தப்புடன் இனிப்பை உண்டால் தலையிடி வந்தே தீரும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


   சர்க்கரை வியாதி வந்தால்

     சந்தோ‌ஷம் பறந்தே போகும்


     சாப்பாட்டைக்  கண்டு விட்டால

     சலனமே மனதில் தோன்றும்

    

     எப்பவும் இனிப்பை எண்ணும்

     எதையுமே உண்ணப் பார்க்கும்

     அப்படி உண்டே விட்டால்

     அதுதொல்லை ஆகி நிற்கும்


    திருமண வீடு சென்றால்

    தித்திப்பு நிறைந்தே நிற்கும்

    வகைவகை உணவை அங்கே


    வரிசையாய் கண்கள் காணும்


    அவையெலாம் உண்ணும் ஆசை

    அளவிலா மனத்தை ஆளும்

    நினைவெலாம் உணவாய் நிற்கும்

    நிம்மதி பறந்தே போகும்


    கொண்டாட்டம் வந்து விட்டால்

    குதூகலம் நிறைந்தே நிற்கும்

    குலோப்ஜான் லட்டு எல்லாம்

    குறைவின்றி இருக்கு மங்கே

கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது ! முருகபூபதி


இலங்கை அரசின் புத்தசாசன,  சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,  கிறிஸ்துவ  மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும் ஒன்றிணைந்து வழங்கும் தேசிய கலாபூஷணம் விருது இம்முறை எமது இலக்கிய நண்பர் மேமன்கவிக்கும் கிடைத்திருக்கிறது.

எம்முடன் நீண்ட நெடுங்காலமாக இணைந்து பயணித்துவரும் இலக்கிய நண்பர் மேமன்கவியை வாழ்த்தியவாறு இந்தப்பதிவைத் தொடருகின்றேன்.

தாம்பேசும் தாய்மொழிக்கு எழுத்தில் வரிவடிவம் இல்லாத இலட்சசோப இலட்சம் மக்கள் போன்று, இவர் பேசும் மேமன் மொழிக்கும் வரிவடிவம் இல்லை.

மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலைய மாணவர்களின் கவியரங்கம் பரமபுத்திரன்

 A collage of people

Description automatically generated with medium confidenceமவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலைய மாணவர்கள் தங்கள் கவிபாடும் திறனை வெளிக்காட்டு முகமாக கவியரங்கம் நிகழ்வு ஒன்றினை நடாத்தியுள்ளனர். மவுண்ட் றூயிட் தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது கடந்த 06/11/2021 சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் நிகழ்நிலையில் (online) நடைபெற்றது. நிர்வாகத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள்  மற்றும் கவி ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பித்தனர்.  இந்நிகழ்வினைப் பள்ளியின் பழைய மாணவன் செல்வன் பருணிதன் இரங்கநாதன் தொகுத்து வழங்கினார். 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 67 தோட்டத் தொழிலாளரின் இரத்தம் உறிஞ்சிய இரண்டு கால் அட்டைகள் ! நாய்வேடம் புனைந்து குரைத்த சம்பவம் ! முருகபூபதி


நிழல் யுத்தம் -  குடும்பங்களில், உறவுகளில், அமைப்புகளில், தொழிற்சாலைகளில், அரச – தனியார் நிறுவனங்களில், அரசியல் கட்சிகளில்,  அரசாங்கங்களில், தேசங்கள் -  தேசத் தலைவர்கள் மத்தியில் காலம் காலமாக நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

வீரகேசரி ஆசிரிய பீடத்திலும் நிழல் யுத்தங்களை பார்த்தேன். அணிசேர்வது,  குழுவாதம் பேசுவது இந்த நிழல் யுத்தங்களின் ஊற்றுக்கண்கள்.

வடக்கிலிருந்து  எமக்கு தினமும் செய்திகளை தந்துகொண்டிருந்த நிருபர்களின் அர்ப்பணிப்பு விதந்து போற்றுதலுக்குரியது.

இன்றிருக்கும் நவீன தொழில் நுட்ப வசதிகள் இல்லாத அக்காலத்தில்,  அவர்கள் தபால் சேவையையும் தொலைபேசியையும் மாத்திரமே நம்பியிருந்தனர்.

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினாறு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா                                  

 

  கங்குமட்டை கைத்தொழிலுக்குக் கைகொடுத்து நிற்கிறது என்று


சொன்னால் நம்மனது நம்பமறுக்கிறது. பனையின் கங்குமட்டையா ? அது விறகாய் எரிக் கத்தானே எடுக்கிறோம். அதைக் கைத் தொழிலு க்குப் பயன்படுத்துவதா என்ன .... கதையா .. அளக்கிறீர்கள் என்று தான் எம்மனமானது எண்ணியே நிற்கும். உண்மையில் - கங்குமட்டை கைகொடுக்கும் மூலப் பொருளை  வழங்கும் நிலையில்தான் இருக்கி றது என்பதுதான் உண்மையாகும். கங்குமட்டை அளித்து நிற்கும் மூல ப்பொருளாக இருப்பதுதான் பனந்தும்பு என்று பார்த்தோம். பனந்து ம்பு என்று சொல்லி அதன் வகைகளையும் பார்த்தபின்னர்தான் கங்கு மட்டை கைகொடுக்கும் மட்டையாய் ஆகியிருக்கிறது என்பதை யாவ ரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று என்ணுகிறேன்.

இளம் வயதில் சாணக்கியத்துடன் அரசியலில் காலடி பதித்த ஜீவன்

 Tuesday, November 9, 2021 - 3:02pm

அகவை 27இல் இராஜாங்க அமைச்சர்

இளம் வயதில் அரசியல் பிரவேசம் செய்வது புதிய விடயமல்ல. ஆனால் மிகவும் இளமையான பருவத்தில் இராஜாங்க அமைச்சராக வருவது மிகவும் அபூர்வமான விடயம். அப்படி ஒரு வாய்ப்பைப் பெற்று இதுவரை சாதுரியமாக அரசியல் பணி செய்து வருகிறார் இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.  

இது பெருந்தோட்ட சமூகத்திற்குக் கிடைத்த கௌரவமாகவே கொள்ளப்பட வேண்டிய விடயம். சரியான தருணத்தில் தொலைநோக்கோடு தொழிற்சங்கப் பணியில் அவரை ஈடுபடுத்தியதன் மூலம் தனது சாணக்கியத்தை நிலைநாட்டியவர் தந்தையாரான அமரர் ஆறுமுகன் தொண்டமான்.  

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகவே பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்தில் முழு மலையகத்தையும் தன்பால் ஈர்த்துக் கொண்டவர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான். இதன் பெறுபேறாக இன்றைய அரசாங்கம் நம்பிக்கையோடு மலையக பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தை இவர் பொறுப்பில் கொடுத்து இராஜாங்க அமைச்சராக்கியது.  

பாலாவுக்கு பத்ம விபூஷன் விருது

 Tuesday, November 9, 2021 - 6:00am

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

நேற்று நடைபெற்ற விழாவில் 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

"கோவிட்-19 நெருக்கடிச் சூழலில் இலங்கைப் பயணம்"

 "கோவிட்-19 நெருக்கடிச் சூழலில் இலங்கைப் பயணம்"

2 வாரங்களுக்கு முன் கனடாவில் இருந்து இலங்கை சென்று திரும்பிய ஊடகர் திரு.இலங்கதாஸ் பத்மநாதனுடன் சந்திப்பு.
இந்தப் பகிர்வில் தாயகம் செல்லும் போதும், திரும்பும் போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்குகின்றார்.




கானா பிரபா

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - மீண்டும் வாழ்வேன் - ச. சுந்தரதாஸ் - பகுதி 20

 .

தமிழ் சினிமாஉலகில் பிரபல கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர் டி என் பாலு.ஆரம்ப காலத்தில் வாகன சாரதியாக பணியாற்றிய இவர் பல முயற்சிகளுக்கு பிறகு திரைப்பட கதாசிரியராக எம் ஜீ ஆர் நடித்த தெய்வத் தாய் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் பாலு கதை வசனம் எழுதிய குமரிப் பெண்,நான்,அதே கண்கள்,மூன்றெழுத்து போன்றபடங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.இதன் மூலம் நட்சத்திர கதாசிரியரானார் பாலு.இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த பாலு சிவாஜி நடிப்பில் அஞ்சல் பேட்டி 520,ஜெய்சங்கர் நடிப்பில் மனசாட்சி ஆகிய படங்களை இயக்கி விட்டு 1971ல் முதல் தடவையாக கலரில் மீண்டும் வாழ்வேன் என்ற படத்தை இயக்கினார்.

கலர் பட கதாநாயகனை திகழ்ந்த ரவிச்சந்திரனை ஹீரோவாக போட்டு உருவான இப் படத்தில் கதாநாயகியாக பாரதி நடித்தார்.இவர்களுடன் நாகேஷ்,மனோகர்,எஸ்.வரலட்சுமி,சுந்தரராஜன்,விஜயலலிதா,தேங்காய் சீனிவாசன்,குணாளன்,அஞ்சல்பெட்டி முத்தையா வீ கோபாலகிருஷ்ணன்,ஆகியோரும் நடித்தார்கள்.

ஆங்கிலப் படங்களை பார்த்து அவற்றில் உள்ள சுவாரஸ்யமான காட்சிகளை தழுவி தமிழில் தரும் பாலு இந்தப் படத்திலும் அந்த வழிமுறையை சில காட்சிகளில் பின்பற்றி இருந்தார்.தான் ஒரு காலத்தில் வாகன சாரதியாக இருந்த காரணத்தாலோ என்னவோ இந்தப் படத்தின் கதாநாயகனை வாகன சாரதியாக படைத்திருந்தார் பாலு.

நோன்பு / விரதம் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

விரதம் / நோன்பு என்பதை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து உணவை உண்ணாது விடுவது. இத்தகைய உண்ணாநோன்பைப் பல மதத்தினரும் கைக்கொள்ளுகிறார்கள். மதங்கள் போதிப்பதை மத அனுஷ்டானங்களாக அம் மதத்தைச் சார்ந்தவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். மதங்கள் வேறுபட்ட தெய்வங்களை வழிபட்ட போதும்; மக்களின் மேன்மைக்கான வழிமுறைகளைக் காட்டி நிற்பதே மதம் ஆகும்.


உண்ணா நோன்பு எமக்கு உணர்த்துவனவோ பல. நோன்பு இருக்கும் போது பசி, தாகம் போன்ற உனர்வுகளை நாம் அந் நேரம் கட்டுப்படுத்துகிறோம். இவ்வாறு பசியுணர்வை அனுபவித்தால் தான் எமக்குப் பசி என்றால் என்ன என்பது புரியும். நாமே பசியின் இயல்பை அறியும் போது அதன் தாக்கம் எத்தகையது என்பதை அனுபவித்து உணர்கிறோம். இவ்வாறு உணர வைப்பதால் பசிக்கொடுமையால் வாழுபவரின் துன்பத்தை நாமும் உணருகிறோம் அல்லவா? அதன் பின்பும் பசியால் வாடுபவனுக்கு உணவளிக்காமல் இருப்போமா? இதை உணர்த்துவதே மதங்களின் உயர்ந்த நோக்கம்.

அதை விடுத்து, நாம் உண்னாமல் பட்டினி கிடந்தால் ஆண்டவன் அள்ளிக் கொடுப்பான் என எண்னுவது எத்தனை மடமை! இதையே யுகக்கவி பாரதியும்தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்என ஆவேசமாக ஆர்ப்பரித்தான். உணவில்லாதவர் படும் துன்பத்தை மத அனுஷ்டானமாக நாசுக்காக நம்மை உணர வைப்பதல்லவா மதம்! இதுதான் மதம் மனிதனை மனிதனாக்கும் யுக்தியோ?

விரதம் அல்லது உண்ணா நோன்பு எம்மை பசி என்றால் என்ன என்பதை மட்டும் உணர வைக்கிறதா? இல்லை, எமது உடலையும் மனதையும் திடப்படுத்துவது இந்த நோன்பு. அதன் மூலம் எமது சிந்தையும் உடலும் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதனால் நாம் திடசித்தம் பெறுகிறோம்.

நோன்பு / விரதம் என்பது நாம் களைத்து, சோர்ந்து உட்கார்ந்து விடுவதல்ல. எமது நாளாந்த வேலைகளை நோன்பின் போதும்  நாம் உற்சாகமாகக் கவனிக்க வேண்டும். நாம் விரதம் இருக்கிறோம் எனப் பிறரிடம் கூறி அவர்களின் அனுதாபத்தை பெறுவதற்கல்ல நோன்பு. உற்சாகத்துடன் மிளிரவே நோன்பு. இதுவே எமக்குத் திடத்தைத் தருவது.

திருத்தொண்டர் திருவிழா 2021

.






 

இலங்கைச் செய்திகள்

இந்திய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு 

யாழ், இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு

இந்திய - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்

 யாழ் – கொழும்பு 3வது சேவையாக "உத்தரதேவி" ரயில்

மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானம்

சிரியா சென்று ISIS அமைப்பில் இணைந்தோராலேயே தாக்குதல்

சிறில் காமினிக்கு நாளை ஆஜராகுமாறு மீண்டும் CID அழைப்பு


இந்திய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு 

முக்கிய விடயங்கள் கலந்துரையாடல்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் (11)நடைபெற்றுள்ளது. இதன்போது, அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதையடுத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

காக்கக் காக்க கனகவேல் காக்க !


 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 

      " கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே


" ," கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் " என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப் போற்றுகின்றார்கள். எனலாம்.  கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். " வைதா ரையும் வாழவைப்பான் முருகன் " என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.

  கந்தக்கடவுள் எங்களின் சொந்தக்கடவுள் என்று என்ணியே நாம்


வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வேலை வணங்குவதே வேலை என்றும் மனத்தில் இருத்தியும் வைத்திருக்கிறோம்.வேலும் மயிலும் வேதனை போக்கிடும் சோதனை தீர்த்திடும் என்னும் நம்பிக்கை - கந்தக்கடவுளைச் சொந்தக் கட வுளாய் நினைப்பவர்களிடம் நிறைந்தே இருக்கிறது. தெய்வங்கள் பல உண் டேனும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் காட்சி தருவது கந்தக் கடவு ளேதான் என்பதை யாவரும் அகத்தில் அமர்த்தியே இருக்கிறார்கள். கரு ணைகூர் முகங்கள் ஆறு கரங்கள் பனிரெண்டு கொண்டு உலகுய்ய திரு மேனி கொண்ட அருள் தெய்வமாய் கந்தக்கடவுள் விளங்குகிறார்.அந்தக் கருணைக் கடல் ஏந்துவது அயில்.அவரைத் ஏந்துவதோ மயில். வேல் என் றால் “ வெல்” என்பதுதான் பொருள்.வெற்றியை அளிப்பதுதான் வேல். வே லைக் கரத்தில் தாங்கியதால் கந்தக்கடவுள் வேலவனாகி நிற்கின்றார். வென்று வேற்றியை உலகிலே தரக்கூடியது எது என்றால் - அது “ ஞானந் தான் “ .ஞானத்தை அறிவு என்றும் சொல்லலாம்.அறிவு என்பது செந்தமிழ்ச் சொல்லாகும்.செந்தமிழ் முருகனின் கையிலுள்ள வேல் - அறிவினது பூரணமான உருவம் என்றே சொல்லலாம்.ஆழமாய்அகலமாய் கூர்மையாய் அறிவென்பது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமை யான அறிவாக அமை யமுடியும்.முருகன் கையின் வேலும் ஆழமாயும், அகலமாயும்கூர்மையாகவுமே இருக்கிறது அல்லவா ! வேலவன் என்றால் பூரணமான அறிவின் இருப்பிடம் என்றுதான் என்ணிடத் தோன்றுகிறதல்லவா !

உலகச் செய்திகள்

 பருவநிலை மாற்றத்தை கையாள்வதில் சீனா-அமெரிக்கா இடையே இணக்கம்

ஜப்பான் பிரதமராக மீண்டும் கிஷிடோ

தாய்வானின் இணைப்புகளை சீனா முற்றுகையிடும் அச்சம்

ஆப்கானில் உணவு பிரச்சினை தீவிரம்

தர்மலிங்கத்தின் தூக்கை நிறுத்துவதற்கு அழுத்தம்

போலந்து எல்லையில் தஞ்சம்கோரிகள் படையெடுப்பு: பெலாரஸுடன் பதற்றம்

தலிபான்கள் வழி ஆப்கானுக்கு நிதியளிக்க அமெ. தயாரில்லை


பருவநிலை மாற்றத்தை கையாள்வதில் சீனா-அமெரிக்கா இடையே இணக்கம்

சீனாவும் அமெரிக்காவும் பருவநிலை மாற்றத்தை மெதுவடையச் செய்வதற்கு இணைந்து செயல்படக் கூட்டுப் பிரகடனத்தை அறிவித்துள்ளன. சிஓபி26 உச்சநிலை மாநாட்டில் இந்த எதிர்பாராத அறிவிப்பு இடம்பெற்றது.

அண்மைக் காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இருநாடும் இணைந்து ஒரு அரிய உறுதிப்பாட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பங்காளிகள் சண்டையும் பரிதவிக்கும் பொருளாதாரமும் ! அவதானி


இலங்கையின்  முன்னாள் அதிபர்  ஜேஆர்ஜெயவர்தனாஅறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறையும் – 13 ஆவது திருத்தச் சட்டமும்  தொடர்ந்தும் அரசியல் கட்சிகளிடையே பெரும் குழப்பத்தையே வளர்த்துவிட்டிருக்கிறதே தவிரதேசம் இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் காட்சி தருகிறது. 

இக்குறைபோதாது என்று  “ ஒரே நாடு  - ஒரே சட்டம்  “  என்ற பூதமும் வெளிக்கிளம்பியுள்ளது. 

சமகால  அரசின் பங்காளிக்கட்சிகள்  அனைத்தும் உள்ளுக்குள் பொருமிக்கொண்டு,  அறிக்கை மேல் அறிக்கை விடுத்தவாறு ஊடகச் சந்திப்புகளையும்  நடத்தி வருகின்றன. 

முன்னாள் அதிபர் மைத்திரிக்கு  ஒரு  கட்சி,  வாசுதேவ நாணயக்காரவுக்கு ஒரு கட்சி,  பேராசிரியர் திஸ்ஸ விதாரவுக்கு ஒரு கட்சி,  தினேஷ் குணவர்தனாவுக்கு ஒரு கட்சிபந்துல குணவர்தனாவுக்கு ஒரு கட்சி உதய கம்மன்பிலவுக்கு ஒரு கட்சிவிமல்  வீரவன்சவுக்கு ஒரு கட்சிஇவை தவிர  டக்ளஸ்  தேவானந்தாவியாழேந்திரன்                              “ பிள்ளையான்  “  சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு தலா ஒவ்வொரு  கட்சிஇவை அனைத்துக்கும் தலைமைதாங்கும் பசில் ராஜபக்‌ஷ உருவாக்கிய பொதுஜன பெரமுன கட்சி.