சிட்னி துர்க்கை அம்மன் அனுக்கிரகத்துடன் வரலட்சுமி பூஜை 05.08.2022 அன்று வெகுவிமரிசையாக இடம்பெற்றது
'அயல்நாட்டுக்கே முதலிடம்' என்ற உறுதியான கொள்கையின் கீழ் இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற உதவிகள், ஆதரவுகள் ஏராளம்.இந்நிலையில் சீனக்கப்பலின் இலங்கை வருகையானது இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரப் போவதில்லை!
அம்பாந்தோட்டை துறைமுகமானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமே சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படுமென்று இந்தியாவுடன் அவ்வேளையில் இலங்கை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பட்டது. ஆனால் அந்த உடன்படிக்ைக மீறப்படும் வகையில் இப்போது சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று அதே துறைமுகத்திற்கு வர இருக்கின்றது.
அதற்கு முன்பதாக இலங்கையின் சமீப கால நெருக்கடி குறித்தும், இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற உதவிகள் மற்றும் ஆதரவுகள் குறித்தும் இவ்விடத்தில் குறிப்பிடுவது முக்கியம். இலங்கைக்கு இந்தியா பல பில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை நட்பு ரீதியாக வழங்கியுள்ளது. பெருந்தொகைக் கடன்தொகையையும் வழங்கியுள்ளது.