வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

 .

அறிவுரை கூறிய வீடணனை இராவணன் கொடும் சொல் கூறி விரட்டி விடுகிறான். வானில் நின்று வீடணன் மேலும் கூறுகிறான். 

"இராவணா, நீ வாழ்க. நான் சொல்வதைக் கேள். உன் வாழ்க்கை உயர நான் வழி சொல்கிறேன். நீண்ட நாள் வாழும் வரம் பெற்ற நீ புகழோடு வாழ வேண்டாமா?  தீயவர்கள் சொல் கேட்டு உனக்கு நீயே கெடுதல் தேடிக் கொள்ளாதே.  அறம் பிழைத்தவருக்கு வாழ்க்கை இருக்குமா? சிந்தித்துப் பார் "


பாடல் 

'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?


 அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழை விட்டவர்களுக்கு வாய்க்குமோ?

இராவணனுக்கு தெரியாத அறம் அல்ல. 

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவை உடையவன் அவன். 

இருந்தும்  செய்வது தவறு என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை? 

அல்லது, தெரிந்தும் ஏன் செய்தான்?


இராவணனை விட்டு விடுவோம். அவன் கதை முடிந்த கதை. 

நம் கதையைப் பார்ப்போம்.


நமக்குத் தெரிந்தே நாம் பல தவறுகளைச் செய்கிறோம். அல்லது நல்லதை செய்யாமல் விடுகிறோம். 

ரொம்ப சாப்பிடக் கூடாது, புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு, சர்க்கரை விஷம், எல்லாம் தெரியும். இருந்தும் செய்கிறோம் அல்லவா?


உடற் பயிற்சி முக்கியம். உணவு கட்டுப்பாடு முக்கியம். நிறைய நீர் குடிக்க வேண்டும். நல்ல ஒய்வு வேண்டும். 


செய்கிறோமா? 


இல்லையே. 


பின், இராவணனை குறை சொல்லி என்ன பயன்?  தெரிந்தே தவறுகளை நாம் செய்வது போல  அவனும் செய்தான். 


இது எவ்வாறு நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? 

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். செய்ய மாட்டேன் என்கிறோம். ஏன்?


அது தெரிந்து விட்டால், இராமாயணம் படித்த புண்ணியம் வந்து சேரும்.

ஏன் நாம் நம்மை வழி நடத்த முடியவில்லை? நாம் நினைப்பதை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?

ஏன் தெரியுமா? ....

நன்றி interestingtamilpoems

No comments: