரித்துள்ளது.

விக்டோரியா குயீன்ஸ்லாந்து மற்றும் தாஸ்மேனியா மாநிலங்கள் சராசரிக்கும் அதிகமான வளர்ச்சியை 2021 இல் பதிவு செய்துள்ளன.

2021ல் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களின் விகிதாசாரம் 42.5 சத வீதமாகவும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்களின் விகிதாசாரம் 29.6 சத வீதமாகவும் உள்ளது.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர். இதே சமயம் அவுஸ்திரேலிய சனத்தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்;.

இந்து சமயமே தமிழ் பேசும் மக்களுள் முதன்மை இடத்திலுள்ள சமயநெறியாகும் (73.2 சத வீதம்). அடுத்ததாக கிறிஸ்தவமும் (16.8 சத வீதம்) இஸ்லாமும் (4.5 சத வீதம்) உள்ளன.

தமிழ் பேசும் மக்களில் 65.9 வீதமானோர் அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்டுள்ளார்கள். இதே சமயம் மொத்த சனத்தொகையில் சுமார் 84 சத வீதமானோர் அவுஸ்திரேலிய குடியுரிமை உடையவர்களாவர்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்கள்

ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை The Mystique of Kelani River இம்மாதம் 08 ஆம் திகதி மெய்நிகரில் வெளியீடு


கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் அரங்கம் பத்திரிகையில் முன்னர் தொடராக வெளிவந்த  எழுத்தாளர் முருகபூபதி எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை,  2021 ஆம் ஆண்டு கொழும்பு குமரன் புத்தக இல்லத்தினால்  நூலாக வெளியிடப்பட்டது.

இந்நூலுக்கு அரங்கம் ஆசிரியர் சீவகன் பூபாலரட்ணம் அணிந்துரை எழுதியிருந்தார்.

கொழும்பை ஊடறுத்து ஓடும் களனி கங்கையின் கரையோரம் நிகழ்ந்த அரசியல், பொருளாதார,  சமூக மாற்றங்களை கதைபோன்று சித்திரித்த இந்த நூலை, அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மொழிபெயர்ப்பாளர் திரு. நூர் மஃரூப் முகம்மட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பினை தற்போது அமேசன்


கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

நூர் மஃரூப் முகம்மட்,  ஏற்கனவே முருகபூபதியின் சில ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை Colombo Telegraph இணைய இதழிலும் வெளியாகியிருக்கின்றன.

அத்துடன் நூர் மஃரூப் முகம்மட்,   கவியரசு கண்ணதாசனின் வனவாசம் நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எனினும் பதிப்புரிமை விவகாரங்களினால், இந்நூல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது.

The Mystique of Kelani River  என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் நடந்தாய் வாழி களனி கங்கை நூல் ஒக்டோர்  மாதம் 08 ஆம் திகதி ( 08-10-2022 ) சனிக்கிழமை,  அவுஸ்திரேலியா நேரம் இரவு 8-00 மணிக்கும்  இலங்கை – இந்திய நேரம் பிற்பகல்  2-30 மணிக்கும்  இங்கிலாந்து நேரம் முற்பகல் 10– 00 மணிக்கும்   மெய்நிகரில் வெளியிடப்படும்.

மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான கலாநிதி லயனல் போப்பகேயின்  தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில்  எழுத்தாளரும், சமூகப்பணியாளருமான திரு. எஸ். சுந்தரமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்துவார்.  சட்டத்தரணிகள் திருமதி நிவேதனா அச்சுதன், ஆரூரண் ரவீந்திரன், மற்றும்  திருமதி றிஸானா சுபைர் சக்கரியா,  மொழிபெயர்ப்பாளர் திரு. நூர் மஃரூப் முகம்மட் ஆகியோர் உரையாற்றுவர்.

மூல நூலின் ஆசிரியர் திரு. முருகபூபதி நன்றியுரை நிகழ்த்துவார்.

காவிய காலத் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' இலங்கையில் வெளியீடு

 Sunday, October 2, 2022 - 2:22pm

- கோலிவுட்டில் அறிமுகமாகும் இலங்கையர் ஷாம் பெனாண்டோ

பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மிக பிரமாண்டமான காவியத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ ஆகும்.

இது 1,000 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற தமிழ் வரலாற்று புனைக்கதையை திரையில் காட்டும் ஒரு முயற்சியாகும். இது செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் இலங்கையில் திரையிடப்பட்டுள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 ஆம் ஆண்டு நாவலைத் தழுவி அதே தலைப்புடன் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, ஆர். சரத்குமார், இலங்கையைச் சேர்ந்த ஷாம் பெனாண்டோ உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒஸ்கார் விருது நாயகன் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்

 தொல்பொருள் திணைக்களம் மீது தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டு

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கரையோர பாதுகாப்பில் ஆஸி. முதலீடு

இலங்கை - இந்திய உறவு மேலும் பலப்படுத்தப்படும்

சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்திப்பு

இலங்கையில் முதலீடு செய்ய தயாராகிறது அதானி நிறுவனம்


தொல்பொருள் திணைக்களம் மீது தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டு

திருமலை நீதிமன்றில் திணைக்களத்துக்கு எதிராக வழக்கு

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு நீண்ட காலமாக இடம் பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆஜராகிய பின் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

 உக்ரைனின் 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்தது ரஷ்யா

வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

இந்தோனேஷியா கால்பந்து போட்டி வன்முறை; இதுவரை 174 பேர் மரணம்

இயன் புயலால் அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

 ரஷ்யப் பாடசாலையில் சூடு; ஒன்பது பேர் பலி


உக்ரைனின் 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்தது ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் தெற்கில் இருக்கும் ஸபோரிஷியா, ஹெர்சன் ஆகியவற்றைச் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரித்துள்ளார்.

ரஷ்ய எல்லையோரம் உள்ள டோனெஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களோடு இந்த இரண்டு பிராந்தியங்களையும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.