ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்


21/09/2019 ஜனா­தி­பதி தேர்தல் குறித்த முன்­னெ­டுப்­பு­களில்  அர­சியல் கட்­சிகள் ஈடு­பட்டு வரு­கின்­றன. இத்­தேர்­தலில் பல வேட்­பா­ளர்கள் கள­மி­றங்க உள்ள நிலையில் எந்த ஒரு வேட்­பா­ளரும் ஐம்­பது சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது போகக்­கூடும் என்று விமர்­ச­கர்கள் பலரும் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இதே­வேளை இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்­மை­யினர் நாட்டின் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக உரு­வெ­டுப்பர் என எதிர்வு கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. சமூ­க­வி­ய­லா­ளர்கள் மேற்­கொண்ட ஆய்­வு­களும் இதனை உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. இந்­நி­லையில் பெரும்­பான்மை அர­சியல் கட்­சிகள் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ளும் பகீ­ரதப் பிர­யத்­த­னத்தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தா­க­வுள்­ளது.

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான எதிர்­பார்ப்­புகள் நாட்டு மக்­க­ளி­டையே இப்­போது அதி­க­மாக காணப் ­ப­டு­கின்­றன. நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­வது யார் என்று நாட்டு மக்கள் ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக குறைக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஜனா­தி­பதி பத­வி­யினை கைப்­பற்றும் நோக்கில் வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கு­கின்­றனர். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை எமது நாட்­டுக்கு உகந்­த­தல்ல என்று ஒரு சாரார் கூறி வரு­கின்­றனர். இதே­வேளை இன்­னு­மொரு சாரார் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை கடந்த காலத்தில் பல்­வேறு சாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது என்றும் இம்­மு­றை­மையும்  நாட்டின் அபி­வி­ருத்­திக்கும், பாது­காப்­பிற்கும் தோள் கொடுக்கும் என்றும் கூறி­யுள்­ளனர். எவ்­வா­றெ­னினும் ஜே.வி.பி. போன்ற கட்­சிகள் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­யினை முற்­றாக ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்­சி­யா­கவே குரல் கொடுத்து வரு­கின்­ற­மையும் நாம் அறிந்­ததே.


நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பல சந்­தர்ப்­பங்­களில் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். அண்­மையில் மாலை­தீ­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த பிர­தமர் அந்­நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை­யிலும் இது தொடர்பில் பல்­வேறு கருத்­துக்­க­ளையும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். சட்­டங்­களின் மூலம் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாது. எனவே ஜன­நா­யக கட்­ட­மைப்­புக்­களின் சுதந்­தி­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­துடன் அவற்றின் ஊடாக செயன்­மு­றைகள் இடம் ­பெ­று­வதை உறு­திப்­ப­டுத்­து­வதும் அவ­சி­ய­ம். அதன் ஊடாக நிறை­வேற்று அதி­கா­ரத்தில் தங்கி இருக்க வேண்­டிய அவ­சியம் ஏற்­ப­டாது. 
அத்­த­கைய வழி­மு­றை­யி­லேயே நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­து­வத்­தையும், சுதந்­தி­ரத்­தையும் உறுதி செய்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார். மேலும் இலங்கை மற்றும் மாலை­தீவு ஆகிய இரு­நா­டு­களும் பெரும்­பா­லான விட­யங்­களில் ஒரு­மித்த தன்­மை­யைக் கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக இரு­நா­டு­களும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையைக் கொண்­டி­ருக்­கின்­றன. எனினும் கடந்த ஆட்சி காலத்தில் இடம்­பெற்ற பல்­வேறு வித­மான நிறை­வேற்று அதி­கார மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மீறல்­களின் கார­ண­மாக அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தின் மூலம் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களைக் குறைத்து பாரா­ளு­மன்­றத்தை மேலும் வலுப்­ப­டுத்தி இருப்­ப­தா­கவும் பிர­தமர் மாலை­தீவில் தெரி­வித்­தி­ருந்தார்.
நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைந் துள்ள நிலை­யிலும் இன்னும் குறைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நிலை­யிலும் ஏன் இந்த ஜனா­தி­பதி பத­விக்­காக ’குடுமிச் சண்டை’ போட் டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்­வி­யை புத்­தி­ ஜீ­விகள் பலரும் எழுப்பி இருக்­கின்­றனர். இக்­கேள்வி நியா­ய­மா­ன­தே. இப்­படிப் பார்க்­கை­யிலே ஜனா­தி­பதி பத­விக்­காக கிடைக்கும் வசதி வாய்ப்­புக்­களை மட்­டுமே குறி வைத்து இவர்கள் போட்­டி­யி­டு­கின்­றார்­களா என்­கிற ஒரு கேள்­வியும் எழு­கின்­றது.
 எவ்­வா­றெ­னினும் எதிர்­வரும் நவம்பர் 16ஆம் திகதி     நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெறும் என்று  செய்தி வெளி­யிடப்பட்டுள்ளது. பொது­ஜன பெர­முன ஏற்­க­னவே கோத்­தபாய ராஜபக்ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­வித்­தி­ருக்­கின்­றது. தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பா­ள­ராக அனுர குமார திஸா­நா­யக்க போட்­டி­யி­டு­கின்றார். ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் பொது­ஜன பெர­முன என்­ப­வற்­றுக்கு இடை­யி­லான ஆரம்­ப­கட்ட பேச்­சு­வார்த்­தைகள் ஓர­ளவு சாத­க­மாக அமைந்­த­தாகக் கூறப்­பட்­ட­போதும் இக்­கட்­சிகள் தேர்­தலில் இணைந்து போட்­டி­யி­டுமா என்­பது இன்னும் உறு­தி­யா­க­வில்லை. தேர்தல் சின்னம் குறித்தும் இழு­ப­றி­யான ஒரு நிலையே இருந்து வரு­கின்­றது. இந்­நி­லையில் ஐ.தே.க. விரைவில் தனது கட்­சியின் வேட்­பா­ளரை அறி­விக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர்.
ஜனா­தி­பதி தேர்­தலில் இம்­முறை அதி­க­மான வேட்­பா­ளர்கள் கள­மி­றங்க உள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. இந்­நி­லையில் வாக்­குச்­சி­தறல் கணி­ச­மாக இடம்­பெறும் சாத்­தி­ய­முள்­ளது. இந்­நி­லை­மை­யா­னது எந்த ஒரு வேட்­பா­ளரும் ஐம்­பது வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தனை கேள்விக் குறி­யாக்கும் என்று கருத்­துகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையின் அடுத்த ஜனா­தி­பதி யார் என்று நாட்டு மக்­க­ளி­டையே எதிர்­பார்ப்பு மேலோங்கி காணப்­ப­டு­வ­தைப் போன்றே சர்­வ­தே­சமும் இது தொடர்பில் கூடு­த­லான அவ­தா­னம் செலுத்தி வரு­கின்­றது. 
குறிப்­பாக சீனா, இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான் போன்ற நாடு­களின் பார்­வைகள் இலங்­கையின் மீது மிகவும் ஆழ­மா­கவே பதிந்­தி­ருப்­ப­த­னையும் இங்கு கூறி­யாதல் வேண்டும். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வத்தைத் தொடர்ந்து நாட்டின் பாது­காப்பு தொடர்பில் அதி­க­மா­கவே பேச்­சுகள் அடி­படத் தொடங்கி இருக்­கின்­றன. சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தின் ஊடு­ருவல் நிலை­யா­னது நாட்டு மக்­க­ளி­டையே ஒரு அச்ச உணர்­வினை ஏற்­ப­டுத்தி இருந்­தது. தனது இனத்­தையும் பௌத்த மதத்­தையும் பாது­காக்க வேண்டும் என்ற உணர்வு சிங்­கள மக்­க­ளி­டையே அதி­க­மாக மேலெ­ழுந்­தது. நாடு அந்­நி­யரின் கைக­ளுக்குப் போய்­விடப் போகின்­றது என்று அவர்கள் பயம் கொண்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி, அந்­நிய சவால்­க­ளையும் பயங் ­க­ர­வா­தத்­தையும் வெற்றி கொண்டு நாட்டைக் கட்­டி­ யெ­ழுப்பக் கூடிய ஒரு தலைவர் நாட்­டுக்கு தேவை எனப் பெரும்­பான்மை மக்கள் எண்ணம் கொண்­டனர். இத்­த­கைய ஒரு ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்று இனங்­கண்டு பெரும்­பான்மை சிங்­கள மக்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் அத்­த­கைய ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிப்பர் என்­பதே உண்­மை­.
சிறு­பான்­மை­யினர்
சிறு­பான்­மை­யினர் இந்த நாட்டின் அர­சி­யலை பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றார்கள். நாட்டின் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் வல்­ல­மையும், ஆளு­மையும் இவர்­க­ளுக்கு இருந்­தது. எனினும் சில வேளை­களில் இன­வா­திகள் குறுக்­கிட்டு சிறு­பான்­மை­யி­னரின் ஆளு­மை­யையும் ஆதிக்­கத்­தையும் மழுங்­க­டித்த சம­யங்­களும் இலங்­கையின் வர­லாற்றில் அதி­க­மா­கவே இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆசைக்­காட்டி எல்­லா­வற்­றையும் செய்து தரு­வ­தாகக் கூறி அவர்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்டு அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்­தி­ய­வர்கள் பின்னர் அம்­மக்­களை உத­றித்­தள்­ளிய வர­லா­று­களும் அதி­க­முள்­ளன. சிறு­பான்மை மக்கள் இந்­நாட்டில் பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றார்கள். ‘குனிந்தால் குட்டு, நிமிர்ந்தால் உதை’ என்று சிறு­பான்­மை­யினர் தொடர்ச்­சி­யா­கவே நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றார்கள். நாடு சுதந்­தி­ர­ம­டைந்த போதும் இவர்­களின் வாழ்க்கை இன்னும் ஏனோ இரு­ளில்தான் மூழ்கிக் கிடக்­கின்­றது. 
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சாத­க­மா­னது என்று சிறு­பான்மை தலை­வர்கள் கோஷ­மி­டு­கின்­ற­போதும் உண்­மையில் இம்­மு­றை­மையின் ஊடாக சிறு­பான்­மை­யினர் பூரண நன்­மை­யைப் பெற்றுக் கொண்­டார்­களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டு அதனைப் பார்த்து ரசித்துக் கொண்­டி­ருந்த பேரி­ன­வா­தி­களும் அர­சி­யலில் இருந்­தி­ருக்­கின்­றார்கள் என்­பது புதிய ஒரு விட­ய­மல்ல. இரு­வேறு முகங்­களைக் கொண்­ட­வர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக நாடு கெட்டுக் குட்டிச் சுவ­ராகி இருக்­கின்­றது. சிறு­பான்மை சமூ­கத்­தினர் பல்­வேறு சீர­ழி­வு­க­ளுக்கும் உள்­ளாகி இருக்­கின்­றனர். இன்னும் எத்­தனை காலத்­துக்­குத்தான் இந்த நிலை தொடரப் போகின்­றது? என்று தெரி­ய­வில்லை.
சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் பலவும் இந்­நாட்டில் இன்னும் தீர்க்­கப்­ப­டாத நிலையில் உள்­ளன. மலை­யக மக்­க­ளுக்கு பொரு­ளா­தாரப் பிரச்­சினை மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. இது மட்டும் அவர்­களின் பிரச்­சி­னை­யல்ல. இன்னும் குடி­யி­ருப்பு உள்­ளிட்ட அடிப்­படை பிரச்­சி­னைகள் பலவும் தீர்க்­கப்­ ப­டாத நிலையில் இவற்­றுக்­கான தீர்­வினை எதிர்­பார்த்து இம்­மக்கள் காத்­தி­ருக்­கின்­றார்கள். நாட்டில் யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட போதும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட எமது சகோ­த­ரர்கள் வடுக்கள் பல­வற்­றையும் சுமந்த வண்ணம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். இம்­மக்­களின் வலி­யை யாரும் புரிந்து கொள்­வ­தாக இல்லை. 
தேர்தல் காலங்­களில் மட்­டுமே இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு குறித்து அர­சியல் தலை­வர்கள் வாய் திறக்­கின்­றார்கள். நல்­லாட்சி தீர்­வினைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்­பி­யி­ருந்­த­வர்கள் எண்­ணத்­திலும் மண் விழுந்­தி­ருக்­கின்­றது. இத­னி­டையே ஜனா­தி­பதித் தேர்தல் விரைவில் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் இப்­போது தலை­வர்­க­ளுக்கும், வேட்­பா­ளர்­க­ளுக்கும் கரி­சனை பிறந்­தி­ருக்­கின்­றது. இந்த கரி­சனை குறித்து தமிழ்மக்கள் விழிப்­புடன் இருத்தல் வேண்டும். இத­னி­டையே நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்று ஒன்று கிடை­யாது. இங்கு நில­வி­யது பயங்­க­ர­வாத பிரச்­சி­னையே. அதுவும் பிர­பா­கரன் இறந்­து­விட்ட கையோடு முடிந்து விட்­டது என்று அதி­மே­தா­விகள் சிலர் கூறு­கின்­றமை தொடர்­பிலும் நோக்க வேண்டி இருக்­கின்­றது.
தமிழ் மக்­க­ளுக்கு எதை­யுமே வழங்கக் கூடாது என்­பது இன­வாத அதி­மே­தா­வி­களின் கருத்­தாக இருக்­கின்­றது. பல்­லின மக்­களின் ஒற்­று­மைக்கு இத்­த­கையோர் குந்­த­க­மாக இருந்து வரு­கின்­றார்கள் என்­பதும் சொல் லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. காணா­ம­லாக்­கப்­பட் டோர் விடயம், அர­சியல் கைதி­களின் விடு­தலை, நில மீட்பு நட­வ­டிக்­கைகள் என்­ப­னவும் இன்னும் இழு­பறி நிலை­யி­லேயே உள்­ளன. மலை­யக மக்­க­ளுக்­கான தனி­யான அதி­கார அல­கு­க­ளையும் இன்னும் நன­வாக்­க­வில்லை. முஸ்லிம் மக்­களின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் அதி­க­முள்ள நிலையில் இன்னும் அவை­க­ளுக்கு உரிய தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றாக சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது அதி­க­முள்ள நிலையில் மீண்டும் மீண்டும் வாக்­கு­று­தி­களை மட்­டுமே நம்பி வாக்­க­ளித்து அர­சி­யல்­வா­தி­களை ஆட்சி பீட­மேற்­று­வதால் எது­வி­த­மான பயனும் இல்லை. சிறு­பான்­மை­யினர் வாக்­க­ளிக்க மட்­டுமே உரித்­து­டை­ய­வர்கள் என்ற சிந்­தனை மாற்­றி­ய­மைக்­கப்­ப­டுதல் வேண்டும்.
இந்த நிலையில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேந்­திரன் மலை­யக மக்கள் குறித்து தெரி­வித்த ஒரு கருத்தை நான் இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ.ல. சுதந்­திரக் கட்சி என்று இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிர­தான கட்­சி­களும் மலை­யகத் தமி­ழர்­களை ஏமாற்­றி­யதே வர­லா­றாக இருக்­கின்­றது. வாக்­க­ளிப்பு இயந்­தி­ர­மா­கவே அம்­மக்­களை இன்னும் பயன்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றன. இதற்கு மலை­யக அர­சியல் தலை­வர்­களும் துணை நிற்­கின்­றனர். இதன் கார­ண­மா­கவே அற்ப சம்­ப­ளத்­துக்­கா­கவும் போராட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. குடி­யு­ரிமை வழங்­கப்­பட்ட பின்னர் அர­சி­ய­லுக்கு வந்த மலை­யக மக்­களின் பிர­தி­நி­திகள் சிலர் மக்­களின் பிரச்­சி­னை­களை முன்­னி­லைப்­ப­டுத்­தாமல் சொந்த அர­சி­ய­லுக்கே முன்­னு­ரிமை வழங்­கினர் என்ற ஒரு குற்­றச்­சாட்­டையும் அரி­ய­நேந்­திரன் முன்­வைத்­தி­ருக்­கின்றார். மேலும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான களத்தை இம்­முறை தேர்­த­லின்­போது அமைத்­துக்­கொள்ள வேண்டும் எனினும், அதை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே தமிழ் கட்­சி­களின் தீர்­மா­னங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். இது உண்­மையில் சிந்­திக்­கத்­தக்க ஒரு விட­ய­மே­. சிறு­பான்மை மக்கள் தொடர்ந்தும் ஏமா­ந்துவிடக் கூடாது. 
தீர்­மா­னிக்கும் சக்தி
நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­தைப்­போன்று சிறு­பான்­மை­யினர் ஏற்­க­னவே பல தேர்­தல்­களில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக விளங்கி இருக்­கின்­றார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்றி, நல்­லாட்­சியின் உரு­வாக்கம் என்­ப­வற்றில் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னரின் பங்­க­ளிப்பு மிகவும் அதி­க­மா­னது. இத­ன­டிப்­ப­டையில் இம்­முறை இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லிலும் சிறு­பான்­மை­யினர் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக விளங்­கு­வார்கள் என்று பர­வ­லாக கருத்­துக்கள் எதி­ரொ­லிக்­கின்­றன. இதில் நம்­பகத் தன்­மையும் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது. இதனை உணர்ந்து கொண்­டுள்ள அர­சியல் கட்­சி­களும், வேட்­பா­ளர்­களும் வடக்கு, கிழக்கு, மலை­யகம், கொழும்பு உள்­ளிட்ட பல பகு­தி­க­ளிலும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வதில் அதீத ஈடு­பாடு காட்டி வரு­கின்­றன. இப்­போதே சிறு­பான்­மை­யி­னரின் அபி­வி­ருத்தி கருதி பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளையும் இவர்கள் வழங்­கத் ­தொ­டங்கி இருக்­கின்­றனர். உண்­மையில் இத்­த­கை­யோரின் பிழை­யான செயற்­பா­டு­க­ளுக்கு எமது சமூ­கத்தைச் சேர்ந்த சிலர் உடந்­தை­யாக இருந்து வரு­கின்­றமை வேத­னைக்­கு­ரி­ய­து. அற்ப சலு­கை­க­ளுக்­காகவும் சுய இலா­பங்­க­ளுக்­கா­கவும் சமூ­கத்தை அடகு வைக்கும் பலிக்­க­டா­வாக்கும் நிலை­மைகள் மாற்­ற­ம­டைய வேண்டும்.
தேர்தல் காலங்­களில் சிறு­பான்மை மக்­களை ரத்­தத்தின் ரத்­தங்­க­ளாக காட்டிக் கொள்ளும் பச்­சோந்­தி­களின் மாயவலையில்  எம்­ம­வர்கள் சிக்­கிக்­கொள்ளக் கூடாது. செயற்­தி­றனும் ஆளு­மையும்மிக்க அபி­வி­ருத்­திக்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும் வலு­சேர்க்கக் கூடிய வேட்­பா­ளர்­களை இனங்­கண்டு வாக்­க­ளிக்க வேண்டும். வாக்கு என்­பது வேட்­டுக்கு சம­மா­னது என்­பார்கள். ஒரே­யொரு வாக்கு தலை­வி­தி­யையே மாற்­றி­ய­மைத்­து­விடும் வல்­லமை மிக்­கது. எனவே இதனை உணர்ந்து வாக்­க­ளிப்பில் அதா­வது யாருக்கு வாக்­க­ளிக்கப் போகின்றோம் என்­பது குறித்து சிறு­பான்மை மக்கள் மிக ஆழ­மாக சிந்­திக்க வேண்டும். அற்ப சொற்ப சலு­கை­க­ளுக்­காக வாக்­க­ளித்து பின்னர் ஆபத்தில் மாட்டிக் கொள்­ளக்­கூ­டாது. இதே­வேளை இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றியை சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே தீர்­மா­னிக்கும் என்று ஆய்­வுகள் வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றன.
ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் நாட­ளா­விய ரீதியில் அப்­பிப்­பி­ராய ஆய்வு ஒன்­றினை பேரா­தனை பல்­க­லைக்­க­ழக சமூ­க­வியல் திணைக்­க­ளத்தின் முன்னாள் உறுப்­பினர் கலா­நிதி சிசிர பின்­னள மேற்­கொண்­டி­ருந்தார். இவ்­வாய்வின் மூல­மாக பல்­வேறு விட­யங்கள் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­னள. இவ்­வாண்டில் ஜனா­தி­பதி தேர்தல் வெற்­றி­யா­ளரை சிறு­பான்மை இனத்­த­வர்­களின் வாக்­கு­களே தீர்­மா­னிக்கும். மற்­றைய முக்­கிய வாக்குத் தொகு­தி­யாக சிங்­கள பௌத்­தர்கள் இருப்­பார்கள். வெற்­றியில் நம்­பிக்கை கொண்­டி­ருக்கக் கூடிய எந்த வேட்­பா­ளரும் சிங்­கள பௌத்த வாக்­கு­களில் குறைந்­தது ஐம்­பது சத­வீ­தத்தை பெறக்­கூ­டி­ய­வா­ராக இருக்க வேண்டும்.
ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது ஐ.தே.கவுக்கும் பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் பாதிப்­பாக அமையும். சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு பெருந்­தோட்டப் பகு­தி­களில் பெரும் ஆத­ரவு கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றது. வடக்கு கிழக்கு மற்றும் முஸ்லிம் பகு­தி­க­ளினுள் அவ­ருக்கு ஆத­ரவு கிடைக்கும். கரு ஜய­சூ­ரி­யவை பொறுத்­த­வரை நகரப் பகு­தி­களில் கூடு­த­லான வாக்­கு­களைப் பெறக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கின்­றது. அதே­வேளை, பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தபாய ராஜபக்ஷ (சஜித் பிரே­ம­தா­ஸா­வுடன் ஒப்­பி­டும்­போது) நன்­றாக ஆத­ரவை பெறக்­கூ­டி­ய­வ­ராக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்றார். ஐ.தே.கவின் வேட்­பா­ள­ராக பிரே­ம­தாஸ நிறுத்­தப்­படும் பட்­சத்தில் ஜே.வி.பி. வேட்­பாளர் கூடு­த­லான வாக்­கு­களைப் பெற்றுக் கொள்வார். கரு ஜய­சூ­ரிய வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­படும் பட்­சத்தில் அனுர குமார திசா­நா­யக்­க­வுக்கு குறை­வான வாக்­கு­களே கிடைக்கும் என்றும் ஆய்வின் முடி­வுகள் தெரி­விக்­கின்­றன.
நாடு முழுவதும் இருந்த 1675 வாக்­கா­ளர்­களை வகை மாதி­ரி­யாக பயன்­ப­டுத்தி அவர்­களைப் பத்து உப நிலப் பகு­தி­களில் அடிப்­ப­டையில் பிரித்தே கலா­நிதி சிசிர பன்­னல இந்த ஆய்­வினை மேற்­கொண்­டி­ருந்தார். தமி­ழர்கள், சிங்­க­ள­வர்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­தவ பெரும்­பான்மை பகு­தி­க­ளாக இந்த வாக்­கா­ளர்கள் பிரிக்­கப்­பட்டு நேரடி சந்­திப்­பு­களின் மூல­மா­கவும் தொலை­பேசி ஊடான நேர்­கா­ணல்­களின் மூல­மா­கவும் தொடர்பு கொள்­ளப்­பட்­டார்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதே­வேளை பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ தொடர்பில் ஜே.வி.பியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி குறி­பி­டு­கையில்,  தமிழ்ப் பேசும் மக்கள் மத்­தியில் கோத்­தபாய செல்­வாக்­கி­ழந்து காணப்­ப­டு­வ­தா­கவும் இதன் கார­ணத்­தா­லேயே கோத்­தபாய தன்னை சிங்­கள இன­வா­தி­யைப்போல் காட்டிக் கொள்ள முற்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். மேலும் கோத்­த பாய குறித்து பெரி­தாகக் கூறு­வ­தற்கு எது­வு­மில்லை. கோத்­தபாய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­ட­போதே மஹிந்த தோல்­வி­ய­டைந்­து­விட்டார் என்­பது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுவிட்டது என்றும் சுனில் ஹந்துன் நெத்தி கூறு­கின்றார். ஐ.தே.கவின் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கினால் நாம் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கப்­போ­வ­தாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தெரி­வித்­துள்­ளன. அமைச்­சர்­க­ளான மனோ­க­ணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்­பரம், ரிஷாட் பதி­யுதீன், சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்­ட­வர்கள் சஜித் பிரே­ம­தா­ஸவை சந்தித்தபோதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சிந்தித்துச் செயற்படுவோம்
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் பிரிவடைகின்றபோது சிறபான்மையினரின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். ஒரு காலத்தில் தமிழ்மக்கள் வட பகுதியில் தேர்தலை முற்றாக பகிஷ்கரித்தனர். இதனால் தமிழ்மக்களின் வாக்குகள் ஐ.தே.கவுக்கு செல்லாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும் நிலை உருவானது என்பதனை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் நினைவுபடுத்தினார். தமிழ்மக்க ளின் அல்லது சிறுபான்மை மக்களின் வாக்குகள் கடந்த காலத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. சிங்கள பௌத்தர்கள் இன்று பல்வேறு காரணங்களினால் ஓரணியில் திரண்டிருக்கின்றார்கள். நடுநிலைப் போக்கினை கடைபிடித்தவர்களும் இன்று ஓரணியின் பக்கம் சாருகின்ற நிலைமையில் உள்ளனர். இவர்கள் சுமார் 72 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் சிறுபான்மையினரின் வாக்குகள் பயனற்றுப் போகும் அல்லது தீர்மானிக்கும் சக்தியாக அமையாத ஒரு நிலை ஏற்படும். எனினும் சஜித் பிரேமதாஸ வேட்பாளராகுமிடத்து கிராமப்புற வாக்குகளை கவரு கின்ற ஆளுமை அவருக்கிருக்கின்றது. எனவே நிலை மைகள் மாறுபடலாம். ரணில் பௌத்த சிங்களவர் களிடத்தில் உரிய ஆதரவற்ற நிலையிலேயே இருந்து வருகின்றார். ரணில் வேட்பாளரானால் கோத்தபா யவிற்கான வாக்குகள் அதிகரிக்க இடமுண்டும்.
முஸ்லிம்கள் இன ரீதியாக ஒற்றுமையை கொண் டுள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் பிரதேச ரீதியாக ஒற்றுமை கொண்டுள்ளனர். எனினும் மலையக தமி ழர்களிடம் பிரிவு நிலையே அதிகமாக காணப்படு கின்றது. இவர்களின் வாக்குகள் இரு நிலைப்பட் டதாக உள்ளது. கோத்தபாயவுக்கும், ஐ.தே.கவுக்கும் வாக்குகள் விரிவடையும் நிலைமை உள்ளது. 
அதேவேளை இம்முறை அனுரகுமார திசாநாயக்கவும் கணிசமான தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வார். எனவே மலையக மக்களின் வாக்குகள் தீர்மானம் மிக்கதாகுமா என்ற கேள்வி எழுகின்றது. மலையக கட்சிகள் ஒன்றாக கைகோர்த்து தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும். அப்போதே சுமார் பத்து  லட்சம் வாக்குகளும் அழுத்தம் மிக்கதாகும்; கோரிக்கைகளை வெல்லவும் உந்து சக்தி யாகும் என்கிறார் பேராசிரியர் விஜயசந்திரன். 
எனவே சிந்திப்போம்; செயற்படுவோம். 
துரை­சாமி நட­ராஜா - நன்றி வீரகேசரி 




No comments: