கண்ணதாசனைக் கொண்டாடுவோம் இணையப் பெருவெளியில் ஆத்மார்த்தமானதொரு படைப்பு - கானா பிரபா


ஆஸ்திரேலியத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் வழங்கிய கவியரசு கண்ணதாசனின் 93 ஆவதுபிறந்த நாள் பெரு நிகழ்வு இணைய வான் பரப்பில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி வெகு சிறப்பாகஅரங்கேறியது

கலைமாமணி இசைக்கவி இரமணன் அவர்கள் கண்ணதாசன் பாடல்களில் வாழும் 
இலக்கியச் சிறப்பு, கவி நயம், வாழ்வியல் தத்துவங்கள் இவற்றையெல்லாம் தெள்ளு தமிழில் பேசி, தேமதுரக் குரலில் பாடி வெகு அழகானதொரு பிறந்த நாள் பரிசைப் படைத்தார்.

இந்த நிகழ்வை ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு அனகன் பாபு, மற்றும் செயலாளர் திரு கர்ணன் ஆகியோத் திறம்பட ஒருங்கமைத்து Facebook மற்றும் YouTube ஆகியதளங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தனர். சிட்னியில் வாழும் வானொலி ஊடகர் திரு கானா பிரபாநிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஊடக அனுசரணையாளர்களாக தமிழகத்தின் முன்னணி நாளேடு தினமலர் நாளிதழ் சமா காலத்தில் தம்தளத்தில் நேரஞ்சல் செய்ததோடு, புதியுகம் தொலைக்காட்சி நிறுவனத்தினரும் இணைந்து கொண்டனர்.

கடந்த 9 வருடங்களாகக் கலைக்கும் தமிழினதுக்கும் தன் செயற்பாட்டைக் காட்டும் இயக்கமாகவிளங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம், சிட்னி சித்திரைத் திருவிழா என்றபண்பாட்டுத் திருவிழாவை வருடம் தோறும் நாள் முழுக்காக் கொண்டாடி மகிழும் அதே வேளை இனியஇலக்கியச் சந்திப்பு, தமிழிசை நாட்டிய விழா போன்ற நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. 

தமிழரது பண்பாட்டு அடையாளமாம் தைப்பொங்கல் விழாவை நியூ சவுத்வேல் மாநிலப் பாராளுமன்றிலும்தலை நகர் கான்பராவில் விளங்கும் தேசியப் பாராளுமன்றிலும் விழா எடுத்து நம் பண்பாட்டுப்பெருமையை சக சமூகத்தினருக்கும் பறை சாற்றும் அமைப்பு,
மனித நேயப் பணிகளாக கஜா புயல்,சென்னை வெள்ள அனர்த்தம், ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ அனர்த்தம் உள்ளிட்ட பல இடர்களுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டித் துயர் துடைப்பு நிவாரணப்பணிகளை வழங்கியிருப்பது அதன் இன்னோர் முகம்.
கொரோனா காலத்தில் நம் தமிழக கிராமியக் கலைஞர்களுக்கான நல ஆதாரத்தை வேண்டி பாடகர்கள்ஆண்டனி தாசன், செந்தில், ராஜலட்சுமி ஜோடியோடு இணைந்து இணையவழி நிதி சேகரிப்பை நடத்திஅந்தப் பணத்தை உடன் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலில் இணைய வழி வான் பரப்பில் சிறந்ததோர் படைப்பை வழங்க 
இசைக்கவி இரமணன் அவர்கள் மிகச் கச்சிதமான தேர்வாகத் தோன்றி, இணைந்த இரசிகர்களைமகிழ்ச்சியிலும், நெகிழ்விலுமாகக் கண்ணதாசன் பாடல்களின் அடியாழம் வரை சிலாகித்துப் பேசிஅருமையானதொரு படையலை வழங்கிச் சிறப்பித்தார்.
இன்னும் வேண்டும் என்று கேட்ட இரசிகர்களுக்கான கேள்வி நேரத்திலும் பன்முகப்பட்ட கேள்விகளுக்குமுகம் கொடுத்து இரமணன் அவர்கள் பொருத்தமான பதில்களோடு நிறைவாக்கியதுகுறிப்பிடத்தக்கதொரு விடயம்.


நிகழ்வின் காணொளிய பார்க்க



No comments: