தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

சிட்னி துர்கா தேவி தேவஸ்தானம் - வருடாந்த மாசி மக திருவிழா தேர்த் திருவிழா -08/03/2026

 














ஞானம் நிறைந்தால் நல்வழி திறக்கும் !















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்……அவுஸ்திரேலியா 




தேடும் வரைக்கும் தேட வேண்டும்
தேடிய பின்னர் தெளிவுற வேண்டும்
நாடிய அனைத்தும் நம்வச மானால்
நாடெலாம் நம்மை வியந்துமே பார்க்கும்

பொன்னைப் புகழைத் தேடித் திரிகிறார்
மண்ணில் மன்னராய் வாழத் துடிக்கிறார்
எண்ணி லடங்கா எண்ணியே நிற்கிறார்
இருக்கும் காலத்தை எவருமே அறியார்

கரியைக் காசாய் ஆக்கிட முனைகிறார்
கடமை என்பதை உணரா திருக்கிறார் 
முடிவை எவரும் எண்ணிட மாட்டார்
எப்படி வருமென எவருக்கும் தெரியா

மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !



         
  















மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





நீண்டநாள் வாழ நெஞ்சம் நினைக்கிறது
வேண்டாத வினைகள் வில்லங்கம் தொடர்கிறது
தூண்டா மணிவிளக்காய் துலங்கிடும் தூமணியே
நீண்டநாள் நிலைக்கவே நீயருள் புரிந்திடுவாய்

கொடியவர் கொன்றிடுவார் கொள்ளையும் அடிப்பார்
கடுகளவும் கருணை காருண்யம் காட்டார்
நினைவெல்லாம் நிட்டூரம் நிறைத்துமே வைப்பார்
நீண்டநாள் வாழுவது நியாயமா சொல்நிமலா 

அறமற்றார் அரசியலை ஆட்டிப் படைக்கின்றார்
அறங்கூறும் இடமெல்லாம் அரக்கரே நிறைகின்றார்
உயிர்காக்கும் மருத்துவர்கள் உணர்விழந்து நிற்கின்றார்
உயர்பொரு ளாயிருப்பவனே உனக்கொன்றும் தெரியாதா

சன்மார்க்கம் மறக்கின்றார் சமத்துவம் தகர்க்கின்றார்
எஞ்ஞான்றும் பொய்யுரைத்து ஏற்றமிலா செய்கின்றார்
வஞ்சனையை நெஞ்சிருத்தி வாழ்வாரை வதைக்கின்றார்
இவரெல்லாம் இவ்வுலகில் எப்படிநீ இருக்கவிட்டாய் 

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்! பயணம் - 7


….. சங்கர சுப்பிரமணியன். 







கவிதை:

நினைக்க நினைக்க
நெஞ்சம் நெகிழ்கின்றதே
சுவைக்க சுவைக்க
தமிழ் இனிக்கின்றதே

பருகப் பருக
தாகம் அடங்கலையே
பாலும் தேனுமாய்
அது இருக்கின்றதே

நினைக்க நினைக்க
நெஞ்சம் நெகிழ்கின்றதே

வளமை செழுமை
இருந்த போதும்
எளிமை அதிலே உண்டு

இளமை இனிமை
இருந்ந போதும்
வலிமை அதிலே உண்டு

வலிமை அதிலே உண்டு

இருள் சேர் இருவினையும் சேரார் யார்?

இருள் சேர் இருவினை என்றால் என்ன? என் வாழ்வில் இருள் சூழ்ந்து விட்டது என்றால் என்ன? துன்பம் என் வாழ்வைச் சுற்றியுள்ளது என்பதே பொருள். என் வாழ்வில் ஒளி பிறந்திருக்கிறது என்றால் எனக்கு நல்லது நடந்துள்ளது. மகிழத்தக்க நன்மை அரங்கேறியுள்ளது என்பது பொருளாகும்.


கண்ணதாசனின் திரை இசைப்பாடலில் ஒளி மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது என்ற பாடலைக் கேட்டால் நமது வாழ்விலேயே ஏதோ மகிழ்ச்சி ஏற்பட்டதைப் போல இனம்புரியாத இன்ப உணர்வை அடைய முடிகிறதல்லவா? அதனால் வாழ்வில் ஒளி என்பது இன்பமான மகிழ்ச்சிதான். இதனை நல்வினை என்றால் தீவினை என்று ஒன்று உண்டல்லவா? அந்த தீவினைதான் இருள் என்ற துன்பம் ஆகும்.

இதிலிருந்து இன்பம் மற்றும் துன்பத்தை இருவினைகள் என்றறிகிறோம். இதன்படி பார்த்தால் இருவினைகள் எப்படி இருள்சேர்க்கும்? நல்வினை நன்மையையும் தீவினையையும் செய்வதுதான் முறைமை. அப்படுயிருக்க இருள் சேர் இருவினை என்று எப்படி இருவினைகளைச் சொல்ல முடியும். ஆதலால் வள்ளுவன் சொல்லவரும் இருள் சேர்க்கும் இருவனைகள் நல்வினை மற்றும் தீவினை அல்ல.

அப்படியானால் அந்த இருவினைகள் என்ன?
அவை ஒன்று தீவினை பற்றி எண்ணுவது ஒன்று மற்றொன்று தீவினையைச் செயலாக்குவது. உங்களுக்குப் புரியும்படியே சொல்கின்றேன். ஒரு கொலை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலை எடுத்த எடுப்பில் செய்யப் படுவதில்லை. முதலில் திட்டம் தீட்டப்படுகிறது. இது தீவினைகளில் ஒன்றான திட்டம் தீட்டப்படும் ஒருவினை.

அடுத்ததாக தீட்டிய திட்டத்தை செயல் படித்துவது இருள்சேர் இருவினைகளில் மற்றொன்றான தீவினை. ஒன்று தீயதை நினப்பது மற்றொன்று நினைத்த தீயதை செயல்படுத்துவது. இவைதான் அந்த இருள்சேர் இருவினை. இவற்றை எப்படி இருவினைகள் எனலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றை மட்டும் சொல்லி உங்கள் சந்தேகத்தை தீர்க்கலாம் என எண்ணுகிறேன்.

காவல் நிலையத்தில் ஒரு கொலை பதிவாகிறது. காவலர்கள் இதக்கண்டறிய முற்பட்டு கொலையாளியை கண்டுபிடிப்பார்கள். அடுத்தபடி அந்த கொலைக்கு காரணமானவன் யார் அதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தது யார் என்று கண்டுபிடிப்பார்கள். சொல்லப் போனால் கொலையாளியை விட கொலைக்கு திட்மிட்டுக் கொடுத்தவனுக்கு அதிக தண்டனை என்று சொல்லப்படுகிறது.

இதிலுருந்து தீயதை எண்ணுவதும் அதைச் செயற்படுத்துவம் ஆகிய இருவினைகளே வள்ளுவன் சொன்ன இருள்சேர் இருவினைகள் என்பதை அறிவோம். அடுத்ததாக இந்த இருவினைளும் சேராத இறைவன் யார்? இறைவனை இயற்கையாக வைத்தால் பொதுவின் பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ வைக்கலாம். பூமி, ஆறு போன்றவை பெண்பாலாக ஏற்கப் படுகிறது.
மற்றபடி அரசனையும் தலைவனையும் பொதுவின் பாலில் வைத்து காணலாம்.

மனமும் உலக அனுபவங்களும்

 மனதில் ஏற்படும் சந்தோஷமோ துக்கமோ அனைத்தும் உணர்வுகளால்  கொண்டு வரப்படும் அனுபவங்களின் விளைவாகும். மனிதன் அனுபவிக்கும் அனைத்தும் மனத்தின் உருவாக்கங்களே. உண்மையில் உலகமே மனத்தின் பிரதிபலிப்பாகும்.

மனம் தூரத்தில் உள்ளவற்றை அருகில் கொண்டு வரவும், அருகில் உள்ளவற்றை தூரத்தில் தள்ளவும் வல்லது. சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் காரணமாக இருப்பது மனமே. இதனால் தான் முனிவர்கள் “மனோ மூலம் இதம் ஜகத்” (இந்த உலகம் மனத்தை அடிப்படையாகக் கொண்டது) என்று அறிவித்துள்ளனர்.

மனம் ஒரு பொருளை பெறுவதற்காக மிகுந்த முயற்சி செய்கிறது. அதை பெற்றால் சந்தோஷம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அது செயற்படுகிறது. ஆனால் அந்தப் பொருளால் கிடைக்கும் சந்தோஷம் நீண்ட காலம் நிலைக்காது. மாறாக, அந்தப் பொருளை இழக்கும் போது ஏற்படும் துக்கம் மிக அதிகமாக இருக்கும்.

ஒரு பொருளைப் பெறுவதற்கான முயற்சியிலேயே பல சிரமங்கள் இருக்கின்றன. அதை பெற்ற பிறகு கிடைக்கும் சந்தோஷம் தற்காலிகமானது. ஆனால் அந்தப் பொருளை இழந்துவிட்டால், அது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இழப்பால் ஏற்படும் துன்பம், பெற்றதில் கிடைத்த சந்தோஷத்தை விட அதிகமாக இருக்கும்.

இவ்வாறு தற்காலிகமான சந்தோஷங்களுக்காக வாழ்நாளை செலவழிப்பது பயனற்றதாகும். இதன் அர்த்தமற்ற தன்மையை உணர்ந்த முனிவர்கள், நிலையான ஆனந்தத்தை அடைவதற்கான வழியாக சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தனர்.

அவர்கள் உருவாக்கிய ஆன்மீகப் பயிற்சி என்னவென்றால், உணர்வுகளையும் மனத்தையும் உள்ளார்ந்த திசைக்கு திருப்பி, நிலையான ஆனந்தத்தின் மூலத்தைத் தேடுவது ஆகும். 🙏

உள்ளிலுள்ள ஆனந்தத்தை வெளியே தேடும் மனிதன்


ஒரு காலத்தில் ஒரு முதிய பெண் தனது குடிசையில் உடைகளை தைத்து கொண்டிருந்தாள். அப்போது அவள் பயன்படுத்திய ஊசி தவறி விழுந்து போயிற்று. அவள் குடிசையில் விளக்கு எதுவும் இல்லை; மேலும் அவளது கண்களில் முத்திரை நோய் (கட்டாரக்ட்) இருந்ததால் அந்த ஊசியை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் அவள் வெளியே வந்து தெருவிளக்கின் கீழ் அந்த ஊசியைத் தேடத் தொடங்கினாள். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு மாணவன் அந்த முதிய பெண்ணிடம், “பாட்டி, நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், “நான் ஒரு ஊசியைத் தேடுகிறேன்” என்று கூறினாள்.

மாணவன், “நீங்கள் அதை எங்கு இழந்தீர்கள் என்று சொல்லுங்கள்; அதைத் தேட நான் உதவுகிறேன்” என்றான்.

அதற்கு அந்தப் பெண், “நான் என் குடிசையில் தைத்துக் கொண்டிருந்தபோது அதை இழந்தேன்” என்று கூறினாள்.

அப்போது அந்த மாணவன் ஆச்சரியத்துடன், “அப்படியானால், குடிசையில் இழந்த ஊசியை நீங்கள் ஏன் தெருவில் தேடுகிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த முதிய பெண், “என் குடிசையில் விளக்கு இல்லை. ஆனால் தெருவில் வெளிச்சம் இருக்கிறது. அதனால் நான் இங்கே தேடுகிறேன்” என்று பதிலளித்தாள்.

பாருங்கள்! வீட்டில் இழந்ததை தெருவில் தேடுகிறாள்!

இன்றைய மனிதனும் இதையே செய்கிறான். உண்மையான ஆனந்தமும் அன்பும் மனிதனின் உள்ளத்திலேயே இருக்கின்றன. ஆனால் அவன் அறியாமையால் அதை வெளியிலே தேடிக் கொண்டிருக்கிறான்.

வெளிப்புற அன்பும் சந்தோஷமும் தற்காலிகமானவை. ஆனால் இறைவனுடன் உள்ள உறவு நித்தியமானது.

மனித உடல் நிலையற்றது. இந்த நிலையற்ற உடலிலிருந்து நிலையான ஆனந்தத்தை எவ்வாறு பெற முடியும்?

நாம் யோகம், தியானம், ஜபம் போன்ற ஆன்மீக சாதனைகளை செய்கிறோம். அவை கூட ஒரு அளவுக்கு தற்காலிக திருப்தியைத் தருகின்றன.

ஆனால் இறைவனின் மீதான அன்பே நித்திய ஆனந்தத்தை அளிக்கக் கூடியது. 🙏

நாடோடி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 சிவாஜியை விட்டுப் பிரிந்து , எம் ஜி ஆரை அணுகி அவரை


ஆயிரத்தில் ஒருவன் என்று அடையாளம் கண்டு படம் எடுத்து வெற்றி கண்ட பி. ஆர். பந்துலு தனது அடுத்தப் படத்தில் எம் ஜி ஆரை நாடோடி ஆக்கிவிட்டார் ! ஆமாம் அவர் எம் ஜி ஆர் நடிப்பில் தயாரித்து இயக்கி 1966ல் வெளிவந்த படம் நாடோடி. ஆயிரத்தில் ஒருவனை கலரில் , வெளிப்புற படப்பிடிப்புகளோடு எடுத்தவர் இப் படத்தை கருப்பு வெள்ளையில் லோ பஜெட்டில் எடுத்திருந்தார். 



தென்னகத்து திரையுலகில் உன்னத இடத்தைப் பிடித்த சரோஜாதேவி, ஜெயலலிதா இருவரையும் திரையுலகிற்கு தான் தயாரித்து , இயக்கிய கன்னடப் படங்கள் மூலம் அறிமுகப்படுத்திய பெருமை பந்துலுவுக்கு உண்டு. ஆயிரத்தில் ஒருவனில் எம் ஜி ஆருக்கு ஜெயலலிதாவை முதல் முறையாக ஜோடியாக்கியவர் , நாடோடியில் சரோஜாதேவியை ஜோடியாக நடிக்க வைத்தார். 


ஆனால் இப் படத்தின் மூலம் புதுமுகமாக பாரதியை அறிமுகப்

படுத்திய பந்துலு அவரை எம் ஜி ஆருடன் ஒரு பாடலுக்கு டூயட் பாடவும் வைத்தார். ஆக பின்னர் பிரபலமான பாரதிக்கு நாடோடி முதல் படியானது. 

 அதே போல் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றிருந்த நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி பட வாய்ப்புகளை இழந்திருந்த சமயம் எம் ஜி ஆரின் ஆலோசனைப் படி இந்தப் படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தை பந்துலு வழங்கியிருந்தார். மனோ தத்துவ டாக் டர் வேடத்தில் வரும் அவரின் நடிப்பு கவனத்தைக் கவர்ந்தது. 

 படத்தில் இரண்டு வில்லன்கள். ஒருவர் வி. கே ராமசாமி, மற்றையவர் நம்பியார். ஒரிஜினல் வில்லன் ராமசாமி . சய்லண்ட் கில்லர். ஆரம்பத்தில் நல்லவராக , அப்பாவியாக அறிமுகமாகும் நம்பியாரைப் பார்த்து அதிசயிக்கிறோம். ஆனால் அவரையும் கொடியவனாக்கி விடுகிறார் ராமசாமி. அதன் பின் நம்பியாரின் கை ஓங்கி விடுகிறது. எம் ஜி ஆர் , சரோஜாதேவி, ராமசாமி என்று எல்லோரையும் அடக்கி ஆள்கிறார் அவர். 


உண்மையான பக்தியின் மகிமை

ஒரு நாள் ஒரு கோபிகை, ராதையிடம் கேட்டாள்: “நீ கிருஷ்ணனைப் பார்க்கும் போது உனக்கு என்ன உணர்ச்சி வருகிறது? உன் இதயம் எவ்வாறு பதிலளிக்கிறது? உன்னுள் என்ன மாற்றம் ஏற்படுகிறது? எந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறாய்?” என்று.

அதற்கு ராதை பதிலளித்தாள்:
“கிருஷ்ணனின் இனிமையான புல்லாங்குழல் ஒலி என் காதில் விழும் அந்த நிமிடத்தில், என் இதயம் அமைதியாகிவிடுகிறது. கிருஷ்ணன் வருகிறார் என்று அறியும் தருணத்தில் நான் என்னையே மறந்து விடுகிறேன். அவரது புல்லாங்குழல் இசையில் நான் முழுவதும் மூழ்கி விடுகிறேன்; அதற்கு அப்பால் வேறு எதையும் நான் உணர முடியாது. அந்த இசையின் மாயையில் நான் மயங்கிக் கிடக்கும் போது எனது உணர்ச்சிகளை உனக்கு எப்படிக் கூற முடியும்?”

இவ்வாறு இறைவன் மீது மயங்கிய பக்தர்கள் தங்கள் ஆனந்தமான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை வார்த்தைகளில் விளக்க முயல்பவருக்கு உண்மையான அனுபவம் இல்லை என்பதே உண்மை.

தங்களை பக்தர்கள் என்று கருதுபவர்கள், தங்களின் குறுகிய மனப்பான்மைக்கும் உண்மையான பக்தியின் அளவற்ற உயர்வுக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தை உணர வேண்டும். சிறிய பற்றுதல்களை விட்டுவிட்டு, இறைவனை வாழ்க்கையின் முக்கிய இலக்காகக் கொண்டு உறுதியான பக்தியை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

இதற்காக நல்லோரின் சங்கம் மிகவும் அவசியம். நல்லோருடன் சேர்ந்து இருப்பதன் மூலம் மட்டுமே நல்ல எண்ணங்கள் வளர்ச்சி பெறுகின்றன.

நல்ல எண்ணங்களின் சக்தி

 

ஒரு மனிதன் கையில் சம்பகப்பூ இருந்தால், அந்தப் பூவின் மணம் அவன் செல்லும் எல்லா இடங்களிலும் பரவும். அதுபோலவே, ஒரு துர்நாற்றம் இருந்தாலும் அது அவன் செல்லும் இடமெல்லாம் பரவும். மனிதனின் நல்லதும் கெட்டதுமான எண்ணங்களும் இதேபோலவே செயல்படுகின்றன. அவை தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நல்லதோ கெட்டதோ ஆன அதிர்வுகளைப் பரப்புகின்றன.

எண்ணங்களுக்கு மிகுந்த சக்தி உள்ளது. அவை உயர்ந்த இலக்குகளைக் நோக்கி செலுத்தப்படும்போது, உலகையே பாதிக்கக் கூடிய ஆற்றலை உடையவையாகின்றன. மனம் சத்தியம், அன்பு, பொறுமை, கருணை போன்ற நல்ல எண்ணங்களால் நிரம்பியிருந்தால், மனிதனின் வாழ்க்கை அமைதியும் சமாதானமும் நிறைந்ததாக இருக்கும்.

ஆனால் வெறுப்பு, பொறாமை, கோபம், அகம்பாவம் போன்ற எண்ணங்கள் மனதில் வளர அனுமதித்தால், வாழ்க்கை நிரந்தர துயரமாக மாறிவிடும். முகம் என்பது மனத்தின் பிரதிபலிப்பாகும். ஒருவர்மீது தீய எண்ணம் கொண்டால், அந்த விரோதம் உங்கள் முகத்திலும் நடப்பிலும் வெளிப்படும்.

மாறாக, நல்லதும் அன்பானதுமான எண்ணங்களை வளர்த்தால், உங்கள் இதயம் ஆனந்தத்தால் நிரம்பும்; மகிழ்ச்சி பெருக்கெடுத்து வரும். உங்கள் இதயத்தை அன்பால் நிரப்பினால், உங்கள் வாழ்க்கை முழுவதும் அன்பின் அழகான வரலாறாக மாறிவிடும்

தெய்வீகப் பயணத்தில் ஆசைகளின் கட்டுப்பாடு

 தெய்வத்தை நோக்கி மனிதன் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணத்தில், அவன் தனது ஆசைகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மனிதனின் பெரும்பாலான துன்பங்களுக்கும் சிரமங்களுக்கும் காரணம் அவன் ஆசைகளே ஆகும். மனிதன் ஆசைகள் இன்றி வாழ முடியாது என்பது உண்மை. ஆனால் அவை நியாயமான எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். ஆசைகளுக்கு கட்டுப்பாடு இல்லையெனில் உண்மையான சந்தோஷம் கிடைக்காது.

மனிதனின் உணர்வுகளுள் மிகவும் முக்கியமானவை இரண்டு — கண்கள் மற்றும் நாக்கு. இவ்விரண்டும் மிகுந்த சக்தியுடையவை என்பதால், அவற்றின் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான இயற்கையான வழிகளை இறைவன் ஏற்படுத்தி வைத்துள்ளார்.

இறைவன் மனிதனை எச்சரிக்கையுடன் நினைவூட்டுகிறார்: “மனிதனே! நான் உனக்கு கண்களையும் வாயையும் மூடிக்கொள்ள இயற்கையான வழிகளை வழங்கியுள்ளேன் என்பதை நினைவில் கொள்.” நாம் விரும்பாத அல்லது தீயவற்றைப் பார்க்க வேண்டாம் என்றால், கண்களை இமைப்புகளால் மூடிக் கொள்ளலாம். ஆனால் காதுகளுக்கும் மூக்கிற்கும் அவ்வாறான மூடும் சாதனம் இல்லை.

வாயிற்கு உதடுகள் உள்ளன; அவை நாக்கின் செயல்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆகையால் பேசுவதில் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும்; நாக்கை அடக்கிக் கொள்ள வேண்டும். கண்கள் கட்டுப்பாடின்றி அலைந்தால், நாக்கும் கட்டுப்பாடின்றி பேசத் தொடங்கும். அதேபோல் நாக்கு இடைவிடாது பேசிக் கொண்டிருந்தால், கண்களும் எல்லாவற்றையும் பார்க்கத் தொடங்கும்.

இந்த இரு உறுப்புகளும் கட்டுப்பாடின்றி செயல்பட்டால், மனித வாழ்க்கையே பெரும் சிக்கலாக மாறிவிடும். ஆகவே, கண்கள் நல்லவற்றை மட்டுமே காணும் வகையில் அவற்றை வழிநடத்த வேண்டும்.

பிரபஞ்சமும் தெய்வீகத்திற்கான சான்றுகளும்

பிரபஞ்சம் மூன்று செயல்முறைகளுக்குட்பட்டது: படைப்பு, பாதுகாப்பு, மற்றும் அழிவு அல்லது லயம். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது; விஞ்ஞானிகளும் கூட இதை மறுக்க முடியாது. இது அனைவராலும் உணரப்படும் ஒரு பொதுவான சத்தியமாகும்.

பிறந்த எதுவாக இருந்தாலும் அது ஒரு காலம் வரை நிலைத்து, இறுதியில் அழிவை அடைகிறது. இதுவே தெய்வீகத்தின் நேரடி சான்றாகும். இந்த மூன்று அடிப்படை உண்மைகளை ஆராய்ந்தால், தெய்வத்தின் இருப்பு தெளிவாக வெளிப்படும்.

நமது தினசரி வாழ்க்கையிலும் இந்த தெய்வீகத்தை அனுபவிக்க முடிகிறது. உதாரணமாக, மலேசியாவில் காணப்படும் நடனமாடும் சிங்கங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அவை உண்மையான சிங்கங்கள் அல்ல. அவற்றைக் காணும் போது, உண்மையில் ‘சிங்கம்’ என்று அழைக்கப்படும் ஒரு உயிரினம் இருக்கிறது என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

அதேபோல், நமது தினசரி வாழ்க்கையில் காணப்படும் பல பொருள்களும் தெய்வீகத்தை சுட்டிக்காட்டுகின்றன. கரும்பின் இனிப்பு, மிளகாயின் காரம், புளியின் புளிப்பு, வேப்பிலையின் கசப்பு — இவை அனைத்தும் தெய்வீகத்தின் அடையாளங்களாகும்.

வானில் ஒளிரும் நட்சத்திரங்கள், சூரியனின் பிரகாசம், சந்திரனின் குளிர்ச்சி, கடல் அலைகளின் உயர்வு மற்றும் தாழ்வு — இவை அனைத்தும் தெய்வீகக் கோட்பாட்டை உணர்த்துகின்றன.

இந்த அனைத்தும் கடவுளை நேரடியாகக் காட்டவில்லை என்றாலும், தெய்வீகத் தத்துவம் இருப்பதற்கான தெளிவான மற்றும் நேர்மையான சான்றுகளாக விளங்குகின்றன. 🙏

“ராஜம் கிருஷ்ணன் சிறப்பிதழ்” அறிமுக நிகழ்வு



 



சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

23 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் கொடியேற்றம்

30 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் சப்பரத் திருவிழா

31 - 03 - 2026 Tueசிட்னி முருகன்  திருக்கோயில் தேர்த் திருவிழா

01 - 04 - 2026 Wedசிட்னி முருகன்  திருக்கோயில் தீர்த்தத் திருவிழா

இலங்கைச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்

அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையே விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தீரமானம் : வாரத்துக்கு 14 விமான சேவைகள்

வடக்கு, கிழக்கில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் 'லன்டெர்ன்' திட்டம் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைவு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து தூதுவர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை ; மணிலாவில் கொள்கை விளக்க உரையாடலிலும் பங்கேற்பு  



செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்

Published By: Vishnu

13 Mar, 2026 | 05:02 AM

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியை வியாழக்கிழமை (12) மாலை யாழ்ப்பாணம் நீதிவான் உள்ளிட்ட அகழ்வு பணிகளில் ஈடுபடும் தரப்பினர் நேரில் கள விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதன்போது அகழ்வு பகுதியில் நீரினுடைய அளவு மேற்பார்வையயிடப்பட்டு குறித்த நீரை அகற்றுகின்ற நடவடிக்கை மார்ச் மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்ததுடன் அகழ்வு பணிக்கான தற்போதைய திகதியாக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

உலகச் செய்திகள்

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம் ; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை

ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்

லெபனானில் வன்முறை தீவிரம் : இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியை விரிவுபடுத்தும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு 



மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம் ; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை

12 Mar, 2026 | 02:38 PM

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மில்லியன்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் "பேரழிவு" நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்  எச்சரித்துள்ளது.

யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரை 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்முறையினால் காயமடைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர்.

இதில் உள்ளடங்குபவை:

வசந்த நவராத்திரி திருவிழா – 19 மார்ச் வியாழக்கிழமை முதல் 27 மார்ச் வெள்ளிக்கிழமை வரை 🌸🙏

 ஸ்ரீ துர்கா ஆலயம், ரீஜென்ட்ஸ் பார்க் 🙏



சண்டி மகா யாகம் – 22 மார்ச் ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை 🔥🙏

 ஸ்ரீ துர்கா ஆலயம், ரீஜென்ட்ஸ் பார்க் 🙏



சிட்னி முருகன் கோவில் திருவிழா 22/03/2026 - 03/04/2026