புரிதலை தெரிந்துகொண்டபோது -செ.பாஸ்கரன்


.
காலங்கள் கடந்தபின்னும்
காட்சிகள் தொடர்கின்றது
பின்னோக்கிய சக்கரத்தின்
பாச்சல்கள் முன்னோக்கி நகர்கின்றது

வீட்டிற்கு உதவாதவன் என்ற
அம்மாவின் புலம்பல்கள்
உன்னை எதுவும் செய்துவிடவில்லை
நாட்டை நேசிப்பவன் என்ற
செருக்கு மட்டும்
உன்னோடு ஒட்டிக்கொள்ள
நீ நடந்தாய்

உன்னைப்பார்த்து மகிழ்தவர்களை விட
பயந்தவர்கள்தான் அதிகம்
வீட்டைக் கவனிக்காததுகள்
நாட்டை காப்பாத்த போகுதுகளாம்
அப்பாவின் புலம்பலில்
ஆயிரம் அர்தங்கள் இருந்தது

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள்

.

.
தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27 - 11 - 2011 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

சைவமன்றம் வழங்கும் கலைக்கோலம் 2011 -


எச்சம் -சிறுகதை - எம்.ரிஷான் ஷெரீப்


[ages.jpg]

.
"அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை ,எளியதுகளுக்குக் கொடுத்துடலாம் ".

வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.

குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.

பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம் தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.

உலகச் செய்திகள்

* ஜக்சனின் வைத்தியர் முரேவிற்கு 4 ஆண்டுகள் சிறை

* கொதித்தெழுந்த ஈரானியர்கள்: தடுமாறிய பிரித்தானியா (பட இணைப்பு)

ஜக்சனின் வைத்தியர் முரேவிற்கு 4 ஆண்டுகள் சிறை


30/11/2011

பாடகர் மைக்கல் ஜக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவருக்கு 4 சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் உலகத்தையே உலுக்கியது. ஜக்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது குடும்ப வைத்தியர் முர்ரே மீது சந்தேகம் இருப்பதாகவும் ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.

பாலை திரைப்படம் வெளியீடு! -சத்தியன்

.

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் பாலை திரைப்படம் வெளியீடு!


இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.



























































சிலேடை வார்த்தை - கலை


.
சில சிலேடை வார்த்தைகளை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்துத் தாத்தா, பேத்திக்குச் சொல்லிக் கொடுத்தது. ஒரே வசனத்தை வேவ்வேறு பொருளில் கூறுவது.

1. யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்று வைக்க வேண்டிய பதாகையில் "யாழ்ப்பாணம் வர வேற்கிறது" என்று எழுதி விட்டார்களாம். அதனை வாசித்தவர், "யாழ்ப்பாணம் வர, வேர்க்கும்தான்" என்றாராம்.

2. ஆசிரியர் "சீனி தின்றால் இனிக்கும்" என்று எழுதினாராம். உடனே மாணவன் "அதெப்படி, சீனி தின்ன, றால் இனிக்கும்?" என்று பகிடி விட்டானாம். காரணம், அவன் அர்த்தம் கொண்டது, "சீனி தின், றால் இனிக்கும்".

3. ஒரு கடையில் "இன்றுமுதல் தோசைக்கு சம்பல் இல்லை" என்று எழுதி வைத்திருந்தார்களாம். ஒருவர் வந்து சாப்பிடத் தொடங்கிவிட்டு, கொஞ்ச நேரத்தில் "சம்பல் கொண்டு வாங்கோ" என்றாராம். அதற்கு கடைக்காரர், "அதானே எழுதிப் போட்டிருக்கு. தெரியேல்லையோ?" என்றாராம். அதற்கு சாப்பிட வந்தவர், "இது இரண்டாவது தோசை எண்டதாலதான் கேக்கிறன். கொண்டு வாங்கோ" என்றாராம். அவர் வாசித்தது (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டது), " இன்று, முதல் தோசைக்குச் சம்பல் இல்லை" என்பதாகும்.

இலங்கைச் செய்திகள்


* வடக்கில் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி

* ஜே.வி.பி.தலைவரின் கவனத்துக்கு

* அநுராதபுரம் சிறையில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டமை குறித்து உடனடி விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் பாராளுமன்றத்தில் ஜயலத் ஜயவர்த்தன வலியுறுத்தல்


* இலங்கையில் மிகப் பெரிய முருகனுக்கு கும்பாபிஷேகம் (பட இணைப்பு)

* அரசியல் தீர்வை முன்வைக்க இதுவே பொருத்தமான தருணம் தமிழ்க் கூட்டமைப்புடனான சந்திப்பில் கூறினார் அகாசி

* பிரதியமைச்சரும் தண்ணீர்ப் போத்தலும்

ஒரு உள்வீட்டுச் சங்கதி -


.

இதோ  நுப்பத்திரண்டு ஆண்டுகளின் முன்னே வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த நாலு கவிதைகள். நாலு கவிதைகளும் நாலு வெவ்வேறு கவிஞர்களால் எழுதப் பட்டவை. இரண்டு மாச கால இடைவெளியில் தொடர்கதை போல வெளிவந்தவை. வாசித்து மகிழுங்கள்.



புதிய காரோடு வருவேன்>பொறுத்திருங்கள்!

ஆக்கம்:செ. குணரத்தினம்
வீரகேசரி 09.09.79




மதிப்புள்ள எனதருமை
மாமாவே!
         தங்களது
இனிப்பான கடிதம் கண்டேன்..
என்றாலும் எந்தனற்கு
இனிமேலும் முத்திரைகள்
ஒட்டாமல் அஞ்சல் ஒன்றும் 
அனுப்பாதீர்! அனுப்பிவைத்தால்
அதைஎடுக்க முடியாது.


புனிதாவின் வயதுகூடிப்
போகுதென்றும், அவளுக்கென்மேல்
பிரியமென்றும், பேத்தியொன்றைப் 
பார்க்க மாமி  ஆசைகொண்டு  
உருகுகின்றாள் என்றும் சொன்னீர்!
இவர்களது ஆசைகளை
நிறைவேற்றி வைப்பேன்! இன்னும் 
நாலாண்டு பொறுத்திருங்கள். 

தமிழ் சினிமா


வித்தகன்
அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் அச்சத்தை உண்டாக்கும் அரிவாள் அரக்கர்களை பற்றின கதை தான் வித்தகன் இது பார்த்திபனின் 50 படமாகும்.

ரௌத்திரன் ஒரு ஸ்ட்ரெயிட் பார்வட் பொலிஸ் ஆபீசர் மட்டுமல்ல, கிரிமினலும்கூட. புத்திசாலித்தனமாய் எதிரிகளை துவம்சம் செய்யக் கூடியவன். அவனுக்கு பயம் என்பது, பாசம் என்பதும் கிடையாது.

அவன் ஒரு அனாதை அதனால் தான் எதுவும் செய்ய முடியவில்லை என்று டி.சி சொல்கிறார். இப்படிப்பட்ட ஹீரோவால் பாதிக்கப்பட்ட வில்லன்களுக்கு பதில் சொல்ல முடியாமல் டி.சி விழித்துக் கொண்டிருக்கும் போது ரௌத்திரனே வாய் ஸ்லிப்பாகி தன் அப்பா என்று சொல்லிவிட, அவரை பற்றி விசாரித்து அவரை வேலையை விட்டு தூக்குகிறார்.

ரௌத்திரன் ஏன் அப்படி பொய் சொன்னான் என்பதற்கு ஒரு ப்ளாஷ் கட் ப்ளாஷ்பேக்கில் சுருக்கமாய் சொல்லியிருக்கிறார்கள். ரௌத்திரனுக்கு பொலிஸ் வேலை போகிறது. ஜெயிலில் இருந்த வந்தவர் டான் ஆகிறார். ஆனாலும் பொலிஸ் வேலை பார்க்கிறார்.

அப்பாவுக்கு தெரியாமலே ஹீரோ பொலிஸ் வேலைக்கு படிச்சு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆகி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறார். தன் தங்கையை கொலை செஞ்ச வில்லன் இப்போ தாய்லாந்து நாட்டுல படம் லோ பட்ஜெட் என்பதால் ஹீரோ தாய்லாந்து போக முடியல தன்னோட சாணக்கியத்தனத்தால வில்லனை இங்கே வரவழைக்கறார். சாதாரண எக்ஸிக்கியூட்டிவ் முடிக்க வேண்டிய வேலையை கம்பெனி பாஸே செஞ்சா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு அந்த வில்லன் தமிழ் நாடு வர்றது.

சரி.. ஹீரோ ஆடும் ஆடுபுலி ஆட்டத்துல ஹீரோயினுக்கு என்ன வேலை? அவரை எப்படி கதைக்குள்ள கொண்டு வர்றது? ரொம்ப ஈசி.. ஹீரோ செய்யற ஒரு கொலையை அவர் நேர்ல பார்த்துடறார்.. என்ன ஏது? எதுக்காக அவர் கொலை செஞ்சார்ங்கற ஃபிளாஷ்பேக் எல்லாம் அவர் தெரிஞ்சுக்காததுக்கு முன்னேயே அவர் ஒரு பொலிஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சதும் லவ்வ ஆரம்பமாகின்றது

இடைவேளை ட்விஸ்ட் வேணுமே, அதுக்காக ஹீரோ பொலிஸ்ல மாட்டிக்கிறார்.. இடைவேளைக்குப்பிறகுதான் டர்னிங்க் பாயிண்ட்.. தண்டனை முடிஞ்சு ஹீரோ வெளில வந்து தாதா முன்னேற்றக்கழகம்னு எதும் ஆரம்பிக்காமலே தாதா ஆகிடறார்.. இப்போ ஊர்ல 3 தாதா.. ஒண்ணு ஹீரோ தாதா.. 2 வில்லன் தாதா.. 3 சைடு வில்லன் தாதா.. 2வது வில்லன் தாதா ஹீரோ கிட்டே கெஞ்சறாரு.. நீங்க 3வது வில்லனை போட்டுடுங்க...அப்போ நான் முதல் இடத்துக்குப்போயிடுவேன்.... நீங்க 2வது இடத்துக்கு வந்துடலாம்னு. ஹீரோ தன்னோட அதி புத்திசாலித்தனத்தால என்ன செய்யறார்.. எப்படி ஜெயிக்கறார்? பழி வாங்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி திரைக்கதை.

ரௌத்திரனாக வருகிறார் பார்த்திபன் சும்மா சொல்லக்கூடாது மிடுக்கான அசிஸ்டெண்ட் கமிஷனர் ரோல்லயும் சரி.. தெனாவெட்டான தாதா ரோல்லயும் சரி, சும்மா அசால்ட்டாக நடித்திருக்கிறார் பார்த்திபன்.. படம் முழுக்க அவரது எள்ளல்கள், நக்கல்கள், நையாண்டிகள் கொட்டிக்கிடக்கு.. ரசிக்கலாம்.. சில இடங்களில் மட்டும் ஓவர்.. வித்தியாசமாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய இடங்களில் வித்தியாசமே இல்லாமல் படம் எடுத்திருப்பது வேதனை. மேக்கப்பை பார்க்கும்போது விட்டால் பவர் ஸ்டாரை வீழ்த்திவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. திரைக்கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர் என எல்லா மட்டத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கும் பார்த்திபன், படத்தின் முடிவில் வில்லன் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி, தனது ஆட்களையே போட்டுத் தள்ளுவது கொஞ்சமல்ல நிறையவே மிகை! அடியோடு தவிர்த்திருக்க வேண்டிய சித்தரிப்பு.

பூர்ணா முந்தய படங்களில் டல்லா இருந்தவர் இந்த படத்தில் நல்லா இருக்கிறார். அம்மணிக்கு மாடர்ன் டிரஸ் கொஞ்சம்கூட சூட் ஆகலை. ஆனா சேலை, சுடிதாரில் பூரண அழகு. ஸ்விம்மிங் தெரியாது ஆனால் அதற்கு ஸ்பெல்லிங் மட்டும் தெரியும் என்று ஒரு காட்சியில் வசனம் பேசுகிறார். அதேமாதிரி ஆக்டிங் என்ற வார்த்தைக்கும் ஸ்பெல்லிங் மட்டும்தான் தெரியும் போல. இரண்டாம் பாதியில் சம்பந்தமே இல்லாமல் இரண்டொரு முறை தலைகாட்டி எரிச்சலூட்டுகிறார். கடைசியில் உயிர் தியாகம் செய்து அனுதாப ஓட்டுக்களை அள்ளிச்செல்கிறார்.

ஹீரோ ஹீரோயின் தவிர்த்து படத்தில் ஒரு பாத்திரக்கடையே இருக்கிறது. யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் சாதிக்கவில்லை (அ) சாதிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ம்ம்ம் அந்த பில்லு கட்ட மல்லு கட்டும் காமெடியில் வரும் பெரியவரை மட்டும் குறிப்பிடலாம். பார்ப்பதற்கும் வசன உச்சரிப்பிலும் 'என்னத்த' கண்ணையா சாயல். ஆனால் இவர் அவரல்ல. திரைக்கதையில் ஆங்காங்கே சில திரைக்கவிதைகள். அமைச்சரை கைது செய்ய வரும்போது பெருச்சாளி ஒன்று பம்முவது போல காட்டுவது, பூர்ணா சேலை டிசைனில் இருக்கும் பூக்கள் நிஜப்பூக்களாக மலர்வது, குறிப்பாக இடைவேளை போடும்போது காட்டும் கேப்பு - ஆப்பு மேட்டர் போன்றவைகளை உதாரணமாக குறிப்பிடலாம்.

நன்றி விடுப்பு