உலகச் செய்திகள்

.
மியாமியில் விமானங்கள் மோதியது: 600 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!

இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!

நோர்வேசிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் : வேலியே பயிரை மேய்ந்த கதை


மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!

ஜனாதிபதித் தேர்தலில்  இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஒபாமா  வொஷிங்டனில், பொது மக்கள் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
http://www.virakesari.lk/image_article/obamidna.jpg

இதை தொடர்ந்து அவர்  முறைப்படி நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில்  ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


http://www.virakesari.lk/image_article/obama232.jpg
அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட் ஒபாமாவுக்கு பதவி பிரமாணம், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
http://www.virakesari.lk/image_article/obamaswondda.jpg
இதற்கிடையே, ஒபாமா, வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு வெளியே, ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக, இரண்டாவது முறையாக, அதிபராக பொறுப்பேற்று உரையாற்றினார்.
http://www.virakesari.lk/image_article/obamidnaadawe.jpg
மறைந்த முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் இனவெறிக்கு எதிராக போராடிய, மார்டின் லூதர் கிங் ஆகியோர் பயன்படுத்திய பைபிளை, சாட்சியாக வைத்து, மக்கள் முன்னிலையில் நேற்று, பதவி ஏற்றார்.
http://www.virakesari.lk/image_article/obamasworncdsklfd.jpg

நன்றி  வீரகேசரி


மியாமியில் விமானங்கள் மோதியது: 600 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான மியாமியில் நேற்று இரவு 2 பயணிகள் விமானங்கள் மோதிக்கொண்டன.

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 350 பயணிகளுடன் ஏர்பிரான்ஸ் விமானம் பாரிசுக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது 240 பயணிகளுடன் அங்கு தரையிறங்குவதற்காக கீழ்நோக்கி வந்த ஆர்ஜெண்டினா விமானம், எயார் பிரான்ஸ் விமானத்தின் மேல்பகுதியில் மோதியபடி ஓடுதளத்தில் இறங்கியது.

இதில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால் பகுதியும் சேதமடைந்தது. சம்பவம் நடந்த உடனே மீட்புக்குழுவினர் விரைவாக செயல்பட்டு, இரு விமானங்களிலும் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.நன்றி வீரகேசரி  




இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!

உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இந்தியர்கள், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இராணுவ கட்டுபாட்டில் உள்ள இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய இரண்டு பேரை, புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் எல்லையை கடக்க மூன்று பாகிஸ்தானியர் உதவியுள்ளனர். இது தொடர்பாக மூன்று பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஐந்து இந்தியர்கள் உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  
இந்தியர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தை பாகிஸ்தான் உளவுத் துறை அறிவிக்கவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.நன்றி  வீரகேசரி





நோர்வேசிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் : வேலியே பயிரை மேய்ந்த கதை


நோர்வே அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது மோசமான துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 42 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றங்கள் நிருபிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டிருப்பதாக நோர்வேயின் ஊடகமான Addresseavisen தனது இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்தே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்திருப்பதால் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நோர்வேயில் குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் தவறிழைத்திருப்பதாகக் கூறிரய நோர்வே சிறுவர் காப்பகங்களால் சிறுவர்கள் பெற்றோரிடதிலிருந்து பிரிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பிரிக்கப்படுகின்ற சிறுவர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற வளர்ப்புத் தாய், தந்தையர் மற்றும் பாதுகாவலர்களிடத்திலேயே ஒப்படைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கரள மனநிலை மாற்றப்பட்டு இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்பட்டிருப்பதாக நோர்வே ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுகின்ற குழந்தைகள் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சிறுவர்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் பாழாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நோர்வேசிறுவர் காப்பகங்கள், நோர்வேஅரசாங்கள் ஆகிய தபே்புக்கள் பெற்றோருக்கு என்ன பதிலைக் கூறப்போகின்றன என்பது இங்கு எழுந்துள்ள கேள்வியாகும்.

பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்படுகின்ற சிறுவர்கள், குழந்தைகள் இவ்வாறு சீரழிக்கப்படுவது தொடர்பில் மனிதரநய அமைப்புக்கள், சர்வதேச மனித உரிமைகள் பேவேை வெறுமரன பார்த்துக்கொண்டிருக்கப் போகின்றனவா எனக்கேள்வியெழுப்பியுள்ள பாதிக்கப்பட்டுள்ள பெறோர் தமது குழந்தைகளை நோர்வேயின் சிறுவர் காப்பகங்களிடத்திலிருந்து உடனடியாக மீட்டுத்தருமாறும் உலக நாடுகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பெற்றோரின் வளர்ப்பில் தவறிருப்பதாகவும் பாதுகாப்பான இடங்களில் பராமரித்து வளர்ப்பதாகவும் கூறுகின்ற நிலையில் மேற்படி சம்பவங்களானது வேலரய பயிரை மேய்ந்த கதையாகி விட்டுள்ளது.

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுகின்ற குழந்தைகள் அருகிலுள்ள குழந்தைகள் காப்பகம் அல்லது பராமரிப்புகளிலேயே வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுந்தைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பதை அவதானிப்பதற்கு பெற்றோருக்கு அவகாசம் இருக்கின்றமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருகின்ற போதிலும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுகின்ற சிறுவர்கள் குழுந்தைகள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள பராமரிப்பகங்களிலேயே விடப்படுகின்றனர்.

இதனாலேயே இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான விடயங்களை நோர்வேஅர” மூடி மறைத்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுகின்றனர்.

நோர்வே அரசாங்கம் சிறுவர்கள் விடயத்தில் சட்ட ரீதியாக செயற்படுவதாக கூறுகின்றது. அப்படியானால் தற்போது வெளியாகியுள்ள மேற்படி 52 சிறுவர்கள “மீது இழைக்கப்பட்டுள்ள துஷ்பிரயோகம் தொடர்பில் என்ன கூறப்போகின்றது. குழந்தைகள் காப்பங்களை விட அவர் பெற்றோருடன் இருப்பதே சிறந்த பாதுகாப்பாகும். பழிவாங்கும் செயற்பாடுகளை நோர்வே அரசு கைவிட்டு தமது குழந்தைகளை தம்மிடத்தில் தரவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெற்றோரின் வேண்டுகோளாக உள்ளது.   
நன்றி  வீரகேசரி




No comments: