கவிஞர் சண்முகம் சிவலிங்கம் காலமானார்.


.

                    (சண்முகம் சிவலிங்கம் (1937 - ஏப்ரல் 20, 2012, பாண்டிருப்பு)



ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார்.இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். 1960 முதல் இலக்கியத்துக்குப் பங்காற்றி வரும் சண்முகம் சிவலிங்கம் ஓர் ஓய்வுபெற்ற விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிறந்தது ஒரு இந்துக் குடும்பத்தில். ஆனால் பாடசாலை காலத்திலேயே கத்தோலிக்கராக மதம் மாறியவர். ஒரு கத்தோலிக்கக் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். இவரது கிராமத்தில் இவர் ஸ்டீவன் மாஸ்டர் எனவே அழைக்கப்பட்டார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். கேரளத்தில் படித்து அறிவியலில் பட்டம் பெற்றவர் அவர். அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றினார்.இவரது கவிதைகளின் தொகுதி ஒன்று 1988இல் நீர்வளையங்கள் என்ற பெயரில் வெளியானது. இவர் விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுவதோடு கவிதை மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளார். ஒரு கவிஞராகவே பரவலாக அறியப்பட்டாலும் இவரது சிறுகதைகளும் மிகவும் தரமானவையே. இவரது சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டி கவிதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


ஆக்காண்டி, ஆக்காண்டி


எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.



வைத்ததுவோ ஐஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலு குஞ்சு

நாலு குஞ்சுக் கிரை தேடி

நாலுமலை சுற்றி வந்தேன்,

மூன்று குஞ்சுக் கிரைதேடி

மூவுலகம் சுற்றி வந்தேன்.

மழலையின் பாட்டு - கவிதை


.
விண்மீன்களையும் வெள்ளிநிலவையும் காட்டி,
மடியில் கிடத்தித் தொட்டில் போல் ஆட்டி
குழந்தையை உறங்க வைக்கிறவளின் வானம்
முகிலாடையால் மூடிக் கிடந்தது

எங்கோ நடுங்கிய பூமியின் அதிர்வால்
பொங்கிடலாம் கடல் என்றார்கள்

வயிற்றுக்காக வலைவீசப் போயிருந்த
சொந்தங்களின் நினைப்பால்
கலங்கிய மனதைக் காட்டிக் கொள்ளாமல்

வீசும் காற்று பிடில் வாசிக்க
பாசத்துடன் பாடுகிறாள்
கண்ணே கண்ணுறங்கென.

கேட்ட கடலோரக் கூழாங்கற்களும் சிப்பிகளும்
நாளெல்லாம் உருண்ட களைப்பில்
சொகுசாய் மணலுள் புதைந்து
கண் அசர

சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்வு - செ.பாஸ்கரன்

.
படப்பிடிப்பு ராஜன்
சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மாலைவரை இடம் பெற்றது.இந்நிகழ்வை சிட்னி தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவோடு  Castle Hill Show Ground  இல்  நடாத்தியது. இரண்டாயிரத்து ஜநூறுக்கும் மேற்பட்ட இலங்கை இந்திய மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்.


செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு 24-04-2012



இலங்கை தெல்லிப்பளையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலின் தலைவர் செஞ்சொற்  செல்வர்  கலாநிதி ஆறு திருமுருகன் இப்போது சிட்னி வந்துள்ளார். இவருடைய ஆன்மிகச் சொற்பொழிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் மாலை 7 மணிக்கு நடைபெறும் பூசைக்குப் பின்னர் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

மெல்பேர்னில் ATBCயின் .கலை ஒலி மாலை 2012 25th Apr

.

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

.
திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன.

ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எனது வாசிப்பு மேசைக்கு மேல் இரண்டு பெண்களின் கண்களை மட்டும் போஸ்டர் வடிவில் ஒட்டி வைத்திருந்தேன். அந்தக் கண்களுக்கு உரிய ஒருவர் தமது பிரசவத்தின் போது அகால மரணமுற்ற இந்திய மாற்றுச் சினிமாவின் அபூர்வ நடிகையான ஸ்மிதா பாடீல். பிறிதொருவர் ஸ்ரீவித்யா.

"இருளிலே தெரிந்தது" -கானா பிரபா


.
சாலையைக் கடக்க முயன்ற நாயொன்று எதிர்ப்பட்ட வாகனத்தால் அடிவாங்கி உயிர்பிழைக்க மறுகரை நோக்கி ஓடுமே அதே தள்ளாட்டாட்டத்தோடு ஓடிப்போய் எதிரே Taxi Stand இல் தனியனாகத் தரித்து நின்ற Taxiக்குள் பாய்ந்து மூச்சிரைக்க ஆரம்பித்தான். Preston...Preston... என்று அராத்திக் கொண்டு எதிர்த்திசையை நோக்கி அவன் கைகள் உயர , Taxi சாரதி அவனை விநோதமாகப் பார்த்தவாறே வாகனத்தை முடுக்கினார் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்ததால் மார்புக்கூட்டு குத்திக் குத்தி வலித்தது. மார்பைப் பொத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான் தயாளன்.

ஏ.எல் எடுத்தாச்சு, வெட்டுப்புள்ளியும் வேட்டு வைத்து விட்டது. இனி யூனிவேர்சிற்றிக்கும் போகேலாது. இரண்டாவது தரம் சோதினை எடுத்துப் பார்க்கலாம் என்றால் நாட்டு நிலமை படு கேவலம். சுண்ணாகத்தில இருந்து யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய்ப் படிக்கிறதும் சரி மரண ஆத்தைக் கடக்கிறதும் சரி எல்லாமே ஒன்றாகிவிட்டது. கே.கே.எஸ் றோட்டால் சைக்கிளை மிதித்துக் கொண்டு போகும் அந்த ஒன்றரை மணி நேரமும் மேலே ஏதேனும் வட்டமிடுகுதா என்று பார்த்துக் கொண்டே போய்வரவேணும். மாதம் மும்மாரி பொழியுதோ இல்லையோ, திரும்பவும் சண்டை மூண்டு ரவுண் பக்கம் போகமுடியாத அளவுக்கு பிளேனால் குண்டு மாரியும், ஹெலிகொப்டரால் சன்ன மழையும் பொழிந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஏ.ஏல் படிச்சுக் கொண்டிருக்கும் போதே ஒரு சில கூட்டாளிமார் இயக்கத்துக்குப் போய் விட மிச்சம் இருந்தவர்களில் பாதிப்பேரை கிடைத்த பரீட்சை முடிவுகளும் துவக்குத் தூக்க வைத்தது. 

பெயரிடாத நட்சத்திரங்கள் நூல் வெளியீடு- 29.04


.

ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை 
சிட்னி நுால் வெளியீட்டுக்குழு மேற்கொண்டுள்ளது.

Homebush Boys High School, Homebush எனும் முகவரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக்கவிதை நூல் விற்பனையில் சேரும் பணம் ஈழத்தில் உள்ள பெண்கள் நல்வாழ்வு அமைப்புக்கு வழங்கப்படும்

புஸ்பவனம் குப்புசாமியை வாழ்த்துகிறார் Dr. பாரதி

இலங்கைச் செய்திகள்

எல்பிட்டி திலிதுற தோட்டத்தில் தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் வீடுகளுக்கு தீவைப்பு

அக்காதங்கை வாய்ச்சண்டை இருவரது உயிரையும் பறித்தது யாழ்ப்பாணத்தில் பரிதாப சம்பவம்

நாட்டில் ஏற்படக்கூடிய பெருமாற்றத்தை தவிர்த்துக்கொள்வதற்கு உள்ளூர் ரீதியான சிந்தனை

சமயோசிதமான கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்ட கல்வி நிலை
எல்பிட்டி திலிதுற தோட்டத்தில் தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் வீடுகளுக்கு தீவைப்பு

 Monday, 16 April 2012
house_burn_காலிஎல்பிட்டி திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் மீது பெரும்பான்மையினர் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு, பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக அததெரண இணையத்தள செய்தி தெரிவிக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எல்பிட்டிதிலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ்க் குடும்பங்களை சந்தித்து தன்னை சேர் அல்லது மாத்தயா என்றுதான் அழைக்க வேண்டுமென அச்சுறுத்தி வந்துள்ளார்.

மௌனம் கலைகிறது 9 –நடராஜா குருபரன்


புலிகள் தம்மை அழித்துக் கொண்டிருக்க சிங்கங்கள்  ஒன்றாகி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்த தயாராகின
.
புலிகள் தம்மை அழித்துக் கொண்டிருக்க சிங்கங்கள் ஒன்றாகி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்த தயாராகின
மாற்றுக் கருத்துக்களுடன் உயிர் வாழவதற்கான உரிமையை மறுத்திருந்தமை தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அளவுகடந்த எதிரிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்தத் தூர நோக்கற்ற நடத்தையினால் - வெற்றுஇராணுவக் கண்ணோட்டத்தினால் எதிரியின் ராணுவமே பயன்களைப்பெற்றுக் கொண்டமை நான்காவது ஈழப்போரில் நிதர்சனமானது என எனது எட்டாவது தொடரிற் குறிப்பிட்டிருந்தேன்.
விடுதலைப்புலிகள் மாற்று இயக்கங்களைத் தடை செய்து அவர்களுட் பலரைக் கொன்றொழித்த போது அதனைத் துரோகிகளை அழிக்கும் ஒருநடவடிக்கையாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தினர். புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்கள் உண்மையான விடுதலைக்கு போராடவில்லை எனவும் விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என்ற விம்பமும் ஏற்படுத்தப்பட்டது.  எனவே இயக்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்ட போது பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியாகவே அதற்குத் துணைபோனார்கள்.

அம்மா வின் ஆஸ்திரேலியா விஜயம் ஏப்ரல் 12 - 24/04/2012

.
Melbourne - Sydney - Brisbane - Gold Coast

மேலதிக விபரங்கள்
http://www.ammaaustralia.org.au/

மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 4


.
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)
(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

காட்சி 5

களம் - துட்டகைமுனுவின் அரசவை
பங்குகொள்வோர்:- துட்டகைமுனு
சதாதீசன்
அமைச்சர்
அரசவையினர்

(கைமுனுவின் கையிலே ஓர் ஓலை இருக்கிறது.  அதைப்பார்த்தபடியே அவன் பேசுகிறான்)

கைமுனு:- எனது தந்தையாரின் ஆட்சிக்காலத்திலும் ஒருமுறை இப்படித்தான் திறை
கேட்டு ஓலை அனுப்பியிருந்தான் அந்த அறிவற்ற எல்லாளன். கொடுக்கமுடியாது மறுத்துவிடுங்கள் என்று எவ்வளவோ கூறிப்பார்த்தேன் தந்தையிடம். அன்றே திறையை நிறுத்தி போரை நடத்தியிருந்தால் இன்று எல்லாளன் மாண்டு, பல்லாண்டுகள் ஆகியிருக்கும்.

அமைச்சர்:- இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை மன்னா. அத்தோடு உங்கள்
ஆட்சிக் காலத்தில்தான் எல்லாளன் வீழ்ச்சியுறவேண்டும் என்பது விதிபோலும்.

சாயிபாபா சமாதியடைந்து ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பேரணி

                         
22/04/2012
  பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா மகா சமாதியடைந்து ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு நாட்டில் அமைதி, ஒற்றுமை, அன்பு, சகோதரத்துவம், சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அஹிம்சை நற்குணங்களோடு மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்காக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் அமைதிப் பேரணியொன்று இன்று காலை நடைபெற்றது.

குறளில் குறும்பு 30.- குறுகத் தறித்த குறள்

.
வானொலி மாமாவின் குட்டி நாடகம் -
குறளில் குறும்பு 30.- குறுகத் தறித்த குறள்

ஞானா: “பயனிலசொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். பாராட்டுவான் எண்டால், மெச்சுகிறவன், ஊக்குவிப்பவன், எண்டுதானே பொருள்.....   பயனில் சொல்லெண்டால், தேவை இல்லாத, பயனற்ற சொற்கள் எண்டதுதானே பொருள்......அப்பிடி எண்டால் பயனில்லாத சொற்களை எப்பிடிப் பாராட்ட முடியும்? அப்பிடிப்பட்டவனை எப்பிடி நல்ல மனிசன் எண்டு சொல்ல முடியும்......எல்லாம்
குழப்பமாய் இருக்கே.......

அப்பா: என்ன ஞானா இன்டைக்குத் தனித்தவில் வாசிக்கிறாய் போலைகிடக்கு?

ஞானா: இல்லை அப்பா....இந்தக் குறள் ஒரே குழப்பமாய் இருக்கு.......அதுதான்.......

வீரம் விதைத்த இளைஞன் - மயிலைபாலு


.
கேப்டவுன் பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் பிரதான கட்டிடத் திற்கு அவரது பெயர் சூட்டப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பெய ரில் நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மான் செஸ்டர் பல்கலைக்கழக மாணவர் சங்க கட் டிடத்திற்கு அவரது பெயர் சூட்டி கவுரவிக்கப் பட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ரஸ்கின் கல்லூரி மாணவர் விடுதி அவர் பெயரில் தான். பிரிட்டனில் உள்ள மாணவர் சங்கங்கள் பலவற்றில் இவரது பெயருடன் கட்டி டங்களும் பிரிவுகளும். பிரேசில், சல்வடாரில் இவரது பெயரில் கல்விநிறுவனம். பிரிட்டோரியா மருத்துவக்கல்லூரியும் அவரது பெயரில், டர்பன் பல்கலைக்கழகத்தின் பரந்து விரிந்த வளாகம் அவரது பெயர் தாங்கிநிற்கிறது.இதே பல்கலைக்கழக வளாகத்தின் சுதந்திர சதுக்கத் தில் அவருக்கு மார்பளவு வெண்கலச் சிலை....

இவ்வளவு சிறப்புக்குரிய அவர் யார்?

பெரியஅறிஞரா? போராளியா? அரசியல் தலைவரா? தத்துவ ஞானியா? இவை எல்லா மாகவும் வாழ்ந்து 30 வயதிலேயே மரண மடைந்தவர் அவர். காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு பலியாகிப் போனவர் அவர்.

சிட்னி முருகன் கோவிலில் திரு ஆறு திருமுருகனின் சொற்பொழிவு

.

“குன்றத்துக் குமரன்” கோயில் அவுஸ்திரேலிய சைவப் பெருமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! --- பத்மலிங்கம்

.
அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து வதியும் சைவத் தமிழ்ப்பெருமக்கள் பல மாநிலங்களிலும் திருக்கோயில்களை அமைத்துச் சைவசமயத்தை முறையாக வளர்த்துவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. “கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்கலாகாது” என்னும் முதுமொழிக்கு முக்கியத்துவம் அளித்து நீர்வளமும் நிலவளமும் அருள்வளமும் ஒருங்கே அமைந்த மெல்பேர்ணின் வடமேற்குப் பகுதியிலே திருக்கோயில் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும்வண்ணம்  சக்தி வாய்ந்த பெருங் கோயிலாகக் “குன்றத்துக் குமரன்” கோயிலை முருக பத்தர்கள் அமைத்தமை சைவப் பெருமக்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 


பாரம்பரியக் கலைப் பொருட்கள்: பாக்குவெட்டி - மணிமேகலா•



.
கடந்த வாரம் துணிக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன்.

அங்கு ஒரு கத்தரிக்கோல் - ஒரு சின்னக் கத்தரிக்கோல் - நூல்கள் வெட்டப் பாவிப்பது. காணக்கிடைத்தது. யாரோ ஒருவருடய கற்பனை! கலை நயம்!

அது ஒரு கொக்கு மாதிரி தோற்றம் கொண்டது.! அதன் கூரிய மூக்கு தான் வெட்டும் பகுதி. ஒரு சிறு உபகரணத்தை எத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது.

அதைப் பார்த்த போது நம்மிடம் அப்படி ஏதாவது கலை நயம் மிக்க பொருட்கள் இருந்தனவா என எண்ணமோடியது. அப்போது எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது பாக்கு வெட்டி தான். ஒரு மான் பாய்ந்தோடுவது போல வடிவமைக்கப் பட்டிருந்த பாக்கு வெட்டி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒருமுறை ஒருவர் வீட்டில் கண்டிருந்தேன்.

வீட்டுக்கு வந்து முதல் வேலையாக கூகுளில் பாக்குவெட்டி தேடினேன். :) ரொம்ப முக்கியம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது எனக்கு அது முக்கியம்!! :))

எத்தனை அழகழகான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள்! அவை ஈழத்தில் இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்காசிய நாடுகளிலும் புளக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காகவும் தருகிறேன்.


உலகச் செய்திகள்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

தலிபான்களின் தாக்குதல்கள்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்


 Monday, 16 April 2012

indonesia_earthquake_ இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று திடீரென மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்று புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா




மீராவுடன் கிருஷ்ணா


மனைவிகளின் தகாத உறவுகள், கணவர்களின் சந்தேக புத்தியை மையமாகக் கொண்டு வந்திருக்கும் இன்னொரு படம் மீராவுடன் கிருஷ்ணா.

கொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம் ரக படங்களில் இதுவும் ஒன்று.

தாய் சொல்லை தட்டாத பிள்ளையான கிருஷ்ணா, அம்மாவின் வற்புறுத்தலால் மீராவை திருமணம் செய்கிறார்.

மீரா ஒரு டாக்டர். கிருஷ்ணா சுமாராக இருந்தாலும், அநாதைப் பிணங்களை தானே முன்வந்து பொறுப்பேற்று அடக்கம் செய்யும் அவரது நல்ல மனதைப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்.

சந்தோஷமாக தாம்பத்யம் தொடங்கும் நேரத்தில், கிருஷ்ணாவுக்கு ஒரு மர்ம ஆசாமியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. மீராவைப் பற்றி அந்த நபர் தவறாகச் சொல்ல சந்தேகப் பேய் பிடித்துக் கொள்கிறது கிருஷ்ணாவை.

அது பெரிய சண்டையாக மாறுகிறது. ஆனால் அம்மா மீதுள்ள அதீத அன்பால், எதையும் வெளியில் சொல்லாமல் மூடி மறைக்கிறான் கிருஷ்ணா.

அந்த நேரம் பார்த்து மீரா கர்ப்பமாக அந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்று மனைவியை நேரடியாகவே கேட்கிறான். சண்டை முற்றுகிறது. குழந்தையை அழிக்கவும் திட்டமிடுகிறான்.

இதனால் வெறுத்துப் போன மீரா, தாய் வீட்டுக்குப் புறப்படுகிறாள். அப்போதுதான் தன் சந்தேகங்களுக்கான காரணங்களைச் சொல்கிறான் கிருஷ்ணா. அந்த ப்ளாஷ்பேக் அழுத்தமானது. இறுதியில் கிருஷ்ணாவின் சந்தேகம் தீர்ந்ததா... என்பதை ஒரு முறை தியேட்டரில் பார்த்துவிடுங்கள்.

சினிமாவில் யாரிடமும் உதவியாளராகக் கூட இல்லாமல், தன் முயற்சியில் தனக்குத் தெரிந்த சினிமாவை எடுத்த கிருஷ்ணாவுக்கு முதலில் வரவேற்புகள். வாழ்த்துகள்.

முதல் காட்சியே வித்தியாசமாகத்தான் ஆரம்பிக்கிறது. ஹீரோ தனக்குத் தானே பேசிக் கொள்ளும் காட்சிகளைப் பார்க்கும்போது, திரும்பவும் சைக்கோ கதையா என்ற கேள்வி எழுந்தாலும், அதை அப்படியே காமெடியாக மாற்றிவிடுவதால் தப்பிக்கிறோம்.

படத்தின் இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். பரவாயில்லை ஆங்காங்கே கொஞ்சம் மிகை நடிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இப்போதுள்ள நடிகர்களுக்கு கொஞ்சமும் குறையாத திறமை அவரிடம் இருக்கிறது.

நாயகியாக வரும் ஸ்வேதா இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். குறிப்பாக சந்தேக புத்தியால் பேயாட்டம் போடும் கணவனை அதட்டி, கட்டுப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 'தமிழ் அண்ணன்' (எம்ஆர்ஏ விஜய்) கதை மனதைப் பிசைகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி தமிழ் அண்ணன்கள், அவர்களின் சிஷ்யப் பிள்ளைகள் சகிதம் வலம் வருவதைப் யாரும் பார்த்திருக்க முடியும். அந்த 'க்ளீன் அண்ணன்' கடைசியில் இடுப்பு வேட்டி அவிழ்வதுகூட தெரியாத அளவு மனநிலை பிறழ்ந்து, ஒரு அநாதையாய் செத்துக் கிடக்கும் காட்சி மனதை என்னமோ செய்கிறது.

பிரதான காமெடியன் என்று யாருமில்லா விட்டாலும், அந்தக் குறை தெரியாத அளவு பார்த்துக் கொள்கிறார் ஜிகினா ஜித்தன். நண்பனுக்கு துரோகம் செய்த மனைவியை அம்பலப்படுத்துவதும், அவர்களை பின்னர் சேர்த்து வைப்பதும் இயல்பான காட்சிகள்.

சில காட்சிகளில் ஒருவித தொழில் முறையின்மை தெரிகிறது. முதல்படம் என்ற வகையில் அது புரிந்து கொள்ளக் கூடியதே. திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான காட்சிகள் வருவது, அந்த மர்மக் குரல் யாரென்று கூட கண்டுபிடிக்க முயற்சிக்காமல், அதை மட்டும் வைத்தே மனைவியை சந்தேகப்படுவது போன்ற குறைகளை சரிசெய்திருக்கலாம்.

அந்த வேலைக்காரி பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நாசூக்காக கையாண்டிருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு பல காட்சிகள் வெகுநேரம் நீள்கின்றன. பார்வையாளர்களை சலிப்படைய வைக்கிறது.

நல்லவேளை படத்தில் இரண்டு பாடல்கள்தான். அவற்றில் சந்தனம் சேறாகுமா.. என்ற ராஜேந்தர் டைப் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கூட ஓகேதான்(செந்தில் பிரசாத்).

படத்தின் ஒளிப்பதிவாளர் எம்ஆர்ஏ விஜய். தயாரிப்பாளரும் கூட(தமிழ் அண்ணனாக வருபவரும் இவரே).

குறைகள் இருந்தாலும், எந்தக் காட்சியிலும் நெளிய வைக்காமல் நேர்த்தியாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது கிருஷ்ணாவுக்கு. அந்தவகையில், அவரை வரவேற்போம்.

நடிகர்கள்: ஏ கிருஷ்ணா, ஸ்வேதா, ராதா, மனோபாலை, ஜிகினா ஜித்தன், எம்ஆர்ஏ விஜய்.

இசை: கே கே செந்தில் பிரசாத்.

எழுத்து இயக்கம்: ஏ கிருஷ்ணா.

தயாரிப்பு: எம்ஆர்ஏ விஜய்.

நன்றி விடுப்பு

ஒரு கல் ஒரு கண்ணாடி

'ரoru_kal_ou_kannadi_vimarsanam_1த்தம் பார்க்காம ஓயறதில்ல' என்ற வெறியோடு திரியும் கோடம்பாக்கத்தின் பிளேடு பக்கிரிகள் சிலர், கொஞ்ச நாளைக்கு ஓ.கே ஓகே டைரக்டர் ராஜேஷிடம் 'அப்ரசண்டாக' சேர்ந்தால் அடுத்த ஜென்மத்துக்காவது பர்மனன்ட் ஜாப் உறுதி. தம்மாத்துண்டு கதையை வைத்துக் கொண்டு எம்மாம் பெரிய ஷோ நடத்துராங்கப்பா...!


இந்த சிரிகிரி அசெம்பிளியில் ஸ்பெஷல் மார்க் எடுத்து பாஸ் பண்ணியிருக்கிறார் 'வருங்கால தமிழகம்' என்று உடன்பிறப்புகளால் கொஞ்சப்படும் உதயநிதி. ஒரு படத்துக்கு ரெண்டு தடவ டப்பிங் பேசுன ஒரே ஆர்ட்டிஸ்ட் நானாதான் இருப்பேன் என்று ஒப்புக் கொள்கிற தைரியமும், சுய பரிசோதனையும் எந்த ஆர்ட்டிஸ்டுக்கு இருக்கு? அதுக்காகவே ஒரு ஸ்பெஷல் நமஸ்காரமண்ணே!

மைலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் அடிக்கடி சந்திக்கிற பாடி லாங்குவேஜுடன் சந்தானம். அவருக்கு பக்கபலமாக உதயநிதி. ரெண்டு பேருக்கும் கிடைக்கிற காதலிகளும், அவர்கள் இவர்களை படுத்தி எடுப்பதுதான் முழு படமும். விட்டால் புளிக்க புளிக்க ஊத்தப்பம் போடுகிற கதைதான். ஆனால் அந்த ஊத்தப்பத்தின் மீது டைரக்டர் தெளிக்கிற மசாலா ஐட்டங்கள் இருக்கிறதே, அதுதானய்யா ருசி.

டிராபிக் சின்னலில் ஹன்சிகாவை பார்த்த முதல் பார்வையிலேயே பேஸ்த் ஆகித் திரியும் உதயநிதி, விரட்டி விரட்டி காதலிக்கிறார் அவரை. ஹன்சிகாவோ எல்லா பெண்களையும் போல எதுக்கு அவன் கூடல்லாம் சேர்ற? என்று சந்தானத்தை கட் பண்ண சொல்ல, அதே கதைதான் சந்தானத்தின் விஷயத்திலும். அங்கேயும் ஒரு மொக்கை பிகர் சந்தானத்திற்கும் உதயநிதிக்கும் நடுவே பேஸ்மென்ட் எழுப்பி பில்டிங் கட்டுகிறது.

எல்லாத்தையும் மீறி எப்படி சேர்ந்தது ஜோடிகள்? கொஞ்சமும் யோசிக்காமல் லாஜிக்கை மடித்து 'டஸ்ட் பின்'னில் எரிந்துவிட்டு போனால், மூணு மணிநேரம் சுகமோ சுகம்.

நடிப்பு விஷயத்திலும் டான்ஸ் விஷயத்திலும் தான் எப்படி என்பதை சம்பந்தப்பட்ட ஹீரோவே ஒப்புக் கொண்ட பின், நொள்ளை நொட்டை என்று அலசிப் பிழிவானேன்? ஆனால் உதயநிதி ஒப்புக் கொண்ட மாதிரி அவ்வளவு மழுங்கல் இல்லை அவர். உறுத்தாமலிருக்கிறார் ஒவ்வொரு பிரேமிலும். நம்ம வீட்டு பிள்ளை என்ற உணர்வையும் கொடுக்கிறது அவரது அழகான புன்னகை. இடியட் ஆஃப் த நான்சென்ஸ் ஆஃப் த என்று விடாமல் முழங்கும் அவரது சப்பை இங்கிலீஷ், வில்லேஜ் மாணவர்களின் விக்ஸ் மிட்டாய்.
oru_kal_ou_kannadi_vimarsanam_2

உதயநிதிக்கு ஒரு விண்ணப்பம். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னை மண்டையில இறக்க ஆயிரம் பேர் இருக்காங்க கோடம்பாக்கத்தில். நவரச நாயகன் கார்த்திக் விட்ட இடத்தை பிடிக்க நீங்க தோதா இருப்பீங்கன்னு மனசு சொல்லுது. டிராக் மாறாம ட்ரை பண்ணுங்க தலைவா, ப்ளீஸ்!

உதயநிதி ஒண்ணாம் நம்பர் ஹீரோ என்றால், பக்கத்தில் விழுகிற ஒவ்வொரு சைபரும் அதன் மதிப்பும் சந்தானமன்றி வேறில்லை. இவர் வாயிருக்கிற இடத்தில் வாஸ்து பகவானின் லெக்சுரி பிளாட்டும் இருக்கிறது போலும். அதை திறக்கும்போதெல்லாம் வெடித்து சிதறுகிறது தியேட்டர்.

'டிபன் தின்ங்கிறவன் ஒருத்தன். டிப்ஸ் வைக்கறது இன்னொருத்தனா' என்று போகிற போக்கில் போட்டுத்தள்ளுகிற சக்தி இவருக்கு மட்டுமே 'வாய்'த்த கலை. அதுமட்டுமல்ல, தன் வழக்கமான பாடி லாங்குவேஜை இந்த படத்தில் கைவிட்டுவிட்டு புது ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார். உமா பத்மநாபனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது பேசுகிறாரே, அதற்காகவே இன்னும் ஏழெட்டு முறை பார்க்கலாம் இந்த படத்தை.

சந்தானத்தின் அந்த ஜாங்கிரி யாரோ? சரியான குள்ளப் பிசாசு...

ஒரு காட்சியில் ஹன்சிகாவை இஷ்டத்திற்கு விமர்சிக்கிறார் ஒரு நவீன பிரதாப்போத்தன். நல்லவேளை, தமிழ் தெரிந்திருந்தால் அந்த காட்சியில் பொண்ணு நடிச்சுருக்குமோ என்னவோ? போத்தனின் பேச்செல்லாம் வேஸ்ட் என்பதை போல, இந்த மைதா மாவை பார்க்கிற போதெல்லாம் ரொட்டியாகிறது நம் மனசு.
oru_kal_ou_kannadi_vimarsanam_3

சரண்யா-அழகம்பெருமாள் பகுதி ஒப்புக்கொள்ள முடியாத கற்பனை என்றாலும், சரண்யாவின் நடிப்பை ரசிக்க அருமையான வாய்ப்பு. நல்லவேளை, தன் ரிசல்ட்டை பார்க்காமல் விட்டாரே என்ற நிம்மதியையும் துடிப்பையும் இவரை விட சரியாக எவரால் செய்திருக்க முடியும்?

ஹாரிசின் பாடல்கள் அவரது முந்தைய பாடல்களின் காப்பி என்றாலும், வேணாம் மச்சான் காதலு மட்டும் சந்து பொந்தெல்லாம் பட்டைய கிளப்பும். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு என்பதாலேயே இன்னும் கொஞ்சம் மின்னுகிறார்கள் எல்லாரும். தினேஷின் நடன அசைவுகள் அப்படியே ரிப்பீட். (ஸ்டைலை மாத்துங்க வாத்தியாரே)

ஒரு கல்லு, ஓராயிரம் லொள்ளு!

நன்றி தினக்குரல்