தோசை - கவிதை - சௌவி, ஓவியம் ஸ்யாம்

.

ன்னபூர்ணாவில் மசால் தோசை
ஆரிய பவனில் வீட்டு தோசை
சரவண பவனில் ஆனியன் தோசை
வசந்த பவனில் பொடி தோசை
கௌரிகிருஷ்ணாவில் நெய் தோசை
அஞ்சப்பரில் சிக்கன் தோசை
ஹரி பவனில் காடை தோசை
ஆனந்த பவனில் பூண்டு தோசை
முருகன் இட்லிக் கடையில் காளான் தோசை
முனியாண்டி விலாஸில் முட்டை தோசை
ஆச்சி மெஸ்ஸில் பேப்பர் தோசை
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை தோசை
தள்ளுவண்டிக் கடையில் தட்டு தோசை
இவை எதுவும்
சின்னப் பலகையின் மேலமர்ந்து
புகை சூழ விறகு தள்ளிவிட்டுக்கொண்டே
அப்பாவின் கிழிந்த வேட்டியின் சிறுதுண்டை
காய்ந்த மரக்குச்சியில் கட்டி
கண்ணாடி பாட்டிலுக்குள் கீழிருக்கும்
எண்ணெயைத் தொட்டுப் பூசி
ஓரங்கள் கருக நீ வார்த்துத் தந்த
தோசைபோல ருசியில்லை அம்மா.

விடுதலைப் போரட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் முக்கிய பற்றாளனாக திகழ்ந்தவர் டேவிட் ஜயா





டேவிட் ஐயா (11.10.2015) கிளிநொச்சியில் காலமானார்!
S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு 
கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE.
1953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார்.

மூடிய கண்களில் இருண்ட உலகம் - உருவகக்கதை -முருகபூபதி

.                                                                      

தனது  கண்களை  மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுகிறது என நம்பிக்கொண்டிருக்கிறது அந்தப்பூனை. சூரியவெளிச்சம் படர்ந்திருக்கும்போதும்  அது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என நம்பியது.
பூனை கண்களை  மூடிக்கொள்ளும் வேளைகளில்  எலிகள் தம்பாட்டுக்கு  சுதந்திரமாக  நடமாடும்.  தமக்குத்தேவையானதை தேடிக்கொண்டு  பொந்துகளுக்குள்  பதுங்கிவிடும்.
அந்தப்பொந்துகளின்  வாயிலில்  அமர்ந்துகொண்டு , காத்திருக்கும் பூனை எப்போது எலிகள் வெளியே வரும் என்று விழித்திருக்கும்.
இக்காத்திருப்பும் விழித்திருப்பும்  அதற்குக்கொடுமையானது. வலிதருவது.  பொறுமையை சோதிப்பது. வெளியே பொந்தின் வாயிலில் பூனை இரைக்காக காத்திருக்கும் என்பதை தெரிந்துகொண்ட எலிகள், முதலில் ஒரு சுண்டெலியை  வாயிலுக்கு அனுப்பிப்பார்க்கும்.


சுண்டெலி  மெதுவாக  வாயிலருகில்  வந்து  பார்த்து, பூனை உறங்கினால்  உள்ளிருக்கும்  உறவுகளுக்கு சமிக்ஞை தரும்.
அதன் பின்னர் எலிகள் ஒவ்வொன்றாக வெளியேறி  திசை பல சென்று தத்தமக்குரிய  உணவுகளை தேடிக்கொண்டு வரும்.
பூனை காத்திருந்து காத்திருந்து, பின்னர் மதில் மேல் ஏறி, தரையில் எலிகளின்  நடமாட்டத்தை  அவதானிக்கும்.

விடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை?

.
விடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை?


ஓரு துளி நீர் கடலைச் சேர்ந்தவுடன் தனது அடையாளத்தை இழப்பது போல அல்லாமல், மனிதன் தான் வாழும் சமுதாயத்தில் தனது இயல்பை இழந்துவிடுவதில்லை. மனிதனின் வாழ்க்கை சுயேச்சையானது. அவன் பிறப்பெடுப்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, தனது சொந்த வளர்ச்சிக்காகவும்தான்.
டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அன்றே சொன்ன இந்த வரிகளை இன்றைய இந்தியாவில் விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் மற்றவர்களைச் சார்ந்துதான் வாழ்கிறோம் என்றாலும், யாரும் அவரவரின் தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடுவதில்லை. அந்தத் தனி அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுகிறவர்களாகப் பலர் இருக்கிறார்கள். தனி மனிதர்களே தங்களது சொந்த அடையாளங்களை இழப்பதில்லை என்றால், சமுதாயத்தின் அங்கங்களாக உள்ள ஒவ்வொரு சமூகமும் கூட தனது அடையாளத்தை இழந்துவிடுவதில்லை. தனி மனிதர்கள் பிறந்திருப்பது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் தங்களது சொந்த முன்னேற்றத்திற்காகவும்தான் என்றால், ஒவ்வொரு சமூகமும் கூடப் பாடுபடுவது தனது சொந்த முன்னேற்றத்திற்காகவும்தான்.
இந்தியா தனது 70வது சுதந்திர நாளைப் பெருமையோடு கொண்டாடுகிற இத்தருணத்தில், சமூகங்களின் இந்த சுய அடையாளங்கள் பற்றி எந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது? இந்திய தேசத்தின் அங்கங்களாக இருப்பவை இங்குள்ள அத்தனை சமூகங்களும்தான். மிக முன்னேறிய, எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கிற சமூகங்கள் மட்டுமல்ல, நாகரிகத்தின் வாடையே படாதவர்களாகத் தீவுகளிலும் காடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற பூர்வகுடி சமூகங்களும் தேசத்தின் உயிர்த்துடிப்பான அங்கங்களேயாவர். இனம், மொழி, மதம், சாதி என பன்முகத் தன்மைகளோடு கூடிய அந்தச் சமூக அடையாளங்களை அங்கீகரிப்பதே ஆரோக்கியமான தேசியம். சம உரிமையும் சம வாய்ப்பும் சம நீதியும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்ற உறுதிப்பாடும் நம்பிக்கையும் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்படுவதிலிருந்தே உண்மையான, முழுமையான தேசப்பற்று முகிழ்க்கும்.

உலகச் செய்திகள்


ஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்

முதல்வரானார் பன்னீர் செல்வம்

2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

டொனால்ட் டிரம்ப் பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்தார் ; 5 பெண்கள் குற்றச்சாட்டு

சுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா 

அவுஸ்ரேலிய இராணுவத்தில் மேஜரான  தமிழன்




ஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்

11/10/2016 பெண்களை பாலியல் ரீதியில்  பற்றுவது மற்றும் முத்தமிடுவது  தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  பில் கிளின்டன் ஆகியோர் மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுகளை  வாரி இறைத்துள்ளார்.

கம்பன் விழாவில் 'கலை தெரி அரங்கம்' - ஒக் 23ம் திகதி மாலை 4:30மணி.



அன்பர்களுக்கு வணக்கம்,
அவுஸ்திரேலிய ரீதியில் தரமான இசைக்கலைஞர்களை
உற்ற நண்பர்களாக - கம்பன் குடும்பத்தவராகக் கொண்டமைந்தது அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் என்பது,
எமக்குக் கிடைத்த பாக்கியம்.

2010இல் கருப்பெற்ற இவ்விசை நிகழ்வை,
நன்றே மெருகேற்றி திறன்மிகு கலைஞர்களை
சிட்னி-கன்பரா - மெல்பேர்ண் நகர்களிலிருந்து இணைத்து,
பத்தாவது ஆண்டு விழாவில் 
உங்களுக்காகப் படைக்கின்றோம் திரளென வாரீர்!
உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

நிகழ்காலம்: ஞாயிறு, ஒக் 23ம் திகதி - மாலை 4:30மணி.
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.
அனுமதி இலவசம்

கம்பன் விழாவிற்கான அன்பு அழைப்பு - ஒக் 21, 22 23.


உலகம் உவக்கும் முத்தமிழ்க் கம்பன்
அக்கவிப் புலவனால்,
நம் தமிழினம் உலகில் தலை நிமிர்கின்றது.
கம்பனுடைய கவிதையினால்
உலகம் முழுவதையும் தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டிற்று.
கம்பகாவியம் ஒர் அற்புத அமுதபாத்திரம்.
அறத்தினை அள்ளி அள்ளி எடுக்கக் குன்றாது,
பல நூற்றாண்டுகளாய் அது கொட்டித்தருகின்றது.
இக்கவிஞரின் விரிந்த ஆழமான உண்மையான சிந்தனை,
தமிழர்களின் பெருமையை உலக அரங்கில்,
இன்றுவரை நிலைநிறுத்தி நிற்கிறது. 
கம்பன் காட்டிய வழியிலேயே,
தமிழினம் இன்றுவரை தலைநிமிர்ந்து நடக்கிறது.
அப் பெரும் புகழோன்தன்னைப் போற்றிப் பாராட்டுதல் நம் தலைக்கடன்.
நம் அடுத்த தலைமுறையினருக்கு, பொருட் சொத்தைக் கொடுப்பதைவிட, கம்பனது அருட்சொத்தைக் கொடுப்பதே நம் தலையாய கடமை. 
அக்கடமையை இயற்ற, தாய்நாட்டைக் கடந்த பின்பும்,
தமிழர்களான நாம் முயலவேண்டும்.


How a Sri Lankan Refugee Became an Australian Army Major

.

How a Sri Lankan Refugee Became an Australian Army Major – Six Life Lessons in Self Leadership



19 years ago we both landed on Australian soil to call this land home. Both from single parent households, both from developing countries with a history of racial tensions and violence and both of us looking to find our place in multicultural Australia. We had alot in common as we sat next to each other in our Homebush Boys, Year 10 ESL class!
Lavan is not one who usually talks about his journey. However his journey has taught me many lessons and I believe it’s important to share it.  At a time when many question the value of letting refugees into a country, when racial tensions everywhere are high and when people give up hope on their dreams and following their passions because of a fast changing world and an uncertain future– the lessons i’ve learned from Lavan, and now Major Tharmarajah stick with me because of its simplicity and his walking the talk on his life philosophy.

பேராசிரியர் மௌன குருவின் சார்வாகன் குறுநாவல்

.


































காஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …பாரதி சுப்பிரமணியம்

.



(படம்: காஷ்மிர் நவ்ரோஸ் திருவிழாவின் அடிப்படை நம்பிக்கையோடு தொடர்புடைய பழங்கதையின் அடிப்படையிலான எருதும், சிங்கமும் சிற்பம் (இரானில் அமைந்தது)
சோமுவை, ஹரி கட்டையால அடிசுட்டாராமா, தெரியுமா உங்களுக்குஎன்றார் செந்தில், டீ கடையில்.
தெரியவில்லையேஎன்றார் சுப்பு.
கையே முறிஞ்சு போச்சாம், ஹாஸ்பிட்டல்ல இருக்காராம், ஹரியோட பக்கத்து வீட்டுக்காரர் தான் சொன்னார்என்றார். ஆயிரம் தான் இருந்தாலும், கையை முறிக்கிற மாதிரி அடிக்கலாமா. தப்பில்லையா?” என்றார்.
நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, ஹரி செய்தது தவறு தான்என்றார் சுப்பு.
அதுவரை அமைதியாக டீ குடித்துக்கொண்டிருந்த லெனின், “மொதல்ல, உங்களுக்கு என்ன நடந்ததுன்னு முழுசா தெரியுமா. சோமு, ஃப்யூஸ் மாட்டிட்டு இருந்தப்ப ஷாக் அடிச்சுருச்சு. அதை பார்த்த ஹரி அருகிலிருந்த கட்டைய எடுத்து அடிச்சிருக்கார். பதட்டத்துல கொஞ்சம் பலமா அடிச்சதால, கை முறிஞ்சுருச்சு. ஹரி மட்டும் கட்டைல அடிக்காம இருந்திருந்தா இந்நேரம் பெரிய விபரீதம் நடந்திருக்கும்என்றார்.

விக்னேஸ்வரன் போட்ட குண்டு

.


தனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு டொனமூர் தொடக்கம் உத்தேச சிறிசேன யாப்பு வரை என்ற நூலின் அறிமுக விழாவுக்கு அனுப்பியிருந்த சிறப்புரையில் தான் இந்த விடயத்தை அவர் கூறியிருக்கிறார்.
எழுக தமிழ் நிகழ்வுக்குப் பின்னர் அதன் விளைவாக தென்னிலங்கையில் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிரமான பிரசாரப் போர் ஆரம்பித்த பின்னர் அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அவர் அதிகம் கருத்து வெளியிட்ட முதல் நிகழ்வாக அது அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் அவர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. பல்வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகளைக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே மேடையில் அமர வைத்த அந்த நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்கு விக்னேஸ்வரனும் இணங்கியிருந்தார். ஆனால் கடைசியில் அவர் தனது உரையை மாத்திரமே அனுப்பியிருந்தார்.
அந்த உரை நிகழ்வின் தலைவராக இருந்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தால் வாசிக்கப்பட்டிருந்தது. இந்த உரையில் தான் தனது உயிருக்கு உலை வைக்கும் திட்டங்கள் தெற்கில் தீட்டப்படுவதாக தாம் அறிய முடிந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் இந்தக் கருத்தை அதற்கு முன்னரோ, பின்னரோ தனது வாயினால் ஒருபோதும் கூறவில்லை. எனினும் எழுத்து மூல உரை அவரது வாய்மொழி உரையை விட வலிமையானது என்பதால் அவர் இந்தக் கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் படைப்பிலக்கியத் தேடல்


'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் 
வன்மையு ளெல்லாந் தலை.

இலங்கைச் செய்திகள்


பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நிகழ்ச்­சி­களை நடத்­துவோம்

நாடு திரும்பினார் ஜனாதிபதி

 'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : யாழ்ப்பாணத்தில் போராட்டம்.!

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த

விளம்பர படத்தில் காணாமல் போன மகள் : நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது : தாய் கதறல்

1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய பெண் ; பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படும்.!

பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி..!

பிரதமர் பெல்ஜியம் நோக்கி பயணமானார்

SVT Deepawali Celebrations & Fund Raiser Event 2016 - 29/10/2016





மூலிகை பெட்ரோல் விவகாரம் : ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை

.


சுமார் ரூ.2.27 கோடிக்கு மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது எழும்பூர் நீதிமன்றம். ராமர்பிள்ளை உட்பட 5 பேருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 1999-2000-ம் வருடம் பெட்ரோலில் மூலிகை பொருட்களை கலப்படம் செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களுக்கு 30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

nantri vikatan.com

தமிழ் சினிமா


REKKA

விஜய் சேதுபதி - லட்சுமி மேனன் நடித்துள்ள 'றெக்க'


Rekka First Look Posters
நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி எடுத்த மாஸ் களம் தான் இந்த றெக்க. கில்லி விஜய் ஸ்டைலில் ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் ஹிட் அடிக்க, ரத்னம் சிவா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் லட்சுமி மேனன், ஹிட் பாடல்களை கொடுக்கும் டி.இமான் என பல ப்ளஸ் பாயிண்டுகள் படத்தில் இருக்க விஜய் சேதுபதி உயர பறந்தாரா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்


தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அதே அதிரடி கதைக்களம் தான் இந்த றெக்க, படத்தின் ஆரம்பத்திலேயே வில்லன்களான ஹரிஷ் உத்தமனிற்கும், கபீர் சிங்கும் இடையே ஒரு பகையோடு கதை தொடங்குகின்றது.
ஷாஜஹான் படத்தில் வரும் விஜய்யை போல் தன்னிடம் பிரச்சனை என்று வரும் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி வருகிறார், அதற்கேற்றார் போல் வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன் கல்யாணம் செய்ய வேண்டிய பெண்ணை கடத்திவர இவருக்கும் ஹரிஷ் உத்தமனிற்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது, ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமனிடம் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்ள அதிலிருந்து, மீள முடியாமல் அவர் செய்ய சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கின்றார்.
பின்பு அவர் சொன்ன வேலையை விஜய் சேதுபதி செய்து முடித்தாரா ,எதற்காக அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார். லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது, ஹரிஷ் உத்தமன் எதற்காக விஜய் சேதுபதியிடம் அந்த வேலையை கொடுத்தார் என்பதுதான் மீதிக் கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி நம்ம பக்கத்து வீட்டு பையனாகவே நடித்து சலித்து போய் இந்த ஆக்ஷன் கதையை கையில் எடுத்திருக்கிறார் போல படம் முழுவதும் சண்டை காட்சிகள் தாக்கமே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக லட்சுமி மேனன் வீட்டிற்கு சென்று அவரை தூக்கி கொண்டு வரும் காட்சிகளும் சற்று சினிமா தனமாக இருக்கிறதே என்று யோசிக்க வைத்தாலும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.
லட்சுமி மேனன் வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் வில்லனிருக்கும் ஹீரோவிற்கும் பிரச்னையை உண்டாக்கும் கதாபாத்திரமாகத்தான் வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் ஜெனிலியாவை போல வெகுளித்தனமாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் கே.எஸ். ரவிக்குமார், காமெடியன் சதிஷ், வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், கிஷோரை நாம் இதுவரை ஒரு மாஸான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த கிஷோர் இந்த படத்தில் ஒரு அப்பாவியாகவே ரசிக்கும் படி நடித்திருக்கிறார்.
இயக்குனர் ரத்தின சிவாவின் இரண்டாவது படம் இது, ஆனால் இதுதான் முதலில் ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமான விஜய் சேதுபதியை இந்த படத்தில் சற்று வேறுப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குனர் ரத்தின சிவா
இமானின் இசையமமைப்பு பாடல்கள் அந்த அளவுக்கு சொல்லும் படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சண்டை கட்சிகளின் பின்னணி இசையை நன்றாக செய்துள்ளார், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் பிரவின். கே. எல் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.
விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பும், சண்டை காட்சிகளில் வரும் பன்ச் டயலாக்குகளும் கை தட்டல்களை அள்ளுகிறது.

க்ளாப்ஸ்

சண்டை காட்சிகளில் வரும் இமானின் பின்னணி இசை

பல்ப்ஸ்

லாஜிக் அத்துமீறல், தெலுங்கு படங்களை மிஞ்சும் அளவிற்கு சண்டை காட்சிகள், இரண்டாம் பத்தி சற்று பொறுமையாக தொடங்குவது, லட்சுமி மேனனின் மேக்கப்
மொத்தத்தில் இந்த றெக்க வழக்கமாக பார்த்து கொண்டிருந்த விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு சற்று வேறுபடியாக ரசிக்க வைக்கும்.
Music:

நன்றி cineulagam