19 ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கான செயற்பாடுகள்


நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்ட 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக்ஷ, பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் வலி­யு­றுத்தி வரு­கின்­றது.  
19ஆவது திருத்­தத்தை மாற்­றி­ய­மைக்­க­வேண்­டி­யது அவ­சியம் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ கூறி­யுள்ளார். இதே­போன்றே பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்டி வரு­கின்றார். 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன பல்­வேறு வாக்­கு­று­தி­களை மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்தார். அவரை ஆத­ரித்த பொது எதி­ரணி இதற்­கான வாக்­கு­று­தி­களை மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தது.  
அந்தத் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு ­செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. இதில் ஐக்­கிய தேசியக் கட்­சியும்   சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் அங்கம் வகித்­த­துடன் 100 நாள் வேலைத்­திட்­டமும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. தேர்­தலில் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்­க­மைய 100 நாட்­க­ளுக்குள் 19ஆவது திருத்தச் சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. இத­னை­ய­டுத்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யி­லுள்ள அதி­கா­ரங்கள் ஓர­ள­வுக்கு குறைக்­கப்­பட்­டன. நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்­கு­மி­டையில் சம­நி­லையை ஏற்­ப­டுத்தும் நோக்கில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.  

இதன் மூலம் ஒரு வரு­டத்தில் பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி கலைக்கும் அதி­காரம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு நான்­கரை வரு­டங்­க­ளுக்குப் பின்­னரே பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி கலைக்கும் நிலைமை உரு­வாக்­கப்­பட்­டது. இரட்டைப் பிரஜா உரிமை கொண்­ட­வர்கள் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்றும் ஒருவர் இரு­த­ட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடி­யாது என்றும் பாரா­ளு­மன்­றத்­துக்கு ஜனா­தி­பதி பொறுப்­புக்­கூற வேண்டும் எனவும் திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஜனா­தி­பதி அமைச்­சுக்கள் எத­னையும் தம்­வசம் வைத்­தி­ருக்க முடி­யாது என்றும் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை முப்­ப­தாக வரை­ய­றுக்­கப்­பட வேண்டும் என்றும் 19ஆவது திருத்தம் வலி­யு­றுத்­து­கின்­றது.  
இத­னை­விட சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு ஜன­நா­யக விழு­மி­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் கார­ண­மாக ஜனா­தி­ப­தி­யினால் உயர் நிய­ம­னங்கள் நேர­டி­யாக செய்­ய­மு­டி­யாத நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அத்­துடன் எதேச்­சதி­காரப் போக்­காக செயற்­ப­ட­மு­டி­யாத நிலை­மையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வாறு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையின் எதேச்­ச­தி­காரப் போக்கை கட்­டுப்­ப­டுத்தும் வகை­யிலும் ஜன­நா­யக விழு­மி­யங்­களை கட்­டிக்­காக்கும் வகை­யிலும் இந்த சட்­டத்­தி­ருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.  
அன்று பாரா­ளு­மன்­றத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை வாக்­கு­க­ளுடன் அது நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு அன்று எதி­ர­ணி­யி­லி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களும் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர். அன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தார்.  
இவ்­வாறு 19ஆவது திருத்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யி­னால்தான் தேர்­தல்கள் சுதந்­தி­ர­மா­கவும் சுயா­தீ­ன­மா­கவும் நடத்­தக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.  தற்­போது நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தல்
எந்­தவித வன்­மு­றை­களும் அற்ற நிலையில் சுதந்­தி­ர­மாக நடத்­து­வ­தற்கு இந்த சட்­டத்­திருத்­தத்தின் அமு­லாக்­கமே காரணம் என்­பதை மறுக்க முடி­யாது.  
அதே­போன்றே ஜனா­தி­ப­தியின் எதேச்­ச­தி­கார செயற்­பா­டு­க­ளுக்கு கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­ட­மை­யினால் நாட்டில் ஜன­நா­யகம் தழைத்­தோங்­கு­வ­தற்கு அது வழி­ச­மைத்­தது. கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் 26ஆம் திகதி அன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்ட அர­சியல் தீர்­மானம் கார­ண­மாக நாட்டில் பெரும் அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்­டி­ருந்­தது. ஆனால் 19ஆவது திருத்தச் சட்­டத்­துக்­க­மைய நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­த­தை­ய­டுத்து 52 நாள் நீடித்த அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு ஏற்­பட்­டி­ருந்­தது. அன்­றைய ஜனா­தி­பதி மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்றம் சுயா­தீ­ன­மாக தீர்ப்பு வழங்கும் நிலைமை இந்த திருத்தச் சட்­டத்தின் கார­ண­மா­கவே ஏற்­பட்­டி­ருந்­தது.  
இவ்­வாறு ஜன­நா­யக விழு­மி­யங்­களை கட்டிக் காக்கும் வகையில் கொண்­டு­வ­ரப்­பட்ட 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை இல்­லா­தொழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்கும் விட­ய­மா­னது பல்­வேறு தரப்­பினர் மத்­தி­யிலும் அதிருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிற்து.  
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ
பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 18ஆவது திருத்தச் சட்டம் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. மூன்­றா­வது முறை­யா­கவும் ஜனா­தி­பதி தேர்­தலில் தான் போட்­டி­யிடும் வகையில் 18ஆவது திருத்தச் சட்­டத்­தினை மஹிந்த ராஜபக் ஷ நிறை­வேற்­றி­யி­ருந்தார். இரண்டு தட­வை­களே ஒருவர் ஜனா­தி­பதி பத­வியை வகிக்க முடியும் என்ற சரத்தை மாற்றி எத்­தனை தடவை வேண்­டு­மா­னாலும் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடியும் என்ற திருத்­தத்தை கொண்டு வந்து இந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.  
இத­னை­ய­டுத்து 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ போட்­டி­யிட்­டி­ருந்தார். ஆனால் அவர் தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து புதிய அர­சாங்கம் 18ஆவது திருத்தச் சட்­டத்­தினை இல்­லா­தொழித்து 19ஆவது திருத்­தத்தை அமு­லுக்கு கொண்­டு­ வந்­தி­ருந்­தது.  
தற்­போது புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜபக் ஷ பத­வி­யேற்­றுள்­ள­துடன் பிர­தமர் ராஜபக் ஷ தலை­மையில் இடைக்­கால அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடத்­தப்­படும் என்று எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது. இந்தத் தேர்­தலில் வெற்­றி­பெற்று மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பாரா­ளு­மன்­றத்தில் பெற்று 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கே தற்­போ­தைய அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­கின்­றது.  
ஜனா­தி­பதி தேர்­தலில் சிங்­கள பெரும்­பான்மை மக்­களின் பேரா­த­ரவைப் பெற்று ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வா­கி­யுள்­ள­மை­யினால் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் வெற்­றி­பெற்று எப்­ப­டி­யா­வது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெறு­வதன் மூலம் இந்த திருத்­தத்­தினை மேற்­கொள்­ளலாம் என்று அர­சாங்கம் எண்­ணி­யுள்­ளது.  
ஆனால் 19ஆவது திருத்­தத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வ­ளிக்க மாட்­டாது என்று அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருக்­கின்றார். கடந்த திங்­கட்­கி­ழமை கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த லக் ஷ்மன் கிரி­யெல்ல 19ஆவது திருத்­தத்தை நீக்க வேண்டும் என்று கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதில் ஏதேனும் குறை­பா­டுகள் இருப்பின் அது குறித்து எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்தி சுட்­டிக்­காட்டும் பட்­சத்தில் நாம் அது தொடர்பில் அவ­தானம் செலுத்த தயா­ராக உள்ளோம். ஆனால் அதனை முழு­மை­யாக நீக்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் ஆத­ரவு வழங்க மாட்டோம் என்று கூறி­யுள்ளார்.  
அர­சி­ய­ல­மைப்பின் 18ஆவது திருத்­தத்தின் மூலம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு வெகு­வான அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்­கு­மி­டையில் சம நிலை­யொன்றை ஏற்­ப­டுத்தல், சுயா­தீன ஆணைக்­குழுக்­களை ஸ்தாபித்து அவை அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி இயங்­கு­வ­தற்கு அனு­ம­தித்தல் ஆகி­ய­வற்றை நோக்­காகக் கொண்டே 19ஆவது திருத்த யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  
இதேபோன்றே 19ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உட்பட பெரும்பாலான சிறுபான்மைக் கட்சிகளும் உள்ளன.  
இந்தநிலையில்தான் 19ஆவது திருத்த சட்டத்தினை இல்லாது செய்வதற்கு புதிய அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகின்றது. இந்த திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதில் சிறு மாற்றங்களை செய்ய முடியும். ஆனால் அதனை முழுமையாக நீக்குவதென்பது அரசியல் சுயநலத்துக்கான தீர்மானமாகவே அமையும்.  
எனவே இந்த விடயம் தொடர்பில் புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் சிந்தித்து செயற்பட வேண்டும்.  நாட்டில் ஜனநாயக விழுமியங்களை கட்டிக்காக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின செயற்பாடுகள், திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெறவேண்டுமானால் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் என்பன பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
(05.12.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் ) - நன்றி வீரகேசரி 









No comments: