மரண அறிவித்தல்

 

திருமதி. சந்திரா வரதராஜா


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும், கண்டி பெண்கள் உயர் பாடசாலையின் முன்னாள் விஞ்ஞான ஆசிரியையுமான திருமதி. சந்திரா வரதராஜா அவர்கள் 11.07.2024 அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் அம்பலவாணர் நாராயணபிள்ளை, ரத்னவதி தம்பதிகளின் அன்பு மகளும், சகுந்தலாவின் அன்புச் சகோதரியும், காலம்சென்ற வரதராஜாவின் ஆருயிர் மனைவியும் கந்தசாமி நாகநாதர், வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மருமகளும், கமலினி, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், உதிஷ்ரன் ராமதிலகம், அருந்ததி ஆகியோரின் ஆருயிர் மாமியாரும், அஷுவினி, சஞ்சீவ், ஆர்னா, ஆருஷி ஆர்தனா ஆகியோரின் பாசமுள்ள பேத்தியாரும், காலம்சென்ற ஜெயரட்னம் கந்தையா, காலம்சென்ற கணேஷராஜா, காலம்சென்ற நாகநாதர்,பத்மநாதன், காலம்சென்ற மங்கையர்கரசி  ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆவார்.

 அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம்:

காலம்: 14th July 2024 (Sunday)

நேரம்: காலை 9 மணிமுதல் 9.30மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து கிரிகைகள் நடைபெற்று 11 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இடம்: Magnolia Chapel

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113

 தொடர்பு: கமலினி (மகள்) 0425 353 400 ; மயூரன் (மகன்) 0434 004 158


உறவு என்பது உறுதுணை ஆகும் !


 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


அம்மா என்போம் அப்பா என்போம்

அண்ணா அக்கா தம்பி என்போம்
மாமா மாமி மச்சான் மச்சாளென்போம்
அப்பா தங்கையை அத்தை என்போம் 

பாட்டி தாத்தா மூத்தோர் ஆவர்
பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி 
உரிமையாய் உறவாய் உதவியே நிற்பார்
அருகினில் இருப்பார் அணைத்துமே நிற்பார்

சகோதரர் என்பார் சந்தோஷம் தருவார்
சங்கடம் வந்தால் அங்கெலாம் நிற்பார்
இங்கிதம் அறிவார் இரக்கமாய் இருப்பார்
என்றுமே உரமாய் எப்போது மிருப்பார்

பேரன் பேத்தி வாரிசாய் வருவார்
அவரின் பிள்ளைகள் உறவாய் இணைவார்
பரம்பரை என்பது வளர்ந்தே போகும்
நிலந்தனில் உறவுகள் நெடுந் தொடராகும் 

நல்லது என்றால் யாவரும் மகிழ்வார்
அல்லன நடந்தால் அபயம் அளிப்பார்
இருளினைப் போக்கும் ஒளியாய் அமைவார்
இருக்கிறார் என்பதே பெரு வரமாகும்

இரண்டு மனம் வேண்டும் இயற்கையிடம் கேட்டேன்!…..சங்கர சுப்பிரமணியன்.

 

அவனை நண்பனாகத்தான் நினைக்கிறேன்
அவன் அப்படி நினைக்கிறானா?
தெரியலையே என்ற பதிலே என்னிடமுள்ளது

நானும் நீயும் ஒன்றென்றால்
நான் வேறு நீ வேறு என்கிறான்
பாசத்தோடுதான் பழகிவருகிறான்

நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றேன்
அதெப்படி? உன் தாய் வேறு
என் தாய் வேறு என்கிறான்

நமக்குள் தொப்புள்கொடி உறவுள்ளது என்றால்
தொப்புள்கொடி அவ்வளவு நீளமாகவா இருந்தது என்கிறான்

நான் அவனிடம் பகுத்தறிவு பேசினால்
தி. க. வா என்கிறான்
தி. க. வுக்கு முன்பே திருமூலர் பேசினார்
என்றால்
ஏற்க மறுத்து ஏளனமாய் பார்க்கிறான்

உடன்பிறப்பு என்று ஒரு வார்த்தை சொன்னால்
தி. மு. க. வா என்று திருப்பி கேட்கிறான்

உடன்பிறந்து கொல்லும் நோயல்ல நான் என்றேன்

இரத்தத்தின் ரத்தமே என்று சொன்னாலோ
அ. தி. மு. க. வா என்று இளக்காரம் செய்கிறான்

ரத்ததானம் செய்பவன் நானென்பதால் ரத்தத்தின் மகிமை உணர்வேன் என்றேன்

மாம்பழம் எனக்கு பிடிக்கும் என்றால்
சிறதும் தயங்காது
பா. ம. க. வா என்கிறான்

முக்கனிகளில் ஒன்றைத்தானே பிடிக்கும் என்று சொன்னேன் என்றேன்

குற்றம் கண்டால் சிறுத்தைபோல் சீறுவேன் என்றாலோ
வி. சி. க. வா என்று வியந்து பார்க்கிறான்

மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலைய ஆதரவில் திரு. பரமேசுவரன் இரங்கநாதன் ஆக்கத்தில் “இலக்கணச் சாரல்” மற்றும் “எங்கள் பொங்கல்” இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு


கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள கொலிற்றன் பள்ளி மண்டபத்தில் மாலை 3 மணிக்குக் குறித்த நேரத்தில் ஆரம்பமாகிக் கச்சிதமாக நடைபெற்ற நிகழ்வாக அமைந்தது.

 இந்த நூல் வெளியீட்டு விழாவில் மங்கல விளக்கேற்றலை திரு.திருமதி முரளீதரன் தயாளினி தம்பதியினர் மற்றும் காந்தரூபன் ஜென்சி தம்பதியினர் தொடக்கி வைக்க, எம் உறவுகளின் ஈகையை நினைத்து அக வணக்கத்தோடு தொடர்ந்தது.

 இந்த விழா நிகழ்வு மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் அநுசரணையில் நடைபெற்றது முன்னுதாரணமான செயற்பாடாக அமைந்தது. வெறுமனே தமிழ் கற்பிக்கும் கல்விச்சாலையாக அன்றி, எதிர்காலத்தில் எழுத்துச் சிற்பிகளை உருவாக்கும் கலைக்கூடமாகவும் திகழ வேண்டும் என்ற கருத்தையும் நூலாசிரியர் இந்தக் கூட்டத்தில் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

 மவுண்ட் றூயிட் கல்வி நிலையத்தின்  தலைவர் திரு.தேவராஜா சதீஸ்கரனின் தலைமையில் நிகழ்ந்த இந்த விழாவில்  உப தலைவர் திரு.கந்தசாமி கெளரீஸ்வரன் வரவேற்புரையைத் தொடர்ந்து, தலைவர் ஆறுமுகசாமி பேரின்பமூர்த்தி மற்றும் ஆசிரியை திருமதி. நிருபா ஜனார்த்தனன் வாழ்த்துரை வழங்கவும், தொடர்ந்து வெளியீட்டு உரையை இந்தப் புத்தகங்களை அழகுற வடிவமைத்த நிசா ஆட்ஸ் உரிமையாளர் திரு.நிசாகுலன் செல்வராசா வழங்கும் போது, தாயகத்தில் இருந்த காலத்திலேயே “அறிவியல் துளிகள்” இறுவட்டு வழியாகவும் இரங்கநாதன் அவர்களது தமிழியல் செயற்பாடுகள் நிகழ்ந்ததை அனுபவரீதியாகப் பகிர்ந்து கொண்டார்.

“ ஏய் மனுஷன் “ ( அபுனைவு சித்திரம் ) முருகபூபதி


முப்பத்தியைந்து வருடங்களாக நானும்  நீரிழிவு உபாதையில் சிக்கியிருக்கின்றேன்.  காலங்கள்  மாறிக்கொண்டிருப்பதுபோன்றும், மனிதர்களின் குணங்கள் மாறுவது போன்றும்,  எனக்கு மருத்துவர்களினால் தரப்பட்ட மருந்து – மாத்திரைகளின் பெயர்களும் மாறிக்கொண்டிருக்கின்றன.

மருத்துவர்களும் மாறிவிட்டார்கள். ஆனால், நீரிழிவு உபாதை மாத்திரம் என்னை விட்டுச்செல்லாமல்,  என்னுடனேயே நிரந்தரமாகிவிட்டது.

கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக இன்சுலின் ஊசியும் காலையும்,


இரவும் ஏற்றிக்கொண்டிருக்கின்றேன்.  குறிப்பிட்ட இன்சுலின் ஊசி மருந்தின் பெயர்களும் காலத்திற்குக் காலம் மாறிவிட்டது.

தினமும்  ஒரு மணிநேரம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வருவதும், போவதுமாக என்னுடனேயே தங்கியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக  நடு இரவில், எனது உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்துவிடுகிறது. அவ்வாறு குறைவதை உறக்கத்திலிருக்கும்போதே உணர முடிகிறது.   இதுபற்றி எனது மருத்துவரிடமும்   Diabetic Educator , Dieticians ஆகியோரிடமும் சொன்னபோது,  படுக்கையருகில் ஜெலிபீன்ஸ்  இனிப்பு வைத்துக்கொள்ளுமாறு பணித்தார்கள்.  பயணங்களின்போதும் கைவசம் கொண்டு செல்லவேண்டும் என்றார்கள்.

இன்சுலின் ஊசியையும் அதற்கான மருந்தையும் எப்போதும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கவும் வேண்டும்.  வெளியூர், வெளிநாட்டு பயணங்களின்போதும், அதற்கென வாங்கியிருக்கும் பிரத்தியேக  பையில், ஐஸ்பேக்குடன் , ஊசியையும் மருந்தையும் வைத்து எடுத்துச்செல்லவேண்டும்.

விமானத்தில் ஏறியதும்,  பணிப்பெண்களிடம் எனது நிலைமையைச் சொல்லி, குறிப்பிட்ட இன்சுலின் பேக்கை விமானத்திலிருக்கும் குளிர்சாதனைப் பெட்டியில் வைக்குமாறு கொடுக்கவேண்டும்.

அவ்வாறு கொடுப்பதுகூட சிக்கல் இல்லை. இறங்கவேண்டிய நாட்டில்  விமானத்தைவிட்டு வெளியே வருமுன்னர்,  ஞாபகம் வைத்து குறிப்பிட்ட இன்சுலின் பேக்கையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

எல்லாம் எதற்காக..? உயிர் வாழ்வதற்குத்தான்.

எனது நீண்ட கால நண்பர் ஒருவர் பிரபல எழுத்தாளர். இலக்கிய  மொழிபெயர்ப்பாளர்.  கொழும்பில் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவிலும், பின்னர் தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும்  இருந்தார்.

அவரது பெயர் ராஜஶ்ரீகாந்தன்.  2004 ஆம் ஆண்டு அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல் சந்திப்பு : எங்கிருந்தாலும் சோர்ந்துவிடாமல் அயராமல் இயங்கும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் ! கற்றதையும் பெற்றதையும் சிந்தனை வடிவில் பதிவுசெய்துவரும் எழுத்தாளர் ! ! முருகபூபதி

 “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்     என்ற


சிந்தனை எனக்கு, நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தோன்றியது.

1970 களில் மல்லிகை ஆசிரியரால் நான் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கை, இந்தியா உட்பட பல  நாடுகளில் எனக்கு  நண்பர்கள் உருவானார்கள்.

அவ்வாறு 1975 இல் எனக்கு அறிமுகமானவர்தான் தற்போது கனடாவில் வதியும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன்.

தமிழ், கலை இலக்கியப்பரப்பில் பல பத்மநாதன்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என்பவரைப்பற்றிச் சொன்னால்,  இவர்தான் கனடாவில் வாழ்ந்தவாறு சிந்தனைப்பூக்கள் என்ற தலைப்பில் தொடர்ந்தும் எழுதிவரும் எழுத்தாளர் என்பது தெரியவரும்.

யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை இதழ் வெளியாகிக்கொண்டிருந்த


காலப்பகுதியில்,  ஒவ்வொரு மாதமும் மல்லிகை அச்சாகியதும்,  அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா,  எனக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்புவார்.

 “ மல்லிகை பிரதிகள் கொழும்பு பழைய சோனகத்தெருவில் அமைந்துள்ள விற்பனை – விநியோக நிலையத்திற்கு லொறியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்று பெற்றுக்கொண்டு, கொழும்பிலும், நீர்கொழும்பிலும் விநியோகிக்கவும் .  “ என்ற தகவல் அந்த அஞ்சலட்டையில் எழுதப்பட்டிருக்கும்.

கொழும்பு சென்று மல்லிகை பிரதிகளை பெற்றுக்கொண்டு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  அமைந்திருந்த ராஜேஸ்வரி பவன், ஆனந்த பவன், லக்ஷ்மி பவன், மற்றும் வெள்ளவத்தையிலிருக்கும் சில புத்தக கடைகளுக்கும் விநியோகிப்பேன்.

ஜீவா சில நாட்களில் ரயில் ஏறி கொழும்புக்கு வந்துவிடுவார்.

இங்கு ஜீவா தங்குவதற்கென சில இடங்கள் இருக்கும்.  ஜீவாவை பார்க்கச்சென்ற சந்தர்ப்பங்களில் எனக்கு அறிமுகமானவர்கள்தான் தம்பையா அண்ணர், செல்வம் மற்றும் மணியண்ணன்,  மேமன் கவி உட்பட பலர்.  இவர்களில் தம்பையா அண்ணர்,  பின்னாளில் ஜீவாவின் சம்பந்தியானார்.

இவர்களில் செல்வம் அண்ணரின் சகோதரர்தான் பத்மநாதன்.

பகுத்தறிவுச்சிந்தனையுடன் பத்மநாதன் அக்காலப்பகுதியில் என்னோடு பல விடயங்களை பேசியிருக்கிறார்.

நான் இவரை முதல் முதலில் சந்தித்த காலப்பகுதியில், இவர் கொழும்பு  பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பயிற்சி நெறிக்கு வந்திருந்தார்.

பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு, இன்றும் பல துயரச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும் சமகாலத்தில், அன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்னோடு பகுத்தறிவுச் சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட  இனிய நண்பர் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் பற்றி இந்த முதல் சந்திப்பு தொடரில் சொல்ல முன்வந்துள்ளேன்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வருவதற்கு முன்பே இவர் 1985 இல் கனடாவுக்குச் சென்றுவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர், இவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கனடா சென்றிருந்தவேளையில் ஸ்காபரோவில் சந்தித்தேன். அதன்பின்னர், கொவிட் பெருந்தொற்று வழங்கிய வரப்பிரசாதத்தினால், அடிக்கடி மெய்நிகர் நிகழ்ச்சிகளில் பார்த்துப் பேசிவந்தேன்.

தேனான திருவாசகத்தை செப்பி நின்றார் வாதவூரர் !

 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .....அவுஸ்திரேலியா


   பக்தி இலக்கியம் என்னும் பொழுது அது எங்கள் தமிழ் மொழிக்கே


வாய்த்திருக்கிறது. ஏனைய மொழி களில் பக்திக்கு என்று தனியான இடம் கொடுத்து - அதனை இலக்கியமாய் ஆக்கவே இல்லை. அதற்கான முக்கியத்துவத்தையும் வழங்க வில்லை என்பதை மனமிருத்துவது அவசியமாகும். பக்தி இலக்கியத்தின் முன்னோடிகளாய் விளங்கும் - காரைக்கால் அம்மையார் , சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் , பின்னேதான் வாத வூரார் வருகின்றார். ஏனையவர்கள் பக்தி என்னும் வழியில் பயணப்பட்டவர்களே.அவர்கள் காலம் , அவர் கள் சூழல் , அவர்களின் வழியினை வகுத்துக் கொடுத்தது எனலாம். அவர்கள் அனைவருமே பக்தியின் உச் சத்தைத் தொட்டவர்களே ஆவர். இதில் எந்தவித கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அவர்களின் பின்னே வந்த வாதவூர் வண்டின் இறை அனுபவமும் , பக்தியின் நிலையும் , அதனால் வெளிவந்த பக்திப் புதைய ல்களும் சற்று வித்தியாசமானதாக அமைந்தது எனபதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

     தேனை நாடி வண்டுகள் ஓடும்.தேனைச் சுவைப்பதில் வண்டுகளுக்கு பேரானந்தம். இந்த வண்டு மற் றைய வண்டுகள் போன்ற தன்று.இவ் வண்டு திரு வாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடி நிற்க - வாதவூர் வண்டுவேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உய ரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் - தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும்.சொல்லச் சொல்ல இனிக்கும் சொற் களால்  ஆனதுதான் அந்த வாசகம் " திருவாசகம் ".  இதனால்த்தான் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவா சகத்துக்கும் உருகார் " என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது. அது மட்டும் அல்ல - திரு வாசகத்தைத் தமிழ் வேதமாகவும் கொள்ளலாம். வடமொழியில்தான் வேதங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் வேதம் திருவாசகந்தான் என்பதை யாவரும் மனமிருத்து வது அவசியமாகும்.

வெள்ளிக்கிழமை விரதம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் நடிப்பில் 16 படங்களைத் தயாரித்த சாண்டோ எம் எம் ஏ


சின்னப்பா தேவர் , எம் ஜி ஆர் அரசியலில் தீவிரமாக இயங்க ஆரம்பித்த பிறகு இளம் நடிகர்களை போட்டு பக்திப் படங்களையும், மிருகங்களை வைத்து சாகஸப் படங்களையும் எடுக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் படம் எடுக்கும் நாகப் பாம்பை வைத்து தேவர் எடுத்த படம்தான் வெள்ளிக்கிழமை விரதம்.

50 ஆண்டுகளுக்கு முன் 1974ம் வருடம் இந்தப் படம் தயாரானது. அதுவரை காலமும் இரண்டாம் கதாநாயகனாகவும், கருப்பு

வெள்ளைப் படங்களில் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருந்த சிவகுமாருக்கு திரையுலகில் ஒரு திருப்பு முனையாக இப் படம் அமைந்தது. இப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. அது மட்டுமன்றி இந்தப் படம் வெளிவந்து இரண்டு மாதங்களில் சிவகுமாருக்கு கல்யாணமும் நடந்தது. ஆக படத்துக்கு மட்டுமன்றி , அவரின் கல்யாணத்துக்கும் இது பொன் விழா.

தேவரின் படங்கள் எல்லாவற்றையும் அவரின் தம்பி எம் ஏ திருமுகம் தான் டைரக்ட் செய்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தின் மூலம் தன் மகளை மணந்து மருமகனாகி விட்ட ஆர் தியாகராஜனை டைரக்டராக்க விரும்பிய தேவர் படத்தை கலரில் உருவாக்க முன் வந்தார். படத்தை டைரக்ட் செய்ய முன் வந்த மருமகன் , மாமனாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் நீங்கள் அங்கே இருந்தால் என்னால் இயல்பாக இயங்க இயக்க முடியாது . அதனால் நீங்கள் அங்கு வரக் கூடாது. இதற்கு உடன்பட்ட தேவர் மருமகனை அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்.

பார்வதி நாகப் பாம்பை தன் குலதெய்வமாக வணங்குபவள். வெள்ளிக் கிழமை தோறும் விரதம் இருந்து நாகத்துக்கு பால் வார்ப்பவள். நாக தேவதையின் ஆசியினால் தனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் என்று நம்புகிறாள். அதற்கமைய ராஜா என்ற செல்வந்தன் அவளை மணக்கிறான். எதிர்பாராமல் நடந்த இந்த திருமணத்தால் பார்வதி மகிழ்கிறாள். ஆனால் தன் கணவன் பாம்பை வெறுப்பவன் என்று அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இதனால் தன் தாம்பத்தியம் சிறக்க நாகதேவதையை வேண்டுகிறாள். அதே சமயம் ராஜாவிடம் பணிபுரியும் அசோக்கும், ஜெயாவும் சதி செய்து சதி பதிகளை பிரித்து சொத்துகளை அடைய முயற்சி செய்கிறார்கள். இவர்களிடம் இருந்து நாகம் எவ்வாறு அவர்களை காக்கிறது என்பதே படத்தின் கதை.

🛏️ இராமநாதன் பெண்கள் கல்லூரி விடுதிகளுக்கு மெத்தை மற்றும் ஒட்டுப்பலகை வழங்குதல்

 யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகம் ஜெ/இராமநாதன் கல்லூரியில் அண்மையில் வன்னி ஹோப் மேற்கொண்ட முயற்சியின் நேர்மறையான தாக்கத்தை பகிர்ந்து கொள்வதில்  மகிழ்ச்சியடைகிறோம். அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த திரு & திருமதி சிவஞானசுந்தரம் அவர்களின் தாராளமான அனுசரணைக்கு நன்றி, மாணவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும் வகையில் விடுதிகளுக்கு மிகவும் தேவையான மெத்தை மற்றும் ஒட்டுப்பலகை ஆகியவற்றை  அவர்கள் வழங்கியுள்ளனர்.

📹இந்த திட்டம் செய்யும் வித்தியாசத்தைக் காண முழு வீடியோவையும் பார்க்கவும்:

https://www.youtube.com/watch?v=NOZMVsuouuI


தங்கள் உண்மையுள்ள ரஞ்சன் (மொபைல் எண்+61428138232)

இந்தியா என்ன நினைக்கிறது…?

 July 3, 2024


இலங்கையின் அரசியல் தீர்மானங்கள் எதுவானாலும் அதில் வெளித்தலையீடுகள் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக, இந்தியாவின் கரிசனைகள் பிரதானமானவை. இலங்கை, இந்தியாவின் உடனடி அயல்நாடு என்னும் வகையிலும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதாலும் இந்தியாவின் தலையீடுகள் தவிர்க்க முடியாதவை.

இந்த யதார்த்தத்தைப் புறந்தள்ள வேண்டுமென்று எவர் வேண்டுமானாலும் விரும்பலாம். ஆனால், இந்த யதார்த்தத்தை எவராலும் புறந்தள்ளவே முடியாது. இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தொடர்பில் இந்தியாவின் அவதானம் என்ன – ஆர்வம் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை அறிவதில் நிச்சயம் அனைவருமே ஆர்வத்துடன் இருப்பர்.

ஏற்கனவே, ஜே. வி. பியின் வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்க புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந் தார் – இவ்வாறானதொரு பின்புலத்தில், சஜித் பிரேமதாஸவும் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறான அழைப்புகள் ஒரு செய்தியைத் தெளிவாக முன்வைக்கின்றன. அதாவது, ஜனாதிபதித் தேர்தல் எதிர்பார்த்தவாறு சாதாரண மானதொரு தேர்தலாக இருக்கப்போவதில்லை. மாறாக, நெருக்கடிகள்மிக்க தேர்தலாகவே இருக்கப் போகின்றது.

இந்தியாவின் நலன்களுக்கு உகந்த வேட்பாளர் யார் என்றால் – பதில் நிச்சயமான ஒன்றல்ல. ஆனால், ஒப்பீட்டடிப்படையில் ரணில் மிகவும் பொருத்தமானவராக நோக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதற்கு என்ன காரணம்? நிச்சயமாக இதற்கு ரணில் காரணமல்லர்.

இலங்கைச் செய்திகள்

 ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி ஆரம்பம்

படைப்பாளர், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் காலமானார்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் இலங்கை வம்சாவளி பெண்


ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்

- இரா. சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார்

July 2, 2024 7:38 pm 
  • இரா. சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உலகச் செய்திகள்

 பிரிட்டன் தேர்தல்: முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி

 ட்ரம்புக்கு குற்றவியல் வழக்குகளில் விலக்கு

காசாவில் புதிய போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஹமாஸின் பதிலை ஆராய்கிறது இஸ்ரேல்

வடக்கு, தெற்கு காசாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: பதிலுக்கு ஹமாஸ் ரொக்கெட் மழை

நிபந்தனைகளை ஏற்றால் போர் நிறுத்தம்: ரஷ்யாவிற்கு உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு


பிரிட்டன் தேர்தல்: முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி

July 5, 2024 12:11 pm 

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் லேபர் கட்சி ஆட்சி அமைக்கிறது.

ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் - ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024 .




  இறைவன் சுதர்சன மூர்த்தி தனது குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றவர். எனவே ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்வதன் மூலம் அறியப்படாத உடல்நலக் கஷ்டங்கள், தீய கண் பார்வைகள், எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஸ்ரீ சுதர்சன மகா யாகம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் காலை 8 மணிக்கு விஸ்வக்சேன பூஜை, புண்யாவசனம், கலச பிரதிஷ்டையுடன் பூஜை விதானம் துவங்கி ஸ்ரீ சுதர்சன மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, ஸ்ரீ சுதர்சன மூர்த்தி மற்றும் ஸ்ரீ யோக நரசிம்மர் அலங்காரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஷோடஷோபசார தீபாராதனையுடன் ஸ்ரீ சுதர்ஷன உத்ஸவ உற்சவர் கோவில் வளாகத்தில் ஊர்வலம் நடக்கிறது. 


“சைவத்தின் கருவூலங்களான பன்னிரு திருமுறை - பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடம் பரவலாக்கல்”