உலகச் செய்திகள்


தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் : விமானியின் காதலி அதிர்ச்சி தகவல், உள­வியல் பிரச்­சி­னை, மன நோய்­க­ளுக்கான மருந்துகளும் பாவித்துள்ளார்

  கென்ய பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 பேர் பலி; 79 பேர் காயம்


தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் : விமானியின் காதலி அதிர்ச்சி தகவல், உள­வியல் பிரச்­சி­னை, மன நோய்­க­ளுக்கான மருந்துகளும் பாவித்துள்ளார்

30/03/2015 பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்­தி­யத்தில் ஜேர்­மன்விங்ஸ் விமா­னத்­தை திட்­ட­மிட்டு மோதி வெடித்துச் சிதற வைத்­த­தாக நம்­பப்­படுபவரான துணை விமா­னி­யான அன்ட்­றியஸ் லுபிட்ஸ், தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் என எதிர்­வு­கூ­றி­யி­ருந்­த­தாக அவ­ரது குறு­கிய கால முன்னாள் காத­லி­களில் ஒரு­வ­ர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும்  லுபிட்ஸ் தீவிர உள­வியல் பிரச்­சி­னை­களால் பாதிக்­கப்­பட்டு பல்­வேறு நரம்­பியல் மற்றும் உள­வியல் மருத்­து­வர்­க­ளிடம் சிகிச்சை பெற்று வந்­த­மைக்­கான சான்­றுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாகவும் அவ­ரது வீட்டில் மன நோய்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பல மருந்­துகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



ஜேர்­ம­னிய பில்ட் பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டி­யி­லேயே லுபிட்ஸால் கடந்த வருடம் வெளி­யி­டப்­பட்ட விமர்­ச­ன­மொன் றை மேற்­கோள்­காட்டி மரியா டபிள்யூ (26 வயது) என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் மேற்­படி முன்னாள் காதலி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். மரியா ஒரு விமான பணி ப்பெண் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
“ஒருநாள் அனைத்­தையும் மாற்றக் கூடிய ஒன்றை நான் செய்­வேன். அதன் பின் ஒவ்­வொ­ரு­வரும் எனது பெயரை அறிந்து கொள்­வ­துடன் ஞாப­கத்­திலும் வைத்­தி­ருப்­பார்கள்" என லுபிட்ஸ் கூறி­ய­தாக அந்தப் பெண் கூறினார்.
அவர் கடந்த வருடம் சுமார் 5 மாத காலம் லுபிட்­ஸுடன் இணைந்து விமானப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.
இந்­நி­லையில் லுபிட்ஸால் ஜேர்­மன்விங்ஸ் விமானம் வெடித்துச் சிதற வைக்­கப்­பட்­டமை தொடர்­பான செய்­தியை கேள்­விப்­பட்டுத் தான் பெரிதும் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக மரியா தெரி­வித்தார்.
“லுபிட்ஸ் திட்­ட­மிட்டு அந்த விமா­னத்தை மலைப் பிராந்­தி­யத்தில் மோதி சித­ற­டித்­தி­ருப்­பது உண்­மை­யாயின், அவர் தனது உடல்­நல பிரச்­சி­னை­களைக் கருத்திற் கொண்டே அவ்­வாறு செய்­தி­ருக்கக் கூடும். லுப்­தான்ஸா விமான சேவையில் கப்­ட­னாக பணி­யாற்­று­வது அவ­ரது கன­வாக இருந்­தது. ஆனால் அவரைப் பொறுத்­த­வரை அது சாத்­தி­ய­மற்­ற­தாக இருந்­தது" என மரியா கூறினார்.
அதே­ச­மயம் லுபிட்ஸ் தீவிர உள­வியல் பிரச்­சி­னை­களால் பாதிக்­கப்­பட்டு பல்­வேறு நரம்­பியல் மற்றும் உள­வியல் மருத்­து­வர்­க­ளிடம் சிகிச்சை பெற்று வந்­த­மைக்­கான சான்­றுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக ஜேர்மனிய டி வெல்ட் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அவ­ரது வீட்டில் மன நோய்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பல மருந்­துகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் ஆனால் அவர் மது மற்றும் போதை­வஸ்து பாவ­னைக்கு அடிமை­யா­கி­யி­ருந்­த­மைக்­கான எந்­த­வித சான்றும் கிடைக்கப் பெற­வில்லை எனவும் அந்தப் பத்­தி­ரிகை குறிப்­பிட்­டுள்­ளது.
மேலும் அவர் கண் பிரச்­சி­னை­க­ளுக்­காக மருத்­துவம் பெறு­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருந்­த­தாக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை தெரிவி த்துள்­ளது.
ஜேர்­மன்விங்ஸ் விமா­னத்தின் கறுப்புப் பெட்டி குரல் பதிவு கரு­வி­யி­லி­ருந்­தான தக­வல்­களின் பிர­காரம், அந்த விமா­னத்தின் விமானி விமா­னி­க­ளுக்­கான அறையை விட்டு வெளியே சென்ற சமயம் துணை விமா­னியான லுபிட்ஸ். அந்த அறையின் கதவை உள்­பு­ற­மாக தாளிட்டுக் கொண்டு விமா­னத்தை கீழ் நோக்கிச் செலு த்தி மலையின் மீது மோதி வெடித்துச் சித­ற­டிக்க வைத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

லுபிட்ஸ் தனக்கு ஏற்­பட்­டுள்ள மன­நலப் பிரச்­சி­னையை ஏனைய விமான உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­ட­மி­ருந்து மறைத்­துள்­ள­தாக நம்புவதாக விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
அவ­ரது மன­நலப் பிரச்­சி­னைகள் குறித்து அறிந்தே மரியா அவ­ரி­ட­மி­ருந்து பிரிய முடி­வெ­டுத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

தான் பணி­பு­ரியும் இடத்­தி­லான நிலை­மைகள், போதிய பண­மின்மை, அள­வுக்­க­தி­க­மான அழுத்தம் என்­ப­வற்றால் அவர் மன அழுத்­தத்­திற்­குள்­ளா­கி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அத்­துடன் லுபிட்ஸின் நீண்ட நாள் காத­லி­யான கத்­தரீன் கோல்ட்பச் (26 வயது) அவரை விட்டு விலகிச் சென்றமை அவரை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
ஆசிரி­யை­யாக பணி­யாற்றி வந்த கத்­தரீன், மேற்­படி விமான அனர்த்தம் இடம்­பெ­று­வ­தற்கு சில வாரங்­க­ளுக்கு முன் லுபிட்ஸின் அள­வுக்­க­தி­க­மான கட்­டுப்­ப­டுத்தும் நட­வடிக்கையால் அதி­ருப்­தி­யுற்று அவ­ரி­ட­மி­ருந்து பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி 





  கென்ய பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 பேர் பலி; 79 பேர் காயம்

04/04/2015 வட கிழக்கு கென்­யா­வி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்றின் மீது அல்-­- ஷபாப் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 147 பேர் பலி­யா­ன­துடன் 79 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

கரிஸா பல்­க­லைக்­க­ழ­கத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தாக்­கு­தலின் போது தாக்­கு­தலை நடத்­திய 4 தாக்­கு­தல்­தா­ரி­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

மேலும் அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து சுமார் 587 மாண­வர்கள் தப்பி வந்­துள்­ளனர்.

அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மீது ஏகே 47 துப்­பாக்­கிகள் சகிதம் தற்­கொலை மேலங்கி அணிந்து வந்த துப்­பாக்­கி­தா­ரிகள் வியா­ழக்­கி­ழமை தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளனர். அவர்கள் அனை­வரும் முக­மூடிகளை அணிந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆக்­கி­ர­மித்து அங்­கி­ருந்­த­வர்­களை பண­யக்­கை­தி­க­ளாக பிடித்து வைத்­தி­ருந்த தற்­கொலை குண்­டு­தா­ரி­கள், இறு­தியில் பொலிஸார் முற்­று­கை­யிட்­டதும் குண்­டுகள் போன்று வெடித்துச் சித­றி­ய­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் ஜோசப் நகெய்­ஸெரி தெரி­வித்தார்.
பொலிஸார் தம்மை அணு­கிய போது தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் திட்­ட­மிட்டு குண்­டு­களை வெடிக்க வைத்­தார்­களா அல்­லது பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் தன்­னி­யக்க ரீதியில் குண்­டுகள் வெடித்­த­னவா என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.

இத­னை­ய­டுத்து குறிப்­பிட்ட பல்­க­லைக்­க­ழகம் பாது­காப்புப் படை­யி­னரின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.தொடர்ந்து கென்ய, சோமா­லிய எல்­லை­ யி­லுள்ள கரிஸ்ஸா, வஜிர், மன்­டெரா மற் றும் தனா றிவர் ஆகிய 3 பிராந்­தி­யங்­களில் இரவு நேர ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.
இந்தத் தாக்­குதல் ஒரு தீவி­ர­வாத தாக் குதல் என குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வன்முறை மிக்க தீவிரவாதத்தை தடுப்பதற்கு கென்யாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி





































No comments: