மௌனம் - செ .பாஸ்கரன்

.

மௌனித்து நிற்பதால் 
வார்த்தைகள் இல்லை என்பது 
அர்த்தமில்லை 
வார்த்தைகளின் வலி 
அவனுக்கு புரிந்திருக்கும்  
சிந்திய வார்த்தைகளால் 
செத்துவிட்ட 
இதயங்கள்  
வானவெளியெங்கும் 
மேகம்  கலைந்ததுபோல் 
திசை அறியா பெரு வெளியில் 
மெல்ல நகர்கிறது
சுட்டெரிக்கும் 
தீப்பிழம்பாய்   
செத்து விட்ட நிலவொன்று  
எழுந்து வரும் போதெல்லாம் 
சிலந்தி வலைப்  பின்னல் போல் 
நெஞ்சில் கனத்த மழை 
ஆறாத காயங்களாய்  
தனிமையில் 
ஆடிக்கொண்டிருக்கும் 
அவல  குரல் ஒன்று 
மௌனித்து நிற்கும் 
அவன் செயல்
மருந்தாகும் 
மௌன மொழி

No comments: