இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை
சர்ச்சையை கிளப்பியுள்ள கனடப் பிரதமரின் புகைப்படம்!
பாக்கிஸ்தானினால் பயண தடை விதிக்கப்பட்ட பெண் மனித உரிமை ஆர்வலர் இலங்கை ஊடாக அமெரிக்கா சென்றது எப்படி?
சவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் தீர்மானம்
எங்களை தாக்கும் நாடு பாரிய போர்க்களமாக மாறும் - ஈரான் எச்சரிக்கை- கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் காட்சிப்படுத்தியது
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை
![](https://4.bp.blogspot.com/-Wl-7WGBNRpc/XYBkcFiFv4I/AAAAAAAAt7w/RfVafyxXzu4g2wH6R7i41yOZzDkjZKzrACK4BGAYYCw/s400/thumb_china_navy.jpg)
இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது.
சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.
இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன.
இந்த கண்காணிப்பு விமானங்கள் தொடர்ச்சியாக சீனாவின் கடற்படை கலங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றன.
தற்போது சீனாவின் ஏழு யுத்தகப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நடமாடுகின்றன என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவித்து சீனா கடற்படை இந்த கப்பல்களை இந்துசமுத்திரத்தில் இயக்குகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/101861/16navy.jpg)
இவ்வாறான ஒரு கப்பலை அவதானித்துள்ளதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும் சீனா கடற்படையின் முக்கிய நோக்கம் இந்து சமுத்திரத்தில் தனது வலிமையை வெளிப்படுத்துவதே என தெரிவித்துள்ள இந்திய கடற்படை வட்டாரங்கள் இந்து சமுத்திர பகுதியில் சீனா தனது கடற்படையின் பிரசன்னத்தை விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளன.
தொலைதூர கடற்பகுதிகளிற்கு பயன்படுத்துவதற்காக சீனா தனது விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி வருகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நன்றி வீரகேசரி
சர்ச்சையை கிளப்பியுள்ள கனடப் பிரதமரின் புகைப்படம்!
19/09/2019 18 ஆண்டுகளுக்கு முன்னர் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கருப்பு நிறத்தில் வண்ணங்களை பூசிக் கொண்டு பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட புகைப்படத்தை டைம் சஞ்சிகை பிரசுரித்துள்ளது.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/102122/_108862125_justin_trudeau_yearbook_05.jpg)
இந்தப் புகைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய கனேடிய முஸ்லிம் மன்றம், ஜஸ்டின் ரூடோவின் இந்த செயல் கவலை அளிப்பதாகவும், இதுபோன்ற கருப்பு வண்ண நிற முகமூடிகளை அணிவது நிந்திக்கும் செயல் எனவும் சுட்க்காட்டியுள்ளது.
அதுமாத்திரமல்லாது கனேடிய புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், இந்த புகைப்படமானது பிறரை அவமதிப்பது போல உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி கனடாவில் தேர்தல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் புகைப்படம் வெளிவந்துள்ளமை ரூடோவுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ரூடோ, அரேபிய இரவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிகழ்வு அது. அதன் காரணமாக நான் அவ்வாறாக உடை அணிந்து இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/102123/Justin-Trudeau.jpg)
நன்றி வீரகேசரி
பாக்கிஸ்தானினால் பயண தடை விதிக்கப்பட்ட பெண் மனித உரிமை ஆர்வலர் இலங்கை ஊடாக அமெரிக்கா சென்றது எப்படி?
20/09/2019 பாக்கிஸ்தானின் பிரபல பெண் மனித உரிமை ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பல மாதங்கள் தலைமறைவாகயிருந்த பின்னர் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுள்ளார்.
குலாலாய் இஸ்மாயில் அரசஎதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் வன்முறைகளை தூண்டுகின்றார் என தெரிவித்திருந்த பாக்கிஸ்தான் அரசாங்கம் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்திருந்தது.பாக்கிஸ்தானின் பிரபல பெண் மனித உரிமை ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பல மாதங்கள் தலைமறைவாகயிருந்த பின்னர் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுள்ளார்.
குலாலாய் இஸ்மாயில் அரசஎதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் வன்முறைகளை தூண்டுகின்றார் என தெரிவித்திருந்த பாக்கிஸ்தான் அரசாங்கம் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்திருந்தது.
இந்;நிலையிலேயே அவர் பாக்கிஸ்தானிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்கள் மிகவும் மோசமானவையாக காணப்பட்டன,நான் அச்சுறுத்தப்பட்டேன்,துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்துள்ள அவர் நான் உயிருடன் இருப்பதே அதிஸ்டமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/102264/Humanists-International-Scottish-Parliament-and-Fundraiser-May-2018-69-of-244-1800x1000.jpg)
பாக்கிஸ்தான் அரசாங்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தான் எவ்வாறு அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றார் என்பதை குறிப்பிடாத குலாய்லாய் ஆனால் நான் விமானநிலையம் மூலமாக வெளியேறவில்லை என தெரிவித்துள்ளார்.
நான் இலங்கைக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு வந்தேன் என அவர் பிரீ யுரோப் வானொலிக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை எனது பயணம் குறித்து நான் மேலதிக தகவல்களை வெளியிட்டால் அது எனக்கு பாதுகாப்பு வழங்கியவர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
எனது மகளிற்கு எதிராக பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் உள்ளன,இதனால் அவர் தனது உயிருக்கு கடும் ஆபத்து உள்ளது என அவர் தீர்மானித்தார் என குலாய்லாவின் தந்தை முகமட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே மகள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தார் எனவும் அவ தெரிவித்துள்ளார்.
குலாலாய் இஸ்மாயில் பாக்கிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பெண்கள் குழந்தைகளிற்கு எதிரான உரிமை மீறல்களிற்கு எதிராக இவர் அதிகளவில் குரல்கொடுத்து வந்தார்.
சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிற்கு அவர்களது உரிமைகள் குறித்து கல்வி புகட்டுவதற்காக தனது 16 வயதில் அரசசார்பற்ற அமைப்பொன்றை ஆரம்பித்திருந்த குலாய்லா இஸ்மாயில் தீவிரவாதமயப்படுத்தலிற்கு எதிராகவும் தனது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
2018 இ;ல் லண்டனிலிருந்து பாக்கிஸ்தான் திரும்பியவேளை அவரை கைதுசெய்திருந்த பாக்கிஸ்தான் அரசாங்கம் செய்திருந்தது.
பின்னர் இவ்வருட ஆரம்பத்திலும் அவரை கைதுசெய்த அதிகாரிகள் பின்னர் பயணதடையை விதித்திருந்தனர்.
இந்;நிலையிலேயே அவர் பாக்கிஸ்தானிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்கள் மிகவும் மோசமானவையாக காணப்பட்டன,நான் அச்சுறுத்தப்பட்டேன்,துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்துள்ள அவர் நான் உயிருடன் இருப்பதே அதிஸ்டமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/102264/Humanists-International-Scottish-Parliament-and-Fundraiser-May-2018-69-of-244-1800x1000.jpg)
பாக்கிஸ்தான் அரசாங்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தான் எவ்வாறு அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றார் என்பதை குறிப்பிடாத குலாய்லாய் ஆனால் நான் விமானநிலையம் மூலமாக வெளியேறவில்லை என தெரிவித்துள்ளார்.
நான் இலங்கைக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு வந்தேன் என அவர் பிரீ யுரோப் வானொலிக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை எனது பயணம் குறித்து நான் மேலதிக தகவல்களை வெளியிட்டால் அது எனக்கு பாதுகாப்பு வழங்கியவர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.எனது மகளிற்கு எதிராக பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் உள்ளன,இதனால் அவர் தனது உயிருக்கு கடும் ஆபத்து உள்ளது என அவர் தீர்மானித்தார் என குலாய்லாவின் தந்தை முகமட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே மகள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தார் எனவும் அவ தெரிவித்துள்ளார்.
குலாலாய் இஸ்மாயில் பாக்கிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பெண்கள் குழந்தைகளிற்கு எதிரான உரிமை மீறல்களிற்கு எதிராக இவர் அதிகளவில் குரல்கொடுத்து வந்தார்.
சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிற்கு அவர்களது உரிமைகள் குறித்து கல்வி புகட்டுவதற்காக தனது 16 வயதில் அரசசார்பற்ற அமைப்பொன்றை ஆரம்பித்திருந்த குலாய்லா இஸ்மாயில் தீவிரவாதமயப்படுத்தலிற்கு எதிராகவும் தனது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
2018 இ;ல் லண்டனிலிருந்து பாக்கிஸ்தான் திரும்பியவேளை அவரை கைதுசெய்திருந்த பாக்கிஸ்தான் அரசாங்கம் செய்திருந்தது.
பின்னர் இவ்வருட ஆரம்பத்திலும் அவரை கைதுசெய்த அதிகாரிகள் பின்னர் பயணதடையை விதித்திருந்தனர். நன்றி வீரகேசரி
சவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் தீர்மானம்
21/09/2019 சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து சவூதி அரேபியாவின் விமான, ஏவுகணை தாக்குதல் கட்டமைப்பின் பாதுகாப்புக்கு தமது நாட்டின் இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/96179/trump.jpg)
சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப் புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சவூதி அரேபியாவில் அரம்கோ நிறு வனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14 ஆம் திகதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத் தினர்.ரியாத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தித் தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார்.
இந்நிலையிலேயே அமெரிக்க தானது இராணுவ படைகளை சவூதி அரேபியாவிற்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
எங்களை தாக்கும் நாடு பாரிய போர்க்களமாக மாறும் - ஈரான் எச்சரிக்கை- கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் காட்சிப்படுத்தியது
21/09/2019 ஈரான் மீது தாக்குதலை நாடு உலகின் முக்கிய போர்க்களமாக மாறும் என ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவல்படையின் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் எந்த வகையான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும் தயாராகவுள்ளது என மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.தங்கள் தேசம் முக்கிய போர்க்களமாக மாறவேண்டும் என விரும்பும் எவரும் எங்கள் மீது தாக்குதலை தொடுக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் எல்லையை எந்த யுத்தமும் அணுகுவதற்கு அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/102368/sep_212.jpg)
ஈரான் தொடர்பில் அமெரிக்கா கடந்த காலங்களில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவல்படையின் தளபதி அவர்கள் மீண்டும் மூலோபாய தவறுகளையிழைக்கமாட்டார்கள் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
உங்கள் ஆளில்லா விமானங்களிற்கு எங்கள் வான்பரப்பில் என்னவேலை? நாங்கள் அதனை சுட்டுவீழ்த்துவோம் எங்கள் வான்பரப்பை நோக்கி வரும் எதனையும் சுட்டுவீழ்த்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வான்வெளி பாதுகாப்பு மற்றும் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது போன்ற விடயங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப திறனை ஈரான் மிஞ்சிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/102369/se213.jpg)
அமெரிக்கா சில வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கைகளில் ஈடுபடலாம் ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக நீடிக்காது ஈரான் ஆக்கிரமிப்பாளர்கள் வீழ்ச்சியடையும் வரை ஓயாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானினால் கைப்பற்றப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தும் நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment