தனது பெயரை அனைவரும் அறியும் நாள் வரும் : விமானியின் காதலி அதிர்ச்சி தகவல், உளவியல் பிரச்சினை, மன நோய்களுக்கான மருந்துகளும் பாவித்துள்ளார்
கென்ய பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 பேர் பலி; 79 பேர் காயம்
தனது பெயரை அனைவரும் அறியும் நாள் வரும் : விமானியின் காதலி அதிர்ச்சி தகவல், உளவியல் பிரச்சினை, மன நோய்களுக்கான மருந்துகளும் பாவித்துள்ளார்
30/03/2015 பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் ஜேர்மன்விங்ஸ் விமானத்தை திட்டமிட்டு மோதி வெடித்துச் சிதற வைத்ததாக நம்பப்படுபவரான துணை விமானியான அன்ட்றியஸ் லுபிட்ஸ், தனது பெயரை அனைவரும் அறியும் நாள் வரும் என எதிர்வுகூறியிருந்ததாக அவரது குறுகிய கால முன்னாள் காதலிகளில் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் லுபிட்ஸ் தீவிர உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு பல்வேறு நரம்பியல் மற்றும் உளவியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவரது வீட்டில் மன நோய்களுக்காக பயன்படுத்தப்படும் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனிய பில்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே லுபிட்ஸால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட விமர்சனமொன் றை மேற்கோள்காட்டி மரியா டபிள்யூ (26 வயது) என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி முன்னாள் காதலி இவ்வாறு தெரிவித்துள்ளார். மரியா ஒரு விமான பணி ப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒருநாள் அனைத்தையும் மாற்றக் கூடிய ஒன்றை நான் செய்வேன். அதன் பின் ஒவ்வொருவரும் எனது பெயரை அறிந்து கொள்வதுடன் ஞாபகத்திலும் வைத்திருப்பார்கள்" என லுபிட்ஸ் கூறியதாக அந்தப் பெண் கூறினார்.
அவர் கடந்த வருடம் சுமார் 5 மாத காலம் லுபிட்ஸுடன் இணைந்து விமானப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் லுபிட்ஸால் ஜேர்மன்விங்ஸ் விமானம் வெடித்துச் சிதற வைக்கப்பட்டமை தொடர்பான செய்தியை கேள்விப்பட்டுத் தான் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக மரியா தெரிவித்தார்.
“லுபிட்ஸ் திட்டமிட்டு அந்த விமானத்தை மலைப் பிராந்தியத்தில் மோதி சிதறடித்திருப்பது உண்மையாயின், அவர் தனது உடல்நல பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டே அவ்வாறு செய்திருக்கக் கூடும். லுப்தான்ஸா விமான சேவையில் கப்டனாக பணியாற்றுவது அவரது கனவாக இருந்தது. ஆனால் அவரைப் பொறுத்தவரை அது சாத்தியமற்றதாக இருந்தது" என மரியா கூறினார்.
அதேசமயம் லுபிட்ஸ் தீவிர உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு பல்வேறு நரம்பியல் மற்றும் உளவியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்மனிய டி வெல்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது வீட்டில் மன நோய்களுக்காக பயன்படுத்தப்படும் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் மது மற்றும் போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகியிருந்தமைக்கான எந்தவித சான்றும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
மேலும் அவர் கண் பிரச்சினைகளுக்காக மருத்துவம் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவி த்துள்ளது.
ஜேர்மன்விங்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல் பதிவு கருவியிலிருந்தான தகவல்களின் பிரகாரம், அந்த விமானத்தின் விமானி விமானிகளுக்கான அறையை விட்டு வெளியே சென்ற சமயம் துணை விமானியான லுபிட்ஸ். அந்த அறையின் கதவை உள்புறமாக தாளிட்டுக் கொண்டு விமானத்தை கீழ் நோக்கிச் செலு த்தி மலையின் மீது மோதி வெடித்துச் சிதறடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
லுபிட்ஸ் தனக்கு ஏற்பட்டுள்ள மனநலப் பிரச்சினையை ஏனைய விமான உத்தியோகத்தர்களிடமிருந்து மறைத்துள்ளதாக நம்புவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது மனநலப் பிரச்சினைகள் குறித்து அறிந்தே மரியா அவரிடமிருந்து பிரிய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
தான் பணிபுரியும் இடத்திலான நிலைமைகள், போதிய பணமின்மை, அளவுக்கதிகமான அழுத்தம் என்பவற்றால் அவர் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் லுபிட்ஸின் நீண்ட நாள் காதலியான கத்தரீன் கோல்ட்பச் (26 வயது) அவரை விட்டு விலகிச் சென்றமை அவரை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
ஆசிரியையாக பணியாற்றி வந்த கத்தரீன், மேற்படி விமான அனர்த்தம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் லுபிட்ஸின் அளவுக்கதிகமான கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் அதிருப்தியுற்று அவரிடமிருந்து பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி
கென்ய பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 பேர் பலி; 79 பேர் காயம்
04/04/2015 வட கிழக்கு கென்யாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் மீது அல்-- ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 147 பேர் பலியானதுடன் 79 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கரிஸா பல்கலைக்கழகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் போது தாக்குதலை நடத்திய 4 தாக்குதல்தாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 587 மாணவர்கள் தப்பி வந்துள்ளனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது ஏகே 47 துப்பாக்கிகள் சகிதம் தற்கொலை மேலங்கி அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் வியாழக்கிழமை தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்து அங்கிருந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தற்கொலை குண்டுதாரிகள், இறுதியில் பொலிஸார் முற்றுகையிட்டதும் குண்டுகள் போன்று வெடித்துச் சிதறியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜோசப் நகெய்ஸெரி தெரிவித்தார்.
பொலிஸார் தம்மை அணுகிய போது தற்கொலைக் குண்டுதாரிகள் திட்டமிட்டு குண்டுகளை வெடிக்க வைத்தார்களா அல்லது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தன்னியக்க ரீதியில் குண்டுகள் வெடித்தனவா என்பது அறியப்படவில்லை.
இதனையடுத்து குறிப்பிட்ட பல்கலைக்கழகம் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.தொடர்ந்து கென்ய, சோமாலிய எல்லை யிலுள்ள கரிஸ்ஸா, வஜிர், மன்டெரா மற் றும் தனா றிவர் ஆகிய 3 பிராந்தியங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் ஒரு தீவிரவாத தாக் குதல் என குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வன்முறை மிக்க தீவிரவாதத்தை தடுப்பதற்கு கென்யாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment