மரண அறிவித்தல்

 .

                                                          திருமதி சுபத்திராதேவி அசோக்குமார்



யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், தற்போது மெல்பேர்ண், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சுபத்திராதேவி அசோக்குமார் இன்று 26/10/2020 காலை காலமானார்.

இவர் காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற அசோக்குமாரின் மனைவியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற நடராசலிங்கம், சிவயோகலிங்கம், சித்திவிநாயகலிங்கம், கெங்காதேவி, திருக்குமரலிங்கம், கிருஷ்ணானந்தலிங்கம், அருட்சோதிலிங்கம், நவமணிதேவி ஆகியோரின் சகோதரியும், சிகதரன், கவிதா, வித்தியா, கிரிஜா ஆகியோரின் தாயாரும், ஆகாஷ், விதுஷா, கீரன், சந்தோஷ், இனிகேஷ் ஆகியோரின் பேர்த்தியும், லோகநாயகி, பரமேஸ்வரி, ராகினி, தங்கராசா, ராஜகுமாரி, றஞ்சினிதேவி, சுமதி, சிவானந்தம், அசோகராணி, அசோகமலர் ஆகியோரின் மைத்துனியும், துஷ்யந்தன், சுகந்தன், ஸ்ரீதக்சன், சுபாஷினி ஆகியோரின் மாமியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் நாளை 27/10/2020 செவ்வாய்க்கிழமை, மாலை 2.30 மணிக்கு,  மெல்பனில் Bunurong Memorial Park இல்  (790 Frankston - Dandenong Rd, Dandenong South, VIC 3175  ) நடைபெறும். நடைமுறையிலுள்ள கட்டுப்பாட்டு சூழ்நிலையால், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்குகொள்ளக்கூடியதாக இறுதிக்கிரியைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி

 (தொடர்புகளுக்கு: சிகன் 0425845728,

 துஷ்யந்தன் 0403298861)


1 comment:

Narmi said...

Our heart felt condolences to you all family members. May her soul rest in peace ...
.