மரணஅறிவித்தல்

 



தண்ணளி தரணியில் மலர்ந்திட வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 







 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ,,,,, அவுஸ்திரேலியா 



பாரினில் பசிப்பிணி பறந்தோட வேண்டும் 
பகையெனும் எண்ணம் மறைந்திட வேண்டும்
போரிடும் நினைப்பு பொசுங்கிட வேண்டும்
பூதலம் புனிதமாய் மலர்ந்திட வேண்டும்

மாசுடை மனத்தார் மாறிட வேண்டும்
மனமெலாம் அமைதி நிறைந்திட வேண்டும்
கூசிடும் வார்த்தைகள் பேசிடும் யாவரும்
மாறியே கனிவுடன் மொழிந்திட வேண்டும் 

கற்றவர் கண்ணியம் காத்திட வேண்டும்
கல்வியை விற்பவர் திருந்திட வேண்டும்
கனவிலும் நனவிலும் கல்வியைக் காத்திட
எண்ணிடும் உணர்வு பெருகிட வேண்டும்

குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டர்: ஈழத் தமிழ்அரங்கில் ஒரு சகாப்தம் - ஓர் அஞ்சலிக் குறிப்பு - கன்பரா யோகன்

குழந்தை மாஸ்டர் என்று பலராலும் அழைக்கப்படும்


திரு ம.சண்முகலிங்கம் மாஸ்டர் அவர்களை சரியாக ஒரு வருடத்துக்கு முன் கடந்த 2024 ஆம் ஆண்டு தை மாதத்தில் அவரது திருநெல்வேலி வீட்டில் சந்திக்க நானும் மனைவியும் போயிருந்தோம்.  

அன்றைக்கு மாஸ்டரின் வீட்டைக் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமாகவிருந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு சென்றதால் தெருக்கள், வீடுகளில் மாற்றம் இருந்தது என்பது ஒரு காரணம். இன்னொன்று நாம் வழமையாக செல்லும் திருநெல்வேலிச் சந்தி வழியாக வராமல் இம்முறை எதிர்த்திசையிலிருந்து கல்வியங்காட்டுச் சந்தி ஊடாக வந்ததும் ஒரு காரணமாயிருந்திருக்க வேண்டும். இரண்டு முறை ஆட்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டோம்.

 

அப்போது சண்முகலிங்கம் மாஸ்டருக்கு 92 வயது.  நினைவுகள் மங்கிக் கொண்டு வரும் வயதாகையால் எம்மை அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டார்

 

1985 இன் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழக கலாச்சாரக்  குழுவினரின் நாடக அரங்கேற்றுகைக்காக அவரை அணுகிய காலங்களில்தான் நான் அவரை முதலில் சந்திக்க நேர்ந்தது. சண்முகலிங்கம் மாஸ்டர் கைப்பட எழுதிய ‘மண் சுமந்த மேனியர்’ நாடகப் பிரதியை நாடக இயக்குனர்

க.சிதம்பரநாதன் எமக்கு தந்திருந்தார். அதில் செறிந்திருந்த சுருக்கமான, ஆனால் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட உரையாடல்கள், பல இடங்களில் சிலேடையும், நகைச்சுவையும் கொண்ட வசனங்கள், கதையோட்டத்துக்கு பொருத்தமான திருவாசகப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், நவீன கவிதை வரிகள் என்று அவரின் நாட பிரதி தனித்துவமாக இருந்தது.

 

நாடகப் பயிற்சிகள் பல்கலைக்கழக மாணவர் பொது அறையில், பின்னர் கைலாசபதி கலையரங்கில் என்று நடைபெற்று வந்த காலத்தில்,

பயிற்சிகளுக்கு வரும் நடிகர்களுக்கு 'ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரியவன்' என்ற பழமொழியை சண்முகலிங்கம் மாஸ்டர் அடிக்கடி சொல்லி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம். நடிகர் ஒருவர் மேடையில் ஏறிவிட்டால் வெட்கமோ, ரோசமோ இல்லாது நடிக்கப் பழக வேண்டுமென்பதற்காகவே இதை அவர் சொல்வது வழக்கம்.

ஈழத்து நாடக உலகப் பேராளுமை குழந்தை மா.சண்முகலிங்கம் விண்ணேகினார் 🙏 - கானா பிரபா

   

ஈழத்தில் எண்பதுகளின் வாழ்வியலில் இருந்தவர்களுக்கு “மண் சுமந்த மேனியர்” ஓர் அழியா நினைவுச் சித்திரமாக மனதில் இன்னும் இருக்கும், எனக்கும் அவ்விதமே. எங்கள் இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தின் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் எல்லாரும் அந்த இரண்டாம் மாடிக் கட்டடத்தின் தரையில் இருந்து வியப்போடு அந்தப் புதியதொரு நாடக அனுபவத்தையும், கவிதா நிகழ்வையும் கண்டது மறக்க முடியாது.

அதுவரை மரபு ரீதியான நாடக மேடைகளையும், தெருக்கூத்துகளையும் கண்டிருந்த நம்மவர்க்கு “மண் சுமந்த மேனியர்” வழி கிடைத்த புதுமையானதொரு போர்க்கால நாடக இலக்கியம் என்பது இன்று வரை ஈழத்து நாடக மரபில் மக்கள் மயப்படுத்தப்பட்டதொரு படைப்பாகக் கொண்டாடும் திறன் வாய்ந்தது.

பின்னாளில் குழந்தை மா.சண்முகலிங்கம் என்ற ஆளுமையை அறிய முன், இவ்விதம் மண் சுமந்த 
மேனியர் என்ற படைப்பே அவரை அறிமுகப்படுத்தியது.
“அன்னை இட்ட தீ” நாடகப் பிரதியில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் குழந்தை மா.சண்முகலிங்கம் குறித்துப் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இந்த ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகின்றார் இப்படி,
ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில், 1970 களின் பிற் கூற்றிலிருந்து தொடங்கும் ஒரு புதிய காலகட்டத்தின் மிகப்பிரதானமான சிற்பியாக அமைபவர் குழந்தை ம. சண்முகலிங்கம் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் திரு.சண்முகலிங்கம் ஆவார்.

இவருடைய பங்களிப்பினை நான்கு துறைப்படுத்தி நோக்குதல் வேண்டும்.
(1) யாழ்ப்பாணத்தின் நாடக அரங்கக் கல்லூரி நிறுவகர் (1978)
(i) ஈழத்தின் பாடசாலை/கல்வி அரங்கினை வளர்த்தெடுத்த
முக்கிய நாடகவியலாளர்களுள் ஒருவர்.
(i) முக்கியமான நாடகவியல் ஆசிரியர்களுள் ஒருவர்.
(iv) யாழ்ப்பாணத்தின் 1970 களுக்குப் பிந்திய சமூக அனுபவங்களை
நாடகங்களாகப் பதிவு செய்த நாடகாசிரியர்.

பலனிற் பற்றுவைக்காது நற்செயல் செய்வோம் - கலாநிதி பாரதி



சிவஞானச் சுடர் பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் (வாழ்நாள் சாதனையாளர்)


 மானிடனே!

பிறக்கும்போ(து) எதனைநீ கொண்டுவந் தாய்உயிர்

   பிரியும்போ(து)  எதனையெலாம் தேவை யென்று

மறக்காது இறைவனிடம் வரங்கேட் பதழகோ?

    மண்ணிலொரு அணுவளவை மட்டும் உன்னால்

இறக்கும்போ(து) எங்கெடுத்துச் செல்ல முடியும்?

    இறைபணியில் சிவநெறியில் வாழ்ந்தே ஆசை

துறந்தெல்லாப் பற்றறுத்து அரன்வழி நின்றால்

    தோன்றிடுமே சிவனார்செஞ் சரண மன்றோ?

பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️ - கானா பிரபா

 

1978 ஆம் வருஷம் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் வெளிவருகிறது.
அந்தப் படத்தில் பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய மாஞ்சோலைக் கிளிதானோ பாடல் அவருக்கு புகழ் மாலை கொடுத்தது அனைவரும் அறிந்ததே.
அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். தன்னுடைய பாடல் பிறந்த கதையில் இதுதான் இளையராஜாவுக்கு அதிகார பூர்வமாக எழுதிய பாடல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் உதவியாளராக இளையராஜா இருந்த சமயம் இளையராஜாவின் மெட்டுக்கு தஞ்சாவூரு சீமையிலே பாடல் எழுதியதையும் முத்துலிங்கம் குறிப்பிட்டது அறிந்ததே.
இங்கேயும் மெட்டுக்குப் பாட்டு என்று அவருக்கு சூழல் கொடுக்கப்பட்டு பல்லவி எழுதுகிறார். ஆனால் அது அதீத கவித்துவமாக இருக்கிறது என்று கங்கை அமரன் சொல்லவும் இரண்டாவதாக எழுதிக் கொடுத்தது அனைவருக்கும் பிடித்துப் போகிறது.  
அந்தப் பாடலில் கரும்பு வயலே குறும்பு மொழியே என்ற வரிகளைப் பிரேரித்தது அப்போது உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ்.
அதென்ன மாஞ்சோலை? மாந்தோப்பு என்று தானே சொல்ல வேண்டும் என்று இந்தப் பாடலுக்கு அப்போது இலக்கியச் சர்ச்சையும் கிளம்பியதாம்.
கிழக்கே போகும் ரயில் நூறாவது நாள் விழாவில் மாஞ்சோலைக் கிளிதானோ பாடலை நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  பாடிக்காட்டி இதே போல் எங்கள் படங்களுக்கும் பாடல் போடக்கூடாதா என்று இளையராஜாவிடம் கேட்டாராம்.
அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது தமிழக அரசிடமிருந்து கவிஞர் முத்துலிங்கத்துக்குக் கிடைக்கிறது.
ஆனால் ஜெயச்சந்திரனுக்கோ தேசிய விருதே கொடுத்திருக்கலாம் அவ்வளவுக்கு அற்புதமான பாட்டு அது.
ஆனால் காலம் ஒரு கணக்கு வைத்திருக்கிறது இல்லையா?
15 வருடங்களுக்குப் பிறகு கிழக்குச் சீமையிலே படம் உருவாகிறது.
இம்முறை பாரதிராஜா இசைப்புயல் ரஹ்மான் கூட்டணி, இங்கே வைரமுத்து பாடலாசிரியர்.
ரஹ்மானின் இசையில் ஜெயச்சந்திரன் ஜோடி சேர்கிறார்.
எஸ்.ஜானகியோடு ஜெயச்சந்திரன் பாடிய
“கத்தாழம் காட்டு வழி” பாடலை இன்னொரு முறை உன்னிப்பாக அவதானித்துப் பாருங்கள் வழக்கமான ஜெயச்சந்திரன் தொனியில் இருந்து மாறுபட்டு வேலை வாங்கியிருப்பார் ரஹ்மான்.
தமிழ் நாடு அரசின் சிறந்த பாடகர் விருது அறிவிக்கப்படுகிறது.
இதோ சிறந்த பாடகராக அறிவிக்கப்படுகிறார் பாடகர் பி.ஜெயச்சந்திரன்.

ஒலி பகிர்வாக

படித்தோம் சொல்கிறோம் : சிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் ! அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள் - முருகபூபதி

   வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும்.  “  என்பார்கள்.

 மனிதர்களுக்கு பிரச்சினைகள் அதிகாரித்துக்கொண்டிருப்பதனால்


சிரிப்பதும் சிந்திப்பதும் குறைந்துகொண்டு போகிறது.

மரபார்ந்த இலக்கியம், நவீன இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், மண்வாசனை இலக்கியம், போர்க்கால இலக்கியம்,  புலம்பெயர்ந்தோர் – புகலிட இலக்கியம் என்று எமது ஈழத்தவர்கள் கடந்து வந்த இலக்கியப்பாதை நெடியது. எல்லாம் கடந்து வந்து பின்னாட்களில் கொரோனோ  கால இலக்கியமும் அறிமுகமாகியது.

உயிர்வாழ்வதற்காக  கண்ணுக்குத் தெரியாத கிருமியுடன் போராடிக்கொண்டு, இடைவெளிபேணி உறவுகளை தக்கவைத்துக்கொள்வதற்கு இணையவழி சந்திப்புகளை நடத்தும் காலத்திற்கு வந்துள்ளோம்.

பயணிக்காமல், விசா பெற்று விமானம் ஏறிச்செல்லாமல் இருக்கும்  இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே என்பதுபோல்,  மூடிய அறைக்குள்ளிருந்து உலகெங்கும் வாழ்பவர்களின் முகம் பார்த்து பேசிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த இணையவழிக்கும் (ZOOM) மெய்நிகர் என்று புதிய சொற்பதம் கண்டுபிடித்துள்ளனர்.  எல்லாம் கடந்துபோகும் என்பதுபோல்,  இந்த புதிய பதத்தையும் கடக்கின்றவேளையில்  எம்மால் கொண்டாடப்படும் கனடாவில் வதியும் படைப்பாளி   அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் பற்றிய  உரையாடல்கள்  ஏற்கனவே  பல மெய்நிகர் அரங்குகளில்  இடம்பெற்றுள்ளன..

அவற்றின் தொடர்ச்சியாக எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமும்  கடந்த 19 ஆம் திகதி, முத்துலிங்கம் அவர்களின் 88 ஆவது பிறந்த தினத்தின்போது அவரது படைப்புகள் தொடர்பாக கருத்தரங்கினை மெய்நிகரில் நடத்தியது.

எமது சங்கம்,  தொடர்ச்சியாக இயங்கிவரும் பாதையில்  நாம் பெற்ற அனுபவங்களின் நிமித்தம், எம் மத்தியில் வாழ்ந்துவரும்  கலை, இலக்கிய சாதனையாளர்களையும் முடிந்தவரையில்,  பாராட்டி கௌரவித்து வந்துள்ளோம்.

 

நின்றேனும் கொல்லும் தீங்கு (05) - (திகில் தொடர்) - சங்கர சுப்பிரமணியன்.


- சங்கர சுப்பிரமணியன்.



"தம்பி சிவாஇங்க என் மக சிவகாமி மயங்கி விழுந்து பேச்சுமூச்சில்லாமல் இருக்காஎனக்கு கையும் ஓடல காலும் ஓடலகொஞ்சம் சீக்கிரம் வாங்க தம்பி." 

மதியின் மாமியார்அழுதபடியே சொன்னார்கள்.


தொலைபேசியை வைத்து விட்டு விபரத்தை 

மனைவியிடம்சொல்லி அவளையும் அழைத்துக் 

கொண்டு மதி வீட்டுக்குச்சென்றேன். சிவகாமியை 

அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிசென்று வேண்டிய 

சிகிச்சையைக் கொடுத்தோம்.

 

சிவகாமிக்கு கவலைப் படும்படி ஒன்றுமில்லை 

என்றாலும்குறைந்த இரத்த அழுத்தமும் ஓய்வு

இல்லாததாலும் தான் தலைசுற்றும் மயக்கத்துக்கும்

கரணம் என்று டாக்டர் சொன்னபின்தான் சிவகாமியின் தாய் சமாதானம் டைந்தார்கள்இருந்தாலும் சிவகாமிஇன்னும் கண்மூடியே இருந்ததால் என்மனைவி 

கற்பகத்தை அவர்களுக்கு துணையாக இருக்கும்படிச்சொல்லிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதுதான்அந்த பயங்கர சம்பம் நடந்தது.

 

சுழன்று கொண்டிருந்த நினைவிலிருந்து மீண்டு வந்த 

என்காதில் காலிங் பெல் மணியின் சத்தம் கேட்கவே 

எழுந்து முன்கதவின் பக்கம் சென்று கதவைத் திறக்க அங்கே என் மனைவி நின்று கொண்டிருதாள்

 

"கற்பகம் உன்னை அவங்களுக்கு துணையாகத்தானே விட்டுவந்தேன்அதற்குள் நீ எப்படி இங்கு வந்தாய்?

யார் உன்னை அழைத்து வந்தார்கள்?

 

"முதல்ல வீட்டுக்குள்ள போங்கல்லத்தையும் 

வாசலிலேகேட்கணுமா?" என்றாள்.

 

"சரிஉள்ளே வாஎன்று அவளை வீட்டினுள் விட்டு 

கதவைத்தாளிட்ட பின்,

மிகுபுகழுடன் வாழ்ந்திடு --- அன்பு ஜெயா, சிட்னி (எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய மண்டிலம்)

 

நாளுமே ஒழுக்கமே முதன்மையாய்க் கொண்டு

    நானிலம் மீதினில் வாழ்ந்திடு சிறப்பாய்!

நாளுமே வளர்ச்சியை நோக்கிநீ முயன்றால்

   நலமுடன் இலக்கினை விரைவிலே அடைவாய்!

ஆளுமை யோடுநீ அனைவரின் வாழ்த்தை

    அன்புடன் பெற்றுமே அமைதியில் வாழ்வாய்;

தாளுமே பணிந்துநீ இறைவனைப் போற்றித்

    தளர்விலா அன்புடன் வணங்கியே வாழ்வாய்!  (1)

 

என்றுமே உண்மையும் நேர்மையும் கொண்டே

    ஏற்றமும் பெற்றிட முயன்றுநீ உழைப்பாய்;

அன்றுதான் சீர்த்தியில் வாழ்ந்திட வழியும்

    அருகினில் தோன்றிடும், அவ்வழிச் செல்வாய்!

இன்றுநீ இளமையாய் இருப்பினும் என்றும்

    இனியநல் பண்பினைப் போற்றியே வாழ்வாய்;

வென்றுநீ வாழ்வினில் உயர்ந்திடப் படியாய்

    விளங்குமே பண்புமே என்பதை அறிவாய்.  (2)

-------------------------------

 

அன்பின் ஆழம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

இன்று எதேச்சையாக Lifestyle Channel இன் பொத்தானை அழுத்தினேன் அங்கு உடற் பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள். போதனையாளர் நடுத்தர வயது பெண் போதனையாளருக்கு இருக்க வேண்டிய சகல திறமைகளும் கொண்டவர், நிகழ்சி திறமையாக யாவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் போதனையாளர் ஒரு பெண்ணை நோக்கி இன்றய உனது சிந்தனைத் துளி யாது என வினவினார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் சிந்தனைக்கு ஒரு சிறு விருந்து கொடுப்பார்கள் போலும். அவள் “அன்பு இருக்கிறதே அதை நாம் இழந்துவிட முடியாது, அது நாம் அள்ளி கொடுக்க கொடுக்க எம்மையே வந்தடையும், எப்போது? மோட்ச உலகிலோ மறு பிறவியிலோ அல்ல, உடனடியாக தொடர்ச்சியாகவே அன்பானது திரும்பி வந்து எம்மையே அடையும் என்றார். இது ஒன்றும் புது கருத்து அல்ல, காலம் காலமாக நாம்கேட்டு வந்ததுதான். வள்ளுவர், சோகிரடீஸ் போன்ற அறிஞர்கள் கூறிதான் உள்ளார்கள். ஆனால் இங்கு பழய உண்மையை ஒரு புதிய ஒளியில் கண்டேன். இங்கோ உடற்பயிற்சியில் ஈடுபடும் ஓர் இளம் பெண் கூறியது, இந்த பின்னணி தான் என் சிந்தனையை கிளறியது எனலாம்.

அன்பு என்பது ஒரு பண்டமாற்று பொருளோ விற்பனை பொருளோ அல்ல, ஆனால் யாவற்றையும் பொருளியல் நோக்கில் அணுகுவோர்க்கு அன்பும் விற்பனை பொருளாகத் தான் காணப்படும். பல நூறு வருடங்களுக்கு முன் பக்தி ரசத்தை பாடலாக வடித்த மாணிக்கவாசர்ருக்கு அவ்வாறே தெரிந்தது போலும். திருவாசகத்தில் ஓர் இடத்தில்,

“ தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை,

சங்கரா யார்கொலோ சதுரர்” என்கிறார்

அதாவது நீ என்னை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக உன்னை எனக்கு தந்தாய், யார் இந்த வியாபாரத்தில் வெற்றி ஈட்டியவர் என்கிறார்.

மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? அவர் அரசனின் மந்திரி, நாட்டை பரிபாலனம் செய்தவர். ஆகவே யாவற்றையும் பொருளியல் ரீதியில்

பார்பதற்கு பழக்கப்பட்டவர், எனவேதான் பக்தியையும் அவ்வாறே நோக்க முனைந்தார்போலும். இன்றய உலகிலும் பக்தியையும் விற்பனை பொருளாக்குபவர்களை நாம் காணத்தான் செய்கிறோம்.