வாசல்வரும் தீபாவளியை வரவேற்போம் வாருங்கள் !

தமிழ்முரசு அவுஸ்திரேலிய வாசகர்கள் அனைவருக்கும் எமது தீபாவளி வாழ்த்துக்கள் .




மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 

அரக்கனாய் இருந்தவன் அகன்றகன்று ஓடுகிறான்

அல்லலுற்ற அனைவருமே ஆறுதலாய் ஆகிவிட்டார்
ஒளியூட்டும் தீபாவளி ஓடிவந்து நிற்கிறது
வழிபிறந்த தென்றெண்ணி வரவேற்போம் வாருங்கள்

ஈழத்து வானொலி ஊடகவியலாளர் “சுந்தா” சுந்தரலிங்கம் அவர் தம் நினைவில் இருபதாண்டுகள் - கானா பிரபா

 இன்றோடு எமது இலங்கை வானொலியில் ஆட்சி செய்த குரல்களில் ஒன்றாக விளங்கிய “சுந்தா” சுந்தரலிங்கம் அவர்களது 20 வது ஆண்டு நினைவாகும்.

தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு “சுந்தா அங்கிள்”. இம்மட்டுக்கும் அவரோடு நேரடியாக முகம் கொடுத்துப் பழகவில்லை.
ஈராயிரத்தின் முற்பகுதியில் என் வானொலி யுகத்தின் கன்னிப் பருவம் அது. அப்போது வானொலிக் குரல்களில் பழக்கப்பட்ட திரு. கணேசன் மேகநாதனும், நானுமாக ஒரு சனிக்கிழமை இரவு நேயர்களுடன் கலந்துரையாடும்
கருத்துக்களம் நிகழ்ச்சி படைக்கின்றோம். நிகழ்ச்சி முடியும் போது அதிகாலை ஒரு மணி இருக்குமென்ன்று நினைக்கின்றேன். அந்த நேரத்தில் ஒரு பாராட்டு அழைப்பு வருகின்றது.
அது “சுந்தா” அங்கிள் தான். மறு நாள் எங்கள் இருவருக்கும் தன் கையெழுத்திட்ட தன்னுடைய வானொலி வாழ்வின் சுய வரலாற்றுப் பகிர்வான “மன ஓசை” நூலையும் எம்மிடம் சேர்ப்பிக்கின்றார்.

அதுதான் எனக்குக் கிடைத்த முதல் வெகுமதி. அன்றிலிருந்து 21 ஆண்டுகள் வானொலிப் பயணம் தொடர்கின்றதென்றால் அதன் மூல விதை இப்பேர்ப்பட்ட மூத்த ஊடகர் இலங்கையிலும், புலம்பெயர் சூழலிலும் வானொலி ஊடகப் பணியில் பல்லாண்டு அனுபவம் கொண்டவர் கொடுத்த பாராட்டு. அதற்கு விலை இல்லை அதனால் தான் அது இன்னமும் என் மனசில் இருக்கின்றது. இளம் ஊடகரைத் தட்டிக் கொடுக்கும் பண்பு அவரிடம் ஏகலைவனாகக் கற்ற பால பாடமது. அதன் பின் என் இணைய வலைப்பதிவு உலகின் முதல் வாசகி, மூத்த வாசகியாக அன்போடு அழைக்கும் பராசக்தி ஆன்ரியைக் கொடுத்து விட்டுப் போய் விட்டாரோ என்று நினைப்பதுண்டு. ஏனெனில் என்னுடைய படைப்பு எது வந்தாலும் அதைப் படித்து விட்டுக் கருத்துச் சொல்லி விட்டுத் தொடரும் பண்பை இந்த 16 வருட இணைய வலைப்பதிவு வாழ்வில் ஆன்ரி வழியாகக் காண்கின்றேன்.

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 65 “ எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் “ " மீர் துர்ஷ்பா ஃபெஸ்டிவல், சால்யூட் ஃபெஸ்டிவல் " மாஸ்கோ வீதிகளில் ஒலித்த பாடல்கள் முருகபூபதி

 


மாஸ்கோவில் அனைத்துலக மாணவர், இளைஞர் விழா லெனின்  ஸ்ரேடியத்தில் தொடங்குவதற்கு முன்னர்  பிரம்மாண்டமான   ஊர்வலம்  நாம் தங்கியிருந்த மாஸ்கோவில் புகழ்பெற்ற இஸ்மாயிலோவா  நட்சத்திர விடுதியின் முன்னாலிருந்து புறப்பட்டது.

 எமது வழிகாட்டித் தோழர் தோழியரிடமிருந்து  அந்த விழாவை வாழ்த்தும் கோஷங்களை ருஷ்ய மொழியில் எவ்வாறு உச்சரிப்பது என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

 156 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் அணிவகுத்துச்சென்ற நீண்ட ஊர்வலம் அது.

 அந்த நாட்டின் பொது மக்கள் வீதியின் இருமருங்கும் நின்று


கையசைத்து எமக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களில் குழந்தைகளும் இடம்பெற்றனர்.

 எனக்கு அக்குழந்தைகளை பார்த்ததும் எனது குழந்தைகளின் ஞாபகம் வந்துவிட்டது.   ஒரு குழந்தை என்னைப்பார்த்து சிரித்து கையசைத்தது.  அந்தச்சிரிப்பு என்னை கொள்ளை கொண்டது.  அருகே சென்று  அதன் தந்தையிடம்  குழந்தையைக்  கேட்டு வாங்கி தூக்கிக்கொண்டேன்.

 எனது செயல்கண்டு அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்.  நானும்

"  மீர் துர்ஷ்பா ஃபெஸ்டிவல்,   சால்யூட்  ஃபெஸ்டிவல் "  என்று உரத்துக்  குரல் எழுப்பினேன்.  அந்தக்குழந்தையின் தந்தையும் தாயும் என்னுடன் சிறிது தூரம் நடந்து வந்தார்கள்.

 அந்த ஊர்வலத்தில் நடந்து   சென்றுகொண்டிருந்த போது,  இலங்கையிலிருந்து  வந்த சமசமாஜக்கட்சிப் பிரதிநிதி ஒருவர்   என்னைத்தேடிவந்து   ஒரு  செய்தி சொன்னார்.

 அமெரிக்காவிலிருந்து  ஒரு  இளம்பெண்  வந்திருப்பதாகவும்.   அவருக்கு நன்றாகத்  தமிழ்பேசத்தெரியும்  என்றும்  தமிழ்  தெரிந்த                 ஒருவரைத்தேடுகிறார்   எனச்சொல்லிக்கொண்டு  என்னை           அவர்  நின்ற  இடத்துக்கு அழைத்துச்சென்று   அறிமுகப்படுத்தினார்.

தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும் ! [ தேடல் இரண்டு ]


 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


தேடப்படாத காவியங்கள் வரிசையில் வளையாபதிபோல்

இருப்பதுதான் குண்டல கேசியாகும். வளை யாபதி ஒன்பதாம் நூற்றைண்டைச் சேர்ந்தது. குண்டலகேசி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாய் இருக்கிறது. வளையாபதியின் ஆசிரியர் இன்னார் என்று அறியா நிலை இரு க்கிறது. ஆனால் குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார் என்று காட்டப்படுகிறார்.எழுபத்து இரண்டு பாடல்களுடன் வளையாபதி அமைய குண்டலகேசியோ மிகக்குறைந்த அளவில் பத்தொன்பது பாடல்க ளுடன் இலக்கி யமாய் கவனிக்கப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயா கும்.வளையா பதி சமணத்தைப் பேச குண்டலகேசியோ பெளத்தத்தைப் பேசுகிறது.

  சிலம்பிலும் பெண்தான்.மணிமேகலையிலும் பெண்தான். சிந்தாமணியிலும் பெண்ணே. குண்டலகேசிலும் பெண்தான் வந்து முன்னிற்கிறாள். பெண்கள் இல்லை  என்றால்  காப்பியங்களே இல்லை என்று சொல்லும் வகையில் காப்பியங்களைக் கொண்டு செல்லும் விதத்தில் பெண்களே இருப்பதும் நோக்கத்தக்தேயாகும்.அதே வேளை வணிகர் குலம் என்பதும் தொடர் நிலையாக இருப்பதையும் காண்கின்றோம்.வளையாபதியில் வருகின்ற கதாநாயகன் வணிகர் குலத்தவன். குண்டலகேசியின் கதாநாயகியும் வணிகர் குலத்தவள்தான். ஆனால் கதையின் போக்கு மட்டும் மாறுபடுகிறது.

பாரதி தரிசனம் - அங்கம் 08 பாரதியும் சிறுகதை இலக்கியமும் வ.வே.சு. ஐயரின் “ குளத்தங்கரை அரசமரம் “ தமிழில் வெளிவந்த முதல் சிறுகதையா..? முருகபூபதி


பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும்  என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர்  ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் )  எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர்.

இவர்  1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி


வரகனேரியில் பிறந்தார்.  இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது  தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர்.

சுதந்திரம் சும்மா கிடைக்காது,  ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. 

பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும்  முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார்.

பாரதி  மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர்   கைதாகி சிறைசெல்லுகிறார்.  பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து,  அவரைச்சென்று பார்க்க விரும்பும்  ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.

பாரதியும் சிறை சென்று மீண்ட செம்மல்.  ஒரு முன்னாள் கைதியை பார்க்க இந்தக்கைதி விரும்பியபோது,  பொலிஸார் அதற்கு அனுமதி தந்து திருவல்லிக்கேணிக்கு அழைத்துச்செல்கின்றனர்.

மருந்து அருந்தாமல் அடம்பிடிக்கும் பாரதியிடத்தில்,  மிகுந்த அக்கறையோடு மருந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுவிட்டு சிறைசெல்லும்  வ.வே.சு. ஐயர், விடுதலையாக வந்தபின்னர்  1922 ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடக்கி  அதனை  இயக்குவதற்காக பரத்வாஜ்  என்ற ஆசிரமத்தையும் அமைத்தார்.  

கந்தபுராண சொற்பொழிவுகள் - இணையவழி சந்திப்பு சைவசித்தாந்த மையம், விக்டோரியா ) 06- 07.11.2021

 .

நவம்பர் மாதம் 6ம்  திகதி சனிக்கிழமை காலை 11 மணிக்கும் 

நவம்பர் மாதம் 7ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும் 

அவுஸ்ரேலிய  நேரப்படி இடம்பெறும் 

ON ZOOM

https://us02web.zoom.us/j/87533909173?pwd=blVOeG5KdE5iZS90YmFRWUhGOGw2Zz09

 

ZOOM Meeting ID: 875 3390 9173--Passcode: 468686

 

ON youtube

https://www.youtube.com/channel/UCo0Y83u7YM7n9rrU-TB3Rag 

 

பங்குபெறுவீர்பயனுறுவீர்!

 

சைவசித்தாந்த மையம்

விக்டோரியா.



கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினான்கு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

    பனை ஓலையுடன் சமமாக நிற்கமுடியாது என்பதைக்


தெரிந்ததும் தென்னை ஓலை ஒதுங்கிக் கொண்டு விட்டது.பனை ஓலையின் பயன் பாடு பல நிலையில் இருப்பதுதான் முக்கியம் என்பதைக் கருத்திருத்த வேண்டும்.மழைக்குக் குடையாகப் பனை ஓலை வந்தது.அத்துடன் நின் றுவிடாமல் வெயிலினின்றும் காத் துவிட தொப்பியாய் வடிவம் எடுத்து வந்திருக்கிறது. தொப்பி என்றவுடன் - இன்று பலவித வடிவங்களில்
பலவித வண்ணங்களில் தொப்பிகள் வந்திருப்பதைக் காணுகிறோம். அந்தத் தொப்பிகளை வாங்கிப் பயன்படுத்துவதையும்  காணுகிறோம் இப்படி வருகின்ற தொப்பிகளுக்கு மத்தியில் - எங்கள் பனை ஓலை யினால் ஆகிய தொப்பிகளும் வந்திருக்கின்றன என்பதும் நோக் கத்த க்கது. 

   பனை ஓலையுடன் சமமாக நிற்கமுடியாது என்பதைக் தெரிந்ததும் தென்னை ஓலை ஒதுங்கிக் கொண்டு விட்டது.பனை ஓலையின் பயன் பாடு பல நிலையில் இருப்பதுதான் முக்கியம் என்பதைக் கருத்திருத்த வேண்டும்.மழைக்குக் குடையாகப் பனை ஓலை வந்தது.அத்துடன் நின் றுவிடாமல் வெயிலினின்றும் காத் துவிட தொப்பியாய் வடிவம் எடுத்து வந்திருக்கிறது. தொப்பி என்றவுடன் - இன்று பலவித வடிவங்களில்  காணுகிறோம் இப்படி வருகின்ற தொப்பிகளுக்கு மத்தியில் - எங்கள் பனை ஓலை யினால் ஆகிய தொப்பிகளும் வந்திருக்கின்றன என்பதும் நோக் கத்த க்கது.    

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியிலிருக்கும் மாகாண சபை விவகாரம் ! அவதானி


விடாக்கண்டர்களுக்கும் கொடாக்கண்டர்களுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமடைந்திருக்கிறது மாகாண சபை விவகாரம்.

தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து , தமிழின விடுதலைப்போராட்டமாக உக்கிரமடைந்து,  அரச தரப்பு ஆயுதப்படை இழப்புகளை சந்தித்ததையடுத்து, தென்னிலங்கையில் சிங்கள பேரினவாத சக்திகள் தமிழ் மக்களை தாக்கியும் தமிழர்களின் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவம் ஆடியதையடுத்து, அண்டை நாடான இந்தியா தலையிடத் தொடங்கியது.

அதன் தலையீடு இற்றைவரையில் நீடித்திருப்பதற்கு அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் அன்றைய இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனாவும் 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கைச்சாத்திட்ட ஒப்பந்தமே அடிப்படைக் காரணமாக விளங்குகிறது.

 அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம்


சரியாக அமுலாகவில்லை.

இலங்கையில்  ஒன்பது மாகாணங்கள். தமிழர் தாயகம் எனச்சொல்லப்படும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் வகையில்தான்  34 வருடங்களின் முன்னர்  மாகாண சபைத் தேர்தல் நடந்தது.

ஆனால், அந்த ராஜீவ் – ஜே. ஆர். ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத பிரதமர் பிரேமதாச அதிபராக பதவியேற்றதும்,  தம்மைப்போலவே அந்த ஒப்பந்தத்தை எதிர்த்த விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை  My Boys என அழைத்து கொழும்பில் சந்திப்புகளை நடத்தினார்.

இறுதியில் என்ன நடந்தது..?

வடக்கு – கிழக்கு மாகாண சபையும் சிதறுண்டது.  தமிழ்நாட்டில் -ஶ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தியும் இலங்கையில் தலைநகரத்தில் பிரேமதாசவும் தற்கொலைக் குண்டுதாரிகளினால் சிதறுண்டுபோனார்கள்.

 

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண           சபையானது குறிப்பிட்ட  அந்தந்த மாகாணத்தின் விவசாயம், கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், வீதிப் போக்குவரத்து, சமூக சேவை  முதலானவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கவேண்டும்.

இவை தவிர  பொலிஸ், காணி அதிகாரமும்  அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.   ஆனால், மத்திய அரசு அதற்கு தொடர்ந்து மறுத்துவருகிறது.

கடந்த 34 வருடகாலமாக மறுத்துவருகிறது.

எங்கள் வேர் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

இன்று எமது வாரிசுகள் ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள்.பெரும்பாலும் இவர்கள் தமது பாரம்பரியத்தை அறியாதவர்கள். பிறநாட்டில் நாம் அந் நாட்டு பிரஜைகளாக வாழ்ந்த போதும் அந் நாட்டவரோ எம்மை வந்தேறு குடிகளாகவே கருதுகிறார்கள். இதனால் எமது இளம் சிறார்கள் முற்றுமுழுதாக இந்த நாட்டவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்துடன் வாழ்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆமாம், சுதந்திரம் என்பது மனோரீதியாக இவர்கள் தாம் எந்த நாட்டவருடனும் சரிநிகர் சமானமாக நிற்கக் கூடியவர்கள் எனக் கருதுவதை உள்ளடக்கி நிற்கிறது. பல இளம் தலைமுறையினர் இந்தக் கறுப்புப் பெற்றோருக்கு பிறந்து நாம் அல்லல் பட வேண்டி உள்ளதே எனப் புளுங்கத்தான் செய்கிறார்கள். காரணம் நம் பாரம்பரியம், நாடு யாவும் அடிமைப்பட்ட பூர்வீகம் உடையது என்ற அவர்களின் மனதில் ஆழ வேரூன்றிப் போயுள்ள எண்ணமே. தொழில்நுட்ப விஞ்ஞான அறிவில் முன்னேறியது மேற்கு நாடுகள். எம்மவரோ எதையும் அறியாதவர் என அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.

இந்தப் பின்னணியில் அவர்களுக்கு நமது சரியான பூர்வீகத்தை அறியத் தருவது நமது கடமையாகும். இதன் மூலம் அவர்கள் தமது பூர்வீகம் சிறந்த பின்னணியில் அமைதிருப்பதை அறியும் போது தாழ்வு மனப்பாண்மையை விடுத்து சிறந்த ஒரு பூர்வீகத்தின் வாரிசுகள் என்ற பெருமிதத்துடன் வாழ முடியும். இதை அறிந்து இவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது நமது கடமையாகும்.



பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - மூன்று தெய்வங்கள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 18

 .

மனிதன் என்பவன் கடவுளாகலாம் என்று கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி உள்ளார். தன் துன்பத்தை மதியாது  பிறர் துன்பத்தை துடைக்க முன் வருபவர்கள் அனைவரும் தெய்வங்களாக போற்றப் படுவார்கள் என்ற கதையின் அடிப்படையில் உருவான படம் தான் மூன்று தெய்வங்கள்.ஸ்ரீ புவனேஸ்வரி மூவிஸ் தயாரிப்பில் வண்ணப் படமாக இது உருவானது படத்தில் ஒன்றிற்கு பதிலாக மூன்று கதாநாயகர்கள்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன்,நாகேஷ் என்று மூவரும் இப் படத்தில் கதாநாயகர்களாக நடித்தார்கள்.அதிலும் விஷேசம் என்னவென்றால் மூவருக்குமே மேக் அப் கிடையாது,லேசான டச்அப் தான்.கலர் படம் ஒன்றில் ஒப்பனை இன்றி இவர்கள் மூவரும் துணிந்து நடித்திருந்தனர். அது மட்டும் இன்றி மூவருக்கும் ஜோடிகளும் இல்லை அதனால் டூயட் பாடல்களும் கிடையாது.


சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்து விட்டு சிறை செல்லும் சிவா முத்து நாகு மூவரும் ஒரு நாள் சிறையில் இருந்து தப்பி மளிகை கடை வைத்திருக்கும் பசுபதியின் வீட்டுக்கு வருகிறார்கள்.இவர்கள் மூவரையும் ஓடு திருத்த வந்த  தொழிலாளர்கள் என கருதும் பசுபதியும் அவரின் குடும்பத்தினரும் மூவரையும் அங்கே தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறார்கள்.பசுபதியின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஓட நினைக்கும் மூவரும் பசுபதி குடும்பம் தங்கள் மீது காட்டும் அன்பை கண்டு மனம் மாறுகிறார்கள்.அது மட்டும் அன்றி பசுபதி குடும்பத்துக்கு ஏற்படும் தொல்லைகளை தீர்க்கவும் முனைகிறார்கள்.திருட வந்த மூன்று குற்றவாளிகளும் பசுபதி குடும்பத்தாலும் ஊராராலும் போற்றப்படுகிறார்கள்.

தீபாவளி திருநாள் 04-11-2021

 


இலங்கைச் செய்திகள்

 ஞானசார தேரரின் நியமனம் ஹக்கீம் கவலை வெளியீடு

ஜனாதிபதி செயலணியை கலைக்குமாறு கோரிக்கை

நவம்பர் 01 முதல் மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை

COP26: ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஸ்கொட்லாந்து பயணம்

புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்ட மக்கள்!

 ஞானசார தேரர் நியமனம்; ஜனாதிபதியின் நிலைப்பாடு

 

ஞானசார தேரரின் நியமனம் ஹக்கீம் கவலை வெளியீடு

இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்துமாம்

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரின் நியமனத்தின் பின்னணியில் மறைகரங்களும், வெளிச்சக்திகளும் இருக்கலாம். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான முறுகலையும் துருவப்படுத்தலையும் மேலும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம்(28) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகச் செய்திகள்

புது வகை கொரோனா 42 நாடுகளில் பாதிப்பு 

தெற்காசிய நாடுகளுக்கான பயண கட்டுப்பாட்டை நீக்கியது சிங்கப்பூர்

 பிரெக்சிட் சர்ச்சை: பிரிட்டனின் படகை கைப்பற்றியது பிரான்ஸ்

மேற்குக் கரையில் 3,100 புதிய குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கு இஸ்ரேல் திட்டம்

தடுப்பூசி போட்டவர்களிடம் இருந்தும் கொரோனா பரவல்

சீன ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா பெரும் கவலை



புது வகை கொரோனா 42 நாடுகளில் பாதிப்பு 

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஏ.வை.4.2 வகை 42 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் பல்வேறு வகைகளில் உருமாறி வருகிறது.  அந்தவகையில், தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஏ.வை.4.2 வகை பிரிட்டனில் அதிகமாகப் பரவி வருகிறது. 

இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் "கவிதை உரையாடல் -1"



நாள்:    ஞாயிற்றுக்கிழமை 07-11-2021

நேரம்:  

 

இந்திய நேரம் -     மாலை 7.00        

இலங்கை நேரம் -   மாலை 7.00        

கனடா நேரம் -      காலை 8.30

இலண்டன் நேரம் -  பிற்பகல் 1:30          



வழி
     ZOOM, Facebook     

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09
                            

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

மேலதிக விபரங்களுக்கு: - அகில்  - 001416-822-6316