மு. பொ


Image may contain: one or more people, people sitting and indoor

.
1939 ம் ஆண்டு புங்குடுதீவில் பிறந்த மு . பொ என்று அழைக்கப்படும் முருகேசு பொன்னம்பலம் அவர்கள் சிறுவயதிலிருந்தே தனது தமையனார் மு. தளையசிங்கத்துடன் சேர்ந்து கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1950 களின் பிற்பகுதிகளில் சுதந்திரன் மற்றும் தினகரன் பத்திரிகைகளின் சிறுவர் பகுதிக்கு கட்டுரைகள், கதைகள் எழுத ஆரம்பித்த இவரது கைகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றன. ஈழத்து தமிழ் கலை இலக்கிய துறைக்கு புதுவடிவத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கிய இவரது படைப்புகள் அதன் வளர்ச்சியில் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவரது வாழ்வோடு இணைந்த ஆன்மீக நாட்டம் அவரது எழுத்திலும் பிரதிபலிக்க தவறியதில்லை.
இதுவரை இவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை/ விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறுவர் ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் தனது 30 இற்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஆங்கில கவிதையும் உள்ளடங்கும். அவரது ஆக்கங்கள் அனைத்தும் ஒரு பரிசோதனை முயற்சியாக அமைந்திருப்பதுடன் கலை இலக்கியத்துறையில் இனிவரவிருக்கும் மாற்றங்களை கோடிட்டு காட்டுபவையாகவும் அமையப்பெற்றிருப்பது அவற்றின் தனிச்சிறப்பாகும்.
இவரது பல நூல்கள் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளன.
• கடலும் கரையும் (சிறுகதை)
 வடகிழக்கு மாகாண விருது 1998
 சுதந்திர இலக்கிய விருது 1998
 கொழுப்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் விருது – 1998
• நோயில் இருத்தல் (நாவல்) – அரச சாகித்திய விருது – 2000
• முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை (சிறுகதை) - வடகிழக்கு மாகாணசபை விருது 2010
• திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம்)
 வடகிழக்கு மாகாண சபையின் சிறந்த நூலுக்கான விருது 2011
 தான்ஸ்ரீ விருது – மலேசியா அனைத்துலகப் புத்தகப் போட்டியில் முதற் பரிசு 2012
• கவிதையில் துடிக்கும் காலம் (கவிதை)
 அரச சாகித்திய விருது – 2012
 சிறந்த நூலிற்கான தமிழியல் விருது – 2012
• ஒயாத கிளர்ச்சி அலைகள் (மொழிபெயர்ப்பு) - அரச சாகித்திய விருது – 2015
இது தவிர இவரது இலக்கியசேவையை பாராட்டி பல கெளரவ விருதுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

காதலுடன் கைதொழுவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா



அமரர் எஸ்.பொ. அங்கம் - 4 மதிப்பீடுகளுக்கு நடுவே உண்மைகளைத் தேடுவோம். மதிப்பீடுகள் கசக்கும் - இனிக்கும் - துவர்க்கும் - இதில் உண்மைகள் சுடுவதும் மறைபொருள்தான். - முருகபூபதி


அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை - இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 - 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன -  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   - எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர்.
தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி . கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி, ஆன்மீகம்,  சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம்.
மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.  எனினும்  தமிழ்  ஓசை,  தமிழ் அவுஸ்திரேலியன்   முதலான  மாத  இதழ்கள்  அச்சிடப்பட்டு வண்ணப்பொலிவுடன்    வெளிவந்தன. தற்போது மாத்தளை சோமு ஆசிரியராக இருக்கும் சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ் ஓசையும் மெல்பனிலிருந்து எதிரொலி மாதப்பத்திரிகையும் வெளிவருகின்றன.
அத்துடன் சிட்னியிலிருந்து செ. பாஸ்கரன் மற்றும் கருணாசலதேவா ஆகியோர் இணைந்து நடத்தும் தமிழ்முரசு அவுஸ்திரேலியா இணைய இதழும்  மெல்பனில் யாழ். பாஸ்கர் நடத்தும் அக்கினிக்குஞ்சு இணைய இதழும் வெளிவருகின்றன.
தவிர சில கலை இலக்கியவாதிகள் தங்கள் தரப்பில் வலைப்பூக்களை (Blogs) நடத்திவருகின்றனர்.
அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  முருகபூபதி  1972  இல் எழுதத்தொடங்கி  1997  இல்  தனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை  தனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலினதும் ஏற்கனவே   வெளியான  தனது  நூல்கள்  பற்றிய  விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட  முருகபூபதியின்  படைப்புகள்  என்ற   நூலையும் மெல்பன்  வை. டபிள்யூ. சி. ஏ.   மண்டபத்தில்  15-11-1997   ஆம்   திகதி நடத்தியபொழுது   -  குறிப்பிட்ட  நிகழ்வை   வித்தியாசமாகவும் அவுஸ்திரேலியாவில்  வதியும்   முக்கியமான  கலை இலக்கிய ஆளுமைகள்  நால்வரை  பாராட்டி  கௌரவித்து  விருது வழங்குவதற்கும்  தீர்மானித்து -  அந்த  நிகழ்வில்  நம்மவர் மலரையும்   வெளியிட்டபொழுது,   சிட்னியிலிருந்து  கவிஞர்  அம்பி,  எஸ்.பொ.  - மெல்பனிலிருந்து  மூத்த  ஓவியர்  செல்லத்துரை,  கூத்துக்   கலைஞர்    அண்ணாவியார்  இளைய  பத்மநாதன் ஆகியோரை    அழைத்தார்.
 நம்மவர்   மலரில்  மேற்குறித்த  ஆளுமைகள்  பற்றிய  விரிவான பதிவுகளும்   முருகபூபதியின்  படைப்புகள்   நூலில்  எஸ்.பொ.  எழுதிய முருகபூபதியின்  சமாந்தரங்கள்   கதைக்கோவையின்   விமர்சனமும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு   சிட்னியிலிருந்து  வருகை  தந்த  பேரசிரியர்  .சி. கந்தராஜா   தலைமை வகித்தார்.
மெல்பன்   அன்பர்கள்  இந்த  விழாவுக்கு  முருகபூபதிக்கு  பூரண ஒத்துழைப்பு   வழங்கியமையினால்  அது  சாத்தியமானது. ஆளுமைகளை  வாழும்  காலத்திலேயே   பாராட்டி கௌரவிக்கவேண்டும்   என்ற   மரபு  அவுஸ்திரேலியா   மண்ணிலே தமிழ்    சமூகத்திடம்   அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  அதன்  தேவையும் வலியுறுத்தப்பட்டது.

படித்தோம் சொல்கின்றோம்: ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் பூவுலகைக்கற்றலும் கேட்டலும் - முருகபூபதி


பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா?
ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து,  வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன.
அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில் வதியும் கவிஞர் ஆழியாள் மதுபாஷினி.
இவர், இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, தனது கல்வியை மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்து, பின்னர் மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில்  கலைமாணி பட்டமும், நியுசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுமாணிப்பட்டமும் பெற்றவர். தகவல் தொழில்நுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவும் பெற்றவர்.
உரத்துப்பேச, துவிதம், கருநாவு முதலான கவிதைத் தொகுப்புகளை 2000 முதல் 2013 வரையிலான காலப்பகுதிக்குள் வரவாக்கியவர். பூவுலகைக் கற்றலும் கேட்டலும் தொகுப்பு ஆழியாளின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆதிக்குடிகள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு.
ஆழியாளின் கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகியமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆழியாள் இலங்கையில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திலும் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றியிருப்பவர்.
பெண்கள் சந்திப்பு, மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதலான கலை இலக்கிய அமைப்புகளிலும் அங்கம் வகிப்பவர். இவரது கவிதைகள் ஊடறு, காலம், அணங்கு, மூன்றாவது மனிதன்,  பூமராங் முதலான இதழ்களிலும் வந்துள்ளன.
பூவுலகைக் கற்றலும் கேட்டலும் தொகுப்பினை " அணங்கு" பெண்ணியப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பேரன்பும், பெருங்கருணையும் கொண்ட பூமித்தாய்க்கும் , ஆதிக்குடிகளுக்கும் இந்த நூலை ஆழியாள் சமர்ப்பணம் செய்துள்ளார்.

"தங்கத் தாத்தா" நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா 23/12/2018








ஈழத்தமிழரும் கலைத்துறைப் பயணமும்!



கலைஞர்களாக இருந்தாலும், ரசிகர்களாக இருந்தாலும், மனதில் படும் கருத்துகளை வெளிப்படையாக பதிவுசெய்வது  உற்ற துறையில் மாற்றம் ஏற்பட, வளர்ச்சிபெற வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. நாம் கலைத்துறையில் வளரவேண்டும் என்ற ஆதங்கத்தில்தான்  கீழ்வரும்  கருத்துகளை, எனது கருத்தாக மட்டுமே பதிவுசெய்கிறேன். யாரினது மனதையும்  புண்படுத்தும் எண்ணத்தில் எழுதவில்லை. தவறாக இருந்தால்  தயவுசெய்து மன்னிக்கவும்.


ஈழத்தமிழர் தமிழ் அமிர்தமானது, ஈழத்தமிழர் கலையில் வல்லவர்கள், ஈழத்தமிழரின்  கலாச்சாரம் மேன்மையானது, இதுபோன்ற வாழ்த்துரைகள் காதுக்கு இனியவை, ஆனால், அவை அத்தனையும் இன்றைய நடைமுறையில் உள்ளனவா என்று கேட்டால் ஆம் என்று எங்களால் கூறமுடியுமா?  ஆம், ஈழத்தமிழர் தமிழ் அமிர்தமானது, ஆனால் இன்று சிதைந்துகொண்டு போகிறது, சங்கத்தமிழ் இலக்கியங்களை பிரித்துக் கருத்துணரும் திறன் இன்று எத்தனை பேரிடம் உள்ளது? அதற்கான பட்டரை பயிற்சிகள் எத்தனை எங்கெங்கு நடக்கிறது? ஆம், ஈழத்தமிழர் கலையில் வல்லவர்கள், ஆனால்  அறுவது  ஆண்டு காலத்துக்கு மேல் ஒன்றும் சாதிக்க முடியாமல் துடித்துக்கொண்டு இருக்கிறோம், ஆம், ஈழத்தமிழர் கலாச்சாரம் மேன்மையானது, இன்று சுக்குநூறாக உடைந்துக்கொண்டு போகிறது. தமிழ் பேசும் பிள்ளைகளை பட்டியலிட்டு   எண்ணிப்பார்க்கும் பரிதாபம் இன்று, ஈழ மண்ணின் விடுதலைக்காக  கொலைக்கருவி ஏந்திய போராளிகள் சிலரின் வாரிசுகள் கூட இன்று வெளிநாடுகளில் அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும் அழைக்கும் அவலம். எத்தனை திறமை இருப்பினும், இந்திய சூப்பர் சிங்கரில் பாடினால் மட்டுமே எமது பிள்ளைகள் பாடகர்கள் என அங்கீகாரம் பெற முடியும். கலை நிகழ்வுகளுக்கு  இந்திய பிரபலங்களை அழைத்தால் மட்டுமே மக்கள் கூட்டம் கூட்டமாக பெருகுவர். இதுதான் எங்களது உண்மையான நிலமை. இந்திய திரைத்துறை நூறு வருடத்துக்கு மேல் பரிமாண வளர்ச்சியடைந்து வெற்றிநடை போடும் பெருமையுடையது, அவர்களுடன் சேர்ந்து பயணிப்பது அவசியம்தான், பிரபலங்களை அழைத்து நிகழ்வுகள் நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் ஈழத்துக்கலைஞர்களையும் இணைத்துக்கொண்டால்  அது எமது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது எனது எண்ணம். ஈழத்துக்கலைஞர்களை அடையாளம் காணாமலும், அங்கீகரிக்காமல் உதாசீனப்படுத்துவது மனதிற்கு வேதனையளிக்கிறது. ஈழத்தில், யாழ் பல்கலைக்கழகங்களிலும் மட்டக்களப்பு விபுலானந்தர் கல்லூரியிலும்  தமிழர் பாரம்பரிய  பண்பாட்டுக் கலைகளை   பயிற்சிப்பதற்கு ஒரு துறையே நிறுவப்பட்டு  பாடமாக மட்டும் இல்லாது ஆராய்சிகளும் செய்து பயிற்சிகள் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதனால் பல கலைஞர்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஏன் புலன்பெயந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை?

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ - ஒரு பார்வை ( யோகன், கன்பெரா)


2016 கணக்கெடுப்பின் படி  சிட்னியில் 30,000 தமிழர்களும், மெல்பேணில் 25, 000 தமிழரும் வசிப்பதாக அறிய முடிகிறது. இந்த மக்கள் தொகை தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. அதாவது தமிழர்கள் செறிவாக வாழும் நகரங்களாக சிட்னி மெல்பேண் நகரங்கள் தொடர்ந்து இருக்கப் போகின்றன.
இவ்வகையில் தமிழ் கலை இலக்கிய செயற்பாட்டு மையங்களாக இந் நகரங்கள் இருந்து வருகின்றன என்பதும் உண்மையே. இந்தப் பின்னணியில் சிட்னியில் வசிக்கும் ஈழன் இளங்கோ தயாரித்த  திரைப்படமொன்றை பார்க்கலாம்.   இவர் ஏற்கனவே இன்னொரு திரைப்படத்தையும்  முன்னர் தயாரித்திருத்ததாக அறிந்திருந்தேன். ஏற்கனவே அவுஸ்திரேலிய தமிழ் முரசில் இத்திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை திரைப்படம்  இங்கு வெளியாக முன்னரே வந்திருந்தது.
கன்பெராவில்  சில வாரங்களுக்கு முன்பு  'சாட்சிகள் சொர்க்கத்தில்'  என்ற இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது . ஒன்றரை மணி நேரம் வரை ஓடும் இத்திரைப் படம் கடந்த 2009 ஈழ யுத்ததில் பாதிக்கப்பட்டோரின் சில குடும்பங்களின் அல்லது சிலரின்  தனித்தனிக்  கதைகளின்  ஒரு தொகுப்பு  என சொல்லலாம் .   இது எடுக்கப் பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும்  போது இது இரு வகையான பார்வையாளர்களுக்கு  எடுக்கப்பட்டிருக்கலாம் என்று  தோன்றுகின்றது. ஒன்று தமிழ் பார்வையாளராகிய ஈழம், தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு  மற்றையது இங்குள்ள வெள்ளையினத்தவர்களுக்கும் மற்றும்  மனித உரிமை அமைப்புகள் அகதிகளுக்கான அமைப்புகளுக்காகவும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இலங்கைச் செய்திகள்


தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மன்னார் மனித புதைகுழியை நேரடியாக பார்வையிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதிநிதிகள்

யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்

மன்னார் மனித புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின்  எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; மூவர் காயம்

ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி

வரலாற்று தீர்ப்பு ஐ.தே.க. கோலாகல கொண்டாட்டம் 

நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி!

ரணிலும் மைத்திரியும் நேற்றிரவு ரகசிய சந்திப்பு : பேசியது இதுதான்..!

சற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ

"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் 
ஒன்றும் செய்ய முடியாது" 

சிறிசேனவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி – சுதந்திரகட்சியின் 21 பேர் தெரிவித்தது என்ன?

மீண்டும் பதவியேற்றார் ரணில்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்



தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்


10/12/2018 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு, இனங்களுக்கு இடையிலான சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

உலகச் செய்திகள்


மெங்வான்ஜவ் ரொக்கப் பிணையில் விடுதலை 

பிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி 

பிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை

துருக்கியின் கோரிக்கையை மறுத்த சவுதி 

ஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு 

 11 பேருக்கு யமனான பிரசாதம்

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேத்தை அங்கீகரித்தது  அவுஸ்திரேலியா

அமெரிக்காவின் மேற்காசிய கொள்கையில் சவூதி செல்வாக்கின் இன்றைய நிலை?


மெங்வான்ஜவ் ரொக்கப் பிணையில் விடுதலை

12/12/2018 சீனத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் 10 பில்லியன் கனேடிய டொலர் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பேர்த் பாலாமுருகன் கோவில்







தமிழ் சினிமா - Aquaman திரை விமர்சனம்


ஹாலிவுட் திரையுலகின் விஜய்-அஜித் என்றால் மார்வல்-டிசி தான். எப்போதும் இவர்களுக்குள் ஒரு போட்டி இருந்துக்கொண்டே இருக்கும், ஹாலிவுட் ரசிகர்களும் நாம் இங்கு தமிழ் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது போல், அவர்கள் ஆங்கில கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை பாடுவார்கள்.
ஆனால், எப்போதும் மார்வல் கையே அங்கு ஓங்கியிருக்கும், பேட்மேன் சீரியஸ் தவிர்த்து டிசி காமிக்ஸ் அதளபாதாளம் தான், ஒரே அடியில் டிசியை உச்சத்திற்கு கொண்டு வர கான்ஜிரிங் இயக்குனர் ஜேம்ஸ் வார்னுடன் டிசி அமைத்த கூட்டணியே இந்த அகுவா மேன். இவை ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அட்லாண்டா(கடலுக்கடியில்) உலகில் இருந்து ஒரு ராணி கரை ஒதுங்குகின்றார். அவரை கலங்கரை விளக்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் தூக்கி காப்பாற்றுகின்றார். பின் ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே காதல் மலர, அவர்களுக்கு ஆர்தர் என்ற மகன் பிறக்கின்றான்.
ஆனால், அந்த ராணி அட்லாண்டா அரசனை திருமணம் செய்யாமல் ஓடி வந்தது பிறகு தான் தெரிகின்றது, அங்கிருந்து ராணியை பிடிக்க, ஆட்களை அனுப்ப, நம்மால் நம் கணவர், குழந்தைக்கு ஒன்றும் ஆக கூடாது என ராணி திரும்புகின்றார்.
அதே நேரத்தில் ஆர்த்தர் வளர, அவனுக்கு இயல்பாகவே தன் தாயை போல் அனைத்து சக்திகளும் இருக்கின்றது, இதற்கிடையில் அட்லாண்டா திரும்பிய ராணி வலுக்கட்டாயமாக அரசனுக்கு திருமணம் செய்ய அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கின்றது.
அவனோ கடலுக்கடியில் இருக்கும் ராஜ்ஜியங்களை ஒன்றினைத்து கடலுக்கு வெளியே(நம் உலகம்) வாழ்பவர்களை அழித்து ராஜாவாக முயற்சி செய்ய, அதை ஆர்த்தர் எப்படி முறியடிக்கின்றான் என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

நாம் முன்பே சொன்னது போல் டிசி-க்கு பேட் மேனுக்கு பிறகு கிடைத்த பொக்கிஷம் தான் இந்த அகுவா மேன். மார்வல் எப்போதும் 6லிருந்து 60வரை உள்ள ரசிகர்களை குறிவைக்கும், ஆனால், டிசி காமிக்ஸோ ஏதோ தங்களை அதிபுத்திசாலியாக காட்டிக்கொள்ள ஏதேதோ யோசித்து பல்பு வாங்குவார்கள்.
அதில் நோலன் இயக்கிய பேட் மேன் சீரியஸ் மட்டுமே தப்பித்தது, அதை தொடர்ந்து ஜாக் ஸ்னைடர் இயக்கிய பல சூப்பர் ஹீரோ படங்கள் சொந்த காசில் சூனியம் தான், இந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் ஜேம்ஸ் வார்னின் அகுவா மேன் தீர்வு சொல்கின்றான்.
டிசி என்றாலே இருட்டாக இருக்கும் படம் என்பது மாறி படம் முழுவதும் கலர்புல் விஷ்வல் ட்ரீட் தான். அதிலும் கடலுக்கடியில் இருக்கும் காட்சிகளை 3டி கண்ணாடியில் பார்ப்பது புல் மீல்ஸ் விருந்து சாப்பிட்டது போல் உள்ளது, ஜேம்ஸ் கேமரூன் கஷ்டப்பட்டு அவதார்-2விற்கு கடலுக்கடியில் பிரமாண்ட காட்சிகளை எடுத்து வருகின்றார் என்ற செய்தி கசிந்து வர, அதற்கு முன்னோட்டம் தான் இந்த அகுவா மேன்.
படத்தின் கதை என்னமோ அண்ணன், தம்பி ராஜா இடத்திற்கான பழைய கதை. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதம், குறிப்பாக இரண்டாம் பாதியில் ட்ரைடனை தேடி செல்ல, அதற்கு காட்டப்படும் வழிகள் எல்லாம் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று கண்களுக்கு விஷ்வல் விருந்து வைத்துள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தின் விஷ்வல் காட்சிகள், அதிலும் 3டியில் மட்டும் பார்ப்பது நல்லது.
இரண்டாம் பாதியில் வரும் சண்டைக்காட்சிகள், அதை எடுத்த விதம்.
சூப்பர் ஹீரோ படம் என்றால் அடிதடி மட்டுமில்லாமல் கொஞ்சம் எமோஷ்னலுடன் சொன்ன விதம்.

பல்ப்ஸ்

படத்தின் கதை, இதே கதையில் சுமார் 1000 படமாவது வந்திருக்கும்.
ட்ரைடனை ஆர்த்தர் எடுக்கும் காட்சி செம்ம பில்டப் கொடுத்து அவர் அசால்ட்டாக அதை எடுப்பது அட போங்கப்பா மொமண்ட்.
மொத்தத்தில் பாக்ஸ் ஆபிஸிலும் சரி, ரசிகர்கள் மனதிலும் சரி வீழ்ந்து இருந்த டிசி-யை கைத்தூக்கி உயர்த்தியுள்ளான் இந்த அகுவா மேன்.