சிட்னியில் நடந்த தமிழ் வளர்த்த சான்றோர் விழா – ஒரு கண்ணோட்டம்

 


 பல்லாண்டுகளுக்கு முன்னர் புகழ் பூத்த தமிழறிஞர் மு. வரதராசனார் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் ஓர் அரிய நூலை எழுதினார்.  அதனை இந்திய சாகித்திய அக்காதெமி வெளியிட்டிருந்தது.  அந்த நூலிலே தமிழ் இலக்கியத்துக்குக் கணிசமான பங்களிப்பைச் செய்திருந்த அனைத்துத் தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும் கால வரிசைப்படி தொகுத்து எழுதி இருந்தார்.

 அந்நூலிலே “நாவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக் குறைய பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார்.  ஆடிப் பிறப்புக் கொண்டாட்டம் முதலியனவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார்...” என்று தங்கத் தாத்தா என நாமெல்லோரும் போற்றுங் கவிஞரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  கம்பனும், இளங்கோவும், பாரதியும் அணிசெய்யும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கைக் கவிஞர் ஒருவரும் இடம்பெற்றார் என்பதே பெருஞ்சாதனை தான்!




அத்தகைய சாதனையாளரின் பெயரன் கவிஞர் இளமுருகனார் பாரதி.  அவர் பல்லாண்டுகளாகச் சிட்னியில் வசித்து வருகின்றார்.   தமிழ் மீது தாளாத அன்பும், பற்றுங் கொண்டவர்.

 

இந்த எண்பது வயது இளைஞர் சென்ற தசாப்தத்தில் தமிழ் வளர்த்த சான்றோர்களுக்காக எட்டு விழாக்களை எடுத்துத் தமிழறிர்கள் பலரைப் பற்றி நாம் அறியவும் நினைவு கூர்ந்து போற்றவும் வாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றார்.

 

தனி மனிதராக இவர் செய்து வரும் பணி போற்றுதற்குரியது. எதிர்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டியாக அமைவது.

 

சிரித்தனன் இறைவன் செப்பினான் விடையை !

 



































எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 63 மலேசியா சுற்றுலாவில் சந்தித்த எழுத்தாளர்கள் பத்துமலையில் அம்மாவுக்காக தரிசனம் ! முருகபூபதி

வௌிநாடுகளுக்குப் புறப்பட்ட வேளைகளில் மலேசியாவுக்கு மேலாக


பறந்திருக்கின்றேன்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் சென்னைக்கு செல்லும் மார்க்கத்தில் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரம் Transit இற்காக நின்றிருக்கின்றேன்.

ஆனால், மலேசியாவுக்குள் சென்றதில்லை. அதற்கான சந்தர்ப்பம் 2006 ஆம் ஆண்டுதான்  கிடைத்தது.  மனைவியின் தம்பி விக்னேஸ்வரன், என்னை மலேசியாவுக்குச்  செல்லும் பேரூந்தில் ஏற்றிவிட்டார்.


பேரூந்தில் பயணித்தால் வீதியின் இருமருங்கும்  காட்சிகளை தரிசிக்கலாம். மலேசியா கோலாலம்பூர் என்றவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் அருட்திரு தனிநாயகம் அடிகளார்தான்.  ஆனால், பின்னாளில் மலேசியன் ஏர் லைன்
370 உம் நினைவுக்கு வருகின்றது.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி வானில் பறந்துகொண்டிருந்தபோது, 227 பயணிகளுடனும் விமான ஓட்டுநர்கள் உட்பட 12 ஊழியர்களுடனும் மாயமாகிய அந்த விமானம் குறித்து இதுவரையில் ஊகங்கள்தான் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு தடவையும் விமானத்தில் பயணிக்கும் எவருக்கும் மாயமான அந்த மலேசியன் ஏர்லைன் 370 விமானம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது !

உலகத் தமிழ் ஆராய்ச்சிக்கு கால்கோள் நாட்டிய மண் கோலாலம்பூர். பிற்காலத்தில் இந்த ஆராய்ச்சி மாநாடுகள் அரசியல் மயமாகி, தமிழக அரசியல்வாதிகளினால் கேலிக்கூத்துக்களை அரங்கமாக்கியதும் தஞ்சாவூரில் ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் நடந்தபோது இலங்கை ஆய்வாளர்களுக்கு கதவடைக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதும்  நாம் அறிந்த செய்திகள்தான்.

தஞ்சாவூர் மாநாட்டு மண்டபத்திற்கு முதலவர் ஜெயலலிதா வந்து அமர்வதற்குத்  தேவைப்பட்ட சிம்மாசனம் பலத்த பாதுகாப்புடன் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டது.  அன்றைய ஆளுநர் மங்கலவிளக்கேற்றவேண்டிய பெரிய குத்துவிளக்கை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எடுத்துவருவதற்கு மறந்துவிட்டார்கள்.

இறுதியில் ஒரு சிறிய குத்துவிளக்கை எங்கேயோ தேடி எடுத்து மங்கல விளக்கேற்றினார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் முகம் இறுக்கமானது. தனது அதிகாரிகளை அவர் கடிந்துகொண்டார்.

தமிழாராய்ச்சி மாநாட்டை கலைஞர் பதவிக்காலத்தில் நடத்த முடியாதுபோய்விட்டது. அதனால் அவர் செம்மொழி மாநாடு நடத்தினார். இங்கு  தனிநாயகம் அடிகளார் மறக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது நடந்த அநர்த்தங்களும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் உக்கிரமடைவதற்கு காரணமாகியது.

பனிப்புகை கன்பரா யோகன்

திருமண வரவேற்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் விருந்துபசார  மண்டபம் அரையிருட்டாகவிருந்தாலும் கூரையிலிருந்து வர்ண ஒளிக் கற்றைகள் சுற்றிச் சுழன்று விழுந்து கொண்டிருந்தன. சிவப்பு நிறத்தில் கார்பட் விரிக்கப்பட்டிருந்த தரையெங்கும் அவை சிதறிப் பரவி ஒளிந்து ஓடுவதும், பிறகு வருவதுமாக வர்ண வித்தை காட்டிக் கொண்டிருந்தன.   

‘ஒரு கிழமைக்கு முன்பாகவே வந்து நின்றுவிடு’ என்று உத்தரவு போட்ட சித்தியிடம் மறுப்புச் சொல்ல முடியாமல் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து  நளினிச் சித்தியின் மகளின் திருமணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே சிந்துஜா விமானத்தில் வந்திருந்தாள்.  சிந்துஜாவின் கணவன் திருமணத்துக்கு வர முடியவில்லை

பெற்றோர் நிச்சயம் பண்ணிப் பார்த்து வைக்கும் கலியாண  வீடு என்றால் எல்லாம்  தடல் புடலாகத்தான் நடக்க வேண்டும். அதுவும் சித்தியின் மகள் வர்மிகா  முப்பது வரும் வரை கலியாணத்தை  தள்ளிப் போட்டு வந்து கடைசியில் சம்மதித்ததில்  நளினிக்குப் பெரிய மனப் பாரம் குறைந்த மகிழ்ச்சி.

ரிஷப்சனுக்கு  வந்ததிலிருந்து நளினிச் சித்தி பம்பரமாக ஓடியோடி ஒவ்வொரு மேசையிலும் வந்த ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். சிந்துஜாவுடன் அவளுக்குப் பேசவே நேரமில்லை. மண்டபத்தில் லூசியாவைத்தவிர அவளுக்கு எவரையும் தெரியவில்லை. நல்ல வேளையாக லூசியாவும் அவள் இருந்த அதே மேசையில் இருந்ததால் சற்று சகஜமாக இருக்க முடிந்தது,

லூசியா குளிருக்கு மேலே ஒரு ஷோல் ஒன்றைக் கழுத்துவரை போர்த்தியிருந்ததால்  கழுத்தில் என்ன அணிந்திருக்கிறாள் என்பது தெரியவில்லை. வயது அறுபத்தைந்துக்கு மேலிருக்கும்.

லூசியாயாவின் கணவனும் அந்த விருந்தில் கலந்து கொள்ளாததால் சிந்துஜாவுக்கு தான் மட்டும் தனியாள்  இல்லை  என்ற நினைப்பு ஆறுதலைத் தந்தது. மேசையிலிருந்த மற்றய மூன்று பெண்களுக்கும் கணவன்மார் பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

அந்தப் பெண்கள் மூவரும் மேசையிலிருந்த சிவப்பு வைனை  கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டனர். ஆண்கள் சிலர் எழுந்து பிரிஸ்டோ என்கிற சிறிய மதுக்கூடம் நோக்கி சென்றவர்கள் மேசைக்குத் திரும்பவில்லை. சிலர் அப்படியே வெளியே சென்றனர். மேசைகளில் முதலில் இருந்த ஒழுங்கு கலைந்து அவரவர் தமக்கு விருப்பமான மேசைகளில் சென்று அரட்டையடிக்கத் தொடங்கினர். 

லூசியா தனது வைன்  கிளாசில் அரைவாசிக்கு சிவப்பு வைனை ஊற்றினாள் சிந்துஜாவுக்கு தனக்கு வேண்டாமென்றாள். சிவப்பு வைன் நல்லதுதான் என்று சொல்லிக் கொண்டே சிந்துஜாவின் கிளாசில் அரைவாசி நிரப்பினாள். அதன் கசப்பை  சிந்துஜா விரும்பியதில்லை. நல்லதாக இருப்பதற்காக இப்படிக் கசப்பாக இருக்க வேண்டுமா?

மற்றைய பெண்கள் மூவரும் வைன் அருந்த ஆரம்பித்திருந்தனர். அதில் ஒருத்தி இவளை ஏளனமாகப் பார்த்தது சிந்துஜாவுக்கு புரிந்ததும் உடனே தனது வைன் கிளாஸை கையில் எடுத்துக் கொண்டாள். கணவனுடன் வந்திருந்தால் சிந்துஜாவுக்கு சங்கடமாக இருந்திராது. அதற்காக மற்றைய பெண்களுக்கு முன்னால் சிறுமைப்பட முடியுமா?

சிந்துஜாவின் கணவன்  அலுவலக  வேலையாக  தலைமையலுவலகம் இருந்த நகரத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவன் பொறியியல் நிறுவனமொன்றில் உயரதிகாரி.  அந்த நிறுவனத்தின் செலவிலேயே ஏற்பாடு செய்த ஹோட்டல். விமானப் போக்குவரத்து வசதிகள் எல்லாம்.

ராஜன் வெளியூர்ப் பயணம் போகும்போது சிந்துஜா வீட்டிலில்லாமல் போனது இதுதான் முதல் தடவை.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் வவுனியா – நுவரேலியா மாவட்ட மாணவர்களுக்கு உதவி


அவுஸ்திரேலியாவில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை  ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் வதியும்  வறுமைக்கோட்டின் கீழ்  வதியும்  தமிழ் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வவுனியாவிலும் நுவரேலியாவிலும்  வழங்கப்பட்டன.

வவுனியாவில் சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் இயங்கும்


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ( Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD)  அலுவலகத்தில்  அண்மையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் திரு. தர்மலிங்கம் கணேஷ் தலைமையில் நடந்த   இந்நிகழ்வில் நிறுவன இணைப்பாளர் திருமதி, கிருஷாந்தி, நிதி இணைப்பாளர் திருமதி சுகன்யா, முகாமைக்குழு உறுப்பினர்கள் திருமதி தனிஷா, திரு. திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்  2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதிக்கொடுப்பனவு  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட மாணவர்களும், அவர்களின் தாய்மாரும் பாதுகாவலர்களும்  கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கான தகவல் அமர்வும் இடம்பெற்றது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப் பெறும் மாணவர்களின் அரையாண்டு கல்வி உதவிப்பணமும் அவர்களின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டது.

 மலையகத்தில்

கல்வி நிதியத்தின் மலையக தொடர்பாளர் அமைப்பான மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  (Plantation Community Development Organization) கண்காணிப்பில் உதவி வழங்கப்படும் மாணவர்களுக்கும் அண்மையில் இந்த ஆண்டிற்கான முதல் கட்ட நிதியுதவி வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட அமைப்பின் தலைவர் திரு. அரியமுத்துவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலும்  உதவிபெறும் மாணவர்களின் தாய்மாரும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கும்  கடந்த மாதம் நிதியுதவி யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் வழங்கப்பட்டது.

அறிவாளி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 


தமிழில் வெளிவரும் படங்கள் பலவற்றின் கதைகள் பல வேற்று மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டனவாகவே இருந்துள்ளன. சில படங்களில் கதை எவரால் எழுதப்பட்டது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் சொல்லப்பட்டிருக்கும். பல படங்களில் அவை வெளிப்படுத்தப் படாமலே வெளியாகி இருக்கும் . அவ்வாறு வெளியான ஒரு படம்தான் அறிவாளி.

ஆங்கிலத்தில் தலை சிறந்த நாடக ஆசிரியராக திகழ்ந்த வில்லியம்

ஷேக்ஸ்பியர் எழுதிய The taming of shrew என்ற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு ஏ டி கிருஷ்ணசாமி தமிழில் பெண் படுத்தும் பாடு என்ற நாடகத்தை எழுதி அதனை வை ஜி பார்த்தசாரதியின் நாடக சபா மேடையேற்றி வந்தது. அந்த நாடகமே பின்னர் 63ம் ஆண்டு அறிவாளி என்ற பேரில் படமாக வெளிவந்தது.

ஏவி மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களை இயக்கியவரும், சிவாஜியின் வெற்றி படமான தூக்கு தூக்கி படத்துக்கு வசனம் எழுதியவருமான ஏ டி கிருஷ்ணசாமி இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே படம் தயாரிக்கப்பட்டது.


செல்வந்தர் மகளான மனோரமா ஓர் அடங்காபிடாரி. அவளை திருமணம் செய்ய எவருமே முன்வருவதாக இல்லை. அப்படியே எவரேனும் வந்தாலும் அவளால் அவர்கள் அவமானப்படுத்தப் பட்டு விரட்டப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆளவந்தான் என்ற கிராமத்து பட்டதாரி இளைஞன் அவளை துணிந்து மணக்க முன்வருகிறான். ஆரம்பத்தில் அவனை வெறுக்கும் மனோரமா பின்னர் ஒருவிதத்தில் அவனை மணக்கிறாள். அவளை எவ்வாறு ஆளவந்தான் வழிக்கு கொண்டு வருகிறான் என்பதே படத்தின் கதை.

இந்த கதையுடன் கிராமத்து அப்பாவிப் பெண்ணான தங்கலக்ஷ்மியை மணக்கும் முத்துவேல் , மனோரமாவின் சகோதரி இந்தியாவை மணக்கும் எக்ளோவ் இவர்களின் கதைகளும் இணைக்கப் பட்டு அறிவாளியாக உருவெடுத்துள்ளது.

ஆளவந்தானாக வரும் சிவாஜி இயல்பாக நடித்திருந்தார். அடங்காபிடாரியான தனது மனைவியை வன்முறையில் அடக்காமல் சமோயோசித்தமாக திருத்துவது சபாஷ் போட வைக்கிறது. அடங்காபிடாரி மனோரமா பாத்திரம் பி பானுமதிக்கு கச்சிதமாக பொருந்துகிறது. அவரின் அலட்சிய நடிப்பு ரசிக்கும் படி அமைந்தது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு ( மெய்நிகர் நிகழ்ச்சி ) 13-05- 2023 – சனிக்கிழமை

                   சங்கத்தின் பரிசுகளைப்பெற்ற

இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்

தலைமையுரை: திருமதி சகுந்தலா கணநாதன்

வேப்பமரமும் பவளம் ஆச்சியும் ( சிறுகதை )

                            விவேகானந்தனூர் சதீஸ். 

கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை )

                              சி. கருணாகரன். 

மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை )

                        அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்.

உரைகள் :  திருமதி கலாதேவி பாலசண்முகன்

                                   திரு. தானா. விஷ்ணு

                         திரு. பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.   

          அவுஸ்திரேலியா நேரம் இரவு : 7-00 மணி,

 இலங்கை – இந்தியா நேரம் மதியம்  2-30 மணி

             இங்கிலாந்து – முற்பகல் 10-00 மணி

                 நியூசிலாந்து – இரவு 9-00 மணி

         ஜெர்மனி- பிரான்ஸ்  முற்பகல் 11 மணி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. லெ. முருகபூபதி

சிலப்பதிகார விழா சிட்னி - 27/05/2023 மாலை 5:30



வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் ? ! அவதானி


தற்கொலை செய்துகொள்வதற்கு பலரும் பல காரணங்களைச் சொல்வார்கள்.  காதல் தோல்வி, அவமானம்,  விரக்தி, பாலியல் தொல்லை,  சொத்திழப்பு, ஏமாற்றம், மனவுளைச்சல்  உட்பட எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால்,  தம்மைப்பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள்  ஒரு தாயோ தந்தையோ வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகளையும் ஏமாற்றங்களையும் கடந்து வந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்து பார்ப்பதில்லை.

யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராண கலாசாரம் எனத் திருவாய் மலர்ந்தவர் இங்கு வாழ்ந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை.  அத்தகைய யாழ். குடாநாடு தற்போது எந்தத் திசையில் செல்கிறது…?  என்பதைப் பார்க்கும்போது சமூக அக்கறைகொண்ட ஆர்வலர்களுக்கு வேதனைதான் எஞ்சியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த பதினாறு மாத காலத்துள், பதினொரு


சிறார்கள் உட்பட 229 பேர் தற்கொலை செய்து மடிந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இவர்கள் என்ன காரணத்தினால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதற்கு அவரவர் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணங்களை கூறலாம்.  கற்பிக்கலாம்.

ஆனால் அவர்கள் இழந்தது பெறுமதியான மனித உயிர்களை.  சீரான வாகனப் போக்குவரத்து இன்மையாலும், வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாதமையினாலும் கவனக் குறைபாட்டினாலும் நாளாந்தம் வீதி விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் உயிர்ப்பலிகள் தொடருகின்றன.

அத்துடன் இளம் தலைமுறையிடத்தில் போதைப் பாவனையும் அதிகரித்து வருகிறது.  யாழ். போதனா மருத்துவமனையில்  போதை வஸ்து பாவனையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பற்றியும் அறிகின்றோம்.

இந்தச் செய்திகளின் பின்னணியில் தற்போது யாழ். குடாநாட்டில் தற்கொலை மரணங்களும் அதிகரித்திருக்கும் திடுக்கிடும் செய்தி வெளியாகியிருக்கிறது.

எனினும்,  யாழ்ப்பாணத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கான சீர்மிய தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே இயங்கி வருகின்றன.

அண்மையில் ஒரு படித்த இளம்பெண் தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.  அதனை அரசியல் கண்ணோட்டத்திலும் பார்த்தார்கள்.

சில நாட்களில் அந்தச்செய்தி அடங்கிவிட்டது.  கொழும்பிலும் ஒரு முன்னாள் அமைச்சரின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த பெண் எரியுண்டு இறந்தார்.

இச்செய்திகள்  சில நாட்களில் அடங்கிவிடும்.

சில மாதங்களுக்குப் பின்னர் பொலிஸ் திணைக்களம் வெளியிடும் புள்ளி விபரங்கள்  அடங்கிய குறிப்பில்தான் எத்தனை மரணங்கள் தற்கொலையால் சம்பவித்திருக்கின்றன என்பதை தெரிந்துகொள்கின்றோம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஏப்ரில் மாதம் வரையிலான 16 மாத காலப்பகுதியில் யாழ்ப்பாணம் குடாநாட்டில்தான் 229 பேர் தங்கள் உயிர்களை தாங்களே மாய்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று பொலிஸ் தரப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது. இவர்களில் பதினொருபேர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள். வாழ்ந்திருக்கவேண்டியவர்கள். சமூகத்தில் தொடர்பாடல் அருகிவருவதும் இதற்கு அடிப்படைக்காரணமாகியிருக்கிறது. ஆனால், நவீன டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் பெருகியிருக்கின்றன.  கைத் தொலைபேசியின் தொடு திரையில் நேரத்தை செலவிடும் மக்கள்,  பரஸ்பரம் ஆளையாள் பார்த்தோ, தொடர்புகொண்டோ பேசுவது குறைந்துகொண்டிருக்கிறது.

இலங்கைச் செய்திகள்

 யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி

வலி வடக்கு விஹாரை விவகாரம்; சுமந்திரன், மாவை கடும் எதிர்ப்பு வெளியீடு

தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம்

சார்ள்ஸின் முடிசூட்டு விழாவிற்காக ஜனாதிபதி பிரிட்டன் பயணம்

நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு


யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.

உலகச் செய்திகள்

 புட்டினை கொல்ல உக்ரைன் முயன்றதாகக் குற்றச்சாட்டு

உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் அஜய் பங்கா

சூடானில் இருந்து 800,000 பேர் வெளியேறும் அச்சம்

 உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் சரமாரி வான் தாக்குதல்

சூடானில் மோதலுடன் போர் நிறுத்தம் நீடிப்பு

அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்துள்ளது தாய்வான்


புட்டினை கொல்ல உக்ரைன் முயன்றதாகக் குற்றச்சாட்டு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை படுகொலை செய்யும் நோக்குடன், கிரம்லின் மாளிகை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

சிவஞானத் தமிழ் ப் பேரவை ஆஸ்திரேலியா - 88ம் அமர்வு 13 மே 2023 சனிக்கிழமை

 





தமிழ் சினிமாத்துறையில் அடுத்தடுத்து துயரங்கள்!

 Thursday, May 4, 2023 - 6:00am

தமிழ் சினிமா கடந்த 5 மாதங்களில் இரு நகைச்சுவை ஜாம்பவான்களை இழந்து விட்டது. முதலில் மயில்சாமி, நேற்று மனோபாலா காலமானார். சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம் உள்ளிட்ட பாத்திரங்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நகைச்சுவை என்றால் அது ஆசீர்வதிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியும். அழுகை காட்சியில் கூட நடித்துவிடலாம். ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது என்பது கடினமானது.

அந்த வகையில் இந்திய சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் வந்தாலும் நாகேஷ், பாலையா, கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல், சந்தானம், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரின் நகைச்சுவைக்கு நிகரில்லை.

இவர்களால் நிறையப் படங்களில் கதையே இல்லாவிட்டாலும் அப்படங்கள் ஓடிய காலங்கள் உள்ளன. அந்த வகையில் ஏற்கனவே நாகேஷ், பாலையா, சந்திரபாபு, விவேக், மயில்சாமி உள்ளிட்டோரை சினிமா உலகம் இழந்து விட்டது. நேற்று மனோபாலா காலமானார்.

எத்தனையோ படங்களில் நகைச்சுவையில் கலக்கிய இவரது இழப்பு சினிமா உலகத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மிகவும் வேதனையடையச் செய்துவிட்டது. கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா நேற்று காலமானார். நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் அவர். நிறைய படங்களில் நடித்துள்ளார். இயக்கியும் உள்ளார்.

இவரது முதல் படம் ஆகாயகங்கை. ஊர்க்காவலன், பிள்ளை நிலா, மல்லு வேட்டி மைனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை என்ற படம் இவரது தயாரிப்பில் உருவானது. நகைச்சுவை என வந்துவிட்டால் தன்னை விட வயதில் சிறியவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் நடித்து மக்களை சிரிக்க வைப்பார்.

சந்தானம் அவருடைய உடல் அமைப்பை எத்தனையோ முறை கிண்டல் செய்து நகைச்சுவை காட்சிகளை வைப்பார். ஆனால் எதற்கும் அசராத கலைஞனாக மனோபாலா இருந்தார். அது போல் சினிமாத்துறையில் யார் மறைந்தாலும் அந்த இறப்புக்கு இரங்கல் தெரிவிக்க முதல் ஆளாக மனோபாலா வந்துவிடுவார். இறுதியாக மயில்சாமியின் மறைவுக்கு வந்த மனோபாலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

இந்த ஆண்டு பிறந்து 5 மாதங்களில் இரு நகைச்சுவை நடிகர்களை சினிமா உலகம் இழந்து விட்டது. இது உண்மையில் சினிமாத் துறைக்குக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரிழப்பாக இருக்கும். இது சினிமா துறைக்கு சாபக்கேடா என்று நடிகர் மதன்பாப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   நன்றி தினகரன்