எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 32 1995 இல் மரணங்கள் மலிந்த பூமியாக மாறிய எங்கள் தேசம் ! முருகபூபதி

நவாலி புனித பேருவானவர் தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல்  1995 – ஜூலை.

வடமராட்சி நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான குண்டுத்தாக்குதல்  1995 – செப்டெம்பர்.


இலங்கை சுதந்திரம்பெற்ற காலம் முதல்  அரசியல் படுகொலைகளும் இனரீதியான படுகொலைகளும் நீடித்துகொண்டிருப்பதை அவதானித்து வருகின்றோம்.

தமது கணவர்மார் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இரண்டு பெண்களின் பதவிக்காலத்திலும் அரசியல் படுகொலைகளும், இன ரீதியான படுகொலைகளும் குறைவின்றி தொடர்ந்தன.

1959 ஆம் ஆண்டு பிரதமராக பதவியிலிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ


. பண்டாரநாயக்கா,  இதே செப்டெம்பர் மாதத்தில் அவரால் வளர்த்துவிடப்பட்ட  பௌத்த பிக்குகளின் சதியினால் சுட்டுக்கொல்லப்பட்டபோது,  எனக்கு எட்டு வயது.  அவ்வேளையில்  சரஸ்வதி பூசை காலம்.

எங்கள் நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலய தலைமை ஆசிரியர் பண்டிதர் மயில்வாகனம்,  சரஸ்வதி பூசை நிகழ்ச்சி முடிந்தபின்னர்,  கொல்லப்பட்ட பிரதமர் பற்றி சில வார்த்தைகள் பேசி அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

பண்டாரநாயக்காவின் மறைவுக்குப் பின்னர் சரியாக ஒருவருடம் கழித்து 1960 ஆம் ஆண்டு அவரது மனைவி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமரானார்.  இவர் 1960 – 1965 , 1970 – 1977 ,  1994 – 2000  காலப்பகுதிகளில் மூன்று தடவைகள் பிரதமராகவிருந்தார். அத்துடன் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் பெற்றார்.

இவரது புதல்வி சந்திரிக்கா பண்டாரநாயக்கா,  வெளிநாடொன்றுக்கு படிக்கச்சென்றவர்.  மீண்டும் வந்து அரசியலில் ஈடுபட்டார்.

தந்தை ஆரம்பித்து, தாயார் வளர்த்துவிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவேளையில், நடந்த இடைத்தேர்தல் ஒன்றில்  அறிமுகமான திரைப்பட நடிகர் விஜயகுமாரணதுங்கவை காதலித்து கரம்பிடித்தார்.

நவராத்திரி - நாட்டிய கலாநிதி - கார்த்திகா கணேசர்

 .

    



                                     விழாக்காலங்கள் மனித மனத்திற்கு இன்பம் ஊட்டும் நாட்களாக கழியும்.  உழைத்து களைத்த மனதிற்கு உற்சாகம் ஊட்டுவது விழாக்கள். அதனால் தான் போலும் இயற்கையுடன் வளர்ந்த இந்து மதத்தில் விழாக்களுக்கு குறைவே இல்லை.  இந்தியா  பூராவும் விமரிசையாக கொண்டாடப்படுவது நவராத்திரி விழா. ஆனால் எந்த ஒரு விழாவின் பின்னணியிலும் மனித மனதை பண்பட  வைக்கும் தத்துவம் இல்லாது போகாது.

                                    நவராத்திரி இது மனிதன் வாழ்வாங்கு வாழ தேவையான அறிவு ,செல்வம், ,வீரத்தை போற்றி அதற்கான தெய்வங்களை வணங்குவது. செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. லட்சுமி படங்களிலே தேவியின் கைகளில் இருந்து தங்க காசு கொட்டுவதாக வரையப்பட்டிருக்கும் உலக அரங்கில் நாணயத்தின் மதிப்பு தங்கத்திற்கு  இணையாக மதிக்கப்படுகிறது. இந்த தங்கத்தின் மூலம் எதையும் வாங்க முடியும் ஆனால் தங்கத்தை அதிகமாக வைத்திருப்பதால் ஒரு நாடு செல்வந்த நாடாக முடியுமா? நாட்டின் செல்வம் என்பது மக்களின் வாழ்க்கை தரம், அதை நிர்ணயிப்பது நாட்டின் உற்பத்தி, உற்பத்தியை சந்தைப் படுத்துவதால் பெறப்படும் செல்வம்.

                                     விவசாயம் மனித வாழ்வின் உயிர்நாடி. நீர் இல்லாது வரட்சி நீண்டால் விவசாயம் பாதிக்கப்படும். மழை நீரை தேக்கி வைப்பது தகுந்த முறையில் நீர்ப்பாசனம் இவை நாட்டின் செல்வம் அல்லவா. பாய்ந்தோடும்  ஆறு நாட்டிடை வளம்படுத்தும். இயற்கை அளித்த செல்வம் அல்வா இது. தமிழ்நாடு காவேரி மூலம் பாசனம் பெற்று நெல் விளையும் பூமியாக செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பிரதேசமாக விளங்கியது. கர்நாடக காரன்  அணையை கட்டி காவேரியை தடுத்தான்.  நாளாந்தம் அணையை திறந்து தமிழ் நாட்டிற்கு நீரை  தா என கெஞ்ச வேண்டிய நிலை.  இவற்றை அறியும் போது நாட்டின் செல்வம், இயற்கை வளம்,  என்பதை உணர முடியும்.  நீர்வளம்,நிலவளம், மற்றும் ஆலைகளே  நாட்டின் செல்வம்.  இது மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பவை.  இதை உணர்ந்து தானோ என்னவோ எம் வர்கள் அஷ்ட லட்சுமிகளிலே  அன்னலட்சுமிக்கு முதல் இடம் கொடுத்துள்ளார்கள். அன்னம் உணவு.  உணவு கிடைக்காத எவரும் ஏழைதான்.

     

படித்தோம் சொல்கின்றோம் கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் புதிய தலைமுறையையும் உள்வாங்கியிருக்கும் இளமகிழ் சுவடு முருகபூபதி


கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும்,  தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை அண்மையில் படிக்க நேர்ந்தது.

தமிழர் தகவலை கடந்த மூன்று தசாப்த காலமாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக வெளியிட்டுவரும், இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்  “ எஸ்தி  “ என அழைக்கப்படும் எஸ். திருச்செல்வம் அவர்களின் கடின உழைப்பு அதன் தொடர் வருகைக்கு சாட்சி பகருகின்றது.

சிறந்த பல ஆக்கங்களை உள்ளடக்கி மாதந்தோறும்  தமிழர் தகவலை வெளியிட்டுவரும் எஸ்தி, ஆண்டுமலரையும் அதிக பக்கங்களில் வெளியிட்டு அதன் உள்ளடக்கத்திற்கு கனதியை சேர்த்து வருபவர்.

ஊடகத்துறையில் அவர் பெற்றிருக்கும் பட்டறிவே,  தமிழர் தகவலுக்கும் மூலதனம் எனச்சொல்லலாம்.

எஸ்தியின் ஊடக வாழ்வு குறித்தும், அதனால் அவர் கற்றதையும்


பெற்றதையும் இழந்ததையும் பற்றி தனியாக – விரிவாகவே எழுதமுடியும். அதனைத்தவிர்த்துக்கொண்டு  30 ஆவது ஆண்டுமலருக்குள் பிரவேசிக்கின்றேன்.

 “ சாதனச் சமூகவியலில் (Media sociology)  தகவல் பதிவும் தகவல் பரிமாற்றமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள். இந்த இலக்குடன்தான் முப்பதாண்டு காலம் தமிழர் தகவல் உருமாறாது வெளிவந்துகொண்டிருக்கிறது.

மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் நேர்த்தியான மேம்பாட்டுக்கும் தொடர்பாடலே (Communication)  மூலவேர். இதனைப் பூரணமாக உணர்ந்துள்ள தமிழர் தகவல், கடந்த கால நிகழ்கால மாற்றங்களையும் வளர்காலத்தில் வரப்போகும் மாற்றங்களை எதிர்வு கூறுவதையும் சமூக நடைமுறைக்கு உட்படுத்தி பதிவாக்கி வருகிறது  “  இவ்வாறு இம்மலரின் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவிக்கும் ஆசிரியர்,  அதற்கேற்பவே மலரின் உள்ளடக்கத்தையும் வடிவமைத்துள்ளார்.

ஆசிரியத் தலையங்கத்தில் அவர் பதிவிட்டுள்ள மற்றும் ஒரு கருத்தும் கவனத்திற்குரியது.  எஸ்தி இவ்வாறு சொல்கிறார்:                “ புலம்பெயர் அகதிச்சமூகமாக கணிக்கப்பெற்ற நாங்கள், இன்று கனடிய வாழ்வின் அம்சங்கள் ஒவ்வொன்றிலும் எங்களை இணைத்து வருகின்றோம். இதனால் எம்மக்களின் வரலாற்றெழுத்தியலுக்கு அறிகை முறையான பதிவாகவும் உறுதுணையாகவும் தமிழர் தகவல் தன்னை உட்படுத்தியுள்ளது.  “

சமகாலத்தில்  இலங்கை அரசும் புகலிடத் தமிழர்களின் மூலதனங்களை  நாட்டுக்குள்  எதிர்பார்த்திருக்கின்றது.   அகதியாக விரட்டப்பட்ட தமிழர் சமூகம்,  கடந்த முப்பது ஆண்டு காலத்தில்,  வெளியே எவ்வாறிருக்கிறது என்பதை தொடர்ச்சியாக  ஆவணப்படுத்திவரும் கனடா தமிழர் தகவல்,  புகலிடத்தமிழரின் தற்போதைய நிலை குறித்தும்  ஆசிரியத் தலையங்கத்தின் மூலம் சுட்டிக்காண்பித்திருக்கிறது.

கனடாவிலிருந்து இம்மலர் வெளியிடப்பட்டிருந்தாலும்,  முழு உலகிலும் தமிழர் வாழும் தேசங்களிலிருந்தும்  படைப்பாளிகள் எழுதியிருக்கின்றனர்.  அந்தவகையிலும்  இம்மலர் குறிப்பிடத்தகுந்த ஆவணமாகவே திகழுகின்றது.

1992 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் வெளியான தமிழர் தகவலின் ஆண்டு மலர்களின் முகப்பினையும்  இணைத்திருப்பதையும்  ஒருவகையில் நனவிடை தோய்தலாகவே கருதமுடிகிறது.

இத்தனையையும்  கடந்துவிட்டுத்தான் இந்த 30 ஆவது ஆண்டு மலர் வெளியாகிறது என்பதை உறைபொருளாக காண்பிக்கின்றது. அரசியல்,  வரலாறு,  பொருளாதாரம்,  சமூக, கலை ( இசை – நடனம் ) , இலக்கியம், ஊடகம்  ( இதழியல் ) , விஞ்ஞானம்,  மருத்துவம்,  விவசாயம்,  சினிமா, ஆய்வு மற்றும் இனக்குழுக்கள்  சார்ந்த பல்வேறு படைப்புகள்  தமிழிலும் ஆங்கிலத்திலும் இம்மலருக்கு கனதியை தந்துள்ளன.

பட்டிக்காடா பட்டணமா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழர்கள் இலட்சக்கணக்கில் இன்று மேல் நாடுகளில் வாழ்ந்து


வருகிறார்கள்.அந்நாட்டின் கலாசாரங்கள்,பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.ஆனாலும் தங்கள் பண்பாடு,கலாசாரங்களை அவர்கள் மறக்கக் கூடாது என்பதை விளக்கும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் தான் பட்டிக்காடா பட்டணமா.

டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவி டைரக்டராக சில காலம் பணியாற்றி

விட்டு இயக்குனரானவர் பி மாதவன்.சிவாஜியின் நடிப்பில் பல வெற்றி படங்களை தந்த இவர் தனது சொந்த பட நிறுவனமான அருண் பிரசாத் முவீஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்தார்.ஏற்கனவே இவர் தயாரித்து டைரக்ட் செய்த எங்க ஊர் ராஜா,ராமன் எத்தனை ராமனடி படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்தப் படமும் தயாரானது.

சோழவந்தான் கிராமத்தை சேர்ந்த மூக்கையா சேர்வை ஊரில் மதிப்பும்,மரியாதையையுமாக வாழ்கிறான்.ஊரில் அவன் இட்டதே சட்டம் ஆகிறது.அவனின் முறைப் பெண் கல்பனா லண்டனில் படித்து விட்டு பெற்றோருடன் ஊருக்கு வருகிறாள்.அங்கே மூக்கையா தலையில் குடிமியுடனும்,வேட்டியம் சால்வையுமாக கையில் தீச்சட்டி ஏந்தி ஆடிப் பாடுவதை கண்டு அதிசயிக்கிறாள்.அவனின் வீரத்தை மெச்சுகிறாள்.சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனை திருமணமும் செய்கிறாள்.ஆனால் அவளுடைய நாகரீக மோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மூக்கையா தடுமாறுகிறான்.இருவரின் மண வாழ்விலும் விரிசல் ஏற்படுகிறது.இதற்கிடையில் மூக்கையாவை ராக்கம்மாவுக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது.கல்பனா, மூக்கைய்யா மீண்டும் இணைந்தார்களா,பட்டிக்காடும்,பட்டணமும் சேர்ந்ததா என்பதுதான் மீதிக்கு கதை.

யாழ். குடாநாடு, எங்கிருந்து எங்கே செல்கிறது …? அவதானி

 அண்மையில் மறைந்த எலிஸபெத் மகாராணியாரின் இறுதி


நிகழ்விற்கு சென்றவர்கள் எத்தனைபேர், அவரது மருமகள் வேல்ஸ் இளவரசி  டயானாவின் இறுதி நிகழ்வுக்கு எத்தனைபேர் சென்றனர்..? என  அனைத்துலக சமூகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் அதேசமயம்,  இலங்கையில் யாழ். குடாநாட்டில் எத்தனைபேர் தற்போது கெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கின்றனர் என்ற புள்ளி விபரங்களை வைத்து ஆழ்ந்த கவலையில் இருக்கின்றனர் சமூக நலன் குறித்து சிந்திக்கும் அவதானிகள்.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் வடக்கிற்கு  வருகை தந்த இஸ்ரேலிய


விஞ்ஞானிகள்,  இங்கு நிலத்தடி நீரை பரிசோதித்துவிட்டு,  காலப்போக்கில் இந்நீர் உவர்ப்பாக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது என எச்சரிக்கையாக சொல்லிவிட்டுச்சென்றதாக  முன்னர் கூறப்பட்டது.

குறிப்பிட்ட ஏழு தசாப்த காலத்தில், வடபுலத்திலிருந்து  தென்னிலங்கையில்  அமைந்த  பாராளுமன்றத்திற்கு சென்ற மக்களின் பிரதிநிதிகள் நன்னீர், உவர் நீராக மாறுவது குறித்து ஆராய்ந்து அதற்கு மாற்று நடவடிக்கை எடுத்தார்களா..?

1970 இற்குப்பின்னர்  வடக்கிலிருந்து  உருவான ஆயுதம் ஏந்திய விடுதலை இயக்கங்களாவது ஏதும் உருப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தார்களா..?

நல்ல குடிநீருக்காக மக்கள் கோயில் கிணறுகளை நோக்கி படையெடுத்த காட்சிகளைத்தான் பார்த்தோம்.  அவ்வாறு சென்றவர்களின் சாதி அடையாளம் குறித்தும் கவனம் செலுத்திய மேட்டுக்குடி  சமூகத்தையும் கடந்து வந்திருக்கின்றோம்.

1970 களில் புங்குடுதீவு பிரதேசத்தில் வாழ்ந்த எமது தமிழ் மக்கள்,  ஒருவரை மறந்திருக்கமாட்டார்கள்.  அங்கிருந்த கண்ணகி ஆலயத்தில் இருந்த குடிநீர் கிணற்றில் அடிநிலை மக்களும் தண்ணீர் பெறல்வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து அந்த  காந்தீயவாதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.  இறுதியில் உயர் சாதிமான்களின் தூண்டுதலினால், காவலர்களிடம் அடிவாங்கியே இறந்தார்.

பண்ணையில் ஒரு மிருகம் – நடேசனின் நாவல் பற்றிய பார்வை – யசோதா. பத்மநாதன்.

.

8.7.22 அன்று வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்ரும் கவிஞருமான. பாஸ்கரன் அவர்களது இல்லத்தில் இலக்கியக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. கொரோனாக் கால இடர்களின் பின் சாஸ்வதமாக மேடை, பேச்சு, மைக்  என்ற ஆரவாரங்கள் இல்லாத கலந்துரையாடலில் சுமார் 10பேர் கலந்து கொண்டிருந்தார்கள். எழுத்தாளர் நடேசன் அவர்களும் அவர் மனைவியும் மெல்போர்னில் இருந்து வந்திருந்ததால் அவரின்பண்ணையில் ஒரு மிருகம்நாவல் அப்போது தான் பிறந்த குழந்தையாக ( மே 22 வெளிவந்திருக்கிறது) என் கைக்குக் கிட்டி இருந்தது. அது குறித்து கலந்துரையாடியதன் விரிவாக்கம் இது.

எச்சரிக்கை! பதிவு சற்று விரிந்தது!!

 84 - 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல்.

இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது.

காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம், முன்னுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் 130 பக்கங்களில் 10 அத்தியாயங்களாக விரிகிறது கதை.

கதையை நான் சொல்வது தகாது. அது என் நோக்கமும் அல்ல. அது வாசகர்களின் முன்மொழிவுகள் இல்லாத பார்வைக்கும் ரசனைக்கும் அனுபவிப்புக்கும் உரியது. இருந்த போதும்,  கண்ணுக்குப் புலனாகாமல் உலவி வரும்சமூகமிருகம்ஒன்று பற்றியது இந்தபண்ணையில் ஒரு மிருகம்என்ற இந் நாவல் என்று சொல்வது தவறாகா. ஆனால் நிச்சயமாக நான் இந்தக் கதைப்போக்குப் பற்றியும்  அதனை அவர் எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்றும் பேசுதல் தகும்.

 

இலங்கைச் செய்திகள்

வழக்கு விசாரணை நவ.17க்கு ஒத்திவைப்பு

தேசிய சபைக்கு 27 உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நேற்று நியமனம் 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி

வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்

நிலக்கரி இறக்குமதியை தடுக்க சதித் திட்டம்

சட்டவிரோத ஆர்ப்பாட்ட பேரணி என தெரிவித்து 83 பேர் கைது

வசந்த முதலிகேயின் மனு விசாரணை ஒக்டோபர் 18 இல்


வழக்கு விசாரணை நவ.17க்கு ஒத்திவைப்பு 


பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பாகி சிறையிலடைக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு அப்போதய ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நேற்று (23) இடம்பெற்றது.

இதன்போது இந்த விசாரணையை நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.    நன்றி தினகரன் 

உலகச் செய்திகள்

 இராணுவத்தை அணிதிரட்ட புட்டின் அதிரடி உத்தரவு

ரஷ்யாவில் போருக்கு எதிரான பேரணிகளில் 1,300 பேர் கைது

ஈரானில் ‘ஹிஜாப்’ ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்: பலி ஒன்பதாக அதிகரிப்பு

தாய்வானை பாதுகாக்க பைடன் மீண்டும் உறுதி

சிரியாவில் தஞ்சப் படகு மூழ்கியதில் 61 பேர் பலி


இராணுவத்தை அணிதிரட்ட புட்டின் அதிரடி உத்தரவு

மேற்கு நாடுகள் மீதும் எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக இராணுவ அணிதிரட்டலுக்கான உத்தரவை ரஷ்யா நேற்று (21) பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான போர் ஏழு மாதங்களை எட்டி இருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மஹா சண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை 2ஆம் தேதி அக்டோபர் 2022


மகா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு அன்னை துர்க்கையின் அருளைப் பெற ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் அன்புடன் அழைக்கிறது.

சிட்னி துர்கா கோயிலின் ஹோமம் துர்கா, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியின் ஒருங்கிணைந்த ஆற்றலை அழைக்க பயன்படுகிறது. பழங்காலத்திலிருந்தே இந்த ஹோமம் சுற்றுச்சூழலின் எதிர்மறையான தாக்கத்தை நீக்கி நேர்மறை ஆற்றலைத் தூண்டுவதற்காக செய்யப்படுகிறது.

காலை 8:30 மணி - விநாயக பூஜை, சங்கல்பம், நவவர்ண பூஜை

காலை 9:00 மணி - ஸ்ரீ மங்கள சண்டி ஹோமம் (சௌபாக்ய திருவியா, சமர்ப்பணம், மஹா பூர்ணாஹுதி, துர்கா தேவிக்கு சண்டிஹோமம் கலச அபிஷேகம்.

மதியம் 1:00 மணி - தீபாராதனை + பிரசாதம்