நி.ச.வே மாநில முதல்வர் விருது வழங்கி கௌரவிப்பு

.

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் இருபத்தைந்து வருடங்கள் ஆசிரியப் பணியை நிறைவுசெய்யும் திருமதி நிர்மலா தயாளன் அவர்கட்கும், அதன் முன்னாள் தலைவரும், பரீட்சைக் குழு உறுப்பினருமான திரு குணரட்ணம் பாஸ்கரன் அவர்கட்கும் NSW Federation of Community Languages Schools வழங்கிய சமூகசேவைக்கான அதி உயர் விருதினை நி.ச.வே மாநில முதல்வர் Honorable Mike Baird அவர்கள் வழங்கினார்கள்.

இவ்வருடம் சமூக மொழிப் பாடசாலைகளில் நீண்டகாலம் தன்னலமற்ற சேவையாற்றும் தொண்டர்களை விருது வழங்கிக் கௌரவிப்பதற்காக பல்லினப் பாடசாலைகள் கூட்டமைப்பு பரிந்துரைகளைக் கோரியிருந்தது.  ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் அதி கூடிய சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்யும் திருமதி நிர்மலா தயாளன் அவர்களையும், நீண்ட காலம் நிர்வாகப் பணியிலிலும், அதன் பின்னர் பள்ளியின் ஏனைய செயற்பாடுகளிலும் பணிபுரியும் திரு கே.ஜி.பாஸ்கரன் அவர்களையும் இவ்விருதுக்கெனப் பரிந்துரைத்தது.  பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்விருவருக்கும் Excellence Award for Significant Contribution to the Tamil Language Education என்ற விருது வழங்கப்பட்டது. இவ்விருது மொத்தமாக வெவ்வேறு மொழிப் பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது. மேலும் எழுவருக்கு Appreciation Award வழங்கப்பட்டது.


அப்பா - கானா பிரபா

.


"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" இப்படித்தான் சொல்லி முடிப்பார் ஊரிலிருக்கும் எனது அப்பா அப்பா தன் பெரும்பாலான தொலைபேசி உரையாடல்களில். தன்னுடைய வாழ்நாளின் அதிக பட்ச காலத்தைத் தன் சொந்த ஊரில் தான் கழிக்க வேண்டும் என்ற வேட்கையோடு இருப்பவர் அவர். 
அதிகபட்சமாக தன் சொந்த ஊரை விட்டு விலகி இருந்தது ஆசிரியப்பணிக்காக இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டனில் இருந்ததும், அதற்குப் பின்னர் 95 ஆம் ஆண்டின் இடப்பெயர்வின் போது சாவகச்சேரி என்ற பகுதியில் இருந்ததும் தான் அவரின் உச்சபட்ச சாதனை. 

"ஐயா! நீங்கள் பின்னடிக்கு இந்த நாட்டுக்கு வந்து சீவிப்பீங்களோ?"
"எங்கட நாட்டுச் சுவாத்தியம் உங்கட அவுஸ்திரேலியாவில் இருக்குதோ"
"அங்கை ஆட்களைத் திருப்பி அனுப்பினமாம் நீங்களும் வரலாம் தானே" 
இப்பிடி அடிக்கடி கேட்டு என் மனதில் என்ன ஒட்டியிருக்கிறது என்று ஆழம் பார்ப்பார் அவர். ஐயா, தம்பி என்று மரியாதையான வார்த்தையோடு தான் சிறுவயதில் இருந்து அழைக்கும் பழக்கம் அவருக்கு. 
கூழைக் குடிச்சு வாழ்ந்தாலும் சொந்த ஊரில் இராசா மாதிரி இருக்கலாம் என்று பெருமையடிப்பார் 20 ஆண்டுகளைத் த்ச்ன் புலம்பெயர்வுச் சூழலில் மூழ்கடித்துவிட்ட என்னைப் பார்த்து.

சிட்னி திரை அரங்குகளில் சிகரம்தொடு - 12.09.2014 முதல்


நாயினும் கடையேன்நான்… ஒரு அரிசோனன்

.

nay2

நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் – வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான்.
ஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கப்படி வாலை ஆட்டிக்கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ஏதாவது சோறு கிடைக்காதா என்று காத்துக்கொண்டு இருந்தேன்.
என்னைப் பார்த்ததும், “அம்மா, நிலாக் கதை ஆணாம். நாய்க் கதை தொல்லு… அப்பத்தான் நான் தாப்பிவேன்..” என்று மழலையில் அடம் பிடித்தது குழந்தை.
“எந்த நாயைப் பத்தி அம்மா சொல்லறது?” என்று யோசித்தாள் அம்மா.
“இந்த நாயைப் பத்தி…” என்று என்னைப் பார்த்துக் கையைக் காட்டியது குழந்தை.
“இதப் பத்தியா? இந்த சொறி நாயைப் பத்தியா? இதப் பத்தி சொல்ல என்ன இருக்கும்மா? இது தினோம் தெருப்பொறுக்கித் தின்னும். அவ்வளவுதான்.” உதட்டைப் பிதுக்கினாள் அம்மா.

.வாடிப்போன வாத்தியார் ஆடிப்போனார் 13.09.2014

.

சொல்லவேண்டிய கதைகள் - முருகபூபதி

.
துண்டு  கொடுக்கும்  துன்பியல்   நாடகம்
  
                                                 
காலம்   காலமாகவே    எங்கள்   தமிழ்  சமூகத்தில்  கலை - இலக்கிய மற்றும்   தமிழர்   சார்ந்த    நிகழ்ச்சிகளில்   குறிப்பாக    விழாக்கள் கூட்டங்களில்   ஒரு    துன்பியல்   நாடகம்    அரங்கேறிவருகிறது.
இலக்கியப்பிரவேசம்   செய்த காலம்    முதலாய்    தொடர்ச்சியாக இந்தத்துன்பியலை   என்னைப்போன்று   சகித்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

குறிப்பாக    தமிழர்    சம்பந்தப்பட்ட    நிகழ்ச்சிகள்   உரியநேரத்தில் தொடங்காது.   ஆனால்  -  தமிழர்    தங்கள்    திருமண    நிகழ்வுகளில் மாத்திரம்    சுபமுகூர்த்தம்   தப்பிவிடலாகாது    என்பதில்  மிகவும் கவனமாகவும்   எச்சரிக்கையாகவும்   இருப்பார்கள்.    சோதிடர் சொல்லும்   திருமண  நாள்   சுபமுகூர்த்தம்   குறித்துவிட்டால் எப்பாடுபட்டாவது    மணமகன்   மணமகளை  உரியநேரத்திற்கு முன்பாகவே  அலங்கரித்து   மணவறைக்கு   அழைத்து வந்துவிடுவார்கள்.

கலக்கபோவது யாரு? - 13 .09.2014


உலகச் செய்திகள்

.
ஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சி

கிழக்கு உக்ரைனில் உடனடிப் போர் நிறுத்தம்: ரஷியா வலியுறுத்தல்

நவி பிள்ளை ஓய்வு - ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்

ஆப்கானில் அரசாங்க கட்டடத்தின் மீது தலிபான் போராளிகள் தாக்குதல் - 13 பாதுகாப்பு படையினர்; 19 போராளிகள் பலி

எபோலாவுக்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
==================================================================
ஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சி
01/09/2014 தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின்னர் வலுவிழந்து போன தமிழீழ விடுதலை புலிகள், அவுஸ்திரேலியாவில் மீண்டும் அணிதிரள முயற்சிக்கின்றார்களா?

ஆறு இலங்கையரை, ஆந்திராவிலுள்ள பிரகாசம் கடற்கரை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற நால்வர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 5 வருடங்களாக பதுங்கியிருந்த தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெற முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் புலனாய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மனித கடத்தல் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வாளர்கள் வந்தனர்.

சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டி - 2014 . 14.09.2014

.
இப் போட்டிகள் September மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்

பாலர் ஆரம்ப பிரிவு 
01.08.2009 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு 
01.08.2007 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு 
01.08.2005 க்கும் 31.07.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு 
01.08.2002 க்கும் 31.07.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

பாரதி விழா 14.09.2014

.


சங்க இலக்கியக் காட்சிகள் 22- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

இந்த மாலைப்பொழுது, இல்லையா அந்த நாட்டில்?




அது ஓர் அழகான சிற்றூர். அந்த ஊருக்குச் செல்வதற்கு ஒரு குறுகலான வழியுள்ளது. மலையடிவாரத்தினூடாகச் செல்லுகின்ற அந்த வழியின் இருபுறமும் சிறியபாறைகளும், பெரிய கற்களும் நிறைந்து கிடக்கின்றன. அத்தோடு வழிநெடுக முல்லைக்கொடிகள் தாவிப்படர்ந்து செழித்துப் பரவியுள்ளன. அத்தகைய நெருக்கமான, நீண்ட வழியினால் தங்கள் ஊருக்கு ஏதாவது அபாயமோ, இடரோ ஏற்படுமோ இல்லையோ என்பதையெல்லாம் அந்த ஊர் மக்கள் பொருட்படுத்தவில்லை. அதனால், அழகு நிறைந்த அந்த மக்கள் அந்த வழியை அடைக்காமல் விட்டிருக்கிறார்கள்

அந்தச் சிற்றூரின் வீதியொன்றிலே இருமரங்கும் பூமரங்கள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. அவற்றிலிருந்து தினமும் வாடிக் காய்ந்து விழுகின்ற மலர்களின் மகரந்தங்கள் மேலும் மேலும் விழுந்து வீதியிலே உக்கிக் கிடக்கின்றன. எருவைப்போலக் அவை காட்சியளிக்கின்றன. அந்த வீதியின் ஓரத்திலே மிகப்பெரிய ஆலமரம் ஒன்று நிற்கின்றது. அந்த ஆலமரத்திலே கடவுள் உறைவதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றார்கள்.

இன்னிசை இரவு 2014 14.09.2014

.

முருகபூபதியின் " சொல்ல மறந்த கதைகள் " - நூல்விமர்சனம்

.
வடுக்கள் - வேதனைகள்  -  அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன்       நிற்கின்றன

                                                                                எம்.ஜெயராமசர்மா


       நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர்  முருகபூபதி அவர்கள்  கதைகள் எழுதினார். கட்டுரைகள் எழுதினார் விமர்சனங்கள் எழுதினார்.நாவலும் எழுதினார்.   செய்திகளையும் தொகுத்து எழுதிவந்துள்ளார்.
    இப்பொழுது எங்களுக்காக தமிழிலே புதிய ஒரு வடிவத்தில் தனது எழுத்தைத் தந்திருக்கிறார்.   அந்த முயற்சிதான் " சொல்லமறந்த கதைகள்.
    இவை கதையா? கட்டுரையா?விபரத்தொகுப்பா?அல்லது சுயசரிதையா? எங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறார் முருகபூபதி.

     வாசிப்பவர்களுக்கு பல தலைப்புகளின் கீழுள்ள விஷயங்கள் நல்ல ஒரு கதையாகவே தெரியும். சிலவற்றை வாசிக்கும் பொழுது நேரே இருந்து பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்படும். சிலவற்றை வாசிக்கும் பொழுது முருகபூபதி இப்படியெல்லாம் இருந்தாரா? என எம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும். என்ன... நான் உங்களை திகைக்க வைக்கிறேன் என நினைக்கிறீர்களா? அவரின் படைப்புக்களை வாசித்தால் உங்களுக்கே அது புரிந்துவிடும்.

சைக்கிள் ஓட்டுவது நல்லதா ?

.


 நடப்பது  ,நீந்துவது ,படகு விடுவது சைக்கிள்  ஓட்டுவது இவையெல்லாம் மிதமான தேகப்பயிற்சிகள் . 
இளைங்கர்களும் ,முதியவர்களும் செய்யக்கூடிய  பயிற்சி சவாரி .சைக்கிள் ஓட்டுவதை  அவசியத்திற்காக செய்யப்படும்  அலுவலாக நினைக்கிறோம் . பயிற்சிக்காக  எவரும் நினைப்பது இல்லை .அமெரிக்காவில் உள்ள பிரபல இருதய நோய் ஆராய்ச்சி கழகம் சைக்கிள் ஓட்டுவதை  ஆராய்ச்சி செய்து இதனால் இருதயநோய்களை போக்கலாம் என்று கண்டு பிடித்திருக்கிறது .அமெரிக்காவில் இருதய நோயாளிகள் பெருகி வருவதால் இவர்களுக்குச் சைக்கிள் சவாரி அவசியம் தேவை என்று சொல்லி இருக்கிறார்கள் .

நாம் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டோ ,நின்று கொண்டோ ,படுத்துக்கொண்டோ  இருக்கும் போது இரு நிமிடத்தில்  இருபது தடவை சுவசிக்கிறோம் .அப்போது சுத்தமான காற்றுஇரத்த குழாய்கள் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை  திரும்புகிறது .இதனால் பிராண வாயு கிரகிக்கப்பட்டு ,கரியமில வாயு  தள்ளப்படுகிறது .


இலங்கைச் செய்திகள்


தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 29வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-

யுவதியை கொலை செய்த வைத்தியருக்கு மரணத்தண்டனை

 தீக்குளித்த நபர் பலி  

வடமராட்சி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களினால் மக்கள் அச்சம்

தமிழ் மக்கள் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது

 மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா

தடம்புரண்டது ரயில்: மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

குழந்தை இலக்கியத்தை குழந்தைகளே படைக்கிற காலமிது.

.
        - நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -



         வந்தவாசி.ஆக.31.அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழியன் எழுதிய குழந்தை இலக்கிய நூல் வெளியீட்டு விழாவில், குழந்தை இலக்கியம் என்ற பெயரில் பெரியவர்கள் எழுதிய காலம் மாறி, இன்றைக்கு  குழந்தை இலக்கியத்தை குழந்தைகளே படைக்கிற காலம் மலர்ந்து வருகிறது கவிஞர் அ.வெண்ணிலா பேசினார்.
      இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார்.மு.ஜீவா அனைவரையும் வரவேற்றார்.  
    
       விழியன் எழுதிய 'உச்சி முகர்'  குழந்தை இலக்கிய நூலை கவிஞர் அ.வெண்ணிலா வெளியிட, டாக்டர் கு.சந்திரமோகன் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை அரிவையர் சங்க முன்னாள் தலைவர் த.அருணாரெத்தினம், நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலை அறிமுகம் செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

திரைதுறையும், அரசியலும் - செல்வன்

.

திரையுலகில் அரசியல் புகுந்ததும், அரசியலில் திரையுலகம் புகுந்ததும் இரண்டு துறைகளுக்கும் கெடுதலாக முடிந்துவிட்டது. இரண்டுதுறைகளும் விவாகரத்து செய்துகொள்வது அரசியலுக்கும், கலைக்கும் நல்லது. அப்படி ஒரு விவாகரத்து ஏன் அவசியம் என்பதையும், அத்தகைய விவாகரத்து நடைபெறவேண்டிய முறையையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
திரைப்படங்களின் வலிமையை உணர்ந்த முதல் இந்திய அரசு என காலனிய ப்ரிட்டிஷ் அரசை சொல்லலாம். தம் அரசுக்கு எதிராக திரைப்படங்கள் கருத்து கூறுவதை தடுக்க தணிக்கை முறையை அறிமுகபடுத்தினார்கள். இத்தணிக்கை முறை நடிகர்களை அரசியல்வாதிகள், முதல்வர்கள் ஆகியோரை சார்ந்திருக்க தூண்டியது. இரண்டாவது உலக யுத்த சமயத்தில் இந்தியர்களின் கடும் எதிர்ப்பை மீறி இந்தியாவை உலகபோரில் ப்ரிட்டிஷ் அரசு ஈடுபடுத்தியது. அந்த சூழலில் அன்றைய தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் அன்றைய சென்னை கவர்னரின் உத்தரவுக்கிணங்க உலகயுத்தத்திற்காக பாடல், நாடக நிகழ்ச்சிகள் நிகழ்த்தி நிதி திரட்டி கொடுத்தார்.

தமிழ் சினிமா - சலீம்

.

Tamil shooting spotசலீம்
"நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
Tamil shooting spotசலீம்
நான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்! பேஷ்,பேஷ்!!
Tamil shooting spotசலீம்
கதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி! ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய்! இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ. இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்!
Tamil shooting spotசலீம்
விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல!
Tamil shooting spotசலீம்
புதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி.
Tamil shooting spotசலீம்
சாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர் தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
Tamil shooting spotசலீம்
விஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்!

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது!

மொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்!!
நன்றி தினமலர் சினிமா 

தமிழ் சினிமா கபடம்




Tamil shooting spotகபடம்



‛‛அக்ராஸ் தி ஹால்'' எனும் ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவலாக ‛உன்னோடு நான்', ‛நேர் எதிர்' என ஏற்கனவே இரண்டு படங்கள் சமீபமாக தமிழில் வெளிவந்து, வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் சுருண்டிருந்தாலும், அதே வரிசையில் ‛அக்ராஸ் தி ஹாலை' சுவாகா செய்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இந்தவாரம் சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‛‛கபடம்'' சற்றே வித்தியாசம்!
Tamil shooting spotகபடம்

கதைப்படி நாயகர் விச்சு எனும் சச்சினுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணான பத்மினி எனும் அங்கனாராய், கணவராய் வரப்போகிற விச்சுவிடம், கல்யாணத்திற்கு அப்புறம் கிடைக்க வேண்டிய நெருக்கத்தையும், கிறக்கத்தையும் முன்கூட்டியே எதிர்பார்க்கிறார். விச்சுவோ, எல்லாம் திருமணத்திற்கு அப்புறம் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். சற்றே வார்த்தையால் பத்மினியை சீண்டவும் செய்கிறார். இதனால் பத்மினியின் தாப பார்வை விச்சுவின் நண்பர் சிவா எனும் ஆதித்யா மீது பாய்கிறது.
Tamil shooting spotகபடம்

விச்சுவிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சிவாவுடன் ஒரு ேஹாட்டலில் ரூம்போட்டு சல்லாபம் கொள்ளுகிறார் பத்மினி! விஷயம் தெரிந்த விச்சு, ேஹாட்டலில் அவர்கள் சல்லாபிக்கும் அறைக்கு எதிர் அறையில் தங்கி எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் ‛கபடம்' படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!
Tamil shooting spotகபடம்

சச்சினாக விச்சு, பத்மினியாக அங்கனாராய், சிவாவாக ஆதித்யா, ேஹாட்டல் ரூம் பாயாக ‛காதல்' சரவணன், கவிதாவாக அணிகா, அஸ்வின், ேஹமா என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் விச்சுவாக வரும் சச்சின், அஜீத்தை அறிமுகம் செய்த சோழா எஸ்.பொன்னுரங்கத்தின் தயாரிப்பில் அறிமுமாகியிருப்பதாலோ என்னவோ, அடிக்கடி ‛அமராவதி' அஜீத்தை ஞாபகப்படுத்த முயன்று அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார். அல்டிமேட்டாக வாழ்த்துக்கள்!
Tamil shooting spotகபடம்

கே.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, சாஷியின் இசை, எம்.கே.மணியின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஜோதி முருகனின் எழுத்தும், இயக்கமும் ‛அக்ராஸ் தி ஹால்' ஆங்கிலப்படத்தை, தமிழில் மூன்றாவது முறையாக தழுவியிருப்பதால் கள்ளத்தனத்தை சொல்லும் கபடம், நல்ல படமென்றாலும் கள்ளப்படமாகவே தெரிகிறது!
Tamil shooting spotகபடம்

மொத்தத்தில், ‛கள்ளத்தனம் - கபடம் - கலப்படம்!'
நன்றி தினமலர்