ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய 35வது கலை விழா 27/03/2022


ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தனது 35வது கலை விழாவினை கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 27ம் திகதி சிறப்பாகக் 
கொண்டாடியது.  இக்கலைவிழாவை மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்தி வைத்தவர் திருமதி நிர்மலா தயாளன்  ஆவார்.

இக்கலைவிழாவில் மாணவர்கள் தத்தம் வகுப்பாசிரியர்களின்

வழிகாட்டலிலும், 
பெற்ற  பயிற்சியிலும்  
தமது திறமைகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.  
பிரதம விருந்தினராக திரு திருமதி கருணாசலதேவா அவர்கள் பங்கேற்று  இக்கலை விழாவை சிறப்பித்தார்கள்.



சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றவர்கள்:

Mr. Mark Joseph Codure - MP and Minister for Multiculturalism, and Minister for Seniors

Mr Jason Yat-Sen Li MP for Strathfield

Mrs.. Lucas Johns President of NSW Federation of Community Language Schools

Mr. Saravanan Srinivasan President of NSW Federation of Tamil Schools

30 வருடங்கள் ஆசிரியர் சேவையை முடித்த திரு சரவணமுத்து தேவராசா, திருமதி கனகேஸ்வரி வடிவேற்பிள்ளை மற்றும் 25 வருடங்கள் சேவையை முடித்த திருமதி கனகேஸ்வரி வனதேவா ஆகியோர் இக்கலைவிழாவில்  கௌரவிக்கப்பட்டார்கள்.

வாழ்வெமக்கு வசந்தம் ஆகியே அமையும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா



தோல்விகளை தோள்மீது ஏற்றிவிடாதீர்
தொடர் கதையாய் தோல்விகளை ஆக்கிவிடாதீர்
வாழ்நாளில் வேதனைகள் வந்தபடி இருக்கும்
வாசலில்லா வீட்டைப் பார்க்க முடியாது 

மகிழ்ச்சியினை எண்னி மணமுடிப்பார் வாழ்வில்
மணமுடிப்பா ரெல்லாம் மகிழ்ச்சியுறார் வாழ்வில்
மணமுடித்த ததனால் நின்றுவிடா வாழ்வில்
மணமுடித்தல் தினமும் நடக்கிறது வாழ்வில் 

ஏமாற்றும் பலரும் வந்திடுவார் நாளும்
ஏமாறும் பலரும் இருந்திடுவார்  தினமும்
ஏமாற்றும் நிலைமை தொடர்ந்த படியிருக்கும்
இதுவாழ்வில் என்றும் ஒட்டியே இருக்கும்

“ யாதுமாகி “ மின்னூல் வெளியீட்டு மெய்நிகர் அரங்கில் ஞானம் இரத்தினம் அம்மையாருக்கு அஞ்சலி


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்  தமிழ் சேவையில் முன்னர்  மேலதிக பணிப்பாளராகவும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முதலாவது நிகழ்ச்சி பணிப்பாளராகவும் பணியாற்றிய திருமதி ஞானம் இரத்தினம் அம்மையார் கடந்த 26 ஆம் திகதி அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 92 வயதில் மறைந்தார். 

 அவர் 1983 இற்குப்பின்னர் புலம்பெயர்ந்து  அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு வந்தபின்னரும்,  தமிழ்சார்ந்த பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டவர்.  இங்கு  தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் பாட நூல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும்  செயல்பட்டவர்.

தமது இலங்கை வானொலி அனுபவங்களை The Green Light என்ற நூலிலும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்துள்ள ஞானம் இரத்தினம்


அம்மையார் பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி மின்னூலின் வெளியீடு மெய்நிகர் அரங்கில் கடந்த சனிக்கிழமை 26 ஆம் திகதி நடைபெற ஏற்பாடகியிருந்த தருணத்தில், அன்னாரின் மறைவுச்செய்தி வெளியானது.

அதனையடுத்து அமரத்துவம் எய்திய அம்மையாரின் ஆத்மசாந்திக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டே நிகழ்ச்சி ஆரம்பமானது.

முருகபூபதியின் யாதுமாகி மின்னூல் வெளியீட்டு அரங்கு யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி கலையரசி சின்னையா தலைமையில் நடந்தது.

28 பெண் ஆளுமைகள் பற்றிய இந்நூலில் இடம்பெற்றுள்ள  திருமதி ஞானம் இரத்தினம் அம்மையார் பற்றிய பதிவு குறித்து, வீரகேசரி மற்றும் தமிழ்நாடு தினமணி ஆகிய பத்திரிகைகளின்  முன்னாள் மூத்த  ஊடகவியலாளர் ( அமரர் ) கார்மேகம்  அவர்களின் புதல்வி திருமதி கனகா கணேஷ் சிட்னியிலிருந்து இணைந்து உரையாற்றினார்.

 இலங்கையில் தொலைக்காட்சியின் வருகை 1979 ஏப்ரில் மாதம் ஆரம்பமானது. முதலில் அதனை சுயாதீன தொலைக்காட்சி சேவை என அழைத்தனர்.   (Independent Television Network - ITN)   தொடக்கத்தில்  தனியாருக்குச் சொந்தமான இச்சேவை பின்னர், 1982 ஆம் ஆண்டு முதல் ரூபவாஹினி என்ற பெயரைப்பெற்று, அரச தொலைக்காட்சியானது.

அக்காலப்பகுதியில்  அமைக்கப்பட்ட  தேசிய தொலைக்காட்சித் திட்டமிடல் குழுவில்   (National Television Planning Committee) இரண்டு பெண்கள் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -07 மெல்பன் நகரைச் சுற்றிப்பார்த்து கதைகள் எழுதிய ஆரம்ப காலம் ! முருகபூபதி


மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து என்னையும் இதர பயணிகளையும் ஏற்றிவந்த அந்த அன்ஸட் பயணியர் பஸ், 
1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் மெல்பன் ஸ்பென்ஸர் வீதி ரயில் நிலையத்திற்கு அருகில்  நீண்ட பெருமூச்சுடன் தரித்து நின்றது.

நீர்கொழும்பிலிருந்து  பெப்ரவரி 06 ஆம் திகதி முற்பகல் நான் புறப்பட்டபோது,   அன்பர் இராஜரட்ணம் , மெல்பன் Laverton இல் வசிக்கும் தனது மூன்றாவது மகன் ரஞ்சன் வைத்தியநாதனின்  முகவரியையும் தொலைபேசி  இலக்கத்தையும் தந்துவிட்டிருந்தார்.

மெல்பனுக்கு வந்து இறங்கிவிட்டதாக ரஞ்சன் வீட்டு தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு சொன்னேன். மறுமுனையில் அவரது மனைவி மாலினி பேசினார்.

நான் வரவிருப்பதை ஏற்கனவே பேர்த்திலிருந்து அவர்களுக்கு தெரிவித்திருந்தேன்.

அன்று சனிக்கிழமை .  ரஞ்சன்  வேலைக்குப் போயிருந்தார்.


அக்காலப்பகுதியில் அவர்  
Toyota  கார்  தயாரிக்கும் பணிமனையில் வேலையில் இருந்தார்.  

திருமதி மாலினி ரஞ்சன், ஸ்பென்ஸர் வீதியில் ஒரு டாக்ஸியில் புறப்பட்டுவருமாறு சொன்னார்.

மெல்பனிலிருந்து அந்த அகலவீதியில் அந்த டாக்ஸி விரைந்தது. வழியில் தென்பட்ட  சமிக்ஞை விளக்குகள் தொடர்ந்து பச்சையை உமிழ்ந்தது.

நான் ஊருக்குப்புதுசு என்பதை தெரிந்துகொண்ட அந்த டாக்ஸி சாரதி,    உங்கள் வருகைக்கு சிக்னல் தொடர்ந்து  பச்சை நிறத்தை காண்பித்து நல்வரவு கூறுகிறது    என்றார்.

ஊரை, நாட்டை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வந்த எனக்கு அந்த சாரதியின் வார்த்தைகள் உற்சாகமூட்டின.

ரஞ்சன் வீட்டு வாசலில் இறங்கும்போது,  இருபது அவுஸ்திரேலியன் வெள்ளிகளை சாரதி கேட்டு கொடுத்தேன். இது முப்பத்தியைந்து வருடங்களின் முன்னர். இன்று அந்தத் தொகையில் மெல்பனிலிருந்து அவ்வளவு தூரம் செல்ல முடியாது.

சனிக்கிழமையும் ஞாயிறு மாலை வரையிலும் ரஞ்சன் வீட்டிலிருந்து இலங்கைப் புதினங்கள் பேசிக்கொண்டிருந்தேன்.

ஞாயிறு  மாலை ரஞ்சனின் தம்பி  சிவநாதன் என்னைச் சந்திக்க வந்தார். அக்காலப்பகுதியில் அவர் மெல்பனில் Hoppers crossing இல் வசித்தார்.   நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவரையும் அன்றுதான் சந்திக்கின்றேன். அவர் மூலமாக ரஞ்சன் West Brunswick என்ற இடத்தில் எனக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார்.

பகலிர வாய்அருள் சொரிந்தயோகர் பாதா ரவிந்தம் பராவிடுவோம்!. சிவயோகர் சுவாமிகளை நினைவு கூருவோம்!




                     

                  

 

                      





சைவம் நலிந்த வேளையிலே

                   தழைக்கச் செய்து மெருகூட்டத்

தெய்வம் போல ஈழமதில்

                  சிவத்திரு யோகர் அவதரித்தார்

 

என்றோ முடிந்த காரியமே

                  எல்லாம் முற்றும் உண்மையென்றும்

 நன்றே குருவின் உபதேசம்

                  நாளும் சொல்லிப் போதித்தார்.

 

அதுஅப் படியே” “உள்ளதைக்காண்"

               ஆர் அறி வாரோ நாமறியோம்

 முதுமொழி யானவிவ் மந்திரங்கள்

             முகிழ்த்திடும் பொருள்கள் விளக்கிடுவார்.

 

பொல்லாப் பொன்றும் இல்லையென்றார்

          புலனை அடக்கச் சிவத்தியானம்

வெல்லும் நல்வழி சொல்லிவைத்தார்

           விருப்பொடு மௌனமாய்; இருவென்றார்.

 

 

கலை, இலக்கிய, சமூக நேசர் மருத்துவர் வாமதேவன் விடைபெற்றார் முருகபூபதி

“ சொர்க்கமே என்றாலும்

அது நம் ஊரைப் போல வருமா…?

அட என்னாடு என்றாலும்

அது நம் நாட்டுக் கீடாகுமா…?

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்

தமிழ் போல் இனித்திடுமா…? 

இந்தப்பாடலை கேட்டிருப்பீர்கள்.   கடந்த 28 ஆம் திகதி வடபுலத்தில்


தெல்லிப்பழையில் தமது 99 வயதில் மறைந்த எமது கலை, இலக்கிய சமூக நேசர் மருத்துவர் தம்பிப்பிள்ளை வாமதேவன் அவர்களின் இறுதிநிகழ்வையும் அவரது இறுதி யாத்திரையையும் அவுஸ்திரேலியாவிலிருந்து காணொளி ஊடாக பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்ணீர் மல்க குறிப்பிட்ட அந்தப்பாடலைத்தான் நினைத்துக்கொண்டேன்.

அன்பர் வாமதேவன் எனது நீண்ட கால நண்பர். எனக்கு மட்டுமல்ல, இலங்கையில் கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்து இயங்கிய பலருக்கும் அவர் நல்ல நண்பராகவே திகழ்ந்தவர்.

மருத்துவர் வாமதேவன் மறைந்தார் என்ற துயரச்செய்தியை எமக்கு


முதலில்  தெரிவித்த கலை, இலக்கிய ஆர்வலர் நவரத்தினம் இளங்கோ அவர்களும் அன்னாரின் நெருங்கிய நண்பர்தான்.

வாமதேவன்   தமது இளமைக்காலத்தில் மருத்துவம் படித்து மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று M R C P பட்டத்துடன் திரும்பியவர்.

அவர் நினைத்திருந்தால், இங்கிலாந்திலோ அல்லது வேறு மேலைத்தேய நாடுகளிலோ தமது மருத்துவத்துறையில் பணிகளை மேற்கொண்டு, தமது குடும்பத்தினரையும் அழைத்து வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், அவர் தமது ஊரான தெல்லிப்பழையிலிருந்து மருத்துவம் படிக்கச்சென்றபோது, அவரது தாயார் கூறிய அறிவுரையை கேட்டு, அதன்பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.

தான் கற்கும் மருத்துவம் மக்களின் சேவைக்குத்தானேயன்றி, தனியார் துறை மருத்துவமனைகளுக்கு  அல்ல, என்ற மனிதநேயச்சிந்தனையுடன் அரச பொது மருத்துவமனைகளிலேயே இறுதிவரையில்  நலிவுற்ற மக்களுக்காக பணியாற்றினார்.

அவரது புதல்விகள் இருவர் அவுஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில் வசிக்கின்றனர்.  இறுதியாக அவர்களிடம் கடந்த ஆண்டு வந்தவர்,  தனது எஞ்சியிருக்கும் காலத்தில் ஊரோடு சென்று வாழவே விரும்புவதாக கூறி விடைபெற்றுச்சென்றார்.

ஒரு தாய் மக்கள் நாமென்போம் - சமரசம் எங்கள் வாழ்வென்போம் ! அவதானி

இந்தப் பதிவை ஒரு குறுங்கதையுடன் தொடங்குவோம்.


ஒரு வீட்டில்  அண்ணன் – தம்பி இரண்டுபேர் தினமும் வாய்த்தர்க்கம் செய்து  சண்டை  பிடித்துக்கொண்டே இருந்தார்கள்.  அவர்களின் தந்தை இருவரையும் அழைத்து அறிவுரை சொல்லிப்பார்த்தார். ஆனால், பயன் இல்லை.  அந்த சகோதரர்களின் சண்டை நாளுக்கு நாள் உச்சம் பெற்றது. அடி தடியிலும் இறங்கினார்கள். அதனால் வீட்டுக்கும், வீட்டு உடமைகளுக்கும் சேதம் வந்தது.

சண்டை தீரவில்லை. அண்ணனும் தம்பியும் தந்தையிடம் தனித்தனியாக முறையிட்டார்கள். தந்தையும் அவர்கள் இருவரிடத்திலும் தனித்தனியாக புத்திமதிகள் சொல்லிப்பார்த்தார். ஆனால்,  சமாதானம்தான் தோன்றவில்லை.

அதனால், நிம்மதி இழந்த அந்த மகன்மாரின் தாயார், ஒரு நாள்


இருவரையும் அழைத்து,  உங்கள் பிரச்சினைகளை என்னிடமோ அப்பாவிடமோ எடுத்து வந்து முறையிடவேண்டாம்.  நீங்கள் இருவருமே ஒருவருடன் ஒருவர் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்.  எந்தெந்த விடயங்களில் இணைந்து பேசி இயங்கமுடியுமோ, அந்தந்த விடயங்களில் முதலில் பேசுங்கள். பின்னர், அதிலிருந்து ஏனைய விடயங்களையும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் இருவரையும் நான்தான் எனது வயிற்றில் சுமந்து பெற்றேன்.  நீங்கள் இருவரும் ஒருதாய்மக்கள். உங்கள் உடலில் எனது உதிரமும் கலந்திருக்கிறது.

நாளை உங்களுக்கும் திருமணமாகும். நீங்களும் பெற்றவர்களாவீர்கள். அப்போது உங்கள் பிள்ளைகளும் சண்டை பிடித்தால் என்ன செய்வீர்கள்… ? அதனால், வருங்காலத்தில் பிறக்கவிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்காகவாவது முன்மாதிரியாக இருங்கள்.  நீங்கள் தொடர்ந்து சண்டை பிடித்தால், உங்கள் எதிரிகள்தான் ஆதாயம் பெறுவார்கள். 

தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் பேசுங்கள். தீர்வுகளை காண்பீர்கள்  “ என்றார் தீர்க்கதரிசனம் மிக்க அந்தத் தாயார்.

இந்த குறுங்கதையின் உறைபொருளையும் மறைபொருளையும் அண்மையில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில்,  இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் . ஜெய்சங்கர் தெரிவித்துள்ள கருத்துக்களை  அவதானிக்கலாம்.

ஸ்வீட் சிக்ஸ்டி 8 -பந்தபாசம் - - - ச சுந்தரதாஸ்

 .

பெரியண்ணா,இவர் சிவாஜி கணேசனின் பெரியண்ணா இல்லை. ஆனால் அவரின் நெருங்கிய குடும்ப நண்பர்.இந்த பெரியண்ணாவை படத் தயாரிப்பாளர் ஆக்கி ஒரு படத்தை தயாரிக்க சிவாஜி ஆதரவு கரம் நீட்டினார்.பட நிறுவனத்திற்கு தனது மகள் சாந்தியின் பெயரையும் சூட்டி அழகு பார்த்தார்.அந்த சாந்தி பிலிம்ஸ் தயாரித்த முதல் படம்தான் பந்தபாசம்.பானாவில் தொடங்கும் படம் என்றவுடனே அதனை இயக்கியவர் பீம்சிங் என்று ஊகித்திருக்கலாம்.பீம்சிங்கின் திரைக்கதை டைரக்ட்ஷனில் படம் உருவானது.

மிகவும் பிசி இயக்குனராக பீம்சிங் இயங்கிக்கொண்டு இருந்த நேரம்.ஆகவே வழக்கமாக அவர் படங்களுக்கு வசனம் எழுதும் ஆரூர்தாஸ்,எம் எஸ் சோலைமலை இருவரும் பீம்சிங் போலவே பிசியாக இருந்ததால் அவர்களை தவிர்த்து வலம்புரி சோமநாதன் கதை வசனத்தில் படம் தயாரானது.இந்த வலம்புரி நீண்ட காலமாக படத்துறையில் இருந்தவர். பீம்சிங் இயக்கத்தில் திருமணம் என்ற படத்தை தாயாரித்தவர்.அதற்கு பிரதிபலனாகவோ என்னவோ இந்தப் படத்திற்கு எழுதும் வாய்ப்பை வழங்கினார் பீம்சிங்.

பீம்சிங் படம் என்றால் பாடல்களை கண்ணதாசன்தான் எழுதுவார் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம்.ஆனால் அதிலும் ஒரு மாற்றம்.இந்தப் படத்தின் பாடல்களை கவிஞர் மாயவனாதன் இயற்றினார்.பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்தன.குறிப்பாக நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ என்ற பாடல் கருத்தாழம் மிக்க தத்துவப் பாடலாக அமைத்தது.அதே போல் கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு பாடலும் தத்துவப் பாடலாக ஒலித்தது.இது தவிர பந்தல் இருந்தால் கொடி படரும்,பாடலும் இனிமையாக இசைத்து.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இப் படத்திலும் சோடை போகவில்லை.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து ஆறு ]


 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா

                                       

    பனையின் பாளையிலிருந்து வடியும் நீர் நல்ல இதமாயும்


பதமாயும் இருப்பதால்த்தான் அதனைப் " பதனீர் " என்று அழைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலே பதனீர் தெங்கின் இளநீரைவிட வித்தியாசமான சுவை யினை உடையதாகும்.பனையிலே வருகின்ற பாளைகளைப் பதப்படுத்திச் சீவியே பதனீர் பெறப்படுகிறது. பதனீரைப் பெறுவதற்குரிய மண்முட்டிகளுக்குச் சுண்ணாம்பு பூசப்படும். சுண்ணாம்பு கலப்பதால் சுவையான அமுதமான பருகும் பானமாகப் பதனீர் வந்து அமைகிறது.இதனைக் கருப்பணி என்றும் அழைப்பார்கள்.

  பதனீரின் பயன்பாடு பழைய காலத்திலேயே ஆரம்பித்துவிட்டதாக அறிய முடிகிறது.அக்கால அரசர்கள் விரும்பியுண்ட பானமாகப் பதனீர் விளங்கி இருக்கிறது.அதனை உறிதிப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

 

                     தீதறு நற்குல சேகரனைப் பார்த்து

                          சென்று வனத்திற் பனை யமிர்தங்

                          கோதற நீயிறக்கி கொடுவா வென்று

                          கூறியனுபினன் மின்னரசே

 

அரசன் மட்டுமல்லாது அக்காலத்தில் அனைவருக்கும் விருப்பமான பானமாகப் பதனீர் இருந்திருக்கிறது என்றும் அறிந்திடக்கூடியதாக இருக்கிறது. புளிக்கா நிலையில்


இருக்கின்ற பொழுது - பனையின் பாளையின் சாறு வெறுக்கத்தக்கதாக இருக்கவில்லை. அதே சாறு புளித்த நிலையிலே அது கள்ளு என்னும் பெயருக்கு உரித்தாகும் காரணத்தால் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கும் நிலை அதற்கு ஏற்படலாயிற்று.ஒரு நிலையில் யாவரும் விரும்பி ஏற்கும் பானமாகவும் இன்னொரு நிலையில் பலராலும் கண்டிக்கத்தக்க ஒரு பானமாகவும் - பனையின் பாளையின் சாறு காணப்படுகிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.சுவையான பானமாக இருக்கும் பதனீர் பல பெயர்களை தாங்கி நிற்கிறது, சுரம்அமிர்தம்புதுமதுதெள்ள முதுபசுநருகருப்பநீர்கருப் பணி, என பல பெயர்களுக்கு உரித்தாகி நிற்கிறது.ஆண்பனைப் பாளைகளிலிருந்து எடுக்கின்ற பதனீருக்கு       " சோமபானம் " என்றும் பெண்பனையின் பாளையிலிருந்து எடுக்கின்ற பதனீருக்கு " சுரபானம் " என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் என்றும் அறிந்திடக்கூடியாத இருக்கிறது.

“ எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை ! “ யாதுமாகி – மின்நூல் வெளியீட்டில் ஏற்புரை முருகபூபதி

( கடந்த சனிக்கிழமை நடைபெற்ற  “ யாதுமாகி  “ மின்நூல் மெய்நிகர் வெளியீட்டில்  நிகழ்த்தப்பட்ட ஏற்புரை )  

பல வருடங்களுக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டளவில் எனது நெஞ்சில்


நிலைத்த நெஞ்சங்கள்
நூல் வெளிவந்தபோது,  ( இந்நூல் மறைந்த கலை, இலக்கிய ஆளுமைகள் 12 பேரைப்பற்றிய பதிவு )   சில பெண்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்:

 “ இந்த நூலில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவருமே ஆண்கள்தான், ஏன் பெண்களைப்பற்றி நீங்கள் எழுதவில்லை..? “ 

அதற்கு நான் சொன்ன பதில்:   “ பெண்களுக்கு ஆயுள் அதிகம். 

எனது இந்தக்கருத்தை வேடிக்கையாக அல்ல, உண்மையாகவே சொல்கின்றேன்.  உங்கள் குடும்பங்களிலும் இந்த உண்மையை நீங்கள் அவதானித்திருக்க முடியும்.  இதிலிருந்து பெண்களின் ஆயுளையும் ஆளுமைப் பண்புகளையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும்.


குறிப்பிட்ட நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் இடம்பெற்றிருந்தவர்கள் அனைவரும் ஆண்கள்தான்.  ஆனால், அந்த நூல் மெல்பனில் வெளியானபோது அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கியவர் எமது மதிப்பிற்குரிய திருமதி பாலம் லக்‌ஷ்மணன் அம்மையார்.

அவர் தனது உரையில்,     முருகபூபதி,  விருப்பு வெறுப்பு பார்க்காமல் காய்தல் – உவத்தல் இன்றி,  தான் சந்தித்த ஆளுமைகளின் மேன்மையான பக்கங்களை மாத்திரமே பதிவுசெய்துள்ளார். அதாவது அன்னப்பறவையைப் போன்று செயல்பட்டுள்ளார்  “ எனத் தெரிவித்தார்.

இதனை அந்தச்  சபையில் கேட்டுக்கொண்டிருந்த -  எம்மத்தியில் வாழ்ந்த  மதிப்பார்ந்த மூத்த ஓவியக்கலைஞர் கே. ரி. செல்வத்துரை அய்யா அவர்கள்,  அடுத்த வாரமே தனது கைவண்ணத்தினால், ஒரு அழகிய பெரிய அன்னப்பறவை ஓவியத்தை வரைந்து அதற்கு சட்டமிட்டு எடுத்துவந்து எனக்கு பரிசளித்தார்.

எங்கள் வீட்டின் வரவேற்பறையில் அந்தப்படம் காட்சியளிக்கிறது.

1998 ஆம் ஆண்டு எனது மூன்று நூல்கள் சிட்னியில் மறைந்த மூத்த கலைஞர் ‘ அப்பல்லோ சுந்தா  ‘ சுந்தரலிங்கம் அவர்களின் அரங்கில் நடந்த போது அதற்கு தலைமை தாங்கியவர்தான் இன்றைய அரங்கில் தலைமை தாங்கியிருக்கும் திருமதி கலையரசி சின்னையா அவர்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சி சுந்தா அரங்கில் நடப்பதை எனது அழைப்பிதழ் மூலம் அறிந்த சிட்னியில் வதியும் மூத்த ஓவியக்கலைஞர் ‘ ஞானம்  ‘ ஞானசேகரம் அவர்கள், தமது கைவண்ணத்தில் சுந்தா அவர்களின் உருவத்தை வரைந்து சட்டமிட்டு எடுத்துவந்து  அனைவரதும் முன்னிலையில் வழங்கினார்.

இலங்கைச் செய்திகள்

 ஊடக புலமைப்பரிசில் பெற்று அருண் பிரித்தானியா பயணம்

தொடர்ந்தும் நானே பிரதமர் ஓய்வு பெறப் போவதில்லை

இலங்கை வந்துள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை

இந்திய வௌியுறவு அமைச்சருடன் இ,தொ,கா பிரதிநிதிகள் சந்திப்பு

இந்திய ஒத்துழைப்புகள் குறித்து ரணிலுக்கு, ஜெய்சங்கர் விளக்கம்

மிரிஹான ஆர்ப்பாட்டம்

இன்று (02/04/2022) மாலை 6.00 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு!

பேராதனை மாணவர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்



ஊடக புலமைப்பரிசில் பெற்று அருண் பிரித்தானியா பயணம்

பிரித்தானிய அரசாங்கத்தின் ஊடகத்துறை சார்ந்த  உயர் புலமைப் பரிசில் கற்கை நெறிக்கு சுயாதீன ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கற்கை நெறியை தொடர  அவர் பிரித்தானியா பயணமானார். 

சிவினிங் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தினால் இந்த  கற்கை நெறி நடத்தப்படுகிறது.  தெற்காசிய ஊடகவியல் புலமைப் பரிசில்  என்ற இந்த கற்கை நெறிக்கு தெற்காசிய நாடுகளில் இருந்து ஊடகவியலாளர்கள் பங்குபற்றுவார்கள். 

உலகச் செய்திகள்

 அமெரிக்க திட்டத்தினால் எண்ணெய் விலை வீழ்ச்சி

தாக்குதலைக் குறைக்க ரஷ்யா முடிவு: நடுநிலை வகிக்க உக்ரைன் உத்தேசம் 

பாகிஸ்தான் ஜனாதிபதியினால் அந்நாட்டு பாராளுமன்றம் கலைப்பு


அமெரிக்க திட்டத்தினால் எண்ணெய் விலை வீழ்ச்சி 

எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க திட்டமிட்ட நிலையில் எண்ணெய் விலை வேகமான சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்கா தனது மூலோபாய எண்ணெய் கையிருப்பில் இருந்து எதிர்வரும் மாதங்களில் 180 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை விடுவிக்க ஆலோசித்திருப்பதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.

சிட்னியில் உள்ள துர்கா கோவிலில் சண்டி ஹோமம் 10/04/2022


 


ஏப்ரல் 10, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு மங்கள சண்டி ஹோமம் நடைபெறும். சண்டி ஹோமம் என்பது மிகவும் சக்திவாய்ந்த சடங்காகும், 
இது சிட்னியில் உள்ள துர்கா கோவிலில் பெரிய அளவில் நடந்து வருகிறது சண்டி ஹோமம் ஒரு முக்கிய ஹோமம் மற்றும் அனைத்து முயற்சிகளிலும் ஒட்டுமொத்த வெற்றியைப் பெறுவதற்கும், ஒருவரின் வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான தோஷங்கள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் மிகவும் சக்திவாய்ந்த ஹோமம் ஆகும்   மகா சண்டி ஹோமம் | சண்டி பாதை ஒரு நபரை அனைத்து வகையான தடைகள், எதிர்மறை ஆற்றல்கள், அவருக்கு எதிரான தீய செயல்களிலிருந்து விடுவிக்கிறது.

இந்த ஞாயிறன்று சண்டி ஹோமத்தில் பங்கேற்பதன் பலன்கள்: சிறந்த ஆரோக்கியம், செழிப்பு, நீண்ட ஆயுள், உணவு, செல்வம், சந்ததி, புகழ், வெற்றி, பலம் ஆகியவற்றை அடைய சண்டி ஹோமம்  உதவுகிறது

ஸ்ரீ ராம நவமி ஞாயிறு, 10 ஏப்ரல் 2022

 SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australi




மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமர் ராவணனை அழிப்பதற்காக பூமியில் இறங்கினார்.  இந்து பாரம்பரியத்தில், ராமர் "மராயத புருஷோத்தமன்" என்று கருதப்படுகிறார், பரிபூரணத்தின் உயரத்தை எடுத்துக்காட்டும் பரிபூரண மனிதர், ஒரு மனிதன் அடைய முடியும்.  இந்து பாரம்பரியத்தில், ராமர் "மராயத புருஷோத்தமன்" என்று கருதப்படுகிறார், பரிபூரணத்தின் உயரத்தை எடுத்துக்காட்டும் பரிபூரண மனிதர், ஒரு மனிதன் அடைய முடியும்.  இந்து பாரம்பரியத்தில், ராமர் "மராயத புருஷோத்தமன்" என்று கருதப்படுகிறார், பரிபூரணத்தின் உயரத்தை எடுத்துக்காட்டும் பரிபூரண மனிதர், ஒரு மனிதன் அடைய முடியும்.  இந்து பாரம்பரியத்தில், ராமர் "மராயத புருஷோத்தமன்" என்று கருதப்படுகிறார், பரிபூரணத்தின் உயரத்தை எடுத்துக்காட்டும் பரிபூரண மனிதர், ஒரு மனிதன் அடைய முடியும்.  இந்து பாரம்பரியத்தில், ராமர் "மராயத புருஷோத்தமன்" என்று கருதப்படுகிறார், பரிபூரணத்தின் உயரத்தை எடுத்துக்காட்டும் பரிபூரண மனிதர், ஒரு மனிதன் அடைய முடியும்.

இந்த ஆண்டு "ஸ்ரீ ராம நவமி" ஏப்ரல் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்   ல்  கொண்டாடப்படுகிறது.