அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 25/09/2023 - 01/10/ 2023 தமிழ் 14 முரசு 23
தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
என்றெல்லாம் அசரீரியாகக் கேட்கும் பாட்டுகள் மகாகவி சுப்ரமணிய பாரதியாரை நினைத்து விட்டால்.
தமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் நினைவில் இன்று அவரின் பாடல்களைத் தாங்கி வந்த படங்கள் குறித்த ஒரு சிறு அலசலைக் கொடுக்கலாம் என்று முனந்ததன் வெளிப்பாடு இது.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற முன்பே மேடை நாடகங்களில் பாடிப் புகழ் பூத்தவை. குறிப்பாக எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோர் தம் நாடகங்களில் பாரதி பாடல்களைப் பாடிப் போற்றினர்.
1931ஆம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
1944ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது. அதில் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் தனி நபரிடமிருந்து பாரதி பாடல்களை “மீட்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது.
சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய நாட்களில் சுடச் சுட வாங்கி ஒரு தடவை அந்தப் புத்தக வாசனையை நாசியில் ஏற்ற வாசித்து மகிழ்ந்த “கோகுலம்” சிறுவர் இதழ் கொடுத்த அதே பரவச உலகத்துக்குப் பின் சென்று வாழ்ந்து விட்டு வந்தேன். அப்படியொரு பெருமிதத்தைக் கொணர்ந்தது ஈழத்தில் இருந்து இப்போது துளிர்த்திருக்கும் “அறிந்திரன்” சிறுவர் சஞ்சிகையின் வரவு.
“இரன்” என்பது ஈழத்து வாழ்வியலில் ஒன்று கலந்த சொல்லாடல், “இருங்க” என்ற தமிழகத்து மக்களின் பேச்சு வழக்குக்கு சமமானது.
ஈழத்தில் 32 வருடங்களாக வெளிவந்து சாதனை படைத்த, முன்னோடி நகைச்சுவை சக இலக்கிய இதழ் “சிரித்திரன்” சஞ்சிகை கூட இந்த “இரன்” என்ற சிறப்புப் பெயரை ஒட்டிக் கொண்டு வந்தது.
“சிரித்து இரன்” சிரித்திரன் என்பது போல இப்போது “அறிந்து இரன்” அறிந்திரனாக.
ஒருவனது பரந்த வாசிப்பு வெளிக்கும், பன்முக எழுத்தாற்றலுக்கும் முகிழ் போல அமைவது அவனது சிறு வயது வாசிப்புப் பழக்கம். அதுவும் அந்தக் காலத்தில் எங்கள் பால்ய வாழ்வில் ரத்னபாலா, பாலமித்திரா, அம்புலி மாமா தொடங்கி அடுத்த கட்ட நகர்தலாக அமைந்த “கோகுலம்” சிறுவர் சஞ்சிகையின் பரந்த இலக்கியச் செயற்பாடு மிக முக்கியமாகக் கொள்ள வேண்டியது. அது தன் வாசகராய் அமைந்த சிறுவர்களையும் உள்ளிழுத்து அவர்களையும் ஆக்க இலக்கியதாரர்களாக அமைத்து ஒரு பரவலான வாசகர் வட்டத்தை கோகுலம் குடும்பமாக அமைத்துக் கொண்டது.
இலங்கை சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டு மையம், தமிழ்நாடு
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை , சென்னை
டிஸ்கவரி புக்பெலஸ் ஆகியன இணைந்து டிசம்பர் 06 முதல் நடத்திய தொடர் காணொளி அரங்கு !
08-12
-2020 அரங்கில் முருகபூபதி சமர்ப்பித்த உரை
பேராசிரியர்
க. கைலாசபதி இலக்கியத் துறை, இதழியல் துறை
மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய
பங்கு அளப்பரியது. கைலாசபதி அவர்கள் மறைந்து முப்பத்தி எட்டு வருடங்கள்
ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது வாழ்வையும் பணிகளைப் பற்றியும் தொடர்ச்சியாக உலகில் எங்காவது ஒரு
திசையிலிருந்து யாராவது ஒருவர் அல்லது
ஏதேனும் ஒரு அமைப்பு பல தளங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுகின்றன. கருத்தரங்குகள் நடத்துகின்றன.
அந்த ரீதியில் எமது
நண்பர் பேராசிரியர் பாலசுகுமார் கைலாஸ்
அவர்களுக்காக அவரது நினைக்காலத்தில் இந்த
தொடர்கருத்தரங்கை ஒருங்கிணைத்துள்ளார்.
இதிலும் பாருங்கள்….
கைலாஸின் ஆத்மாதான் இதனையும் ஆக்கபூர்வமான வடிவத்தில் ஒழுங்கமைக்க
தூண்டியிருக்கிறது என்ற நம்பிக்கையுடன் நானும் இதில் கலந்துகொள்கின்றேன்.
கைலாஸ் சிறந்த கல்விமான்,
இலக்கிய சமூக அரசியல் ஆய்வாளர். இலக்கிய
திறனாய்விலும் ஒப்பியல் இலக்கிய விமர்சனத்துறையிலும் சிறந்த ஆளுமை என்பதில் எமக்கிடையே கருத்து பேதம் இருக்காது. அந்த பண்புகளுக்கெல்லாம் அப்பால், அவர்
மிகச்சிறந்த நிருவாகி.
அவரிடமிருந்த குறிப்பிட்ட
நிருவாகப்பண்பு, தனக்குப்பின்னரும் வரும்
தலைமுறையிடத்தில் கடத்துகின்ற, அல்லது பாய்ச்சுகின்ற இயல்பு இருக்கிறது பாருங்கள்,
அதுதான் நாம் அவரிடம் கற்றுக்கொண்ட முன்மாதிரி.
அவரைக்கொண்டுபோய் எங்கோ ஒரு முன்பின் தெரியாத தேசத்தில் விட்டிருந்தாலும், அவர் தனது நிருவாகப்பண்பினை
வெளிப்படுத்திக்கொண்டே இருந்திருப்பார்.
அவரது அந்தப்பண்பில் தன்முனைப்பு இருக்காது, மற்றவர்களை இனம்கண்டு, உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும், ஆலோசனை சொல்லும் இயல்புகளே மேலோங்கியிருக்கும்.
இந்தப்பின்னணிகளிலிருந்துதான்
இலங்கை தமிழ் இதழியல் துறையில் கைலாசபதியின் வகிபாகத்தை பற்றி இந்த அரங்கில்
பேசுவதற்கு முன்வந்துள்ளேன்.
எழுபதுகளில் இலங்கை படைப்புலக பரப்பில்தனது இலக்கியபயணத்தைஆரம்பித்து கடந்த நான்குதசாப்தகாலங்களாகபெண்ணியசிந்தனைகளுடனுடம்அளவுகடந்தமொழித்தாகத்துடனும்வீச்சுடன்வலம்வந்தஅருண்விஜயராணிஅவர்கள்கடந்துடிசெம்பர் 13 ஆம்திகதிஆஸ்திரேலியாவில்காலமானார்.
அருண்விஜயராணியின்எழுத்துக்கள்குறித்துகடந்தகாலங்களில்பலமட்டங்களில் பலரும்பேசியிருக்கிறார்கள். ஆனால்,இவரதுபடைப்புக்களின்வெற்றியின்பின்னாலுள்ளசூட்சுமம் என்ன? அவரதுஎழுத்துக்களில் அப்படி என்னதான் இருக்கிறது என்று இப்படிகம்பளம்விரிக்கிறார்கள்என்பதைஅறிய பலரும் ஆர்வப்படலாம்.
அருண்விஜயராணிஅவர்கள்பெண்ணியம்சார்ந்தகருத்துக்களைமாத்திரம்முன்வைத்துசமரசம்இல்லாதஎழுத்துப்பயணத்தைமேற்கொண்டதுமட்டும்தான்அவரைஒருபடைப்பாளியாகதொடர்ந்தும்தரமுயர்த்திவைத்திருந்ததா? இடைவிடாதுஎழுதிவரும்ஒருபடைப்பாளிக்கு இந்த ஒற்றைதகுதி மட்டும்போதுமானதா? புலம்பெயர்ந்துவாழும்எத்தனையோபெண்படைப்பாளிகள்மத்தியில்இவர்ஏன்தனித்துவமாகதெரிகிறார்?
ஜாலியன் வாலாபாக்கில் இந்தச்
சம்பவங்கள் நடந்த போது உத்தம்சிங் என்ற இருபது வயது வாலிபனும் அங்கு நின்று
காயப்பட்டிருந்தான். அவன் ஒரு சபதம் பூண்டான். அவன் படித்தவனல்லன். வெகுசீக்கிரம்
தொழிலாளியாக வேலை பார்ப்பதற்கு ஆபிரிக்க நாட்டிற்கு சென்றான்.
அங்கிருந்து அமெரிக்காவை அடைந்தான். அங்கு அவனது சபதம் கனல்விட்டு
எரிந்தது. அமெரிக்காவிலிருந்தும் நாட்டின் விடுதலை போராட்ட சக்திகளோடு முக்கியமாக
லாலா லாஜ்பட் ராய், பகவத்சிங் போன்றோருடன் தொடர்பில் இருந்தான்.
அமெரிக்காவிலிருந்து 1927இல்
இந்தியா வந்தபொழுது அனுமதிக்கப்படாத அரசியல் பிரச்சார ஆவணங்களும் சில
துப்பாக்கிகளும் அவன் வசம் இருந்தமையால் கைதாகி ,
நான்கு
வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து வெளியே வந்தான்.
ஆனால், பிரிட்டிஷ் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட அடக்கு முறைகளினால் திரும்பவும் வெளியேறி பல
ஐரோப்பிய நாடுகளூடாக இங்கிலாந்தை வந்தடைந்தான்.
அங்கு தனது சபதத்தை நிறைவேற்றும் முகமாகவும், தனது மக்களை ஒழித்த டயரை பழிவாங்கும்
முயற்சிகளில் செயற்பட்டான். ஆனால், ஜாலியன் வாலாவில் நேரடியாக உத்தரவுகளை வழங்கிய
டயர், உத்தம் சிங் இங்கிலாந்தை அடைந்த சில மாதங்களில் இறந்து
விட்டானென அறிந்து அதற்கு பிரதான காரணியாக
இருந்த மைக்கேல் டயரை பின் தொடர்ந்து சென்று அவன் ஒரு கூட்டத்தில் (13 மார்ச்
1940) பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக்
கொலை செய்தான்.
மரண தண்டனை நிறைவேற்றம்
அவன் சுட்டுவிட்டு தப்பி ஓடவில்லை. அவனை கைது செய்தபொழுது, “ தான் 21 வருடங்கள் இதற்கான தருணத்திற்கு காத்திருந்ததாகவும், தன் மக்களின் அபிலாசைகளை
ஒடுக்க நினைத்தவனை அழித்ததில் நிம்மதி பெறுகிறேன்
“ என்றும் பெருமையாகச் சொன்னான்.
31 ஜூலை 1940 இல்
அவனது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு, அவனது
அஸ்தி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேரு, காந்தி போன்றோர் உத்தம்
சிங்கின் செயல் தைரியமானதும் உத்வேகமானதும் என்றாலும் தேவையற்றது என்று கருதினர்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய
கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு
குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு
புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக
நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன்.
அனார் 1990 களின் நடுப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார்
என்று நினைக்கிறேன்.
எனினும் அவருடைய ஆரம்ப காலத்திலேயே, 2004
இல் வெளிவந்த அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி ஓவியம் வரையாத துரிகை
இலங்கை சாகித்திய விருதும், மாகாண இலக்கிய விருதும் பெற்றது.
கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளில் ஓவியம் வரையாத தூரிகை உட்பட அவரது ஐந்து
கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. எனக்குக் கவிதை முகம் (2007), உடல் பச்சை வானம்
(2008 ), பெருங்கடல் போடுகிறேன் (2013), ஜின்னின் இரு தோகை (2017) என்பன அவை. இந்த
ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 151 கவிதைகள்தான் உள்ளன.
அவர் எழுதத் தொடங்கி கடந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் அவர் எழுதியவை அதிகம்
இல்லை. ஆயினும், இன்று அவர் இலங்கையில் மட்டுமன்றி ”தமிழ் கூறும் நல்லுலகு“
எங்கும் நன்கு அறியப்பட்டவராக, ஈழத்து முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராக அங்கீகாரம்
பெற்றிருக்கிறார். கவிதைக்கான கனேடிய இயல்விருது, விஜய் தொலைக்காட்சியின்
இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண் விருது, கவிஞர் ஆத்மாநாம் விருது, ஸ்காபரோ
இலக்கிய விருது என பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - பின்பு
கூற்றுக்கு இரையென மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே
வீழ்வேன் என்று நினைத்தாயோ!
ஆம் பாரதியின் வாழ்க்கை வேடிக்கையானது அல்ல. வேகமானது விவேகமானது.சொல் புதிது பொருள் சுவை புதிது சோதிமிக்க நவகவிதை என்று தன் கவிதைக்கு மகுடம் சூட்டிக் கொண்டவர்.
தாலாட்டு பாடல்
நேற்று இரவு பாரதி என் கனவில் வந்தார். பல நாட்களாக என் மனதில் தேங்கிக் கிடந்த ஒரு கேள்வியைக் கேட்டேன்.'பல்வகைப் பாடல்களைப் பாடிய நீங்கள் தாலாட்டுப் பாணியில் ஒரு பாடலும் பாடவில்லையே ஏன்?' அதற்குப் பாரதி சொன்ன பதில் என்னைப் பிரமிக்க வைத்தது.
அடிமை இந்தியாவில் ஏற்கனவே உறங்கிக் கிடக்கின்ற மக்களை உசுப்பி விடப் பிறந்தவன் இன்னும் உறங்க வைக்கின்ற தாலாட்டை நான் எப்படிப் பாடமுடியும்? அதனால்தான் திருப்பள்ளியெழுச்சி பாடினேன். ஆண்டவனையும் அரசனையும் துயில் எழுப்ப பாடிய துறையை மாற்றி ஒரு நாடு துயில் எழவேண்டும் என்பதற்காக பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினேன். அதில் கூட ஒரு புதுமை செய்தேன். தாய்தான் குழந்தைகளை எழுப்புவாள். ஆனால் இங்கு, விடுதலை தவறிக் கெட்டு உறங்கிக் கொண்டிருந்த பாரதமாதா என்ற தாயை, விடுதலைக்குப் போராடும் தேசியத் தலைவர்கள் என்ற குழந்தைகள் எழுப்புவதாக அமைத்தேன்.
'மதலைகள் எழுப்பவும்
தாய் துயில்வாயோ
மாநிலம் பெற்றவள்
இது உணராயோ'
- பாரதியின் விளக்கம் என்னைக் கவர்ந்தது.
டிசம்பர்
மாதம் 10 ஆம் திகதி முக்கியமான தினம். இன்றுதான் சர்வதே மனித உரிமைகள் தினம்.
அன்னையர்
தினம், தந்தையர் தினம், மகளிர் தினம்,
ஆண்கள் தினம், அகதிகள் தினம், காதலர்
தினம் என்று ஏதாவது ஒன்று வருடம் ஒருமுறை வந்துவிட்டு, கடந்துசென்றுவிடும்.
அன்னையர்
தினம், தந்தையர் தினம், காதலர் தினம் வந்தால், அதற்காக பரிசுப்பொருட்கள்
வாங்குவதற்கு ஆர்வம் காண்பிப்பார்கள்.
பரஸ்பரம் வாழ்த்துக்களை கூறுவார்கள்.
மலர்கள், மலர்க்கொத்துக்கள்
விற்பனையாகும் கடைகளில் ஆட்கள் வந்து செல்வார்கள்.
ஊடகங்களும் இதுபற்றி ஓரிரு பக்கங்களில் கட்டுரைகளை
வெளியிட்டு, தனது ஊடகதர்மத்தை நிலைநாட்டிவிடும்.
காதலர்கள்
கவிஞர்களாயின் காதலர் தின கவிதை எழுதுவார்கள்.
அன்னை, தந்தை பாசம் மிக்க கவிஞர்களும் ஏதாவது கிறுக்குவார்கள்.
குறிப்பிட்ட
இந்தத் தினங்கள் பற்றிய அடிப்படை அறிவோ பிரக்ஞையோ
எனக்கில்லாதிருந்த ஒரு காலத்தில் இலங்கையில்
1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதியன்று வெளியிடவேண்டிய மனித உரிமைகள்
தொடர்பான பிரசுரத்தை நான் எழுதநேர்ந்தது.
அந்தப்பிரசுரம்
அவ்வேளையில் சிறைகளில் அடைபட்டுக்கிடந்த அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்
எனக்கோரும் பிரசுரம்.
எமது
இலங்கையில் காலம் காலமாக அரசியல் கைதிகள்
சிறைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
இரும்பு
அல்லது மரத்தாலான உடல்பகுதி கொண்டது டங்கா. முரசின் அமைப்பில் இருக்கும். முகங்கள்
தோலால் மூடி
இருக்கும். குச்சிக்கொண்டு முழக்கப்படும். இதை டமாரம் என்றும் சிலர் அழைக்கிறார்கள்(டமாரம்
என்று வேறு ஒரு இருமுக தோலிசைக்கருவியும் உண்டு). இரு கருவிகள் சேர்ந்தது இந்த டங்கா.
டங்கி என்றும் சில இடங்களில் பெயர் வழங்குகிறது. போர், அரச ஊர்வலங்களில் இந்த கருவிகள்
முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தன. அரசர்களின் காலத்திற்குப் பிறகு இக்கருவிகள் பெரும்பாலும்
கோவில் விழாக்களில் தான் பயன்பாட்டில் உள்ளது. சென்ற நூற்றாண்டில் காஞ்சி பெரிய சங்கராச்சார்யாரின்
ஊர்வலங்களில் டங்காவும் அதைச் சுமந்து செல்லும் மாடுகளும் இருந்தன. பெரும்பாலும் இந்த
இசைக்கருவி காளை மாடு, குதிரை மீது கட்டி இசைக்கும் வழக்கம் இருந்தது. கோவில் சிற்பத்
தொகுதிகளில் நாம் இந்த சிற்பங்களை இன்றும் காணலாம். டங்கா பற்றிய குறிப்புகள் பிற்கால
இலக்கியங்களில் உள்ளன.
மதுரை
மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் விழா
நாட்களில் காளை மாடு மீது டங்கா வைத்து ஊர்வலமாக
செல்வதை நாம் இன்றும் காணலாம். சென்ற மாதம் இந்த கோவிலின் டங்கா மாடு இறந்து விட்டது.
சில ஆண்டு முன்பு வரை மதுரையில் டங்கா இசைக்கருவி யானையின் மீதும் வைத்து இசைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராசர் மற்றும் காமாட்சியம்மன்
கோவில்களிலும் டங்கா உள்ளது. காமாட்சியம்மனின் மாசி மக பெருவிழாவில் சென்ற ஆண்டு
வரை குதிரை மீது வைத்து டங்கா ஊர்வலம் நடைபெற்றது. இந்த வருடம் நிறுத்திவிட்டார்கள்.
வரதாராசர் கோவிலில் குதிரை மீது வைத்து விழா நாட்களில் டங்கா இசைக்கும் வழக்கம் இப்பொழுதும்
உள்ளது. பெரும்பாலும் பெயர் அளவில் தட்டப்படும் என்று சொல்லலாம்.
கொங்கு
நாட்டிலும் பல இடங்களில் காளை மாடு மீது டங்கா வைத்து இசைக்கும் வழக்கம் உள்ளது. பழனி
முருகனின் தைப்பூச காவடி பயணங்களில் நாம் கிராமப்புர மக்கள் காளை மாடு மீது டங்கா வைத்து
இசைத்து வருவதை பாரம்பரியமாக்க கடைபிடிக்கிறார்கள். இவையன்றி இப்பகுதிகளில் காளை மாடுகளின் மீது வைத்து இசைக்கப்படும் சிறுமுரசு
என்னும் இசைக்கருவியும் உண்டு.இதுவும் டங்காவை ஒத்து இருக்கும்.
பொலிஸ் சேவை ஆணைக் குழு உறுப்பினராக பரமேஸ்வரன் நியமனம்
ஜூன் மாதத்தின் பின் தரையிறங்கிய முதல் விமானம்
இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறப்பு
வடமராட்சியில் பொலிஸாரின் அட்டகாசம்- நபர் ஒருவரை துப்பாக்கி முனையில் வைத்து சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்டல்!
கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பில் சாதக சூழல்
முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கும் கொரோனா தொற்று
விமான நிலையங்களை 26 முதல் திறக்க ஏற்பாடு
பொலிஸ் சேவை ஆணைக் குழு உறுப்பினராக பரமேஸ்வரன் நியமனம்
Tuesday, December 8, 2020 - 12:04pm
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவருக்கு இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் யாப்பின் 41(ஏ) மற்றும் 155 (ஏ) (1) சட்டப்பிரிவுக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டத்தையும் அத்துடன் சட்டத்தரணியுமாவார்.
தமிழ் திரையுலகில் கதை வசனகர்த்தாவாக திகழ்ந்தவர் எம் எஸ் சோலைமலை இவருடைய எழுத்தில் உருவான பதிபக்தி, பாவமன்னிப்பு, நீதிபதி, சாந்தி போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 1970ஆம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார் அவருடைய கதை வசனம் டைரக்ஷனில் உருவான படம்தான் எதிர்காலம்.
ஜெமினி, ஜெய்சங்கர் என்று இரண்டு கதாநாயகர்களைக் கொண்டு படம் உருவானது இவர்கள் இவருடன் பத்மினி, வாணிஸ்ரீ நாகேஷ் பாலையா பாலாஜி சுருளிராஜன் எஸ் என் லக்ஷ்மி ஆகியோரும் படத்தில் நடித்தனர். இவர்கள் எல்லோரும் இடம்பெற்ற படத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்து ஸ்கோர் பண்ணியவர் பத்மினி தான்.
இங்கிலாந்தில் ஐம்பது பில்லியன் பவுண்ட் பணத்தை காணவில்லை
சவூதி, இஸ்ரேல் பிரதிநிதிகள் பிராந்திய மாநாட்டில் முறுகல்
குறுங்கோளில் பாறை மாதிரியை பெற்ற ஜப்பான் விண்கலம் பூமிக்கு திரும்பியது
வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மடுரோ கூட்டணிக்கு வெற்றி
பெண் ஊடகவியலாளர் ஆப்கானில் படுகொலை
ஜோ பைடன், ஹாரிஸ் ஆண்டின் சிறந்தவர்களாக ‘டைம்’ தேர்வு
மொரோக்கோ - இஸ்ரேல் இடையே இராஜதந்திர உறவுக்கு உடன்படிக்கை
இங்கிலாந்தில் ஐம்பது பில்லியன் பவுண்ட் பணத்தை காணவில்லை
Tuesday, December 8, 2020 - 2:14pm
இங்கிலாந்தில் 50 பில்லியன் பவுண்ட் மதிப்புமிக்க நாணயத்தாள்கள் காணாமல்போயுள்ளன.அது குறித்து ஒரு விளக்கமும் இல்லாத நிலையில் நாணயத்தாள்களின் இருப்பிடம் மர்மமாகவே உள்ளது. இது குறித்து கார்டியன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
2018ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த, சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chithra) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொலைக் காட்சஇந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவில் இருந்து ரம்யா கிருஷ்ணன் வரை பல அம்மன் கதாபாத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள படம் தான் மூக்குத்தி அம்மன். திரையில் நயன்தாராவை அம்மனாக பார்க்கவேண்டும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஓடிடி மூலமாக மூக்குத்தி அம்மனாக அருள் தந்துள்ளார். அப்படி ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் கேட்ட அணைத்து வரத்தையும் மூக்குத்தி அம்மன் வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம்.
கதைக்களம்
பத்திரிகையாளராக கடவுள் மீது கோபம் காட்டும் ஆர்.ஜெ. பாலாஜி, நிஜத்தில் தனக்காக கடவுள் எதாவது நல்ல விஷயத்தை செய்து விட மாட்டாரா என்று துடிக்கிறார்.
தன் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க திருப்பதி சென்ற வரவேண்டும் என்று நினைக்கிறார் நடிகை ஊர்வசி. ஆனால் திருப்பதி செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் பல நகைச்சுவையான தடைகள் ஏற்ப்படுகிறது .இதனால் முதலில் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று ஒரு நாள் இரவு தங்கினால் அணைத்து பிரச்சைகளும் விலகிவிடும் என்று குடும்பத்துடன் மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு செல்லுகிறார் ஆர்.ஜெ. பாலாஜி.
குலதெய்வ கோயில்லில் அம்மன் சிலையை பார்த்து, என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சைகளை தீர்த்துவை தாயே என ஆர்.ஜெ. பாலாஜி அம்மனிடம் கண்கலங்கி மன்றாடி கேட்டுகிறார்.
அன்றிரவே ஆர்.ஜெ. பாலாஜி கேட்டதுபோல் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நேரில் வந்து வரம் தருகிறார். வரத்தை தந்துவிட்டு அதன்பின் தன்னை உலகம் முழுவதும் பிரபலமாக்க வேண்டும் என்று ஆர்.ஜெ. பாலாஜியிடம் உத்தரவு போடுகிறார் மூக்குத்தி அம்மன்.
அதன்படி ஆர். ஜெ. பாலாஜி செய்து முடிக்கும் நேரத்தில் கடவுள்களை வைத்து பணம் சம்பாதிக்கும் வில்லன் சாமியாரின் என்ட்ரி. இதன்பின் வில்லன் சாமியாருக்கும், மூக்குத்தி அம்மனுக்கும் இடையே நடக்கும் அரசியல் கலந்த கடவுள் யுத்தம் தான் மூக்குத்தி அம்மனின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
ஆர்.ஜெ. பாலாஜியின் மிகவும் நகைச்சுவையான எதார்த்தமான நடிப்பு மனதில் நிற்கிறது. மூக்குத்தி அம்மனாக திரையுலகிற்கு காட்சியளித்துள்ள நயன்தாராவின் நடிப்பு பாராட்டுக்குரியது.
மக்கள் கடவுள்களை பக்தியுடன் கும்பிடவில்லை என்றும், தான் செய்யும் தப்பை மறைக்கவும், மன்னிக்கும் இடமாக தான் கோவிலையும், தெய்வத்தையும் பார்க்கிறார்கள் என்றும் கூறுகிறார் மூக்குத்தி அம்மன்.
நயன்தாராவிற்கு போட்டியாக ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் ஆர்.ஜெ. பாலாஜிக்கு போட்டியாக ஊர்வசி நடிக்கும் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக எடுத்து செல்லுகிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் போலி சாமியார்களின் கதாபாத்திரமாக மாறி நடித்துள்ளது, ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கம் இவர்களை மக்கள் இனிமேல் நம்பவேண்டாம் என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஊர்வசி, ஆர்.ஜெ. பாலாஜியின் 3 தங்கைகள் மற்றும் இயக்குனர் மௌலி என அனைவரின் நிறைவான நடிப்பு அழகான வடிவமைப்பை படத்திற்கு கொடுத்துள்ளது.
ஆர். ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணனின் இயக்கம், வசனம், திரைக்கதை மற்றும் இசை என அனைத்திலும் மூக்குத்தி அம்மன் நமக்கு சிறப்பான வரத்தை அளித்துள்ளார்.
இப்படி நகைச்சுவை கலந்த அரசியல் பேசும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் வரும் ஓரிரு இடங்கள் ஓவராக இருக்கிறது.
க்ளாப்ஸ்
அம்மனாக நயன்தாராவின் நடிப்பு
நகைச்சுவை கலந்த அரசியல் இயக்கம்
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
VFX கிராபிக்ஸ் காட்சிகள்
பல்ப்ஸ்
நகைச்சுவையை இன்னும் கூட்டி இருக்கலாம்
அம்மன் வரும் ஓரிரு காட்சிகள் கொஞ்சம் ஓவராக தெரிகிறது
மொத்தத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஒரு சில இடங்களில் மூக்குத்தி அம்மன் தவறினாலும் தீபாவளி அன்று குடும்பதுடன் பார்க்க சிறப்பான படமாக அமைந்துள்ளது.
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா? புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்
ஒஸ்ரேலிய தமிழ்க் கையேடு
விளம்பரங்கள்
உங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.