பனங்கொட்டை முளைவிட்டு வடலியென... கவிதை


.



அனல் காற்றில் விசவாயு
கலந்தெரித்த பூமி
அதில் விளைந்த இளந்துளிர்கள்
தீய்ந்தழிந்து
கனகாலம் ஆகவில்லை.

முதுமரங்கள் விழிவரளச்
சுரசரக்கும் காவோலையாகும்.
துயர்வாய்வில்
மணல் கூடத்
தீய்ந்தெரிந்து
கரியாகச் சாகும்.

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள்

தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி


17/8/2011

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க அணித்தலைவர் டில்ஷான் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டம் கைகொடுக்க 287 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை மாலிங்கவின் அபார பந்து வீச்சுடன் 78 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

ஆஸி. அணியின் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டிய மலிங்க அபாரமாக 5 விக்கெட்டுக்களை பறிக்க 208 ஓட்டங்களுக்கு ஆஸி. அணியை சுருட்டியது இலங்கை அணி.

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் கலாசார மகாமண்டபம் - கோலாகலத் திறப்பு விழா -- ஒரு கண்ணோட்டம்! ……….. வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி.

.                                                        
                                                                     வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி 
                                                             
புலம்பெயர் தமிழரின் பங்களிப்பில் தமிழரின் புகழ்பாடும் மகாமண்டபம்!
அவுஸ்திரேலியத் தமிழருக்கு இதுவரை ஒரு சிறந்த கலாசார மகாமண்டபம் இல்லையே என்ற நெடுநாட்குறை சொற்பதங்கடந்த கற்பகதேவி அருளால் நிவர்த்தி! அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் திறமைக்கும் செயற்பாட்டிற்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த பாராட்டு!.

தண்ணீர்த் தாகம் - சிறுகதை - ஆனந்தன்


.
பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக்கொண்டிருந்ததுறோட்டில்அவ்வளவு நடமாட்டமில்லைதூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக் கொண்டுவியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்க்கொண்டிருந்தான்.அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி 'கடா கடாஎன்று ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது.பன்னிரண்டு மணி வெளியே யாரும் தலை காட்டவில்லைபகல் முழுவதும்வெயிலிலே திரியும்நாய்கூட சுவரோத்தில் கிடந்த சிறு நிழலில் இளைத்துக்கொண்டிருந்ததுஅவ்வளவு உக்கிரமான வெயில்பலர் பகலுறக்கம் போட்டார்கள்.சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள்செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கிவழிந்துகொண்டிருந்தார்.

அந்த அரசமரத்தின் கீழ்த்தான் பகல் முழுவதும் மீனாட்சிக்கு வேலை.நியாயஸ்தலத்துக்குப் போகும் கிளைறோட்டும் பெரிய தெருவும் கோணமாய்ச்சந்திக்கும் சந்தி அதுஅந்த அரசமரத்தைச் சுற்றி வெயில் கடுமைக்கும் உகந்தகுளிர்நிழல்தட்டுச் சுளகிலே சின்னச் சின்னக் கூறாகக் கத்தரிக்காய்பிஞ்சு மிளாகாய்நன்றாக அடுக்கிப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தனஅவளுக்குச்சோம்பேறித்தனமோ கொட்டாவியோ இல்லைஅன்றைக்கு வியாபாரம் அவ்வளவுருசியாகவில்லைகோடு கலைந்ததும் பள்ளிக்கூடம் விட்டதும்தான் வியாபாரத்தின்ருசி தெரியும்கொண்டுவந்த பெட்டியை காலி செய்து விட்டேவீடு திரும்புவாள்.அப்பொழுது அவள் உள்ளத்தில் எழுவது ஆனந்தக்கடல்தான்.

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 5


.
                                                                                            பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


அத்தியாயம் 5

கள்ளக் காதல்

கள்ளக்காதல் சம்பந்தமானவைதான் என்று தௌ;ளத்தெளிவாக உணரக்கூடிய பல்வேறு பாடல்கள் நாட்டுப்பாடல்களிலே உள்ளன. ஒருவனும், ஒருத்தியும் பெற்றோருக்கோ அல்லது மற்றோருக்கோ தெரியாமல் காதலித்தல் கள்ளக்காதல் அல்ல. காதலர் இருவர் கருத்தொருமித்துவிட்டால் அது இரகசியமாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் சரி அது நல்ல காதல்தான்.

உலகச் செய்திகள்

.
தனது முதல் 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை அறிமுகப்படுத்திய ரஷ்யா


18/8/2011
ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது.

சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும்.

ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது.

மக்களை ஈர்த்த மகராசர்....! தி. ஜானகிராமன்


.



விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து 'ட்ரான்ஸிட் ' கூடத்திற்குப் போனார்.

இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ' ஏன் இத்தனை கூட்டம் ?

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் 'பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்டிவிட்டு அப்பால் கார் கூட்டத்தோடு சேர்ந்து நின்றன. 

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?

தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).

தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.

இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் இரு பாடசாலைகள் அவுஸ்திரேலிய உதவியில் புனரமைப்பு
Saturday, 13 August 2011


2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சியில் சேதமடைந்த இரண்டு பாடசாலைகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் மீளமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவமொன்றில் கிளிநொச்சி கல்வி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்தப் பாடசாலைகள் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் அவுஸ்திரேலிய அரசாங்கம், யுனிசெப் ஆகியவற்றிற்கு இடையிலான பங்களிப்புடன் 112 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய்

.
தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரை அயல் வீட்டிலிருந்து தப்பி வந்த நாயொன்று கடித்துக் குதறி கொன்ற கொடூர சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகருக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

                                                             
    
                                                                                                                                                               
              
                                      

சூடானிய அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த அயன் கொல் என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஊடக அறிக்கை ஆகஸ்ட்டு 12, 2011

.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா மாநிலத்தில் ஒரு அங்கத்தவரும்; தெரிவு செய்வதற்கான உபதேர்தல்:

சுதந்திரத்தின் சகல அம்சங்களையும் முற்றாக இழந்து சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் அழிக்கப்பட்டுச் செயலற்று நின்ற ஈழத்தமிழரின் இன்றைய காலத்தின் தேவையாக உருவாக்கப்பட்டதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா. க. த. அ) என்பது எல்லோரும் அறிந்த விடயம். இந்தச் சிறு குழந்தை பிரசவித்து எழுந்து நடப்பதற்கு முன்னதாகவே அதனை அழித்து விடுவதற்கான முயற்சி பெருமளவில் எடுக்கப்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். நாடுகடந்த தமிழீழ அரசை உருக்குலைக்க உள்ளிருந்தும் புறமிருந்தும் பலவிதமான சக்திகளாலும் எடுக்கப்படும் பலவகையான முயற்சிகளுக்கும் முகம் கொடுப்பதிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சக்தி விரயமாக்கப்படுவதே யதார்த்தம்.

தமிழ் சினிமா

.
கருங்காலி


இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு இருக்கும் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் கதை.

பொறுக்கி, பெண் பித்தன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம். சேரிப்பகுதியில் அனாதைகளோடு அனாதையாக வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு கஞ்சாபேர்வழியின் கையில் அந்த சிறுவர் கூட்டமே சிக்குகிறது.

அவனிடம் கஞ்சா பொட்டலம் விற்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கொலைகாரனாகவும் மாறுகிறார். அதோடு பெண்களை அனுபவிக்க வேண்டும் ஆனால் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கும் பெரிய பெண் பித்தனாகவும் இருக்கிறார். தனது கூட்டத்தில் வளரும் அஸ்மிதாவுடன் கணவன்-மனைவி போன்று வாழ்பவர் அவள் வயிற்றில் தனது குழந்தை வளர்கிறது என்பது தெரிந்ததும் அவளை சுட்டுக் கொல்கிறார் களஞ்சியம். அப்படிப்பட்டதொரு மிருக குணம் கொண்ட கேரக்டர்.

அதன்பிறகு சாலையில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு டாக்டர் பெண்ணின்(சுனிதா வர்மா) அழகில் மயங்கி அவளை இவர் காப்பாத்துகிறார். ஆனால் அந்த பெண்ணே இவரை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறாள். இதனால் அவளுக்கு கணவனாகி சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்கும் களஞ்சியம், குழந்தையின்மை காரணமாக மனைவியிடம் சிகிச்சைக்கு வரும் அஞ்சலியை அனுபவிப்பதற்காக தொடர்கிறார். இதற்காக சில நாடகங்களை நடத்துகிறார். களஞ்சியத்தின் காமப் பிடிக்குள் அஞ்சலி சிக்கினாரா இல்லை தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.

ரவியாக நடித்த இயக்குநர் களஞ்சியத்திற்கு நடிப்பும், பாடி லேங்குவேஜும் வருவேனா என்கிறது. அதிலும் ரவுடியாய் இருக்கும் காலத்திலாவது தலை முடியும், தாடியும் கொஞ்சமாச்சும் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் திருந்தியவனாய் வரும் போது அவரது பார்வைகளும், பாடி லேங்குவேஜும் சுத்தமாக எடுபடவில்லை.அஞ்சலியின் கணவனாக வரும் சீனிவாசன் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நடிப்பு நன்றாக உள்ளது.

அஞ்சலி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நடிப்பில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் பக்கா கிராமத்து பெண்ணாக தனது சொந்த குரலிலேயே பேசி நடித்திருக்கிறார். நடிப்பில் பலபடி உயர்ந்து நிற்கிறார். சுனிதா வர்மாவை அழகாக காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட சேரிப்பெண்ணாக வந்து களஞ்சியத்தையே சுற்றி சுற்றி வரும் அஸ்மிதாவின் கேரக்டர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிழலாடுகிறது. பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு போன்ற வெற்றி படங்களை தந்த மு.களஞ்சியம் முதல் முறையாக கதை நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம். பூமணி படத்தின் திரைக்கதை இன்னும் அப்படியே கண் முன்னே இருக்கிறது பதினைந்து வருடங்களுக்கு பிறகும் அந்த கதையை மறக்க முடியாது அப்படி ஒரு படம். ஆனால் பூமணி உடன் ஒப்பிடும் போது கருங்காலியின் திரைக்கதைக்கு களஞ்சியம் மெனக்கெடவில்லை என தெரிகிறது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை எல்லாமே சுமார் ரகம். அதிலும் அஞ்சலி, களஞ்சியம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியிசை பிட்டு படம் தோற்றது போங்கள். 'கன்னிப்பருவத்திலே' படத்தில் வடிவுக்கரசி ஒரு கணம் பாக்யராஜுடன் சபலப்பட்டதினால் நடக்கும் பல விஷயங்கள் நிதர்சனமான கதை. ஆனால் இவ்வளவு ட்ராமாட்டிக்காக அடல்டரி நடைபெறும் என்று கதை செய்வது படு அபத்தம்.

அதுவும் டாக்டர் சொல்லி தான் உங்களுடன் உறவு கொள்ள அனுப்பப்பட்டிருகிறேன். என் பெயர் கூட வேண்டாம். என்னை டாப்லெட்டாக நினைத்து ஒரு ஐந்து நிமிஷம் செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவனை எந்த ஒரு அப்பாவி பெண்ணும், கிராமத்துப் பெண்ணும், 'தெய்வத்திருமகள்' கிருஷ்ணாவின் மனநிலையில் உள்ள பெண்ணாயிருந்தாலே ஒழிய நம்ப மாட்டாள். ஏராளமான லாஜிக் மீறல்கள், எதையோ சொல்ல நினைத்து எங்கோ கதை சுற்றுகிறது, கடைசி இருபது நிமிடத்தில் மட்டும் விறுவிறுப்பாக உள்ளது, அந்த விறுவிறுப்பை ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

நன்றி விடுப்பு
போடிநாயகனூர் கணேசன்


பன்னி மேய்க்கிற ஒரு வில்லனுக்கும், 'தண்ணி' விற்கிற ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை.

பப்ளிக்காக பன்றியை கொன்று அவ்வப்போது பெண்களையும் கொல்லும் கற்கால வில்லன். அவனிடம் அடிமைப்போல கஞ்சாவும், கள்ளச் சாராயமும் விற்கும் ஹீரோ.

வேலைக்காரன் மகன் என்னைவிட புத்திசாலியாக இருக்கக் கூடாது என்று அந்த பிஞ்சு வயசிலேயே ஹீரோ ஹரிகுமாருக்கு நஞ்சை பழக்குகிறார் வில்லன் சாய் ரவி. முதலாளியின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் சகித்துக் கொள்ளும் ஹரிகுமாரின் காதலுக்கும் சாய் ரவி குறுக்கே நிற்கிறார். ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் அருந்ததியை கடத்தி திருமணம் செய்து கொள்ளவும் முற்படுகிறார் சாய் ரவி. பொறுமை இழந்த ஹரிகுமார் வில்லன் கூட்டத்துடன் மோதுகிறார், ஜெயிப்பது யார் என்பது இறுதிக்காட்சி. 'மதுரை சம்பவம்' படத்துக்குப் பிறகு ஹரிகுமார் நடித்திருக்கும் படம். இந்தப் படத்தில் எல்லாப் பழியையும் சுமக்கும் தியாகத்திருவுரு கேரக்டர் ஹரிகுமாருக்கு. எந்த சிச்சுவேஷனுக்கும் எக்ஸ்பிரஷன் மட்டும் காட்டவே மாட்டேன் என்று அவர் அடம் பிடிப்பதுதான் சரியில்லை. பிடிவாதத்தை விடுங்க பாஸ். இவருக்கு பக்க வாத்தியமாக சூரி. கொமெடியனாக வருகிறவரின் கழுத்தில் சுருக்கு மாட்டி தொங்க விடுகிறார்கள். ஹீரோவுக்கு கோபம்வர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன... நடன இயக்குநராக இருந்து ஹீரோவானதால், ஹரிகுமாரின் நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கதாநாயகியாக 'வெளுத்துக்கட்டு' அருந்ததி. ஹரிக்குமார் காதலை சொன்னதும், உன்னை எல்லாம் யாரு காதலிப்பா என்று படக்கென்று முறுக்கும் போது அடடா இது நல்லாயிருக்கே என்று தோன்றுகிறது. அவரே அடுத்தக் காட்சியில் பால்ய நட்பை சொல்லி ஹரிகுமாரிடம் பம்மும் போது சப். வழக்கமான ஹீரோயின். படத்தில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவது பன்னி மேய்க்கிற அந்த வில்லன் சாய் ரவிதான். இவர் வருகிற காட்சிகள் எல்லாம் அடிவயிற்றில் பந்து சுழல்கிறது. தனது மனைவியை காப்பாற்றுவதற்காக நண்பனின் தம்பியை காட்டிக் கொடுக்கும் சூரி, கடைசியில் தற்கொலை செய்து கொள்கிற காட்சி மனசை ரம்பம் போட்டு அறுக்கிறது. ஆரம்பத்தில் சஸ்பென்சாக செல்லும் கதையில், பிளாஷ்பேக் வரும்போது ஓரளவு விறுவிறுப்பு தெரிகிறது. என்றாலும் காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்தது போன்றே இருப்பதால் படம் தொடங்கிய ஒரு பதினைந்து நிமிடத்திலேயே போர் அடிக்கிறது. அவ்வப்போது ஒரு பாடல் இளையராஜா ஸ்டைலில் வந்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கதையிலும், காட்சிகளிலும் பெரிதாக சுவராஸ்யம் எதுவும் இல்லை.

ஹரிகுமார் அடங்கிப் போவதற்கு முதலாளியின் சத்தியம், மூளை வளர்ச்சி இல்லாத சகோதரன் என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார் இயக்குநர். காட்சிகளுக்கான லாஜிக்கை உருவாக்குவதில் இயக்குநர் ஞானம் இன்னொரு ஹரி. பன்றி பிடிக்கும் வில்லன் நல்ல கற்பனை. பன்றியை கொல்லும் உலக்கையால் ஹரிகுமாரின் மூளை வளர்ச்சியில்லாத தம்பியை கொல்வது தேவையில்லாத காட்சி. காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என்று மூன்றையும் கலந்து கொடுத்திருக்கும் இயக்குநர் ஞானம் வழக்கமான கதை என்றாலும் இன்னும் லேட்டஸ்டாக வெளிப்படுத்தியிருக்கலாம். ஜான்பீட்டர் பாடல்கள் பழைய ரகம் என்றாலும் கேட்க இனிமையாக உள்ளது. பின்னணி இசையில் சபாஷ் வாங்குகிறார். தனது ஒளிப்பதிவில் கிராமத்து அழகை நன்றாக காண்பித்துள்ளார் பிரபாகர். எடிட்டிங்கின் மூலமாக படத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.

நன்றி விடுப்பு

டூ


காதலர்களுக்குள் ஏற்படற கருத்து வேற்றுமைகள், ஊடல்கள், சின்ன சின்ன சண்டைகள், தற்காலிகப்பிரிவுகள் நிரந்தரம் அல்ல.

காதல்தான் நிரந்தரம் என்பதை சொல்லும் கதை. சஞ்சய் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அவன் ப்ளஸ் டூ வரை படித்த நட்சத்திராவை ஒரு நாள் சந்திக்க நேரிடுகிறது. பள்ளியில் படிக்கும் போது அவளிடம் ஒரு நாள் அவன் காதலைச் சொல்ல அவளோ அப்போது படிப்பை காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள். இன்று படித்து நல்ல வேலையில் இருக்கும் நட்சத்திராவே சஞ்சய்யை தேடிப் போய் காதலைச் சொல்கிறாள். அப்போது உலகையே ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறான் அவன். பின்பு இருவருக்கும் சின்னச் சின்ன சண்டைகள் வருகின்றன. இந்த சண்டைகள் ஒருகட்டத்தில் ஈகோவில் போய் முடிகின்றன. இதனால் ஒரேயடியாக பிரிந்து விட்டால் தொல்லையே இல்லை என்று நினைக்கிற இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சுதந்திர பத்திரிகையாளினியாக, (Freelance Jouinalist) வரும் சங்கீதா பட் சஞ்சய்க்கு பிடித்தமானவராக ஆகிவிடுகிறார். இந்த மூவருக்குள்ளும் ஏற்படும் சுவாரசியமான விஷயங்களையும், உரசல்களையும் சொல்லி யார் யாரோடு சேர்கிறார்கள் என்பதை இறுதிக்காட்சியாக்கியிருக்கிறார்கள்.

'முன்தினம் பார்த்தேனே' படத்தில் அறிமுகமான சஞ்சய் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தான் நெனச்ச மாதிரி தன் காதலியின் கேரக்டர் இல்லை எனும் போது இவர் சண்டை பிடிக்கும் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். முந்தைய படத்தை விட, இப்படத்தில் தன் திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரது நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகளிலும், குறிப்பாக காதலி நட்சத்திராவிற்காக ஏங்கும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். முன்னாள் நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா, தாயின் பெயரை காப்பாற்றும் அளவிற்கு நடித்திருக்கிறார். சஞ்ஜயிடம் கோபப்படும் காட்சிகள், ரசிக்கும்படியாக இருக்கிறது. நகைச்சுவையும் நளினமாக வருகிறது நட்சத்திராவுக்கு. கிச்சனுக்குள் வந்து 'இதுதான் கிச்சனா?' என்று ஊர்வசியை அதிர்ச்சியூட்டுகிறாரே, தியேட்டர் கலகலக்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் இவர் இன்னும் நடித்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

மற்றொரு நாயகியான சங்கீதா பட், இவர் வருகைக்குப் பிறகு கதை வேறு கோணத்தில் நகர்கிறது. இவரது பகுதியை இவர் நிறைவாகவே செய்திருக்கிறார். இவரையும் காதலிக்கலாமே என்று சொல்லும் அளவிற்கு நடிப்பிலும், அழகிலும் நம்மைக் கவர்கிறார். எந்நேரமும் மென்று கொண்டேயிருக்கும் ஒரு சிறுவனை காட்டுகிறார்கள். காமெடிக்காகவாம். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் தம்பி. எவ்வளவு பிரமாதமான நகைச்சுவை நடிகர்? ஆனால் வீணாக்கியிருக்கிறார்கள் மயில்சாமியை. 'லொள்ளு சபா' ஜீவா இருக்கிறார். ஆனால் நல்லவேளை, ஜெகன் இருப்பதால் சில சீன்கள் கலகல... ஊர்வசி, ராஜேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காதலர்கள் இருவரும் சீன் பை சீன் சண்டை போடுவது நம்பும்படி இல்லை. 2 சீன் காதலுடன் இருப்பது போல காட்டி 3 சீன் ஊடல் என காட்டி இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு லவ் ஃபீலே வரவில்லை. அதாவது ஜோடிகள் ஒன்று சேர வேண்டும் என்ற பரிதவிப்பு வரணுமே அது வரவேயில்லை.

இடைவேளை ட்விஸ்ட்டுக்காக வைக்கப்பட்ட காதலர்கள் பிரிவுக்காட்சியில் ஏதோ கள்ளக்கடத்தல் கோஷ்டிகள் சட்டவிரோத பார்சலை, பணத்தை எக்ஸேஞ்ச் பண்ணிக்கொள்வது போல காதலர்கள் தாங்கள் அவரவர் தந்த பரிசுப்பொருள்களை மாற்றிக்கொள்வது ரொம்பவே செயற்கை. ஓப்பனிங் சீன் காமெடி டிராக்ல ஜெகனை சிம்பு மாதிரி மிமிக்ரி காமெடி பண்ண வெச்சு சிம்பு காலை வாரியது... படம் முழுக்கவே காதல் காட்சிகளாகட்டும் கதாநாயகிகள் உலாவாகட்டும் கண்ணியமாக, குடும்ப உறவுகளோடு அமர்ந்து பார்க்கும்படி படம் ஆக்கியது... கதையுடன் ஒட்டிய காமெடி டிராக் மற்றும் வசனங்கள்... பாடல் காட்சியில் ஜப்பான் குமாரின் ரசிக்க வைக்கும் அலட்டல்கள்.. என இயக்குநரை பாராட்டும் விஷயங்களும் உண்டு. 'தம்ம விட்டுடு மச்சான்...சரக்க விட்டுடு மச்சான்...' என்று தொடங்கும் பாடலை டி.ராஜேந்தரும், 'ஒரு பார்வையாலே பூத்தது பெண்ணே' என்ற பாடலை சிம்புவும் பாடியுள்ளார்கள். 'டூடா..' பாடலுக்கு டி.ஆரின் குரல் வளத்திற்கு முன்னால் எவ்வளவு ஆட்டம்தான் போடுவது? ஆட்டக்காரர் சீனாவை பெண்டு நிமிர்த்துகிறது அவரது குரலும், அபிஷேக்-லாரன்சின் இசையும். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சி.ஆர்.மாறவர்மனின் கொமிரா கண்கள்தான் இப்படத்திற்கு பெரிய பலம். காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடித்து நம் கண்களுக்கு இதமாகத் தந்திருக்கிறார்.
நன்றி  விடுப்பு