மரண அறிவித்தல்

 .

வானொலி மாமா நா.மகேசன் 



வாழ்தென்பது வரமாகும் !









மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேர்ண் ….. அவுஸ்திரேலியா 




 வாழ்த்தும் மனமிருந்தால்  வையகமே பார்க்கும் 
 மனமகிழ்வு  மனநிறைவு வந்துமே சேரும் 
 மனவுழைச்சல்  மனவுடைவு மறைந்துமே போகும்
 மனவமைதி மனமலர்ச்சி வந்துமே நிறையும் 

இருக்கின்ற காலம் எவருக்கும்  தெரியாது
இறக்கின்ற காலமும் எவருக்கும் தெரியாது
வாழ்கின்ற காலத்தில் வண்ணமுற வாழ்வோம்
வாழ்த்ததனை வாழ்வில் வழங்கியே மகிழ்வோம் 

ஓடித்தேடி யெங்குமே அலைந்துலய வேண்டாம் 
ஒருவார்த்தை உள்ளமதில் எழுந்தாலே போதும் 
வாழ்த்தென்னும் வார்த்தையினை வரவழைத்து விட்டால்
வரவேற்பும் கெளரவமும் வந்துமே குவியும் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 68 தொடர்பாடலில் எதிர்நோக்கப்படும் சிக்கல்கள் ! கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவில் சந்தித்த ஆளுமைகள் முருகபூபதி


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஜூன் மாதம் 04 ஆம்  நடந்த மண்டபத்திற்கு,  நண்பர் பாலச்சந்திரன் என்னையும், இந்த விழாவுக்காகவே மெக்ஸிக்கோவிலிருந்து வருகை தந்திருந்த எனது பெறாமகள் செல்வி லாவண்யா ஶ்ரீதரனையும் அழைத்து வந்தார்.

எம்முடன் வந்தவர் பாலச்சந்திரனின் துணைவியார் ராஜி.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அந்த விழாவில் பலரையும் சந்திக்க முடிந்தது. அன்றுதான் முதல் முதலில் எனது அன்பிற்கும் அபிமானத்திற்குமுரிய எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களையும் நேருக்கு நேர் பார்க்க முடிந்தது.

எனது பெயர் இயல்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, நான் தெரிவாகியிருக்கின்றேன் என்ற செய்தியை முதலில் சொன்னவரும் அவர்தான். அவரைத் தொடர்ந்து காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தனும் அச்செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார்.

காலம் செல்வம் அவர்களையும் 2007 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அன்றுதான்  பார்க்கின்றேன்.

காலம் இதழில் அவ்வப்போது எழுதியிருக்கின்றேன்.

எனது பெறாமகள் லாவண்யா,  மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகை. ஒரு சமயம் அவர் உயிருடன் இருந்த காலப்பகுதியில் தனது அப்பா ஶ்ரீதரனுடன்              ( எனது உடன் பிறந்த தம்பி ) சென்று சந்தித்து பேசியிருக்கிறாள்.

பாலசுப்பிரமணியத்தின் திடீர் மறைவு லாவண்யாவையும் மனதளவில் பெரிதும் பாதித்திருந்தபோது,  ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தாள். அவள் ஆங்கிலத்தில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுபவள். பெரும்பாலும் தனது முகநூலில் அவற்றை பதிவேற்றியும் வருபவள். எஸ். பி. பி. மறைந்தபோது அவள் எழுதிய அந்த ஆங்கிலக் கட்டுரையை கனடாவில் நீண்ட காலமாக பதிவுகள் இணைய இதழை நடத்திவரும் நண்பர் கிரிதனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதனை வெளியிட்டிருக்கிறார்.

25-06-2023 அன்று ஆனி திருமஞ்சனம், மாணிக்கவாசகர் குருபூஜை விழா மற்றும் திருவாசகம் முற்றோதல்

Aani Thirumanjanam

&

ManikkaVaachagar Guru Pooja Festival

& Thiruvachagam Mutrothal

on

Sunday the 25th of June 2023



 "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
  
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"

லலிதா சஹஸ்ரநாம ஹோமம் - 25 ஜூன் 2023 - சிட்னி துர்கா கோவில்


 




பெரிய இடத்துப் பெண் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழில் ஆயிரக் கணக்கில் படங்கள் வெளிவந்த போதும் சில


படங்களின் கதைகள் ரசிகர்களை கவர்ந்து , அக் கதைகள் மீண்டும் மீண்டும் படமாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றே வந்துள்ளன. அப்படிப் பட்ட ஒரு கதையை கொண்டு உருவான படம் தான் பெரிய இடத்துப் பெண். படம் வெளியாகி அறுபது ஆண்டுகளாகிய போதும் இன்றும் இப் படத்தின் கதை ரசிகர்களின் கவனத்தில் எதோ ஒரு படம் மூலம் நினைவில் இருந்த வண்ணமே உள்ளது.


எம் ஜி ஆரின் நடிப்பில் , படத்தின் இறுதியில் கதாநாயகன் இறப்பது

போல் காட்டி பாசம் என்ற தோல்வி படத்தை தயாரித்து இயக்கிய டி ஆர் ராமண்ணா , அந்த தோல்வியில் இருந்து சுதாரித்துக் கொள்ள உருவாக்கிய ஜனரஞ்சக படம் இது. ஆனால் குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டே படம் உருவானது.

கிராமத்தில் குடுமி வைத்து, வீடுண்டு, மாடுண்டு என்று தன் ஒரே அக்காளுடன் வாழ்ந்து வரும் முருகப்பன் , அதே ஊரில் வாழும் செல்வந்தர் கைலாசபிள்ளையின் எதிர்ப்புக்கு உள்ளாகிறான். அவரின் மகள் புனிதத்தின் தந்திரத்தால் தான் மணக்க இருந்த தில்லை , புனிதத்தின் அண்ணன் சபாபதியை மணக்க , என்றாவது ஒரு நாள் உன்னை நான் மணப்பேன் என்று புனிதத்திடம் சபதம் செய்கிறான் முருகப்பன். ஆனால் கைலாசபிள்ளையின் சதியால் அவன் வீடு எரிக்கப் படுகிறது. அக்காள் கங்கையம்மாள் களங்கப்படுத்தப் பட்டு காணாமல் போகிறாள். எல்லாவற்றையும் இழந்து பட்டணம் போகும் முருகப்பன் தன் நண்பன் பிச்சாண்டி மூலம் நவநாகரீக மனிதனாகி புனிதத்தை கல்யாணம் செய்து தன் சபதத்தை நிறைவேற்றுகிறான்!

படத்தில் கிராமத்தானாகவும், பட்டணவாசியாகவும் வரும் எம் ஜி ஆர் ஒரு கலக்கு கலக்கி இருந்தார். பிற்படுத்தப் பட்ட மக்களின் கோயில் பிரவேசத்துக்கு குரல் கொடுக்கும் போதும் , சாட்டையடியில் இருந்து ஒரு தொழிலாளியை காப்பாற்றும் போதும் எழுச்சியுடன் அவர் நடிப்பு மிளிர்கிறது. அதே போல் அக்காளை பிரிந்து துடிக்கும் போதும், குழந்தையை பார்க்க ஏங்கும் போதும் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார். அதே போல் பாடல் காட்சிகளில் அவருடைய ஆட்டம், முகபாவம் எல்லாம் ஜோர்!

பெரிய இடத்துப் பெண்ணாக , திமிர் பிடித்தவளாக வரும் சரோஜாதேவி, ஆரம்பத்தில் குமரியாக அலட்சியத்துடனும் , பின்னர் தாயாகி , கணவன் அன்புக்கு ஏங்கும் பெண்ணாகவும் நிறைவாக நடித்திருந்தார். நாகேஷ் இல்லாவிட்டால் படமே இல்லை என்பது உண்மை. அவர் நடிப்பு சூப்பர். அசோகன் காட்டும் முறைப்பும், விறைப்பும் கவனத்தை கவர்கிறது. ஒரு காலத்தில் கவர்ச்சி காட்டி நடித்த டீ ஆர் ராஜகுமாரியின் நடிப்பு மென்மை. அதே சமயம் பிற் காலத்தில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்த ஜோதிலட்சுமிக்கு இதுவே முதல் படம். இவர்களுடன் மணிமாலா, ஆர். எம் சேதுபதி, கொட்டப்புளி ஜெயராமன், ஆகியோரும் நடித்தனர். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் மகன் கோலப்பன் இந்தப் படத்தில் அறிமுகமானார்.

இலங்கைச் செய்திகள்

 இன நல்லிணக்கம் ஏற்பட நாட்டு மக்களது சிந்தனை மாற வேண்டும்

குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை

600 சுற்றுலாப் பயணிகளுடன் அதிசொகுசுக் கப்பல் வந்தது

நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது குறித்து பேச்சு

குருந்தூர்மலை, திரியாய் பகுதி விகாரைகளுக்கு காணி ஒதுக்கீடு?


இன நல்லிணக்கம் ஏற்பட நாட்டு மக்களது சிந்தனை மாற வேண்டும்

- அந்த மாற்றத்தை ஏற்படுத்த முன்வருமாறு நீதியமைச்சர் அழைப்பு

நாட்டிலுள்ள அனைவரும் எமது சகோதரர்களென்ற சிந்தனை ரீதியான மாற்றம் ஏற்படும்வரை நாட்டில் அபிவிருத்தி மற்றும் மனித வாழ்க்கைக்கான பாதுகாப்புத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால், இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

 கிரேக்கத்தில் குடியேறிகள் படகு மூழ்கியதில் 79 பேர் உயிரிழப்பு

 கிரேக்க படகு விபத்து: உயிரிழப்பு பல நூறாக அதிகரிக்கும் அச்சம்

நீதிமன்றில் குற்றச்சாட்டை மறுத்தார் டொனால்ட் ட்ரம்ப்

உக்ரைனிய ஜனாதிபதியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அறுவர் பலி

 3 கிராமங்களை மீட்டதாக உக்ரைன் படை அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் பதில் படை நடவடிக்கை ஆரம்பம்


கிரேக்கத்தில் குடியேறிகள் படகு மூழ்கியதில் 79 பேர் உயிரிழப்பு

100க்கும் அதிகமானோரை மீட்ட சொகுசுக் கப்பல்

தெற்கு கிரேக்கத்தின் கடற்கரைக்கு அப்பால் குடியேறிகளை ஏற்றிய மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 79 பேர் உயிரிழந்ததோடு 100க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் ஒரு மாத காலத்துக்கு மேலாக ஓயாத வன்முறைகள்!

 Sunday, June 18, 2023 - 11:14am

இந்தியாவின் மணிப்பூரில் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் 40 நாட்களாக நிகழ்த்தப்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் சேர்க்கக் கோரி இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை.

கடன் பொறியால் இலக்கு வைக்கப்படும் இந்திய பெருங்கடல்!

 Thursday, June 15, 2023 - 5:16pm

இலங்கையில் சீனா மேற்கொண்டு வரும்  முதலீடுகள் அண்மைய காலங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டிருக்கிறது. இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்கு சீனா கணிசமான நிதி முதலீடுகளை செய்துள்ளது. துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக முதலீட்டை செய்துள்ள சீனா இலங்கையுடன் பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களை அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், இந்த முதலீடுகளால் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முற்னேற்றங்கள்  மற்றும் நன்மைகள் குறித்த சர்ச்சைகள்  தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு சீனாவிடமிருந்து பெறப்பட்ட வெளிப்படைத் தன்மைகளற்ற கடன்களும் காரணமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமுள்ளன.

சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் - ஆடிப்பூரம் தேர்த் திருவிழா ஜூலை 22, 2023 - ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் ஜூலை 12, 2023 தொடங்குகிறது.



ஆடி துர்
க்கா தேவிக்கான மாதம், இந்த மாதத்தில் பல கொண்டாட்டங்கள் உள்ளன. துர்க்கா தேவி மக்களை ஆசீர்வதிப்பதற்காக இவ்வுலகிற்கு வந்ததன் கொண்டாட்டமாக, ஆடிப் பூரம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம் ஜூலை 12 முதல் 22 வரை 2023 - நிகழ்ச்சி 

12/07/2023 புதன்கிழமை 

ஆடிப்பூரம் ஆரம்பம் நாள்-1 

மாலை 05.30 மணி விநாயகர் பூஜை 

இரவு 07.30 வசந்த மண்டப பூஜை 

இரவு 08.00 மணி விநாயகர் ஊர்வலம் 

‘முரளி 800’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய இரு அவுஸ்திரேலிய நடுவர்களாக பிரிட்டன் நடிகர்கள்

 Sunday, June 18, 2023 - 10:48am

- திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட 800 திரைப்படத்தில் டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகிய இரு அவுஸ்திரேலிய நடுவர்களின் கதாபாத்திரத்தில் இரு பிரிட்டன் நடிகர்கள் இடம்பெற்றிருப்பதாக அந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கும் எம்.எஸ் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.

சட்டப் பிரச்சினைகளை தவிர்த்தப்பதற்காக அந்த இரு ஆஸி. நடுவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை என்று இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் அதிகம் பிரபலம் இல்லாதபோதும் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் பில் ஹேஸ்ட் மற்றும் போல் கொஸ்டா ஆகிய நடிகர்களே இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

“நட்சத்திர நடிகர்களுக்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்புகளும் பூர்த்தியாகிவிட்டன. இந்தத் திரைப்படம் தயாராவதற்காக இசை, செளண்ட் அபெக்ட் மற்றும் விசுவல் அபெக்ட் பூர்த்தியாகும் வரை நாம் காத்திருக்கிறோம்.

எவ்வாறாயினும் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் திரைப்படம் வெளியிடப்படும்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சி இந்தியாவில் படம்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் முரளியில் 800ஆவது விக்கெட் இந்தியாவுக்கு எதிராகவே வீழ்த்தப்பட்டது.

படப்பிடிப்புகள் இலங்கை, சென்னை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டன” என்று ஸ்ரீபதி அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

முரளியின் திருமண தொடர்பான் நிகழ்வுகள் சென்னையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. முரளி 2005ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி சென்னையைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தியை திருமணம் செய்தார்.

“மதியின் கதாபாத்திரத்தில் இந்திய நடிகை மஹிமா நம்பியார் நடிப்பதோடு முரளியின் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டால் நடிக்கிறார்.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித் தலைவர் அர்ஜுன் ரணதுங்க, இந்தியா முன்னாள் வீரர் கபில் தேவ் மற்றும் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களின் கதாபாத்திரங்களில் ஆசிய நாடுகளைச் சோர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதில் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொக்ஸின் தின டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு பணிக்கு நோ போல் பிடித்தார். அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரிலும் இது நிகழ்ந்தது. அப்போது நடுவர் ரோஸ் எமர்சன் முரளியின் பந்துக்கு நோபோல் பிடித்ததோடு முரளி லெக் பிரேக் பந்துவீசியபோதும் நோபோல் காட்டினார்.   நன்றி தினகரன்