நாங்கள்....! கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
.
நொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ வில்லை
கூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்பசியாற உண்பதற்கு உணவு மில்லை
நோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை
நொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ வில்லை
கால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்
இம்மையிலே நமது இடம் நரகமாகும்
பசிவரமே மாத்திரிகைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் தனவந்தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாய் களுண்ணும்
வகையான உணவுகளும் எமக்கு இல்லை
பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு
பகையாகிப் போனதானால் வீணில் வாழ்ந்தோம்
இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கிறான் நம்மைவிட்டு
நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்
இத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
பெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு
பகையாகிப் போனதானால் வீணில் வாழ்ந்தோம்
இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கிறான் நம்மைவிட்டு
நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்
இத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்
திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி
.
தமிழ்
இலக்கியத்திறனாய்வில்
போற்றத்தக்க பணிகளைத்தொடரும் கே. எஸ். சிவகுமாரன் இலக்கியப்பயணத்தில்
இணைந்துவரும் அதிர்ந்து பேசத்தெரியாத அமைதியான
ஆளுமை
மல்லிகை
இதழ்களை வாசிக்கத்தொடங்கிய 1970 காலப்பகுதியில் அதில் பதிவாகும் குறிப்பிடத்தகுந்த பத்தி எழுத்துக்கள்
என்னைக்கவர்ந்தன. அவற்றை தொடர்ந்து
எழுதிவரும் கே.எஸ்.
சிவகுமாரனின் உரைநடை இலக்கிய உலகின் அரிச்சுவடியில்
இருந்த எனக்கு அப்பொழுது ஆதர்சமாகவே விளங்கியது.
மல்லிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சபா ஜெயராசா, நுஃமான் உட்பட பலர்
எழுதிய ஆக்கங்களில் இடம்பெற்ற வார்த்தைப்பிரயோகங்கள் முதலில் என்னை ஆச்சரியத்திலும் அச்சத்திலும்
ஆழ்த்தியவை.
"அது
அவர்களின் தவறு அல்ல.
எனது தவறுதான் " என்பதை நண்பர் பூரணி மகாலிங்கம்தான் சுட்டிக்காண்பித்து தொடர்ந்து விமர்சனங்களையும் படித்துவாருங்கள் என்று எனக்கு
ஊக்கமளித்தார். " ஆனால் - கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துநடை என்போன்ற ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உடனடியாகவே புரிந்துவிடுகிறதே " என்றேன்.
அதற்கு மகாலிங்கம், " சிவகுமாரன் எழுதுவது விமர்சனங்களாக இருந்தாலும் அவை அறிமுகப்பாங்கில் அமைந்த ஒருவகை பத்தி எழுத்து " - என்று தரம் பிரித்து
அடையாளம்
காண்பித்தார்.
மனிதம் மரித்துப்போன ஒரு நாளில்...

.
தலிபான் பயங்கரவாதிகளின் கொலைவெறித் தாண்டவத்துக்குப் பிறகு, பெஷாவர் நகர ராணுவப் பள்ளிக்கூடமே ரத்தத்தை உறையவைக்கும்படி காட்சி தருகிறது. பள்ளிக் கட்டிடங்களின் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் துப்பாக்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள் ஏற்படுத்திய வடுக்களும், மாணவர்களின் உடல்களிலிருந்து பீறிட்டு அடித்த ரத்தமும், உடலிலிருந்து பிய்ந்த தசைகளின் துணுக்குகளும், சிதறிய பைகளும், புத்தகங்களும், கருவிகளுமாகக் காட்சிதருகின்றன.
பள்ளிக்கூடத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தலிபான்கள் எல்லாக் கட்டிடங்களுக்கும் சென்று கண்ணில் பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றிருக் கிறார்கள். பின் வாசல் வழியாகத் தப்பி ஓடிய பலரும், இறந்தவர் களுக்கு நடுவில் உயிரற்ற சடலம் போலப் படுத்துக்கொண்டு நடித்த சிலரும்தான் உயிர் தப்பியிருக்கிறார்கள்.
இனி, அடுத்தது என்ன?
“நீங்கள் சொல்லி அனுப்பியபடி பள்ளிக்கூடத்தில் இருந்த எல்லா மாணவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டோம். இனி, அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று பயங்கரவாதிகளின் தலைவன் அபுசார், இந்தப் படுகொலைகளுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திலிருந்து எங்கோ இருந்த யாரிடமோ கேட்டிருக்கிறார்.
இலங்கைச் செய்திகள்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்
மலையகத்தில் கடும் மழை : 110 பேர் பாதிப்பு
இந்திய மீனவர்கள் 28 பேர் விடுதலை
வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு
சீரற்ற கால நிலை காரணமாக 10 பேர் பலி : 1இலட்சத்து 61 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு
96 மீனவர்கள் விடுதலை
வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு
=======================================
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்
22/12/2014 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள்
மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம்
மேற்கொண்டுள்ளனர்.
சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்
.
சந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்
தாபிக்கும் பெருநிகழ்வு சரித்திர மன்றோ?
- பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
நினைவினிலே கற்பனையாய் மகிழ்ந்த தமிழன்
நிறைவேறா ஆசைக்கோர் வடிவ மைக்க
நினைவினொடு போர்தொடுத்து ஈழம மைத்து
நிறைவாக இருபத்தைந் தாண்டுகள் அந்தோ?
நினைத்தெவரும் சாதிக்க முடியா வண்ணம்
நிறைவாட்சி புரிந்திட்டார் தானைத் தலைவர்!
நினைவினிலே நித்தம்வாழ் தியாகியர்க் கெனவே
நிறுவிநின்றார் இன்னினைவாய் “நினைவுச் சின்னம்”!
தாபிக்கும் பெருநிகழ்வு சரித்திர மன்றோ?
- பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
நினைவினிலே கற்பனையாய் மகிழ்ந்த தமிழன்
நிறைவேறா ஆசைக்கோர் வடிவ மைக்க
நினைவினொடு போர்தொடுத்து ஈழம மைத்து
நிறைவாக இருபத்தைந் தாண்டுகள் அந்தோ?
நினைத்தெவரும் சாதிக்க முடியா வண்ணம்
நிறைவாட்சி புரிந்திட்டார் தானைத் தலைவர்!
நினைவினிலே நித்தம்வாழ் தியாகியர்க் கெனவே
நிறுவிநின்றார் இன்னினைவாய் “நினைவுச் சின்னம்”!
விழுதல் என்பது எழுகையே பகுதி 31 இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-
விழுதல் என்பது எழுகையே
பகுதி 31 எழுதியவர்
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்
போன் அடித்தது. அட அம்மா எடுக்கிறா.
“ஹலோ அம்மா...||
மறு முனையில் அம்மா
“தம்பி சீலன்........||
அம்மா அழுது கொண்டிருந்தா....
“என்னம்மா ஏன் அழுறீங்கள். அழாம விசயத்தை சொல்லுங்கோ...||
“தம்பி.....தம்பி....|| என்று அம்மா விம்மிக்கொண்டிருந்தாள்.
அம்மாவை தேற்றினான்.
பகுதி 31 எழுதியவர்
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்
.
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன் அவர்களின் அறிமுகம்
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்
இளைய அப்துல்லாஹ் (1968)
1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.
இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார்.
1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
1996இ 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார்.
2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர்இ அறிவிப்பாளர்இ நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகஇ ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பியஇ பிரித்தானியஇ மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார்.
சளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை.
அவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர்.
இளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.
இளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.
1‘துப்பாக்கிகளின் காலம்’ சிறுகதை
2‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.
3-அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்-கட்டுரை(உயிர்மை)இ
4-கடவுளின் நிலம்-கட்டுரை (விஸ்வ சேது இலக்கியபாலம்)
5-லண்டன் உங்களை வரவேற்பதில்லைகட்டுரை(காலச்சுவடு)இ
6-நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்-கட்டுரை (காலச்சுவடு
தொடர்ந்து இந்தியா டுடே இதழில் நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார்.
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்.
கதை தொடர்கிறது பகுதி 31
“ஹலோ அம்மா...||
மறு முனையில் அம்மா
“தம்பி சீலன்........||
அம்மா அழுது கொண்டிருந்தா....
“என்னம்மா ஏன் அழுறீங்கள். அழாம விசயத்தை சொல்லுங்கோ...||
“தம்பி.....தம்பி....|| என்று அம்மா விம்மிக்கொண்டிருந்தாள்.
அம்மாவை தேற்றினான்.
விழுதல் என்பது எழுகையே பகுதி 32 இணுவையூர் சக்திதாசன்,டென்மார்க்
.
இணுவையூர் சக்திதாசன் டென்மார்க்
புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியி பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன்.
கடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
கொக்குவில் மேற்கு உஉவஅ தமிழ் கலவன்இ கொக்குவில் இந்துக்கல்லூரிஇ கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.
இவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.
டென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24 வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25 நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2 நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.
40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்திருக்கிறார் ... டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம் மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.
இவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இணுவையூர் சக்திதாசன் டென்மார்க்
புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியி பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன்.
கடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
கொக்குவில் மேற்கு உஉவஅ தமிழ் கலவன்இ கொக்குவில் இந்துக்கல்லூரிஇ கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.
இவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.
டென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24 வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25 நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2 நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.
40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்திருக்கிறார் ... டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம் மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.
இவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
சங்க இலக்கியக் காட்சிகள் 34- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
இசையால் யாழுக்கு என்ன பயன்?
ஒரு தாய் தன் மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தாள். அவள் பருவமடைந்ததும் பாசத்தையும் மீறிய கட்டுக்காவலுடன் அவளைப் பராமரித்து வந்தாள். அங்கே போகாதே, இங்கே நிற்காதே, அவனைப் பாராதே, இவரோடு சேராதே என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்தாள். ஆனால் பூத்துக் குலுங்கும் இளமையோடு செழித்து நின்ற மகளிடம் இயற்கையாகவே எழுகின்ற பருவத்து உணர்வுகளை அந்தத்தாயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் தாயின் கட்டுப்பாடுகள்தான் மகளின் கட்டுமீறும் எண்ணங்களை மேலும் ஊக்கப்படுத்தின என்றுகூடச் சொல்லலாம்.
அந்தநேரத்திலே அவளது மனதினை ஒருவன் கவர்ந்தான். அவளின் இதயம் முழுவதிலும் அவன் இடம்பிடித்தான். உள்ளத்தால் ஒன்றுபட்ட இருவரும் கள்ளத்தனமாக அடிக்கடி சந்தித்து இன்புற்று வந்தார்கள். அதற்கும் முடியாது என்கின்ற அளவுக்குத் தாயின் கட்டுப்பாடுகள் அதிகமாகின்றன. மகளின் காதல் விடயத்தை அறிந்துகொண்ட தாயும், தந்தையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் காதலர் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்காகத் தம் பெற்றோரைப் பிரிந்து ஊரைவிட்டே சென்றுவிடுகின்றார்கள்.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
இசையால் யாழுக்கு என்ன பயன்?
ஒரு தாய் தன் மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தாள். அவள் பருவமடைந்ததும் பாசத்தையும் மீறிய கட்டுக்காவலுடன் அவளைப் பராமரித்து வந்தாள். அங்கே போகாதே, இங்கே நிற்காதே, அவனைப் பாராதே, இவரோடு சேராதே என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்தாள். ஆனால் பூத்துக் குலுங்கும் இளமையோடு செழித்து நின்ற மகளிடம் இயற்கையாகவே எழுகின்ற பருவத்து உணர்வுகளை அந்தத்தாயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் தாயின் கட்டுப்பாடுகள்தான் மகளின் கட்டுமீறும் எண்ணங்களை மேலும் ஊக்கப்படுத்தின என்றுகூடச் சொல்லலாம்.
அந்தநேரத்திலே அவளது மனதினை ஒருவன் கவர்ந்தான். அவளின் இதயம் முழுவதிலும் அவன் இடம்பிடித்தான். உள்ளத்தால் ஒன்றுபட்ட இருவரும் கள்ளத்தனமாக அடிக்கடி சந்தித்து இன்புற்று வந்தார்கள். அதற்கும் முடியாது என்கின்ற அளவுக்குத் தாயின் கட்டுப்பாடுகள் அதிகமாகின்றன. மகளின் காதல் விடயத்தை அறிந்துகொண்ட தாயும், தந்தையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் காதலர் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்காகத் தம் பெற்றோரைப் பிரிந்து ஊரைவிட்டே சென்றுவிடுகின்றார்கள்.
கனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா
.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சூரியன் எஃப் எம் செய்தியறிக்கையைக் கேட்ட போது ஒரு தகவல் கிட்டியது. இந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வட பகுதியில் மாத்திரம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவு பழவகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்த உற்பத்தி முந்திய ஆண்டுகளை விட அதிகம் என்றும் விவசாயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இவ்வாறான உற்பத்திப் பெருக்கம் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வல்லது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சூரியன் எஃப் எம் செய்தியறிக்கையைக் கேட்ட போது ஒரு தகவல் கிட்டியது. இந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வட பகுதியில் மாத்திரம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவு பழவகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்த உற்பத்தி முந்திய ஆண்டுகளை விட அதிகம் என்றும் விவசாயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இவ்வாறான உற்பத்திப் பெருக்கம் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வல்லது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
எங்களூரைப் பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்பார்கள். அதாவது மழையை நம்பியே பயிர்ச்செய்கை செய்ய வேண்டிய நிலை. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களை அண்டி ஏரிகளோ, ஆறுகளோ இல்லை.
ஆனாலும் இயற்கை இன்னொரு பக்கத்தால் அனுகூலம் விளைவித்திருக்கிறது. வடபகுதியில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற செம்பாட்டு மண் சார்ந்த நிலப்பரப்பு அதிகம். இதனால் புகையிலை போன்ற சீவனோபாய உற்பத்திகள் மட்டுமன்றி மா. பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்கள் செழித்தோங்கிக் கனி தரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிராமப்பகுதிகளான எங்களூரில் இருந்து யாழ்ப்பாண நகரப்பகுதி சொல்லும் போது, செம்பாட்டுக் கால் என்று கிண்டலடிக்கும் மரபு இருக்கின்றது.
உலகச் செய்திகள்
சிரிய விமான நிலையத்தின் மீது 'ஐ.எஸ்' போராளிகள் தாக்குதல் : 20 பேர் பலி
23/12/2014 கிழக்கு
சிரியாவிலுள்ள விமான நிலை நிலையமொன்றின் மீது ஐ.எஸ். போராளிகளால்
மேற்கொள்ளப்பட்ட பிந்திய தாக்குதல் நடவடிக்கையின் போது குறைந்தது
20 போராளிகள் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம்
தெரிவித்தது.

ஐ.எஸ். போராளிகள் அந்த விமான நிலையத்தின் மீதான தாக்குதலை
சனிக்கிழமை பின்னிரவு ஆரம்பித்திருந்தனர்.இதனையடுத்து
அவர்களுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 20 ஐ. எஸ்
போராளிகள் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்த போராளிகளில் 19 பேர் சிரியாவைச் சேர்ந்தவர்களாவர்
ஒருவர் மொரோக்கோ பிரஜையாவார்.இந்த மோதலின் போது இராணுவத்தினர் கடும்
ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அதேசமயம் அங்கிருந்து பின் வாங்கிச் சென்ற ஏனைய போராளிகள் தம்முடன்
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பலவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக சிரிய
மனித உரிமைகள் அவதான நிலையத்தின் பணிப்பாளர் ரமி அப்டெல் ரஹ்மான்
தெரிவித்தார்.
இது டெயிர் எஸோர் இராணுவ விமானத்தளத்தினைக் கைப்பற்ற ஐ.எஸ்.
போராளிகளால் ஒரு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது
முயற்சியாகும்.
ஈராக்கிய எல்லையில் ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களுக்கு அண்மையில் டெயிர் எஸோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கிய எல்லையில் ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களுக்கு அண்மையில் டெயிர் எஸோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
இயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:
.
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.
பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு தற்போது திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள்.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார்.
'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
யேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி)
.
உலகம் முழுவதும் யேசு கிறீஸ்துவின் பிறந்தநாள் மார்கழி 24இரவு சாதி மத இனவேறுபாடின்றி கொண்டாடப்படுவதை காண்கிறோம். இதற்கு யேசுவின் பிறந்ததினம் மட்டும்தான் காரணமா? மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா? மதங்கள் பல கலாசார, ஐதீக, வேற்று நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்புக் கொண்டதாகவே உள்ளன. உ.ம். அரசையே துறந்த புத்தரின் பௌத்தம் அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் ஆக்கிரமிப்பெற்றது விரிவுபடுத்தப்பட்டது.
மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை என்று மார்கழிக்குளிரை பெண்ணுக்கு வர்ணித்தான் கவிஞன். ஆனால் பொதுவாக மார்கழி பீடைமாதம் என்கிறது இந்துமத சாத்திரமுறைகளும், நோடன்மித்துக்களும், ஐரோப்பிய வாழ்க்கை அனுபவமும். இதற்கு வாழ்வியலுடன் தொடர்புள்ள காலநிலையே காரணமாகிறது. ஐரோப்பிய, வடதுருவநாடுகளின் அதன் மித்துக்கதைகள் மார்கழியை நோய்கள், சாக்கள், நிறைந்த துர்மாதமாகவே காண்கிறன. சாதாரணமாக ஐரோப்பாவில் இம்மாதம் இருள், குளிர், நோய்கள், சலிப்பு, பிடிப்பின்மை, தற்கொலைகள் நிறைந்தமாதமாகவே இன்றும் இருந்து வருகிறது. அத்துடன் சூரியனைக்காணாத துருவநாடுகளில் சோர்வும் அசதித்தன்மையும் விருப்பற்ற, வெறுப்புடைய நாட்களாகக் கழிவதையே காணமுடிகிறது.
அமுத மொழி அன்றோ ! - எம்.ஜெயராமசர்மா
.
காலையிலே எழுந்தவுடன்
கண்ணெதிரே கண்டேன்
கவலை இன்றிப் பூத்திருக்கும்
கட்டழகு ரோஜா
வேலைசெய்ய விருப்பமின்றி
சோம்பலிலே கிடந்தேன்
விருட்டென்று கேட்டதுமே
வெலவெலத்துப் போனேன்
யாருக்காய் பூக்கின்றோம்
என்று தெரியாது
பூக்கின்றோம் பூக்கின்றோம்
பூத்தபடி நிற்போம்
பூப்பதிலே சோம்பலின்றி
பூத்தபடி இருப்போம்
பூப்பார்த்த வுடனேயே
பூரிப்பைக் கொடுப்போம்
தோழர் சி. புலேந்திரன் காலமானார்..!
தீண்டாமை
ஒழிப்பு வெகுஜன இயக்க இணைச்செயலாளராகப்
பணியாற்றிய தோழர்
சி. புலேந்திரன் காலமானார்..!
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்
(சண் பாதை) ஆதரவாளராகவும்
''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன
இயக்கத்தின்"
இணைச்செயலாளராகவும் பணியாற்றிய
தோழர் சி. புலேந்திரன்
வியாழக்கிழமை (01 -
01 - 2015) காலமானார் என்பதை
மனவருத்தத்துடன் அறியத்
தருகிறோம்.
யாழ்.
கன்பொல்லையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் சின்னத்துரை
புலேந்திரன் 01 - 01 - 2015 வியாழக்கிழமை காலமானார்.
தோழர்
புலேந்திரன் நீண்ட காலமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்
(சண்
பாதை) ஆதரவாளராகவும் ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன
இயக்கத்தின்"
செயல்வீரனாகவும் செயற்பட்டவர்.
காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -
.
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே
சிறந்த காதல் வாழ்க்கைக்கு முன்னுதாரணம்
------------------------------ ------------------------------ ---------------
- காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -
- காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -
வந்தவாசி.டிசம்.28. அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனரீதியாகவும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னுதாரணமான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.
இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய ' சிவ சிவக்கும் பிரியங்கள் ' காதல் கவிதை நூலை வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடெசன் வெளியிட, வந்தவாசி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கவிஞர் அ.ஜ.இஷாக் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை நல்நூலகர் கு.இரா.பழனி, லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் சினிமா
கயல்

மைனா, கும்கி என்று மலை சார்ந்த படங்களை அழகிய காதலுடன் கோர்த்து
கொடுத்த பிரபு சாலமன் அடுத்து இயக்கியிருக்கும் படம் தான் இந்த கயல். பிரபு
சாலமன் தான் வைக்கும் தலைப்பிலேயே படத்திற்கான கருவை விதைத்து விடுவார்.
அந்த
வகையில் இதில் கயல் தான் கதை, கயலால் தான் திரைக்கதை என்று கூட சொல்லலாம்.
இப்படத்திலும் தன் வழக்கமான கண்ணை கவரும் லொக்கேஷனில் தனக்கே உரிய காதல்
என மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் பிரபு சாலமன்.
கதை விவாதம்
கதாநாயகன்
தமிழ் சினிமாவில் எப்போதும் வரும் நாயகர்கள் போலவே சாதிக்க வேண்டும் என்று
ஒரு குறிக்கோளும் இல்லை. ஆனால், பல ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்று
மட்டும் ஒரு ஆசை அவருக்கு. அதற்கு என்ன வேணும், பணம் தான் வேணும் என்று
தெரிந்த பின் சிறு சிறு வேலைகளாக செய்து பணத்தை சம்பாதிக்கிறார்.
இதை
தொடர்ந்து செல்லும் வழியில் ஊரை விட்டு ஓடி வரும் காதல் ஜோடியை சேர்த்து
வைக்கிறார். இதனால் பெரிய பிரச்சனையில் ஹீரோ மாட்டி கொள்கிறார். இவரிடம்
இருந்து உண்மையை அடித்து வர வைக்க முடியாது என்று அறிந்த அந்த கும்பல் கயலை
அனுப்புகிறது. பார்த்தவுடன் பற்றி கொள்கிறது காதல் தீ.
சில காலம்
கழித்து ஓடிச்சென்ற பெண் திரும்பி வர பிடித்து வைத்திருந்த ஹீரோவை
விடுகிறார்கள். ஹீரோ கன்னியாகுமரி போக, பிறகு அவனை தேடி வரும் கயல், யாரும்
எதிர்ப்பாராத வகையில் பிரம்மிக்க வைக்கும் சுனாமி வர, இதற்கு பின் இவர்கள்
இணைந்தார்களா? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் பிரபு சாலமன்.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
ஹீரோ
கதையின் உயிரோட்டத்தில் அழகாக பயணிக்கிறார். அவர் கூடவே வரும்
கதாபாத்திரம் சிரிப்பிற்கு கேரண்டி. இவர்களை எல்லாம் விட மொத்த படத்தையும்
தன் கண்ணீலேயே தாங்கி செல்கிறார் கயலாக வாழும் ஆனந்தி.
பிரபு சாலமன் படத்தில் எந்த நடிகையை குறை சொல்ல, அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்
படத்தின் மொத்த பலத்தையும் தாங்கி நிற்பது டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும் தான். ஒளிப்பதிவு கண்களுக்கு செம்ம விருந்து.
கயலாக வரும் ஆனந்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம். அத்தனை அழகான கண் அசைவால் ஸ்கோர் செய்கிறார்.
சுனாமி
காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், கும்கி கிளைமேக்ஸில் சொதப்பிய பிரபு சாலமன்
இதில் கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அதிக பாடல்கள் கொஞ்சம் சோதிக்கிறது. மற்றபடி ஏதும் இல்லை.
மொத்தத்தில் இந்த கயல் அனைவரையும் கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறாள்.
நன்றி cineulagam




Subscribe to:
Posts (Atom)