வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் அலங்கார உத்சவம்

.

கெலன்ச்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற அலங்கார உத்சவம் மிக அற்புதமாக அமைந்தது. பக்தர்கள் நிறைந்து காணப்பட்டார்கள் . அங்கு இடம்பெற்ற வீதி உலா காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

அவுஸ்திரேலியா டொலர் ஏறிக்கொண்டே போகின்றது

.
அவுஸ்திரேலியா டொலர் ஏறிக்கொண்டே போகின்றது. வெகுவிரைவில் அமெரிக்க டொலருடன் சமமாக வரலாம். ஆனால் இந்த ஏற்றம் நீண்ட நாட்களுக்கு நிற்கப்போவதில்லை. அவுஸ்திரேலியா டொலரின் உண்மையான பெறுமதயை விட 30 வீதம் அதிகப்படியாக ஏறியுள்ளதாக கருதப்படுகிறது.
1982ம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக 99.18 அமெரிக்க டொலராக ஏறியிருந்தது. வருடமுடிவில் இந்த டொலர் 1.02 அமெரிக்க டொலராக ஏறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னியில் பரிசளிப்பு விழா 2010

.


அவுஸ்ரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 10வது ஆண்டிலிருந்து அவுஸ்ரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் சிட்னியில் மட்டும் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். மேலும் அவுஸ்திரேலிய-நியூசிலாந்தின் மற்ற ஐந்து மாநகர்களில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன. சிட்னி தவிர மற்ற மாநகர்களிலிருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றினர்.

East Meet West பார்த்து ரசித்த நிகழ்வு

.
                    நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

அண்மையில் Bankstown  மண்டபத்தில் நடந்தேறிய நிகழ்ச்சி. பேருக்கு ஏற்ப முதல் பாதி East பின்பாதி West . மேற்க்கத்திய சூழலில் வளர்ந்த ஜனனி பரதத்தையும் அதே நேரம் Western Hippop போன்ற நடனங்களையும் கற்றவர். இவரே இன் நிகழ்ச்சியை நடத்தியவர். இவருக்கு துணையாக நான்கு ஆசிரியைகள். இவர்களும் ஜனனி போன்றே East நடனமான  பரதத்தையும் West  Hippop யாவும் கற்றவர்கள். ௦ 150 மாணவ மாணவியரை மேடை ஏற்றினார்கள்

அரசனின் பள்ளிக்கூடம்




                                                                                                                      அ . முத்துலிங்கம் 

எத்தனை முறை சொன்னாலும் என் மகனைத் திருத்த முடியாது. அவனுக்கு எட்டு வயது, மகளுக்கு நாலு. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன் எசமானன், அவள் வேலைக்காரி. இவன் மேசையிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். வேலைக்காரி வீடு கூட்டினாள். பின்னர் சமையல் அறையை சுத்தமாக்கினாள். இவன் வயிறார சாப்பிட்டுவிட்டு கதிரையை பின்னாலே தள்ளிவிட்டு எழுந்து சென்றான்.  அவள் கோப்பையை கழுவினாள்.

இந்த மாதமும் வரி உயர்த்தப்படவில்லை

.
எதிர்பாராதவிதமாய் இந்த மாதமும் வட்டி வீதம்  உயர்த்தப்படவில்லை.
வட்டி வீதத்தை ஏற்றாமல் 4.5 வீதத்தில் விட்டுவிட்ட மத்திய வங்கியின் முடிவு வீட்டுக் கடன் வைத்திருப்போர் எல்லோருக்கும் மனநிம்மதியைக் கொடுத்தது. இந்த மாதம் மத்திய வங்கி கட்டாயம் வட்டி வீதத்தை உயர்த்தும் என எதிர் பார்த்த போதும் உயர்த்தாதது ஆச்சரியத்தையே  கொடுத்துல்ளது. அடுத்த மாதம் கட்டாயம் உயரும் என கருதப்படுகிறது.

பீங்கான் நாரைகள் சிறுகதை

.                                                                                
                                                                                    எஸ் .இராமகிருஸ்ணன்



தனது பதினேழாவது வயதில் அம்மா ஒரு நாள் சமையல் செய்து கொண்டிருந்த போது அப்பா பர்மாவிலிருந்து கொண்டுவந்திருந்த தேநீர் கோப்பையை கைதவறி உடையவிட்டதில் இருந்துதான் இப்படி தரையை வெறித்து பார்த்தபடியிருக்கிறாள் என்கிறார்கள். அப்போது நாங்கள் பிறக்கவேயில்லை. அந்த தேநீர் கோப்பை சீனா களிமண்ணில் தயாரிக்கபட்டது அதில் இரண்டு நாரைகளின் உருவம் தங்கநிற சித்திரமாக தீட்டப்பட்டிருந்தாக அப்பா சில முறை சொல்லியிருக்கிறார். அநேகமாக திருமணமான புதிதில் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அப்பா அந்த தேநீர் கோப்பையை வாங்கி கொண்டு வந்திருக்க கூடும். சம்பவம் நடந்த அன்று அம்மா சூடான தேநீரை  கோப்பை நிறைய ஊற்றியதால் கையில் எடுக்க முடியாமல் தவறி கிழே போட்டிருக்கிறாள்.

கவிதைகள்

.
 * வாணி நீ அருள்வாய்
 *இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்


இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்

அன்பின் சுந்தரம்

நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன
ஏழை வானத்தின் கீழ்
அந்தகார இரவு
முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது
ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே
எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென
உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி
அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு

தமிழ் சினிமா

@  தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் எந்திரன்: சினிமா விமர்சனம் 1
 @  தீபாவளிக்கு எத்தனை படங்கள்..?
@   எந்திரன் விமர்சனம் 2


 தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் எந்திரன்: சினிமா விமர்சனம்.
( இரு வேறுபட்ட பார்வைகளை இங்கே  தருகின்றோம் நேயர்களே )

ரசிகர்கள், சினிமா விரும்பிகளின் தேடலுக்கும் பசிக்கும் சரியான மெகா விருந்து எந்திரன்.

படத்தில் ரஜினியின் பங்களிப்பைப் பாராட்டுவதா, ஷங்கரின் அசுர உழைப்பைப் புகழ்வதா... ஐஸ்வர்யா ராயின் இதயம் வருடும் அழகை வர்ணிப்பதா..இப்படி, விமர்சனம் எழுதுபவர்களுக்கு சவால்விடும் சமாச்சாரங்கள் ஏராளம். இந்தப் படத்தின் மையக் கருவை ரொம்ப சிம்பிளாக ஒரு வரியில் சொல்வதென்னால்.. விஞ்ஞான படமாக இருந்தாலும் பக்கா ஜனரஞ்சகமான ஒரு கமர்சியல் படம்தான் எந்திரன்.

தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது


.
HSC பரீட்சை எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகிறது. பல்கலைக்கழக அனுமதிக்கான தேர்வாக இது இடம்பெறுகின்றது. இந்த தேர்வில் தமிழும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டிருப்பதை ஒஸ்ரேலியா வாழ் தமிழர்கள் நன்கு அறிவார்கள். தமிழுக்கான பரீட்சை 19ம் திகதி வியாழக்கிழமை இடம் பெறுகின்றது. சிட்னி மெல்பெனில் இருந்து பல மாணவர்கள் இப் பரீட்சைக்கு செல்கின்றார்கள் இவர்கள் அனைவரும் சிறந்த புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தி அடைய தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது.

உலகச் செய்திகள்

.
@  ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரராக சச்சின் டெண்டுல்கர்.
 @ கனடாவை நோக்கி அகதிகளுடன் இன்னும் ஒரு கப்பல்?

 ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரராக சச்சின் டெண்டுல்கர்


சர்வதேச கிரிக்கட் பேரவையின்(ஐ.சி.சி) ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வென்றெடுத்துள்ளார்.

இந்தியாவின் பெங்களுரில் இன்று மாலை இடம்பெற்ற 2010ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுவழங்கும் விழாவிலேயே சச்சினுக்கு இந்த உயர் விருது கிடைத்துள்ளது. சாதனைகளால் நிறைந்த சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கட் வாழ்;வில் இந்த விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

பிரசாந்த் செல்லத்துரைக்கு வாழ்த்துக்கள்

.
இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு இலங்கைத் தமிழ் மகன். இவரின் பெற்றோர் 1983 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்தனர். இருபத்தி நான்கு வயது நிரம்பிய இந்த தமிழ் மகன் ஆஸ்திரேலியாவின் Gymnaastic அணியுடன் தற்போது புது டெல்லியில் நிகழ்ந்து வரும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் பங்கு கொண்டு Gymnastic கிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது எமது இலங்கைத் தமிழருக்கு ஒரு பெருமை சேர் நிகழ்வாக அமைகின்றது.

இவர் இதுவரை பெற்ற பதக்கங்களின் பட்டியல் பின் வருமாறு.
·         Commonwealth Games 2010 ( Delhi ): Gold
·         World Championships 2009 ( London ): Bronze
·         World Artistic Gymnastics Championships 2006 ( Aarhus ): Silver

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 09

.


ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட இலட்சுமி நாணயத்தில் சில வட இலங்கையில் வெளியிடப்பட்டன. அவற்றில் இந்து சமய சின்னங்களாகிய திரிசூலம், மயில், இடபம், சுவஸ்திகம் ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.



அநுராதபுர காலப்பகுதியில் இப்பகுதியில் இருந்த தமிழ் பிரதானிகள் வேளாண்மையின் விருத்தியின் பொருட்டு பல குளங்களை அமைத்தார்கள் என்பதை அறிய முடிகிறது. வன்னிப் பகுதியில் உள்ள பல குளங்கள் தனியாரின் பெயர்களைக் கொண்டவையாக இருந்துள்ளன. வேறு சில இராமநாதபுரம், மதுரை, கன்னியகுமாரி மாவட்டங்களில் உள்ள சில குளங்களின் பெயர்களை ஒத்தவையாகும்.



பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி - டெல்லி 2010

.
திறப்பு விழா படங்கள் 

ஆன்மீகம்

.
Download Thirumali...jpg (64.5 KB)
திருமழிசை ஆழ்வார்
வாசகர்கள்  எல்லோரையும் மீண்டும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி.  சென்ற வாரம் முதல் ஆழ்வார்களை பற்றி பார்த்தோம், இந்த  வாரம் அடுத்த ஆழ்வாரான திருமழிசை ஆழ்வாரை பற்றி காண்போம்.
முன் ஒரு காலத்தில் அத்திரி, ஆங்கிரசர், வஸிஸ்டர், பார்கவர்  முதலிய சப்த ரிஷிகள்  மண்ணுலகில் தவம் புரிய மேலான இடம் யாது ? என்று  பிரஹ்மாவிடம்   வேண்டினர், அதர்க்கு  நான்முகனும்  அவர்களுக்கு சென்னை அருகில் உள்ள

மருத்துவம்

.
கற்ப மூலிகை உத்தாமணி!(காயா கற்பம்).. நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்கி என்றும் இளமையுடன் வாழ வழிகண்டனர் சித்தர்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ முடியும். இன்றைய காலகட்டத்தில் 20 வயது இளைஞன் கூட தலைமுடி நரைத்து, 40 வயதைத் தாண்டியவர்போல் காட்சியளிக்கிறான். இந் நிலைக்கு முக்கிய காரணம் உணவு முறை மாறுபாடும், போதிய உடல் உழைப்பும் இல்லாததுதான். இத்தகைய நிலை மாற சித்தர்கள் தங்களின் தவப்பயனால் மனிதன் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்கி என்றும் இளமையுடன் வாழ வழிகண்டனர். அதுதான் காயகற்பம். பழங் காலத்தில் இந்த காயகற்பத்தைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக நீண்டநாள் வாழ்ந்தனர்.

முத்தேவியரும் அருள்பாலிக்கும் நவராத்திரி விழா

.
 உற்றார் உறவினர்கள்
என் உற்றவர் அல்லர் தாயே
உன்னை அல்லாது மற்றார்
யாரும் துணையில்லையே! - சுவாமி கெங்காதரானந்தா

ஸ்ரீ துர்க்காதேவி – புகழ், உயர்வு, மங்களம், சுகம் மோட்சம் ஆகியவற்றை அருள்பவள்.

.
துர்க்கையம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா


08 .10 2010 வெள்ளிக் கிழமை முதல் 17 .10. 2010 ஞாயிற்றுக்கிழமை வரை
தினந்தோறும் 5 மணிமுதல் ஹோமம் அபிஷேகம் என்பன நடைபெறுகின்றது. 

முதல் மூன்று நாட்கள் துர்கா தேவிக்கும்
அடுத்த மூன்றுகாட்கள் லஷ்மி தேவிக்கும்
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும்
விசேட ஹோமம் அபிஷேகம் என்பன நடைபெறுகின்றது.

13.10.2010 புதன் கிழமை 7.30 மணிக்கு விளக்குப்பூசை
17.10.2010 ஞாயிற்றுக்கிழமை வித்தியாரம்பம் ழாலையில் வாளைவெட்டு திருவிழா
இந்த ஒன்பது நாட்களும் விசேட இசை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றது.