அது ___________________________________________ருத்ரா


எதையும்
பாசிடிவாக நினை.
நம்பிக்கை மருந்தை
உன் சிந்னை ஊசியில் ஏற்று.
விளைவுகள்
உடனே தெரியாது.
சொட்டு சொட்டய் உன்
உள்ளத்து சமுத்திரத்தில்
திவலைகள் சேர்த்து
அலைகள் ஆகும் வரை
உருண்டு திரண்டு கொண்டிருக்கும்.
உன் வாழ்க்கையில்
இடறிக்கொண்டே இருப்பது
உன் மரண பயம்.
அந்தப் பயணத்தில்
அது
எங்கோ ஒரு தூரத்தில்
மைல் கல்லாய் நடப்பட்டிருக்கிறது.
அதற்கு நீயேவா
நடுகல் நட்டி
நடுங்கிக்கொண்டிருப்பது?
வாழ்க்கையின் இனிய தீவுகள்
உனக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.
அதற்கு நீயே
கட்டுமரமாவது கட்டி
கடக்க முயலலாம் என‌
நினை.
அதுவே
உன் தினச்சூரியனில்
சிதறும் விடியல் பிசிறுகள்.
அதற்குத்தான் சொல்கிறேன்.
பாசிடிவாக நினை..
நினை..
ஆம் நினை..
.........

எதோ கல் தடுக்கி விழுந்தேன்.
கால் கட்டைவிரலில்
ரத்தம் கொட கொடவென கொட்டியது.
அருகில் உள்ள‌
அந்த அரசினர் ஆஸ்பத்திரியில்
கட்டு போட்டுக்கொண்டேன்.
சரி வருகிறேன்..
என்று கிளம்பினேன்.
"சற்றுப்பொறுங்கள்.."
ஏன் சார்?
ரேபிட் டெஸ்டில்
உங்களுக்கு "பாசிடிவ்"வந்திருக்கிறது.
அந்த டெஸ்டிலும்
பாசிடிவா
என்று பரிசோதனை செய்யவேண்டும்.
அது வரை நீங்கள்
தனிமைப்படுத்தப்பட வேண்டும்..
பாசிடிவ் ஆக சிந்திக்க வேண்டும் என்று
நான் சிந்திப்பதற்குள்ளேயே
"அது"
"பாசிடிவை"
லட்சக்கணக்காய் பிரிண்டு போட்டு
சுடச் சுட விற்றுக்கொண்டிருக்கிறது.




No comments: