காவியத் தாயின் இளையமகன்!!

.




படித்தவனும் வியக்கின்றான்! படிப்பே அற்ற

   பாமரனும் வியக்கின்றான்! பணத்திற் காக

நடித்தவனும் வியக்கின்றான்! பணமே இன்றி

   நலிந்தவனும் வியக்கின்றான்! நிமிர்ந்து நில்லாக்

குடித்தவனும் வியக்கின்றான்! குடும்பப் பெண்ணாய்க்

   குனிந்தவளும் வியக்கின்றாள்! தமிழில் பாக்கள்

வடிப்பவனும் வியக்கின்றான்! இவன்எ ழுத்தை

   வளர்உலகைப் படைத்தவனும் வியக்கின் றானோ!!



சிட்னி முருகன் கோவிலில் பிரதிஸ்டை

.
.
சமய குரவர் சேக்கிழார் பிரதிஸ்டை



சிட்னி தமிழ் அறிவகத்தின் நிகழ்வு

.
சிட்னி தமிழ் அறிவகத்தின் நிகழ்வு சனிக்கிழமை இரவு இடம் பெற்றது அந்த நிகழ்வின் சில படங்களை கீழே பார்க்கலாம் .


திருமதி தேவகி கருணாகரனின் புத்தக வெளியீட்டு விழா - மதுரா மகாதேவ்

.

 Photo

திருமதி தேவகி கருணாகரனின் புத்தக வெளியீட்டு விழா 27/4/2014 அன்று Carrington Church ஹாலில் மாலை 5.15 மணிக்கு நடை பெற்றது. அவர்களின் அழைப்பிதழை ஏற்று நானும் சென்றிருந்தேன். எமது தழிழரின் மரபுக்கு ஏற்ற முறையில் மண்டபத்தின் வாசலில் குத்துவிழக்கு, நிறைகுடம், சந்தனம், வீபூதி, வாழைப்பழம், சாம்பிராணி குச்சி என்பன ஏற்றப்பட்டு மிகவும் எழிமையான முறையில் மண்டப வாசல் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. திரு, திருமதி கருணாகரன் தம்பதிகள் மண்டப வாசலில் நின்று அவர்களது அழைப்பை ஏற்று  வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.


திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

இலங்கை  தேசிய   சுவடிகள்  திணைக்களத்தில் பணியாற்றி    எம்மவரின்   தேவைகளை  பூர்த்தி   செய்த நவசோதி.
இங்கிலாந்தில்    வாகன   விபத்தில்     மறைந்தவர்
                                                                                      
                                                        
                                                                    கொழும்பு    ஜிந்துப்பிட்டியைப் பற்றித்   தெரியுமா?
ஓ----- தெரியுமே----
ஐந்துலாம்புச் சந்தி  -   நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான    செட்டியார் தெரு, சிவசுப்பிரமணிய   சுவாமி  கோயில்  -   விவேகானந்தா மண்டபம்  -கமலாமோடி   மண்டபம்  -   விவேகானந்தா   மகா   வித்தியாலயம்    இப்படி பிரசித்தமானவைகள்    அமைந்த   பிரதேசம்.
அவ்வளவுதானா?   இந்த   ஜிந்துபிட்டிக்கென  தனியாக   ஒரு   வரலாறு இருப்பது    தெரியுமா?
தெரியாதே?
மகாத்மா காந்தி  -   ஜவஹர்லால்   நேரு  -   தியாகராஜ   பாகவதர்  -  பி.யு.சின்னப்பா  -    கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்   முதலானோரை முதல்   முதலில்   வரவேற்ற   இடமும்  ஜிந்துப்பிட்டிதான்.   பல கலைஞர்கள் - பேச்சாளர்கள் - எழுத்தாளர்கள் - உருவாகியதும்   இங்குதான்.

துர்க்கா தேவி தேவஸ்தான இரவு விருந்து 2014. 10 05 14

.

சங்க இலக்கியக் காட்சிகள் 6 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.
----------------------------------------------------------------------------------
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------
காட்சி 6

காதல் ஓரிடம் கல்யாணம் வேறிடமா?


அவள் ஒரு சிறந்த அழகி. திருமணப்பருவத்திலே இருக்கிறாள். அவளைப் பெண்கேட்டுப் பலர் வந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை வந்தவர்கள் யாரும் அவளுக்குப் பொருத்தமானவர்களாக இல்லை. அதனால் சரியான பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்கும் வரை அவளது திருமண நாள் தள்ளிக்கொண்டே போகின்றது. பெண்கேட்டு இன்னமும் பலர் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.

வருகின்ற யாரைiயுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. தனது பெற்றோருக்கு யாரையாவது பிடித்துவிட்டால் திருமணம்தான். ஓவ்வொரு கணமும் அதை நினைத்து அவள் அச்சத்தில் துடித்துக்கொண்டிருந்தாள். திருமணம் என்றால் மகிழ்ச்சியடையவேண்டிய அவள் கவலைப்படுகின்றாள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்மே! இருக்கிறது.

சிட்னியில் இடம் பெற்ற மாபெரும் திருக்குறள் மாநாடு

.



சசிகரன் புண்ணியமூர்த்தி

அவுஸ்த்ரேலியா சிட்னியில் துர்க்கை அம்மன் கோவில் ஆதரவுடன் தமிழ் ஓசை வழங்கும்மாபெரும் திருக்குறள் மாநாடு மாநாடு நேற்று மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது . இதன்போது பல நாடுகளில் இருந்ந்து வருகை தந்த பேராசிரியர்கள் திருக்குறளின் மகிமை பற்றி மிகவும் விளக்கமாக எமது எதிர்கால சந்ததியினருக்கு விளக்கி கூறியிருந்தனர் .
இந்த நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து தமிழருவி சிவகுமாரன் அருள்தந்தை அமுதன் அடிகளார் தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் மறை மலை இலக்குவனார் ,பேராசிரியர் நாவுக்கரசர் மு. சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வுக்கு மிகவும் ஆர்வத்துடன் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இந்த காலகட்டத்தில் எமது கலை கலாசார பாரம்பெரியம் என்பவற்றை மெருகூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளில் முதலாவது நாடாக இந்த திருக்குறள் மாநாடு இடம் பெற்றமை ஒரு சிறப்பம்சமாக விளங்குகின்றது .
இதன் போது உலகிலேஜே வாழும் நாடுகளில் முதல் தடவையாக திருக்குறள் மாநாடு இடம்பெற்றுள்ளமை அவுஸ்த்ரேலியா சிட்னியில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் தர்மரத்னம் சிவராம் (தராகி) படுகொலையும், இலங்கையின் நிலைப்பாடும் !:எம்.ரிஷான் ஷெரீப்

.
sivaram_dharmeratna‘தராகி’ என அழைக்கப்பட்டுவந்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தர்மரத்னம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு (28.04.2014) 09 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இக் காலத்தில் இலங்கை, இந்தியாவில் ‘அரசியல்’ செய்துவரும் அநேகர் இவரை மறந்திருக்கக் கூடும்.
1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி, மட்டக்களப்பில் பிறந்த தர்மரத்னம் சிவராம், 1980 களின் பின்னர் ப்ளொட், EPLF போன்ற இயக்கங்களுடன் இணைந்து தனது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்தவர். ‘தராகி’, ‘எஸ்.ஆர்’ ஆகிய பெயர்களில் அச்சு மற்றும் இணையத்தில் எழுதி வந்த இவர், பிரபல அரசியல் விமர்சகராகவும், பத்தி எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டவர்.
2005 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி, இலங்கை, பம்பலபிடிய பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்து, வேனில் வந்த குழுவினரால் கடத்தப்பட்ட இவரது சடலத்தை மறுதினம் இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் கண்டெடுத்தனர். பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்துக் கடத்தி, பாராளுமன்றத்துக்கருகிலேயே வைத்து சுட்டுக் கொலை செய்து, சடலத்தை விட்டுச் செல்வார்களாயின் கடத்தல்காரர்கள் மற்றும் கொலைகாரர்கள் எவ்வளவு பலமும், அதிகாரமுமுடையவர்களாக இருந்திருக்கக் கூடும்?! இலங்கையின் அதி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து இவ்வாறான குற்றச் செயல்களை யாரால் செய்யவியலும்?!
ஒன்பது வருடங்கள் கடந்தும் இன்னும் உயர் அதிகாரிகளாலும், பாதுகாப்புப் பிரிவாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரகசியக் கேமராக்கள் பதிக்கப்பட்டுள்ள, இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நடந்த இப் பாதகச் செயலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஏன் இன்னும் முடியவில்லை? எனில் குற்றவாளிகள் யார்? தராகி என அழைக்கப்பட்ட தர்மரத்னம் சிவராமைப் படுகொலை செய்தவர்கள் யார்?

உண்மைக்குப் பல பக்கங்கள் -எஸ்.கிருஸ்ணமூர்த்தி

.
திறக்கப்படாத புத்தகங்கள்


அவுஸ்த்திரேலியா நூலகங்களில் ஒரு நடைமுறையுண்டு. வாசகர்களின் பாவனையில் இல்லாத புத்தகங்களை நூலகங்களிருந்து வெளியே எடுத்துவிடுவார்கள். புத்தகங்கள் நூலக அலுமாரிகளில் உறங்குவதை அவர்கள் விரும்புவதில்லை. அவை எப்போதும் வாசகர்களில் கைகளில் இருப்பதையே விரும்புவார்கள்.

எனது புத்தக அலுமாரியில் பல புத்தகங்கள் பல ஆண்டுகளாகத் திறக்கப்படமல் இருக்கின்றது. புத்தக வெளியீட்டு விழாவில் வாங்கியவை, நண்பர்களில் முகத்திற்காக வாங்கியவை, நண்பர்களின் நண்பர்களுக்காக வாங்கியவை என பலவகைப்படும். புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்படும் அல்லது விற்கப்படும் புத்தகங்களிற்கு ஒரு புத்தகத்தை ஒருவர் மட்டும்தான் வாசிப்பர். இலங்கை இந்தியாவில் விற்பனையாகும் புத்தகத்தகங்கள் ஒரு புத்தகம் பல கைகளில் தவழும்.

மகளிர் தினம் – 24. 4. 14 - தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நிசவே) - வீ.எம். தேவராஜன்

.
தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நிசவே)
மகளிர் தினம் – 24. 4. 14


தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தாம் வாரந்தம் கூடும் ஹோம்புஷ்  பேற்ஸ் வீதியில் அமைந்துள்ள சன சமூக நிலைய மண்டபத்தில், இவ்வாண்டும் மகளிர் தினத்தை அதி சிறப்பாக கொண்டாடியது.  இவ்வாண்டு “சிட்னி விஜயம்”, “ஜொலி ஜீனியர்ஸ்” என இரு நகைச்சுவை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. சிட்னி விஜயம் நாடகத்தில் பருத்தித்துறை தணிகாசலம், மனைவி முத்து, பத்மராசா என்று மூன்று பாத்திரங்களை வைத்து அபாரமான ஒரு நகைச்சுவை விருந்தை தாயக மண்ணின் வாசனை கம கமக்க படைத்தார்கள். வாசுகி மகாதேவா தணிகாசலம் ஆகவும், மனைவி முத்துவாக சீதா இராமநாதனும், பத்மராசா வேடமேந்தி பிறிம்றோஸ் ஞானசுந்தரமும், பண்டிதநாயகி திசைராசாவும் மண்டபத்தை கரஒலியாலும் சிரிப்பொலியாலும் அதிர வைத்தார்கள். யாரும் பிறநாடு போனால் தங்கள் சொந்தங்களுக்கு பிரயாணம் செய்பவனின் கஷ்டத்தைப் பற்றி சிந்திக்காமல் தூளும் மாவும் கொடுத்துவிடும் ஊர்ப்பழக்கத்தை நகைச்சுவையாக சிட்னி போறவரிடம் டாவினில் இருக்கும் பிள்ளைக்கு ஐந்து கிலோ கருவாடு கொடுத்துவிட முனையும் தணிகாசலம் தம்பதிகள், ஆறு வருடமாக அழைக்காத பத்மராசா தம்பதிகளை பிள்ளை பிறந்தவுடன் அவுஸ்திரேலியாவுக்கு பிள்ளையைப் பார்த்துக்கொள்ள அழைக்கும் அவரின் மகனின் அவசரத்தை குத்தலாக வெளிப்படுத்தி நகைச்சுவையுடன் சிந்திக்க வைத்த காட்சிகள் என இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.  எல்லாவற்றிற்கும் மேலாக தணிகாசலம் தம்பதிகளின் வேஷப்பொருத்தமும் நடிப்பும் - அசத்திட்டாங்க போங்க !

கம்பனின் உவமைகள் - 6 - அன்பு ஜெயா, சிட்னி

.

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 6




இதுவரை சரயு நதியோடு மிதந்து வந்த நாம் இப்போது கோசல நாட்டின் மருத நிலத்திற்குள் நுழைகின்றோம். கம்பன் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்லுவான், நாம் அந்த மருத நிலத்தின் அழகைச் சற்றுச் சுவைக்கலாம் வாருங்கள்.

அதோ அங்கே மருத நிலத்தில் தெரிகின்ற சோலை நடன மேடையாகக் காட்சியளிக்கின்றது. அதன் மீது வண்ண மயில்கள் அழகான நாட்டியப் பெண்களைப் போல நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சோலையின் குளத்திலே உள்ள நீரின் மீது வீசுகின்ற குளிர்ந்த காற்றினால் உண்டாகின்ற சீரான அலைகள் திரைச்சீலையாக விளங்குகின்றன. அக்குளத்தில் மலர்ந்திருக்கின்ற தாமரை மலர்கள், அந்த நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டு களிப்பவர்களுக்காக தங்கள் தலைகளைத் தூக்கி விளக்குகளாகத் தோன்றுகின்றன.

இலங்கைச் செய்திகள்


மலையகத்தில் அடைமழை; பொகவந்தலாவையில் வெள்ளம் , பண்டாரவளையில் மின் உபகரணங்கள் சேதம்

பொத்துஹர ரயில் விபத்தால்10 கோடி ரூபா நஷ்டம்

வாழைச்சேனையில் வெடிபொருள் மீட்பு

பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல்

குற்றப்புலனாய்வுப் பிரிவு எனக் கூறி மீண்டும் கொழும்பில் மோசடிக் கும்பல் --தமிழ் மக்களே குறி

யாழில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் வெட்டிக்கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது

அனர்த்த மாவட்டங்களாக பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை
=======================================================================

மலையகத்தில் அடைமழை; பொகவந்தலாவையில் வெள்ளம் , பண்டாரவளையில் மின் உபகரணங்கள் சேதம்


30/04/2014 மலையகத்தில் இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்வதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மலையகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெட்டவெளிகளிலும் மலை உச்சிகளிலும் மரங்களின் கீழும் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளும் அதேவேளை, உலோகம், மின்சார உபகரணங்களை பாவிப்பதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் பண்டாரவளை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ததால் பல மின்சார உபகரணங்கள் சேதமாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 
பண்டாவளை, கஹகொல்ல மற்றும் அம்பதண்டேகம, ஆகிய இடங்களிலும் நயபெத்த, லியங்கஹாவெல மற்றும் கிரேக் ஆகிய தோட்டப் பிரதேசங்களிலும் சிலரது வீட்டு மின்சார உபகரணங்களும், கையடக்கத்தொலைபேசிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை பண்டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவும் தொலைக்காட்சிப் பெட்டியும் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
பொகவந்தலாவையில் வெள்ளம்
பொகவந்தலாவை பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2மணியளவில் பெய்ய ஆரம்பித்த மலை தொடர்ந்தும் பெய்து கொண்டு இருக்கிறது. இனதால் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் 6ஆம் இலக்க லயன் குடியிருப்பில் சுமார் 20வீடுகள் நீரில் முழ்கி உள்ளன. நன்றி வீரகேசரி 


கமல் -ரஜினி...அஜித் - விஜய் இணைந்து கலக்க போகிறார்கள்...

.
ரொம்ப காலமாகவே கமல்-ரஜினியை மீண்டும் இணைக்க வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதற்கான சூழல் இன்னமும் கைகூடவில்லை. இதுகுறித்து கமல் ஒருமுறை கூறுகையில், நானும், ரஜினியும் இணைந்தால் அது ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.
அந்த அளவுக்கு படம் தயாரிக்க இப்போது கோலிவுட்டில் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றவர், ஒருவேளை, அப்படி யாராவது முன்வந்து, சரியான கதைகள் கிடைத்தால் நாங்கள் மீண்டும் இணைவது சாத்தியமாகும் என்றார்.

அதையடுத்து, அதைப்பற்றி யாரும் பேசக்கூடவில்லை. ஆனால், ரஜினி-கமலை மீண்டும் இணைக்கப்போவதும் கே.பாலசந்தரால் மட்டுமே இப்போது சாத்தியமாகியிருக்கிறது.
தற்போது உத்தமவில்லனில் டைரக்டராகவே நடித்து வரும் கே.பாலசந்தர், 21-ம் நூற்றாண்டு நடிகர் மனோரஞ்சனாக நடிக்கும் கமலை வைத்து வீர விளையாட்டு என்றொரு படத்தை இயக்குகிறாராம். அப்போது ஒரு காட்சியில் ரஜினியும் என்ட்ரி கொடுக்கிறாராம்.

கதவை மூடுங்கள் காற்று நிற்கட்டும் - ச. நித்தியானந்தன்

.

வயலெல்லாம் வறண்டு போச்சு

விரிசல் விழுந்தது நிலங்கள்
காற்றில் கூட ஈரம் இல்லை
துளி நீருக்காய் வானம் பார்த்து
பிளந்து கிடக்கிறது துரவு
ஆனாலும் நூலிழையில் தொங்கிக் கிடக்கிறது
நம்பிக்கை.

கண்ட இடமெங்கும் கட்டாக்காலி மேய்ச்சல்
தடுப்புவேலிகளும் இல்லை
தடியெடுத்து கலைக்கவும் வீரியம் இல்லை
சுதந்திரம் வேண்டி விலை கொடுத்த இனம்
வாடிக்கிடக்கிறது.

தோல் சுற்றிய எலும்பாய்
வதங்கிக் கிடக்கிறது
கொடுத்த விலைக்கு ஆதாரமாய்
உறுதிகள் நகல்கள் ஏதும் இல்லை
எல்லாம் முடிந்ததென்று உழுது மறைத்துவிட்டனர்
புயலும் மழையும் அடித்த காட்டில்
இன்று புலராத வைகறை
எந்த திக்கிலும் ஒளியைக் காணவில்லை
இருளே மண்டிக்கிடக்கிறது.

புடையனும் தேளும் முதலையும் கீரியும்
நீக்கமற நிறைந்து கிடக்கிறது
கழனிகரையெல்லாம் களைகளே நிறைந்து கிடக்கு
நாளேடுகளை எடுத்தாலே
நாடி நரம்பெல்லாம் நடுங்குகின்றது.

பாட்டியைக் கற்பழித்த பேரன்
என்ன இழிவடா இது
இதற்காகவா இத்தனை உயிர்களைத் தீய்த்தோம்
இதற்கா ஊழித்தாண்டவமாடினோம்.

எல்லாம் முடிந்ததென்று அவர்களுக்கு முசுப்பாத்தி

உலகச் செய்திகள்


அமெரிக்காவை தாக்கிய புயலில் உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்வு

வங்க கடலில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள்: அவுஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் பரபரப்பு தகவல்

சென்னை ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு

சிரிய தீவிரவாதிகளால் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை

சிரிய ஹமா மாகாணத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் 11 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி

நைஜீரிய தலைநகர் அபுஜாவில் கார் குண்டுத்தாக்குதல் - 19 பேர் பலி 60 பேர் காயம்

தமிழகத்தில் மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல்; இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
==========================================================


அமெரிக்காவை தாக்கிய புயலில் உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்வு

29/04/2014    அமெரிக்காவை தாக்கிய புயல் மற்றும் சுழல் காற்றுகளில் சிக்கி பலியானவர்கள் தொகை 26 ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
அலபாமா மற்றும் மிஸிஸிப்பியினூடாக வீசிய புயலால் வீடுகளும் வர்த்தகக் கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளதுடன் நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் தலைகீழாக புரட்டப்பட்டுள்ளன. அத்துடன் பிராந்தியத்திலுள்ள தொலைபேசி கம்பங்கள் 45 பாகை கோணத்தில் வளைக்கப்பட்டுள்ளன. 
அலபாமா கென்துக்கி மற்றும் மிஸிஸ்ஸிப்பியில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
இந்த புயலால் மிஸிஸிப்பியிலுள்ள வின்ஸ்ரன் நகரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் லூயிஸ்வில்லேயிலுள்ள சிறுவர் பாராமரிப்பு நிலையமொன்றில் உயரிழந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சமயம் அந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்கள் எவரும் இருந்ததாக அறிக்கையிடப்படவில்லை. நன்றி வீரகேசரி 


தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகம் நினைவுப்பேருரை

.

தேசியப் பிரசச்ச்சினை: அனைத்தும் அரசஅதிகாரம் பறற்ற்றியதே தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகம் நினைவுப்பேருரை

கலாநிதி ஜயம்பதி விக்கிமரட்ண- ஜனாதிபதி சட்டத்ரணி:- வாதப் பிரதிவாதங்கள் - விமர்சனங்கள் இருப்பினும் அனைவரும் வாசிக்க வேண்டிய உரை- தமிழாக்கம்-
தேசியப் பிரசச்ச்சினை: அனைத்தும் அரசஅதிகாரம் பறற்ற்றியதே  தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகம் நினைவுப்பேருரை

2014, ஏப்ரல் 26.

மகாராணி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழர்களின் பிரசித்த தலைவருமான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 37 ஆவது நினைவு நாளையிட்டு இந்த நினைவுப் பேருரையை ஆற்றுவதற்காக என்னை அழைத்த எஸ்.ஜே.வி. நினைவுச் சபையினருக்கு எனது நன்றிகள்.

தோழர் பேனாட் சொய்ஸாவிற்குப் பின்னர் - சென்ற மாதம்தான் அவரது பிறந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது - செல்வநாயகம் நினைவுப் பேருரையை ஆற்ற அழைக்கப்பட்ட இரண்டாவது சிங்களவர் நான்தான் எனத் தெரிந்து கொண்டேன். தோழர் பேனாட்டைப் பின்பற்றுவதில் மகிழ்ச்சியடையும் அதேவேளை, அந்த உண்மை இரு இனங்களுக்கு இடையிலான பிரிவினையைச் சுட்டிக்காட்டி நிற்பதையிட்டு வருந்துகிறேன். அந்தப் பிரி வினையை நாம் இல்லாதாக்கி இணைந்து கொள்ள வேண்டும்.

தெகிடி - சினிமா விமர்சனம்



.

‘பீட்சா’ படத்திற்குப் பிறகு நிச்சயமாக செம திரில்லர் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்..! குறும்பட இயக்குநர்களின் வெற்றி ஆரவாரத்தில் அடுத்த தலைப்பு இந்தப் படம்தான். இயக்கிய ரமேஷ் ஏற்கெனவே சில குறும்படங்களை எடுத்து அதற்காக விருதுகளைப் பெற்றிருப்பவர். இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துகள் ரமேஷ்..


‘தெகிடி’க்கு இலக்கணத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆளாளுக்கு ஒன்றை சொல்கிறார்கள். ‘பகடை’, ‘தாயம் உருட்டுதல்’, ‘பரமபதம்’ போன்ற விளையாட்டுக்களுக்கு தெகிடி என்றுதான் பெயராம். இங்கே தமிழுக்கு அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட இலக்கணப் புலிகள் யாருமில்லாததால் அவரவர்க்கு எது சரியென்று படுகிறதோ.. அதையே நினைத்துக் கொள்ளுங்கள்..! எனக்கு ‘பகடை’யே சரியென தோன்றுகிறது..!

எம்.ஏ. கிரிமினலாஜி முடித்துவிட்டு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் ஹீரோ வெற்றி. அவருக்கு சிலரை பாலோ செய்யும் வேலை தரப்படுகிறது. அடுத்தடுத்து கொடுத்த வேலைகளைக் கச்சிதமாகச் செய்கிறார். ஹீரோயினை யார் என்று தெரியாமலேயே பார்த்தவுடன் காதல் கொண்டுவிடுகிறார். அதே நேரம் ஹீரோயினையும் ஃபாலோ செய்ய வேண்டிய பணியும் கிடைக்கிறது. ஹீரோ இதற்கு முன்பு பாலோ செய்த 3 பேர் திடீரென்று மரணமடைய.. இதில் ஏதோ சூது இருப்பதாக வெற்றிக்கு சந்தேகம் வருகிறது. அந்தச் சந்தேகத்தைத் தேடி அவர் போக.. அதுவொரு பெரிய சதி வலை என்று தெரிகிறது.. இதற்கு மேல் சொன்னால் படம் பார்க்கும் உங்களுக்குச் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ‘பீட்சா’ போலவே கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ்தான் படமே என்பதால் இதற்கு மேல் வேண்டாம்.. தியேட்டருக்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்..

படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் படம் மெதுவாக நகரத் துவங்குவதும்.. ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் பய உணர்வு.. உண்மையைச் சொல்லாமல் தவிக்கும் உணர்வு போன்றவையெல்லாம் சில நேரங்களில் படத்தின் தொய்வுக்குக் காரணமாக இருந்தாலும் படத்தின் பிற்பாதியில் ஹைவேஸில் பறக்கும் ஆடி கார் போல திரைக்கதை வேகமெடுத்துச் செல்கிறது..

“கரெக்ட்டா அப்ஸர்வேஷன் பண்ற..?” என்று ஆரம்பித்து டிடெக்டிவ் ஏஜென்ஸியை ரெகமெண்ட் செய்யும் புரொபஸர். அலட்டலே இல்லாமல் அழகாக செய்யப் போகும் வேலையைப் பிரித்துக் கொடுக்கும் டிடெக்டிவ் ஆபீஸர்கள்.. ஹீரோயின் தனி மரம் என்பதை சில காட்சிகளில் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது.. சந்தேகத்துடன் பார்த்துவிட்டு பின்பு ஹீரோ சொல்லும் பொய்யை நம்புவது.. சட்டென எழும் அந்தக் காதலைத்தான் நம்ப முடியலையே தவிர.. காதல் ஊடல்கள்.. காட்சிகள்.. ‘வாப்பா’.. ‘போப்பா’.. என்ற பேச்சுகள் ரசனை.

மரணங்களுக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்ற ஆவலை நாலா பக்கமும் இழுத்துவிட்டுச் செல்லும் திரைக்கதை.. அதற்கான முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் இடம் மிக சுவாரஸ்யம்.

இப்படியெல்லாம் ஒரு இன்ஸ்பெக்டர் சென்னைல கிடைப்பாரான்னு எதிர்பார்க்க வைச்சிருக்கு ஜெயபிரகாஷின் கேரக்டர். ஒரு கொலையை அணுகும்விதம்.. அதற்கான எவிடென்ஸை எங்கேயிருந்து பிடிப்பது.. அக்யூஸ்ட்டுகளை எப்படி ஹேண்டில் செய்வது.. கிடைத்த துப்புக்களை சர்ச் செய்வது.. பின்னாடியே விரட்டுவது என்று பல கேஸ் டயரிகளை இந்த ஒரே படத்தில் புரட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஹீரோவின் அப்ஸர்வேஷனே இடைவேளைக்கு பின்பு காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்திச் செல்வது அருமையான உத்தி.. ஹீரோ அசோக் செல்வனின் அலட்டலில்லாத நடிப்பு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. வேறு ஹீரோவை போட்டிருந்தால் அவருக்காக நான்கைந்து காட்சிகளை வைக்க வேண்டியிருந்திருக்கும். தப்பித்துவிட்டார் இயக்குநர்.. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்படி அவர் நடிப்பு ஓகேதான் என்றாலும், சில காட்சிகளில் நமக்கே பொறுமையிழந்து போக வேண்டிய சூழல்.. தனியார் டிடெக்டிவ்வா இருப்பவன்.. இந்த அளவுக்கு கேர்லெஸ்ஸாக நிகழ்வை அணுகுவாரா என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது..!

அசோக்செல்வனிடம் குறை காண வாய்ப்பில்லை. இது போலவேதான் ஜனனி ஐயரிடமும். பொண்ணுக்கு வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குதாம்.. ரொம்ப வருத்தப்பட்டுச்சு.. ஆனா கிடைச்ச வாய்ப்புகளை விட்ராதம்மா என்றுதான் அட்வைஸ் செய்தேன்.. அந்தக் கண்களை வைத்து இன்னும் கொஞ்சம் காவியமே படைத்திருக்கலாம். படத்தின் தன்மை கெட்டுவிடும் என்பதால் பாடல் காட்சிகளிக்கூட கொஞ்சம் அடக்கமாகவே எடுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்திற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கராக இருந்தது பாடல் காட்சிகள்தான். அவைகளை மொத்தமாக வெட்டியிருந்தால்கூட படம் நன்றாகவே இருந்திருக்கும். பின்னணி இசைதான் பிற்பாதியில் ஆட் கொண்டிருக்கிறது.. இது படம் பார்க்கும்போது தெரியவில்லை. வெளியில் வந்த பின்புதான் தெரிகிறது.. இசையமைப்பாளரான அந்தச் சின்னத் தம்பிக்கு எனது வாழ்த்துகள்..!

இந்தப் படத்தின் கதை சொல்லும் ஒரு மிகப் பெரிய ஊழலை வெளிப்படையாக இங்கே பேச முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டாரே என்கிற சின்ன கோபம் தவிர, இந்த இயக்குநர் மீது வேறெதுவும் இல்லை.. இந்தப் படம் மட்டும் சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் இல்லாமல் சதாரணமான கமர்ஷியல் படங்களாக வந்திருந்தால் இந்த விமர்சனப் பதிவு 10 பக்கங்களை தாண்டியிருக்கும். அத்தனை விஷயங்கள் இருக்கின்றன இந்தக் கதையில்.. ஆனால் முடியலையே..?

காதல் இல்லாமலும் படம் எடுக்க முடியாததால் ஜனனி ஐயருடனான காதலை வளர்த்துவிட்டு பின்பு பாலோ செய்யப் போவதாக மாற்றியிருக்கிறார்கள். காதலே இல்லாமலும் இதனை எடுத்திருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்..

தயாரிப்பாளர் சி.வி.குமார் அவருடைய கதை தேர்வில் மிக உறுதியாகவே இருக்கிறார்.. படத்துக்குப் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும். அதிக நேரமும் எடுக்கக் கூடாது.. குறைவான பட்ஜெட்டாகவும் இருக்க வேண்டும்.. விற்பனைக்கு எளிதாகவும் இருக்க வேண்டும் என்ற அவருடைய வியாபாரத் தந்திரம் இன்றைய புதிய தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..

அடுத்த பாகம் வந்தாலும் வரலாம் என்பது போல முடித்திருப்பதுதான் இது போன்ற திரில்லர் படங்களின் வழக்கம். இதிலும் அப்படியே..! ஆனால் பலரும் முன்பே கவனிக்கத் தவறியை ஒன்றை கிளைமாக்ஸில் லைட் போட்ட பின்பும் காட்டுகிறாரே இயக்குநர்.. எந்த அளவுக்கு நம்மை ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள்..! வெல்டன் இயக்குநர்..

அவசியம் பார்க்க வேண்டிய படம் தெகிடி.. மிஸ் பண்ணீராதீங்க..!


nantri truetamilan.com