ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் வெற்றி 56 இன் பின்னர் பௌத்த பிக்­குகள் பெற்ற வெற்­றியா?


03/12/2019  நடந்­து­ மு­டிந்த ஜனா­தி­ப­தித் ­தேர்­தலில், மொத்தமாக 160 தேர்தல் தொகு­தி­களில் சஜித் பிரேம­தாஸ  46  தேர்தல் தொகு­தி­களில் வெற்றிப் பெற்­ற­துடன் ஏனைய 114 தொகு­தி­க­ளிலும்   கோத்­தா­பய ராஜ­பக்ஷ  வெற்றி பெற்­றுள்ளார். சஜித் வென்­ற ­தேர்தல் தொகு­தி­களில் 22 தொகு­திகள் வட கிழக்கைச் சார்ந்­தன. தென்­னி­லங்­கையில் வென்ற 24 தொகு­தி­களில் தமி­ழர்களும் முஸ்­லிம்­களும் கணி­ச­மாக வாழும் தேர்தல் தொகு­தி­க­ளி­லேயே வெற்­றி­ப் பெற்­றுள்ளார்.
114 தேர்தல் தொகு­தி­களில்   கோத்­தா­பய  67 வீதத்­திற்கு அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றுள்ளார். இத்­தொ­கு­தி­களில் வாழும் சிங்­கள மக்­களில் 30 வீத மக்­களே   சஜித் பிரேம­தா­ஸ­விற்கு வாக்­க­ளித்­துள்­ளனர். சுமார் 70 சத­வீ­த­மான சிங்­கள மக்கள்   கோத்­தா­ப­ய­விற்கு வாக்­க­ளித்­துள்­ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்­ப­வத்­துடன் நாட்டின் பாது­காப்பு சிங்­கள மக்­களின் பிர­தான எதிர்­பார்ப்­பாக இருந்த போதிலும் அதனை முன்­னி­லைப்­ப­டுத்தி   கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை   வெற்றிப் பெறச் செய்­வதில் பௌத்த பிக்­கு­களின் அமைப்­பு­களே பிர­தா­ன பாத்­தி­ரத்தை வகித்­துள்­ளன.
பத்­திரி­கை­களில் வெளி­வந்த செய்­தி­களின் படி 10,000 பௌத்த பிக்­குகள் நாடு முழு­வ­தி­லு­முள்ள சிங்­கள கிரா­மங்­களில் கோத்­தா­ப­ய­விற்கு வாக்­க­ளிக்கும் படி கோரி­யுள்­ளனர். நாட்­டையும், பௌத்த மதத்­தையும் பாது­காத்துக் கொள்ள  கோத்­தா­ப­ய­விற்கு வாக்­க­ளிக்­கும்­ப­டியே கோரி­யுள்­ளனர்.
இலங்­கையின் அர­சியல் வர­லாற்றைப் பொறுத்­த­வரை, பௌத்­த­பிக்­குகள் கால­னித்­துவ காலத்­திலும் அதற்கு முந்­தைய காலத்­திலும் ஆட்­சியில் ஆதிக்கம் செலுத்தி வந்­துள்­ள­மையை காண­மு­டி­கின்­றது. கால­னித்­து­வத்­திற்கு முந்­தை­ய ­கா­லத்தில் ஏனைய நாடு­களைப் போல் பௌத்த மத­கு­ரு­மார்­களே ஆட்­சி­யா­ளர்­களின் ஆலோச­கர்­க­ளாக இருந்­துள்­ளனர். சிங்­க­ள­மக்­க­ளது வர­லாற்றில் கி.மு.  140 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற துட்­ட­கை­முனு – எல்­லாளன் போரின் வெற்­றிக்கு பௌத்­த­பிக்­கு­களே பக்­க­ப­ல­மாக இருந்­துள்­ளனர். போரின் வெற்­றிக்குப் பின்னர் துட்­ட­கை­முனு பௌத்­த­ம­தத்­திற்கும் பௌத்­த­பிக்­கு­க­ளுக்கும்  நன்றி செலுத்தும் வகையில் ருவன்­வெ­லி­சாய தாது­கோ­பு­ரத்தைக் நிர்மாணித்து ­அர்ப்­பணம் செய்­துள்ளார்.  
கால­னித்­து­வத்­திற்கு பிந்­தை­ய­ வ­ர­லாற்றில் ஜன­நா­ய­கத்தை மையப்­ப­டுத்தி தோற்­று­விக்­கப்­பட்ட
(மத்­தி­ய­ கி­ழக்கு முஸ்லிம் நாடு­களைத் தவிர) அர­சாங்­கங்­களில் மத­வா­திகள் தலை­யீடு செய்­வதை உலகின் பல நாடுகள் நீக்­கின அல்­லது ஓரங்­கட்­டின. இன்னும் சில நாடுகள் மதச் சார்­பற்ற நாடு­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­திக்­கொண்­டன. பிரித்­தா­னி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்ற இலங்கை மதச்­சார்­பற்­ற ­நா­டாக பிர­க­ட­னப்­ப­டுத்தா விட்­டாலும் இலங்கை பௌத்­த­நாடு என்­ற­ அ­டை­யா­ளத்தை கொண்­டி­ருக்­க­வில்லை. ஆனால் பௌத்­த­பிக்­குகள் இலங்­கையை பௌத்த நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி வந்­தனர்.
அதே­வேளை இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­களை தெரிவு செய்­வதில் ஆதிக்கம் செலுத்தி வந்­தனர். ஏனைய பௌத்த நாடுகள் போலல்­லாது இலங்­கையில் பௌத்த மடால­யங்கள் ஒவ்­வொரு கிரா­மத்­திலும் இருப்­ப­துடன் அவ் மட­ால­யத்­தி­லுள்ள பிக்­கு­க­ளுக்கு உணவு மற்றும் தேவை­யா­ன­வற்றை கிரா­மத்­தவர் வழங்­கு­வ­துடன் கிரா­மத்­த­வரின் அனைத்து மத,சமூக, கலா­சார சடங்­கு­க­ளிலும் பௌத்­த­பிக்­குகள்  பங்கு கொண்டு வரு­கின்­றனர். இதனால் பௌத்­த­பிக்­குகள் கிரா­மத்­த­வர்கள் மத்­தியில் கருத்­து­ரு­வாக்கம் செய்வோராக இருந்து வரு­கின்­றனர். கிரா­மத்­த­வர்­களும் பெரும்­பாலும் கிராம பௌத்த பிக்­குவின் ஆணைக்குக் கட்­டு­ப்பட்­ட­வர்­க­ளா­கவே இன்றும் இருந்­து­வ­ரு­கின்­றனர்.
 இலங்கை பல­முறை தென்­னிந்­திய படை­யெ­டுப்­பு­க­ளுக்கும் பின்னர்  ஐரோப்­பி­யரின் படை­யெ­டுப்­புக்கும் ஆளா­கி­ய­மையே அதற்­கான அடித்­தளம். இலங்­கையை கைப்­பற்­றி­ய­வர்கள் தத்­த­மது மதங்­களை அறி­மு­கப்­ப­டுத்­திய வேளை பௌத்­த­பிக்­குகள் அதனை பல­மாக எதிர்த்­துள்­ளனர். பௌத்த மதத்தை காப்­பதே அன்றைய அர­சனின் பிர­தான பொறுப்பு என்­பதை  வலி­யு­றுத்தி வந்­துள்­ளனர். இறு­தி­யாக ஆங்­கி­லேயர் கண்­டிய இராச்­சி­யத்தைக் கைப்­பற்­றிய பின்னர் கைச்­சாத்­திட்ட ஒப்­பந்­தத்­திலும் பௌத்த மதத்தை காப்­பாற்றும் படி வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.
மன்னர் காலம் முதல் பௌத்த பிக்­குகள் ஒழுங்­க­மைக்­க­ப்பட்ட அமைப்­பாக இருந்து வரு­கின்­றனர். இவ்­வொ­ழுங்­க­மைப்பு கால­னி­யாதிக்க காலத்­திலும்  வலு­வாக இருந்­துள்­ளது. இது சாதி­ய­டிப்­ப­டையில் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டுள்­ளது. உயர் சாதி எனக் கூறப்­படும் வேளாளர் (கொவி­கம) சியம் நிகாய பிரி­வினர் என்றும் ஏனைய பிற­சா­திகள் எனக் கூறப்­ப­டுவோர் அம­ர­புர ­மற்றும் ராம்­மான்ய நிகாய பிரி­வி­ன­ராக ஒழுங்­க­மைந்­துள்ளனர். அந்­தந்த கிரா­மத்தின் சாதிக்­கேற்ப கிரா­மங்­களில் பௌத்த மடா­ல­யங்கள் உள்­ளன. சாதி­க­ளாக பிரிந்­தி­ருந்த போதிலும் பௌத்த நாடு, பௌத்த மதம் என்­றதன் அடிப்­ப­டையில்  இவர்கள் ஒன்­றாகச் செயற்­ப­டு­கின்­றனர்.
இப்­பின்­பு­லத்தில் சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் இலங்­கையின் தமிழ் அர­சியில் கட்­சிகள் தமிழ் மொழிக்கு சம அந்­தஸ்து மற்றும் அதி­கா­ரப்­ப­கிர்வு போன்ற கோரிக்­கை­களை முன்­வைக்கும் போது அவை பௌத்த மதம் மற்றும் பௌத்த நாடு என்ற கோரிக்­கையை முறி­ய­டிப்­ப­தா­கவே பௌத்த பிக்­குகள் கரு­தினர். 1956 இல் ஆட்­சியை கைப்­பற்­றிய பண்டார­நா­யக்க சிங்­களம் மற்றும் தமிழ் மொழியை ஆட்­சி­மொ­ழி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்த முனைந்தார். அப்­போது அதனை எதிர்த்த பௌத்த பிக்­குகள் அவ­ரது வீட்டின் முன் உண்­ணா­வி­ரதம் இருந்­த­துடன் பண்­டா­ர­நா­யக்க தமிழ் மொழியை ஆட்­சி­ மொழியாக்­கு­வதை கைவிட்டு சிங்­க­ளத்தை மட்டும் ஆட்சி மொழி­யாக்­கினார். அதன் பின்னர் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வ­நா­ய­கத்­துடன்  1957 இல்  அதி­கா­ரத்தை பகிரும் வகையில் ஒப்­பந்தம் ஒன்றை கைச்சாத்­திட்டார். இவ்­வொப்­பந்தத்­தையும் பௌத்­த­பிக்­குகள் எதிர்த்­தனர். பௌத்­த­பிக்­கு­களின் எதிர்ப்பு கார­ண­மாக இவ்­வொப்­பந்­தமும் கைவி­டப்­பட்­டது.
(பௌத்­த­ பிக்­கு­களின் எதிர்ப்­பி­னை ­சா­த­க­மாக்கிக் கொண்டு ஜே.ஆர். தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும் அதனை எதிர்த்­தனர்). இதன் பின்னர் அதி­காரப் பகிர்­வினைக் கைவிட்டு வட ­கி­ழக்­கு­ மா­கா­ணங்­களில் தமிழ் மொழி­யை­ அ­ரச கரும மொழி­யாக்கும் வகையில்  தமிழ் மொழி அமு­லாக்கல் சிறப்பு சட்­டத்தை பண்­டா­ர­நா­யக்க 1958 இல் அறி­மு­கப்­ப­டுத்­தினார். இத­னையும் பௌத்­த­பிக்­குகள் எதிர்த்­தனர். பௌத்த பிக்­கு­களின் எதிர்ப்­புக்கு மத்­தியில் இச்­சட்­டத்­தினை கொண்டு வர பண்­டா­ர­நா­யக்க முனைந்தார். பௌத்த பிக்­கு­களின் கோரிக்­கையை மறுத்­த­மை­யினால் அவரை ஆட்சி பீடத்தில் ஏற்­றிய பௌத்த அமைப்பே அவரை படு­கொ­லை­ செய்­தது.
1956 பொதுத் தேர்­தலில் போட்­டியிட்ட பண்­டா­ர­நா­யக்­க ­த­னது வெற்­றிக்­காக ஐம்­பெரும் சக்­தி­க­ளாக சங்க (பிக்கு), வெத (வைத்­தியர்),  குரு (ஆசி­ரியர்), கொவி ( விவ­சாயி), கம்­கரு (தொழி­லாளி) என்­ப­வர்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தி­ய­துடன்  பிக்­கு­க­ளையே தனது பிர­தான அமைப்­பா­ளர்­க­ளாகக் கருதி செயற்­ப­ட ­வைத்தார். களனி ரஜ­மகா விகா­ரையின் தலைமை பிக்கு புத்­த­ர­கித்­த, பண்­டா­ர­நா­யக்­க­விற்­கான பிக்­கு­ அ­ணியை உரு­வாக்கி அவரை வெற்றியடையச் செய்தார். பண்­டா­ரநா­யக்க பௌத்த பிக்­கு­களின் விருப்­பிற்­கு ­மா­றாக தமிழ் மொழிக்கு அந்­தஸ்து வழங்க முயல்­கின்­ற­மையை அவ­தா­னித்த புத்­தரகித்த பிக்கு பண்­டா­ர­நா­யக்­கவை கொலை செய்ய திட்­ட­மிட்டு அதனை நடைமுறைப்­ப­டுத்­தினார்.
புத்­த­ர­கித்­த­வின் திட்­டத்­திற்­க­மைய 1959  ஆம் ஆண்டு செப்­டெம்பர் 25 ஆம் திகதி அன்று பிர­தமர் பண்­டா­ர­ நா­யக்க தல்­துவே சோம­ரத்ன என்ற பௌத்த பிக்­கு­வினால்  சுடப்­பட்டார். மறுநாள் அவர் இறக்­க­லானார். அவ­ரது மர­ணத்தின் பின்னர் பௌத்த பிக்­குகள் சில காலம் அர­சி­யலில் மௌனத்தை கடை­பி­டித்­த­துடன் அறு­ப­து­களின் பின்­னி­று­தியில் மீண்டும் தமது கோரிக்­கை­களை முன் வைக்­க­லா­யினர். பௌத்­த­பிக்­கு­களின் கோரிக்­கை­யான இலங்­கையை சிங்­கள பௌத்த நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்தல் மற்றும் பௌத்த மதத்­திற்கு அர­ச­ அந்­தஸ்து வழங்­குதல் என்ற கோரிக்­கைகள் தொட­ர­லா­யின.
இலங்­கையை பௌத்த நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது மற்றும் பௌத்த மதத்­திற்கு அரச அந்­தஸ்து வழங்­கு­வது என்ற இரு கோரிக்­கை­களை இரு பெரும் சிங்­களக் கட்­சி­களைச் சார்ந்­த­ அ­ர­சியற் தலை­வர்கள் விரும்­பிய போதிலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­தி­ருந்­தனர். சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு அதற்­கான வாய்ப்­பினை அளிக்­க­வில்லை.   எனினும், அதற்­கான வாய்ப்பு 1970 ஆம் ஆண்டில் நடை­பெற்ற பொதுத் தேர்­தலின் பின்னர் கிடைத்­தது. பௌத்த பிக்­கு­வினால் கொல்­லப்­பட்ட பண்­டா­ர­நா­யக்­கவின் மனை­வி­யான திரு­மதி சிறிமா பண்­டா­ர­நா­யக்­கவின் தலை­மையின் கீழ் போட்­டி­யிட்ட இட­து­சாரி கூட்ட­ணிக் ­கட்­சி­யினர் 1970 இல் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யை ­பெற்­றனர். இவ்­வெற்­றிக்கு பக்­க­ப­ல­மாக பௌத்த அமைப்­பு­களே செயற்­பட்­டன. அதன் விளை­வாக 1972 ஆம் ஆண்டு இலங்­கைக்­கான புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் முயற்­சியில்  கூட்­டணி அர­சாங்கம்  ஈடு­பட்­டது. இவ்­வேளை பௌத்த பிக்குகளும் பல சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பௌத்த மதத்தை அர­சாங்க மத­மாக்கும்படி கோரினர். பிக்­கு­களின் வேண்டு கோளுக்­கி­ணங்க, புதிய அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதம் அர­ச­ம­த­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.
இப்­பு­திய அர­சி­ய­லமைப்­பினை தயா­ரிப்­பதில் முன்­னணி பாத்­திரம் வகித்த இட­து­சா­ரி­யான கலா­நி­தி­கொல்வின் ஆர்.டி. சில்வா பௌத்த மதத்­திற்கு அர­சி­ய­ல­மைப்பில்  முத­லி­ட­ம­ளித்தப் பின்னர் தமது கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கையில், தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களின் அழுத்­தத்­தி­னா­லேயே இதனை செய்­த­தா­கவும் அதனை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கா­க 1815 ஆம் ஆண்டு கைச்­சாத்­திட்ட கண்டி உடன்­ப­டிக்­கையை கையாண்­ட­தா­கவும் கூறி­யுள்ளார். 1815 ஆம் ஆண்டு பிரித்­தா­னி­ய­ருடன் கைச்­சாத்­திட்ட கண்­டிய ஒப்­பந்­தத்தில் ஐந்­தா­வது சரத்து பிரித்­தா­னிய அர­சாங்கம் பௌத்த மதத்­தையும் கலா­சா­ரத்­தையும் பாது­காக்கும் என்­ப­தாகும். எனவே அதனை ஆதா­ர­மாக வைத்தே தாம் பௌத்த மதத்தை அரச மத­மாக்­கு­வதை நியா­யப்­ப­டுத்­தி­ய­தாக தமது கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு கலா­நிதி கொல்வின்  ஆர் . டி  சில்வா கூறி­யுள்ளார். எனவே பௌத்த மதத்­தையும் கலா­சா­ரத்­தையும் அர­சாங்கம் பாது­காத்து ஊக்­குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பௌத்த பிக்­கு­களால்  தொடர்ச்­சி­யாக முன் வைக்­கப்­பட்டு வந்­துள்­ளது.
இவ்­வ­ர­லாற்று பின்­ன­ணி­யுடன் நடந்து முடிந்த ஜனா­திபதித் தேர்­தலை நோக்­கு­வோ­மாயின்,  1956 இல் பண்­டா­ர­நா­யக்­கவை வெற்­றிப் ­பெறச் செய்­தது போல், அனைத்து பௌத்­த­பிக்கு அமைப்­பு­களும் ஒன்று சேர்ந்து கோத்­தாப­யவை வெற்றிப் பெறச் ­செய்­துள்­ளனர். மறு­வ­கையில் கூறு­வ­தாயின், 1956 க்குப் பின்னர் பௌத்த பிக்­குகள் சீர­மைக்­கப்­பட்ட பண்­டா­ர ­நா­யக்க ஒரு­வரை வெற்­றி­ப்பெறச் செய்­துள்­ளனர்.  கோத்­தா­ப­யவின் வெற்­றி­யா­னது பௌத்த பிக்­கு­க­ளி­னதும் சிங்­கள பௌத்த அறிவு ஜீவி­க­ளி­னதும் 71 வருட போராட்­டத்தின் வெற்­றி­யாகும்.   கோத்­தா­பய தம்மை வேட்­பா­ள­ராக அறி­விக்க முன்­னரே பௌத்த அமைப்­பு­களும் சிங்­கள பௌத்த அறி­வு­ஜீ­வி­களும் அவ­ருக்­கான பொரு­ளா­தார வேலைத் திட்­டத்தை வியத்மக மற்றும் எளிய என்ற பெயரில் வெளி­யிட்­டனர்.
இது போலவே 56 இல் பண்­டா­ர­நா­யக்க தேசிய மய­மாக்கும் கொள்­கைத்­திட்­டத்தை முன்­வைக்க அன்­றைய பௌத்த பிக்­கு­களும் அறி­வு­ ஜீ­விகளும் பண்­டா­ர­நா­யக்­க­விற்கு ஒத்­து­ழைத்­தனர்.   பண்­டா­ர­நா­யக்க பௌத்த பிக்­கு­களை தமது பிர­சா­ரத்­திற்­கான ஆயு­த­மாக பயன்­ப­டுத்­திய போதிலும் அவர்­க­ளது அர­சியல்  நிலைப்­பாட்­டினை ஏற்­க­வில்லை. தமக்­கென ஒரு அர­சியல் நிலைப்­பாட்­டினை கொண்­டி­ருந்­த­வ­ராவார். அவரே முதன் முத­லாக இலங்­கையில் சமஸ்டி ஆட்­சி­மு­றையை முன்வைத்­த­வர். ஐம்­ப­து­களில் பண்­டா­ர­நா­யக்கவை வெற்­றிப்­ பெ­றச்­செய்த பௌத்த பிக்­குகள்  பௌத்த நாடு,பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை அளிக்­கும்­படி கோரி­ய­வேளை பண்­டா­ர­நா­யக்க தமி­ழுக்கு சம­உ­ரிமை,  சுயாட்சி போன்ற நிலைப்­பாட்டை கொண்­ட­வ­ராக இருந்தார். அதுவே அவ­ரது மர­ணத்­திற்கு வழி­வ­குத்­தது. ஆனால்
தற்­போ­தைய ஜனா­திபதி கோத்­தா­பய அவ்­வா­றல்ல. அவர் முன்னாள் இரா­ணுவ வீரர் என்­ப­துடன் ஒரு போதும் அதி­காரப் பகிர்வு தொடர்­பாக எவ்­வித கருத்­தி­னையும் முன்வைக்­கா­தவர். மேலும் தமது தேர்தல் பிரசா­ரத்தின் போதும் அதி­காரப் பகிர்வு தொடர்­பாக எவ்­வித கருத்­தி­னையும் முன்­வைக்­கா­தவர். அவ்­வ­கையில் கோத்­தா­பய  பௌத்த பிக்­கு­க­ளி­னது கோட்­பாட்டை முழு­மை­யாக ஏற்றுக் கொண்­ட­வ­ராகத் திகழ்­கின்றார். தமது வெற்­றியின் பின்னர் எல்­லாளன் என்ற இந்து மன்­னனை தோல்­வி­யுறச் செய்த பின் பௌத்த மதத்­திற்­காக கட்­டப்­பட்ட ருவன்­வெ­லி­சாய தாது­கோ­பு­ரத்­திற்கு முன்னால் சத்­தி­ய­ப் பி­ர­மாணம் செய்து கொண்­டதன் மூலம் தாம் பௌத்­த ­பிக்­கு­களின் ஆணைக்கு கட்­டப்­பட்டு செயற்­ப­டு­வ­தாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். என­வே, ­நாட்டின் பௌத்த பிக்­குகள் 56 ஆம் ஆண்டு தமக்­கான ஆட்­சி­யா­ளனை உரு­வாக்­கு­வதில் தோல்வி கண்­ட­போ­திலும் இம்­முறை தமக்­கான ஆட்­சி­யா­ளனை நிலை நிறுத்­து­வதில் வெற்றிப் பெற்­றுள்­ளனர் என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது.
இவ் பின்புலத்தில்,  எதிர்வரும் அரசியல் செல்நெறியை நோக்குவோமாயின் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு என்பது அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு வெறும் பேசுபொருளாகவே இருக்கலாம். நடந்து முடிந்த ஜனாபதிபதித் தேர்தல் பெறுபேறுகளை கருத்திற் கொள்ளும் போது பொதுஜன பெரமுன அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிப் பெறும் என ஊகிக்க முடிகின்றது. தேர்தலுக்காக  கோத்தாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அதற்கு முன்னர் அவரது அறிவுஜீவிகளால் நாட்டின் அபிவிருத்திக்காக முன்வைக்கப்பட்ட வியத்மக மற்றும் எளிய போன்ற திட்டங்களிலும் அதிகாரப் பகிர்வு பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.
எனவே அதிகாரப்பகிர்வு என்பது எதிர்வரும்  ஐந்து வருடங்களில் தமிழர்களின் பேசுபொருளாகவே அமையும். ஆனால் வடகிழக்கில் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் புலம்பெயர் தமிழ்  வர்த்தகர்கள் முதலீடு செய்ய பாரிய வாய்ப்புகள் அளிக்கப்படலாம்.
இன்றைய ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி பௌத்த அமைப்புகள் பெற்ற வெற்றியேயாகும். பௌத்த வெற்றியின் தலைவனாகத் திகழும் ஜனாதிபதி கோத்தாபய சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அதாவது நீதி, நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, மனித உரிமை போன்றவற்றினை வலியுறுத்தும் சர்வதேசத்திற்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார் என்பதிலேயே அவருக்கும் பௌத்த அமைப்பிற்கும் இடையிலான உறவு தங்கியுள்ளது. சர்வதேசத்தின் ஜனநாயக கோரிக்கைகளுக்கு  இசைவாராயின், பௌத்த அமைப்பினருக்கும்  அவருக்கும் இடையில் முறுகல் ஏற்படும். மாறாக, பௌத்த அமைப்பினரின் வழிகாட்டலில் மட்டும் செயற்படுவாராயின் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
பெ.முத்துலிங்கம் - நன்றி வீரகேசரி 











No comments: