தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

வள்ளுவம் படிப்போம் வாருங்கள் அனைவரும் !

 















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்……அவுஸ்திரேலியா 





ஆதியில் அகரம் அந்தத்தில் னகரம் 
அடியும் முடியும் அனைத்தும் அறிவே
தேடிடு மனைத்தும் ஓரிடம் குவித்து
திரட்டியே தருவது வள்ளுவர் குறளே

தமிழைத் தாங்கிப் பிடிப்பதும் குறளே
தரணி சிறந்திட வைப்பதும் குறளே
அமரர் உலகில் வாழலாம் என்று
அதற்கு வழியை வகுத்ததும் குறளே

அறம் பொருளின்பம் அனைவர்க்கும் அவசியம்
அழகுடைத் தமிழால் அளிப்பது குறளே
அறமொடு பொருளும் அறமொடு இன்பமும்
இணைவது முக்கியம் என்பது குறளே 

வள்ளுவம் மொழியாக் கருத்துகள் இல்லை
வாய்மையை வள்ளுவம் போற்றியே பார்க்குது
உள்ளுக்குள் நுழைந்து உயர்வினைத் தேடுது
உணர்வினைத் தட்டி எழுப்பியே நிற்குது

தட்டுங்கள் திறக்கப்படும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

தமிழ் திரையுலகில் நடிகராக புகழ் பெற்று பின்னர் பட இயக்குனராக மாறி பிரபலமடைந்தோர் பலர் உள்ளனர். ஆனால் அம் முயற்சியில் ஈடுபட்டு ஒரே படத்துடன் ஒதுங்கி கொண்டவர் ஒருவர் உள்ளார். அவர்தான் ஜே. பி. சந்திரபாபு! தட்டுங்கள் திறக்கப்படும் என்ற ஒரே படத்துடன் அவர் அந்த முயற்சியில் இருந்து ஒதுங்கி கொண்டார். 


 1950 ம் ஆண்டுகளில் நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் சந்திரபாபு. எம் ஜி ஆருடன் இவர் நடித்த நாடோடி மன்னன், குலேபகாவலி, மகாதேவி, சிவாஜியுடன் நடித்த சபாஷ் மீனா, புதையல், பதி பக்தி போன்ற படங்களில் அவர் நடிப்பு ரசிகர்களினால் பெரிதும் வவேற்கப்பட்டது. பிஸி காமெடி நடிகராக இருந்த இந்த கால கட்டத்தில் சந்திரபாபு ஒரு விபரீத முடிவை எடுத்தார். இனிமேல் , தான் படங்களில் கதாநாயகனாக நடிக்கப் போவதாக பிரகடனப் படுத்தினார். அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த குமார ராஜா, கவலை இல்லாத மனிதன், போன்ற படங்கள் தோல்விப் படங்களாகி அவரின் கதாநாயகன் ஆசையில் மண்ணைப் போட்டது. இதனிடையில் அவர் கதை எழுதி ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய அப்துல்லா படமும் இடையில் நிறுத்தப் பட்டு சிவாஜி நடிப்பில் பாவ மன்னிப்பானது. 


இவற்றுக்கு பிறகு சந்திரபாபு திரையுலகில் பட இயக்குனராக

அவதாரம் எடுத்தார். எம் ஜி ஆர், சாவித்திரி நடிப்பில் மாடி வீட்டு ஏழை படத்தை இயக்கத் தொடங்கினர். இந்த படத்தில் நடிப்பதோடு நின்று விடாது சாவித்திரி நிதியுதவியும் வழங்கியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடரவில்லை. இன்று பரபரப்பாக பேசப் படும் விஜய், த்ரிஷா உறவைப் போல் அன்று இப் படம் உருவாகிய கால கட்டத்தில் சந்திரபாபு, சாவித்திரி இருவர் இடையில் மிக நெருக்கமான உறவு நிலவி வந்தது. இதனை விரும்பாத ஜெமினி , திரையுலகின் Big brother ரான எம் ஜி ஆரிடம் இது பற்றி முறையிட்டார். அதனைத் தொடர்ந்து படத்திலிருந்து சாவித்திரியை நீக்க வேண்டும் என்று எம் ஜி ஆர் கண்டிஷன் போட்டார். தனக்கு வேண்டிய சாவித்திரியை கதாநாயகியாக தக்க வைக்க விரும்பிய பாபு அதனை ஏற்கவில்லை. போதாக்குறைக்கு சாவித்திரியிடம் இருந்து பணம் வேறு வாங்கி இருந்தார். இந்த பிரச்னை எம் ஜி ஆர், சந்திரபாபு மோதலாக உருவெடுத்து மாடி வீட்டு ஏழை படத் தயாரிப்பு நின்றே போய் விட்டது. 


அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்பது போல் சந்திரபாபு தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் வெளிப்பாடுதான் தட்டுங்கள் திறக்கப்படும் படம். படத்தின் கதாநாயகி அதே சாவித்திரிதான்! எம் ஜி ஆர் போனால் போகட்டும் என்று படத்தின் ஹீரோவாக தானே நடித்தார் சந்திரபாபு. ஆனால் மாடி வீடு ஏழை படத்தின் கதைக்கும் இப் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

23 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் கொடியேற்றம்

30 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் சப்பரத் திருவிழா

31 - 03 - 2026 Tueசிட்னி முருகன்  திருக்கோயில் தேர்த் திருவிழா

01 - 04 - 2026 Wedசிட்னி முருகன்  திருக்கோயில் தீர்த்தத் திருவிழா

மகிழ்ச்சி எங்கே?

 ஒரு காலத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அந்த மகனை அவன் மிகவும் அன்புடனும் கவனத்துடனும் வளர்த்தான்.

ஒரு நாள் அந்த சிறுவன் ஒரு பந்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த பந்து அறையின் ஒரு மூலையில் உருண்டு சென்று விழுந்தது. அந்தப் பந்தை எடுக்க சிறுவன் அந்த மூலையில் கையை நீட்டியபோது, அங்கே இருந்த ஒரு தேள் அவனை கடித்தது.

அதனால் சிறுவன் வலியால் கத்தி, “அப்பா! ஒரு தேள் என்னைக் கடித்துவிட்டது!” என்று அழுதான். தந்தை எவ்வளவு முயன்றாலும், மகனின் வலி குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மகன் துன்பப்படுவதைப் பார்த்து தந்தைக்கு தாங்க முடியவில்லை. உடனே அவன் ஒரு மருத்துவரிடம் ஓடிப் போனான்.

மருத்துவர் அவனுக்கு ஒரு மருந்துக் களிம்பை கொடுத்து, “தேள் கடித்த இடத்தில் இதைப் பூசுங்கள்; வலி குறையும்” என்று கூறினார்.

தந்தை வீட்டுக்கு வந்து, “தேள் உன்னை கடித்த இடத்தை காட்டு” என்று மகனை கேட்டான். சிறுவன் உடனே அறையின் அந்த மூலையைச் சுட்டிக்காட்டினான்.

அந்தத் தந்தைக்கு போதுமான புத்தி இல்லாததால், மகனின் உடலில் தேள் கடித்த இடத்தில் மருந்தைப் பூசாமல், மகன் காட்டிய அறையின் மூலையில் இருந்த இடத்திலேயே அந்த மருந்தைக் களிம்பை பூசத் தொடங்கினான்.

இவ்வாறு மனிதன் துன்பத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியை அடைய முயற்சிப்பதும் இதுபோலவே இருக்கிறது. மகிழ்ச்சி இல்லாத இடங்களில் மனிதன் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறான்.

அன்பும் மகிழ்ச்சியும் மனிதனுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் அவன் அதை வெளியில் தேடுகிறான். ஒருவர் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், எவ்வளவு கற்றவராக இருந்தாலும், உள்ளே இருக்கும் ஒன்றை வெளியில் தேடி கண்டுபிடிக்க முடியாது.

கர்மா, பக்தி, ஞானம் – சனாதன தர்மத்தின் பாதை

 இறைவனை உணர்வதற்கான சாதனையில் இரண்டு நிலைகள் தெளிவாகக் காணப்படுகின்றன: கர்மா (செயல்) மற்றும் உபாசனை (தியானம் அல்லது வழிபாடு). ஆனால் அதன் முழு முதிர்ச்சியான நிலையான ஞானம் (அறிவு) வெளிப்படையாகக் காணப்படுவதில்லை.

யமுனை நதி கர்மாவைச் சுட்டிக்காட்டுகிறது; கங்கை நதி பக்தியைச் சுட்டிக்காட்டுகிறது. இவை இரண்டும் ஒன்றிணையும் இடத்தில் காணப்படாமல் ஓடும் சரஸ்வதி ஞானத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதர்கள் கர்மத்தில் உற்சாகத்தையும், பக்தியில் மகிழ்ச்சியையும், ஞானத்தை அடையத் தேவையான ஆர்வத்தையும் இழந்து விட்டனர். உண்மையான கல்வி என்பது மனிதனுக்கு அவன் உண்மையான ஆத்மாவை உணர்த்தும் கல்வியாகும்.

இந்த உண்மைகள் மறக்கப்படும்போது, மனிதனுக்கு அவன் கடமையையும் தர்மத்தையும் மீண்டும் போதிப்பதற்காக அவதாரம் நிகழ்கிறது.

இன்று மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டிய தர்மம் என்ன? அது சனாதன தர்மம் — என்றென்றும் நிலைத்திருக்கும் நித்திய தர்மம் தான்.

இன்றும் பூமியில் ஞானிகள் இல்லையென்று சொல்ல முடியாது. சிறந்த கவிஞர்கள், உயர்ந்த சிந்தனையாளர்கள், பெரும் அறிஞர்கள் இன்றும் நம்முடன் இருக்கிறார்கள். ஆனால் ஆடம்பரமும் புகழும் தேடும் பித்துப்பிடித்த ஓட்டத்தில், மற்றவர்களை வெல்லும் போட்டியில் மூழ்கி, அவர்கள் கூறும் உபதேசங்களை கேட்கவும், அவர்கள் பரிந்துரைக்கும் சாதனையின் இனிமையை அனுபவிக்கவும் மனிதர்களுக்கு நேரமில்லை.

பரமப்ரேமை – மனித வாழ்வின் உயர்ந்த இலக்கு

 மகான் நாரதர் கூறியுள்ளார்: “ப்ரேம அம்ரிதஸ்ய ஸ்வரூபஹ” — அன்பே அமிர்தத்தின் உருவாகும்.

இம்மையான உலகில், மனிதர்கள் பொதுவாக நான்கு புருஷார்த்தங்களை (வாழ்க்கையின் இலக்குகளை) மட்டுமே விடுதலை நாடும் மனிதனின் பாதையாகக் கருதுகின்றனர். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. தர்மம் (நேர்மை மற்றும் நீதியான வாழ்க்கை), அர்த்தம் (பொருளாதார வளம்), காமம் (விருப்பங்களின் நிறைவு), மற்றும் மோட்சம் (விடுதலை) ஆகியவை மட்டும் மனித வாழ்க்கையின் இறுதி இலக்குகள் அல்ல.

மனிதகுலத்திற்கு இதையெல்லாம் மீறி உயர்ந்த ஐந்தாவது இலக்கு ஒன்று உள்ளது. அது பரமப்ரேமை — உயர்ந்த தெய்வீக அன்பு. இந்த அன்பின் தத்துவமே தெய்வீகத்தன்மையாகும். அன்பும் இறைவனும் இரண்டும் வேறுபட்டவை அல்ல. இறைவன் அன்பே; அன்பே இறைவன்.

இந்த அன்புத் தத்துவத்தின் உண்மையை ஒருவர் உணரும்போது தான் மனித வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிய முடியும்.

ஒரு தெலுங்கு கவிதையில் இவ்வாறு கூறப்படுகிறது:
“அன்பின் தத்துவத்தை போதித்து, எல்லா உயிர்களிடமும் பாசமும் சமத்துவமும் வளர்த்துத் தருபவர், மனித மதிப்புகளை வெளிப்படுத்துபவர் — அந்த அன்பின் உருவமே சாய். அந்த அன்பின் உருவமே தெய்வீக ஆத்மா.”

ஆகவே, அன்பே ஆத்மா; ஆத்மாவே அன்பு என்பது நிச்சயமான உண்மை.

மனித உடலின் நோக்கும் நமது பொறுப்பும்


உடலுக்குத் தனியாக எந்தவிதமான அறிவோ அல்லது பகுத்தறிவு சக்தியோ இல்லை. பகுத்தறிவும் (விவேகம்), அறிவும், தீர்மானிக்கும் சக்தியும் மனமும் புத்தியும் கொண்டவைகளே. ஆனால் இன்றைய மனிதர்கள் அடிப்படைப் பகுத்தறிவை பயன்படுத்துவதில் பெரும்பாலும் தவறுகின்றனர். அவர்களின் எண்ணங்களில் சுயநலமே மேலோங்கி நிற்கிறது.

மனிதர்கள் தங்களுக்கே நன்மை கிடைக்கும்படி தங்கள் அறிவை பயன்படுத்துகின்றனர்; சமூக நலனைக் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. இவ்வாறு அவர்கள் உடலை தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். மனிதனை உயர்ந்த அறிவொளிக்குக் கொண்டு செல்லும் பாதையைப் பின்பற்றுவதற்காக உடலை பயன்படுத்துவதில்லை.

கோதுமையை மாவு ஆலைக்கு வைத்தால் கோதுமை மாவு கிடைக்கும். அரிசியை வைத்தால் அரிசி மாவு கிடைக்கும். ஆனால் உணவை உடலுக்குள் போட்டால் இறுதியில் வெளியே வருவது கழிவுப் பொருள்தான். ஒரு ஜாடியில் ஊறுகாயை வைத்தால் அது ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். ஆனால் அதையே உடலுக்குள் போட்டால் குறுகிய காலத்திலேயே அது அழுகி விடுகிறது. உடலின் இயல்பு இதுவாகும்.

ஆனால் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு மனிதனுக்கு உடல் அவசியமானது. ஆகையால் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதற்காக இந்த உடலை இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும். உடலை சரியான பாதையில் செலுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மனிதராக ஒளிர வேண்டும்.

Indriyas – மனிதனின் அரவணைக்கப்பட்ட கருவிகள்

 மனிதனை உணர்வுகள் அடக்கக் கூடாது. உணர்வுகள் மனிதனால் கட்டுப்படுத்தப்படும் கருவிகள் ஆகவே இருக்க வேண்டும். அவை சிறிய ஊழியர்கள், உதவியாளர்கள், சேவகர்கள் மாதிரியே செயற்பட வேண்டும்.

உதாரணமாக, கத்தி பழங்கள் அல்லது காய்கறிகளை வெட்டுவதற்கே உகந்தது; தன்னுடைய கழுத்தை வெட்டுவதற்காக பயன்படுத்தக் கூடாது.

உணர்வுகள் தமஸ் (சோம்பல்) மற்றும் ராஜஸ் (ஆர்வம்) போன்ற குணங்களிலிருந்து விடுபட்டு பயிற்சிபெற வேண்டும்; அவை மந்தமானவையாகவும், சீரற்றவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கக் கூடாது. குணங்களை அடக்க வேண்டும்.

ஒரு மாணவன் தனது குருவை சந்தித்து சாந்திக்கான பாதையை கேட்டான். குரு பதி

"எல்லா மனிதர்களுக்கும், எல்லா விஷயங்களுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும் நீடித்த சஹானா (தாங்கும் சக்தி) வளர்த்துக் கொள்ள வேண்டும். எதுவும் ஆர்வத்தை, வெறுப்பை அல்லது ஆசையை தூண்டக்கூடாது. உச்சமாக மட்டுமே தேட வேண்டும்; இறைவனை மட்டுமே விரும்ப வேண்டும்."

மாறாத, குறையாத, நிலைத்த ப்ரேமம் மட்டும் உண்மையானது. அது விஷ்வேஷ்வரப்ரேமம் — அனைத்து உலகங்களின் ஆண்டவருக்கான அன்பே.

சிட்னி முருகன் கோவில் திருவிழா 22/03/2026 - 03/04/2026

 


இலங்கைச் செய்திகள்

ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

ஈரானிய கப்பலில் இருந்து 30 பேர் மீட்பு: கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..!

வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! 



 ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு 

Published By: Digital Desk 3

05 Mar, 2026 | 09:27 AM

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க யுத்த விவகார செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததை உறுதிப்படுத்தினார்.

உலகச் செய்திகள்

ஈரான் மோதல் நீடிக்கும் : இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் - டிரம்ப்

ஈரானின் தாக்குதலை கண்டித்து 7 நாடுகள் கூட்டறிக்கை

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கைகளில் பிரிட்டன் இல்லை: ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்கு மட்டுமே ஆதரவு

ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே உயிரிழப்பு – ஈரான் அரசு ஊடகங்கள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது ; கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்களைத் தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கை

இந்தியாவில் போர் விமானம் விபத்து ; இரண்டு விமானிகள் உயிரிழப்பு



ஈரான் மோதல் நீடிக்கும் : இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் - டிரம்ப்

Published By: Vishnu

03 Mar, 2026 | 04:57 AM

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், இந்த இராணுவ நடவடிக்கைக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளதாக கூறினார்.

அதன்படி,

ஈரானின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் திறன்களை முற்றிலுமாக அழித்தல்,

மெல்பேணில் தமிழ்மொழியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் விழா!

 அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், விக்றோறிய


மாநிலத்தில்
, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய, விக்றோரிய கல்விச் சான்றிதழ் ( VCE ) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டும் ஒரு விழாவைக் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகின்றது.

கடந்த வருடம் (2025) நடைபெற்ற அந்தப் பரீட்சையில் அவ்வாறு சாதனை நிகழ்த்திய மாணவர்களைப் பாராட்டும் விழா எதிவரும் 09.03.2026 - திங்கட்கிழமை, பி..   5.00  மணிக்குக் கீழ்க்குறிப்பிடப்படும் முகவரியில் நடைபெறவுள்ளது

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களைப் பாராட்டுவதுடன், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் பணியும் பாராட்டிக் கௌரவிக்கப்படத்தக்கதாகும். அதனால், இந்த நிகழ்வில் ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்று, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் தலைவர், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தெரிவித்தார்.

இந்த விழாவில், செல்விகள் மோஷிகா பிரேமதாச, ஸ்ரீஷேகா பிரேமதாச சகோதரிகளின் வீணைக் கச்சேரி, செல்வன் நிஷித் ராஜன்பாபுவின் மெல்லிசைப் பாடல்,  துசியந்தி ராஜராஜன், வினுசாகினி இராஜராஜன் சகோதரிகளின் நடனம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. மேலும், சங்கத்தின் உபதலைவர், திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், முதுபெரும் எழுத்தாளர், திரு. லெ.முருகபூபதி அவர்கள், சேவைநலன் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, அன்புடன் அழைக்கிறது, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம். அனுமதி இலவசம்.

விழா நடைபெறும் இடம்:   Clayton Hall, 264, Clayton Road, Clayton  Vic  3168

காலம்: 09.03.2026 - திங்கட்கிழமை, பி..   5.00 மணி

--------------------