மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
பனிரெண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும் , சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகி விட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது - மனத்தில் எழுகின்ற ஒருவித மயக்கம் என்றே எண்ண வேண்டி
இருக்கிறது. எல்லா மாதங் களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன.மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட் டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம் .ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியை, சித்திரையை, தையை, ஆ
ஆடி என்றவுடன் - ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கார்
மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும் , மணி வாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும் , சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும் கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகிறது.ஆடி,புரட்டாசி, மா