முனைவர் ஞா.கற்பகம் (பாடகி, இசையாசிரியை மற்றும் எழுத்தாளர்) சிறப்புப் பேட்டி


முனைவர் ஞா.கற்பகம் அவர்கள் முறையாகச் சாஸ்திரிய சங்கீதம் பயின்று இசை மேடைகளிலும், வானொலி இசைப் பாடல்களிலும், தனிப் பாடகராகவும், சேர்ந்திசைப் பாடகராகவும் மிளிர்ந்து வருபவர்.
இசையாசிரியராகத் தன் பணியைத் தொடரும் அவர் எழுத்தாளராக, தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-2000 என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்த்திரையிசைத் துறையின் செழுமைக்கு முதன்மைக் காரணம் அதன் தன்னிகரில்லா இசைக் கலைஞர்கள். பாடகர்-பாடகியாக, இசைக் கருவிக் கலைஞர்களாக, இசையமைப்பாளர்களாகத் திறம்படச் செயலாற்றி தமிழ்த் திரையிசைத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையில்லா ஆளுமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டிய, ஆனால் பரவலாக அறியப்படாத பல அரியத் தகவல்களையும், அவர்களது சாதனைகளையும் திரட்டித் தொகுத்து "தமிழ்த் திரையிசை ஆளுமைகள்" என்கிற இந்நூலானது உருவாக்கப் பட்டிருக்கிறது.
நேற்று முனைவர் ஞா.கற்பகம் அவர்களைப் பேட்டி கண்ட போது தன்னுடைய இசையாசிரியர், பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளா தொடங்கி அந்தக் காலத்து இசையாளுமைகள் குறித்த நினைவுகளோடு பாடல்களையும் பாடிச் சிறப்பித்தார்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய பாடல் உட்பட அரிய பல தகவல்களோடு அமைந்த பேட்டியைக் கேட்க. 






No comments: