‘கோதை’ நடன நிகழ்ச்சி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

26, August 2023, BRYAN BROWN THEATRE-இல் ‘கோதை’ என்ற தலைப்பில் கார்த்திகா மனோகரன் பரத நாட்டிய நிகழ்வை நடத்தியிருந்தார். கோதை என்பது பெரியாழ்வார் தன் மகளுக்கு இட்டப் பெயர். பெரியாழ்வாரின் செல்வ மகள் கண்ணனில் பிரியமுள்ளவளாக வளர்பவள். கண்ணனுக்குத் தொடுத்த மலர் மாலையை தானே அணிந்து அழகுபார்க்கிறாள். சிறுமி பெரியவளாக வளர்ந்தவள், கண்ணனில் ஆழக் காதல் கொள்கிறாள். அவளையே மணாளனாகக் கொள்ளத் துடிக்கிறாள். அவனது வாய் அமுதை அனுபவிக்கத் துடிக்கிறாள். திருமாலின் கரத்திலே எப்பொழுதும் ஒட்டி உறவாடும் சங்கைக் கேட்கிறாள்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.

 

வைணவ பக்தியிலே மேலோங்கி இருப்பது ‘மதுர பக்தி.’ பக்தர் தம்மைப் பெண்ணாக வரித்து இறை மேல் காதல் கொண்டு, அவனையே அடையத் துடிக்கும் காதலியாகத் தம்மை பாவனை செய்து வெளிப்படுத்துவதே ‘மதுர பக்தி’. ஆண் பக்தர்கள் உருகி உருகிப் பாடினாலும் ஒரு பெண்ணின் விரகத்தை உணர முடியாத பாவனையே அவை.

ஆனால் ஆண்டாள் ஒரு பெண்ணாக தன் காதலால் அவனை அடையத் துடிக்கும் பாடல்களை உணர்ந்து உருகி உருகிப் பாடுகிறார். அதனால்தான் அவரது மதுர பக்தி யாவரையும் விஞ்சி நிற்கிறது.

கோதை நாச்சியார் ஒரு புனிதமான பக்தை. கண்ணனையே மணவாளனாகக் கலந்தவள். ஆன்மீக உறவிலே மதுர பக்தியின் உச்சத்தைத் தொட்டு நிற்பவை அவள் பாடல்கள். கண்ணன் கனவிலே தன்னை மணந்தான் எனக் கொண்டாள். அவள் கனாக் கண்ட வரிகள்,

 

‘கதிரொளி தீபம் கலச முடனேந்தி

சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனா கண்டேன் தோழி நான்’

 

மதுரையார் கண்ணன் அடிநிலையைத் தொட்டு உடம்பெல்லாம் அதிரும்படி புகுந்தானாம். கண்ணன் கலந்த இந்த உடலை வேறொருவன் தொடக் கூடாது என்பதே இதன் அர்த்தம்.

 

தந்தை உள்ளம் படைத்த அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! 03.09.2023

 .

அப்பா என்னை தோளில் சுமந்தீர்கள் 

நான் உங்கள் தோளில் அமர்ந்திருந்தேன் 

இன்று நான் உங்களை நெஞசில் சுமக்கின்றேன் 

இனிய நினைவாய்  இருக்கிறீர்கள் 

செ .பாஸ்கரன் 



யா/ராமநாதன் கல்லூரியின் "ஸ்வர சாகரம்" 09 SEP 2023 சனிக்கிழமை

 .



அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார் !

 .

அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார்  !

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
        மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 பெற்றிடுவாள் அன்னை பெருதுவப்பார் அப்பா
 உற்ற துணையாகி உழைத்திடுவார் அப்பா 
 கற்பனைகள் நிறைத்து கனவுகாண்பார் அப்பா
 காலமெலாம் எம்மைச் சுமந்திடுவார் அப்பா 

கைபிடுத்து எம்மைக் குருசேர்ப்பார் அப்பா
கற்பவற்றை கற்க கையணைப்பார் அப்பா
கல்வியென்னும் பயிரில் களையெடுப்பார் அப்பா
கற்றவரின் அவையில் அமருவென்பார் அப்பா

வளர்ச்சியினைக் கண்டு மனமகிழ்வார் அப்பா
தளர்ச்சியினைக் கண்டால் தாங்கிடுவார் அப்பா 
விளைச்சலினை நோக்கி அழைத்திடுவார் அப்பா
விகற்பநிலை வந்தால் விலக்கிடுவார் அப்பா

பொய்யென்னும் கருவைப் பொசிக்கிடுவார் அப்பா
பொறாமையெனும் நினைப்பைப் போக்கிடுவார் அப்பா
மெய்யென்னும் கருவை விதைத்திடுவார் அப்பா
மேதினியில் வாழ்வின் விளக்காவார் அப்பா  

நல்லநட்பை நாளும் நாடச்செய்வார் அப்பா
நல்லறிஞர் பெருமை நயந்துரைப்பார் அப்பா 
எல்லையில்லா அன்பை ஈந்துநிற்பார் அப்பா
இனிமையிலா நட்பை எடுத்தெறிவார் அப்பா

வறியநிலை கண்டால் வதங்கிடுவார் அப்பா
நெறிபிறழ்ந்த வாழ்க்கை நினைவிருத்தார் அப்பா
அறமுரைக்கும் வள்ளுவம் அகநிறைப்பார் அப்பா
அரைக்கணமும் வரம்பைக் கடந்துவிடார் அப்பா

இலக்கியத்தை இங்கிதத்தை எனக்குரைப்பார் அப்பா
இலக்குவிட்டுப் போகாது காத்திடுவார் அப்பா
சமயநெறி தத்துவங்கள் போதிப்பார் அப்பா
சன்மார்க்க வழியினிலே கூட்டிச்செல்வார் அப்பா 

நான்விரும்பும் அத்தனையும் செய்திடுவார் அப்பா
தான்விரும்பும் நல்லவற்றை எனக்களிப்பார் அப்பா
வானிறங்கும் மழைபோல வழங்கிடுவார் அப்பா
வாழ்நாளில் தெய்வமாய் விளங்குகிறார் அப்பா 

நோய்நொடிகள் அணுகாமல் வைத்தியராய் இருப்பார்
நோய்வந்தால் அதைத்தீர்க்கும் மருந்தாயும் இருப்பார்
உண்ணுகின்ற அத்தனையும் ஒழுங்காக்கி நிற்பார்
உடலுளத்தை மனமிருத்தி ஒழுங்கமைப்பார் அப்பா 

வரமாக வாய்த்திட்ட மகவென்று சொல்வார்
வாழ்வினிலே பெற்றிட்ட செல்வமெனப் புகழ்வார்
நிலமீது மலர்ந்திட்ட பெருவாழ்வே என்பார்
நெஞ்சினிலே எனையிருத்தி கொஞ்சிடுவார் அப்பா 

பட்டம் நான்பெற்றேன் பலபதவி வகித்தேன்
பலபேரும் மதித்திடவே பாங்குடனே வாழுகிறேன்
பக்குவமாய் என்னை பாதுகாத்தார் அப்பா
பக்கத்தில் இல்லாமல் படமிருந்தே பார்க்கின்றார் 

அப்பாக்கள் அனவருக்கும் அருமருந்து ஆவர்
அவரிழமை அத்தனையும் அர்ப்பணித்தார் எமக்கு
அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார் 
அவரன்பை அவர்பணியை அகமிருத்தி வாழ்வோம் 

பயணியின் பார்வையில் – 02 உலகத்தில் “ சுத்தமான “ தலைவர் அமிர் ? ! - முருகபூபதி

 .

ஊடகப் பயணத்தில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம் !


இலங்கையில்  அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது உரைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கின.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக  அப்போது ஒரு தமிழர் எதிர்க் கட்சித்தலைவராக தெரிவாகியிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளை சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் துணைவியாரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து செவிமடுத்து , அமிர் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

ஒரு தடவை  வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். மீது தொடர்பாக ஏரிக்கரை இல்லம்  ( Lake House )  வெளியிட்ட  ஒரு செய்தி பாரதூரமான சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்.  அவரை நாடாளுமன்றம் அழைத்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது.

அதனைக் கண்டித்து, அந்தச்  சிங்கள சிரேஷ்ட ஊடகவியலாளருக்காக குரல் கொடுத்தவர் அமிர்தலிங்கம்.  அவர் மூவினத்தையும் சேர்ந்த  ஊடகவியலாளர்களிடம் நன்மதிப்பினைப் பெற்றிருந்தவர். 

நான் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் அமிர் அவர்களுடன் நெருக்கமாக உறவாடியவர் நண்பர் அன்டன் எட்வேர்ட். தினமும் இவர் எழுதும் செய்திகள் முன்பக்கத்தில் வெளிவரும்.

இவரது செய்திகள் பெரும்பாலும் அரசியல் சம்பந்தப்பட்டிருக்கும்.  இலங்கை அதிபர்  ஜே. ஆர். ஜெயவர்தனா, பிரதி பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி  மற்றும்  எதிர்க்கட்சித்தலைவர்  அமிர்தலிங்கம் ஆகியோர் சம்பந்தப்பட்ட  செய்திகளை எழுதும் பொறுப்பு அன்டன் எட்வேர்ட்டுக்கு வழங்கப்பட்டிருந்தது. மும்மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடியவர் அன்டன் எட்வேர்ட்.  பல அரசியல் தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பிலிருந்தவர்.

அவர்களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா,  தொண்டமான், லலித் அத்துலத் முதலி, அமிர்தலிங்கம், வெ. யோகேஸ்வரன், விஜயகுமாரணதுங்க, ரோகண விஜேவீர  மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் தெல்கொட ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு அன்டன் எட்வேர்டை கேட்கும்போது,  அந்த அழைப்பினைப்பெற்று அன்டனை அழைத்து தொலைபேசி ரிஸீவரை கொடுத்திருக்கின்றேன்.

மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர்  அண்மையில் அன்டன் எட்வேர்டை இங்கிலாந்தில் சந்தித்தேன். அவரது இல்லத்தில்  ஒருநாள் பொழுது இனிமையாக கழிந்தது. அவரும் அவரது துணைவியாரும் என்னை அன்போடு உபசரித்தனர். இவர்களுடன்தான்  கடந்த 23 ஆம் திகதி லண்டனில் நடந்த ஒரு திருமண வைபவத்திற்கும் சென்றேன்.

Krishna Jeyanthi Wednesday 06th September 2023 - Sydney DurgaTemple

 .



பாக்தாத் பேரழகி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

1960ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் இளம் நட்சத்திர நடிகர்களாகத் திகழ்ந்தவர்கள் ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடி. இவர்கள் இணைந்தது நடித்த குமரிப் பெண், நான், மூன்றெழுத்து , பணக்காரப் பிள்ளை ஆகிய படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்று இவர்களுக்கு ரசிகர் ஆதரவை அள்ளிக் கொடுத்தது. ஆனால் 70ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இந்த ஜோடிக்கான வரவேற்பு குறையத் தொடங்கியது. ஆனாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ஒன்று 73ம் வருடம் திரைக்கு வந்தது. அந்தப் படம்தான் பாக்தாத் பேரழகி!

வண்ணப் படமாக , பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு உருவான பாக்தாத் பேரழகி படத்தை டைரக்டர் டீ ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கினார். 50ம் ஆண்டுகளில் எம் ஜி ஆர், டீ ஆர் ராஜகுமாரி நடிப்பில் இவர் தயாரித்து, இயக்கிய குலேபகாவலி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கதையை சற்று மாற்றி பாக்தாத் பேரழகியாக்கினார் அவர்.

படத்தில் பாக்தாத் பேரழகி ஜெயலலிதாதான். வித விதமான ஆடை ஆபரணங்களோடு, ஆடல் , பாடல், சண்டை காட்சி என்று ஒரு ஆல் ரவுண்டராக படத்தில் தோன்றினார் அவர். காதல், சோகம், விரகம் என்று எல்லாவித உணர்வுகளையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. ரவிச்சந்திரன் டைரக்டர் சொன்ன எல்லா வேலைகளையும் செய்கிறார். ஆனால் பழைய இளமை மிஸ்ஸிங். சண்டைக் காட்சிகளில் அவரின் திறமை வெளிப்பட்டது.

படம் முழுவதும் நாகேஷ் வருகிறார். வரும் போதெல்லாம் சிரிக்க வைக்கிறார். அவரும் சச்சு, வி, கே ராமசாமி,
தேங்காய் சீனிவாசன் செய்யும் அட்டகாசம் ஜோர். திருநங்கையாக வரும் தேங்காய் சீனிவாசனின் நடிப்பு அருமை. என்னமாய் வழிந்து , வழிந்து பேசுகிறார். காட்டுவாசிகளிடம் பிடி படும் நாகேஷ் அவர்களின் கடவுள் ஆவதும், கடவுளுக்கு உணவு படைத்தால் போதும் அதை அவர் உண்ண மாட்டார் என்று சொல்லி காட்டுவாசிகள் நாகேஷை பட்டினி போட்டு உணவை தாங்களே உண்பது நல்ல தமாஷ். காட்டுவாசிகள் தலைவனாக வரும் ஓ ஏ கே தேவர் மிரட்டுகிறார் , சமயத்தில் சிரிக்கவும் வைக்கிறார்.

அவுஸ்திரேலியா – சிட்னியில் 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா - 10.09.2023 Sunday

 .


புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும் அழைத்துச் சென்றிருந்த போதிலும்,       இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் – அந்த இயல்புகளுக்கும் அப்பால்,  அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழின அடையாளம் பேணப்படவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் அதே சமயம் – புகலிட இலக்கியத்தை ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரயத்தனமும் நீட்சி பெற்றுள்ளது.

 “அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு  அவுஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மெய்நிகர் வழியாக நடைபெற்ற எழுத்தாளர் விழா, இம்முறை சிட்னியில் இம்மாதம் 10 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 10 மணிக்கு, நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் தூங்காபி சமூக மண்டபத்தில் ஆரம்பமாகிறது.


பின்னதொருநாளில்..! - சுரேஷ் ஆறுமுகம் - சோழபாண்டியபுரம்

 .

படித்து - முடித்து 

வேலையில்லாமல் 

சுற்றிகொண்டிருந்தபொழுது 

அவர் 

மட்டுமே சம்பாதித்த வேளையில் 

ஒரு குண்டுமணி அளவு கூட 

மரியாதை குறையவில்லை எனக்கு..! 

பின்னதொருநாளில், 

நான் வேலைக்கு போக 

அவர் ஓய்வெடுக்க (முன்பிருந்த என்னைப்போல் அல்ல..!) 

என்னையும் அறியாமல் 

அவரின் மதிப்பு குறைந்தது என்னிடம்..! 

காரணம் 

தனக்கென எதையும் சேர்த்து வைக்காமல் 

எல்லாவற்றையும் 

எனக்கென செலவழித்து 

சுருக்கமாக சொன்னால் 

தன்னை உருக்கி - 

என்னை உருவாக்கியிருந்தார் 

ஆக, 

அவர் கணக்கில் 

நான் தான் 

அவரின் பிரதான சொத்து 

ஆனால், என் கணக்கில் அவர்....! 

சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை 

அந்த

அவர் யாரென்று.....! 

மறந்து போகத்தேவையில்லை 

அந்த அவர் 

நாமாக கூட இருக்கலாம்.., 

மீண்டும் பின்னதொருநாளில்...!


எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 78 - முருகபூபதி

 .

“ வீழ்வேனென்று நினைத்தாயோ  “ எனச்சொன்ன பாரதி,  கண்ட பெண்களை  சந்தித்த பயணத்தில் சில காட்சிகளும் கதைகளும் !

     

கடந்த 2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினத்தின்போது,  28 பெண் ஆளுமைகள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் யாதுமாகி – அமேசன் கிண்டிலில் வௌியானது.

அதில் இடம்பெற்ற சில பெண் ஆளுமைகளை 2023 ஆம் ஆண்டு மீண்டும் நேருக்கு நேர் சந்திப்பேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே எமது வாழ்க்கை.  குறிப்பிட்ட  யாதுமாகி நூலின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறவேண்டிய சிலர் பற்றியும் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன்.

எமது தமிழ் சமூகத்தில் ஏராளமான பெண்கள் கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம், ஊடகம், பொதுநல தன்னார்வப்பணி  முதலான துறைகளில் மிகச்சிறந்த ஆளுமைகளாக விளங்குகின்றார்கள்.

அத்தகையவர்கள் பலரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதும் அதிகம். கடந்த ஜூன் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையில்             ( மூன்று மாதங்கள் ) தொடர்ச்சியாக பயணங்களில் ஈடுபட்டுவருகின்றேன்.  செப்டெம்பர் முதல் வாரம் மீண்டும் நான் நிரந்தரமாக வதியும் மெல்பன் வந்து,  எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தவிருக்கும்  23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சிட்னி மாநகருக்கு பயணப்படவேண்டியிருக்கிறது.

கனடாவில்,  ஶ்ரீரஞ்சனி விஜயேந்திரா, சுமதி, மைதிலி தயாநிதி, உஷா மதிவாணன்,  சிவசங்கரி ( தமிழ்நாடு )   ஆகியோரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தேன்.

மவுண்ட்லவேனியாவில்  பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு அவர்களையும்  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்                                                     (  இலக்கியக்களம் நிகழ்ச்சியில் )    ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் தலைமையில்  எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் திருமதி ஞானம் ஞானசேகரன்,  வசந்தி தயாபரன்,  ரஞ்ஜனி சுப்பிரமணியம், சுகந்தி ராஜகுலேந்திரா, ஜீவா சதாசிவம் ஆகியோரையும். அதன் பின்னர்  தேவகௌரியையும்  கிழக்கு பல்கலைக்கழகத்தில் ரூபி வலன்ரினா, விஜிதா,  மற்றும் நதீராவையும் சந்தித்தேன்.

தங்கபாச்சனின் கருமேகங்கள் கலைகின்றன திரை விமர்சனம்:

 


ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனும் (பாரதிராஜா), பரோட்டோ மாஸ்டர் வீரமணியும் (யோகிபாபு) ஒரு பேருந்துப் பயணத்தில் சந்திக்கிறார்கள். சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகள், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவரும் தொலைத்துவிட்ட உறவைத் தேடி, அதை மீட்டுக்கொள்ள மேற்கொள்ளும் அந்தப் பயணத்தின் முடிவு என்னவானது என்பது கதை.

ராமநாதன், வீரமணி இருவரது தேடலின் பயணம் வழியே தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் குடும்ப உறவுகளில் மண்டிக்கிடக்கும் அகச் சிக்கல்களை, அதனால் விளைந்த இழப்புக்களை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் காட்டுகிறது இப்படம்.

தன்னைப்போல் அறத்தின் பக்கம் நிற்பவனாக மகன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு தந்தை, பணம் மற்றும் புகழுக்காக அறம் தொலைத்துவிட்ட மகன், உருவாக்கி வளர்த்த தந்தைக்கு விலை உயர்ந்த காரை பிறந்த நாள் பரிசாக வாங்கி அனுப்பிவிட்டு, அவரது 75-வது பிறந்தநாள் விழாவை ‘லைவ்’ காணொலியாகக் கண்டு, ‘வெர்ச்சுவல் கண்ணீர்’ வடிக்கும் அயலகப் பிள்ளைகள், அவருடன் பேச மறந்துவிட்ட மகனின் ‘ஈகோ’வை நிர்வகிக்கும் குடும்ப வடிகாலாக மருமகள், ‘பெத்தாதான் பிள்ளையா?’ எனப் பிறந்தது முதல் தூக்கி வளர்த்து அழகுப் பார்த்த குழந்தையின் மீது, பாசப்பித்து கொண்டு வாழும் உறவுகளற்ற ஓர் எளியவன், காதலின் பின்னால் ஒளிந்திருந்த கள்வனை அறியாமல்போய், வாழ வேண்டிய வாழ்கையை இழந்த ஓர் இளம்பெண், எத்தனை வருடம் கழித்துத் திரும்ப வந்தாலும், எந்தச் சூழ்நிலையில் கைவிட்டுவிட்டுப் போயிருந்தாலும், கைவிடப்பட்டவளின் வலியைவிட, மன்னிப்புக் கோரி நிற்பவனின் வலி பெரிதல்ல என ஏற்க மறுக்கும் மற்றொரு இளம் பெண் என, முதன்மை, துணைக் கதாபாத்திரங்களை முழுமையுடன் வார்த்திருக்கிறார் தங்கர் பச்சன்.

திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல்

 .