இன்று மனித உரிமைகள் நாள் 10 டிசெம்பர் காஸாவிற்கு விதிவிலக்கு - செ .பாஸ்கரன்





As Israel's military assaults southern Gaza above ground in pursuit of Hamas leaders, it is also considering a plan to disable the militant group's vast labyrinth of underground tunnels by flooding them with seawater, two U.S. officials told NBC News.
                                                                                                                                                                                                                                                                                                                                          
இன்று மனித உரிமைகள் நாள், டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி இந்த மனித உரிமை நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த மனித உரிமைகள் நாள் ஏன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வாழ்வதற்கான உரிமை இந்த உலகத்திலே இன்றியமையாததாக இருக்கின்றது. இதுவே சரியாக கிடைக்க வேண்டும், இந்த உரிமையை எவரும் மறுக்க கூடாது. பணம் படைத்தவர்கள், ஏழைகள், கருப்பர்கள், வெள்ளியர்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதுதான் இந்த மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம். 

 எளுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் எல்லாவற்றிலுமே, மனிதன் உயிர் வாழ்வதற்கான எல்லா வடிவத்திலுமே தன்னுடைய உரிமையை பெற்றுக் கொள்ளவும் அதை கிடைக்காத போது கேட்டு பெறவும் மனிதர்களுக்கு உரிமை இருக்கின்றது. அதை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தான் இந்த மனித உரிமைகள் தினமாகும். இப்படி ஒரு தினம் பிரகரணப் படுத்தப்பட்டு கொண்டாடப்படுவது ஒரு கொண்டாட்டத்திற்காக மட்டும் தானா என்ற ஒரு கேள்வி இப்போது மேலோ ங்கி நிற்கின்றது. 



டிசம்பர் 11 - மகாகவி பாரதிக்கு 141 வயது ! டிசம்பர் 06 - பேராசிரியர் கைலாசபதி நினைவு தினம் !! பாரதி இயலில் தினகரனின் வகிபாகம் ! ! ! முருகபூபதி

 ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன்


1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்தியது.

ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற  பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி  தினகரன்,  வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான்  இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது.  

 தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய 


பெருமை பேராசிரியர்                                க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி,  வெளியிட்ட  சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத் தினசரியின்  ஆசிரியரானார்.

பாரதி ஆய்வாளராகவும் அறியப்பட்ட  பேராசிரியர் க. கைலாசபதியின்  தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள்  இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.

"பல்கலைக்கழகத்திலிருந்து  தமிழ்ச்சிறப்பு  பட்டதாரியாக                அவர் முதல் வகுப்பில்  சித்தியெய்திய பின்னர், அன்று

உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ  அல்லது  உயர் கல்வி  ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ   வெளிநாடு சென்றோ, மேலுக்கு வந்திருக்கவோ கூடும்.  ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை  உகந்தவாறு  பயன்படுத்துவதில்  கைலாஸ் குறியாயிருந்தமை  தெளிவாகும்.

கைலாஸ்  பத்திரிகைத்துறையுட்  புகுந்த காலம் மேலைத்தேய நாகரிகமும்  ஆங்கில மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத்தொடங்கிய  காலம்.

பொருளாதார அரசியல் துறைகளில் மட்டுமின்றிப்பண்பாட்டுத்  துறையிலும் அந்நிய ஆதிக்கம் தளரத்தொடங்கிய  காலம். சிங்களம் மட்டும்  அரசகரும மொழியாக்கப்பட்டதன்  விளைவாகத் தமிழ்ப்பேசும் மக்கள், இந்நாட்டில்,  தங்கள் இருப்பு, வரலாறு, வருங்காலம், தனித்துவம் முதலானவை குறித்து உத்வேகத்துடன் உணர சிந்திக்கத்தலைப்பட்ட  காலம். தமிழ்மொழி  உபயோகச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை, சுதேச மொழி  முக்கியத்துவம் பெறத்தொடங்கியமை, புதிதாக உருவான கலாசார அமைச்சு தமிழ்க்கலை  வளர்ச்சிக்கு  ஊக்கமளித்தமை, அதுவரை ஆங்கிலப்பத்திரிகைகளே  பெற்றிருந்த  அரசியல் செல்வாக்கையும்  முக்கியத்துவத்தையும்  பொதுமக்களைப் பரவலாகச்  சென்றடைந்த  சிங்கள, தமிழ்ப்பத்திரிகைகளும் பெறத்தக்க  வாய்ப்புத்தோன்றியமை, வெளிநாட்டுச்  செலாவணிக்கட்டுப்பாடு   காரணமாக  இந்திய எழுத்தாளர்களுக்குப்  பணம் அனுப்பும் வசதி கட்டுப்படுத்தப்பட்டமை --- இவை யாவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை"  என்று விரிவாக கைலாசபதியின் தினகரன் பிரவேசம் பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன் பதிவுசெய்துள்ளார், ( நூல்: பன்முக ஆய்வில் கைலாசபதி)

இந்திய  எழுத்தாளர்களுக்கு  பிரசுரம்  களமும்  கொடுத்து              அதற்காகப்பணமும்  தினகரன்  வழங்கியது  தவறல்ல.  எழுத்தாளர்களுக்கு சன்மானம்  வழங்கத்தக்க  மூலதனமும்  வருவாயும் நிரம்பப்பெற்றதுதான்  லேக்ஹவுஸ்  நிறுவனம்.
ஆனால், அக்காலப்பகுதியில் ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் புறக்கணிக்கப்பட்டதுதான்  விமர்சனத்திற்குரியது.

தினகரனில்  அவ்வேளையில்  கதைகள் படைத்தவர்கள் சென்னை  மவுண்ட் ரோட்டையும்  மெரீனா பீச்சையும்  பகைப்புலமாகக்கொண்டு எழுதினார்கள்.  இதனால்  அன்றைய  ஈழத்து  தமிழ்த்தேசிய படைப்பிலக்கியம்  தேக்கம்  கண்டது.

அதனை உடைத்தெறிந்தவர்தான்  கைலாசபதி. இவர் ஈழத்து எழுத்தாளர்களுக்கு  தினகரனில்  களம்  தந்து  ஊக்கமளித்தார். பத்திரிகையின்  செல்நெறியை  வகுத்தார்.  பாரதி  தொடர்பாக ஏராளமான  ஆய்வுகள்  மேற்கொண்டவர்.  இரு  மகாகவிகள், பாரதிஇயல்  ஆய்வுகள்  முதலானவற்றை எழுதியிருப்பவர்.  

யாதும் யாவரும் தமிழ் திரைப்படத்தின் நடிகை ஜெசிக்கா வைஷ்ணவி நேர்காணல் - செ . பாஸ்கரன்


 

அஞ்சலிக்குறிப்பு நெடும்பயணத்தில், பாதி வழியில் விடைபெற்ற பேராசிரியர் செ. யோகராசா ! முருகபூபதி


கண்டியிலிருந்து கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை என்னைத்தொடர்புகொண்ட எழுத்தாளர் நொயல் நடேசன், எங்கள் இலக்கிய நண்பர் பேராசிரியர் செ. யோகராசா மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.

உடனே கொழும்பிலிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு அந்தச்செய்தியை ஆழ்ந்த கவலையுடன் உறுதிப்படுத்தினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், மகரகமக மருத்துவமனைக்குச்சென்று


அவரைப் பார்த்ததாகவும்,  கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததாகவும் சித்திரலேகா சொன்னார்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்திருக்கும் எமது அருமை நண்பர் செ. யோகராசாவின் அருமைத் துணைவியார் விஜயதிலகிக்கும் ஏகபுதல்வி சுவஸ்திகாவுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்து இந்த அஞ்சலிக்குறிப்பினை  எழுதுகின்றேன்.

இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய் கிராமத்தில் செல்லையா – இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் யோகராசா, தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.

பாடசாலைப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத்தொடங்கியிருக்கும்  யோகராசா முதலில் கருணையோகன் என்ற புனைபெயரிலேயே இலக்கியப்பிரதிகள் எழுதினார்.

 தமிழில் கலைமாணி பட்டத்தினையும் அதனையடுத்து இளந் தத்துவமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் தனது தொழில் வாழ்வைத் தொடங்கினார்.

இவரைப்போன்று எனக்குத்தெரிந்த சில இலக்கியவாதிகள் அக்காலப்பகுதியில் தபால் நிலையங்களில் பணியாற்றி வந்தனர். (அமரர்) நாகேசு தருமலிங்கம், அ.யேசுராசா, ரத்னசபாபதி அய்யர் முதலானோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அவர்கள் இறுதிவரையில் தபால் நிலையங்களில்தான் பணியாற்றினர்.

நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக் காட்டிடும் !


















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா



          வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே - உன்
              வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே 
              நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே  - இங்கு 
              பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !

             உண்ண மறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக் காட்டியே - இங்கு

             உணவை யூட்டி உளம் மகிழ்வார் உலகில் பலருமே 
             விண்ணில் நீயும் ஓடி யோடி விந்தை காட்டுவாய் - அதை
             வியந்து வியந்து பிள்ளை பார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !

             பூரணையாய் வந்து நீயும் பொலிந்து விளங்குவாய் - அதை

             பூரிப்போடு பலரும் பார்த்து உளம் மகிழுவார் 
             காதலர்க்கு களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் - அதை
             கவிதையிலே பல கவிஞர் கண்டு வாழ்த்துவார் !

             உன் வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் - இங்கு

             உன் வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
             மின் மினிகள் வானில் சூழ விரைந்து ஓடுவாய் - நாளும்
             உன் னொளியால் உலகை நாளும் உவகை யூட்டுவாய் !

கரிகாற் சோழன் விருதுகள் பெற்ற இலங்கை – அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள்

தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள


தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05 ஆம் திகதி நடைபெற்றது.

இம்முறை இந்த விருதுகள் இலங்கையரான , தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும்  எழுத்தாளர் – விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் எழுதிய பண்ணையில் ஒரு மிருகம் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை எழுத்தாளர் சிவஆரூரன் எழுதியுள்ள  ஆதுரசாலை என்ற நாவலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சான்றிதழும் தங்கப்பதக்கமும் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.

நொயல் நடேசன்,  சிறுகதை, நாவல், பயண இலக்கியம் மற்றும்


விலங்கு மருத்துவம் தொடர்பான அபுனைவு படைப்புகள் பலவும் எழுதியிருப்பவர். இவரது சில நூல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.

சிவ. ஆரூரன் சில வருடங்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு, பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்.

சிறையிலிருந்தவாறே இலக்கியப்பிரதிகள் எழுதியிருக்கும் சிவஆரூரனின் ஆதுரசாலை நாவலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருதும் கிடைத்திருக்கிறது.

சீனா தொடர்பில் அவதானம் தேவை

 December 9, 2023


ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் – பிராந்திய சக்தியான இந்தியாவின் கரிசனைகள் தொடர்பில் ஆட்சியாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு – கிழக்கு பகுதிகளில் இந்திய – சீன போட்டி நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்படக்கூடாது – அவ்வாறானதொரு சூழலில் தமிழ்
மக்களே பாதிக்கப்படுவார்கள் என்றும் சித்தார்த்தன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் இலங்கையை மையப்படுத்தி இடம்பெறும் புவிசார் அரசியல் விடயங்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
விடயங்களை மேலோட்டமாகவே நோக்குவது உண்டு.
ஆனால், தமிழ் மக்களின் அரசியல் சர்வதேச மயப்பட்ட ஒன்று.
இதனை மூன்று கட்டங்களாக நோக்கலாம்.
ஒன்று, தமிழ்த் தேசிய அரசியல் மிதவாத தமிழ் தலைமைகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஆயுதப் போராட்ட இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற காலம்.
இரண்டாவது, விடுதலைப் புலிகள் ஒரேயோர் ஆயுத அமைப்பாக தமிழர் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய காலம்.
மூன்றாவது போருக்கு பின்னரான காலம்.
தமிழ் மக்களுக்கான சர்வதேச அரசியல் என்பது அடிப்படையில் பிராந்திய அரசியல்தான்.
பிராந்திய சக்தியான இந்தியாவே, ஈழத் தமிழ் மக்களுக்கான சர்வதேச அரசியலின் திறவுகோலாகும்.
இந்தியாவை தவிர்த்து தமிழர்களுக்கு சர்வதேச அரசியல் இல்லை.
இந்த விடயத்தை எப்போதெல்லாம் தமிழர் தரப்பு மறந்து செயல்படுகின்றதோ அப்போதெல்லாம் வெறும் கற்பனைகளில் காலத்தை விரயம் செய்யவே நேரிடும்.
அமெரிக்காவின் நகர்வுகள் உலகளாவியது.
அது பிராந்திய அடிப்படையைக் கொண்டதல்ல.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை வெற்றிகொள்ளும் நகர்வில் இந்தியா ஒரு பிரதான பங்காளியாகும்.
இந்தப் பின்புலத்தில் இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியாவின் கரிசனைகளுடன் பின்னிப்பிணைந்ததாகும்.
இந்திய – அமெரிக்க நகர்வுகள் இலங்கையில் சந்திக்கும் பிரதான புள்ளி – சீனாவின் மேலாதிக்க நகர்வுகளாகும்.
சீனா ஒரு மேலாதிக்க நிகழ்ச்சி நிரலுடன் நகர்கின்றது.
அதன் இலக்கு தெளிவானது.

மேலாதிக்க மனோநிலை மாறாதவரையில்

 December 7, 2023


‘அரசாங்கத்துக்கு நல்லிணக்கத்தில் அக்கறை இல்லை’, என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். அவரின் கருத்து முற்றிலும் சரியானது.
யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்கள் முடிவுற்ற பின்னரும்கூட விடுதலைப்புலிகளை முன்வைத்து மட்டுமே அரச இயந்திரங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்கம் பற்றி பேசுகின்றார் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பேசுகின்றார் – இன்னும் பல தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க முறைமையிலிருந்து கற்றுக்கொள்ளப் போவதாகக் கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலிருந்து தென்னாபிரிக்கா தொடர்பில் பேசி வருகின்றனர்.
ஆனால், எந்தவொரு முன்னேற்றகரமான நகர்வுகளும் இதுவரையில் இடம்பெறவில்லை.
இலங்கையின் அனைத்து அரச கட்டமைப்புகளும் போர்க் காலகட்டமைப்புகளாகவே இருக்கின்றன.
போர்க் கால மனோநிலையிலேயே படைத் துறையினரும் நாட்டின் புலனாய்வு கட்டமைப்புகளும் இருக்கின்றன.
இவ்வாறான கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படாத வரையில் நாட்டில் நல்லிணக்கம் என்பது கானல் நீர்தான்.
போர்க் கால அரச மனோநிலை என்பது அனைத்திலும் பயங்கரவாதத்தை தேடுவதுதான்.
தமிழர் அனைவரும் விடுதலை புலிகள் என்னும் கண்ணோட்டத்தில்தான் அரச அணுகுமுறை இருந்தது.
அந்த அடிப்படையில்தான் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
இந்த அணுகுமுறையில் இப்போதும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 18 ஆண்டுகள் ❤️ ✍🏻


இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவு செய்து 19 வது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

இதுவரை  467 பதிவுகள் ✍🏻

"ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுமாக"

மடத்துவாசல் பிள்ளையாரடி தளத்திலும்

http://kanapraba.blogspot.com/

881 பதிவுகள் ✍🏻

"என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் நல்மருந்தாய் அமையும் 

இசைப் பகிர்வுகளுக்காக"

றேடியோஸ்பதி தளத்திலும்

http://www.radiospathy.com/


139 பதிவுகள் ✍🏻

"எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப் பிடிக்கும் அதற்காக"

உலாத்தல் தளத்திலும்

http://ulaathal.com

என்று வகைப்படுத்தி எழுதியிருக்கிறேன், இன்னும் தொடர்வேன்.

146  பதிவுகள் ✍🏻

வீடியோஸ்பதி தளத்திலும்


https://www.youtube.com/c/videospathy

காசி யாத்திரை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


1973ம் வருடம் வெளிவந்த காசி யாத்திரை என்ற இந்த படத்தின் பேரைப் பார்த்து பக்திப் படம் என்று நினைத்து விடாதீர்கள்! முழு நீள நகைச்சுவை படமாக இதனை எடுத்திருந்தார் இயக்குனர் எஸ் பி முத்துராமன். இவருடைய ஆரம்ப கால படங்களுள் ஒன்றாக இப் படம் அமைந்தது.

ஏவி எம் பட நிறுவனத்தில் நீண்ட காலம் உதவி இயக்குனராக

பணிபுரிந்தவர் முத்துராமன். ஏவி எம் நிறுவனம் காசேதான் கடவுளடா படத்தை தயாரித்த போது அப் படத்தை இயக்கும் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் ஏவி எம் செட்டியார் படத்தை இயக்கும் பொறுப்பை அப் படத்தின் கதை வசனத்தை எழுதிய கோபுவிடமே ஒப்படைத்தார். அது மட்டுமன்றி கோபுவின் உதவியாளராக பணியாற்றும் படி முத்துராமனிடம் சொன்னார். படவுலகில் தனக்கு சமமான அனுபவத்தை கொண்ட கோபுவின் உதவியாளராக பணியாற்ற முத்துராமனின் தன் மானம் இடம் தரவில்லை. செட்டியாரிடம் சண்டை போட்டுக் கொண்டு ஏவி எம் நிறுவனத்திலிருந்து விலகி விட்டார். அவ்வாறு விலகி ஊருக்கு புறப்பட்ட முத்துராமனை தடுத்தாற் கொண்ட கதாசிரியரும், தயாரிப்பாளரும் , அவரின் நண்பருமான வி சி குகநாதன் தான் கதை வசனம் எழுதி தயாரிக்கும் சில படங்களை அடுத்தடுத்து டைரக்ட் செய்யும் வாய்ப்பை முத்துராமனுக்கு வழங்கினார். அப்படி வழங்கப்பெற்ற படங்களில் ஒன்று தான் காசி யாத்திரை.

காசேதான் கடவுளடா பாணியில் நகைசுவை படமாக இது உருவானது. படத்தின் கதாநாயகன் வேறு யாமில்லை வி கே ராமசாமிதான். கதாநாயகி மனோரமா. இவர்கள் இருவரையும் பிரதான பாத்திரங்களாக வைத்து படத்தை உருவாக்கினார்கள். பிரம்மச்சரிய சங்கத்தின் தலைவரும், ஆஞ்சநேய பக்தருமான பரமசிவம் பிள்ளை இல்லறத்துக்கு முற்றிலும் எதிரானவர். தன் அண்ணன் பிள்ளைகள் இல்லறத்தில் ஈடு படாமல் தன்னைப் போல் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஆனால் அவர்களோ அவருக்கே தெரியாமல் காதலில் ஈடுபடுகிறார்கள். போதாக் குறைக்கு அவரையும் காதல் வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். இதற்காக ஆண்டாள் என்ற நாடக நடிகையை பயன் படுத்தி அவருக்கு காதல் மயக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இறுதியில் பிரம்மச்சரியமா, துறவறமா வென்றது என்பது தான் படத்தின் கதை.

இலங்கைச் செய்திகள்

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்

 ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதியிடம் கையளிப்பு

பேராசிரியர் யோகராசா நேற்று காலமானார்

தாமரை கோபுரத்தால் 14 மாதங்களில் மட்டும் ரூ. 102 கோடி வருமானம்

சமாதானத்தின் செய்தி தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி

உலக தமிழர் பேரவை யாழ். விஜயம்



பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்

- இந்துக்கள் கவலை; இந்தியா தலையீடு

December 8, 2023 1:52 pm 

கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டமை தொடர்பாக இந்திய – இலங்கை உள்ளிட்ட உலகம் வாழ் இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர்.

உலகச் செய்திகள்

 கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்

காசாவின் மிகப்பெரிய நகரங்களில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிப்பு

மேற்குக் கரையில் 6 பலஸ்தீனர்கள் பலி

விமான நிலையம் அளவு நிலத்தில் 1.8 மில். மக்களை அனுப்ப திட்டம்

காசா விவகாரத்தில் குட்டரஸ் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம்


கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்

December 9, 2023 10:14 am 

வடக்கு காசாவில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தங்கி இருந்த பாடசாலை ஒன்றுக்கு அருகில் கைது செய்யப்பட்ட பலஸ்தீன ஆடவர்கள் பலரையும் இஸ்ரேலிய படை அவர்களின் உடைகளை அகற்றி உள்ளது.