புத்தாண்டு வாழ்த்துக்கள்

.
              வருக வருக புத்தாண்டே 2011


மலர இருக்கும் புத்தாண்டில் அனைத்து மக்களும் மகிழ்வோடும் சுதந்திரமாகவும் வாழ தமிழ் முரசு ஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது.

"பாலனவன் பிறந்ததனால் பாவங்கள் பறந்தோடும்"



                                                                 சிகாகோ பாஸ்கர் -

"பாலனவன் பிறந்ததனால் பாவங்கள் பறந்தோடும்"
பைபிளது வழிகாட்ட வருடங்கள் காத்திருந்தோம்
கடல்கடந்த பலமதங்கள் கண்கலங்கி நின்றிடவே
உலகெங்கும் பாவங்கள் பலவாகப் பெருகியதேன்?

சொல்லுக் கடங்காத கொடுமைகள் தலைதூக்க
பொல்லாத அரசாட்சி பாரெங்கும் கோலோட்ச
தள்ளாடும் மனித இனம் தவறான வழி போக
இன்றிங்கு உன்கருணை இல்லாததேன் தேவா?

கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு: ஸ்ரீதரன்

.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.


1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 48


.

கடல் சீற்றத்தால் பாறையில் மோதி உடைந்து தத்தளிக்கும் அகதிகள் படகுஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அருகே பாறைகளில் மோதி அகதிகளின் படகு நொறுங்கி நீரில் மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.
இரான், இராக் மற்றும் குர்து அகதிகளை ஏற்றிய படகு சீற்றம் கொண்ட கடலில் கடந்த புதன்கிழமையன்று விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டவர்களில் 30 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இரானியர்கள், இராக்கியர்கள் மற்றும் குர்து இனத்தவர்களுமாக அந்தப் படகில் 90 பேர் வரை இருந்திருக்கலாம் என்று ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.
ஆஸ்ரேலியக் கரைகளுக்கு அகதிகளை கடத்தி வருபவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான டொனி அபொட் கூறியுள்ளார்.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகே கடலில் நீரின் அடியில் உள்ள குகைகளில் பொலிஸ் சுழியோடிகள் தேடுதல் நடத்திவரும் நிலையில் இந்த தகவலை ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
Nanri- BBC

ஸுப்ரபாதம் - பாரதியார் பிறந்த நாள் சிறுகதை -

.
டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை - மலர்மன்னன்


கவிஞர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.

‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’
அதிகாலை வேளையில் ஆளரவமற்ற நிர்மானுஷ்யச் சூழலில் மடுவின் உருகிய பனிக்கட்டிபோல் குளிர்ந்த தண்ணீரில் மூழ்கி முக்குளிக்கும் சுகானுபவ ருசியைக் கவிஞருக்கு முதன் முதலில் ஊட்டியது அவர் பாசம் பொங்கப் பொங்கக் ‘குவளைக் கண்ணன்’ என்று குறிப்பிடுகிற பொல்லாத குவளையூர் கிருஷ்ணமாச்சாரி தான்..

ஸ்ரீ ஆண்டாள் வைபவம் (தொடர்ச்சி)

.


சென்ற வாரம் கோதையின் பிறந்த வைபவத்தை பற்றி பார்த்தோம். இந்த வாரம் உன்னத கோதையின் பக்தியும், பகவான் மீது கொண்ட அன்பும் பற்றியும் சற்று விளக்கமாக பார்ப்போம்.
துளசி  மாடத்தில் அவதரித்த கோதையை விஷ்ணுசித்தர் எடுத்து பாராட்டி சீராட்டி கிருஷ்ண கதைகளை ஊட்டி வளர்த்தார் என்று பார்த்தோம் . கோதையின்  கிருஷ்ண பக்திக்கு காரணம் வேறு யாராக இருக்க முடியும், அந்த விஷ்ணு சித்தர்(பெரியாழ்வார்)  பற்றி சில வாரங்களுக்கு முன்பே பார்த்தோம், பகவனுக்கே கண் திருஷ்டி பட்துவிடுமோ  என்று "பல்லாண்டு பல்லாண்டு " என்று பிரபந்த பாசுரம் பாடியவர் ஆயிற்றே! அவருடைய புதல்வி கேட்க வேண்டுமா!

“இலக்கிய மணி” ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார்



.
மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட“ஈழத்துப் பூராடனார்” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கலாநிதி கே. ரி. இராஜகோபால் கடந்த 20ம் திகதி கனடா மிசிசாகா நகரில் காலமானார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையை 1995ம் ஆண்டு ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு அச்சாணிகளாய்த் திகழ்ந்தவர்களுள் அறிஞர் ஈழத்துப் பூராடனாரும் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தி;ன் காப்பாளராக பணியாற்றி பல சேவைகளைச் செய்தவர் இவர் என்பதும் முக்கியமாக கருதப்பட வேண்டியதாகும்.

நூற்றுக்கும் அதிமான நூல்களை எழுதியுள்ள “இலக்கியமணி” ஈழத்துப் பூராடனார் அவர்கள் தமிழ் இலக்கியம் வரலாறு மற்றும் கிறிஸ்த்தவ இலக்கியம் போன்ற நூல்களைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகம் இவரை அங்கு அழைத்து கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியமை கனடா வாழ் தமிழர்களுக்கு பெருமையை தேடித் தந்த கௌரவம் என்பதும் கவனிக்கத்தக்கது.

தனது 82 வது காலமான கலாநிதி ஈழத்துப் பூராடனார் அவர்களின் மறைவு குறித்து சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் 


Nanri: tamilwin.com

கம்பன் காட்டும் விதி

.

                                                                                   எஸ் ஜெயலட்சுமி

மனிதர்கள் தாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்த போதிலும் தாங்கள் நினைத்தபடி ஒன்று நடக்க வில்லை யென்றால், “எல்லாம் என் தலை விதி” என்று நொந்து கொள்வ தைப் பார்க்கிறோம்.

”நமது வாழ்நாளில் நிச்சயமாகப் புலப்படாத விதி ஒன்று ஆட்சி புரிகிறது” என்கிறான் கதே.

தலையெழுத்தும் நம் கண் ணுக்குத் தெரியவில்லை. தலை விதியும் கண்ணுக்குப் புலனாவதில்லை. நல்ல விஷயங்கள் நம் முயற்சி யில்லாமலே, எதிர்பாராமல் நடக்கும் பொழுது நாம் தலையெழுத்து என்றோ தலைவிதி என்றோ சொல்வதில்லை. மாறாகத் துன்பம் வந்தபோது விதி என்கிறோம்.

அமிதாப் பச்சனின் மகளாக நடிக்கிறார் லேகா

.


பவர்’ என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சனின் மகளாக நடிக்கிறார் லேகா வாஷிங்டன். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்துள்ள ‘வ குவார்ட்டர் கட்டிங்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் ப்ளஸ் டூ மாணவியாக நடித்துள்ளேன். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நான் இரண்டு பேரை சந்தித்த பிறகு எப்படி மாறுகிறேன் என்பது கதை. இந்தியில் நடித்துள்ள ‘பீட்டர் கயா காம்ஸே’ இன்னும் ரிலீசாகவில்லை. அதற்குள் அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி என்கிறார்கள். ‘பீட்டர் கயா காம்ஸே’ படத்தில் எனது நடிப்பை கேள்விபட்டு ராஜ்குமார் சந்தோஷி ‘பவர்’ படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

நல்லூர் பதியில் நடனமாட ஆசை

.

சர்வதேசப் புகழ்பெற்ற நடனக்கலைஞர், நடனநெறியாள்கையாளர் ரவிபந்து வித்யாபதியின் ஆசைகள், அனுபவங்கள், கற்றவைகள் ஆகியவற்றை கலைக்கேசரி உடன் பகிர்ந்து கொள்கிறார்.நாட்டியம் மனிதனின் உணர்வுகளை, அல்லது கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஊடகமாகப் பயன்படுகின்றது. கிறிஸ்துவிற்கு முன்பு இந்தியாவில் தோற்றம் பெற்ற நாட்டியக்கலைகள் அழகியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறன. நாட்டியக் கலையில் ராகம், பாவம், தாளம் என்ற மூன்று அம்சங்களை அவதானிக்கலாம்.

தமிழ் மொழி பெயர்ப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்

. விக்ரோறியப் பல்லினக்கலாச்சாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க விக்ரோறிய மானில அரசினால் தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான பட்டயப் புலமைப்பரிசில்(diploma scholarship)அறிவிக்கப்பட்டு மெல்பேர்ண் RMIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்றமை அனைவரும் அறிந்ததே.


தரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும்நோக்கத்துடனும், தமிழ்ச்சமூகத்தின் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கு முகமாகவும் அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக வழங்கப்பட்ட புலமைப்பரிசில் கற்கைநெறி தற்போது நிறைவு பெற்று 4 பெண்களும் 6 ஆண்களுமாகப் 10 தமிழர்கள் DIPLOMA வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் NAATI என்று சுருக்கமாகக் கூறப்படுகின்ற NATIONAL ACCREDITATION AUTHORITY FOR TRANSLATORS AND INTERPRETERSஇற்கான தகைமையையும் பெற்றிருக்கிறார்கள். இவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:-

1) A. அமிர்தநேசன்
2) R. அருள்நாவலன்
3) ஒன்னப்பன் அசோகராஜன்
4) லக்க்ஷ்மி பாலகிருக்ஷ்ணன்
5) பத்மபிரியதர்க்ஷினி குகன்
6) றஜனி சோமசுந்தரம்
7) சாந்தினி புவனேந்திரராஜா
8) க்ஷண் குமரன்
9) நடேசன் சுந்தரேசன்
10) முகமது சலீம்
.
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் விசாரணை

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்திய பாதாள உலகக் குழுவான தாவூத் இப்ராகிமின் குழு உறுப்பினரிடம் மும்பாய் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு மே 8 ம் திகதி தாவூத் இப்ராகிம், குழு உறுப்பினர் மிர்சா முகைதீன்பெய்க் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மலை ஏறுதல்

.

ஒரு தொழிலதிபர் ஜென் குருநாதரைப் பார்க்க வந்திருந்தார். அவர் முகத்தில் பெரும் குழப்பம்.

‘கொஞ்ச நாளாவே எனக்கு ஒரு பெரிய கவலை சாமி’ என்று அவர் பேச ஆரம்பித்தார். ‘என் பையன் ப்ளஸ் டூவிலே நல்ல மார்க் வாங்கியிருக்கான். அவனை டாக்டருக்குப் படிக்கவைக்கணும்ன்னு எனக்கு ஆசை. அதுக்காக எவ்வளவு செலவானாலும் கொடுக்கத் தயாரா இருக்கேன்!’