நம்பிக்கை வேண்டும் - பாத்திமா ஹமீத் ஷார்ஜா

.

என்னயிந்த வாழ்க்கையென்று
அலுத்துக்கொள்ளும் நேரங்களில்,
நம்பிக்கைதரும் நிகழ்வுகள்சில
என்கண் முன்பே!

அணைத்தகைக் குழந்தையோடு,
அழுக்கடைந்த உடையோடு, 
அடுத்தவீட்டு வாசலில்,
அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி!

வாழ்க்கை வாழ்வதற்கேவென நம்பிக்கை கொடுத்தாள்!

கல்லூரியில் படிக்கும்மகனை,
காலையில் எழுப்பும்போது,
கனமான எதிர்காலம்குறித்து,
கலக்கம் எனக்குள்!

Laughing-O-Laughing நாடகம் பற்றிய ஒரு கண்ணோட்டம் - இந்துமதி சிறினிவாசன்

.

"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்னப் பொடியன் பெரிய மனுசர் நடிப்பைப் பார்க்க சிரிப்பு வருது" என்பது போல அமைந்திருந்தது  Laughing-O-Laughing. கடந்த 14/15 ம் திகதிகளில் சிட்னி மாநகரில் இந்த நாடகத்தினை பார்த்து மகிழக் கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்திருந்தது. 'அறம் செய்ய விரும்பு' என்ற ஔவை மூதாட்டியின் வழிப்படி ஆண்டுதோறும் மருத்துவ நிதி சேகரிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டு வருகிறது. இன் நிகழ்வில் டாக்டர் ஜெயமோகனின் Laughing-O-Laughing நாடகம் கடந்த சில வருடங்களாக நடை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஜெயமோகன் அவர்கள் பன்முகங் கொண்ட ஒரு திறமையாளர் என்றே கூறலாம். நாடகத்தின் வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்து அம்சங்களையும் நேர்த்தியாகவே செதுக்கியிருந்தார். தனியே சிரித்துவிட்டு செல்லாமல் சிரிப்பினூடாக ஏதோவொரு சமூகத்தின் செய்தியினை பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது என்பதில் கவனம் எடுத்துள்ளார் என்பதை நாடகங்களினைப் பார்கின்ற போது துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.



ATBC அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள்

.
ஞாயிற்றுக் கிழமை  சிட்னியில் நடைபெற்ற அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள் .

1ம் பரிசு இலக்கம்   1093
2ம் பரிசு இலக்கம்    1522
3ம் பரிசு இலக்கம்    3251
4ம் பரிசு இலக்கம்    1972
5ம் பரிசு இலக்கம்    1749
6ம் பரிசு இலக்கம்     2002
7ம் பரிசு இலக்கம்    1549
8ம் பரிசு இலக்கம்     1781
9ம் பரிசு இலக்கம்     3334
10ம் பரிசு இலக்கம்    1650

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு

.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள கலை - இலக்கிய நிகழ்வுகள் - மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெறும்.
இதனையடுத்து அண்மையில் வெளியான இரண்டு புதிய நாவல்கள் மற்றும் இரண்டு புதிய சிறுகதைத்தொகுதிகள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் இடம்பெறும்.
வாசிப்பு அனுபவப்பகிர்வில் இடம்பெறும் நூல்கள்
பொக்ஸ் -- Box ( நாவல்) ஷோபா சக்தி - விமர்சன உரை: திரு. ஜே.கே. ஜெயக்குமாரன்
நிலவு குளிர்ச்சியாக இல்லை - (சிறுகதைத்தொகுதி ) - வடகோவை
வரதராஜன் -  விமர்சன உரை: டொக்டர் நடேசன்
ஆயுதஎழுத்து -- ( நாவல்) - சாத்திரி - விமர்சனஉரை: திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி
கோமகனின் தனிக்கதை -- ( சிறுகதைத்தொகுதி ) கோமகன் -விமர்சனஉரை: திரு. எஸ். அறவேந்தன்

கருத்துரை -- போருக்குப்பின்பான ஈழத்து இலக்கியவளர்ச்சி
                  திரு. சி. வன்னியகுலம்
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்

தரிசனம் 2015 – புதிய நிகழ்வு ஒரு பார்வை

.

“கரம் நீட்டி ஒன்றிணைவோம்”
துர்க்கை அம்மன் கோவில் மண்டபத்தில் தரிசனம் கார்த்திகை மாதம்  21ம் திகதி சனி மாலைப் பொழுதில் திட்டமிட்ட நேரத்துக்கு மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பிக்கப்பட்டது.
இது முற்று முழுதாக மலையக தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கும்  பிற்படுத்தப்பட்ட  பாடசாலைகளின்   தரத்தினை உயர்த்துவதற்கும் என ஏற்பாடு செய்யப்பட்ட பல்சுவை கதம்ப நிகழ்வு. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ஆஸ்திரேலிய தேசிய கீதம் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கப் பட்ட நிகழ்ச்சியின் முதல் கலைநிகழ்ச்சியாகஇ ஸ்ரீமதி புஷ்பா ரமணாவின் ஜனரஞ்சனி  Music Academy   மாணவர்கள் இனிய கருநாடக இசையை வழங்கினார்கள். சிறார்களால் பாடப்பட்ட கருநாடக இசைப் பாடல்களில்  “ஜனனி ஜனனி” குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தது.

மெல்பேர்ண் மாவீரர்நாள் - 2015 நிகழ்வுகள்

.
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சரியாக மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வில்தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்  திருமதி மனோறஞ்சினி நவரட்ணம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் கௌரிகரன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் தயாநிதி அவர்கள் அவர்கள் ஏற்றி வைத்தார்.

கவி விதை - 5 - வலியும் எலியும் - -- விழி மைந்தன் --

.

பலபல யுகங்களுக்கு  முன்பு பகலவன் 'சைட்' அடித்த  பூமிப் பெண், வித்தியாசமானதொரு பச்சைப் பட்டாடையை விரும்பி அணிந்திருந்தாள்.

பன்னங்கள் அந்தப் பட்டாடையில்  பிரதான 'டிசைன்' ஆயிருந்தன. பனையளவு உயர்ந்திருந்த பன்னங்கள் பரந்த இலைகளை விரித்து நின்றன. பன்னக்  காடுகளுக்குள் இருந்து பயங்கரமான சத்தங்கள் எழுந்தன. சிற்சில சமயங்களில், பூமி அதிரும்படி, புதர்கள் சரசரக்கும் படி, சில்லறை விலங்குகள் சிதறி ஓடும்படி பேருருவங்கள்  சில நடந்து சென்றன.

ஆம்! எங்கெங்கும் டைனோசர் ஆட்சி! 

 நிலமெங்கும் நடந்து திரிந்தன டைனோசர்கள். நெடு வான் எங்கும் பறந்து திரிந்தன அவை. நீள்கடல் எங்கும் நிறைந்து ததும்பின அவை. இராட்சத உருவம் கொண்டு இரை  தேடிச் சமர் செய்தன அவை.

எழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு - முருகபூபதி

.
இலக்கியப்பணியுடன்  மருத்துவப்பணியும் மேற்கொள்ளும்    மனிதாபிமானி ச. முருகானந்தன்


                                        அவுஸ்திரேலியாவில்  தமிழர் ஒன்றியம்  தொடங்கிய 1990 ஆம் ஆண்டில்  பாரதி விழாவை  நடத்தினோம்.  அதுவே  இந்த கங்காரு நாட்டில்  நடந்த  முதலாவது  பாரதிவிழா.   சட்டத்தரணியும் கலை, இலக்கிய  ஆர்வலருமான  செல்வத்துரை  ரவீந்திரனின் தலைமையில்   பாரதி  விழா  மெல்பன்  பல்கலைக்கழக  உயர்தரக்கல்லூரியில்  நடந்தது.
சிட்னியிலிருந்து  மூத்த  எழுத்தாளர்  எஸ்.பொன்னுத்துரை பிரதம பேச்சாளராக   கலந்துகொண்டார்.    அவர்   மறைந்து   கடந்த  27  ஆம் திகதி  ஒரு வருட  தினமாகும்.
இவ்விழாவில்  மாணவர்களுக்கிடையே  நாவன்மைப் போட்டிகளும் நடத்தி,  தங்கப்பதக்கங்கள்  பரிசளித்தோம்.   இவ்வாறு  இங்குள்ள தமிழ்  மாணவர்கள்  தங்கப் பதக்கங்கள்  பெற்ற  முதல் நிகழ்ச்சியாகவும்   பாரதி விழா  அன்று  நடந்தேறியது.   அதன்  பின்னர் சில  வருடங்கள்  கழித்து  நண்பர் - எழுத்தாளர்,  நாடகக்கலைஞர் மாவை  நித்தியானந்தன்  மெல்பனில்  பாரதி பள்ளி  என்ற தமிழ்ப்பாடசலையையும்  உருவாக்கி , அதற்கும்  20 வயது கடந்துவிட்டது.

இலங்கைச் செய்திகள்


கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு

"2,218 சிங்களவர்கள் மீள்குடியேற்றம்''

 எயிட்ஸ் நோயால் 357 பேர் மரணம் : யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் : சுகாதார கல்வி பணியகம் அதிர்ச்சி தகவல்

பிள்ளையானின் கைது அரசியல் பழிவாங்கல் : காமினி லொக்குகே

இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை

பெண்களின் வன்முறைகளுக்கெதிராக கைப்பட்டி போராட்டம்

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத விடுமுறை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா

 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் மாணவன் தற்கொலை

இப்போதாவது காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடு : யாழில் ஆர்ப்பாட்டம்

எல்லைகளை உடைத்த கலாசார சங்கமம் - பேராசிரியர். சி. மௌனகுரு

.
எல்லைகளை உடைத்த கலாசார சங்கமம்
இலங்கையின்  பல்வேறு  பிரதேசத்தைச்  சேர்ந்த, உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்த காட்சி
சர்வதேச நடன நாடக விழாவில் மட்டக்களப்பு   அரங்க ஆய்வு கூடத்தின் காண்டவதகனம் --- கூத்துரு நாடகம்
பேராசிரியர். சி. மௌனகுரு


குக்கிராமங்களில்  ஆடப்படும்  கலைகளுள்  ஒன்றான  கூத்துக்  கலை சர்வதேச  நடனக்  கலைஞர்கள்  பங்கு கொள்ளும்  ஒரு  சர்வதேசக்  கலை விழாவில்   கலந்து  கொண்டு  பலரது  கவனத்தையும்  ஈர்த்துப் பாராட்டுக்களையும்   பெறுகின்றதென்றால், அதற்கான  காரணம் அக்கூத்துக்கலையுள்  காணப்படும்  உள்ளார்ந்த   வலிமை  மிகுந்த  ஆடல் பாடல்கள்தான்அவற்றை  வெளிக்கொணர  மட்டக்களப்பு  அரங்க  ஆய்வு கூடம்  ஒரு  கருவியாயச் செயற்பட்டமை  அரங்க  ஆய்வு  கூடம்  பெற்ற  பெரும் பாக்கியம்
NATANDA நடன அரங்கின் ஆதரவில் சர்வதேச நடன விழா கடந்த 14,15,16 17,18 ஆம் திகதிகளில் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடந்தேறியது. இவ்விழாவில்  அமெரிக்கா,  இங்கிலாந்து, ஜேர்மனி, லெபனான்,  இந்தியா, மலேசியா, கொரியா  ஆகிய நாட்டுக் கலைஞர்களுடன் இலங்கைக்கலைஞர்களும் தத்தம் அளிக்கைகளுடன் கலந்து கொண்டனர்.
.சர்வதேச நடனக் கலைஞர்களின் சங்கமமாக அமைந்த இவ்விழாவுக்கான கட்டணம் மிக அதிகம்தான். எனினும் 5 நாட்களும் பெரும்  திரளான மக்கள் கலந்து கொண்டமை நடனத்தில் அவர்களுக்கிருந்த ஆர்வத்தைச் சுட்டி நின்றது
40க்கு மேற்பட்ட உள்ளூர், வெளியூர்  கலைஞர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் மாலையில் நிகழ்வுகள் லயனல் வென்ட் அரங்கில் மேடையேறின.

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

.


நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும்வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால்நீர்க்கோவைமயக்கம் போன்றவை குணமாகும்புத்தி தெளிவு உண்டாகும்;மலமிளக்கும்தாதுக்களைப் பலப்படுத்தும்.
நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்பசி உண்டாக்கும்உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

பாரதியின் ' தராசு ' - தனித்துவமான ஓர் ஆவணம் -மாலன் ( மூத்த பத்திரிகையாளர்)

.

அன்று நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு இன்றும் நேரடிச் சாட்சியமாக நிற்பவை தராசு கட்டுரைகள்.
பாரதியின் படைப்புகளில் தனித்துவமானது தராசு. வாசிப்பதற்கு சுவையாகவும் யோசிப்பதற்கு பொறி கொடுப்பதுமான இந்தப் பத்திகள் எழுதப்பட்டு இன்றோடு நூறாண்டுகள் ஆகின்றன. 25.11.1915 அன்று சுதேசமித்ரனில் தராசின் முதல் பத்தி பிரசுரமானது.
நூறாண்டுகளுக்குப் பிறகும் அர்த்தமுள்ளவையாக இருப்பது மட்டுமல்ல அதன் சிறப்பு. அதன் முக்கியத்துவத்துக்கு மற்றும் சில காரணங்களும் உண்டு. அவை:
அரசியல்ரீதியாக பாரதியின் மன எழுச்சிக்குக் காரணமாக இருந்த சுதேசி இயக்கம் 1911-12-ல் ஒடுக்கப்பட்டுவிட்டது. 1910 மார்ச் 12-ம் தேதியோடு இந்தியா நிறுத்தப்பட்டுவிட்டது. மற்ற பத்திரிகைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட, தனக்கென பத்திரிகைகள் ஏதும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.