800 ஆவது விக்கெட்டை எதிர்பார்க்கும் முரளி

.

செய்தித்தொகுப்பு - கரு

சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒய்வு பெறுவதற்கு முன்னர் நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் தனது 800 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்ற முடியும்

என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவுஸ்ரேலிய நடுவர் டெரல் ஹெயருடனான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எந்த ஒரு நோக்கமும் இல்லை. அத்துடன் ஊடகங்கள் கிரிக்கட் வீரர்களை பிழையான வழியில் ஈடுபடுவதற்கு தூண்டக்கூடாது எனவும் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

அவர் காலியில் இடம்பெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் ஒய்வு பெறவுள்ளார். முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 792 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: