அனைவருமே வாருங்கள் ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


image1.JPG         இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை
         தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை
         கொடுத்துதவும் மனப்பாங்கை தொலைத்துவிட்டு நிற்பதையே
         நிலத்திலுள்ள பலரிடத்து நிலைத்துநிற்கக் காணுகிறோம் ! 

        அறம்செய்ய விரும்பென்று அவ்வைகூறிச் சென்றதனை 
        ஆருமே மனமதனில் அமர்த்தியதாய் தெரியவில்லை 
        அதிகசெல்வம் சேர்ப்பதிலே ஆசைகொண்டே அலைகின்றார்
        அல்லலுடன் இருப்பார்க்கு அவருதவின் அறம்மகிழும் ! 

        பொருள்தேவை என்பதனால் அருளதனை ஒதுக்குவதா
        மருளோடு வாழுவதால் வாழ்வுவளம் ஆகிடுமா 
        அருளான வழிசென்று பொருளதனைப் பயனாக்கின் 
        மருளகன்று வாழ்வினிலே அருள்வெள்ளம் பெருகிடுமே ! 

        பலகற்று உயர்நிலையில் இருக்கின்ற பலபேர்கள் 
        பல்லக்கில் பவனிவரும் பதவியுடை பலபேர்கள்
        பணந்தேடி பணந்தேடி பதராக மாறுகிறார் 
        பாங்காக அவர்வாழின் பண்பு தடுமாறிடுமா ! 

முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்


கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் சனிக்கிழமையில் இந்நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.

இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இந்நாட்களில்  நினைவேந்தி வணக்கமும், அஞ்சலியும் செய்வோம்!! நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில், அனைவரும் ஒற்றுமையாக, எந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன, துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரகளையும் / களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும். 

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - சிட்னி









தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - மெல்பேர்ன்




தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - பேர்த்






கங்காரு நாட்டுக்காகிதம் வரலாற்றில் இடம்பெறும் மேமாதம் நேற்றைய செய்தி நாளைய வரலாறு - முருகபூபதி


இலங்கையில் ஊடகத்துறையில் பணியாற்றியதனால், அங்குள்ள அரசியல் நிலவரங்களை அறிந்துகொண்டு செய்திகளை எழுதநேர்ந்தது. ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்புதினங்களையும் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் கலை உலகம் பற்றிய செய்திகளையும் எழுதிக்கொண்டிருந்தாலும், அரசியல் தொடர்பான  சமூகச்செய்திகளை நிருபர்கள் தரும் விடயங்களிலிருந்து பெற்று எழுதும்போது அவற்றைத்தருபவர்களின் பெயர்களே செய்தியுடன் வெளிவரும்.
செய்தி அறிக்கைகள் சிலவற்றை எனது பெயரில் எழுதியிருக்கின்றேன். சில அரசியல் செய்திகள் விவகாரங்களாகியுமிருக்கின்றன.
இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களினால் நடத்தப்பட்ட ஆங்கில சிங்கள ஏடுகள் ஏதோ ஒருவகையில் இனவாதத்தை கக்கிக்கொண்டிருந்தன. சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்களின் பிரதான கடமை. சமூகம்,  நாட்டு நடப்புகளை ஊடகங்களின் ஊடாகத்தான் தெரிந்துகொண்டு பேசத்தொடங்கும்.
அதனால் உண்மைச்செய்திகளை வழங்கவேண்டியது ஊடக தர்மம்.  பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்க குணாம்சம் அவர்கள் தரப்பின் ஊடகங்களிலும் வெளிப்பட்டது. முக்கியமாக கேலிச்சித்திரங்கள் அந்த குணாம்சத்தை சித்திரித்தன.
யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் இலங்கையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த இனப்பிரச்சினையும் சூடுபிடிக்கத்தொடங்கியது. தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகி   சித்திரவதைகளை அனுபவிக்கத்தொடங்கியதும்,  விடுதலை இயக்கங்களும் உருவாகி தமிழ் இளைஞர்கள் இணைந்தனர்.

சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 12 ஜோர்ஜ்புஷ் மீது சப்பாத்து வீசியவர் தேர்தலில் நிற்கிறார்!! பாதணி மகத்மியத்திற்குள்தான் எத்தனை கதைகள்!!! - முருகபூபதி



பல  வருடங்களுக்கு  முன்னர்  இலங்கையில்  வெளியான  சிரித்திரன்    இதழில்  ஒரு  நகைச்சுவைத்துணுக்கு  கேலிச்சித்திரத்துடன்   வெளியாகியிருந்தது.
ஒரு   இளம்  யுவதியைப் பார்த்து  ஒரு  இளைஞன் டார்லிங்  டாட்டா "  என்று  குறும்பு செய்வான்.
அதற்கு  அவள்,  தனது  காலைத்தூக்கி,   " காலிலிருக்கிறது  பாட்டா "   என்று  தனது  செருப்பைக்காட்டுவாள்.
டாட்டாவுக்கு  பதில்  பாட்டா!!!!
செருப்புக்குத்தான்  எத்தனை   பெயர்கள்?  செருப்பு,  பாதுகை,   பாதணிசிலிப்பர், தொங்ஸ்.   இந்தப்பதிவுக்கு    2008 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது ஈராக் பத்திரிகையாளர் மண்டேசர் அல்ஸைதி வீசிய பாதணியும்   சென்னையில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது பிரபாகரன் என்ற ஈழ அகதி வீசிய பாதணியும்தான் அடிப்படையாக அமைந்தது.
இந்த "முன்னாள்கள்" மீதுதான் எவ்வளவு கோபம் இவர்களுக்கு. நெஞ்சில் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு இவ்வாறுதான் பாதணியாக மாறி கொப்பளிக்குமோ?
சென்னையிலிருந்து    வெளியாகும்  "  ஹிந்து"   நாளிதழ்  குழுமத்தின்  ஆய்வு  அமைப்பான  "அரசியல்  மற்றும்  பொதுக் கொள்கைக்கான   ஹிந்து  மையம்"   என்ற   இயக்கத்தினால் இந்தியாவில்  உள்ள  இலங்கை   அகதிகளின்  எதிர்காலம்  குறித்து சென்னையில்  மியுசிக்  அக்காடெமியில்  கருத்தரங்கு   நடந்தது.
(இன்றும் பல்லாயிரம் இலங்கை அகதிகள் அங்கு எதிர்காலக்கனவுகளுடன் தவிக்கிறார்கள் என்பதும் சமகால அவலம்தான்)
அதில்  கலந்துகொண்ட  இந்தியாவின்  முன்னாள்  பாதுகாப்பு ஆலோசகர்    எம்.கே.நாராயணன்  உரையாற்றிவிட்டு வெளியே வரும்பொழுது  புதுக்கோட்டையைச் சேர்ந்த  பிரபாகரன்  என்பவர் தமது  செருப்பினால்  அவரை  அடித்துள்ளார்.   இந்தப்  பிரபாகரன் என்ற பெயர்தான்  இன்றும் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுடன்   என்றும்  வாழும்  பெயராகவும் மாறிவிட்டுள்ளது.
யானை    வாழ்ந்தாலும்  ஆயிரம்  பொன்.    இறந்தாலும்  ஆயிரம்  பொன்  என்பது போன்று   பிரபாகரன்  உயிரோடு  இருந்தபொழுதும் பேசப்பட்டார்  - இறந்த  பின்னும்  பேசப்படுகிறார்.
"அவர் இறந்துவிட்டார்" என்று பகிரங்கமாக பேசுவதும் பாவகரமான காரியம் என்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய முன்னணியின் மேதினக்கூட்டத்தில் குழப்பமும் தோன்றியது!

இலங்கைச் செய்திகள்


ரயிலில் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்த ரயில்வே ஊழியருக்கு நடந்த கதி

பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இனவாதி கைது!

ரயிலில் முரண்பட்டமைக்கான காரணத்தை சட்டத்தரணி ஊடாக தெரிவித்த ரயில்வே ஊழியர்

அரபு நாட்டின் நிதியுதவியில் கொக்குப்படையான் கிராமத்தில் வீட்டுத்திட்டம் : கிராம மக்கள் விசனம்

நீதிபதி இளஞ்செழியன் உட்பட 3 மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்




ரயிலில் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்த ரயில்வே ஊழியருக்கு நடந்த கதி

10/05/2018 கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படட ரயில்வே ஊழியரை பிணையில் செல்வதற்கு யாழ். நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

உலகச் செய்திகள்


மலேசிய தேர்தல் : மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றியது

யொங்கை சிங்கப்பூரில் சந்திக்கின்றார் ட்ரம்ப் ?

இலங்கைப் பெண் உட்­பட 4 பெண்கள் குற்­றச்­சாட்டு : பதவி விலகினார் நியூயோர்க் சட்டமா அதிபர்!!!

சிரிய தலைநகரின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

 மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்தது வடகொரியா

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

அணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவால் இந்தியாவுக்கு பாதிப்பு ?

"கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" : கர்ச்சிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க - வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்புக்கான திகதி அறிவிப்பு


மலேசிய தேர்தல் : மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றியது

10/05/2018 மலேசியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 92 வயதுடைய முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தமிழ் சினிமா - என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா திரைவிமர்சனம்



தமிழ்ப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் இந்த சூழலில் தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது. முக்கிய படங்களுக்கான வரவேற்புகிடையில் சில படங்கள் வழிவிட்டு ஒதுங்கி விடும் நேரம் இது. ஒரு ராணுவ கதையை தாங்கி கம்பீரமாக இறங்கியுள்ளது என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.
மனதை ஈர்த்து மக்களிடம் இடம் பெறுமா என உள்ளே சென்று பார்ப்போம்.

கதைக்களம்

அல்லு ஒரு நேர்மையான ராணுவ வீரர். அவருக்கென உடும்பு பிடி கொள்கை. எந்த ஒரு விசயத்துக்காகவும் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளமாட்டார். ஒரு வகையில் இவருக்கு மைனஸாக அமைகிறது.
ராணுவ எல்லைக்கு எப்படியாக போக வேண்டும் என நீண்ட நாள் கனவில் இருக்கிறார். ஆனால் அவருக்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இதற்கிடையில் சின்ன வயதில் வீட்டை விட்டு செல்லும் அவருக்கு பெரும் சவால்.
நடிகர் அர்ஜூன் ஊரில் மட்டுமல்ல இந்தியளவில் நல்ல புகழ் பெற்ற மனநல மருத்துவர். அல்லுவுக்கு மீண்டும் வேலையில் சேர இவரின் சான்றிதழ் தேவைப்படுகிறது. இவரின் மனைவி நதியா. இருவரின் மகன் வீட்டை விட்டு சிறு வயதிலேயே போய்விடுகிறார்.
இதற்காக அல்லு இவரை தேடி வருகிறார். ஆனால் வந்த இடத்திலும் பெரும் சிக்கல். ஒரு கட்டத்தில் அர்ஜூன்க்கும் அல்லுவுக்கும் கருத்து மோதல்கள். அல்லுவுக்கு 21 நாட்கள் சவால் விடப்படுகிறது.
இந்த கால கட்டத்தில் அவருக்கு பல சிக்கல்கள். இதற்கிடையே ஊரில் பெரும் கட்டப்பஞ்சாயத்து பேசி நில மோசடி செய்யும் சரத்குமாருக்கும் இவருக்கும் கடும் மோதல்.
ஆக அல்லு 21 நாள் சோதனையில் ஜெயித்தாரா. மீண்டும் தன் கனவான ராணுவ எல்லையை அடைந்தாரா, அர்ஜூனின் தொலைந்த மகன் கிடைத்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றி அலசல்

அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழில் அவ்வளவாக படத்தில் நடிக்கவில்லை? இருப்பினும் தமிழ்நாட்டில் அவரின் படம் எப்படி என கேள்வி கேட்கலாம். தன் நடிப்பால் இப்படத்தில் ஸ்டைலிஸ்ட் ஸ்டார் என தனக்கான டைட்டிலை தக்கவைக்கிறார்.
படத்தில் ஒவ்வொரு இடங்களில் அவரின் ஹார்டு ஒர்க் தெரிகிறது. வழக்கமான தெலுங்கு படங்களை போல் இல்லாமல் இப்படம் இயல்பான படம் போலவே இருந்தது.
அர்ஜூன் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர். அவருக்கான இடத்தை படம் முழுக்க நிறைவு செய்கிறார். அண்மைக்காலமாக படங்களில் ஸ்பெஷல் ரோலில் வந்து போகும் அவருக்கு சாத்தியாமான ரோல் தான்.
நிபுணன் படத்திற்கு பிறகு ஒரு முக்கித்துவமான ரோல். அவரை கடைசியாக தன் மகளை வைத்து இயக்கிய சொல்லிவிடவா ரோல் பெரிதளவில் இடம் பெறாமல் போய்விட்டது.
மூத்த நடிகையான நதியா இப்படத்தில் ஒரு சில காட்சிகள் தான். ஆனால் பல வருடங்களாக கண்ணுக்கு தெரியாமல் எங்கேயோ இருந்த மகன் மீண்டு வந்ததும் அப்படியான ஒரு பேரானந்தம் முகத்தில். இன்னும் அதே இளமையுடன் அவரை பார்க்கும் போது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ரோல் கண்முன் வந்துபோகலாம்.
சரத்குமார் கல்லாவாக ஊரையே தன் கைக்குள் வைத்திருக்க நினைப்பவர். அவருக்கான ரவுடித்தனம் இப்படத்தில் பெரிதளவில் இல்லை. இயல்பாகவே அமைந்திருக்கிறது. தன்னை பார்த்து பயந்தவர்கள் மத்தியில் கடைசியில் இவருக்கே ஒரு தலை குனிவு இருக்கிறது. மனம் மாறினாரா என்பது தான் சீக்ரட்.
இயக்குனர் வம்சி இப்படத்தில் சொல்ல வந்ததை நிதானமாக சொல்லி புரியவைக்கிறார். ஒளிப்பதிவாளர் காட்சிகள் நகர்த்திய விதம் கதைக்குள் கதையாக மெதுவாக உள்ளே போகவைக்கிறார்கள்.

கிளாப்ஸ்

அல்லுவின் ஸ்டைலிஸான நடிப்பு. ரியல் ஆர்மி மேனாகவே மாறியிருக்கிறார்.
இயக்குனரின் விறுவிறுப்பான கதை நகர்வு சிம்பிளான பயணம்.
காமெடிக்கு ஸ்பெஷல் ஆர்ட்டிஸ்ட் இல்லையெனினும் ஓரிரு டபுள் மீனிங் வசனம் ரசிகர்களை திருப்தி.

பல்ப்ஸ்

கதையை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம் என தோன்றியது.
சில இடங்களில் தெலுங்கு படங்களுக்கே உண்டான ஓவர் எமோஷனல் ஸ்டண்ட்.
படத்திற்கு பாடல் பெரியளவில் ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா நேரம் போவதே தெரியவில்லை. சல்யூட் கொடுக்கலாம்..

நன்றி  CineUlagam