மில்லியன் மக்கள் பேரணிக் கவிதை

.
குறிப்பு - அமெரிக்காவில் வசித்த பத்து இலட்சத்துக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் வாஷிங்டன் டீ.சி.யில் ஒன்று கூடி தமது உரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே 'Million Man March' என அழைக்கப்படுகிறது. 1995.10.16 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியானது, அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை நடைபெற்றிருந்த மக்கள் ஒன்றுகூடல்களிலும் பார்க்க, விசாலமானதாக அமைந்திருந்தது. 

இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

தொலைதூர சமுத்திரக் கரைதனில்
மரித்துப் போன நீல ஆகாயத்தின் கீழ்
நீங்கள் எட்ட இயலாத் தொலைவில்
கூந்தலால் பிடிக்கப்பட்டு நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்
உங்கள் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன
உங்கள் வாய்கள் கட்டப்பட்டிருந்தன
குறைந்தபட்சம் உங்களால்
எனது பெயர் கூறி அழைக்கக் கூட
இடமளிக்கப்படவில்லை
எந்தவொரு ஆதரவுமற்ற நீங்களும்
என்னைப் போலவே
ஆனால் துரதிர்ஷ்டவசமாக
வரலாறு முழுவதும் நீங்கள்
அவமானம் எனும் அடையாளத்தைச் சுமந்தபடி

மீண்டும் சொல்கிறேன்
இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

என் பார்வையில் எந்திரமாலை - கலா ஜீவகுமார்

.
கடந்த சனிக்கிழமை Engineers foundation சிட்னி கிளையினரால் நடாத்தப்பட்ட எந்திரமாலை எனும் நிகழ்வைக் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. இந்த நிகழ்வானது , Blacktown  Bowman ஹால் இல் சரியாக மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகியது. வழமை போல தலைவர் திரு தெய்வேந்திரன் , உப தலைவர் ஆகியோர் மங்கள விளக்கேற்ற திருநாவுக்கரசு சிறிதரன் தனக்கே உரித்தான பாணியில் அதிகம் அலட்டிக்கொள்ளாது அழகாக நிகழ்வைத் தொடக்கி வைத்தார். எந்திரமாலை மௌனாஞ்சலியுடன் ஆரம்பித்தது.

Engineers foundation 2007 ம் ஆண்டு தற்போதைய நடப்பு ஆண்டு தலைவர் திரு தெய்வேந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 7 வருடங்களாக பல துயர் துடைப்பு பணிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆற்றி வருகிறது என்பது இங்கு குறிபிடத்தக்கது. அவற்றில் சில என் மனதில் நிற்பவைகளை உங்களுக்குத் தருகின்றேன்.
cataract கண் சிகிச்சை ,செயற்கை கால் பொருத்துதல், துவிச்சக்கர வண்டிகள் வழங்குதல் , வாழ்வாதார வழிகளை பெண்களுக்கு வகுத்துக் கொடுத்தல் , மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பண உதவி, அனாதை சிறுவர் இல்லங்களுக்கு உதவி எனப் பல வழிகளில் நம் மக்களுக்கு உதவி புரிகின்றனர்.

நல்லூர் முருகன் மஞ்சம் பக்தர்கள் நிறைந்த திருவிழா 10 08 2014

.


சுவேதா மோகனுடன் செ .பாஸ்கரன் ஒரு கலந்துரையாடல்

.

அவுஸ்ரலியா வரவிருக்கும் சுவேதா மோகனுடன்  அவுஸ்ரலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் செ .பாஸ்கரன் ஒரு கலந்துரையாடல் .ஒலி  வடிவை கேளுங்கள்.

ஸ்ரீ காயத்ரி



அப்பாச்சிக்கு அஞ்சலியாக அமைந்த இசை நிகழ்ச்சி

.
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


முத்துப்பிள்ளை சின்னத்தம்பி டாக்டர் கந்தராஜாவின் தாயார் அவரது முதலாவது சிரார்த்த தினத்திற்கு வாரிசுகளின் அஞ்சலி. ஆமாம் வாரிசுகளானால் இப்படி அல்லவா  இருக்க வேண்டும் என்பது போல அமைந்தது அஞ்சலி நிகழ்ச்சி. தந்தை டாக்டர் கந்தராஜா எழுத்தாளர். ஈழத்து எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை வகிப்பவர். பேரக் குழந்தைகளோ இசைக் கலைஞராக  ஆஸ்திரேலியா மண்ணில் வாழ்பவர்கள்.

நிகழ்ச்சி நடை பெற்ற இடம் சிட்னி பஹாய் சென்டர். நிகழ்ச்சியின் ஆரம்பமாக பிரதம அதிதியாக வந்தவர் முது பெரும் எழுத்தாளர் ஜாம்பவான் எஸ் பொன்னுத்துரை டாக்டர் கந்தராஜவிற்கும் தனக்குமான அறிமுகத்தைக் கூறி கந்தராஜாவின் எழுத்துத் துறையில் தாம் குரு சீடனாகவும், நண்பராகவும் பழகுவதாகவும் கூறி ஆசிமல்கியது மட்டும் அல்லாது ஆசி கந்தராஜாவின் ஆக்கங்களைப் பற்றி கூறி அவரது இரு நூல்களையுமே மேலோட்டமாக அறிமுகம் செய்தார். ஆசி கந்தராஜவுக்கு இலங்கை சாகித்திய பரிசு சில வருடங்களுக்கு முன் கிடைத்ததை கூறி இதுவரை தனக்கு கிடைக்காததையும் கூறினார். அளப் பெரிய சேவையை தமிழுக்கு செய்த செம்மல் எஸ் போ அவர்கள் தமிழ் உள்ளவரை அவரது இலக்கிய சேவை போற்றப்படும். இதை நன்கு அறிந்த அவர் தமிழனின் மானத்தை ராஜபக்சவிடம் அடமானம் வைக்க மறுத்ததையும் கூறினார். மண்டபம் நிறைந்த கூட்டம் கரகோஷம் செய்தது.

Yesudas Program - 23 August - Townhall

.


தேரடியில் தேசிகனைக் கண்டேன்! - கானா பிரபா

.


சிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.

எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது " வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட" என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் " நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி" என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி "அப்பூ" என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.

பல்லின கலாசார வாழ்வின் வலிகளும் சவால்களும் சாதனைகளும் - ரஸஞானி

.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய சமூகத்தின் கதை பகிர்வு நிகழ்வு
        
                                                                                        
அவுஸ்திரேலியா குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் விளங்குகின்றமையினால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு புகலிடம் பெற்று வாழ்பவர்கள் மத்தியில் சொல்லவேண்டிய கதைகளும் சொல்ல முடியாத கதைகளும் சொல்லத்தயங்கும் கதைகளும் சொல்ல மறந்த கதைகளும் ஏராளமாக இருக்கின்றன.
புகலிடம் பருவகால மாற்றம் தொழில் வாய்ப்பு கல்வி தலைமுறை இடைவெளி மனச்சிக்கல்கள் மொழிப்பிரச்சினை குடும்ப உறவுகள் முதியோர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உணவு நாகரீகம் நட்பு வட்டம் இன அடையாளம் கலாசார மாற்றங்களும் பிரழ்வுகளும் என இன்னோரன்ன விவகாரங்கள் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வனுபவங்களில் சஞ்சரிக்கின்றன.
அவற்றை ஒவ்வொருவரும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர். சந்திக்கும் சவால்கள் சாதனைகள் கனவுகள் முதலானவற்றை தனிமனிதப்பார்வையிலும் சமூகப்பார்வையிலும் பகிர்ந்துகொள்ளும் வித்தியாசமான நிகழ்வினை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் 16 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் நடத்தியது.

உலகச் செய்திகள்


தம்மால் கைதியாக பிடிக்கப்பட்டவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள்

சிரியாவில் இரு பெண்களுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலிய பெருமித உணர்வு

ஈக்குவடோரை உலுக்கிய பூமியதிர்ச்சி இருவர் பலி; 8 பேர் காயம்

பிரேசிலின் ஜனாதிபதி வேட்பாளர் விமான விபத்தில் மரணம் - 3 நாள் தேசிய துக்க தினம் பிரகடனம்


சங்க இலக்கியக் காட்சிகள் 20- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

ஆடவர் இயல்பும், அரிவையர் தவிப்பும்.


தலைவன் பொருளீட்டி வருவதற்காகத் தலைவியைப் பிரிந்து வேற்றூர் சென்றுவிட்டான். அவனது பிரிவு அவளை வெகுவாக வருத்துகிறது. இயல்பாகவே இயற்கைக் காட்சிகளை இரசிப்பதிலே விருப்பமுடையவள் தலைவி. அவ்வாறு விருப்பத்தோடு அவள் இரசித்து மகிழ்ந்த, அவளின் ஊரின் அழகிய காட்சிகள் எல்லாம் இப்போது தலைவன் இல்லாத தனிமையிலே அவள் அனுபவிக்கும் பிரிவுத்துயரைச் சுட்டிக்காட்டி அவளை வருத்துவதாக அவளுக்குத் தோன்றுகிறது.

அவளின் ஊரிலே தேன்கூடுகள் நிறைந்த மலை ஒன்று உள்ளது. அங்கே வட்டவடிவமான ஒரு கற்பாறையுள்ளது. அதனைச் சுற்றித் தெளிவான நீர் நிறைந்திருக்கிறது. கற்பாறைக்கு அப்பால் தூய்மையான பட்டுப்போன்ற மணல்வெளி உள்ளது. நீர் ஓடிக் கரையடைவதால் உண்டான அடைகரை அது. அந்த மணல்நிலப் பரப்பிலே மணம் வீசுகின்ற மாமரங்கள் நிறைந்துள்ள சோலை ஒன்றுண்டு. மாமரங்களிலே இலைகள் அடர்த்தியாகச் செறிந்து உள்ள கிளைகளிலே அழகிய கண்களையுடைய கரியநிறக் குயில்கள் தங்கியிருக்கின்றன. அவை இனிமையாகக் கூவுகின்றன. ஆனால் சும்மா கூவவில்லை. எதையோ சொல்லிக் கூவுவதுபோல அவளுக்குத் தோன்றுகின்றது.  அவை என்ன சொல்லிக் கூவுவதைப்போல அவளுக்கு இருக்கிறது தெரியுமா?

மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

.

              படைப்பிலக்கியவாதியும்   பத்திரிகையாளருமான   மெல்பனில்   வதியும்   திரு. லெ.   முருகபூபதியின்   புதிய    புனைவிலக்கிய  கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த   கதைகள்  நூல் வெளியீட்டு   அரங்கு   எதிர்வரும்   23-08-2014           ஆம்  திகதி சனிக்கிழமை  மாலை   மணியிலிருந்து    மணிவரையில்   மெல்பனில்  Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria - 3175)   மண்டபத்தில்  நடைபெறும்.
கலை, இலக்கிய   ஆர்வலர்   திரு. கந்தையா  குமாரதாசன்   தலைமையில் நடைபெறவுள்ள  சொல்ல   மறந்த   கதைகள்  நூல்  தமிழ்  நாடு  மலைகள் பதிப்பகத்தின்   வெளியீடாகும்.
இலங்கை - தமிழக - அவுஸ்திரேலியா - கனடா   மற்றும்   ஜெர்மனியில் வெளியாகும்   இதழ்கள்  -  இணைய   இதழ்கள்   ஆகியனவற்றில்   பதிவான படைப்புகளின்   தொகுப்பு   சொல்ல  மறந்த  கதைகள்.    இலங்கையில் நீடித்த   போர்க்காலத்தில்   அரசியலிலும்   மூவீன    மக்களிடத்திலும்   ஏற்பட்ட மாற்றங்களையும்   ஒரு    ஊடகவியலாளனின்   மனிதநேய   -  மனித உரிமைப் பார்வையில்    இலக்கிய   நயமுடன்   பதிவுசெய்த   புதிய    தொகுப்பு   நூல் சொல்ல மறந்த கதைகள்.
1972  காலப்பகுதியில்  படைப்பு   இலக்கியம்   மற்றும்   பத்திரிகைத்துறையில் பிரவேசித்த   முருகபூபதியின்   இருபதாவது   நூல்   சொல்ல  மறந்த கதைகள்.    அன்பர்களும்  கலை,  இலக்கிய  ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும்  அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு : முருகபூபதி
மின்னஞ்சல்: letchumananm@gmail.com  தொலைபேசி எண்கள்: 04 166 25 766
                       ---0---

"சொல்ல மறந்த கதைகள்" லெ.முருகபூபதி கானா.பிரபாவுடன்

.

"சொல்ல மறந்த கதைகள்" நூல் வெளியீடு குறித்து எழுத்தாளர் லெ.முருகபூபதி வழங்கும் நேர்காணல்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகப் பேட்டியை கானா.பிரபாவுடன் பேட்டியை வழங்கியிருந்தார்.





இலங்கைச் செய்திகள்


யாருக்குப் பின்னால் யார்?

சப்ரகமுவ பல்கலை மாணவன் தன்னைத்தானே தாக்கியுள்ளார் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வைத்தியசாலை ஊழியர்கள் நாளை பணிபகிஷ்கரிப்பு

சார்க் அமைப்பின் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

விசாரணை அறிக்கை நம்பகமாக அமையும்

130 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலரை வைத்திருந்தவர்கள் கைது

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் மீது கல்வீச்சு

பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முயன்ற கடற்படை வீரர் மக்களால் மடக்கிப் பிடிப்பு

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

'தொழிலுக்கு துரோகம் செய்ததில்லை'- பாரதிராஜாவை கதறவைத்த 'முதல் மரியாதை' அனுபவத்தைப் பகிர்ந்த இளையராஜா

.

அஸ்வின், சிருஷ்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'மேகா' படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது. அக்காட்சி தொடங்கும் முன் இளையராஜா கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அச்சந்திப்பில் இளையராஜா பேசும்போது, "முதல்ல என்கிட்ட வரப்போ, எப்படி இருந்தாங்களோ.. இன்றைக்கு எப்படி இருக்காங்களோ.. அப்படிங்கிற ஆட்கள் நிறைய இருக்காங்க. அதுபற்றி ஒரு வருத்தமும் இல்லை, குறையும் இல்லை. அவன் பிரம்மாவாவே இருக்கட்டும். நமக்கு என்ன நஷ்டம்" என்றார்.
பேச்சை சற்று நிறுத்தியவர், இயக்குநர் கார்த்திக் ரிஷியை அழைத்து, " 'மேகா' முதல் ரீல் ரீ-ரிக்காடிங் முடிஞ்ச உடனே உங்களுக்கு எப்படியிருந்தது?" என்று கேட்டார். அதற்கு, "படம் நல்லா எடுத்திருக்கோம் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன். முதல் ரீல் ரீ- ரிக்காடிங் உடன் பார்த்த உடனே இது நான் எடுத்த படமா அப்படினு இருந்தது" என்று கூறினார் கார்த்திக்.
பின்னர் உடனே பேச்சைத் தொடர்ந்த இளையராஜா, "இப்படித்தான் எல்லா இயக்குநர்களுக்கும் கூறுவார்கள். நான் எடுத்த படமா என்று இயக்குநர் கூறினார் அல்லவா. அப்படித்தான் இருந்தது படமும். எவ்வளவோ படங்களுக்கு பின்னணி இசை பண்ணியிருக்கேன். நீங்கள் ஒரு தடவை பார்த்து 'த்தூ' என்று துப்பிய படத்தை எல்லாம் நான் 4 தடவை பார்த்து பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு நாள் பின்னணி இசை இல்லாமல், ரீ-ரிக்காடிங் பண்ணும் போது இப்படி 4 தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா.

நல்லூர் கந்தனின் 15ம் நாள் திருவிழாவின் காட்சி 15.08 2014

.


கோவையில் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் படத் திறப்பு விழா

.
கோவை : கோவையில் இந்திய சுதந்திர தினத்தின் 68 ஆவது ஆண்டையொட்டி இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தியாகிகளின் படத் திறப்பு விழா 14.08.2014 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ரேஸ் கோர்ஸில் நடைபெற இருக்கிறது.

ஐக்கிய சகோதரத்துவ அமைப்பு,லயன்ஸ் 324 B 5 மாவட்டம், கோயம்புத்தூர் விங்க்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து புனித கைலாச மெய்கண்டர் பேரூர் ஆதினம், சிரவை ஆதீனம் கௌமராமடாலயம், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், சிறுதுளி, ரிதம், லீட் இந்தியா 2020, ராக், டாஸ்க், யூத் பௌண்டேஷன் உள்ளிட்டவை இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தியாகிகள் படக் கண்காட்சியில் இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட 126 தலைவர்களின் படங்கள் வைக்கப்பட உள்ளன.

விழாவிற்கு ஐக்கிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் வி. நந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

கோயமுத்தூர் நகர காவல்துறை ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் ஐபிஎஸ் தியாகிகளின் படத்தை திறந்து வைக்கிறார்.

நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். 

திரையில் ஒளிர்ந்த தேசபக்தி -சுதந்திரத்துக்கு முன்பே காந்தி திரைப்படம்

.

இந்திய சினிமா தோன்றியதற்கும் தேசபக்திக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆங்கில ஆட்சியின் கீழ் நமது நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டத்தில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய பல வெளிநாட்டுப் படங்களை, தாதாசாகேப் பால்கே பார்த்தார். அப்படங்கள் தந்த உத்வேகத்தில் ஒரு இந்தியக் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என நினைத்தார். அந்தக் கதை ‘ராஜா ஹரிச்சந்திரா’.
ஆனால் படம் தயாரிப்பதில் பால்கேவுக்குப் பொருளாதார ரீதியில் பல விதமான சிக்கல்கள் வந்தன. இதை அறிந்த சுதந்திரப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர் அவருக்கு உதவ முன்வந்தார். அந்நாளில் செல்வாக்குடன் இருந்த தொழிலதிபர்கள் பலரையும் பால்கேவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் ஒத்துழைப்புடன் பால்கே இந்துஸ்தான் ஃபிலிம் கம்பெனியை உருவாக்கினார். இந்தியர் ஒருவர் சொந்தமாகப் பட நிறுவனத்தைத் தொடங்குவதே அன்றைய நாளில் ஒரு பெரும் புரட்சிதான்.
இதேபோல் தென்னிந்தியாவில் சென்னை மாகாணத்தில் நடராஜ முதலியாரும் இந்தியன் ஃபிலிம் கம்பெனி என்ற பெயரில் ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை 1917-ல் தொடங்கினார். இப்படியாக இந்திய சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மக்கள் மத்தியில் தேசிய விடுதலை உணர்வைத் தூண்டி வந்தது.
காந்தியக் கொள்கைகளை, விடுதலை உணர்வை, ஜாதி, மதப் பாகுபாடுகளுக்கு எதிரான குரல்களை அன்றைய சினிமாக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் அராஜகத்தையும் அன்றைய கலைஞர்கள் தங்கள் படங்களின் மூலம் பலவிதத்தில் வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டினர்.

தமிழ் சினிமா


சரபம்

Tamil shooting spotசரபம்
சமீபகாலமாக த்ரில்லர் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வருகின்றன. வளர்ந்து வரும் நட்சத்திரங்களையோ, புதுமுக நட்சத்திரங்களையோ வைத்து அம்மாதிரியான படங்களை குறைந்த செலவில் எடுப்பது வழக்கமாகி வருகிறது. இப்படி வெளிவந்த ஒரு சில படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து பலரும் இம்மாதிரியான படங்களை உருவாக்கி வருகிறார்கள். அப்படி வெளிவந்துள்ள படம்தான் இந்த 'சரபம்'. நகைச்சுவை நடிகர் அனுமோகனின் மகன் அருண் மோகன் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். 

Tamil shooting spotசரபம்
 'சரபம்' என்பது புராண காலத்தில் இருந்த விலங்குகளில் ஒன்றாம். பாதி உடல் பறவையாகவும், மீதி உடல் சிங்கமாகவும் இருக்குமாம். அன்பு கொண்ட நெஞ்சத்துடனும், அதே நேரம் ஆக்ரோஷமான உணர்வுடனும் இருப்பதுதான் இந்த மிருகத்தின் தனித் தன்மையாம். அப்படிப் பார்க்கப் போனால் இந்தப் படத்தில் 'சரபம்' ஆக இருப்பது படத்தின் நாயகி 'சலோனி லுத்ரா'தான். இவரைச் சுற்றித்தான் படத்தின் மொத்த கதையும் நகர்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாயகியை மையப்படுத்தி வந்துள்ள கதை. 
Tamil shooting spotசரபம்

 தமிழ் சினிமா, அடுத்த கட்டத்திற்குப் பயணிக்கிறது என்கிறார்கள். ஆமாம், இந்தப் படத்தைப் பார்த்தால் அதைக் கண்டிப்பாகப் புரிந்து கொள்ளலாம். படத்தின் நாயகியான சலோனி அறிமுகக் காட்சியிலேயே போதை மருந்தை உட் கொள்கிறார். அதன் பின் அடிக்கடி சிகரெட் பிடிக்கவும் செய்கிறார். அட, தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்குப் பயணிக்கிறது. ஒரு பக்கம் நாயகர்கள் படத்தில் புகை பிடிப்பதை வன்மையாகக் கண்டிக்கும் சமூக அமைப்புகள் இப்படிப்பட்ட காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெறுவதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். வித்தியாசம் என்ற பெயரில் இன்றைய தலைமுறை படைப்பாளிகள் தவறான பாதையில் போவதாகவே நமக்குப்படுகிறது. 

Tamil shooting spotசரபம்

 ஆர்க்கிடெக்ட் ஆக இருக்கும் நவீன் சந்திரா ஒரு புதிய தீம் பார்க்கை வடிவமைத்து பிரபல பிசினஸ்மேனான நரேனின் கம்பெனிக்காக அது பற்றிய திட்டத்தை சமர்ப்பிக்கிறார். ஆனால், அப்போது நரேன், நவீன் சந்திராவை அவமானப்படுத்தி, அந்த திட்டமே வேண்டாமென்று சொல்லி விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் நவீன், நரேனை எதையாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார். குடிபோதையில் அவர் வீட்டருகே சென்று எதையாவது செய்யலாம் என்று நினைப்பவர், வீட்டை விட்டு எகிறி குதித்து வரும் நரேனின் மகள் சலோனியைப் பார்த்து விடுகிறார். அவரைப் பின் தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்து அவர் வீட்டை விட்டு ஏன் வெளியேறினார் எனக் கேட்கிறார். அப்பா நரேன் என்றாலே பிடிக்காது என சலோனி காரணத்தைக் கூற, இருவருக்கும் அந்த சமயத்தில் பொதுவான எதிரியாக இருக்கும் நரேனை எதிர்க்க முடிவெடுக்கிறார்கள். அந்த எதிர்ப்பின் வடிவம்தான் கடத்தல் நாடகம். தன்னைக் கடத்தி நாகடமாடுவதின் மூலம் அப்பாவிடமிருந்து பணம் பறிக்கலாம் என சலோனி ஐடியா கொடுக்க, இருவரும் அதை செயல்படுத்துகிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி பணம் கிடைத்ததா, அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை. 
Tamil shooting spotசரபம்

 'பிரம்மன்' படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த நவீன் சந்திராதான் இந்த படத்தின் நாயகன். ஆறடி உயரத்தில் அப்பாவித்தனமான முகத்துடன் விக்ரம் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் இப்படி நடித்திருக்கிறார், அப்படி நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். அப்படி எதுவுமில்லாமல் ஒரு சராசரியான படித்த இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்க பெரும் மெனக்கெடல் தேவையில்லை. அப்படியே வந்து போனாலே போதும், அதைத்தான் செய்திருக்கிறார் நவீன். அதற்குக் காரணம் இவருடைய கதாபாத்திரத்தின் வடிவமைப்புதான். ஆரம்பத்தில்ல ஹீரோயிசமான கதாபாத்திரம் போல் காட்டிவிட்டு, போகப் போக அவருடைய கதாபாத்திரத்தை 'டம்மி'யாக்கி விட்டார்கள். போதாதற்கு , ஒரு காட்சியில், “நான் சரியான எதிரி கூட மோதலன்னு நினைக்கிறேன்” என நரேன் ஒரு வசனம் பேசி, ஹீரோவின் கதாபாத்திரத்தை அப்படியே காலி செய்து விடுகிறார். திரும்பவும் இவர் வெகுண்டெழுந்து அடுத்த கடத்தலைச் செய்ய, கடைசியில் கிளைமாக்சில் கை கட்டி நின்று வேடிக்கைப் பார்க்கிறார். அப்படி ஒரு முரண்பாடான கதாபாத்திரம் ஹீரோவின் கதாபாத்திரம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நவீன்...'சிவப்பு' படத்திற்காக காத்திருப்போம்.
Tamil shooting spotசரபம்


 போதை மருந்து உட் கொள்ளுதல், சிகரெட் பிடித்தல் ஆகிய காட்சிகளுக்கு நடிக்க சம்மதித்ததால்தான் சலோனி லுதராவை நாயகியாக்கியுள்ளார்கள் போல. சும்மா சொல்லக் கூடாது, அவரும் அந்த தெனாவட்டு, திமிர், அலட்சியம் இவற்றை அப்படியே அட்சர சுத்தமாக செய்திருக்கிறார். படத்தில் சலோனி 'டபுள் ஆக்ஷன்' என்பது எதிர்பாராத திருப்பம் என்றாலும், அதை திருப்பத்திற்கு மேல் திருப்பமாகச் சொல்லி ஒரு கட்டத்தில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறார்கள். இவர் அப்பாவை எதிர்ப்பதற்கான காரணங்கள் வலுவாகச் சொல்லப்படவில்லை. அப்படி ஒரு போதை பழக்கத்திற்கு ஆளாகவும் என்ன காரணம் என்பது சொல்லப்படாதது அந்த கதாபாத்திரம் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. படமே இவரைச் சுற்றி நகரும் போது, இவருக்குக் கொடுக்க வேண்டிய அறிமுகக் காட்சியை வைக்காமல், ஹீரோவுக்கு ஒரு பில்டப் கொடுத்து அறிமுகக் காட்சியை வைத்திருக்கிறார்கள்.  

Tamil shooting spotசரபம்

அப்பாவாகவும், வில்லனாகவும் 'ஆடுகளம்' நரேன். சாதாரணமாகவே இவரது குரல் கரகரவென இருக்கும். இந்தப் படத்தில் இன்னும் கரகரவென 'கம்மி' குரலில் பேச வைத்திருக்கிறார்கள். மிகவும் பாசமான அப்பா போல என நாம் எதிர்பார்த்தால் இவருக்கும் ஒரு ட்விஸ்ட் வைத்து சரியான வில்லன் எனக் காட்டுவது எதிர்பாராத அதிர்ச்சி. 
Tamil shooting spotசரபம்
படத்திற்கு இசை பிரிட்டோ மைக்கேல். எங்கே சைலண்ட்டாக விட்டால் படத்தைப் பற்றி ரசிகர்கள் கமெண்ட் அடித்து விடுவார்களோ என இடைவிடாமல் வாசித்துத் தள்ளியிருக்கிறார். அதிலும் கடைசி 20 நிமிடம் துளி கூட இடைவெளியில்லாமல் இசைத்துத் தள்ளி காதைக் கிழித்திருக்கிறார். பின்னணி இசை என்றால் என்ன என்பதை புதியவர்களுக்கு யாராவது புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.  
Tamil shooting spotசரபம்
படத்தின் மையக் கரு ஆள் மாறாட்டம். கதைப்படி சந்திரசேகரின் (நரேன்) இரண்டு மகள்களில் ஒருவரான ஸ்ருதி நல்லவர், சஞ்சனா கெட்டவர். ஆனால் இறந்து போன ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் 'சரபம்' டாட்டூவை வைத்து இறந்தது ஸ்ருதியா, சஞ்சனாவா என்று அப்பாவுக்கும், காவல் துறைக்கும் எப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனது ?. 

 'சரபம்' - ''சர..சர..சறுக்கல்...!!''

நன்றி தினமலர் சினிமா