மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
சந்தோஷம் பறந்தே போகும்
சாப்பாட்டைக் கண்டு விட்டால்
சலனமே மனதில் தோன்றும்
எப்பவும் இனிப்பை எண்ணும்
எதையுமே உண்ணப் பார்க்கும்
அப்படி உண்டே விட்டால்
அதுதொல்லை ஆகி நிற்கும்
திருமண வீடு சென்றால்
தித்திப்பு நிறைந்தே நிற்கும்
வகைவகை உணவை அங்கே
வரிசையாய் கண்கள் காணும்
அவையெலாம் உண்ணும் ஆசை
அளவிலா மனத்தை ஆளும்
நினைவெலாம் உணவாய் நிற்கும்
நிம்மதி பறந்தே போகும்
கொண்டாட்டம் வந்து விட்டால்
குதூகலம் நிறைந்தே நிற்கும்
குலோப்ஜான் லட்டு எல்லாம்
குறைவின்றி இருக்கு மங்கே